12 - ஜூலை - 2012 - பாட்
அண்டோகஸ்ட், ஜெர்மனி
கே: குருதேவ்! தயவு செய்து எனக்கு ஞானம் அளியுங்கள்.
குருதேவ்:
அதற்கு நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். ஞானம்
என்பது நீங்கள் வெளியே இழுக்க வேண்டிய ஒன்று.
கே: அன்பு என்றால் என்ன?
குருதேவ்: இருக்கும் எல்லாவற்றின் அடிப்படை அது தான். நம் உடலில் உள்ள செல்கள்
அனைத்தும் ஒன்றோடு ஒன்று அன்பாய் இருக்கிறது அதனால்தான் அவை ஒன்றாய் இருக்கிறது.
எந்த நாளில் அந்த அன்பு இல்லாமல் போகிறதோ அன்று இந்த செல்கள் சிதறிவிடும்.
புரிந்ததா?
ஏதாவது
ஒரு பொருள், அதில் எல்லாமும் ஒருங்கே இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்,
அதற்கு நீங்கள் பெயர் தர விரும்பினால், அதை நீங்கள் அன்பு என்று .அழைக்கலாம்.
அன்பு என்பது கொஞ்சி கொஞ்சி, குழைந்து குழைந்து,’நீ இல்லாமல் நான் வாழ முடியாது,
உன்னை அந்த அளவு காதலிக்கிறேன்,’ என்பதெல்லாம் பேசி. அது இல்லை இது. இது வெறும் உணர்ச்சி
பூர்வமான ஒன்று. அன்பு என்றால் (அமைதி) .......அதுதான்.
அன்பு
என்பது விவரிக்க இயலாதது. உங்களால் விவரிக்க முடியாது. இந்த உலகில் இதைத் தெரியாத
படைப்பு இருக்க முடியாது. புரிந்ததா?
கடல், பறவை, கோழி முதல் ஞானி வரை, எல்லோரும் அன்பை அனுபவித்திருக்கிறார்கள்.
வாழ்க்கைக்கு அன்பு என்று தான் நாம் இதை பற்றி நினைக்கிறோம், ஆனால் வாழ்கையே
அன்பு தான். எனவே இந்த மெய்யறிவைக் கொண்டு இந்த பிரபஞ்சம் முழுவதும் அன்பு தான்
என்பதை காணுங்கள்.
அன்பு தான்
இருப்பு (அது வெறும் உணர்ச்சி அல்ல. உணர்ச்சியும் அன்பு தான், ஆனால்
அணைத்து இருப்புமே அன்பு தான். பூமி சூரியனின் மீது அன்பாய் இருக்கிறது,
அதனால் தான் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. சந்திரன் பூமி மீது அன்பாய்
இருக்கிறது, அதனால் தான் சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது. எங்கெல்லாம் ஒரு விசை,
அல்லது ஒரு சக்தி, அல்லது ஒரு இழுப்பு அல்லது ஒரு கவர்ச்சி, அதை நீங்கள் அன்பு
என்று அழைக்கலாம். எங்கெல்லாம் விலக்கு விசை இருக்கிறதோ, அதுவும் அன்பு தான் ஆனால்
எதிர் திசையில். புரிந்ததா?
யாரிடமாவது
அல்லது எதனிடமாவது நீங்கள் கவரப்படுகிறீர்கள், ஏன்? ஏனென்றால் அதை நீங்கள் விரும்புகிறீர்கள்.
நீங்கள்
சீஸ் கேக்கை பார்க்கிறீர்கள், அதனால் கவரப்படுகிறீர்கள், ஏன்? ஏனென்றால் அங்கு ஒரு
இழுப்பு விசை இருக்கிறது. நீங்கள்
அழகான ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள் அல்லது ஒரு இளம் பெண் அழகான ஆண் மகனைப்
பார்க்கிறாள், அங்கு ஒரு கவர்ச்சி ஏற்படுகிறது, அதற்கு என்ன பெயர் சொல்கிறீர்கள்?
