அன்பு இருக்குமிடத்தில் கடவுள் இருக்கின்றார்

வியாழன் 17 ஜூன், 2014, 

கனடா

குருதேவ், தாங்கள் யார்? நீங்கள் கடவுளா? தங்களுக்கு அனைத்தும் தெரியுமா? குரு என்பது யார்? தாங்கள் ஏன் குருவாக இருக்கின்றீர்கள்?

குருதேவ்: நான் ஏன் குருவாக இருக்கின்றேன்? தற்செயலாக நிகழ்ந்தது. எனக்குத் தெரிந்தவற்றை நான் பிறருடன் பகிர்ந்து கொண்டேன், மக்கள் என்னை குரு என்று அழைக்க துவங்கினர்.அவ்வாறு தான் நான் குருவானேன். 

குரு என்பது என்ன? பயிற்றுனர் அல்லது வழிகாட்டி என்னும் சொற்களில் இருந்து தான் குரு என்னும் சொல் வந்திருக்கின்றது. நீங்கள் கால்பந்து, விளையாட விரும்பினால், உடற்பயிற்சி செய்ய விரும்பினால், அல்லது கார் ஓட்ட விரும்பினால், உங்களுக்கு ஒரு பயிற்றுனர் தேவை அல்லவா? கால்பந்து அல்லது காரோட்டுதல் போன்ற எளிய விஷயங்களுக்கு ஒரு பயிற்றுனர் தேவைப்படும்போது முற்றிலும் தெரியாத விழிப்புணர்வு பரப்பெல்லைக்குள் ஆழ்ந்து செல்ல ஒரு பயிற்றுனர் தேவை அல்லவா? தியானம் செய்ய ஒரு பயிற்றுனர் வேண்டுமல்லவா? நிச்சயம் வேண்டும்.

நான் கடவுளா என்று கேட்டால் ஆம் என்று தான் கூறுவேன். நீங்களும் கடவுள் தான் என்றும் கூறுவேன். கடவுள் என்பதன் பொருள் என்ன? கடவுள் எங்கேயோ சுவர்க்கத்தில் அமர்ந்து கொண்டிருப்பவர் அல்ல. அன்பு தான் கடவுள். ஏசுநாதர் என்ன கூறினார்? அன்பே கடவுள் என்றார். நீங்கள் அன்பு இல்லையா? நான் அன்பு இல்லையா? Iஇந்தியாவில் தாய் தான் முதல் கடவுள். கடவுளை தாயிடம், தந்தையிடம், ஆசிரியரிடம், மற்றும் விருந்தினரிடம் நீங்கள் காண வேண்டும். 

உங்களது விருந்தினர்களை நீங்கள் கடவுளை போன்று நடத்த வேண்டும், ஏனெனில், கடவுள் எந்த உருவில் உங்கள் இல்லத்தின் வாசலுக்கு வருவார் என்று உங்களுக்குத் தெரியாது. கடவுள் என்பவர் எங்கோ சுவர்க்கத்தில் அமர்ந்திருக்கும் தனியான உறுப்பொருள் அல்ல. உங்களுக்கு தன்னுடைய சுண்டு விரலை காட்ட முயன்று அதைப் பிடித்துக் கொள்ள நீங்கள் முனையும் போது, விலகிச் சென்று விடுவதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். இத்தகைய கோட்பாடு உலகெங்கிலும் கம்யுனிசம் மற்றும் நாத்திகத்திற்கு அடிகோலியிருக்கின்றது. கடவுளை ஒரு சக்தியாக, ஒரு அன்பு என்பதாக, ஒரு இருப்பாக, படைப்பின் முதல்பொருளாக புரிந்து கொண்டால் அப்போது நாத்திகமே இந்த பூமியில் இருக்காது. இதுதான் விஞ்ஞான ரீதியாகக் கடவுளை காணுதல் ஆகும்.

