தீர்மானம் மட்டுமே செய்பவராக இல்லாமல், கருணை உள்ளம் கொண்டவராக இருங்கள்

ஜூலை 15, 2014

கனடா


(இன்றைய வலியே நாளைய பலம் என்னும் அஞ்சலின் தொடர்ச்சி)

கேள்வி பதில்கள்

உங்களுடைய பக்தர்கள் பயிற்சி வகுப்புகளில் இருக்கும் போதும் சத்சங்கங்களிலும் இருக்கும் போது இனிமையாக உள்ளனர், ஆனால் அவர்கள் வெளி உலகத்திற்குள் வரும்போது விஷயங்கள் மாறி விடுகின்றன, என்று நான் கவனித்திருக்கின்றேன். யாருமே உங்களை போல இருக்க கஷ்டப்படுவதில்லை என்பது போல தோன்றுகிறது. அதிகம் பேர் உங்களை போல உருவாக ஒரு பயிற்சியை வடிவமைக்கவும்.

நன்றாக கவனிக்கவும். யாரையும் மதிப்பீடு செய்ய வேண்டாம். அவர்கள் எந்த சூழலில் சென்று கொண்டிருகிறார்கள், எப்படி உணருகிறார்கள் அவர்கள் உள்ளுக்குள் எவ்வாறு இருக்கிறார்கள் என்றெல்லாம் தெரியாது. நீங்கள் உங்களையே பாருங்கள். நீங்கள் மாற வில்லையென்றால்,  ஏன் என்று பார்க்கவும். நீங்கள் மாறியிருந்தால், பயிற்சியை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்பதாகும். செய்யும் அனைத்து பயிற்சிகளினால் எந்த தாக்கமும் ஏற்படவில்லை என்பது கண்டிப்பாக இருக்க முடியாது. அதனால், இந்த ஞானத்தையும் பயிற்சியையும் பெறவில்லை என்றால் அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று  சற்றே கற்பனை செய்து பார்க்கவும்,

குருதேவ்! இன்று உங்களுடன் சேர்ந்து தியானம் செய்த  பிறகு என்னுடைய வலி அனைத்தும் போய் விட்டது. நீங்கள் இதை எப்படி செய்கிறீர்கள்? எனக்கு எங்கே வலி உள்ளது என்று எப்படி உங்களுக்கு தெரிகிறது?

நீங்கள் அதை பற்றி வியப்படைய விட்டு விடுகிறேன். பாருங்கள்! வலி என்பது உடலிலோ  அல்லது மனதிலோ இல்லை, இரண்டுக்கும் இடையே அவை இரண்டும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. உடம்பின்   ஒரு குறிப்பிட்ட பகுதியில் மயக்க மருந்து கொடுக்கப்படும் போது நீங்கள் விழிப்புடன் இருந்தாலும் உங்களுக்கு அந்த பகுதியில் வலி தெரிவதில்லை. சில சமயங்களில் உடலில் வலி எதுவும் இருக்காது ஆனால் மனதில்  வலி தெரியும்.   

உணர்ச்சிவயப்பட்ட வலியும் மனதில் மட்டுமே ஏற்படும், ஆனால் மனதிலோ அல்லது உடலிலோ   இல்லை, இரண்டுக்கும் இடையே அவை இரண்டும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. தியானம் நிச்சயமாக உங்களை துன்பம் மற்றும் வலியில் இருந்து மேலே கொண்டு செல்லக் கூடியது. அதனால் தான் குரு என்பவர் உலக நோய்களுக்கெல்லாம் மருந்து  என்று அழைக்கப்படுகிறார். மனமானது வெறுப்பு, கோபம், துவேசம், ஆசைகள் போன்ற நோய்களில் சிக்கியிருக்கின்றது. குருவே ஒரு மருத்துவராகவும் மருந்தாகவும் இருக்கின்றார்.

குருதேவ்! நீங்கள் எப்போதுமே என்னை கவனித்துக் கொள்ளுகிறீர்கள். எனக்கு ஒரே ஒரு ஆசை உள்ளது. நான் இந்த உடம்பில் இருக்கும் வரையிலும் மற்றும் வரப்போகும் அனைத்து   பிறப்புகளிலும், என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொண்டு விடுதலை அளிக்கவும். நான் மற்றவர்களையும் விடுவிக்க எனக்கும் உண்மையை காண்பிக்கவும்.

சமீபத்தில் ரிஷிகேசத்தில் இருக்கும் போது, ஒரு முனிவர் வந்தார். அனைவரும் கூடியிருக்கும்   போது அவர் ஒரு அழகான விஷயத்தை கூறினார். அவர் "இந்த பள்ளியில் படித்து தேர்ந்த ஒருவர் இங்கே இருப்பார். அவ்வாறு படிக்காதவர் இங்கிருந்து வெளியேறுவார்" என்று கூறினார்.பொதுவாக  நீங்கள் ஒரு பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றபின் அந்த பள்ளியை விட்டு வெளியேறி மேலே செல்லுவீர்கள். இது எந்த மாதிரி பள்ளி என்றால் இப்பள்ளியில் பயின்று  தேர்ச்சி பெறுபவர்கள் நிரந்தரமாக இங்கேயே தங்கிவிடுவர். இது மிகவும் சுவாரசியமானது. இந்த பள்ளியில் தேர்ச்சி பெரும் ஒருவர்  இங்கிருந்து வெளியே செல்லமாட்டார் ஆனால், இங்கேயே தங்கிவிடுவார்.  

