27
2012........................ ஜெர்மனி
Apr
நீங்கள்
ஆடிப்பாடி மெய்யறிவில் இருக்க வேண்டும். மெய்யறிவு என்பது புத்தகத்தை படித்து
அறிந்துகொள்ளும் வெறும் தகவல் அல்ல. அது மெய்யறிவு ஆகாது.மெய்யறிவு
என்பது உண்மை நிலையை அதன் நிலையிலேயே அனுபவிப்பது. இந்த மெய்யறிவு நமக்குள்ளே ஊறி
நம் உணர்வோடு கலந்து விட்ட நிலையில் நாம் அடைவதே ஞானம். நம்முள் ஆழப்பதிந்துவிட்ட
மெய்யறிவே ஞானமாகிறது. அதுவே உங்களை ஞானம் கொண்டவர்களாக்குகிறது.
எல்லோரும்
ஞானம் வாய்ந்தவர்களே. சிலருக்கு கொஞ்சமாகவும் சிலருக்கு அதிகமாகவும் இருக்கலாம்.
வாழ்க்கையில் குறைந்த ஞானத்திலிருந்து அதிக ஞானத்திற்கு செல்ல சற்று நேரம்
பிடிக்கிறது அவ்வளவே.
வார்த்தைகள்
பயனற்றதாக தோன்றுகிறது. இருந்தாலும், நாம் அதை உபயோகப்படுத்த வேண்டிய தாகிறது. மருத்துவமனைக்கு
சென்றால் அங்கிருப்பவரை பார்த்து,எப்படி இருக்கிறாய்? என்கிறீர்கள். அவர்கள்
நன்றாக இல்லை என்று தெரிந்திருந்தும்,‘எப்படி இருக்கிறாய்?’என்கிறீர்கள்.அவர்களும் பதிலுக்கு, “நான் நன்றாக இருக்கிறேன்”, என்கிறார்கள்.அவர்கள் நலமாய்
இல்லாவிட்டாலும், “நான் நன்றாக இருக்கிறேன்” என்கிறார்கள். அதைப்போல,நீங்கள்
எல்லாம் ஆனந்தமாய் இருப்பதை பார்கிறேன், இருந்தும், “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?”என்கிறேன். உங்கள் முகங்களில் ஆனந்தம் மிளிர்வதையும் ஒளி பிரகாசிப்பதையும்
பார்கிறேன்.இருந்தும் அந்த உரையாடல் உங்களை வேறு ஒரு தொடர்புத்தளத்திற்கு
அழைத்துச் செல்லவே.
ஞானவான்கள்
இதயபூரவமாக உள்ளார்ந்து தொடர்பை ஏற்படுத்துகிறார்கள்.வெளிப்புற தகவல் தொடர்பு,சும்மா ஒரு மேலோட்டத்திற்குத்தான். பேதைகள்தான் வெளிப்புற தொடர்பை நம்பு கிறார்கள்.
ஒரு தாய்க்கும் குழந்தைக்கும் நடுவில்,குழந்தை ஏதேதோ சொல்வதெல்லாம் ஒரு பொருட்டே
அல்ல, ஏனென்றால் குழந்தை இன்னும் எந்த மொழியையும் கற்கவில்லை.ஆனால், தாய் அந்த
குழந்தையிடம் உள்ளார்ந்த தகவல் தொடர்பு கொண்டிருக்கிறாள். நீங்கள் எந்த மொழியையும்
கற்கும் முன்னரே உங்கள் அம்மாவிடம் உரையாடியிருக்கிறீர்கள், உங்கள் அம்மாவும்
உங்களிடம் உரையாடி யிருக்கிறார். இது ஒரு ஆழ் தளத்தில் ஏற்படும் தொடர்பு.
இதைப்போல,
நீங்கள் உங்கள் செல்ல நாயுடனோ அல்லது பூனையுடனோ தகவல் தொடர்பு கொள்வதும்
சூட்சுமமான ஆழ்தளத்தில்தான். இது மொழி அல்ல. பின்னர், நீங்கள் அதன் மூளையில் ஏதேதோ
வார்த்தைகளை கற்பிக்கிறீர்கள். அவைகளுக்கு எந்த மொழியும் தேவையில்லை. நீங்கள் சிறு
ஒலி எழுப்பினாலே போதும் அவை வந்துவிடும். வா! வா! என்று அழைக்க வேண்டியதில்லை. ஏதோ
சத்தம் கொடுத்தாலே போதும் வந்துவிடும். மொழியினால் உங்களிடம் தொடர்புகொள்வதில்லை.
இதைப்போல்,
இந்த படைப்பு முழுதும் உங்களோடு தொடர்பிலிருக்கிறது; மரங்கள்; தென்றல்;என எல்லா
படைப்பும் உங்களோடு தொடர்பிலிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தகவல் தொடர்பு ஆழ்
தளத்தில் நடந்து கொண்டிருக்கிறது.ஒரு
சமஸ்க்ருத பழமொழி கூறுகிறது,“வாசாரம்பனர் விகாரோ நாமதேயா”.அப்படி என்றால்
‘வார்த்தைகள் உண்மையின் திரிபு’ என்பதே.ஏற்கனவே தகவல் தொடர்பு நடந்து
கொண்டு தானிருக்கிறது. வார்த்தைகள் மூலம் நீங்கள் அதை சற்று திரித்துக்
கொண்டிருக்கிறீர்கள். வார்த்தைகளே
உபயோகப் படுத்தக் கூடாது என்று நான் சொல்ல வில்லை. ஆனால் வார்த்தைகளுக்கு அடியில்
அந்த உணர்வு இருக்க வேண்டும்.நீங்கள் யாரிடமாவது,“நான் உன்னை மிகவும்
காதலிக்கிறேன்!”என்று சொல்லலாம்.ஆனால் அந்த வார்த்தைகளுக்கு அடியில் அந்த உணர்வு
இருக்க வேண்டும்.