அதை நீங்கள் காதல் அல்லது அன்பு என்று சொல்கிறீர்கள்! ஏன்? ஒரு இழுப்பு, ஒரு
கவர்ச்சி அல்லது ஒரு விசை இருக்கிறது. அந்த ஒரு விசை தான் இந்த முழு
பிரபஞ்சத்தையும் மேலாண்மை செய்கிறது.
சில
இடங்களில் இது வெளிப்படையாய் தெரிகிறது, சில இடங்களில் இது வெளிப்படையாய்
தெரிவதில்லை. இந்த பூமி உங்கள் மீது தன் அன்பை நிறுத்தும் அந்த நாள், நீங்கள்
பறப்பீர்கள். உங்களை புவியீர்ப்பு விசை மூலம் பசை போட்டு தன் மீது ஒட்டிக்கொள்ளும்
அளவு உங்கள் மீது அன்பு கொண்டிருக்கிறது பூமி. உங்களுக்குப் புரிந்ததா?.எனவே அன்புதான்
மனித வாழ்க்கையில் விசை. மேலும், எதிர்மறை உணர்ச்சிகள் கூட அன்பின் ஒரு திரிந்த
வடிவம் தான்.
கோபத்தில்
கூட அன்பு இருக்கிறது. எப்படி என்று என்னைக் கேளுங்கள்? எப்போதும் நறுவிசாக இருப்பதின்
மீது உள்ள அன்புதான் கோபமாக வெளிப்படுகிறது. பேராசை ஒரு அன்பு. வாழ்க்கையை விட
ஒன்றின் மீது நீங்கள் அதிக அன்பாயிருப்பதுதான் பேராசை. வாழ்க்கையைவிட ஒரு பொருள்
மீது நீங்கள் வைக்கும் அன்பு பேராசை எனப்படுகிறது. வெறுப்பு என்பது அன்பின்
தலைகீழ் வடிவம். பயம் அன்பின் தலைகீழ் வடிவம்.
கே: குருதேவ், என் அம்மா கிறிஸ்துமஸ் தினத்தன்று இறந்துவிட்டார். இதற்கு
ஏதேனும் சிறப்பான அர்த்தம் உள்ளதா?
குருதேவ்: உலகம் முழுவதும் பலர் கிறிஸ்துமஸ் தினத்தன்றோ அல்லது புத்தாண்டு
அன்றோ இறக்கின்றனர். இறப்பிற்கு நாள் தெரியாது. புரிந்ததா?
எனவே,
நீங்கள் கொண்டாடும் ஒரு நாளன்று அவர்கள் இறந்துவிட்டதால் உங்களுக்கு ஒரு
தடுமாற்றம். இதை வேறுவிதமாக பார்ப்பதென்றால்– அந்த நாளன்று அவர்கள் இன்னும்
பெரிதாகி விட்டர்கள். இந்த உடம்பிலிருப்பதால் ஏற்படும் துயரங்களையும் நோய்களையும்
அவர் தாண்டி விட்டார். இது அவருக்கு நல்ல விஷயம் தான்.இயற்கையிடமிருந்து,கடவுளிடமிருந்து அவர்களுக்கு இது ஒரு கிறிஸ்துமஸ் பரிசு. அப்படி நினையுங்கள், பின்
உங்கள் மனம் அமைதியடையும். நீங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடலாம்.
உங்கள்
அம்மா கிறிஸ்துமஸ் தினத்தன்று விடுதலையடைந்து விட்டார்கள். கிறிஸ்துமஸ் தினத்தன்று
மேலே சென்றுவிட்டார்கள். இப்படிப் பார்ப்பது மேலான வழியல்லவா? எனவே அவர்கள்
விடுதலையை கொண்டாடுங்கள்.
கே: என்னைச் சுற்றி இருப்பவர்கள் எப்போதுமே எதிர்மறையாய் இருந்தால் நான்
என்ன செய்வது? என் நண்பர் ஒருவர், எல்லாவற்றையும் தீவிரமாக எதிர்மறையாகவே இருக்கிறார். மேலும் நாளாக இது
மோசமாகி கொண்டே போகிறது.
