ஜூலை 12, 2014

வடக்கு கரோலினா, அமெரிக்கா


(ஸ்ரீ ஸ்ரீ அவர்களின் குரு பூர்ணிமா செய்தியின் தொடர்ச்சி)

இந்தியாவில் ஏகலைவன் பற்றிய ஒரு பிரபலமான கதை   உள்ளது. ஏகலைவன் ஒரு சீடனுடைய உருவகமாக திகழ்ந்தவன். ஒரு காட்டில் சிறுத்தைகளால் வேட்டையாடப்பட்டு வந்த ஒரு மானை காப்பாற்றுவதற்காக ஏகலைவன் வில்வித்தை பயில விரும்பியதாக கதை செல்லுகிறது. அவன் ஒரு ஏழை வேட்டைக்காரனின்  மகன். எனவே அவன் துரோணாச்சாரியாரிடம் (உயர்தரமான போர்க் கலைகளில் சிறந்தவர்) சென்று அவரிடம் தனக்கு வில் வித்தையை கற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டான். ஆனால் துரோணாச்சாரியார் ராஜகுரு என்பதாலும் உயர் குலத்தினருக்கு மட்டுமே அவர் பயிற்சி தருபவர் என்பதாலும், அவர் அவனுடைய கோரிக்கையை நிராகரித்து விட்டார். அவர்  பாரதத்தின் அரசகுலத்தை சேர்ந்த இளவரசர்களுக்கு மட்டுமே  கற்றுக் கொடுப்பவர்.  ஞானம் என்பது நினைவு நிலையின் தரம் ஆகும். அதனை பயிற்சிகளின்   மூலமாக மட்டுமே வளர்த்துக்கொள்ள முடியும், வெறும் தகவல்களால் அல்ல.

ஞானம் என்பது இரண்டு வழிகளில் நேரடியாக ஊற்றி வளர்க்கப்படும்.      

1. ஆன்மீக பயிற்சிகளின் மூலமாக
2. உங்களுடைய கவனத்தை அதில் செலுத்துவதன் மூலமாக.

அந்த நாட்களில்,அரச வம்சத்தில் பிறந்த இளவரசர்களுக்கு ஆசிரியாக இருந்து அவர்களுக்கு வில் வித்தை பயிலுபவராக இருந்தால், வேறு எவருக்கும் அதை கற்றுக் கொடுத்து அவர்களை இளவரசர்களுக்கு இணையாக்க கூடாது என்னும் நெறிமுறைகள் இருந்தன. இளவரசனுக்கு வில்வித்தையை பயிற்றுவித்து, நாட்டை பாதுகாக்க  அவரை ஒரு சிறந்த வில்லாலனாக மாற்றுகிறீர்கள். எனவே நீங்கள் அதே ஞானத்தை வேறு எவருக்கும் சொல்லிக் கொடுக்கக்கூடாது. இளவரசருக்கு இணையான சக்தி வாய்ந்தவராக ஒருவரை  உருவாக்குவது தடை செய்யப்பட்டிருந்தது. இளவரசரை   மிகவும் பலம் மிக்கவராக மாற்ற வேண்டியது அவருடைய கடமையாகும், எனவே அவர் ஒரு போட்டியாளரை உருவாக்க முடியாது. இல்லையென்றால் தேசம்  பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருக்க முடியாது.