“ஒ!
உன்னை நான் மிகவும் காதலிக்கிறேன்”, என்று மேலோட்டமாக சொல்லாதீர்கள்.
எனவே,
ஞானவான்கள் எப்போதும் சூக்ஷுமமாக தொடர்புகொண்டு அதை நிறைவு செய்ய வார்த்தைகள் உபயோகப்
படுத்துகிறார்கள். ஆனால் மதியிலிகள் வெளிப்புறத்தில் மட்டுமே தொடர்பு
கொள்கிறார்கள். அதனாலேயே வாழ்வில் தவறான புரிதல்கள் ஏற்படுகிறது.ஏன் இந்த தவறான
புரிதல்? ஏனென்றால் அங்கு உள்ளார்ந்த தொடர்பு இல்லை.நீங்கள் ஒன்று சொல்கிறீர்கள்
மற்றவர்கள் வேறொன்றை புரிந்து கொள்கிறார்கள்.
நீங்கள்
உங்கள் வாழ்கையை திரும்பிப் பாருங்கள். நீங்கள் எல்லாவற்றையும் எடைபோட்டு
எடைபோட்டு எடைபோட்டு இருந்திருக்கிறீர்கள். இவரைப் பற்றியும் அவரைப் பற்றியும்
தவறாய் யோசித்து, மிக அதிக கோபமும் இருந்தது. சில காலம் கழித்து, சில மாதங்களோ
அல்லது சில வருடங்களோ கழித்து, உங்களை நீங்கள் பார்த்து சிரித்து, ‘ஓ, நான் ஏன்
அவ்வாறு கவலைப் பட்டேன்! முட்டாள்தனம். தேவையில்லாமல் என்னை நானே அவதிப் படுத்திக் கொண்டேன்’. நீங்கள்
கட்டாயம் திரும்பிப் பார்க்க வேண்டும். பின்னர் நீங்கள் உணர்ந்துகொள்வீர்கள்.பல
தடவைகள் நாம் திரும்பிப் பார்ப்பதில்லை.
அன்றொருநாள்,
ஒரு பெண்மணி வந்திருந்தார்கள். அவர் கூறினார், “என் காதலனுடன் உள்ள உறவு மிக
மோசமாகப் போய்கொண்டிருக்கிறது. அவர் என்னை விட்டு போகப்போகிறார். எனக்கு மிக மிக
வருத்தமாய் இருக்கிறது.” அழுது அழுது புலம்பினார். அதே பெண்மணி இரண்டு
மாதங்களுக்கு பின்னர் வந்து, “நல்ல வேளை, அந்த உறவு அதோடு முடிந்தது. இத்தனை
நாட்கள் அவனிடம் நான் மாட்டிக் கொண்டிருந்தேன். அவனுடனான உறவு இப்போது இல்லாமல்
நான் ஆனந்தமாக இருக்கிறேன்.
எனவே,
பல தடவைகள் நமக்கு என்ன தேவை என்றே தெரிவதில்லை.என்ன வரம்/ஆசீர்வாதம் கேட்பது என்றே
தெரிவதில்லை. எனவேதான் நாம் அவ்வப்போது, எப்போதும் அல்ல; நம் வாழ்கையை திரும்பிப்
பார்த்து, நம் மனம் எங்கே இருந்தது எப்படி நகர்கிறது என்பதை ஆராய வேண்டும்.
திரும்பிப்பார்த்து
நம் மனம் எங்கே இருக்கிறது அன்று ஆராய, ஒரு திருப்தியையும் ஒரு விடுதலையையும்
உணர்வீர்கள். ஒன்று, இறந்த காலத்தில் இருந்து ஏதாவது கற்றுக்கொண்ட திருப்தி,
மற்றொன்று என்ன நடந்திருந்தாலும் அது ஏதோ ஒரு காரணத்திற்குத் தான் என்ற புரிதல்.
இது உங்களை முன்பைவிட தெளிவானவராகவும், ஞானம் கொண்டவராகவும், ஆழமானவராகவும்
ஆக்குகிறது. குறைந்தபட்சம் இந்த புரிதல் ஏற்படுகிறது.
என்ன
சொல்கிறீர்கள்? எத்தனை பேர் இப்படி உணர்ந்திருக்கிறீர்கள்?
அவ்வப்போது
இவ்வாறு நாம் நடந்ததை ஆராயவில்லையென்றால், நாம் அதே தவறுகளை திரும்பத் திரும்ப
தொடருகிறோம், எதையும் கற்றுக்கொள்வதில்லை.ஜைன
பாரம்பரியத்தில், இதை ‘பிரதிக்ரமன்’ என்கிறார்கள், அப்படியென்றால்
திரும்பப் போவது, கர்மாவை அழித்துவிட்டு, அதிலிருந்த பாடத்தை கற்றுக்கொண்டு
முன்னேறுதல்.
ஜைன
துறவிகள் ஒவ்வொரு தினமும் மணிக்கணக்கில் உட்கார்ந்து தம்மைத் தாமே ஆய்வு
செய்கின்றனர். அவர்கள் அந்த அளவு ஆய்வு செய்யத் தேவையில்லை, ஏனென்றால் அவர்கள்
பெரும்பாலும் எதையும் செய்வதில்லை.
