ஏக்கம், என்பது விழிப்புணர்வின் முதிர்ச்சி நிலை.


22
2012............................... பெங்களூர்  ஆசிரமம்,
May


கே: யோகசார உபநிஷதத்தில் தாங்கள், 'தெய்வீகம் என்பது குறிப்பாக யாரையும் எடுத்து காட்டாத தே ஆகும்என கூறியிருக்கிறீர்கள். குரு என்பவர் எதையும், குறிப்பிட்டு காட்டும் தெய்வீக நிலை யுடயவர். இதை மேலும் விளக்கிக் கூறமுடியுமா? கடவுள் எவ்வாறு எடுத்து காட்டாத நிலையில் இருக்கிறார்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம். இரு நிலையிலும் உள்ளதே ஆகும். நீங்கள் உருவமுள்ளவர் ஆனால் உருவில்லாதவர். உங்கள் உடலுக்கு உருவம் உள்ளது. ஆனால் மனதிற்கு உருவம் உண்டா? இல்லை. அது போல் வெளிப்படையாக தெரிவது கடவுளின் உருநிலை, தெரியாதது விழிப்புணர்வு நிலை. விண்வெளி என்பதும் உருவில்லா உரு.
கே: குருஜி! ஆத்மா எப்போது தன்னை வெளிப்படுத்தி கொள்ள விரும்புகிறதோ அப்போது ஒருவன் ஞானம் அடைகிறான் என்று உபநிஷதத்தில் தாங்கள் கூறியிருக்கிறீர்கள். இந்த நிலையில் ஏக்கம் என்பது எங்கு வெளிப்படுகிறது? என்னை உணர நான் ஏங்கினாலும் அது நிகழவில்லையே? ஏன்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒரு பழம் பழுக்கும் போது, அதன் நிறம் மாறுகிறது. ஆப்பிள் பழம் பழுக்கும் போது நிறம் மாறுகிறது. பழுத்த பப்பாளிப்பழத்தை போல் மஞ்சள் நிறமாகிறது. அது போல ஏங்குதல் என்பது விழிப்புணர்வு நிலையின் முதிர்ச்சியே ஆகும்.

கேள்வி: ஆத்மா என்பது ஒன்று தான். அப்படியானால் ஆத்மாவை கர்ம வினைகளுக்கு தகுந்தால் போல் ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு எடுத்து செல்வது எது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆத்மா இரு நிலைகளில் உள்ளது.ஒன்றுசர்வாத்மாமற்றொன்றுஜீவாத்மாஒரு பலூனின் உள்ளே காற்று இருக்கிறது, அது அடைக்கப்பட்டுள்ளது அல்லவா? அது போல் ஜீவன், எண்ணங்களின் பதிவுகளே ஜீவன். காற்று பலூனில் உள்ளும் வெளியும் ஒன்று தான்.

கேள்வி: எல்லாவற்றிற்கும் பக்கவிளைவுகள் இருக்கின்றன.ஞானமடைதலின் விளைவுகள் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பக்க விளைவுகள் எதுவும் இல்லை. நேரிடை விளைவு தான். நேரிடையான தாக்கம் தான்.  

கேள்வி: அஷ்டவக்ர கீதையில் மகாத்மா காந்தி ஏன் வன்முறையில் கொல்லப்பட்டார் என்று கூறியிருக்கிறீர்கள். இயேசுநாதர் ஏன் சிலுவையில் அறையப்பட்டார் என்று கூற முடியுமா?  

