ஜனவரி 2, 2014
பாத் அண்டோகஸ்ட், ஜெர்மனி
கே: குருதேவ்! மோசமான
தருணங்களிலும் புன்முறுவலுடன் இருப்பது தான்
ஞானம் என்று கூறப்படுகின்றது. செயற்கையான புன்முறுவலுடன் இருக்க வேண்டுமா? அவ்வாறு
இருப்பது எனக்கு சுகமாக இல்லை.
குருதேவ்:
அமெரிக்காவில் ஒரு பழமொழி "இயற்கையாக அடையும் வரை செயற்கையாக இரு"
கூறப்படுகின்றது. கடினமான நேரங்களில் வேதனையை அடைவீர்கள். எப்போதுமே வேதனைகளை
மறைத்துக் கொண்டு செயற்கையாக இருக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டு அழ வேண்டும் போல் இருந்தால் அழுங்கள். ஆனால்
அதினின்றும் வெளி வந்து விடுங்கள். ஞானம்
தான் உங்களை வெளிக்கொணர முடியும். ஞானம்
என்ன செய்கின்றது? புன் முறுவலை மீண்டும்
அடைய செய்கின்றது.
ஒரு சம்பவத்தை
உங்களுக்குக் கூற விரும்புகின்றேன். ஒரு
பெண்மணி தனது பதின்வயது மகளை இழந்துவிட்டார். பெரும் வேதனையில் இருந்தார்.
ஞானத்தினால் வேதனையினின்று மீண்டார். விழாக்களுக்குச் செல்ல ஆரம்பித்தார். ஆனால் ஒரு உறுத்தல் இருந்து
வந்தது. என்
மகள் ஒரு மாதம் முன்பு இறந்து விட்டாள், நான்
எப்படி சிரித்து மகிழக்கூடும்? என்னும்
குற்ற உணர்வில் வருந்தினார் ஆயினும், விவேகத்தினால்,
எப்படியாயினும்
இறப்பு தவிர்க்க இயலாதது, தவிர
அவள் உடல் நலமின்றி இறந்து விட்டாள் என்று எண்ணித் தேறி புன்முறுவலை திரும்ப
அடைந்தார். இது போன்று நிறையப் பேரைப் பார்த்திருக்கின்றேன்.
ஆறு மாதங்களுக்கு
முன்னர் தன கணவரை இழந்து விட்ட ஒரு பெண்மணி நல்ல அழகான ஆடைகளை அணிந்து கொள்ளக்
குற்ற உணர்வு கொண்டார். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று தயங்கினார். அவ்வுடைகளை
அணிய விரும்பினாலும் அணியவில்லை. இந்த நிலையில் தான் நான் கூறுகின்றேன்,
தயக்கங்களையும்
விட்டு விடுங்கள். உங்கள்
இதயம் கூறுவதை கவனியுங்கள். இந்த ஞானத்தின் மூலம் இயல்பாகவே புன்முறுவலைப்
பெறுவீர்கள்.
விவேகம் என்னவென்றால்,
எல்லோரும்
ஒருநாள் இறந்துதான் ஆக வேண்டும். நான்,
நீங்கள்
எல்லோரும் இறந்து விடுவோம். இதை உணரும் போது, உங்களுக்கு
உள் மனபலம் ஏற்படும். உங்கள்
புன்முறுவலை மீட்டுத் தரும். அவ்வாறு புன்னகை தோன்றும் போது,
"ஒ! நான் இவ்வாறு புன்முறுவலுடன் இருக்கலாகாது" என்று
கூறாதீர்கள். விவேகமானது, கடினமான
நேரங்களிலும் உங்களுள் இருக்கும் புன்னகையை வெளிக் கொணரும். ஒவ்வொன்றும் வீழ்ந்து
கொண்டிருப்பது போன்று தோன்றும் போதும் நீங்கள் ஏன் உங்கள் புன்னகையை இழக்க
வேண்டும்? ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்
இவைகள் நிகழ்கின்றன. நீங்கள் விரும்புவதும் நிகழ்கின்றது, நீங்கள்
விரும்பாததும் நிகழ்கின்றன. வாழ்கையே
அப்படி தான். அந்நிகழ்வுகளுக்கு நீங்கள்
ஏன் பழி ஏற்றுக்கொண்டு தடுமாறுகின்றீர்கள்?
