அறிவு, பயமான கனவையும் இனிமையான கனவாக்கி விடும்.


சோபியா - பல்கரியா – 17, மே 2012
.

கே: உண்மையில் நம்  நிலையை நாம்  உருவாக்குகிறோமா  அல்லது  எல்லாமே முன்னரே  தீர்மானிக்கப் படுகிறதா?  


ஸ்ரீ ஸ்ரீ: உங்கள் வீட்டில் நாய் இருக்கிறதா? (பதில்:  ஆமாம்)


நீங்கள் பூங்காவிற்கு  செல்லும் போது உங்கள்  நாய்க்கு ஒரு  கயிறு இட்டு கூட்டிச் செல்வீர்கள். அது சட்டம், இப்போது அந்த  நாய்க்கு அந்த கயிறின் அளவு வரை மட்டுமே  சுதந்திரம்  உள்ளது. சரியா? கயிறுக்கு அருகில் அமரலாம் அல்லது கயிறின்  நீளம் வரை  செல்லலாம். அது தான் அதன் சுதந்திரம். நீங்கள் அதனை ஒரு இடத்தில் மட்டும் இருக்கும் படி பயிற்சி செய்தால் அதன் சுதந்திரம் அவ்வளவே. அது இருபது கிலோமீட்டர் தூரம் செல்லாது.  

அதுபோல், வாழ்க்கையில் எல்லோருக்கும் சிலவற்றில் சுதந்திரம் உண்டு,சிலவை முடிவானது.

மனிதர்களுக்கு புலனாய்வு திறன் இருப்பதால், அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது. விலங்குகளின் வாழ்க்கை திட்டமிடப்பட்டது. அவர்கள் அளவுக்கு அதிகமாக உண்பதில்லை.அவர்கள் வாழ்க்கை இயற்கையோடு ஒன்றி விட்டது. ஆனால் நமக்கு அந்த  இயற்கையோடு  ஒன்றி வாழவும், அதன் விதிகளுக்கு எதிராக செயல்படவும் சுதந்திரம் உள்ளது. நான் கூறுவது உங்களுக்கு புரிகிறதா? 

இயற்கையோடு ஒன்றி வாழும் போது, இணக்கம் ஏற்படுகிறது. இயற்கையின் விதிகளுக்கு மாறாக நடக்கும் போது வேற்றுமை உண்டாகிறது. எனவே வாழ்வில், சில விஷயங்கள் முடிவானதாகவும், சிலவை நம் விருப்பம் போலும் உள்ளது. 

நான் மற்றுமொரு உதாரணம் கூறுகிறேன். மழை பெய்யும் போது நனைவதும், நனையாததும் உங்கள் விருப்பம். நீங்கள் குடை அல்லது  ரெயின்கோட் எடுத்துச்சென்று  நனையாமல் இருக்கலாம். எனவே வாழ்க்கை விதியும், அதை மாற்ற நம்பிக்கையும் கலந்து இருக்கும். நீங்கள் தியானத்தில் ஆழ்ந்து செல்லும் போது, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், இயற்கையோடு ஒன்றி வாழும் போது இன்னும் நீங்கள் சுதந்திரமாக முடிவெடுக்கும் தன்மை வளர்கிறது. 

கே:  வாழ்க்கை முடியும் போது உலகம் முடிவதில்லை, உலகம் முடியும் போது வாழ்க்கை   முடிவடைகிறது. இந்த உலகத்திற்கு முடிவு உள்ளதா? 

ஸ்ரீ ஸ்ரீ:  நீங்கள ஒரு டென்னிஸ்   பந்தை  பார்த்து, இந்த   பந்து  எங்கு  முடிந்து எங்கு    தொடங்குகிறது  என்று  என்னைக்கேட்டால்  நான்  என்ன  கூறுவது? 

உலகில்  மூன்று  விஷயங்கள்  தொடங்குவதும் இல்லை  முடிவதும்  இல்லை.

1. தெய்வீக ஒளி   அல்லது  உள்ளுணர்வு  தொடங்குவதும்  இல்லை  முடிவதும்  இல்லை.

2. வாழ்க்கை முடிவதும் இல்லை தொடங்குவதும்  இல்லை. அது புனிதமானது.

3. இந்த பூமி, நம் உலகம் தொடங்குவதும் இல்லை முடிவதும் இல்லை. கவலைப்படவேண்டாம் உலகம் 2012 நூற்றாண்டில் முடியப்போவது இல்லை. உலகம் அமெரிக்க  திரைப்படங்களில் மட்டுமே முடியும். 