யார்
பல வேலைகளிலும் செயல்பாட்டிலும் ஈடுபடுகிறார்களோ அவர்களே நீண்ட நேரம் இத்தகைய
ஆய்வு செய்யவேண்டும்.ஒவ்வொரு நாளும், குறைந்தபட்சம் ஒரு பத்து நிமிடமாவது திரும்பிப்
பார்க்க வேண்டும்–நான் என்ன செய்தேன்? வாழ்க்கையில் நான் என்ன கற்றுக்கொண்டேன்? இன்று
எப்படி இருந்தது? நடந்ததிலிருந்து நான் கற்று கொள்ள வேண்டியது என்ன?
திரும்பவும்
சொல்கிறேன் நீங்கள் என்ன கற்றுகொண்டீர்களோ அதிலேயே இருக்கவும் வேண்டாம். சில
நேரங்களில் நீங்கள் கற்றுகொண்ட பாடம் சரியானதாக இல்லாமல் இருக்கலாம். எனவேதான் வெறுமையாகவும்
காலியாகவும் இருப்பது மிக முக்கியம்.
கேள்வி: அன்பு குருஜி, இரத்த தானம் செய்வது நல்லதா?
ஸ்ரீ
ஸ்ரீ இரவிசங்கர்:ஆம், இரத்த
தானம் செய்வது நல்லது. 24 மணிநேரத்தில் இரத்தம் திரும்ப நம் உடலில் மறு
உற்பத்தியாகிவிடும். உங்கள் உடல் இரத்தம் உற்பத்தி செய்யும் ஒரு இயந்திரம். இரத்த
தானம் செய்வது உயிர்களை காக்கும்.
கேள்வி: எங்கள் அன்பு குருஜி, பனையோலை வைத்து பார்க்கும் நாடி ஜோதிடம் பற்றி
கூறுங்களேன்?
ஸ்ரீ
ஸ்ரீ இரவிசங்கர்: பண்டைய
இந்தியாவில், ரிஷிகள் பள்ளிகள் அல்லது பல்கலை கழகங்களை நடத்தி வந்தனர். அங்கே
அவர்கள் குறி சொல்லும் கலையை கற்றுத்தந்தனர். குறி சொல்வது என்றால் எதிர்காலத்தில்
நிகழ்பவற்றை பார்த்துச் கணிப்பது.
அங்கே,
மாணவர்கள் பன்னிரெண்டு அல்லது பதிமூன்று ஆண்டுகள் தவத்தில் இருந்து மிக ஆழ்ந்து
இருக்கையில், அவர்களின் ஆசான் அவர்களுக்கு ஒரு பயிற்சியை செய்யச் சொல்வார்.
உதாரணமாக என்ன சொல்வார்கள் என்றால், ‘2015ல், இந்த குறிப்பிட்ட நாளில்,
குறிப்பிட்ட நிமிடத்தில், ஒருவர் பிறப்பார். அவரின் ஜாதகத்தை எழுதி அவருடைய வாழ்கை
எப்படி இருக்கும் என்று கணிக்க வேண்டும்’.
இதில்
இரண்டு விஷயங்கள். ஒன்று ஜோதிடக் கணக்குகள், மற்றது பிரபஞ்ச வெளி மற்றும்
காலத்தில் கூர்ந்து நோக்கி அறிதல். இதைத்தான் அவர்கள் செய்தார்கள். ஆனாலும் இதை
எழுதியது மாணவர்கள் என்பதால் இது நூறு சதவிகிதம் உண்மையாய் இல்லாமல் போகலாம். மாணவர்கள்
தவறு செய்யவும் வாய்ப்பு உண்டு. எழுபதிலிருந்து என்பது சதவிகிதம் வரை உண்மையாய்
இருக்கும். சில எதிர்காலத்திலும் நடக்காமல் போகலாம். இதற்கு வாய்ப்பு உண்டு.
இது
நடக்கலாம் என்று ஒரு நிகழக்கூடியதைச் சொல்லலாம். நீங்கள் தியானம் செய்பவராகவும்
ஆன்மீகப் பாதையில் செல்பவராகவும் இருந்தால், உங்கள் வாழ்க்கையில் மேலும் நேர்மறை
விஷயங்களை சேர்த்து உங்கள் விதியை மாற்றுகிறீர்கள்.
இந்த
மாதம் 3ஆம் தேதி (ஏப்ரல் 2012) என்ன நடந்தது என்று நான் கூறுகிறேன்.
சீனாவிலிருந்து ஒரு துறவி வந்திருந்தார். அவர் எதிர்காலத்தை கணிப்பதில் பெயர் பெற்றவர்.
ஒவ்வொரு நாளும் இரண்டாயிரம் அல்லது மூன்றாயிரம் பேர் அவரிடம் செல்கிறார்கள். நான்
இந்தோனேசியாவில் இருந்தபோது, தாம் இங்கு வந்து என்னுடைய ஆசியை பெற விரும்புவதாக
நம் அமைப்பாளர்களில் ஒருவரை அழைத்து கூறினார். அவர் சொன்னார், ‘ஞானம் பெறுவதில்
எந்த வித மத ரீதியான வித்தியாசமும் இல்லை. நான் ஒரு பௌத்தனாக இருந்தாலும் பரவாயில்லை.
குருஜி இந்த உலகில் வந்திருப்பது எனக்கு தெரியும். அவரால் பலர் பயனடையப்
போகிறார்கள். அவர் பன்னெடுங்காலத்திற்கு பிறகு வந்திருக்கிறார்; பல ஆயிரம்
வருடங்கள். அவருடைய ஆசிகள் என்பது எனக்கு நிச்சயம் வேண்டும்.’