ஞானம் உங்களுக்குக் கடினமான நேரங்களிலும் புன்னகையுடன் இருக்கும் பலத்தை தருகின்றது. அது உண்மையான புன்முறுவல்.எல்லாம் நல்லபடியாக இருக்கும் போது எல்லோருமே புன்னகையுடன் தான் இருப்பார்கள். அது என்ன பெரிய விஷயம்? வலி இல்லாத போது ஒரு குழந்தை சிரிக்கின்றது. சிறிது வலியுடன் வயது வந்தவர்கள் சிரிக்கலாமே! ஒரு பெண் என்னிடம் சிரித்துக் கொண்டே என்னிடம் வந்து "எனக்கு கால் மிகவும் வலிக்கின்றது" என்று கூறினாள். அவளது உணர்ச்சி வெளிப்பாடும் வார்த்தைகளும் பொருந்தவில்லை. அவள், அழுது கொண்டே எனக்கு வலிக்கின்றது என்று கூறவில்லை. சிரித்துக் கொண்டே ஒ! மிகவும் வலி உள்ளது, என்னால் உட்கார முடியவில்லை. கால் முறுக்கிக் கொள்கின்றது" என்றாள்.
நான் சிறிது சக்தி
தைலம் தடவிப்பார் என்றேன். இரண்டு நிமிட நேரத்தில் 60% குணமாகி விட்டது. ஒரு குழந்தை என்ன செய்யும்?
சிரிக்கும்.
ஆனால் வயது வந்தவர், வலி வலி என்று முகத்தை
தூக்கி வைத்துக் கொண்டிருப்பார். ஒவ்வொருவருக்கும்
விவேகம் மிக அவசியம். விவேகம் தான்
உங்களை மேன்மையாக்கும். விவேகம் தான்
கடினமான நேரத்திலும் உங்களை புன்னகையுடன் வைத்திருக்கும்.
கே: மன அழுத்தம் ஏற்படும்
நிலை ஏற்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
குருதேவ்:
முதலாவதாக மனஅழுத்தம் ஏற்படும் நிலை உங்களுக்கு இருப்பதாக எண்ணிக் கொள்ளாதீர்கள்.அவ்வெண்ணத்தை தூக்கி
எறியுங்கள். மனம் ஒரு திடப்பொருள்
அல்ல. அது வெற்றிடம். காற்றோட்டமானது .உணர்வுகளும், அதிர்வலைகளும்
வந்து போகும். அவை மறைந்து விடும். மன
அழுத்தம் என்பது, மூளையில்
ஒரு பகுதியில் ஏற்படும் ஒரு வகை மின்னலை. அதை
முறியடிப்பதற்கு, பாடுங்கள்,
ஆடுங்கள், தொண்டு
செய்யுங்கள். எப்போதும்
உங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டு இருக்காதீர்கள்.
மன அழுத்தம் அடைவதற்கு
ஒரு மந்திரம் இருக்கின்றது. அது என்னவென்று தெரியுமா? நீங்கள் மன அழுத்தம்
அடைவதற்கு மிக நல்ல ஒரு உபாயத்தை என்னால் உங்களுக்குக் கூற முடியும். யார் வேண்டுமானாலும் இந்த
மந்திரத்தின் மூலம் மனஅழுத்தம் அடையலாம். எனக்கு என்ன ஆகும்? எனக்கு என்ன ஆகும்? எனக்கு என்னஆகும்?
என்று
ஓரிடத்தில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பது தான் அந்த உபாயம். மன
அழுத்தம் வேண்டாம் என்றால், எனக்கு
என்ன ஆகும்
என்பதை விட்டு விட்டு, நீங்கள் என்ன
செய்யலாம் எப்படி மலரலாம் மீதியிருக்கும் வாழ்நாளில் எப்படிப் பயனுள்ளதாக ஆக்கலாம் என்று
பாருங்கள்.
கடந்தகாலத் தவறுகள் அனைத்தையும்
மறந்து விடுங்கள். அத்தவறுகளில்
இருந்து நீங்கள் சில பாடங்களைக் கற்றுக் கொண்டீர்கள். கடந்து சென்ற
கணத்தைப்பற்றி இந்தக் கணத்தில் வருந்தி எந்தப் பயனும் இல்லை. இந்தக் கணத்தில்
நான் களங்கமற்றவன் பரிசுத்தமானவன், நான்
ஒளியின் ஒரு பகுதி. நானே அன்பு என்று
பற்றுறுதி செய்து கொண்டு அடுத்த கணம் என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள்.