குருதேவ்: பாருங்கள், ஒருவர் அந்த அளவு எதிர்மறையாய்ப் போவது என்பது
மனிதர்களுக்கு முடியாத காரியம். அந்த அளவு எதிர்மறையாய் இருப்பது மனிததன்மையே
அல்ல. உங்கள் நண்பர் அந்த அளவு போனபின், அதற்கு மேல் போக முடியாது, அவர் திரும்பி
வந்துதான் ஆக வேண்டும். ஏனென்றால் எல்லாமே சுழற்சிதான். புரிந்ததா?
அடிமட்ட
ஆழத்திற்கு சென்றபின், அதற்கும் கீழே போவதற்கு இடமில்லை. நீங்கள் மேலே வந்து தான்
ஆக வேண்டும். அதைத்தான் அவர் சொன்னார். நிலைமை அவ்வளவு மோசமாய் ஆனதால் அவர்
திரும்பி வரத்தான் வேண்டும். யாரும் கெட்டவர்கள் இல்லை என்பதற்கு அதுவே
எடுத்துக்காட்டு, அது வெறும் செயல்தான். ஆன்மா எப்போதும் தீயதில்லை. அது எப்போதும்
சுதந்திரமாய் பேரானந்தத்திலிருக்கிறது.
செயல்களுக்கு
ஒரு வரையறை, கால கட்டம் உள்ளது. பாருங்கள். நீங்கள் ஒரு தீய செயலை செய்யும்போது
நீங்கள் நிரந்தரமாக ஒதுக்கபடுவதில்லை. உங்களுக்குத் தரப்படும் தண்டனைகூட சில
வருடங்களே. அந்த ஒரு சில வருடங்கள் கூட நீங்கள் நன்றாய்த்தான் நடத்தப்
படுகிறீர்கள்.
ஒரு
கைதி, அவர் என்ன குற்றம் செய்திருந்தாலும், அவர் மோசமாக நடத்தப்படுகிறாரா? இல்லை.
அவர் கருணையோடுதான் நடத்தப்படுகிறார். இது புராணங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது –
மிக மோசமான குற்றம் இழைத்த ஒருவர் கூட, பரிசுத்தமான ஒருவரின் தொடர்பால், பிரகாசமான
ஒருவரின் தொடர்பால், நேர்மறை சக்தி நிரம்பிய ஒருவரின் தொடர்பால், அந்த நேர்மறை
சக்தியின் வலிமையினால் இருள் விலக்கப்பட்டு வாழ்வில் ஒளி பெறுவார்.
மிகவும்
இருளான ஒரு இடத்தில் ஒரு மெழுகுவர்த்தி போதுமான அளவு ஒளி தரும்.
கே: இறப்பிற்கு பின் என்ன நடக்கும்?
குருதேவ்: இறப்பிற்கு பின் என்ன நடக்கிறது என்றால், ஆன்மா மற்றும் மனம்
உடலிலிருந்து விடுபடுகிறது. மனதிற்கு ஞாபகங்களும் புத்தியும் உண்டு, எனவே இந்த இரண்டும்,
ஒரு பலூன் போல ஆகின்றன. கர்மவினை, அடி ஆழத்திலுள்ள பதிவுகள் இந்த பலூனை
அமைக்கின்றன. அது ஒரு தூக்கம்போல. இறப்பு என்பது ஒரு நீண்ட தூக்கமன்றி வேறில்லை.
தூங்குவதற்கு முன் உங்களுக்கு என்ன எண்ணங்கள் இருந்ததோ, தூங்கி எழுந்தபின் முதலில்
வரும் எண்ணம் எது என்று பாருங்கள். இதை கவனித்ததுண்டா? அதுவே தான் இருக்கும்.
நம் இயல் உடல் அழுக ஆரம்பிக்கிறது மற்றும் நம் சூக்ஷும உடல் ஒரு பலூன் வடிவமாகி
எல்லா பதிவுகளுடன் இயல் உடலை விட்டு வெளியேறி சுற்றிக் கொண்டிருக்கும். ஒரு பலூனை
கற்பனை செய்து கொள்ளாதீர்கள்! அது ஒரு ஒளி அல்லது சக்தி.
