ஞாயிற்றுக்கிழமை 11 ஜனவரி, 2015,
மும்பை இந்தியா
(இந்தியாவின் மும்பையிலுள்ள
MMRDA மைதானத்தில், ஸ்ரீ ஸ்ரீ குருதேவ் உலகெங்குமுள்ள
லட்சக்கணக்கான மக்களை " உலக அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் பண்ணிசை"
எனும் நிகழ்ச்சியில் வழி நடத்தினார். பல்வேறு சமூக, சமயத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டு " ஓர் உலகம், ஓர் குடும்பம்
" என்னும் தொலைநோக்குடன், சமூகம் பண்பாடு மற்றும் அமைதிக்காக வாழும் கலை ஆற்றும் பணியினைப் பாராட்டினர்.
ஸ்ரீ ஸ்ரீ குருதேவ் அவர்களின் உரை கீழே தரப்பட்டுள்ளது).
விழா நடத்துனர்: தாவர
இனங்கள், விலங்கினங்கள் மற்றும் நீர், மீது பண்ணிசை மற்றும் ஒலியின்யின் விளைவுகளை பற்றி
உலகில் ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றுள் ஜப்பானிய விஞ்ஞானி நடத்தியுள்ள ஓர் ஆய்வினை உங்களுடன்
இப்போது பகிர்ந்து கொள்ள விழைகின்றோம். நீர் மிகச் சிறிய படிகங்களைக் கொண்டது ஆகும்.
ஒலியானது எவ்வாறு இந்தப் படிகங்களை பாதிக்கின்றது என்பதை இப்போது காண்போம்.
இந்த நீரின் மூலக்கூறு அமைப்பில், இசை ஆழமான பாதிப்பை
ஏற்படுத்துவதை காணலாம். நமது உடலும் 70 % நீரால் ஆனதே. எதிர்மறை சொற்களும் இனிமையற்ற
ஒலியும் நீரின் மூலக்கூறு அமைப்பினை மோசமாகத்
தாக்குகின்றன. பல இந்திய மரபு பழக்கங்கள், உதாரணமாக நெற்றியில் திலகம் வைத்துக் கொள்ளுதல்
விஞ்ஞான அடிப்படையில் அமைந்தவை ஆகும். திலகத்தின் மூலம் நெற்றியில் உள்ள விழிப்புணர்வுக்கான
ஆக்ஞ சக்ரம் தூண்டப்படுகின்றது. இத்தகைய மரபுப் பழக்கங்களை மூட நம்பிக்கைகள் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. அறிவியல் ரீதியானவை ஆகும்.
இந்த மாலைப் பொழுதில் உலகெங்குமுள்ள 85 நாடுகளிலுள்ள சுமார்
3900 மையங்களிலிருந்து மக்கள் ஆன்லைனில் உலக
அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் பண்ணிசைப்போம் என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ குருதேவ்
அவர்களை இந்நிகழ்ச்சியை வழிநடத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
குருதேவ்: விஞ்ஞானிகள்
வண்ணத்துப்பூச்சி
விளைவு பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒரு வண்ணத்துப் பூச்சி தென்
அமெரிக்காவில் சிறகடித்தால்,சீனாவின் மீஎது படர்ந்திர்க்கும் மேகங்களின் மீது தாக்கத்தை
ஏற்படுத்துகின்றதாம். இவ்வாறெனில், இங்கு அமர்ந்து பண்ணிசைத்தால் அது
உலக விழிப்புணர்வின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று எண்ண முடியாது. ஒவ்வொரு
சிறு விஷயமும் பிரபஞ்சத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும், ஏனெனில் அனைத்தும் பிரபஞ்சத்தின்
ஒரு பகுதி ஆகும். சாதரணமாக மக்கள், ஏன் பாடிக் கொண்டிருக்கின்றீர்கள்? நீங்கள் எங்கோ
அமர்ந்து பாடிக் கொண்டிருந்தால் அது எவ்வாறு பயனளிக்கும்? என்று கேட்பதுண்டு. நீங்கள் பார்த்தபடி, பண்ணிசை நீரில் நேர்முகமாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பழமையான
மந்திரங்களை இசைக்கும் போது, நீரில் உள்ள படிகங்கள் ஒரு சரியான உருவை (ஒத்திசைவு மற்றும்
அமைதி) அடைகின்றன. நுண்ணுயிருக்குள் ஏற்படும் பூரணத்துவமானது சமுதாயத்தின் அனைத்து மக்களுக்குள்ளும்
முழு நிறைவை உருவாக்குகின்றது.
