எல்லையில்லா அன்பு

திங்கட்கிழமை - 24/11/2014,

ஹரியானா, இந்தியா.



நாம் இப்பொழுது 22 நிமிடங்கள் தியானம் செய்துள்ளோம் என்று அறிய முடிந்ததா? தியானம் செய்யும் பொழுது, நேரம் கடந்து சென்றதை உணர முடிந்ததா? தியான நேரத்தில் உங்கள் மனம் அலைப்பாய்ந்ததா? சிறதளவு கூட அலைப்பாயாமல் இருந்தது. மனதை அமைதியாகவும், சீராகவும் வைத்துகொள்ளும் திறமையை நீங்கள் பயிற்சி செய்யவேண்டும். மனதை ஒரு நிலைப்படுத்தும் திறமையை தெறிந்து கொண்டால், பின்னர் நீ எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்.

“மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மொக்ஷயோ
பந்தாய விஷயாசங்கோ முக்தியை நிர்விஷயம் மனஹ

ஒருவருடைய மனது, அவருடைய சொந்த எதிரியாகவும், நல்ல நண்பனாகவும் இருக்கிறது. பந்தங்களில் மாட்டி அவஸ்தைபடுவதும், ஒருவன் உலக மாயை மற்றும் பந்தங்களிலிருந்து முக்தி அடைவதற்கும் மூல காரணம் மனம் தான். நமது இருப்பு 7 நிலைபாடுகளில் உள்ளன. நான் இன்று எட்டாவதாக ஒன்றை அந்த வரிசையில் சேர்க்கிறேன். அது தான் “சுற்றுச்சூழல்”. சுற்றுச்சூழல், உடல்,மூச்சு, மனது, புத்திசாலித்தனம், ஞாபகசக்தி, அகங்காரம், ஆத்மா என்ற 8 நிலைபாடுகள்.
இந்த நேரத்தில் உங்கள் மனம் இங்கு இருக்கிறதா? நீங்கள் எல்லோரும் இங்கு தான் உள்ளீர்களா? நான் சொல்வதை நீங்கள் கவனமாக கேட்கிறீர்களா அல்லது உங்கள் மனம் எங்காவது அலைந்து திரிகிறதா? உங்கள் மனது இப்போது நிகழ்காலத்தில் இருக்கிறது. 

கேட்பதற்கும், பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும், தொடு உணர்ச்சிக்கு காரணமாக இருப்பது மனம்பின் புத்திசாலித்தனம். நாம் கேட்பது நன்றாக இருக்கிறதா? இல்லையா? மற்றும் நாம் விரும்பியதை சுவைக்கிறோமா இல்லையா? என்று அறியும் திறமையை “புத்திசாலித்தனம்“ கொடுத்து உதவுகிறது. அதன் பின் “ஞாபக சக்தி” அல்லது “சித்தா”. புத்திசாலித்தனத்தின் மூலமாகவும், உணர்ச்சிகளின் மூலமாகவும் தெறிந்து, புரிந்து கொண்டு அதில் ஞாபகத்தில் வைக்க உதவுவது “ஞாபகசக்தி”. “சித்தா”வில் பதிந்துள்ள நிகழ்ச்சிகளை வெளிக்கொணர்வது. பிறகு “அகங்காரம்” கடைசியாக “ஆத்மா”. நமது இந்த இருப்பின் ஏழு நிலைகளை பற்றி ஆழமாக புரிந்து கொண்டால்,அது நம் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை கொடுக்க முடியும். இது தான் “வாழும் கலை”யில் நடக்கிறது. உங்கள் இருப்பின் நிலைகளை தெறிந்து கொள்ளும் ஞானத்தை பெறும் பொழுது நீ உன்னுள் இருக்கும் மகிழ்ச்சியால் மலர்கிறாய்.