கே: எனக்கு ஒரு கனவு நான் இந்த பயிற்சிக்கு  வருவது போலவும், உங்களை சந்திப்பது போலவும் கனவு கண்டேன். இது போன்ற கனவுகள் உள்ளுணர்வா? 

ஸ்ரீ ஸ்ரீ:  ஆறு விதமான கனவுகள்  உள்ளன. நீங்கள் அறிய வேண்டுமா? முதல் வகை பகல் கனவு.அதை பிறகு  பார்ப்போம் கூறுவது போல் அது கனவல்ல. 

இரண்டாவது  வகையாக உங்களுக்கு வரும் கனவு, உங்கள்  இறந்த கால  அனுபவங்கள். உங்கள் அனுபவங்களும்  உங்கள் மனத்தின் அழுத்தங்களும் கனவு போல் வரும். 

மூன்றாவதாக உங்கள் ஆசைகளும், பயங்களும் உங்கள் கனவாக வரும்.  

நான்காவதாக உங்கள் உள்ளுணர்வு அல்லது உங்களுள் இருக்கும் முன்னெச்சரிக்கை என்ன நடக்குமோ அது உங்கள் கனவாக வரும். 

ஐந்தாவது, நீங்கள் உறங்கும் இடத்தை பொறுத்து உள்ளது. நீங்கள் புது முகங்களும், புது மொழிகளும் தெரிவது போல் உணர்வீர்கள்.  

ஆறாவது இவை அனைத்தும் கலந்த கலவை  தொண்ணூற்றி ஒன்பது சதவிஹிதம் கனவுகள் இந்த வகையில் தான்  இருக்கும். எனவே சிறந்தது என்னவென்றால் இதை ஆராய்ச்சி செய்யாமலோ அல்லது  கவலைப்படாமலோ இருப்பது. நமக்குத் தெரியாது சில கனவுகள்    

நமக்கு உள்ளுணர்வாகவும், முன் எச்சரிக்கையாகவும் சில பயமாகவும், கவலையாகவும் இருக்கலாம். அதை அப்படியே விட்டு விட்டு, ஒரு கப் டீ  குடித்து மகிழ்வோடு இருங்கள். கனவில் இருந்து எழுந்து கொள்ளுங்கள். புத்திசாலிகள் இந்த வாழ்கையை கூட ஒரு கனவு போல் கருதுவார்கள். நம் கடந்த காலம் அனைத்தையும் ஒரு கனவு போல் நினைக்க வேண்டும். 

அது அனைத்தும் முடிந்து விட்டது  இல்லையா? அதுவும் கனவு தான் இல்லையா? 

கனவுகள் நம் ஆழ்ந்த நினைவுகளின் பதிவுகளே  அவை எல்லாம் முடிந்து  விட்டன. இப்போது இந்த நிமிடமும் கனவாகி விடும். நாளை, மறுநாள்,மூன்று  நாட்களுக்கு பிறகு நீங்கள் உங்கள் வீடு சென்ற பின், 'ஓ, நாங்கள்  பல்கரியாவில் இருந்தோம்  எல்லாம் ஒரு கனவு போல் முடிந்து விட்டது' என்று கூறுவீர்கள்.அது போல் நீங்கள் யோசித்துப் பார்த்தால் நாளுக்கு நாள், நாளுக்கு நாள், மற்றுமொரு ஐம்பது வருடங்களுக்கு  பிறகு, இந்த கிரகத்தில் கண்விழித்துப் பார்த்தால் ,'ஓ ,கனவு போல் எல்லாம் முடிந்து விட்டதே'. என்பீர்கள் இல்லையா? அறிவாற்றல் தான் எல்லா பயமான கனவுகள்   அனைத்தையும் இனிமையான  கனவுகளாக்குகின்றன.

கே: ஆன்மா ஒரே குடும்பத்தில் மறுபிறப்பாக  பிறக்க முடியுமா? 

ஸ்ரீ ஸ்ரீ: ஒருவர் அவர் பேரப்பிள்ளைகள் மீது அதீத பற்று கொண்டால் அது சாத்தியமாகும். அவர் மனதில், என் பேரப்பிள்ளைகள்' என்ற எண்ணம் மட்டுமே இருந்தால் அவர்கள் அங்கு பிறப்பார்கள். நம் ஆழமான எண்ணங்கள் தான் நம் மறு பிறப்பிற்கு காரணமாகின்றன. 