அவர்
ஒரு நல்ல மனிதர், நல்ல ஆத்மா. அவர் வந்தார், அமைதியாய் சற்று நேரம்
அமர்ந்திருந்தார், ஆசீர்வாதம் பெற்றதும் அடுத்த விமானத்திலேயே திரும்பிவிட்டார்.மிகுந்த
ஆர்வம் கொண்ட ஒரு அடியார் அவரிடம் கேட்டார், ‘குருஜி மற்றும் வாழும் கலை
நிறுவனத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நீங்கள் கணித்து கூறவேண்டும்.’
அவர்
கூறினார், ‘இல்லை, என்னால் கணிக்க முடியாது. என்னால் விடுதலையாய் இருக்கும்
ஒருவரைப் பற்றி கணிக்க முடியாது. யார் ஒருவருடைய மனம் பற்றில் சிக்கியிருக்கிறதோ
அவரைப்பற்றி மட்டுமே என்னால் கணிக்க முடியும். மனம் இல்லாதிருப்பவரைப் பற்றி
என்னால் கணிக்க முடியாது.’ நானும்
எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்கலாம் என எண்ணி யிருந்தேன்.அவர்
சொன்னார், ’மனம் இல்லாமலிருப்பவரிடம், வெறும் வெளி மட்டுமே இருக்கும் ஒருவரை,
என்னால் கணிக்க முடியாது. குருஜி ஒரு வெளி, அவரை என்னால் கணிக்க முடியாது.’
நீங்கள்
ஜெபித்தாலும், தியானம் செய்தாலும், பிரணாயாமம் செய்தாலும் உங்கள் விடுதலை
அதிகமாகிறது. வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகளோடு உங்களுக்கு எந்த பற்றும்
இல்லை.’அவர்கள்
சொல்வார்கள், ’இப்படியான சில பிரச்சினைகள் வரலாம், எனவே எச்சரிக்கையாய் இரு’.
ஒரு
மருத்துவர், ’உங்களுக்கு கொழுப்பு அளவு அதிகமாக இருக்கிறது, நீங்கள் உடற்பயிற்சி
செய்துவரவேண்டும்’ என்று அறிவுறுத்துவது போல. அதைப்போல் உங்களுக்கு சர்க்கரை
வியாதி இருந்தால் அதற்குத் தகுந்த வாறு சிகிச்சை மற்றும் வாழ்கை முறை மாற்றம்
செய்ய வேண்டும். அவர்களுடைய
கணிப்புகள் உங்களிடம் உள்ள பிரச்சினைக்கு தீர்வு தரும். அதாவது இதெல்லாம் செய்தால்
இந்த பிரச்சினை தீரும் என்று அறிவுறுத்துவது.
இதே போலவே
ஜோசியர்களும் கூறுகிறார்கள், ‘ஓ! வியாழன் உங்கள் எட்டாம் இடத்திற்கு வருகிறது,எனவே உங்கள் மனம் மேலும் கீழுமாக அலைபாயும். உங்கள் நம்பிக்கைகள் எல்லாம்
போய்விடும். தன்னம்பிக்கை போய்விடும், பிறர்மீது உள்ள நம்பிக்கை போய்விடும்,ஏன்
உங்கள் வேலைமீது உள்ள நம்பிக்கை கூட இருக்காது, நீங்கள் கவலை கொள்வீர்கள்.இது ஒரு
வருடம் தொடர்ந்து இருக்கும். ஆனால் இந்த நான்கு ஐந்து மாதங்கள் மிக அதிகமாக
இருக்கும்.எனவே நீங்கள், தியானம், பிராணாயமம், பிரார்த்தனைகள் ஆகியவற்றை தொடர்ந்து
செய்து வந்தால் இந்த காலத்தை நீங்கள் சிரமமில்லாமல் கடக்கலாம். மேலும், எந்த
முக்கிய முடிவுகளும் இந்த நேரத்தில் எடுக்காதீர்கள்’. எனவே, இது போல மன ஓட்டத்தை
பற்றி சிறு கணிப்புகள்.
கேள்வி:நான் இந்த உலகத்திற்கு வந்த காரணத்தை அறிவது எப்படி?என்ன விதமான வேலை
செய்யவேண்டும்? சில நேரங்களில் மிகவும் குழம்பிவிடுகிறேன். எனக்கு பல திறமைகள்
இருந்தாலும் என் திறமைகள் பற்றி ஒரு பாதுகாப்பின்மையை உணர்கிறேன். யார் இந்த
கேள்வியை கேட்பது?’ மறுபடியும் எனக்கு தெரியாது. இந்த என்னுடைய தெரியாத நிலையை
பார்த்து மிகவும் சலிப்பாக இருக்கிறது.
ஸ்ரீ
ஸ்ரீ இரவிசங்கர்:நான் இப்போது
என்ன பதில் சொன்னாலும்,நீங்கள், ‘யார் இதை கேட்பது?’ என்று நினைப்பீர்கள். உங்களை
நீங்களே மிகவும் ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டாம்.இது ஒரு தவிர்க்க முடியாத
ஆழ்நிலை பழக்கமாகிவிடலாம். எப்போதும், ‘யார் கேட்பது? யார் பார்ப்பது? பார்ப்பது
நான் எனில் நான் யார்? யார் பேசுவது?’
தன்னிலை
ஆய்வு நல்லது.அது தேவைதான்,ஆனால் அது அதிகமாகும்போது தேவை யில்லாத குழப்பங்களும்
ஒரு ஓய்வற்ற தன்மையும்தான் மிஞ்சும். நீங்கள் இந்த பயிர்ச்சியில் இருக்கும் போது
அல்லது இதற்கென சிறிது நேரம் உட்காரும்போது மட்டுமே தன்னிலை ஆய்வு செய்யலாம்.