நீங்கள் வாழ்கையில் செய்யும் எந்த செயலுக்கும் பின்னணியில் ஒரு குறிக்கோள் உண்டல்லவா? என்ன செயல் செய்கிறீர்களோ அதை ஏன் செய்கிறீர்கள்? மகிழ்ச்சியாக இருப்பதற்காக தானே? நாம் செய்ய கூடிய செயல்கள் அனைத்தும் மகிழ்ச்சிக்காக தான். ஆனால் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறோமா? சிறு குழந்தைகளை பார்த்து நீங்கள் மகிழ்ச்சியாக உள்ளீர்களா? இல்லையா ? என்று கேட்டால் நான் பள்ளிபடிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் போது மகிழ்ச்சியாக இருப்பேன் என்று பதில் கூறுவார்கள். கல்லூரிக்கு சென்ற பின் நல்ல வேலை கிடைத்தவுடன் மகிழ்ச்சியாக இருப்பேன் என நினைகிறார்கள். நல்ல வேலை கிடைத்த பின் நிலையாக ஒரு இடத்தில குடும்பம் நடத்தினால் மகிழ்ச்சியாக இருப்பேன் என நினைக்கிறார்கள். சிறிது காலம் கழித்து குழந்தைகள் இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன் என நினைக்கிறார்கள்.ஆனால் குழந்தை இருந்தால்,அவர்கள் படிப்பை பற்றி, நல்ல பள்ளியில் சேர்க்கை கிடைத்த பின் மகிழ்ச்சியாக இருப்பேன் என்பார்கள். சில வருடங்கள் கழித்து அவர்கள் குழந்தைகளும் நல்ல படிப்பை முடித்து நிலையான வாழ்க்கை அமைத்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பேன். அதற்குள்ளாக,அவர்களது சொந்த வாழ்க்கையே முடிய ஆரம்பித்து விடும். 

வாழ்நாள் முழுவதும் சளைக்காமல் நாம் மகிழ்ச்சியை தேடி அலைகிறோம். ஆனாலும் நாம் அதை காண முடிந்ததா? எது போல என்றால், நாம் தூங்குவதற்கு படுக்கையை இரவு முழுவதும் தயார் செய்து பிறகு தூங்க போகும் முன் விடிந்து விடுவதை போல். நாம் படுத்து ஓய்வெடுக்க நேரம் இல்லாமல் ஆகி விடுகிறது. இந்த மாதிரி நிகழ்வதற்கு நாம் அனுமதிக்க கூடாது. நமது வாழ்க்கை மிகவும் முக்கியமானது. இந்த வாழ்கையிலேயே படைப்பின் வெளிப்பாடுகளாலும், சுழற்சியாலும் நாம் “அதை” அடைந்து விடுகிறோம். மிக சக்தி வாய்ந்த ஒன்று தான் இந்த உலகத்தில் அனைத்தையும் நடத்துகிறது என்பதை ஒப்புக்கொள்வது மிக முக்கியம். இதை நீ உணர்ந்து விட்டால் யாராலும் உன் சிரிப்பை எடுத்துவிட முடியாது. அல்லது உன்னுள் இருக்கும் ஆழமான அன்பை அசைக்க முடியாது. வாழ்க்கை மிக இலகுவாக நடத்த இரண்டு முக்கிய விஷயங்கள். முதலாவது “அன்பு”. உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை விரும்பவில்லை என்று சொன்னால் உங்களால் வாழ முடியுமா? முடியாது.

ஒவ்வொருவரும் நம்மேல் அன்பு செலுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். நீங்கள் எத்தனை நபர் மீது, “நிபந்தனையற்ற அன்பு” செலுத்துகிறீர்கள் என்று கேட்டு பாருங்கள். சாகும் தருவாயில் இரண்டு கேள்விகள் தான் நம்முன் நிற்கும். எவ்வளவு அன்பை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்? மற்றும் இந்த வாழ்கையில் எவ்வளவு ஞானம் சம்பாதித்துள்ளீர்கள்?. நாம் பல நேரங்களில் இதற்கு எதிர் மறையாக தான் செய்கிறோம். நாம் மற்றவர்களிடமிருந்து அன்பை பெறுவதில் (கொடுப்பதை விட்டு) ஆர்வம் காட்டுகிறோம். மற்றும் நாம் மற்றவர்களிடமிருந்து ஞானத்தை பெறுவதை விட்டு,கொடுப்பதிலே நின்று விடுகிறோம். அசைக்க முடியாத உன்னுள் இருக்கும் மகிழ்ச்சியையும் நீங்கள் இருக்கும் இடத்தில் மற்றும் உங்களை சுற்றி உள்ள மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது தான் “ஆன்மீக ஞானம்”. உங்களுள் நீங்கள் ஆழமாக செல்லவும், உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு அமைதி மற்றும் ஆனந்தத்தை கொடுப்பது தான் ஆன்மிகம்.