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நாம் ஏன் இந்த விஷயத்தைக் பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்? எப்படி எப்போது என்றெல்லாம்? பிரபஞ்சத்தின் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரே காரணம் - பரம் காரண காரணங்களுக்கெல்லாம் காரணம் சிவதத்துவம் - தெய்வ சித்தம்

கேள்வி: கர்ம வினைகளை செய்வது யார்? ஆத்மாவா அல்லது உடலா? ஆத்மா எனில் ஏன் உடல் அதன் துன்பங்களை அனுபவிக்க வேண்டும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:அடடா! இத்தகைய நுட்பங்களிலும் குழப்பங்களிலும் ஈடுபடாதீர்கள். உங்களுக்கு அதிக ஆர்வம் இருந்தால் ஆராய்ச்சி செய்யுங்கள்!நான் யார்?எனக்கு கர்ம வினைகள் இருக்கிறனவா இல்லையா? இருக்கின்றன என்றால் எங்கே? என்று நிதானமாக யோசியுங்கள். உங்கள் கேள்விக்கு நான் பதில் அளித்தால் உங்களுக்கு திருப்தி அளிக்காது. ஏனெனில் அது அனுபவபூர்வமாக இருக்காது. நான் சொல்லும் பதிலை கேட்டுவிட்டு சில நாட்கள் கழித்து மற்றொரு சந்தேகம் ஏற்படும்..அமைதியாக,ஆழமான தியானத்தில், இது போன்ற சில கேள்விகளுக்கு தாமாகவே அனுபவபூர்வமான விடைகள் கிடைக்கும்.

கேள்வி: குருஜி! அதிகபட்ச முயற்சிகள் எடுத்தும் நான் ஏன் தோல்வி அடைகிறேன்? இது போன்ற சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்கள் குறிக்கோளில் தீவிர பற்று இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளுங்கள். இருந்தால்,தொடருங்கள். இல்லையெனில் இந்த முயற்சியைக் கைவிட்டு வேறு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியாவில் ஒரு பிரதமர் இருந்தார். ஒரு சில மாதங்களே பதவியில் இருந்தார். அவர் டெல்லியின் புறநகர் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு அழைத்திருந்தார்அங்கு சென்றிருந்தேன்அவர் என்னிடம் ''குருஜி! நாற்பது வருடங்கள் தீயவை செய்து பதவியை அடைந்தேன்அத்தனை பாடுபட்டு அடைந்த பதவி இப்போது அர்த்தமில்லாததாகத் தோன்றுகிறது. முன்பு நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தேன். இப்போதோ என் சொந்த வீட்டின் முன்புறம் கூட நிம்மதியாக உட்கார முடியவில்லை ஐம்பது காவலர்கள் சூழ்ந்து கொண்டு காவல் பணியில் உள்ளனர்என் உழைப்பு அத்தனையும் வீண் என்றார். நான் "இதை உணருவதற்கு இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன.ஆயினும் இப்போதாவது உணர்ந்து கொண்டீர்களே! சிலர் இறுதி வரை உணருவதில்லை" என்றேன்.

வட ஆப்ரிக்காவில் சர்வாதிகாரிகள் தங்கள் பதவிக்காக ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிக்கிறார்கள். இது மதியீனம் என்று அவர்கள் உணரவே இல்லை.அது போல உங்கள் நோக்கம் பயனுள்ளதா என்று அறிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் சக்தியை வீணாக்காமல் வேறு எதிலேனும் ஈடுபடுங்கள். ஒரு இளைஞன் என்னிடம்,தான் பட்டயக் கணக்காளர் தேர்வில் ஏழு முறை தோற்று விட்டதாகவும், தனது பெற்றோர் மீண்டும் எழுதும்படிக் கூறுவதாகவும் தெரிவித்தார். நான்' மீண்டும் எழுதினால் தேர்ச்சி பெறுவீர்களாஎன்று கேட்டேன்.முடியாது என்றே கூறினார். ஏழு முறை தோற்று, மீண்டும் வெற்றிக்கான நம்பிக்கை இல்லாத போது ஏன் எழுத வேண்டும்? நேரத்தை வீணாக்காமல் ஏதாவது தொழிலிலோ, பணியிலோ அமருமாறு கூறினேன். அவ்வாறு செய்வதே புத்திசாலித்தனம்.