‘நான் யார்? இந்த பிரபஞ்சம் என்ன?’ என்ற கேள்விகள் எல்லாம் பிறகு கேட்கலாம்.
ஆனால்
இந்த சுய ஆராய்ச்சி நிச்சயமாய் 24 மணி நேரமும் இருக்கக் கூடாது. இல்லையென்றால்
உங்களால் எந்த செயலையும் செய்ய முடியாது.
இது
குளிப்பது போல. 24 மணி நேரமும் குளித்துக்கொண்டே இருக்க முடியாது. அப்படி இருக்க
வேண்டும் என்றால் நீங்கள் தண்ணீரில் மீனாகத்தான் இருக்க வேண்டும். எனவே ஒவ்வொரு
அடியிலும் உங்களை நீங்களே சோதனைகளும் ஆராய்ச்சிகளும் செய்து கொண்டிருந்தால்
தண்ணீ ரிலிருந்து வெளியே வந்த மீனைப் போலத்தான் இருப்பீர்கள்.
உங்கள்
வேலையைச் செய்யுங்கள். அது என்ன வேலை என்பது முக்கியமல்ல. நீங்கள் உயிர்
வாழ்வதற்காக ஏதோ வேலை செய்கிறீர்கள். உங்கள் பிழைப்புக்காக, நன்றாக
சம்பாதிக்கக்கூடிய எந்த வேலையானுலும் செய்யுங்கள்.
இப்போது,
உங்கள் வேலை வேறு, உங்கள் சேவை வேறு மற்றும் உங்கள் பொழுதுபோக்கு,வேறு என்பதை
நீங்கள் நிச்சயமாக உணரவேண்டும். இவை எல்லாவற்றையும் ஒன்றாக முயற்சித்தால் அது ஒரு சவால்தான்.
உங்கள் வேலையை பொழுது போக்காக நினைத்தால், அப்படி செய்துதான் நிறைய பேர் வேலையை
இழக்கிறார்கள்.உங்கள் பொழுது போக்கை வேலையாக நினைத்தால், உங்களுக்கு தேவையான பணம்
கிடைக்காது, எப்போதும் குறைவாகவே இருப்பீர்கள். பணம் இல்லாததை உணர்வீர்கள்.சரியான
முடிவும் சீர்தூக்கிப் பார்ப்பதும் கட்டாயம் வேண்டும்.
உங்களுக்கு
வாழ்க்கையில் பொறுப்புகள் இருக்கும்போது, குடும்பத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகள்
இருக்கும்போது, குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு இருக்கும்போது, தேவையான பணமும் நேரமும் கிடைக்கும் நிரந்தரமான
வேலையை தேர்ந்தெடுங்கள். தேர்ந்தேடுத்தபின் மறுபடி அதைப்பற்றி நினைக்க வேண்டாம்.
ஆனால் அதைவிட பெரியதாய் கிடைத்தால் பிரச்சினையில்லை, போகலாம்.
அதன்பின்,
தகுந்த நேரம் எடுத்துக்கொண்டு சமூக சேவைகள் செய்யுங்கள். வாழ்நாள் முழுதும்
உங்களுக்கு தேவையான உணவை சம்பாதிக்க மட்டுமே செலவழிக்கும் வாழ்கை அர்த்தமற்றது
மதிப்பற்றது.
என்ன
செய்வீர்கள்? சம்பாதித்து சம்பாதித்து ‘ஆடி’ அல்லது ‘பென்ஸ்’ கார் வாங்குவீர்கள்.
பிறகு பெரிய வீட்டை கட்டுவீர்கள் நகை வாங்குவீர்கள். அவ்வளவுதான். இது உங்களுக்கு
திருப்தியை தராது. சற்று நேரம் எடுத்துக்கொண்டு, சமூக சேவைகள் செய்யுங்கள்.
வாருங்கள் வந்து வாழும் கலை குடும்பத்தின் ஒரு அங்கமாக இருங்கள்.
தனியாக
எதையும் பெரிதாய் சாதிக்க முடியாது. பத்து பதினைந்து பேர் சேர்ந்து ஒரு திட்டத்தை
எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் உதவி தேவைப்படும் குழந்தைகள் இருக்கிறார்கள்.
உங்களால் நேரம் ஒதுக்க இயலவில்லை என்றால், வீட்டில் ஒரு சிறு உண்டியல் வைத்து
உங்களால் முடியும்போதேல்லாம் சில ஈயுரோ (பணம்) போட்டு வையுங்கள். அது ஒரு சமூக
நலனுக்கு உபயோகப்படும்.
ஜெர்மனியில்
இருந்தும், மற்ற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பலர் பள்ளிகூடங்களை ஆதரிக்கி ன்றனர்.
நாம் இப்போது இந்தியாவில் 185 பள்ளிகளை நடத்திக் கொண்டி ருக்கிறோம். சுமார் 25,000
குழந்தைகள்,நல்ல உணவும் நல்ல கல்வியும் நல்ல மருத்துவ உதவிகளும் பெற்று
வருகின்றனர். இவை அனைத்தும் ஒரு நாள் ஒரு
ஈயுரோ திட்டத்தின்படி பலர் நிதி உதவி அளிப்பதாலேயே நடக்கிறது.இதைப்போல
சமூக நல திட்டங்களில் ஈடுபடுங்கள். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்,‘நான்
இந்த திட்டத்திற்கு உதவுகிறேன். இந்த திட்டத்தில் நான் ஒரு அங்கம்’
நீங்களே
ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் நல்லது. அது முடியவில்லை என்றால் குறைந்த பட்சம்
ஏதேனும் திட்டத்தில் பங்குபெருங்கள். ஒரு கட்டிடத்தில் ஒரு செங்கல்லாகவாவது
இருங்கள். ஒரு செங்கல்லுக்கு நிதி அளியுங்கள். இது உங்களுக்கு திருப்தியை
கொடுக்கும்.