ஏகலைவன், துரோனாச்சாரியாரை குருவாக ஏற்றுக்கொள்ள விரும்பினான். ஆனால் துரோனாச்சாரியாரால் அவனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரத்தியேகமாக  இளவரசர்களை மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும் என்பது அந்த நாட்டின் சட்டம். இருப்பினும் ஏகலைவன் துரோனாச்சாரியாரை தனது குருவாக ஏற்றுக்கொண்டு தனது வீட்டிற்கு சென்று அவரைப் போலவே ஒரு சிலையை உருவாக்கினான். வில்வித்தையை பயின்று இளவரசனை விட சிறந்த வில்லாலனாக உருவானான்.  வில்வித்தையில் கைதேர்ந்தவன் ஆனான்.ஒரு விலங்கின் சப்தத்தை மற்றுமே கேட்டு அதை நோக்கி அம்பு எய்தும் திறமை கொண்டான். ஒரு நாள், இளவரசனான் அர்ஜுனன் இதை தெரிந்து  கொண்டான். அவனை விட ஏகலைவன் சிறந்தவன் என்பதையும் அறிந்து கொண்டான்.  எனவே அவன் ஏகலைவனிடம் சென்று "உன்னுடைய குரு யார்" என்று கேட்டான். ஏகலைவன் " துரோணாச்சாரியார் தான் என்னுடைய குரு" என்று கூறினான். பிறகு அர்ஜூனன துரோனாச்சாயாரிடம் சென்று "என்ன?  நீங்கள் இப்படி செய்து விட்டீர்கள்! நீங்கள் எனக்கு மட்டும் தானே   பயிற்சி அளித்திருக்க வேண்டும். ஆனால் ஏகலைவனுக்கும் பயிற்சி அளித்து அவனை என்னை விட திறமை மிக்கவனாக ஆக்கி விட்டீர்களே" என்று கேள்வி கேட்டான்.

துரோணாச்சாரியார் இளவரசனுக்கு போட்டியாக வந்திருக்கும் நான் கற்று தராத இந்த மாணவன் யாராக இருக்கமுடியும் என்று குழப்பம் அடைந்தார். இருவரும் சென்று அவனை சந்திக்கின்றனர். ஏகலைவன்  தான் குருவாகக் கருதி உருவாக்கிய துரோனாச்சாரியாரின்  சிலை இருக்கும் இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லுகிறான். பிறகு துரோணாச்சாரியார் அவனிடம் " நீ எனக்கு ஏதாவது குரு தட்சிணை அளிக்க வேண்டும்" என்று கேட்டார்.(வித்தையை பயின்றதற்கான கட்டணமாக ஒரு பரிசு). அவர் ஏகலைவனிடம்  அவனுடைய வலது கட்டை விரலை பரிசாக அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.( கட்டை விரல் இல்லாமல் வில்வித்தையை தொடர முடியாது). ஏகலைவனும் எந்த விதமான தயக்கமும் இன்றி அவனுடைய வலது கட்டை விரலை வெட்டி குருவிற்கு அளித்துவிடுகிறான்.      

குரு  என்பவர் ஒரு முக்கிய அணுகுமுறையை கொண்டிருக்க வேண்டும் என்பதாக இந்த கதை பார்க்கப்படுகிறது. அந்த சிறுவன் தானாகவே அந்த திறமையை கற்றுக்  கொண்டான். அதே சமயம் துரோணாச்சாரியார் கட்டை விரலை கேட்டதன் மூலம் அந்த திறமையை அவனிடம் இருந்து பறித்து விட்டார். அந்த குரு எவ்வளவு மோசமாக இருந்திருக்கிறார். குரு மாணவனிடம் இருந்து அவனுடைய திறமையை திருடி விட்டார் என்று காண்பது ஒரு கண்ணோட்டம். ஆனால் மற்றொரு கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்த சம்பவம் ஏற்பட்டிருக்காவிடில் இந்த உலகில் ஏகலைவனை யாருக்குமே தெரிந்திருக்காது.வெளிப்புறமாகப் பார்த்தால் துரோணாச்சாரியார் ஏகலைவனுக்கு அநீதி இழைத்துவிட்டது போலவே  தோன்றும். ஆனால் உண்மையில் துரோணாச்சாரியார்   ஏகலைவனை உயர்த்திவிட்டார் ஏனென்றால் இந்த ஒரு செயல் அவனை அழிவற்றவனாக்கி விட்டது. ஆகவே மக்கள் பக்தியை பற்றி நினைக்கும் பொது அவர்களுக்கு ஏகலைவன் தான் நினைவுக்கு வருவான், அர்ஜுனன் அல்ல. 

