மரணமே இல்லாத அன்பு

திங்கள்கிழமை - 5 ஜனவரி - 2015,

பாத் அண்டோகஸ்ட் ,ஜெர்மனி


சத்சங்கம் என்பது இரண்டினைக் குறிக்கின்றது.

1. அறிவுபூர்வமான விவாதம்  -  இடது புற மூளையின் செயல்

2. பாடுதல் -  வலது புற மூளையின் செயல்

இரண்டுமே முக்கியமானவை ஆகும். சிறிது நேரம் பாடுகின்றோம், பின்னர் ஏதேனும் கேள்வி இருந்தால் கேளுங்கள், நாம் விவாதிக்கலாம்.

அன்புள்ள குருதேவ், அன்பில் வெற்றி என்பது என்ன?

வெற்றி, தோல்வி என்பதை அடைவதற்கு அன்பு வியாபாரமல்ல. வெற்றி, தோல்வி. என்பதை காண்பதற்கு, ஒரு தொழிலுமல்ல. வெற்றி, தோல்வி என்பதை அறிய ஒரு செயலும் அல்ல. அன்பு என்பது உங்களுடைய இயல்பு. நீங்கள் வெளிப்படுத்தினாலும், இல்லையென்றாலும், அன்பு இருக்கின்றது. அன்பு உங்களுடைய இயல்பு என்பதை உணர்ந்தறிந்து கொள்ளுங்கள். அப்போது, வெற்றி தோல்வி என்னும் எண்ணமே எழாது. சிலர் உங்களை புரிந்து கொள்ளலாம், சிலர் புரிந்து கொள்ளாமலும் இருக்கலாம் உங்களை விரும்புபவர்கள் உங்களை எப்போதும் விரும்புவார்கள் என்று கூற முடியாது. இருபது ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவர்கள், ஒருவருக்காகவே மற்றவர்  ஏற்பட்டது போன்று உணர்ந்தவர்கள் திடீரென்று ஒரு குறிப்பிட காலகட்டத்தில், முற்றிலும் இணக்கமற்று, இனி இசைந்து வாழவே முடியாது என்னும் நிலையினை அடைகிறார்கள். தங்கள் தங்கள் வழியில் பிரிந்து செல்ல விரும்புகின்றார்கள். அன்பு என்பது ஒரு செயலல்ல. ஒரு நிகழ்வுமல்ல. அது நமது இயல்பு. உங்களுக்கு அறிவுத்திறனும் ஞானமும் இருந்தாலன்றி ,  ஒருவர் மீது நீங்கள் அன்பு செலுத்தினால் அது எப்போதும் நீடித்திருக்கும் என்று நினைக்காதீர்கள்.

அன்பும் ஞானமும் இணைந்திருந்தால் பேரின்பம்.சுயநலத்துடன் கூடிய அன்பு, தனிமனித சுகத்திற்காக செலுத்தும் அன்பு, விரைவிலோ அல்லது பின்னரோ, துன்பத்தையும் மனமுறிவையும் ஏற்படுத்தும். உங்களுடைய அன்பு பிறருக்கு உதவும் பொருட்டு இருந்தால் அதை ஒருவராலும் அழிக்க முடியாது. ஆனால் எதையாவது பிறரிடமிருந்து அடையவேண்டும் என்று அன்பு செலுத்தினால் அது விரைவிலோ, பின்னரோ துண்டு துண்டாக உடைந்துவிடும்.

அன்பு என்பது என்ன என்று சிந்தித்துக் கண்டுபிடியுங்கள். பிறரிடமிருந்து சுகம் அடைவதற்கு செலுத்துவதற்குப் பெயர்தான் அன்பு என்பதா? ஆம் என்றால் அது உங்களுக்கு வலியினை ஏற்படுத்தும். ஆனால் உங்களது அன்பு பிறரை பாதுகாத்துக் கவனிப்பதற்கே, அன்பின்றி இருக்க முடியாது என்றால் அது உங்கள் உண்மையான இயல்பு. அதுதான் உண்மையான அன்பு. அன்பு ஒரு உணர்ச்சி கூட அல்ல. நாரத பக்தி சூத்திரம் மற்றும் அன்பு ஒரு கொண்டாட்டம் என்னும் நூல்களில் அன்பு என்பதை பற்றி நான் நிறையக் கூறியிருக்கின்றேன். அவற்றைப் பாருங்கள். உலகில் பெரிய குழப்பங்கள் அன்பு என்பதன் பெயரால் ஏற்படுகின்றன. ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

அன்புள்ள குருதேவ் ! நம்முடைய வாழ்க்கையில் இனி இல்லை என்ற மக்களை எவ்வாறு விட்டுவிடுவது?