பிறகு,
சற்று நேரம் ஒதுக்கி, இப்போது வந்தது போல (பயிற்சியில் பங்குபெற்றவர்களை பார்த்து)
வந்து தியானப் பயிர்ச்சி செய்து ஆத்மாவை உயர்த்துங்கள். நீங்கள் திரும்பும்போது
புத்துணர்ச்சி பெற்றிருப்பதை உணர்வீர்கள். எத்தனை பேர் புத்துணர்ச்சி பெற்றதை
உணர்கிறீர்கள்? உங்களுக்கு இந்த அனுபவம் கிடைக்கும்.
குறைந்தபட்சம்
வருடத்திற்கு இரண்டு முறையாவது மனம் மற்றும் ஆத்மாவை புத்துணர்ச்சி பெறச் செய்ய
வேண்டும். இது மிக முக்கியம்.
இதை
செய்து பின்னர் சில காலம் கழித்து, நாற்பது, ஐம்பது அல்லது அறுபது வருடங்களில்,
ஓய்வு பெற்று இங்கு வந்து முழுதாக ஞானத்தில் ஈடுபடுங்கள். உங்களை உயர்வான மெய்யறிவுக்கும்,
ஞானத்திற்கும், சமூக நலனுக்கும் அர்ப்பணித்து விடுங்கள். சமூகத்திற்கு சில நல்ல
செயல்கள் செய்யுங்கள். பிறகு உயிர் போய்விடும்! ஒரு நாள் நீங்கள் போய்விடுவீர்கள்
(விரல்களால் சிட்டிகை போட்டு காண்பிக்கிறார்), உங்களுக்கு தெரியக்கூட செய்யாது.
உங்கள் உடம்பை எடுக்க மற்றவர்கள் தான் ஏற்பாடு செய்வார்கள். அவ்வளவுதான்!
முடிந்தது!
ஒரு
நாள்,‘உங்கள் ஆத்மா சாந்தி அடைவதாக’,என்று கூறி உங்களுக்காக நினைவாஞ்சலி நிகழ்ச்சி
நடக்கும் (கைகளை கூப்பிக் காண்பிக்கிறார்). அப்போது நீங்கள் ஏற்கனவே சாந்தியில்
இருப்பீர்கள்! அவர்களின் வாழ்த்து பின்னரே கிடைக்கும்.
உடலை
நீத்தபின், நாம் அமைதியில் இருக்கிறோம். ஆனால் அதில் என்ன சுவாரசியம்? நாம்
உயிரோடு இருக்கும்போது அமைதியை அனுபவித்து சுற்றி உள்ள மக்களுக்கு பயன்பட வேண்டும். என்ன சொல்கிறீர்கள்? இல்லையா?இதுதான்
மதிநுட்பம். மதிநுட்பம் உங்களுக்கு இப்போதே இங்கேயே மகிழ்ச்சியை தருகிறது.
‘பத்து
நாள் அல்லது பத்து வருடம் ஏதேனும் செய்யுங்கள் பிறகு ஒரு நாள் மகிழ்ச்சியாக
இருப்பீர்கள்’,என்று நான் சொல்லவில்லை.அப்படியா என்ன? இல்லை. நமக்கு
இரண்டு ஆயுதங்கள் இருக்கிறது–சோஹம் மற்றும் அதனால் என்ன. எல்லாமே
மாறுகிறது.எல்லாமே
இந்த உலகில் மாறுகிறது. நண்பர்கள் எதிரிகளாகின்றனர், எதிரிகள் நண்பர்களா கின்றனர்.
இதுதான் இந்த உலகில் நடக்கிறது. நடக்கிறதா இல்லையா?
‘நீயில்லாமல்
நானில்லை’, என்பவர்கள் சில காலம் கழித்து, ‘உன்னை என்னால் தாள முடிய வில்லை’
என்கிறார்கள். இது அடிக்கடி நடக்கிறது. ஒரு தடவை அல்ல, இரு தடவை அல்ல, மூன்று தடவை
அல்ல, நான்கு தடவை அல்ல.
காதலை
உங்களுக்கு ஆதரவாக நன்மை பயக்க வைப்பது எப்படி என்று ஒரு பெண்மணி பயிற்சி
வகுப்புகள் நடத்தி வந்தார். அந்த பெண்மணி ஏழு முறை மணவிலக்கு அல்லது விவாகரத்து
பெற்றவர்! நான் கூறினேன், ‘அந்த பெண்மணிதான் இதற்கு மிகத் தகுதி யானவர். ஏனென்றால், அவர் ஏழு முறை இதற்கான அனுபவம் பெற்றிருக்கிறார்.
அவருக்கு காதல் எப்போதெல்லாம் வேலை செய்யாது என்பது நன்கு தெரிந்திருக்கும்,
அதனால் அந்த அனுபவத்தை அவரால் பகிர்ந்து கொள்ள முடியும்!’