எனவே மீண்டும்
மீண்டும் உங்களை எழுப்பிக் கொண்டு வருங்காலத்தைப் பாருங்கள். மன அழுத்தம் என்பது,
கடந்த
காலத்தைப் பற்றிய சிந்தனையும் வருங்காலத்தை பற்றிய பயமும் ஆகும். ஆன்மீக ஞானம்
என்பது வருங்காலத்தை பற்றி உங்களுக்குத் திடம் தருவது. "என்னுடைய இதயம்
பரிசுத்தமானது, என் மனம் தெளிவாக உள்ளது. எனக்கு
மிகச் சிறந்ததே நடக்கும் கவலைப் பட வேண்டாம் என்னும் திடத்தை தரும்.
வாழ்வில் இரண்டு
விஷயங்கள் அவசியம். ஒன்று பரிசுத்தமான இதயம்,மற்றொன்று
தெளிவான மனம். இவை
இரண்டுடன் தான்
நாம் இப்பூமிக்கு வந்தோம். இதை
நாம் நன்கு உணர்ந்திருக்கின்றோம்.எங்கோ நடுவில் நம் மனதில் சேற்றைப் போட்டுக்
கொண்டோம். அதைக் கழுவி விடலாம். அவ்வாறு கழுவதற்கு இரண்டு உபாயங்கள் உள்ளன. ஒன்று ‘சோஹம்’
மற்றொன்று ‘அதனால் என்ன!’
எல்லா சேறும் காற்றில் பறந்து விடும். மிக அழகானது அல்லவா? நாம்
அனைவரும் செய்ய வேண்டியது என்னவென்றால்,ஆக்க
பூர்வமாக இருக்க வேண்டும்.பயிற்சியில் ஒருவர்
கண்ணாடி குவளையைப்
பற்றி ".கண்ணாடிகுவளை தறையில் விழுந்து, தண்ணீருக்கு
அதன் உருவத்திலிருந்து விடுதலை தந்தது"
என்று எழுதி இருந்தார். எவ்வளவு அழகானது! ஒரு கண்ணாடிக் குவளை தறையில் விழுந்து
உடைந்து தண்ணீர் சிந்தியதை மிக நல்ல முறையில் எழுதி இருந்தார். இதற்கு பல
மெய்யியல் பொருட்கள் உள்ளன. கண்ணாடிக் குவளை நமது உடல். பூமிக்கடியில் செல்லும் போது, ஆத்மா
விடுதலை பெற்று உருவமில்லாமல் அங்குள்ளது.
மற்றொருவர் அலையை
பற்றி எழுதி இருந்தார். ஆழ்கடலின் அசைவற்ற நிலையில் எழுவது அலை. அது மேலும் கீழும் அலைந்து
மறுபடியும் ஆழ்கடலின் அசைவற்ற நிலையைச் சென்று அடைகின்றது. நமது வாழ்கையும்
அசைவற்ற நிலையில் துவங்கி, மேலும்
கீழும் அலைமோதிப் பின்னர் அசைவற்ற நிலையை அடைகின்றது. எனவே வாழ்கை அலைகளைச்
சந்தித்து அசைவற்ற நிலையை அடைவோம்.வேறொருவர் ஒரு பழைய
மங்கலான கண்ணாடி ஜன்னலைப் பற்றி எழுதி இருந்தார். மழைத் துளி சொட்டு சொட்டாக
விழுந்து தெளிவான காட்சியை உருவாக்குகின்றது. ஓர் இடி மின்னல் உருவாகி
அதை ஆயிரம் கூறுகளாக்குகின்றது. நீயே என்
மின்னல், நீயே
என் மழை. நான்
கண்ணாடி என் இதயத்தை கூறுகளாக உருக வைக்கின்றாய். என்மீது உனது வெளிச்சம் பரவி
உன்னை ஆயிரம் உருவங்களாகக் காட்டுகின்றது. நீ எங்கிருக்கின்றாய்?
எத்தனையோ பிறவிகளாக உன்னை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றேன்.
நீ எங்கிருக்கின்றாய்? தயை
கூர்ந்து என்னிடம் வந்து விடு.மங்கலான நிலவொளியில் உனக்காகக் காத்திருக்கின்றேன்.
ஒரு கருத்து தரப்பட்டவுடன்
எப்படி அது உங்களது ஆக்க சக்தியை வெளிக் கொண்டு வருகின்றது பாருங்கள். வேதனை,
கஷ்டம் ஏற்படும் போது அத்தகைய நிலையில் எழுத முற்பட வேண்டும். மிக அருமையான புத்தகங்கள்
கவிதைகள், புதினங்கள் ஆகியவற்றை
எழுதலாம்.