கேள்வி: நான் பொறாமை மற்றும் அகந்தையுடன், பிறருடன் என்னை ஒப்பிட்டு கொள்கிறேன். இதிலிருந்து நான் விடுபட விரும்புகிறேன். என்ன செய்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அந்த விருப்பம் இருப்பதாலேயே பாதி வழி வந்து விட்டீர்கள். தினமும் சாதனாவும், சத்சங்கங்களிலும் ஈடுபடுங்கள். முழுமையாக விடுபடுவீர்கள்.

கேள்வி: குருஜி! கடவுளின் பெயரைப் பண்ணிசைப்பதன் முக்யத்துவம் என்ன? மகாராஷ்ட்ரத்தில் விட்டல நாமத்தைப் பண்ணிசைத்தால் யோகா செய்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒவ்வொரு நாள் மாலை வேளையிலும் நாம் இறைவன் நாமத்தைப் பண்ணிசைக்கிறோம்! இடைவிடாது ஜபித்துக்கொண்டிருந்தால் அஜபம் என்கிற நிலையை அடைகிறோம். அதாவது மனதளவில், ஒரு மந்திரத்தை திரும்பத் திரும்ப சொல்வதற்கான தேவையில்லாத நிலையை அடைகிறோம். மனம் பூரண அமைதி நிலையை அடைகிறது. ஜெபிக்கும் நிலைக்கு அப்பாற்பட்ட நிலையை அடைகிறோம். இதற்கு பாவ சமாதி என்று பெயர். பாவ சமாதி நிலையையும் பயிற்சி செய்ய வேண்டும். அதற்கு ஞானமும் பக்தியும் இணைந்து இருக்க வேண்டும்.

கேள்வி: குருஜி! முட்டை சைவமா அசைவமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சத்சங்கத்தில் முட்டையைப் பற்றி விவாதிப்பது சரி என்று தோன்ற வில்லை. முட்டையை விட்டு விட்டு பிரபஞ்ச்சத்தை பற்றி எண்ணலாம். அது பிரம்மானந்தம். இப்போது பிரபஞ்ச்சத்தையும் உடலையும் பற்றி பேசலாம். முட்டைகளை பற்றி அல்ல. நீங்கள் கூகிள் வலைத் தளத்தில் முட்டையின் நன்மை தீமைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நிறைய ஆரய்ச்சிகள் செய்த ஒரு டாக்டரிடம் நேற்று பேசி கொண்டிருந்தேன்.அவர் தினமும் பத்து நிமிடங்கள் சூரியனை உற்று நோக்க வேண்டும் என்றார். நமது கண்களில் உள்ள தனித்தன்மை வாய்ந்த அணுக்கள் சூரிய சக்தியை க்ரஹித்து உடலில் ரத்தத்தை அதிகப் படுத்துகிறது என்றார். ஒளிசேர்க்கை போன்றது. சூரிய ஒளியின் கிரஹிப்பு மூலம் மரங்களும் செடிகளும் பச்சை நிறமிகளை உருவாக்குவது போன்றது. மிக நன்றாகத் தொகுத்து வழங்கினார். ரத்தத்தை சுத்தமாக்க சூரியனை உற்று நோக்குங்கள். இதையே தான் நமது முன்னோரும் செய்தனர்.


'சந்தியாவந்தனம்' என்பது என்ன? கைகளில் தண்ணீரை ஏந்திக்கொண்டு கையிலுள்ள தண்ணீர் அனைத்தும் கீழே விழும்வரை சூரியனை உற்று நோக்கி நிற்பது. இது போல் மூன்று முறை செய்தல். மொத்தம் பத்து நிமிடங்கள் ஆகிவிடும்.பின்னர் சூரியனை நோக்கி காயத்ரி மந்திரத்தை ஜெபித்தல். இதையே மீண்டும் மாலையில் செய்வது. சூரியனை நோக்கி கொண்டிருக்கும் போது அதன் சக்தி உடலுக்குள் ஊடுருவி செல்கிறது. இது தவிர, காய்கறிகள் பழங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை பச்சையாகவே உண்ண வேண்டும். எண்பது சதவீதம் பச்சையாகவும் இருபது சதவீதம் மட்டுமே சமைத்த உணவும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறான உணவை உண்பதும் சூரியனை உற்று நோக்குதலும் மூன்று வாரங்களில் மூளைக்கட்டி, கான்செர் ஆகிய வற்றை குணப்படுத்தி உள்ளதை பற்றி முன்னோர் கூறியிருக்கிறார்கள். சுதர்சன க்ரியாவும் இவற்றை குணப்படுத்தும் வல்லமை உள்ளது.