குருதேவ்!சூனியத்தில் என்ன நிரப்பப்பட்டுள்ளது? முழுவதும் உயிர் மற்றும் விழிப்புணர்வினால் நிரப்பப்பட்டதா?

சூன்யம் சக்தியினால் நிரப்பப்பட்டுள்ளது. இது மறுபடியும் குவாண்டம் இயற்பியல். சூரியனை  சுற்றி நாம் காணும் வெற்றிடம் உண்மையிலே வெற்றிடம் அல்ல என்று கூறுகிறார்கள். சூரியனை சுற்றி இருக்கின்ற சக்தியானது நான்கு புறங்களில் இருந்தும் சூரியனை அழுத்துவதனால் தான் சூரியன் உருண்டையாக உள்ளது. இது தண்ணீர் குடுவையினுள் இருக்கும் நீர்க் குமிழியை போன்றது. எதனால் நீர்க் குமிழி உருண்டையாக உள்ளது? தண்ணீரின் அழுத்தமே நீர்க்குமிழியை உருண்டையாக வைத்திருக்கின்றது. இதை போலவே தான் சூரியனை விட ஒரு மில்லியன் அதிக திடம் கொண்ட சக்தியானது சூரியனை சுற்றிக்கொண்டிருப்பதால் சூரியனும் உருண்டையாக உள்ளது. இந்த சக்தி கருமையான சக்தி அல்லது வஸ்து என்று அழைக்கப்படுகிறது. ஆகவே சூரியனை சுற்றியுள்ள விண்வெளி சக்தியினால் நிரப்பப்பட்டுள்ளது.      

அன்பு குருதேவ்! எது உங்களை தனிச்சிறப்பு மிக்கவராக செய்கிறது?

நான் தனிச்சிறப்பு உள்ளவனாக எனக்கு தெரியவில்லை. நான் சற்று வேடிக்கையானவனாக   தோன்றலாம், தனிச்சிறப்பு உள்ளவன் அல்ல. நீங்கள் வேடிக்கையானவராக இல்லையென்றால்  எதற்காக ஒன்றுமே இல்லாததற்கு இந்த உலகம் முழுவதையும் சுற்றி சுற்றி வருகிறீர்கள்?

குருதேவ்! எந்த இந்திய வேதம் பைபிள் அல்லது குரானுக்கு இணையானது?

உண்மையில் எதுவும் இல்லை. அது சொல்லுவதற்கு மிகவும் கடினமானது. வேதங்கள் ஞானத்தை பெறுவதற்கு மிக முக்கியமான மூலங்கள் என்று கருதப்படுகிறது, ஆனால் அது மிகவும் பரந்தது. நடைமுறை காரணங்களுக்காக பகவத்கீதை அனைவராலும் படிக்கப்படுகின்றது, ஏனென்றால்   பிரதான ஞானத்தை சாரமாகக் கொண்டுள்ளது. ஆகவே உபநிஷதங்களையும், பகவத் கீதையையும் கிழக்கு நாடுகளில் உள்ளவர்களுடைய பைபிள் அல்லது குரானாகக் கருதலாம். நீதிமன்றங்களிலும் அவை உபயோகப்படுத்தப்படுகின்றன.

கீதை 5200 ஆண்டுகள் மட்டுமே பழமையானது, ஆனால் இந்த பாரம்பரியம் கீதைக்கு முன்பாகவே பல ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கின்றது. ராமருடைய காலத்தில் பகவத்கீதை இல்லை, வேதங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் அந்த வேதங்கள் சாதாரண மக்கள் புரிந்து கொள்ள இயலாத பண்டைய மொழியில் இருந்தன. வேதங்கள் பல இடங்களில் அடையாளமாகவே இருந்தன. அவைகளுக்கு அதிகமான விளக்கங்கள் தேவைப்பட்டன. உபநிஷதங்களும், வேதங்களும் அதிகாரங்களாக கருதப்பட்டன. பகவத்கீதை நடைமுறை காரணங்களுக்காக கிழக்கு நாட்டவர்களுடைய பைபிள் அல்லது குரானாக கருதப்பட்டது.   

பேரன்புமிக்க குருதேவ்! வாழ்க்கை மிகவும் வேகமானதாகி விட்டது எனக்கு நடுநிலையில் இருப்பது மிகவும் சிரமமாக உள்ளது. உதவி செய்யவும். 

நல்லது. வாழ்க்கை வேகமானதாக இருந்தால் நீங்கள் எதன் மீதும் நிலைத்திருக்க வேண்டாம். அது உங்களை எந்த நேரத்திலும் பழைய விஷயங்களை நினைத்து பொருமிக்கொண்டிருக்க விடாது.   நீங்கள் எதையாவது நினைத்து பொருமிக்கொண்டிருக்கலாம் என்று நினைக்கும் போதே கவனிக்க வேண்டிய வேறு ஏதாவது காரியங்கள் வந்து விடும். ஓட்டத்திலேயே சென்று கொண்டிருக்கவும்.