அன்பே கடவுள். அன்பு என்பதை யாராவது இல்லை என்று கூற முடியுமா? அன்பு கிடையாது என்று யாரேனும் கூற முடியுமா? அவ்வாறு செய்தால் அவர்கள் குருடராவர். அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே முதலில் கடவுள் என்பது என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். கடவுள் சுவர்க்கத்தில் பல கைகள் மற்றும் பல கால்களுடன் அமர்ந்திருப்பவர் அல்ல. தாடியுடன் கூடிய மனிதர் அல்ல.கடவுள் என்பதன் கோட்பாடு தான் உலகில் பல பிரச்சினைகளை உருவாக்கி, பல சமயங்கள் மற்றும் பல இனங்கள் என்று மனிதர்களை பிரித்து இருக்கின்றது. எப்போதுமே விஞ்ஞான ரீதியாகச் சிந்திக்க வேண்டும்.அவ்வாறு பார்த்தல் நாம் அனைவருமே ஒரே பொருளால் உருவாக்கப்பட்டிருக்கின்றோம், அதுதான் கடவுள். அதனால் தான், கனடா உட்பட உலகெங்கிலும், முற்கால மக்கள் ,கடவுள் மலைகளிலும், மரங்களிலும், நதிகளிலும் உள்ளதாக கருதி உணர்ந்தார்கள்.கனடாவின் பழங்குடி மக்கள்,கடவுள் இயற்கையிலும், திசைகளிலும், மலைகளிலும், நதிகளிலும் உள்ளதாகக் கருதினார்கள். அவர்கள் கருத்து சரியானதே.

பழமையான வேத கால முறையும், எவ்வாறு எள்ளுக்குள் எண்ணெய் இருக்கின்றதோ அது போன்று கடவுள் படைப்பில் இருப்பதாகக் கருதினார்கள்.எனவே கடவுளை எங்கும் காணுங்கள். உங்களுக்குள் கடவுளைக் கண்டால், கடவுளை எங்கும் காண்பீர்கள். உங்களுக்குள்ளும், ஒவ்வொருவரிலும் கடவுளை காண உங்களுக்கு உதவுபவர் குரு ஆவார்.

அன்புள்ள குருதேவ், தாங்கள் அடிக்கடி பல்வேறு உண்மைத் தன்மைகளை பற்றிப் பேசுகின்றீர்கள். மேலும் தேவதைகள், காவலர்கள், தேவர்கள் ஆகியோரைப் பற்றிக் கூறுங்கள்.

குருதேவ்: இது ஒரு மிக ஆழமான விஷயம். நான் ஏற்கனவே கூறியுள்ள படி, உலகம் பல அடுக்குகளைக் கொண்டது. சக்திச் சொட்டுப் பெளதிகவியல் அளவில், அனைத்துமே ஒரே உருப்பொருளால் ஆனது. ஆனால் பழமையான வேதியல் கூறும் குறித்த காலத்து அட்டவணையின் படி இது வித்தியாசமானது. பல்வேறு உலோகங்கள், மற்றும் பல பொருட்கள் உள்ளன என்று அது கூறுகின்றது. இரண்டுமே உண்மையானவை . பழம் வேதியல் சக்திச் சொட்டுப் பெளதிகவியல் போன்று உண்மையானது. அனைத்து தேவதைகள், காவலர்கள், ஆவிகள், ஆன்மாக்கள் இவையெல்லாம், பழம் வேதியல் போன்றவை. உங்களது காதணிகள், வளையல்கள், சங்கிலி அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டவை. ஆனால் ஒரு வளையல் சங்கிலியாக முடியாது. சங்கிலி காதணி ஆக முடியாது. அனைத்தும் முற்றிலும் வெவ்வேறானவை. இதை கேட்கும் போது உங்களுக்கு இது முரண்பாடானதாக தோன்றலாம். இந்த அறை முழுவதும் மரத்தால் செய்யப் பட்டிருக்கின்றது, ஆனால் தரை வேறு, கூரை வேறு, தூண்கள் வேறு அனைத்தும் வேறானவை. 

இதை தான் அநேக மக்கள் கவனிக்கத் தவறி விடுகின்றார்கள். அதனால் தான் இந்தப் படைப்பு மிகுந்த மர்மமாகவும், சிக்கலானதாகவும் உள்ளது. படைப்பினைப் புரிந்து கொள்ளுதலே ஒரு சவால் ஆகும். அது மர்மத்திலேயே நகர்ந்து கொண்டிருக்கின்றது. சில நேரங்களில் உங்களால், அனைத்து மர்மங்களையும் ஆழ்ந்து கண்டறிய முடியாது, ஆயினும், அவற்றில் முழுமையாக வாழலாம். மர்மத்திலேயே வாழ்வது ஆன்மீகம். அதைப் புரிந்து கொள்வது விஞ்ஞானம்

அன்புள்ள குருதேவ், தங்களை அடுத்து, என் வாழ்வில் முக்கியமானவர் என்னுடன் பேசுவதில்லை. நான் என்ன செய்ய வேண்டும்? தவிர, நான் இங்கு வருவது குறித்து மகிழ்ச்சியற்று இருக்கின்றார். நான் எந்தத் தவறும் செய்யாத போதும் மோசமாக அவர் நடந்து கொள்ளும் போது நான் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: பொறுமையாக இருங்கள்.அவரிடம் அதிக அன்பு காட்டினால் திரும்பி விடுவார். சில சமயங்களில், மக்கள், பயந்து விடுகின்றார்கள். ஏனெனில் அவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு குறைந்து விடுமோ என்று அஞ்சுகின்றார்கள். எனவே, நம்பிக்கை அளியுங்கள். தன் மீதே கவனம் இருக்க வேண்டும் என்பதுதான் விஷயம்.  