இன்று உலகம் தீவிரவாதச் செயல்கள், மன அழுத்தம், பயம், பதற்றம் மற்றும் அவநம்பிக்கை இவற்றில் சிக்கிக்
கொண்டிருக்கின்றது. இந்நிலையை மாற்றி, நேர்மறை அதிர்வலைகளை நிலை நிறுத்துவதற்கான தருணம்
வந்துவிட்டது. நாம் உட்பட, உலகெங்கிலும் இருந்து மூன்று மில்லியன் மக்கள் ஒன்றிணைந்து பாடுவது
நிச்சயம் உலக விழிப்புணர்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இவ்வாறு பாடிக்கொண்டிருப்பது
உலகத்தின் விழிப்புணர்வில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூற முடியாது.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து பண்ணிசைக்கும்போது அது, சூழலில் நேர்மறையான அதிர்வலைகளை அனுப்பும். இந்த நேர்மறை அதிர்வலைகள் மக்களின் மனப்போக்கினை
எதிர்மரையிளிருந்து நேர்மறையாக மாற்றும். இருளிருந்து ஒளிக்குக் கொண்டு வரும்.
பாரிஸில் ஒரு மில்லியன் மக்கள் வன்முறை மற்றும் தீவிரவாதத்தினை
எதிர்த்திருக்கின்றார்கள். பல்வேறு துறைகளையும் சார்ந்த மக்கள் இதில் கலந்து கொண்டிருந்திருக்கின்றார்கள்.
எனவே நாம் (மூன்று மில்லியன் மக்கள்) பூமியில்
அமைதி மற்றும் ஆனந்தத்திற்காக பண்ணிசைப்பது
பொருத்தமானதே. பூமியில் மக்கள் அறியாமை எனும் இருளில் அகப்பட்டுக்
கொண்டாலும் இவ்வுலகம் பாதுகாப்பானதாகவும் மகிழ்ச்சியுடன் கூடியதாகவும் இருக்கமுடியாது. நகரத்திலுள்ள மிகச் சிலர் எதிர்மறை எண்ணங்களுடன் இருந்தாலும் கூட அமைதி ஏற்படாது. இன்று
நமது பண்ணிசையும், பிரார்த்தனையும் உலகில் மிக
நுட்பமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
நாம் செய்வதனைத்தும் எண்ணங்களின் மூலமாகத்தான் அல்லவா? எந்தச்
செயலும் நடப்பதற்கு முன் மனதில் எண்ணம் எழுகின்றது, அதையே செயல்படுத்துகின்றோம். எண்ணம்
என்பது என்ன? எவ்வாறு ஒரு எண்ணம் எழுகின்றது?
ஒரு
எண்ணம் என்பது ஆற்றல் மற்றும் அறிவின் உந்து விசை ஆகும். உங்களிடமிருந்து எழும்
இந்த ஆற்றல் எதிர்மறையாக இருந்தால் அது மென்மேலும் எதிர்மறையான எண்ணங்களையே உருவாக்கும்.
நேர்மறையாக இருந்தால் நேர்மறையான எண்ணங்களே உருவாகும்.
அரசன் விக்ரமாதித்யரை பற்றி
ஒரு கதை உண்டு. அவரது பெயரிலேயே இந்தியாவில் சந்திரனை மையமாகக் கொண்ட சக ஆண்டு அழைக்கப்படுகின்றது. (விக்கிரம சம்வத்சர) கிரேகரியன்
ஆண்டு
கி மு (கிறிஸ்துவுக்கு முன்)
என்று அழைக்கப்படுவது போன்று இந்தியாவில் விக்கிரம சக என்று ஆண்டுகள் அழைக்கப்பட்டன.
கதை அல்லது நிகழ்வு என்னவென்றால்,
அழகான பூக்களும் பழங்களும் காய்களும் கொண்ட ஒரு தோட்டம் இருந்தது. வளமான தோட்டம். அந்த தோட்டத்திற்குள் நுழைந்து, மக்கள் பூக்களையும் பழங்களையும் பறிக்க விரும்பினர்.