மேலும் நாம் நம் உடலின் மீது தடவிக்கொள்ளும் பல கிரீம்களில் ஊறு விளைவிக்கும் பல வேதியியல் பொருட்கள் இருப்பதால் நீங்கள் அவற்றை உட்கொண்டால் இறந்து போவீர்கள். அதே க்ரீம்களை தான் நம் உடல் உள்ளே ஈர்த்துக்கொண்டு இரத்த ஓட்டத்தில் நேரடியாகக் கலக்கின்றது. ஆகவே நாம் உண்பதற்கு ஏற்றதல்லாத எதையும் நாம் நம் உடலின் மீது நம் தோலின் மீது உபயோகம் செய்ய கூடாது. ஆகவே தான் ஆயுர்வேதம் தவிர்த்த வேறு எந்த கிரீம்களும் பயன் படுத்த தகுதி அற்றவை. எலி பாஷானத்தின் உட்பொருள்கள் கூட பல கிரீம்களில் சேர்க்கப் படுவதால் அதனை உட்கொள்ளுபவர் இறந்துவிடுவார். அதையே தோலின் மீது பயன்படுத்துபவர் நிதானமாக சிறிது சிறிதாக இறந்து போவார்.

பண்டைக்காலத்தில் நாம் மண், பாலிலிருந்து எடுக்கப்பட்ட க்ரீம்,கடலை மாவு, மஞ்சள் போன்ற வற்றை தோலின் மீது தடவி தோலை சுத்தமாக வைத்திருக்க பயன்படுத்தி வந்தோம். இதைத் தான் நாம் செய்ய வேண்டும்நான் இதில் கொஞ்சம் கவனம் செலுத்துகிறேன். நாம் தோலின் மீது தடவவும் அதே சமயம் உண்பதற்கும் ஏற்றதுமான கடலை மாவு மற்றும் அது போன்ற பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் மேலும் பல தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். நான் மருத்துவரிடம் நச்சுப்பொருட்கள் எதுவும் இல்லாத கிரீம்களைத் தயாரிப்பது பற்றி பேசப் போகிறேன்.

கே: விவேகம் உண்டாவதென்பது மனிதர்களை உணர்வு மிக்கவர்களாக மாற்றுவது இல்லையா? ஆம் என்றால் ஞானம்மிக்க பலர் தேவையற்ற தவறான வழிகளில் நடப்பது ஏன்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்பாருங்கள்இந்த உலகத்தில் எல்லா விதமான மக்களும் இருக்கின்றனர். நல்லவர்கள், சாதாரணமானவர்கள், எதற்கும் பயனற்றவர்கள், நம்பிக்கை யற்றவர்கள் என்ற பலரையும் நீங்கள் சமாளிக்க வேண்டும். பயனற்றவர்கள் உங்கள் உறுதியை மேலும் பலப்படுத்து வார்கள். சாதாரணமானவர்கள் உங்கள் திறமைகளை உள்ளிருந்து வெளிக் கொண்டு வருவார்கள். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆகவே நீங்கள் இந்த மூன்று விதமான மக்களையும் சமாளிக்க வேண்டும்.