கே: தனி மனித முன்வினை பயன் மட்டும்  தானா அல்லது  ஒரு  தேசத்தின்  முன்வினைப் பயன்  கூட  இருக்கிறதா? 

ஸ்ரீ ஸ்ரீ:  முன் வினைப்பயனில் பல அடுக்குகள் உள்ளன. தனி மனித முன் வினைப்பயன்,   குடும்ப முன்  வினைப்பயன், சமூக  முன் வினைப்பயன், தேசிய முன் வினைப்பயன், மற்றும்  காலத்தின் முன் வினைப்பயன். பல முன் வினை பயன்கள் உள்ளன. ஆனால்  இவை  அனைத்தையும்  மாற்ற முடியும். நீங்கள்  அமர்ந்து  தியானம்  செய்யும்  போது, பல வழிகளில்  மாற்றங்கள்  நிகழும்.  நீங்கள் உங்களுக்காக  மட்டும்  தியானம்  செய்கிறீர்கள்  என்று  நினைக்காதீர்கள் .நீங்கள்  கிரியா அல்லது தியானம் செய்யும்  போது  நீங்கள் உங்கள் கர்ம வினைகளை மட்டும் நேர்மறையாக்கவில்லை, நீங்கள் இந்த கிரகத்தை மற்றும் உங்களை சுற்றியுள்ள நுண்ணிய சக்திகளையும்வசப்படுத்துகிறீர்கள். தியானம் அமைதியான, இதமான உணர்வை, இறந்து  போனவர்களுக்கு கூட அளிக்கவல்லது.  

கே:  நம் வாழ்வின் நோக்கத்தை எப்படிகண்டு பிடிப்பது? 

ஸ்ரீ ஸ்ரீ: ஒருவரின் நோக்கத்தை உணர மனம் அமைதியாக இருக்கவேண்டும். மற்றும் தியானம் செய்யும் போது மனம் தெளிவாகிறது .மனம் தெளிவாக  இருக்கும்  போது உள்ளுணர்வு வெளிவரும். நான் எப்படி அடுத்தவர்களுக்கு பயனுள்ளபடி இருக்க முடியும் என்று  யோசியுங்கள். மற்றவர்களுக்கு பயனுள்ளபடி இருந்து, உங்கள் வாழ்க்கை சேவையில் ஈடுபட்டால் உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ள தாகவும், திருப்திகரமாக இருப்பதையும் உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கை உங்களை சுற்றியே இருந்து,'எனக்கு என்னவாகும்? எனக்கு என்ன  கிடக்கும்? எனக்கு எவ்வளவு  மகிழ்ச்சி கிட்டும்?' என்று நினைத்தால் நீங்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவீர்கள்.  

உங்கள் வலிமையையும் திறமையும் மற்றவர்களுக்கு நல்ல வழியில் பயன்படுத்தவே. இயற்கை  உங்களுக்கு நல்ல குரல் வளத்தை கொடுத்தால் அது உங்களுக்கா மற்றவர்களுக்கா? நீங்கள் பாடி நீங்களேவா  ரசிக்கிறீர்கள்? இயற்கை உங்களுக்கு நல்ல குரல்வளம் கொடுத்துள்ள தென்றால் அது மற்றவர்கள் கேட்டு ரசிக்க. இயற்கை உங்களுக்கு ஒரு நல்ல வடிவும் கொடுத்துள்ளது என்றால் அது மற்றவர் பார்க்க,ரசிக்க. எனவே உங்கள் பலம்  எதுவாக இருந்தாலும் அது உங்களுக்காக அல்ல, பிறருக்காக. உங்கள்  பலம்  மற்றும் சக்தி எதுவாக இருந்தாலும் அதை இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம். ஒன்று உங்கள் வலிமையை மற்றவர்கள் கூட சண்டைபோட பயன்படுத்தலாம் அல்லது மற்றவர்களுக்கு உதவ  பயன் படுத்தலாம். பல  நூற்றாண்டுகளாக மக்கள் தங்கள் வலிமையை அதிகரித்து மற்றவர்களுடன் போராட மட்டுமே பயன் படுத்துகிறார்கள். இல்லையா? ஒருவர் வலிமை பெற்று மற்றவரோடு சண்டை செய்கிறார்கள். யாரோடு, உங்களோடு வலிமையில் சமமாக உள்ளவரோடு மட்டுமே. 