உங்களுடன் ஞானத்தை இணைத்து கொண்டிருப்பதாலும், உணர்வு அந்த நிலையிலேயே இருப்பதாலும் நீங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருக்கும் போதும் குருவை நினைப்பீர்கள். இதுவே "பிரதாஹ்  ஸ்மாரானிய" என்று அழைக்கப்படுகிறது. பழியை ஏற்றுக் கொண்டு மாணவனை உயர்த்தியதன் மூலமாக துரோணாச்சாரியார் பெருந்தன்மைமிக்கவர் ஆகின்றார் என்பதை  காணவும். அதனால் தான் குரு என்பவர் தவறு இழைத்தாலும் உங்களுக்குள்  பக்தி இருந்தால் நீங்கள் தவறு செய்யமாட்டீர்கள். 

ஆனால் குரு தவறு செய்யவில்லை. பாரபட்சமாக இருந்தது போல் தோன்றினாலும், மாணவனை உய்ரவடைய செய்ததோடு இல்லாமல் தர்மத்தையும் பாதுகாத்தார். அந்த நாட்டின் சட்டத்தை பாதுகாப்பதும் அவருடைய கடமை. இளவரசனை விட சிறந்தவனாக ஒருவன் இருக்கக் கூடாது. ஒரு அழகான கதை. வசிஷ்ட முனிவர் ராமருக்கு ஞானம் அளித்த யோக வசிஷ்டாவும் ஒரு நல்ல கதை ஆகும்.  நீங்கள் யோக வசிஷ்டாவை படிக்க வேண்டும். வசிஷ்டர் மிக அழகான முறையில் ராமருக்கு ஞானத்தை அளித்து அவரை மன அழுத்தத்தில் இருந்து வெளிக்கொண்டு வருகிறார். மேலும் அவரை இந்த உலகின் ஒளி என்றும் மனித வடிவம் எடுத்த தெய்வம் என்றும் உணரச் செய்கிறார்.

ஞானம் என்பது நினைவு நிலையின் தரம் ஆகும். அதனை பயிற்சிகளின் மூலமாக மட்டுமே வளர்த்துக்கொள்ள முடியும், வெறும் தகவல்களாலல்ல. ஆகவே மறுபடியும் கூறுகிறேன்,, ஞானம் என்பது இரண்டு வழிகளில் நேரடியாக ஊற்றி வளர்க்கப்படும்.      

1. ஆன்மீக பயிற்சிகளின் மூலமாக
2. உங்களுடைய கவனத்தை அதில் செலுத்துவதன் மூலமாக.

நீங்கள் ஒன்றின் மீது எந்த அவவுக்கு கவனம் செலுத்துகிறீர்களோ, அந்த தரமே உங்கள் உணர்வு நிலையில் இருக்கும். நீங்கள் அதுவாகவே மாறி விடுவீர்கள். நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் குரங்கை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது எப்போதுமே கோபமாகவே உள்ள ஒருவரை நினைத்துக் கொண்டிருந்தாலோ, நீங்களும் அந்த கோப நிலையிலேயே இருப்பீர்கள்.  உங்களுக்கு அந்த அனுபவம் ஏற்பட்டதில்லையா? (பலர் கைகளை உயர்த்துகிறார்கள்)  

உங்கள் மனம் எங்கெல்லாம் செல்லுகிறதோ, அந்த தரங்களையே உங்கள் மனம் உட்கிரகிக்கிறது. உங்கள் கவனத்தை ஞானத்தின் மீது செலுத்தும்போது, உங்கள் மன நிலையின் தரமும் அதே மாதிரி இருக்கும். அதாவது முதிர்ச்சியடைந்த ஒருவர் அல்லது நல்ல விவேகம் உள்ளவர் "பிரதாஹ் ஸ்மாரானிய" என்று அழைக்கப்படுகிறார். இது இந்தியாவில் உபயோகப்படுத்தப்படும் ஒரு பொதுவான வார்த்தை ஆகும். காலையில் எழுந்தவுடன் நினைவுக்கு கொண்டு வரவேண்டிய  மதிப்புமிக்க ஒன்று என்பதே இதன் பொருள்.   