தோட்டக்காரன் குன்றின் மீது ஏறி நின்று "அன்பானவர்களே! என்னுடைய தோட்டத்தின்
பழங்களை அனுபவியுங்கள்" என்று கூறுவான். இதைக் கேட்டு மக்கள் உள்ளே வந்தால்,
தோட்டக்காரன் குன்றிலிருந்து விரைவாக இறங்கி வந்து அவர்களை துரத்தி விடுவான். அவர்களுடன்
சண்டையிடுவான். மக்களுக்கு அவனது நடத்தையை புரிந்து கொள்ள முடியவில்லை." இவனுக்கு
என்ன ஆயிற்று? குன்றின் மீது இருக்கும் போது மிகக் கனிவாகவும், தாராளமாகவும் இருக்கின்றான்.
ஆனால் இறங்கி வந்தவுடன், முரட்டுத் தனமாகவும் கருமியாகவும் மாறி விடுகின்றான்." என்று ஆச்சர்யப்பட்டனர்.
இதைக் கேட்ட ஒரு அறிஞர், அந்தக்
குன்றினைத் தோண்டி அதற்கடியில் என்ன இருக்கின்றது என்று கண்டறியுமாறு மக்களைக் கேட்டுக்
கொண்டார். மக்கள் குன்றினைத் தகர்த்து அதற்கடியில் தோண்டிய போது, விக்ரமாதித்யனின்
அரியணை அங்கு புதைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தனர். இந்தக் கதையின் நீதி என்னவென்றால்,
இடங்கள் கூட அதிர்வலைகளை சேமித்து வைக்கின்றன. இந்த அதிர்வலைகள் நமது எண்ணப் போக்கு
மற்றும் நடத்தையைப் பாதிக்கின்றன. ஆகவே நாம் அனைவரும் இங்கு அமர்ந்து பண்ணிசைக்கும்போது
அது நேர்மறை அதிர்வலைகளை சூழலில் எடுத்துச் செல்லும். இந்த அதிர்வலைகள் மக்களின் மனப்போக்கினை
எதிர்மறையிலிருந்து நேர்மறையாக மாற்றி இருளிருந்து ஒளிக்கு எடுத்து வரும். எனவே நாம் எந்தப் பயனுமின்றி இங்கு அமர்ந்து பாடுவதாக எண்ணிக் கொள்ளாதீர்கள்.
இப்பண்ணிசையின் மூலம் அத்ரிஷ்யா (கண்ணுக்குத் தெரியாத) நுண்ணிய
அதிர்வலைகளை உருவாக்குவோம்.
முதலில் இசைக்கப் போவது "சத்யம்
பரம் தீமஹி " அதாவது என்னுடைய மனம் உலகளாவிய ஆற்றல் மற்றும் உலகளாவிய
உண்மையில் திளைக்கட்டும்" இரண்டாவது மந்திரம்
"
ஓம் நமோ நாராயணாய" உங்களைச்
சுற்றிப் பாருங்கள். எங்கும் மின்சாரம் உள்ளது. ஒவ்வொரு அணுவும் மின்சாரமே. ஒரு
பல்பின் வழியாக மின்னும் மின்சாரத்தையே உங்களால் காண முடிகின்றது. அந்த மின்கம்பியின் மூலம் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தாலும், பல்பின்
மூலமே கண்ணுக்குத் தெரிகின்றது. அதுதான் உண்மையில்
நாராயண
தத்துவம். விழிப்புணர்வு தான் உடல்
மூலம் வெளிப்படுகின்றது.முதியவர் அல்லது துறவியைக் காணும் போது நாம் கை கூப்பி, ஓம்
நமோ நாராயணா" என்று வணங்குகின்றோம். அதன் பொருள், ஒவ்வொரு நரனிடமும்
(மனிதன்) நாராயணா (தெய்வீகம்) உள்ளது என்பது ஆகும். நம்முள் இருக்கும் நாராயண தத்துவத்தை நமது பண்ணிசைப்பின் மூலம்
எழுப்புவோம். உலகில் ஒவ்வொருவருக்கும் நேர்மறையான பலன்கள் சென்றடைய வேண்டும் என்னும் நேர்மையான நோக்கத்துடன் இந்தப் பண்களை இசைப்போம். இவ்வாறு
இசைக்கும் போது, உலகம் வன்முறை, மன அழுத்தம்,
நோய் மற்றும் அனைத்து வகையான எதிர்மறைகளினின்றும் விடுபட வேண்டும் என்று பிரார்த்தனை
செய்து கொள்வோம். மிக முக்கியமான இந்த நிகழ்ச்சிக்காகவே இங்கு நாம் கூடியிருக்கின்றோம்.