அன்புள்ள குருதேவ், அலைக்கழிப்பூட்டும் எண்ணங்களை எவ்வாறு சிறந்த பயன் அளிக்கக் கூடிய வகையில் கையாளுவது?

குருதேவ்: அவற்றை தழுவிக் கொள்ளுங்கள். எந்த அளவுக்கு ஒதுக்க எண்ணுகின்றீர்களோ, அவை அந்த அளவு அதிகமாக வரும்.அலைக்கழிப்பூட்டும் எண்ணங்கள் வரும் போது அவற்றைத் தழுவிக் கொண்டு ஓரிரு நிமிடங்களுக்கு அதிலேயே தங்கி இருங்கள். பின்னர் பாருங்கள், அவை மறைந்து விடும். இன்னொரு வழி, எரியும் நெருப்பில் ஒரு கம்பினைப் போட்டு அது எரிவதைப் பாருங்கள். இவ்வாறு தான் உங்கள் எண்ணமும் எரிந்து விடும்.

மற்றுமொரு வழி பாயும் நதியினைக் காணுங்கள். எவ்வாறு நீர் பாய்ந்து செல்கின்றது என்பதைக் கவனியுங்கள். நீரின் அலைகள் செல்வது போன்று உங்களது எண்ணங்களும் சென்று விடும்.பலர், பாலங்களின் மீது, ஓடும் நதியில் தற்கொலை செய்து கொள்ளச் செல்கின்றார்கள். பாய்ந்தோடும் நீரினைக் கண்டு தங்கள் மனதை மாற்றிக் கொள்கின்றனர். இவ்வாறு அனைவருக்கும் அல்ல, ஆனால் பலருக்கு நிகழ்ந்திருக்கின்றது. பலர் நயாகரா நீர்வீழ்ச்சியில் குதித்திருக்கின்றார்கள். அவர்கள் நீரைக் காணவில்லை வேறெதிலோ அவர்கள் மனம் சிக்கிக் கொண்டிருந்திருக்கின்றது.
ஆக, இவ்வழிகளில் அலைக்கழிப்பூட்டும் எண்ணங்களைக் கடக்கலாம், ஆயினும் மிகச் சிறந்தது, பிராணாயாமம், தியானம் மற்றும் ஞானம். யோக வசிஷ்டா படியுங்கள். இது அனைத்தும் ஒரு கனவு என்று அறியுங்கள். இது ஒரு கனவு என்று நீங்கள் கண்டறியும் போது, மனம் தன்னைக் கடந்த காலத்தினின்றும் அனைத்து அலைக்கழிப்பிலிருந்தும் கட்டறுத்துக் கொள்ளும்.  

குருதேவ், இன்று நான் சேவாவில் இயற்கைப் பூச்சிக் கொல்லி மருந்தடித்து  ஆயிரக்கணக்கான பூச்சிகளைக் கொன்றேன். இது கர்மா, மற்றும் அகிம்சை இவற்றுடன் எவ்வாறு பொருந்தும்?

குருதேவ்: கவலைப்படாதீர்கள். கொசுவைக் கொல்லலாம். ஒன்றும் பிரச்சினை இல்லை. சுயநலம் மற்றும் கோபத்துடன் செய்யும் செயலே ஹிம்சை ஆகும். விலங்குகள் தங்கள் இரையை அடைவது வன்முறை என்று அழைக்கப்படாது. அவை தங்கள் தர்மத்தை செய்கின்றன. அது போன்று உங்கள் உடலில் தினமும் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் இறக்கின்றன. இது ஒரு இயல்நிகழ்ச்சியாக நடை பெற்று வருகின்றது.இல்லையெனில் நீங்கள் உயிர் வாழ முடியாது. ஒரு தீய பாக்டீரியா உள்ளே நுழைந்தவுடன் அனைத்து வெள்ளை அணுக்களும் சேர்ந்து அதைத் தாக்கி அழித்து விடுகின்றன. அப்போது தான் உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்கின்றது. உயிர் வாழவும், பாதுகாப்பிற்க்காகவும் செய்யப்படுபவை வன்முறை ஆகாது.