ஒரு நல்ல உதாரணம் சொல்கிறேன். ஒரு தொலைகாட்சி நிலையத்தில் ஒரு நிகழ்ச்சியை
பதிவுசெய்து ஒளிபரப்புகிறார்கள் அல்லவா? அந்த நிகழ்ச்சி ஆகாயத்தில் இருக்கிறதல்லவா
அப்படியே தான் இதுவும்.
நீங்கள்
உங்கள் கணினியிலிருந்து ஒரு மின்னஞ்சல் அனுப்ப, எழுத்துக்களை தட்டச்சு செய்து
‘அனுப்பு’ பொத்தானை அமுக்குகிறீர்கள். அது வெளியேறி ஆகாயவெளிக்குச் செல்கிறது.
அந்த மின்னஞ்சல் அதை பெறுபவர் தரவிறக்கம் செய்யும் வரை ஆகாயத்தில் இருக்கிறதா? அந்த
மின்னஞ்சலை பல நாட்கள் கழித்தும் அதை தரவிறக்கம் செய்யலாம். ஒரு வருடம் அல்லது
பத்து வருடங்கள் கழித்தும் அதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கு முடிவு தேதியே
கிடையாது அல்லவா? நீங்கள் அனுப்பும் வலை பின்னலில் மின் வாழ்த்து அனுப்புவது போல்
அதற்கு 24 மணி நேரம் முடிவு நேரமெல்லாம் கிடையாது.
நீங்கள்
அனுப்பும் மின்னஞ்சல் அஞ்சலாக ஆகாயத்தில் தொங்கிக் கொண்டிருக்காது. அது ஒரு
சக்தியாக ஆகாய வெளியில் இருக்கிறது.
ஒவ்வொரு
பெருவிரலும் ஒரு விதமான ரேகை இருப்பது போல ஒவ்வொரு ஆத்மாவும் ஒரு அலைவரிசை.
செல்போன் சிம் போல.எனவே இறப்பிற்கு பின்,ஒவ்வொரு தனி சக்தியும் தன்னுடன் உள்ள
பதிவுகளுடன் தங்குகிறது. அதற்கேற்ற பல நிலைகளை அனுபவிக்கிறது. ஆனால் அந்த ஆத்மா
சில காலம் கழித்து திரும்ப வருகிறது.
அந்த
ஆத்மா மூன்று வேளைகளில் உடம்புக்குள் நுழைகிறது – இவை எல்லாம் இரகசியங்கள். இது
இறப்பின் இரகசியம் மற்றும் பிறப்பின் இரகசியம் என்று அழைக்கப்படுகிறது.
கரு
உருவாகும் அந்த நேரத்தில் அல்லது கருவின் ஐந்தாவது மாதத்தில் அல்லது அது பிறக்கும்
வேலையில், ஆத்மா உடலில் நுழைகிறது. எனவே மூன்று பகுதிகள் இருக்கிறது, ஆனால்
எப்போது அது நுழைகிறது என்று கண்டறிய இயலாது.
கரு
உருவாகும் நேரம் உள்ளே நுழைகிறது என்றால் அதைப் பார்த்துக்கொள்ள நாம் என்ன செய்ய
வேண்டும்? உங்களை நீங்கள் மகிழ்வாக வைத்துக் கொள்ளுங்கள். இந்தியாவில் கர்பிணியாய்
இருக்கும் பெண்களை பொதுவாக மிக மகிழ்வான சூழ்நிலையில் வைத்துக் கொள்வார்கள். என்ன
கேட்டாலும் அது கொடுக்கப்படும்.
வன்முறையான
திரைப்படங்கள், பயங்கரமான பாடல்கள் காட்சிகள் ஆகியவற்றை பார்க்க வேண்டாம் என்று
கூறுவேன். பொதுவாக மெல்லிய புல்லாங்குழலிசை நல்லது. ஏனென்றால் அது இதமாக
இருக்கும். இசை, ஞானம் நிரம்பிய உரை இவற்றை கேட்பது நல்லது. இவை எல்லாம்
செய்யலாம். மேலும்
ஒரு ஆத்மா தான் எங்கு பிறப்பிக்கப் பட வேண்டும் என்று அந்த இடத்தை தானே முடிவு
செய்கிறது. அதன் விருப்பப்படி அது அங்கு வந்துவிடுகிறது.