உங்களை பற்றிய, வாழ்க்கையை பற்றிய இந்தப் பிரபஞ்சத்தை பற்றிய உங்களது பார்வையை விரிவாக்கிக் கொள்ளுங்கள். இந்த உலகம்  பில்லியன் விண்மீன் திரள்களில் ஒன்றாக 
குறைந்த பட்சம் 19 பில்லியன் ஆண்டுகளாகவாவது இருந்து வருகிறது, நீங்கள் அகிலம் முழுவதையும் கவனித்து பார்த்தால், சூரிய மண்டலம் ஒரு புள்ளி போல் உள்ளது என்பதை அறிவீர்கள்.

பில்லியன் கணக்கில் உள்ள விண்மீன் திரள்களில், பிரபஞ்சம் ஒன்றாகும். எனவே அதுவே சிறியது, அதில் ஒரு புள்ளி போன்றது சூரியமண்டலம், அதில் நம் பூமி, அதனுள் நீங்கள் ! நீங்கள் ஒரு லென்ஸ் எடுத்துப் பாப்பதற்கு முன்னரே உங்கள் வாழ்க்கை முடிந்து விடும்! உங்கள் வாழ்க்கை என்பது என்ன? உங்கள் பூமியே மிகமுக்கியத்துவம் இல்லாதது என்னும் போது நீங்கள் அதினனினும் முக்கியத்துவமற்றவர்.

மற்றொரு அம்சம் காலம். பல பில்லியன் ஆண்டுகளில் பில்லியன் கணக்கான மக்கள் இப்பூமியில் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள். இன்று ஏழு பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் பிறந்து கொண்டும் இறந்து கொண்டும் இருக்கின்றார்கள். அப்படியானால் உங்கள் வாழ்க்கை என்ன? கண்மூடித் திறக்கும் காலம்தான்! வாழ்க்கையை பெரிய கண்ணோட்டத்தில் காணும் போது, அது ஒன்றுமேயில்லை என்று உணர்ந்து கொள்வீர்கள். எண்பது ஆண்டுகள் இந்தப் பூமியில் வாழுகின்றீர்கள். அதில் 40 ஆண்டுகள் உறக்கத்திலும் 10 ஆண்டுகள் குளியலறையிலும், 10 ஆண்டுகள் உண்பதிலும்,15 ஆண்டுகள் செயலாற்றுவதிலும் கழிந்து விடுகின்றன. விழித்திருக்கும் நேரம் மிகக் குறைவானது தான். எனக்கு எனக்கு எனக்கு என்பதெல்லாம் என்ன? ஒன்றுமில்லை.. வாழ்க்கை மிக முக்கியத்துவம் அற்ற ஒன்று என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு நாளும் பில்லியன் எண்ணங்கள் மூளைக்குள் வந்து போகின்றன. சிலவற்றை பிடித்து வைத்து கொள்கின்றீர்கள். அனைத்தையும் பிடித்து வைத்துக்கொள்ள முடியாது. அனைத்தையும் பிடித்து வைத்துக் கொண்டால் நீங்கள் மனநல மருத்துவமனையில் இருப்பீர்கள் !

வாழ்க்கையைப் பெரிய கண்ணோட்டத்தில் பார்த்தால், அனைத்துக் கவலைகளும் மறைந்து விடும். ஒரு புதிய பரிமாணம் திறக்கும். இன்னும் நுண்ணிய முறையில் பார்த்தால் மிகவும் வியப்பாகவே இருக்கும். மூளையில்  பில்லியன் கணக்கில் செல்கள் உள்ளன. ஏராளமானவை புதிதாகப் பிறந்து கொண்டும் இறந்து கொண்டும் இருக்கின்றன. 50000 வகை பாக்டீரியாக்கள் வயிற்றில் உள்ளன. மூன்று சிலந்திக்  காலனிகள் நெற்றியில் உள்ள ஒவ்வொரு வரியிலும் உள்ளன. அவையனைத்தும் வெவ்வேறானவையாகும்.