கைத்துண்டு
ஒரு சிறிய கைத்துண்டு கையிலிருக்கும்
தூசியையும் எண்ணெய்ப் பசையையும் துடைத்து எடுப்பதை போல, வாழும் கலையின் மூச்சுப் பயிற்ச்சி
தினசரி வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தத்தை
துடைத்து எடுத்து உங்களை மனதை ஒரு இறகு போல லேசாக்குகிறது. எப்படி நான் உங்கள் பார்வையில்
உள்ள கருணையை எடுத்துரைப்பேன்?
எப்படி நான் உங்கள் புன்னகையில் உள்ள கம்பீரத்தை எடுத்துரைப்பேன்?
எப்படி நான் உங்கள் பிரசன்னத்தில் தோன்றும் ஞானத்தை எடுத்துரைப்பேன்?நீங்கள் அவ்விதமாய்
அழகானவர்! நீங்கள் அவ்விதமாய் ஆற்றல் மிக்கவர்! எப்படி நான் உங்களுடன் இருக்க ஏங்கும் எண்ணத்தை, உங்கள் கரங்களுக்குள்
இருக்க விரும்புவதை எடுத்துரைப்பேன்?
தீயே!
தீயே! தீயே! இதயம் தீயின்
மேல்!
நான் கொண்டிருக்கும் புன்னகை ஒரு போதும் சோராது!
தீயே! தீயே! என் ஆசையை
எரித்து விடு!
வெறுமை வெளிப்படும்வரை!
தீயே! தீயே! என் இருப்பை பற்ற வை!
அதனால் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் உணரவும் கேட்கவும் பார்க்கவும்
இயலும்.
உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும்
உள்ளன என்று நான் கூறுகிறேன்! எவ்வளவு வெளிப்படுகிறது என்று கவலைப்படாதீர்கள்! சும்மா
எழுதுங்கள்! பிறகு அவைகளை படிப்பதற்கு பலர் உள்ளனர். இவை அனைத்தையும் திரட்டி ஒன்றாக
சேர்க்கலாம்.
நமக்குள் பல திறமைகள் உள்ளன
என்று நான் இங்கு கூறுகிறேன். பல திறமைகள் வெளி வந்துவிடுகின்றன. பல திறமைகள் முடக்கபபட்டு
விடுகின்றன. இந்த இடத்தில் தான் அனைத்து திறமைகளும் வெளி வர வேண்டும். நாம் நம்முடைய
திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். சிலர் நல்ல சமையல்காரராக இருக்கலாம், சிறந்த பாடகராக
இருக்கலாம், நல்ல கவிஞர்களாக இருக்கலாம், நல்ல கட்டுரைகள் எழுதலாம், மிக அழகாக இருக்கலாம்.
சிலர் மக்களை அழகாக வழங்கலாம். நாம் இம்மாதிரி பல திறமைகளைக் கொண்டுள்ளோம். வாழ்க்கை
அவைகளை வெளிப்படுத்துவதில் தான் உள்ளது.
கே: மக்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள்?
இது அவர்கள் அவர்களுடைய வாழ்க்கைத் துணையிடம் அன்பு செலுத்தாதனாலா?
குருதேவ்: இல்லை. அன்பு செலுத்தும் அனைவரும் ஏமாற்றுவது இல்லை. ஆனால் ஏமாற்றுபவர்
அவருடைய கணவனையோ மனைவியையோ அதிகம் நேசிப்பதனால் தான் அவ்வாறு செய்கிறார். இது ஏன் என்று உங்களுக்கு
தெரியுமா? உண்மை அன்பு இவை இரண்டுக்கும் இடையே
சண்டை நேர்ந்தால் அன்பு தான் வெல்லும். உண்மை தோற்று விடும். ஏமாற்றுவது என்றால் என்ன?
பொய் சொல்லுவது. கணவன் மனைவிடம் ஏன் பொய் சொல்லுகிறார்? மனைவியுடைய அன்பை இழந்து விடுவோமோ
என்கிற பயத்தினால் தான். எனவே, அன்பை இழந்து விடுவோம் என்கிற பயத்தினால் தான் பொய்
சொல்லுகிறோம்.
கணவனோ அல்லது மனைவியோ
" நீங்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை. நான் உங்களை ஏற்றுக்கொள்ளுகிறேன். என்னிடம்
உண்மையை கூறுங்கள். உங்களிடம் ஏதேனும் பலவீனம் இருந்தால், அதை நான் மன்னித்து விடுகிறேன்.
உங்களுடைய பலவீனத்தையும் பொருட்படுத்தாமல் நான் உங்களை முன்போலவே நேசிக்கிறேன்."