பாருங்கள்,
நாம் இந்த உலகில் நண்பர்களை தேடி போனால், நல்ல நண்பர்கள் கிடைப்பதில்லை. ஆனால்
நீங்கள் உங்களுக்கு உள்ளேயே தேடினால், உங்களின் உயர்ந்த சுயத்துடன், உங்கள்
ஆத்மாவுடன் நட்பு பாராட்டினால், உங்களிடமிருந்து இயற்கையாகவே நட்புணர்வு
வெளிப்படுகிறது.
நீங்கள்
நட்புணர்வோடு இருந்தால் இந்த முழு உலகமே உங்களுக்கு நட்பாகிறது. எல்லோரும் உங்கள்
பக்கம் திரும்புகிறார்கள். உங்கள் முன்னால், உங்கள் மிக மோசமான எதிரிகூட உங்கள்
நண்பராவார். அவர்கள் விலகி இருக்கும்போது, உங்களை எதிரியாக நினைக்கக்கூடும்.
உங்கள்
இதயத்தில், யாருடனும் விரோதம் வளர்க்க வேண்டாம். இதுவே என் கொள்கை. என்
பக்கமிருந்து, எனக்கு எதிரிகள் இல்லை.
நான்
சிறு குழந்தையாய் இருந்த போது, வேதத்திலிருந்த ஒரு சமஸ்க்ருத வாசகம் ஒன்று
கற்றுக்கொண்டேன். அது சொல்கிறது, ‘அஜாதசத்ரு அஜாரஸ்வர்வர்த்தி’. அதன் பொருள்,
‘நான் முதியவனாக மாறவே மாட்டேன் ஏனென்றால் நான் இருப்பது என் சுயத்தில்’. எனக்கு
அப்போது பத்து அல்லது பன்னிரண்டு வயது இருக்கும். பத்தாயிரம் வாசகங்களில் இந்த
ஒன்று என்னை மிகவும் கவர்ந்தது.
உன்னுடைய
சுயத்தில் நீ இருக்கும்போது, உங்களுக்கு வயதாவதில்லை, ஆனால் நீங்கள் அப்படியே
இருக்கிறீர்கள். வயதாவது என்பது, களைப்படைவது, ஆர்வமின்மை, எதுவுமே சரியில்லை
என்பது போன்ற ஒரு தோற்றம், நம்பிக்கை இழந்து இருப்பது; மனதில் ஒரு எதிர்மறை உணர்வுகள்
கூறும், ‘ஓ! எனக்கு இதெல்லாம் தெரியும், எல்லாவற்றையும் பார்த்தாயிற்று’ – இது
போன்ற ஒரு மனப்பாங்கு. புதிதின்மை, உயிர்ப்பின்மை.அஜாரா
என்றால் தேய்வதில்லை அல்லது வயதாவதில்லை. உங்களுக்கு தெரியும், வயதானாலும்
உற்சாகம் குறையாமல் சுறுசுறுப்பாய் இருப்பவர்கள் இருக்கிறார்கள்.
நான்
தைவானில் இருந்தபோது, 8000 பேர் பங்கு பெற்ற ஒரு சத்சங்கம் ஒரு விளையாட்ட ரங்கத்தில்
நடந்தது. அதன் பிறகு என் இருப்பிடத்திற்கு வந்தபோது,ஒரு எண்பது வயது நிரம்பிய
கனவான் ஒருவர் வந்தார். அவரிடம் உற்சாகம் ததும்பியது. அவர் சொன்னார்,’ இது மிக
அருமை யாய் இருக்கிறது!இதை நான் பரப்ப விரும்புகிறேன். சீனப் பெருநிலத்தில்
இலட்சக்கணக் கான வர்கள் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களில் சிக்கி தவித்து
வருகின்றனர். நான் உங்களை அங்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். எல்லா
ஏற்பாடுகளையும் நான்செய்கிறேன்.’
அவருக்கு
என்பது வயதுக்கு மேலிருக்கும் மற்றும் அவர் எங்கு பிரயாணம் செய்யவும்
தாயாராயி ருந்தார். அவர் மிக ஒல்லியாய் இருந்தாலும் அவர் ஆன்மா பலமாயிருந்தது! தன்
வயதுடைய நண்பர்களையும் அழைத்து வந்திருந்தார். அவர்கள் சொன்னார்கள், ‘நாங்கள்
உங்கள் சிப்பாய்கள்!’ அவர்கள் என்னை முதல் முறையாக அப்போதுதான் பார்த்தார்கள்.
அதைபோல
ஜப்பானில் 78 வயது நிரம்பிய ஒருவர் மிக உற்சாகமாக இருந்தார். அவர் நான் பேசுவதற்கு
ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அவர், ‘எனக்கு வயதாகிவிட்டது, என்னால் எதுவும்
செய்ய முடியாது’ என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. அனால் மிக உற்சாகமாக
எல்லா வற்றையும் செய்தார். அவர் உரைத்தார், ‘இந்த ஞானம் ஜப்பான் முழுமைக்கும்
தேவைப்படுகிறது.’ அவர் ஒரு மிகத் திறமையான கனவான்.
ஒவ்வொரு
வருடமும் ஜப்பானில் முப்பதாயிரம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது மிக
அதிகம். இன்று, என்ன தேவையென்றால் ஒரு பெரிய ஆனந்த அலை. ஜப்பானில் GDP (தனி மனித
உற்பத்தி அளவு)மிக அதிகம். விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு வருவதற்கு சாலை
கட்டணம் மட்டும் 50 டாலர்கள். உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இரண்டு முறை
போய்வந்தால் 200 டாலர்கள் செலவழிந்திருக்கும். விமான நிலையம் சென்று யாரையாவது
அழைத்து வந்தீர்களா னால் 100 டாலர் செலவு. அந்த அளவு தூரம். அங்கு விலை வாசி
அவ்வளவு அதிகம். அங்கு ஏற்படும் அதிக செலவுகளால் அமெரிக்கர்கள் அங்கு வாழ
தயங்குகிறார்கள். மக்கள் பணம் சம்பா திக்கிறார்கள் அனால் மகிழ்ச்சி இல்லை.