காலையில் எழுந்த உடனே நீங்கள் யாரை நினைக்கின்றேர்களோ, அதையே உங்கள் மனம் வகிக்கிறது. அதனால் தான் காலையில் எழந்தவுடன் நீங்கள் உங்கள் குருவையோ அல்லது ஞானமுள்ள ஒருவரையோ அல்லது ஒரு அருட்தொண்டரையோ நினைத்துக் கொண்டீர்கள் என்றால் உங்கள் உணர்வின்  நிலையும் அதே மாதிரி இருக்கும். நாள் முழுவதும் உங்கள் உணர்வு அவ்வாறே இருக்கும் ஏனென்றால் நீங்கள் குருவை நினைப்பதன் மூலம் ஞானம் பெறுகின்றீர்கள்  மற்றும் உங்களுடைய மன நிலையின் தரம் அம்மாதிரியாக மாறி விடும். இதுவே "பிரதாஹ் ஸ்மாரானிய " என்று அழைக்கப்படுகிறது. ஞானம் ஞானத்தை கைப்பற்றுகிறது. விவேகம்  உள்ளவர்களின் தொடர்பு உங்களின் உணர்வின் தரத்தை உயர்த்தும்.

பெரும் சாதனை புரிந்த புனிதமான ஒருவரை :"ரதாஹ் ஸ்மாரானிய" என்று அழைக்கப்படுகிறார். பிரதாஹ் என்றால் காலை என்றும் ஸ்மாரானிய என்றால் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கு   உகந்தவர் என்றும் பொருள் ஆகும். காலையில் எழுந்தவுடன் ஞாபகப்படுத்திக் கொள்வதற்கு உகந்த ஒன்று. மக்கள் பொதுவாக படுக்கச்செல்வதற்கு முன் பிரார்த்தனை செய்வதுண்டு. காலையில் எழுந்தவுடன் விவேகம் கொண்ட ஒருவரை ஞாபகப்படுத்திக் கொள்வது உகந்தது. அதனால் நீங்களும் ஞானமும் விவேகமும் உள்ளவராகி விடுவீர்கள்.

அது ஒரு அர்த்தத்தை உருவாக்கும் பயிற்சி ஆகும். உணர்ச்சியே உணர்ச்சியை கைப்பற்றும் உலகில் நம் வாழ்கின்றோம்.சிலருக்கு ஒரு குறிப்பிட்ட உணர்ச்சி ஏற்பட்டால் மற்றவர்களுக்கும் அந்த உணர்ச்சி தொற்றிக் கொள்ளுகிறது. அது போலவே ஞானமும் ஞானத்தை கைப்பற்றுகிறது. ஞானம் அல்லது விவேகம் உள்ளவர்களுக்கு மத்தியில் நீங்கள் இருந்தால் உங்களுடைய உணர்வும் அந்த அந்த நிலைக்கு மாறும். அப்படி மாறவில்லை என்றால் அது ஏன் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். காலம் ஒரு காரணியாக இருக்கலாம் ஏனென்றால் உங்களை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் ஞானமும் அல்லது விவேகமும் உள்ளவர்களாக இருக்கும் போது உங்களால் அவ்வாறு மாறமுடியாமல் இருப்பது சாத்தியமல்ல.

ஞானம் என்பது தகவல்ல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும். அது உங்களுடைய மன எண்ணங்களின் தரத்தை குறிப்பது ஆகும். நீங்கள் இன்று அல்லது இன்று முதல் தொடங்கி  வாழ்க்கை பாதையில் நடந்து செல்லும்போது உங்களுக்குள் ஒரு வைரம் அல்லது மதிப்பிற்குரிய கல் உள்ளது என்று நினைத்துக் கொள்ளவும். நீங்கள் சில மதிப்பு மிக்க விஷயங்களை மற்றும் ஞானத்தை கைப்பற்றிக் கொண்டிருக்கிறீர்கள். விலை மதிப்பற்ற சில கொடுக்கப்பட்டுள்ளன என்னும் மன உணர்ச்சியுடன் வாழ்க்கை பாதையில் நடந்து செல்லவும். 