கண்டிப்பாக வலிமை குறைந்தவரோடு ஒருவரும் சண்டையிடுவதில்லை. ஒவ்வொருவரும்   தனக்கு சமமாக உள்ளவரோடு மட்டுமே சண்டையிடுவர். ஒருவரும்  சக்தியோடு சண்டையிட்டு மகிழ்வாக இல்லை. உங்களுக்கு உள்ள வலிமையை  நீங்கள்  நல்ல  காரியத்திற்கு, சேவை  செய்ய பயன்படுத்தினால் அது மனநிம்மதியையும்  சந்தோஷத்தையும்  தரும். எனவே உங்களிடம் உள்ள அனைத்தும் - வலிமை, அழகு, பணம், தோற்றம், குரல் எல்லாமே  நல்ல முறையில் பிறருக்கு பயன்படும் வகையில் உபயோகிப்பதற்க்கே. பிறகு உங்கள் வாழ்க்கை நிறைவோடு இருப்பதை உணரலாம். 

கே: (மனநலம் குன்றிய
 குழந்தைகளுக்கு உதவுவது பற்றிய கேள்வி?

ஸ்ரீ ஸ்ரீ: அவர்களோடு நீங்களும் சற்று நேரம் விளையாடுங்கள். அதுவே போதும். அவர்கள் வருத்தமாகவோ, துக்கமாகவோ இருப்பதாக எண்ணவேண்டாம். அவர்கள் பரிமாணத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் மற்றவர்களின் சேவையை எடுத்துக்கொள்ள இங்கே இருக்கிறார்கள் அவ்வளவே.  

கே: நம்  உதவியை  மறுத்துவிட்ட ஒருவருக்கு  நாம்  உதவ  உரிமை உள்ளதா? விருப்பம் புனிதமானது  என்று  எண்ணி  உதவ  வேண்டுமா?

ஸ்ரீ ஸ்ரீ:  நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். ஒரு குழந்தை ஒரு சிறிய கைப்பிடிச் சுவரை சுற்றி ஓடிக்கொண்டு இருக்கிறது. அது கீழ விழும் அபாயம் உள்ளது. நீங்கள் என்ன  செய்வீர்கள். அதற்கு ஓட சுதந்திரம் உள்ளது என்று விட்டுவிடுவீர்களா? இல்லையே. அதை வழி காட்டி திரும்ப அழைத்து வருவீர்கள் இல்லையா? அது போல் சிலர் போதை மருந்துக்கு அடிமைப்பட்டு இருந்தால், உங்களுக்கு அது அவர்களுக்கு  தீங்கு  என்று தெரியும், எனவே நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய மாட்டீர்களா ? அது போல் நம் திறமைகள்  அனைத்தையும் முயற்சித்து  மற்றவரை துன்பத்திலிருந்து காக்க வேண்டும்.  யாரோ ஒருவர் மன  நிலை சரியில்லாது இருந்து, மருந்து உட்கொள்ள மறுத்தால் அவர் குடும்பத்தார் என்ன செய்வார்கள். அப்படியே விட்டு விடுவார்களா? அவர் மிகவும் வன்முறை எண்ணத்தோடு அனைவரையும் அடிக்க முற்படுவார். அவரின் குடும்பத்தார் விவரமாக அவருக்கு அம்மருந்தை பாலிலோ அல்லது பழச்சாறிலோ கலந்து தர, மன நலம் குன்றிய அவர்  சற்று நன்றாக இருப்பார். எனவே இதுதான் என்று எதுவும் கிடையாது. கொடுக்கப்பட்ட சூழ்நிலை கேற்ப நம் அறிவை பயன்படுத்த வேண்டும். நாம் பிறருக்கு உதவி செய்ய வற்புறுத்த முடியாது.  

ஒருவர்
 சாலையில் தவறான பாதையில் தான்  வண்டியை  ஓட்டுவேன், அது என் சுதந்திரம் என்று கூறமுடியாது. சமூகத்தில் வாழும் போது நாம் சில விதிமுறைகளை  கடைபிடிக்க வேண்டும். அது போல் நீங்கள் பிறருக்கு உதவுவதாக இருந்தாலும் சில விதிமுறைகளை கையாள வேண்டும். அவரை வற்புறுத்தவும், காத்திருக்கவும் வேண்டாம். அடுத்தவர் வீடு நெருப்பை அணைக்க பிறர்  நம்மை அழைப்பர் என்று காத்திருக்க கூடாது. 