என்ற உறுதியை அளித்தால் அவர்கள் உண்மையை கூறுவார்கள். ஏன் யாரும் ஒரு தாயை ஏமாற்றுவது
கிடையாது? ஏனென்றால் தாயின் அன்பு மாறாதது. அதனால் தாயிடம் உண்மையை கூறுகிறீர்கள்.
ஆனால் மனைவியிடம் சொல்ல விரும்புவதில்ல. ஏன் என்றால் அவள் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள
மாட்டாள். உங்களை நேசிப்பதை நிறுத்தி விடுவாள். கணவருக்கும் இது பொருந்தும்.
நீங்கள் உங்கள் தந்தையிடம்
கூட குற்றத்தை ஒப்புக்கொண்டு விடுவீர்கள். ஏன் என்றால் உங்களுக்குத் தெரியும், இன்று
அவர் உங்கள் மீது கடிந்து கொண்டாலும், நாளை உங்களை ஏற்றுக்கொள்ளுவார். ஆனால் கணவன்?
ஒருவர் மகனிடம் கூட தன்னுடைய தவறை ஒத்துக்கொள்ளுவார். ஆனால் கணவனிடம் சிறிது பயம் இருக்கும்.
என்ன பயம்? அவருடைய அன்பை இழந்து விடுவோமோ என்ற பயம். இது உள்ளே ஆழத்தில் இருக்கும்
உணர்வு ரீதியான பயம். அன்பை இழந்து விடுவோமோ எனும் பயம் உண்மையை சொல்லுவதை விட அதிகமானது.
உங்கள் வாழ்க்கை துணையிடம்
"நீ என்ன செய்திருந்தாலும் பரவாயில்லை. என்னிடம் சொல்லி விடு. நான் உன்னை புரிந்து
கொள்வேன். ஏற்றுக்கொள்வேன். உன்னுடனே இருப்பேன்" என்று சொல்லி ஒரு இடத்தை உருவாக்குங்கள். தவறுகளை ஒற்றுமையுடன் பகிர்ந்துகொண்டு
அதன் பின் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழும் பல கணவன் மனைவியர் உள்ளனர். அவர்கள்
ஏமாற்றுவது கிடையாது. அவர்கள் பலவீனங்களையும் தவறான செயல்களையும் சொல்லி விடுகிறார்கள்.
ஆனால், அவர்கள் எதையாவது மறைத்தாலும், அது அன்பை இழந்து விடுவொமொம் என்கின்ற பயத்தினால்
மட்டுமே ஆகும். எனவே இதை தெரிந்து கொள்ளுங்கள். அன்பிற்கும் உண்மைக்கும் இடையே போட்டி
ஏற்பட்டால், உண்மை தோற்று விடும். புரிந்ததா?
கே: நான் என்னுடைய வாழ்க்கை
துணையை மிகுந்த அளவு நேசிக்கிறேன். அதனால் எனக்கு தெய்வீகத்தை நேசிக்க வாய்ப்பே கிடைக்காது
போல் தோன்றுகிறதே.
குருதேவ்: எனக்கு இது
குறித்து அனுபவம் கிடையாது. ஏன் முடியாது? தடை எதுவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
உங்களுக்கென்று ஒரு வாழ்க்கைத் துணை இருக்கும் போது வேறு ஒரு புதிய நேசம் கிடைத்தால்
அதை உங்களுக்கு கிடைத்த ஒரு பரிசாக அல்லவா நீங்கள் நினைத்துக்கொள்வீர்கள். உங்கள் நண்பர்கள்
ஒரு பரிசு. உங்கள் கூட்டாளி உங்களுக்கு ஒரு பரிசு. அவர்களை உபயோகப்படுத்தி கொள்வதை
விட அவர்களுக்கு மரியாதை செய்யவும்.
வாழ்வில் நீங்கள் இரண்டு
நிலைகளை எடுக்கிறீர்கள். எது கிடைத்தாலும் அதை நீங்கள் உபயோகப்படுத்தி கொள்ளுகிறீர்கள்.
அது உங்களுடைய சுய நலம். அல்லது நீங்கள் அதற்கு உபயோகமாக இருங்கள். அது நன்றியுடன்
இருப்பது. அது உங்களுடைய பரந்த நிலையிலான விழிப்புணர்வை காட்டுகிறது. உங்கள் முதிர்ந்த
உணர்வை காட்டுகிறது. நீங்கள் முதிர்ச்சி அடைந்தவர். நீங்கள் மற்றவர்களை உபயோகப்படுத்திக்
கொள்ளாமல் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்க முயற்சி செய்கிறீர்கள்.