மூக்கின்  நுனியில், பல்வேறு வகையான பக்டீரியாக்கள் உள்ளன. அறிவியல் நிபுணர்கள் இன்னும் அதைப் பற்றி ஆய்ந்து கொண்டிருக்கின்றனர்! மூக்கின் நுனியிலிருந்து கிடைக்கப் பெற்றிருக்கும் செய்திகள் டிஎன்ஏ லிருந்து கிடைக்கப் பெற்றவையை விட அதிகம்! இன்னும் விஞ்ஞானிகளால் மூக்கின் நுனி எவ்வளவு செய்திகளை தரும் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நுண்ணுயிர்க்குள் ஆழ்ந்து செல்லும் போது ஏராளமானவற்றை காணலாம். உள்ளே போய்கொண்டே இருக்கலாம். ஓர் அணுவை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் இருக்கும் இடம் இரு விண்மீன் திரள்களுக்கிடையே உள்ள இடத்திற்கு ஒப்பானது. அணுவில் 99.99% காலியிடமே. அது போன்றே நமது உடலில் இருக்கும் செல்களுக்கிடையே உள்ள இடமும் ஆகும். நமது உடலிலுள்ள செல்கள் காலியானவையே ஆகும். அறிவியல்ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் எந்த வழியானாலும் ஒரே புள்ளியினை அடைவீர்கள். இரண்டும் கூறுவது என்னும் ஒன்றே ஆகும். வெற்றிடம் என்பதே அதுவாகும்

இது மிகவும் சுவாரஸ்யமானது. அண்மையில் ஒரு அமெரிக்கன் மருத்துவ சஞ்சிகையில் ஒரு கட்டுரை வெளியானது. அதில் ஒருவன் தினமும் சீராக தியானம் தொடர்ந்து எட்டு வாரங்களுக்குச் செய்தால், மூளையின் அமைப்பு மாறுபடுவதாகவும், புத்திக் கூர்மை அதிகரிப்பதாகவும் கூறப் பட்டுள்ளது. தியானத்தினால் ஏராளமான பலன்கள் ஏற்படுகின்றன. மரபணுக்களைப் பற்றி அறிந்து கொள்வது இன்னும் வசீகரமானது! ஒரு மரபணுவில் நீங்கள் பிற மரபணுக்களைக் காணலாம். ஒரு மனித மரபணுவில் ஒவ்வொரு விலங்கின் மரபணுவும் உள்ளது! மனித உடலின் அணுவினைப் பயன்படுத்தி ஒரு யானையை உருவாக்கலாம். மனித உடல் முற்றிலும் முழுமையாக, வேறெந்த மரபணுவையும் உருவாக்குமளவுக்குத் திறன் படைத்தது. மிகவும் ஆச்சர்யமானவையல்லவா? அப்போது கவலைப்படுவதற்கு என்ன இருக்கின்றது? நான் உங்கள் கேள்வியையே கூட மறந்து விட்டேன்!

அன்புள்ள குருதேவ், இந்தப் பூமியில் மனித உயிராக நமது இருப்பிற்கு என்ன உண்மையான நோக்கம்?

நீங்கள் யார் என்று கண்டு பிடிக்கவும், ஒரு தேவதையாக மாறவும்தான் ! இந்தப் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, ஒவ்வொருவருக்கும் சிறிது மகிழ்ச்சியினைக் கொண்டு வாருங்கள், நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள். இவ்வுலகில் ஒரு தேவதையாக இருங்கள்.

நான் இரு உலகங்களில் வாழ்வது போன்று உணருகின்றேன். ஒன்று வாழும்கலை உலகம், அடுத்தது மீதியுலகம். சில சமயங்களில் இவ்விரண்டையும் இணைப்பது கடினமாக உள்ளது. இதைப் பற்றிக் கூற முடியுமா?


நல்லது, ஒரு பாலமாக இருங்கள். நீங்கள் தான் பாலம். மக்களுக்கு அங்குமிங்கும் நடப்பதற்கு உதவுங்கள். இது ஒரு சிறிய பாலம்.