எதிர்மறை உணர்ச்சிகளான கோபம், பொறாமை,வெறுப்பு, பேராசை, ஆணவம் செய்யப்படும் செயல் வன்முறை ஆகும். நீங்கள் மூச்சு உள்ளிழுத்து வெளி விடும் போது பல பாக்டீரியாக்கள் அழிகின்றன. அது கொல்வது என்றாகுமா என்ன? இப்பூமியில் ஒரு இனத்தவர் குளிப்பதே இல்லை. ஏனெனில் பாக்டீரியாவைக் கொல்கின்றோம் என்னும் எண்ணத்தில், தண்ணீரை அண்டுவதே இல்லை. ஒரு டவலினால் தங்கள் உடம்பைத் துடைத்து கொள்கின்றார்கள். நான் அது முட்டாள் தனம் என்றே கருதுகின்றேன்.

இயற்கை தண்ணீரை அளிக்கின்றது, மழையைத் தருகின்றது. காடுகளில் வாழும் அனைத்து விலங்குகளும் ஒவ்வொரு மழைகாலமும் முழுவதுமாக குளிக்கின்றன. அப்போது பாக்டீரியாக்கள் கிருமிகள், பூச்சிகள் அழிகின்றன.உயிர்வாழும் பொருட்டு செய்யப்படும் எதுவும் வன்முறை அல்ல. எதிர்மறை எண்ணங்களுடன் எது செய்யப்பட்டாலும் அது வன்முறை ஆகும்.ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில், " நீ உன் கடமையைத் தான் செய்கின்றாய். அது பாவம் அல்ல. கவலைப்படாதே. அது பாவமாயினும் நான் அதை எடுத்து விடுகின்றேன், உன்னை விடுதலையாக்குகின்றேன். உன் கடமையைச் செய்து நீ அமைதியாக இரு “என்று கூறுகின்றார். இதுதான் கீதையின் சாரம். ஒரு மக்கள் கூட்டத்தை அடக்க முற்படும் காவல்துறை அதிகாரி யின் செயல் வன்முறை அல்ல. அது அவனது கடமை.அவ்வாறு செய்யாவிடில் அவன் சட்டத்தை மீறுவதாக ஆகும்.

இறைச்சித் தொழில் செய்வது வன்முறை ஆகுமா?

குருதேவ்: இத்துறை காலம் கடந்ததாகி விட்டது. இப்போது மக்கள் எவ்வாறு நமது உடல் காய்கறி உணவுக்கு தகுந்ததாக படைக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளத் துவங்கி விட்டார்கள். நாம் தாவர உணவு இனம் ஏனெனில் நமது முந்தையர் குரங்குகள் தாவரப் பட்சிணிகள். குரங்குகள், பசுக்கள், வரிக்குதிரைகள் அனைத்தும், தாவர உணவு உண்பவை.பல்வேறு வீட்டு விலங்குகளும் தாவர உணவே உண்பவை.

உண்மையில் நீங்கள் உணவுக்காக சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படும் விலங்குகளின் கண்களைப் பார்த்தால், பின்னர் கருணை மற்றும் நுண்ணுணர்வு உடைய மனித இதயம் கொண்ட எவரும் அந்த உணவை தொடக் கூட மாட்டார்கள். புலால் விற்கும் தொழிலில் உள்ளவர்கள், மாமிசம் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது என்பதை மக்களுக்கு மறைத்து, பொருளை மட்டுமே விற்கின்றார்கள். ஆனால் ஒரு முறை அதைப் பார்த்து, எவ்வாறு விலங்குகள் சித்திரவதை செய்யப் பட்டுக் கொல்லப்படுகின்றன என்பதை அறிந்தால், பின்னர் அதைத் தவிர்த்து விடுவீர்கள். இயற்கை உணவு பெருகி உள்ள இக்காலத்தில், மக்கள் தங்களது விருப்பத் தேர்வினை மாற்றிக் கொண்டு விட்டார்கள். வட அமெரிக்காவில் பெரும்பகுதி மக்கள் சைவ உணவே உடல் நலத்திற்கு நல்லது என்பதை கண்டு அறிந்து கொண்டிருக்கின்றார்கள்.

உண்மையில் எண்ணங்கள் அற்ற மனம் என்பது என்ன?


குருதேவ்: அது ஒன்றுமே இல்லாதது ஆகும். மனம் என்பதே எண்ணங்களின் கூட்டம் தான். எண்ணங்கள் இல்லாத நிலை மனமே இல்லாத நிலையாகும். தியானத்தில் ஒரு சில கணங்கள் இவ்வாறு நிகழக் கூடும். பின்னர் நீங்கள் மிக நன்றாக இருப்பதாக உணருவீர்கள்.