01
2012............................... நார்வே
May
அன்பு நாம் குழந்தையாக இருக்கும் போது அளிக்கப்பட்டது, ஆனால் நீங்கள் வளரும்போது, அதை இழந்து விட்டீர்கள், பிறகு நீங்கள் அதை பிடிக்க முயற்சி செய்கிறீர்கள். அதைப் பெற நீங்கள் சிறிய
விஷயங்களுக்கு அப்பால் செல்ல வேண்டும்.
அங்கே தான் உண்மையான அன்பு இருக்கிறது. ஆகையால், மேலே செல்லும் போது அனைத்து தாகங்களும், தீவிரமான ஆசைகளும்
முடிவடையும். நீங்கள் அதை அடையும் போது, இயற்கை களிப்படைகிறது.
அப்படி தான் இயற்கை நேசிக்கிறது. அது உங்கள் முன்னால் இருக்கிறது, அது தள்ளி வைக்க படுகிறது மற்றும் நீங்கள் அதைப் பிடிக்க முயலும்போது, இயற்கை களிப்படைகிறது. முழுச் செய்தியும் இந்த ஒரு சம்பவத்தில் உள்ளது. பாருங்கள், இங்கே உலகத்தில் நிறைய தொழில்கள் உள்ளன, பிறகு ஒன்றை ஏன் தேர்ந்தெடுக்கிறீர்கள்? ஏன் நீங்கள் மருத்துவராக அல்லது பொறியாளராக ஆக வேண்டும்? நீங்கள் எதை தேர்வு செய்தாலும் அது ஓர் விஷயமே இல்லை. நீங்கள் ஒரு விஷயத்தை செய்ய நினைக்கும் போது, அது உங்கள் பிடியிலிருந்து விலகி விடும். ஆகையால் நீங்கள் எதை பிடிக்க விரும்பினாலும், அது விலகி விடுகிறது. இந்த சூட்சமத்தால் நீங்கள் உயரே செல்ல முடியும். புரிந்து கொண்டீர்களா!!!!!!
மகிழ்ச்சி மற்றும்
சந்தோஷத்தின் பின் செல்லும்பொழுது, சிறிய விஷயங்களில் அவற்றை பெற முடிவதில்லை. அவை அப்படி இருப்பது நம்முடைய நன்மைக்காகவே. நீங்கள் அதை பெற்று இருந்தீர்கள்
எனில், நீங்கள் அங்கேயே தங்கி இருப்பீர்கள்.அதோடு முடிந்திருக்கும். வாழ்க்கை மந்தமாய் இருந்திருக்கும். ஆனால் நீங்கள்
அங்கேயே இருக்கவில்லை அதனால் நீங்கள் உயர்வை அடைய முடியும். நீங்கள் உயரே செல்ல
முயற்சிக்கும் போது, உங்களுக்கு கிடைக்கிறது. இந்த முயற்சி மிகவும் அழகானது.
கே: ஓஜஸ் என்பது மகிழ்ச்சியை போன்றதா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: மகிழ்ச்சி ஒஜசிலிருந்து வேறுபட்டது. அது உங்களில் ஒரு குறிப்பிட்ட விதமான
ஆற்றல், துடிப்பு. காலையில் நீங்கள் மிகவும் புத்துணர்வோடு இருப்பது
போல, பிறகு வேலைக்கு சென்று சோர்வடைகிறீர்கள் மற்றும் மாலையில்
நீங்க அதே அளவு ஆற்றலுடன் இருப்பது இல்லை, சரியா? ஐம்புலன்களை அனுபவித்தால் இந்த ஆற்றல் குறைந்து
விடும். நீங்கள் தொலைக்காட்சியை மூன்று மணி நேரம்
பார்க்கிறீர்கள், திரைபடத்தில் மூன்று மணி நேரம் அமர்ந்து
விட்டு வருகிறீர்கள். உங்கள் ஓஜஸ் செலவழிக்கப்படுகிறது.
அதிகமான காமம், ஒஜசை முழுவதுமாக அழிந்து விடும். ஐந்து புலங்களில்
ஏதேனும் ஒரு புலங்களில் வழியாக ஈடுபடும் பொழுது, ஓஜஸ் செலவிடப்படுகிறது. சரியான உணவு, ஒய்வு மனபாங்கு
மூலம் ஓஜஸ் மீண்டும் உருவாக்கப்பட முடியும் ஆனால் மிகவும் தாமதமாக அல்ல. அறுவது வயது அல்லது அதற்கு அப்பால் நான் ஒஜசை மீண்டும் உருவாக்க முயற்சி செய்கிறேன்
என்று கூற முடியாது. அது குறுப்பிட்ட வயதிற்கு முன்னாள் செய்யப் படவேண்டும். ஒரு குறுப்பிட்ட
வயதிற்கு பின்னால் நீங்கள் அதன் முழு நெகிழ்வை உணர முடியாது.
ஓஜஸ் உங்கள் உடம்பில்
உள்ள ஒரு குறிப்பிட்ட ஆற்றல், அதிர்வு. நமது உடம்பில் உட்பொருட்கள் ஏழு உள்ளன. அவற்றில்
ஒஜசும் ஒன்று. நீங்கள் நாடி பிடித்து பார்த்தால் அறிந்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னால் டெஸ்ட்தேரான் ஹார்மோன்கள்
மறைந்து விடுகிறது. அதே போல ஓஜஸ்சும் ஒரு வகை ஹார்மோன் என்று கூறலாம். பிந்தைய வயதில், அந்த ஹார்மோன்களை உருவாக்க முடியாது.
இளமையில், ஓஜஸ் அதிகமாக இருக்கும். அதன் பிறகு, சரியான உணவு மற்றும் சரியான பழக்க வழக்கங்கள் மூலம் ஒருவர் உயர்த்தி வைத்திருந்தால்
ஓஜஸ் மத்திய வயது வரை தொடரும். மத்திய வயதில் அதை அதிக படுத்தலாம் அல்லது அதிலிருந்து
முழுவதுமாக வெளியேறி விடலாம். அது சாத்தியம். ஆனால், அறுவது அல்லது எழுபது வயதிற்கு
பின்னால் "என்னுடைய அமைப்பில் மீண்டும் ஒஜசை கொண்டு வருவேன்" என்று கூற முடியாது. அது செய்ய முடியும், ஆனால் அது பல சிரமங்களுக்கு பிறகு சாத்தியமாகலாம்.
பிறகு, காயகல்ப பயிற்சி செய்ய ஆலோசனை வழங்குவார்கள், அது ஆயுர்வேதாவில் ஒரு குறுப்பிட்ட சிகிச்சை, அதில் நீங்கள்
சூரிய ஒளி இல்லாத ஒரு சிறிய அறையில் நாற்பது நாட்கள் தங்கியிருந்து பயிற்சி பெற வேண்டும். அங்கே, ஒரு குறிப்பிட்ட வகை உணவுப் பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் மற்றும்
நீங்கள் சூரிய ஒளியில் வெளியே வர அனுமதி இல்லை. மக்கள் நாற்பது நாட்களுக்கு பிறகு களிப்பை
உணர்வார்கள். அது மீண்டும் ஒரு குழந்தை, ஒன்பது மாதங்கள் கருவில்
இருப்பது போன்றது. அவர்கள் உங்களை நாற்பது நாட்களுக்கு ஒரு கடுமையான பயிற்சிக்கு உடன்படுத்துவார்கள்.
மருத்துவர் மட்டுமே உள்ளே வந்து சிகிச்சை, மசாஜ் போன்றவற்றை அளிப்பார்கள்.