நம் அண்டை வீட்டில் தீ பிடித்து விட்டது என்றால்,யாரது நமக்கு போன் செய்வார்கள் என்றோ  அழைப்பு விடுப்பார்கள் என்றோ காத்திருக்க முடியாது. நீங்கள் வலியப்போய் தீயை அணைக்க முயர்ச்சிப்பீர்கள் இல்லையா? தானாக முன் வருவீர்கள் இல்லையா?அது போல் தான்? புரிந்து
கொள்ளுங்கள். நடுநிலையான பாதையை எடுங்கள்.

கே: (கேள்வி
 சரியாக  புலப்படவில்லை) 

ஸ்ரீ ஸ்ரீ: நம்மால் முடிந்த அனைத்தையும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டும். நான் உங்களோடு இருக்கிறேன். நாம் அனைவரும் ஒரு குழு அமைத்து, அவர்களை  அணுகி, மூச்சுப்பயிற்சி கொடுத்து அவர்களை குடிபழக்கத்தில் இருந்து விடுபட வைக்க வேண்டும். நாடோடி சிறுபான்மையினரின் பெரிய பிரச்சனை அவர்கள் குடித்து குடித்து அவர்களின் ஐம்பது அல்லது அறுபது சதவிஹித வருமானத்தை மதுவில் செலவழித்து  அவர்களது பெண்மக்களையும் அடித்து விடுகின்றனர். அப்பெண்கள்  பெரும் வலியில் இருக்கிறார்கள். நாம் இதை மாற்ற வேண்டும். நாம் அவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கலாம். 

கே: நான்
 மாணவர்களோடு  வேலை  செய்கிறேன். ஏன் அவர்கள்  குபும்  உருவாக்ககூடாது ? அவர்களே  ஒருவருக்கொருவர் சொந்தமாக  முடியாது?

ஸ்ரீ ஸ்ரீ: நீங்கள் உறவை  நாடுகிறீர்களா? ஆம்? சரி நாம் ஒரு திருமண சேவை இங்கு ஆரம்பிப்போம். தனி மனிதர்கள் இங்கு பதிவு செய்யலாம்.

கே:
 நான் மிகவும் சிரத்தையாக எல்லா பயிற்சிகளும் செய்கிறேன். ஆனால் நான்  மாறியதாக  எனக்கு தோன்றவில்லை. நான் இன்னும் வருத்தமாகவும்,கவலையோடும் உணர்கிறேன். 

ஸ்ரீ ஸ்ரீ:  கேள், இப்போது நீ எப்படி உணர்கிறாய்.இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாயா? கடந்த  காலத்தை மறந்து விடு. இங்கு நீ மகிழ்ச்சியாக  இருக்கிறாயா? சந்தோஷமாக  உணர்கிறாயா? அவ்வளவு தான். நம் ஒவ்வொருவருக்கும் உள்ளே  இரண்டு விஷயங்கள்  உள்ளன. ஒரு விஷயம்  மாறுவதேயில்லை. நமக்குள் சீராக ஓடும் ஒரு உள்ளுணர்வு மாறுவதேயில்லை. அதை சுற்றி பல விஷயங்கள்  மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே, உன் வாழ்கையை பின்னோக்கி பார்த்தால், நீங்கள் அன்று இருந்த  அதே மனிதரல்லஅதே சமயம்  நீங்கள் அந்த  நபர்  தான். இரண்டுமே   ஒரே   நேரத்தில்  உள்ளன. எப்போது  நீங்கள்  மாறியதாக  உணர்கிறீர்கள்? நீங்கள் வருத்தமாக இருக்கும் போது.யாரேனும்  உங்களை   பித்தானை அழுத்தினால் அதாவது  உங்களை கோபப் படுத்தினால் நீங்கள்  கோபமடைகிறீர்கள், பிறகு, 'ஓ,நான் மாறவேயில்லை, இன்னமும் கோபம் கொள்கிறேன்' என்கிறீர்கள். இது தானே உங்கள் பிரச்சனை இல்லையா? அது உண்மையல்ல.கடந்த காலத்தில் நீங்கள், அந்த கோபம் உங்கள் மனதில் பலபல மாதங்களாக இருந்தது. நீங்கள் இப்போதும் கோபம் கொள்கிறீர்கள்,ஆனால் அது சில நிமிடங்கள் மட்டுமே  உங்களிடும் இருக்கிறது அல்லது நீங்கள்  சிறிய கிரியாவை செய்வது வரை.அதன் பிறகு நீங்கள் மறுபடியும் புத்துணர்வு பெறுகிறீர்கள்.