கே: விடுதலை அடைதல் அல்லது முக்தியடைதல் பற்றி அதிகம் தெரியாத போது முக்தியடைய வேண்டும் என்ற விருப்பம் என்னிடம் எவ்வாறு ஏற்படும்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:  அடிமைப்படுத்தும் பந்தங்களை நீங்கள் உணர்ந்தால் மட்டுமே நீங்கள் முக்தியடைய வேண்டும் என்று விரும்புவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக எதையும் உணராமல் இருக்கும் போது முக்தியடைய வேண்டும் என்ற விருப்பம் உண்டாகாதுமகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லாதவன் முக்தியடைகிறான். முக்தியடைய வேண்டும் என்ற விருப்பம் இல்லாதவன் அன்பை பெறுகிறான். அன்பு வயப்பட்டிருப்பவர்கள் முக்தியை பற்றி கவலைப்பட மாட்டார்கள். அன்பு வயப்பட்டிருப்பவர்கள் "முக்தி என்பது என்ன?  எனக்கு அது தேவை இல்லை "என்று நினைப்பார்கள்

கோபியர்கள் சொல்வார்கள் "எங்களுக்கு முக்தி தேவை இல்லை. ஞானமும் தேவை இல்லை. அன்பில் இணைந்திருப்பதிலேயே நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். அன்பு என்பதன் இயல்பே முக்தி ஆகும்.

கே: குருஜி, தர்மத்திற்கும்,இறைவனிற்கும் உள்ள தொடர்பு என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இறைவன் எதனுடன் தொடர்பு இல்லாமல் இருக்கின்றான் என்று சொல்லுங்கள் பார்க்கலாம். இறைவன் தர்மத்துடனும், அதே சமயம் அதர்மத்துடனும் தொடர்பு கொண்டுள்ளான். அதர்மத்தை அழிப்பதும் தர்மத்தை நிலை நிறுத்துவதும் இறைவனின் கடமை. ஆகவே இறைவன் எல்லாவற்றுடனும் தொடர்பு கொண்டுள்ளான். அதே போல் நம் பூஜை சடங்குகளில் தர்மம் அதர்மம் இரண்டிற்கும் நமஹா என்று சொல்கிறோம். இந்த உலகம் தர்மம் அதர்மம் இரண்டின் கலவை. இறைவன் தர்மத்தை நிலை நிறுத்தவும் அதர்மத்தை அழிக்கவும் இந்த இரண்டினுடனும் தொடர்பு கொண்டுள்ளான்.

கே: சிவ தத்துவம் என்பது என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:நீங்கள் இது இல்லை, இது இல்லை என்று எல்லாவற்றையும் தள்ளிக் கொண்டே வரும் போது இறுதியில் எஞ்சியிருப்பதே சிவ தத்துவம் ஆகும்.

கே: குருஜி, நான் மிக அதிக அளவு பணத்தினை இணைய தள வியாபாரத்தில் முதலீடு செய்து எல்லாவற்றையும் இழந்து விட்டேன். அப்போதிலிருந்து நான் சத்சங்கத்தில் ஆர்வம் இழந்து விட்டேன். நான் என்ன செய்ய வேண்டும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அனாஹட் நாதம் என்பதன் பொருள் இரண்டு பொருள்களிலிருந்து உருவாக்க முடியாதது. சுயமாகவே உருவாகும் ஒன்று. தியானத்தில் ஆழ்ந்து செல்லும் போது மட்டுமே சில நேரங்களில் அதை கேட்க முடியும். ஒவ்வொருவருக்கும் அது கேட்கும் என்பது அவசியம் இல்லை. சிலருக்கு அந்த நாதம் கேட்கும். சிலர் ஒளியை உணரலாம். சிலர் ஒரு இருப்பை உணரலாம். அனுபவம் பல வழிகளில் மாறுபடலாம்.