ஜப்பான்
மட்டும் இல்லை, உலகில் பல நாடுகளில் இந்த வியாதி இருக்கிறது, மகிழ்ச்சி இல்லை.
அவர்கள் நகைப்பதில்லை, சிரிப்பதில்லை, அவர்களிடத்திலேயே அவர்களுக்கு அமைதியில்லை. ஒரு
ஆனந்த அலை உருவாக்கப்பட வேண்டும்; அது மெய்யறிவினால் மட்டுமே, ஞானத்தினால் மட்டுமே,
வாழ்க்கையைப்பற்றிய பார்வையை விசாலமாக்கினால் மட்டுமே அது சாத்தியம், அதுதான்
வாழும் கலை என்பது.
வாழும்
கலை என்பது ஒரு தீவிர கொள்கை அல்ல. இது ஒரு கொள்கைகளோ அல்லது பயிற்சியோ அல்ல.
வாழும் கலை என்பது ஒருவருடைய வாழ்கை பற்றிய பார்வையை விசாலமாக்குவது மற்றும்
வாழ்கையை ஒரு கொண்டாட்டமாக்குவது. வாழும் கலையின் முக்கிய நோக்கம் அதுவே.
சமஸ்க்ருத
வாசகம் ஒன்று சொல்கிறது,’ உண்மையான கடவுள் வழிபாடு என்பது மனித மனங்களில்
மகிழ்ச்சியை உண்டாக்குவது’ஏன கேன ப்ரகரேன யஸ்ய கஸ்யாபி தேஹினாஹ் | சந்தோஷம்
ஜனயெத் ப்ராக்ய ததேவேஷ்வரபூஜானாம் – மனித மனங்களில் மகிழ்ச்சியே உண்மையான இறை
வழிபாடு.
என்ன
ஒரு ஞானம், இப்படிப்பட்ட நல்ல வாசகங்கள் முற்காலத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.
எனவேதான் இது காலத்தை வென்ற ஞானம் எனப்படுகிறது. யார் எழுதினார்கள் என்று கூட
தெரியாது. அவர்கள் தங்கள் கையெழுத்தை இதில் போடவில்லை, ஆனால் நம் வாழ்க்கைக்கு
இந்த விலை மதிப்பில்லா கற்களை நமக்கு தந்திருக்கின்றனர்.இதுதான் வாழும் கலை;பண்டைய பாரம்பரியத்தை மதிப்பது, நவீன விஞ்ஞானத்தை எதிர்காலத்தில் பார்ப்பது மற்றும்
இரண்டையும் ஒரு சேர எடுத்து கொள்வது.
அறிவியலும்
ஆன்மீகமும் ஒரு போதும் முரண்பட்டதில்லை. அவை ஒன்றாகவே செல்கிறது. மதமும் அறிவியலும்
முரண்பட்டிருக்கின்றான், அனால், அனுபவப் பகுதியான ஆன்மீகமும் அறிவியலும் முரண்பட்டதில்லை.
அதனால் தான் நான் சொல்கிறேன் அறிவியல் சிந்தனை யோடும் புராதன இதயத்தோடும் பார்க்க
வேண்டும்; புதிய சிந்தனை மற்றும் அன்பான இதயம். இது நமக்குத் தேவை. அப்படி
உங்களுக்குத் தோன்றவில்லை?
நான்
சொல்கிறேன்! இந்த உலகம் மிக சுவாரசியமானது. எனவே, இந்த உலகில் இருங்கள், உலகத்தை
அனுபவியுங்கள்,ஆனால் அதில் சிக்கி மூழ்கிவிடாதீர்கள்.உங்களை நீங்களே சற்று
விலக்கி வைத்திருங்கள். வெளி நிகழ்வுகள் உங்களை தீண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் ஆன்மாவை, உங்கள் எண்ணத்தை, உங்கள் மனதை மற்றும் உங்கள் ஆனந்தத்தை
பாதுகாத்துக் கொள்ளுங்கள். உலக நிகழ்வுகள் அவற்றை பாதிக்காத வாறு பார்த்துக்
கொள்ளுங்கள்.
உங்கள்
சுதந்திரத்தை, உங்கள் ஆழ மன ஆனந்தத்தை, உங்கள் ஆழ மன அமைதியை மற்ற வர்களோ வெளி
நிகழ்வுகளோ பறிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.இதுவே வாழும் கலை.
இது
ஒரு பெரிய வேலை. ஒரு பெரிய சவால். இது மிக எளிதல்ல. இது மிக எளிதென்று நான்
சொல்லவில்லை.
நான்
சொல்கிறேன், இது பூப்போல பூப்போல மென்மையானது அல்ல. பலப் பல சவால்கள் உள்ளன, ஆனால்
இந்த ஞானம் அதை எதிர்கொள்ள உதவும். ஆனால், வாழ்க்கையில் இந்த சவால்கள்
இருக்கக்கூடாது என்று நீங்கள் நினைக்கும்போதுதான் பிரச்சினை. அப்போது சவால்கள்
மிகப் பெரிதாய் தோன்றும். வாழ்கையில் சவால்கள் உண்டு, ஆனால் ஞானம் அதை எதிர் கொள்ள
உங்களுக்கு உதவும்.