பகவான் கிருஷ்ணருடைய பக்தையான மீரா, ஒரு பெண் துறவியானவர். குரு என்று ஒருவர் இல்லாததால் உயர்வடைய முடியவில்லை. ஆகவே அவர் செருப்பு தைக்கும் ஒருவரிடம் சென்று அவருடைய சீடரானார். அதன் பிறகு அவர் இன்று நான் ஒரு விலைமதிப்பற்ற  ராமமந்திரத்தை பெற்றிருக்கிறேன் என்று ஒரு பாடல் பாடினார். மீரா பகவான் கிருஷ்ணருடைய பக்தையாக இருப்பினும் ராமரும் கிருஷ்ணரும் முற்றிலும் எதிரெதிராக இருந்த போதும், அவருடைய குரு அவருக்கு ராமமந்திரத்தை உபதேசித்தார். ராமர் எதையெல்லாம் செய்தாரோ கிருஷணர் அவைகளை செய்யவில்லை. நீங்கள் ராமருக்கும் கிருஷ்ணருக்கும் இடைய உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை கேட்டிருக்கின்றீர்களா? (அங்கிருந்தவர்கள் 'இல்லை' என்று கூறுகின்றனர்) 

ராமர் பகல் 12 மணிக்கு பிறந்தவர். கிருஷ்ணர் நடுநிசியில் பிறந்தவர். ராமர் பிறந்தபோது பெரிய கொண்டாட்டமாக இருந்தது. கிருஷ்ணர் பிறந்தபோது எங்கும் பயஉணர்ச்சி இருந்தது. ராமர் அரண்மனையில் பிறந்தார். கிருஷ்ணர் சிறையிலே பிறந்தார்.ராமர் அவருடைய தந்தை சொல்வதை தட்டாமல் அவ்வாறே செய்தவர். கிருஷ்ணர் எப்போதுமே அவருடைய தந்தை சொன்னதை கேட்டது கிடையாது. இம்மாதிரியாக பல விஷயங்கள் முழுதும் எதிர்மறையானவை. அதனால் தான் பெரும்பாலான மக்கள் ராமரையே பின்பற்ற வேண்டும் கிருஷ்ணரை அல்ல என்று கூறுகின்றனர். கிருஷ்ணர் சொல்வதை கேட்டுக்கொள்ளலாம் ஆனால் ராமர் நடந்து கொண்டபடி தான் நடக்க வேண்டும்.பெற்றோர்களுக்கும், தம்பதியர்களுக்கும் அதுவே மிகவும் சுலபமானது. ஞானம் என்பது தகவலல்ல,அது உங்களுடைய மனதின் எண்ணங்களின்  தரத்தை குறிப்பது ஆகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

ஆகவே மீரா கிருஷ்ணரை நினைத்து பாடுவதையே வழக்கமாக கொண்டிருந்தார். மேலும் அவருடைய குரு ராம மந்திரத்தை அவருக்கு அளித்ததனால் அவர் இன்று நான் ஒரு விலை மதிப்பற்ற ராம மந்திரத்தை பெற்றிருக்கிறேன் என்று பாடினார். நான் என்ன சொல்ல வருகின்றேன் என்றால் மீராவிற்கு அவருடைய குரு ராம மந்திரத்தை அளித்த போதும் அவருக்குள் எந்த விதமான முரண்பாடும் ஏற்படவில்லை.

ஒருவர் கிறுத்துவரோ, சீக்கியரோ, புத்த மதத்தவரோ அல்லது ஒரு இந்துவோ, ஒரு விஷயமே   இல்லை. நீங்கள் எந்த மதத்தில் பிறந்திருந்தாலும், எந்த மதத்தை கடைப் பிடித்தாலும் அது ஒரு விஷயமே இல்லை. ஆன்மீக ஞானம் உங்களை உயர்த்திச் செல்லும் ஆகவே அந்த ஞானத்தை கௌரவிக்கவும். அதனால் தான் மீரா இன்று நான் ஒரு விலை மதிப்பற்ற ராம மந்திரத்தை பெற்றிருக்கிறேன் என்று  பாடினார். இந்தியாவில் அது ஒரு பிரபலமான பாடல் ஆகும். அநேக இந்தியர்கள் அதை கேட்டிருகின்றனர். அதனால் தான்  அதுவே தான் பெற்ற மிகப் பெரிய செல்வம் மிகப்பெரிய ஆசீர்வாதம் என்று  மீரா கூறுகிறார்.