கே: நம் ஹிந்து புராணங்களில், இந்த பூமி ஒரு நல்ல பாம்பின் தலையின் மீது அமைந்தி ருப்பதாக சொல்லப்படுகிறது. நல்ல பாம்பு மேலே எழும்போது பூமி ஆடுகிறது. இதன் பின்னணியில் இருக்கும் ரகசியம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பூமியின் விசைகள் இரண்டு வகையானவை. ஒன்று centripetal force. மற்றொன்று centrifugal force. இந்த விசைகளின் ஓட்டம் நேர்க்கோட்டில் இல்லாமல் ஒரு பாம்பின் ஓட்டத்தை போல் இருக்கும். இந்த உன்மை நம் முன்னோர்களுக்கு தெரிந்தி ருக்கின்றது. பூமி ஒரு பாம்பின் தலையின் மீது இல்லை. ஆனால் அவர்கள் centripetal force என்பதை தான் பாம்பு என்று குறிப்பிட்டு ள்ளார்கள். தாங்கள் அறிந்த உண்மையை அவர்கள் இந்த வடிவத்தில் விளக்கி இருக்கிறார்கள். உதாரணமாக பகவான் சிவன் தன கழுத்தைச் சுற்றி ஒரு பாம்புடன் அமர்ந்திருக்கிறார். இது ஒரு தியான நிலையைக் குறிக்கின்றதுசிவனின் கண்கள் மூடியிருப்பதால்,உறங்கி கொண்டிருப்பதாக ஒரு எண்ணம் உண்டாகலாம். ஆனால் அவர் உறங்கவில்லைஉள்ளே மிகவும் விழிப்புடன் இருக்கின்றார். இதை விளக்கவே சிவனின் கழுத்தைச் சுற்றி ஒரு பாம்பு காட்டப்பட்டுள்ளது. இல்லையென்றால் இறைவன் ஏன் ஒரு பாம்பை அணிந்து கொள்ள வேண்டும்? இந்த பிரபஞ்சத்திற்கே தலைவன்அணிந்து கொள்ள, வேறெதுவும் கிடைக்காதா என்ன? நம் முன்னோர்கள் என்ன சொல்லியிருந்தாலும் அவற்றின் பின்னால் பெரும் புதிர்கள் அல்லது மர்மங்கள் அடங்கியுள்ளன

அதேபோல், ஆதிசேஷன் என்னும் பாம்பின் மேல் பூமி இருப்பதாக சொல்வது centripetal force என்பதைக் குறிக்கின்றது. ஒரு பாம்பு எப்போதும் நேர்க்கோட்டில் நகராது. அது முன்னே ஊர்ந்து செல்லும்போது வளைந்து வளைந்து செல்லும். இதுவே centripetal force. பூமியும் நகரும் போது தன்னை தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. இதில் இருக்கும் இரண்டு வகையான விசைகளையே முன்னோர்கள் நல்ல பாம்பின் வடிவத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
மேலும் அந்த நல்ல பாம்பு ஒரு ஆமையின் மேல் நிற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆமை என்பது நிலையான தன்மையை குறிக்கின்றது. மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது இல்லையா?

மேலும் இப்பொழுது ஜுபிட்டர் கிரகம் இல்லையென்றால் பூமி நிலைத்திருக்க முடியாது என்று சொல்லப்படுகின்றது. ஜுபிட்டர் கிரகம் என்ன செய்கிறது என்றால் விண்வெளியில் வெளியிலிருந்து வரும் எல்லா துகள்களையும் தன்னை நோக்கி இழுத்துக்கொண்டு பூமியைக் காப்பாற்றுகின்றது.

விண்வெளியிலிருந்து பூமியின் மீது விண்கற்கள் மற்றும் விண்வெளியில் உலவும் பிற பொருட்கள் துகள்கள் போன்றவற்றின் தாக்குதல் மிகப் பெரிய அளவில் உள்ளது. ஆனால் ஜுபிட்டர் கிரகம் அவை எல்லாவற்றையும் தன்னை நோக்கி இழுத்துக்கொண்டு பூமியை பாதுகாக்கின்றதுஇதைப் பற்றிய ஒரு அழகான நடைமுறை விளக்கத்தினை நாசா உருவாக்கியுள்ளது. குரு என்பவர் இந்த முழு பிரபஞ்சத்தையும் காக்கும் பாதுகாவலர் என்று சொல்லப்படுகிறார். ஜுபிட்டர் கிரகம் இந்த பூமியைக் காப்பதினால் அதற்கு குரு என்ற அதே பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.