ஆன்மிகம் இல்லாத வாழ்க்கை மிகவும் உலர்ந்ததாகவும், ரசமில்லாததாகவும் இருக்கும். மிகவும் உலர்ந்த வாழ்க்கை எதிர்மறை எண்ணங்களில் முழ்கடித்து விட வழி வகுக்கும். மிக சீக்கிரமாக அடிக்கடி கோபம் அடைதல், சஞ்சலமடைதல் மற்றும் அடங்காத ஆசை, வெறுப்பு ஆகியவைகளில் நாம் மாட்டிக் கொள்கிறோம். இதற்கெல்லாம் காரணமாக இருப்பது பிடிப்பில்லாத மற்றும் ரசம் இல்லாத வாழ்க்கையே. ஆகவே, எப்படி நமது வாழ்க்கையை ரசமுள்ளதாக ஆக்குவது.

இந்த இரண்டு வழிகளில் தான்.
1.ஆழமான நம்பிக்கை மற்றும்
2.ஆழ்ந்த ஓய்வு.

இந்த பிரபஞ்சத்தை படைத்தவர் மிக்க அன்புள்ளவராகவும், நெருக்கமுடையவராகவும் இருக்கிறார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வை. கடவுள் எனக்குள் இருக்கிறார் மற்றும் நான் அவருள் இருக்கிறேன் என்று நம்பு. இந்த எளிய நம்பிக்கை மட்டுமே உன்னை மிக உயர்ந்தவனாக ஆக்கி விடும். உங்கள் பெற்றோர் உங்கள் மேல் காட்டும் அன்பை விட ஆயிரம் மடங்கு கடவுள் நம்மீது அன்பு செலுத்துகிறார். நீங்கள் அதை எந்த பெயரில் வேண்டும் என்றாலும் அழைக்கலாம். சக்தி, அம்பாள், சிவா அல்லது கடவுள் இன்னும் பிற. கடவுள் நெருக்கமாக அன்பு செலுத்துகிறார் என்ற நம்பிக்கையை  வைத்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு முறை செய்து பார்த்தால், உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை அறியலாம். பின் எதை வேண்டுகிறீர்களோ, அது நடக்க ஆரம்பித்து விடும். உங்கள் மனதில் நீங்கள் நம்பிக்கையை வைத்து உங்களுள் ஓய்வாக இருங்கள். ஆகவே முதலில் உங்களுக்கு கடவுளிடம் நம்பிக்கை இருக்க வேண்டும். பின் சமுதாயத்தில் பல நல்ல பெரிய மனிதர்கள் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்.

சிலர் தவறான வழிகளில் செல்கிறார்கள். ஆனால், இன்றும் நல்ல மனிதர்கள் உயரிய இடத்தில உள்ளார்கள். உங்களை சுற்றி உள்ள மனிதர்களின் நல்ல விஷயங்களில் நம்பிக்கை வையுங்கள். பின் உங்கள் மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்கள் மேல் நம்பிக்கை வைப்பது மிகவும் முக்கியம். மற்றும் அந்த நம்பிக்கையோடு ஓய்வு எடுங்கள். இந்த ஓய்வு தியானம் செய்வதால் மட்டுமே கிடைக்கும். இப்பொழுது நாம் தியானம் செய்தோம். நன்றாக இருந்ததல்லவா? ஆகவே நீங்கள் எல்லோரும் தியானம் செய்யுங்கள். மற்றும் சில “பிரணாயாமா” கற்றுக்கொள்ளுங்கள். பின்னர் எந்த காரணத்திற்காகவும் நீங்கள் வருத்தமடைய, உற்சாகமற்று இருக்க தேவையில்லை.