கே: ஆத்மா எப்போதாவது இறக்குமா?
குருதேவ்: இல்லை, ஆத்மா இறப்பதே இல்லை. நீங்கள் இரயிலில் சென்று அந்த இரயில்
நின்று விட்டால் நீங்கள் வேறு இரயிலில் ஏறுவது போல இரயில் மாறலாம். அவ்வளவு தான்.
கே: (அரங்கத்திலிருந்த ஒருவர் கேள்வி
கேட்டார், அந்தக் கேள்வி சரியாக கேட்க முடியவில்லை.)
குருதேவ்: ஆம், பார்த்தீர்களானால், மனித வாழ்கை இன்பமான நாட்களும் துன்பமான
நாட்களும் கலந்தது. ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர், ஜீசஸ், புத்தர், மாஹவீரர், அல்லது
குரு நானக் என யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். வரலாற்றில் இருந்து
யாருடைய வாழ்கையை எடுத்துக் கொண்டாலும் சில நாட்கள் துன்பமாகவும் சில நாட்கள்
இன்பமாகவும் இருந்திருக்கிறது.
எது
முக்கியம் என்றால் துன்பமான நாட்களில் மிகவும் நொந்து போகாதீர்கள், நன்றாய்
இருக்கும் காலங்களில் கூரையைத் தாண்டி மேலே பறக்காதீர்கள். உங்கள் சமநிலையையும்
கௌரத்தையும் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இதை தான் உங்களுக்கு மெய்யறிவு
போதிக்கிறது. ஆம், சில நாட்கள் மோசமாகத்தான் இருக்கும், ஆனால் உங்களுக்கு
மெய்யறிவு இருந்தால் நீங்கள் அதை கடந்து மேலே செல்வீர்கள். அது உங்களை அந்த அளவு
பாதிப்பதில்லை.
கர்மவினைகளின்
விதிமுறைகள் மிகவும் சுவாரசியமானவை மிகவும் புதிதானவை. மழை பெய்யத்தான்
வேண்டுமென்றால் மழை பெய்யும். ஆனால் அதில் நனைய வேண்டுமா இல்லையாவென்பது உங்கள்
தேர்வு. மழை உடையை மேலே போட்டுச் சென்றால் சில துளிகள் முகத்தில் படும் அவ்வளவுதான்.
ஆனால் நீங்கள் குடையில்லாமல் நடந்து வந்தால் முழுதும் நனைந்து உடைகளை மாற்ற
நேரிடும்.
தினசரி
பயிற்சிகள்,தியானம், சத்சங்கம், பஜனை பாடல்கள், ஞானம், இவையெல்லாம் நாம் நனையாமலிருக்க
உதவும் குடை மழை உடை போன்றவை.
எனவேதான்
மக்கள் சொல்கிறார்கள், ‘நீங்கள் நிலைமை சரியில்லாத காலத்தில் இருக்கிறீர்கள்
என்றால், காலி மற்றும் வெறுமை தியானம் செய்யுங்கள், ‘ஓம் நமச்சிவாயா’ என்று ஜெபியுங்கள் பஜனை
பாடல்கள் பாடுங்கள்.’
உங்கள்
மனதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம் ஆனால் அவை வந்து உடனே காணாமல் போகின்றன.
மேலும் நீங்கள் அதில் ஆழமாகப் போகப் போக, ஒரு காலம் வரும் அப்போது தீய எண்ணங்கள்
உங்களை எப்போதும் தொடுவதில்லை, உங்கள் அருகில் கூட வராது. அதுவே ஞானம் கிடைக்கப்
பெறுவது.
கே: ஜோதிடவியல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
குருதேவ்: அதனால் தான் நான் இதை ஒரு விதமான தொலைந்து போன விஞ்ஞானம் என்கிறேன்.
ஜோதிடவியல் ஒரு அறிவியல். ஆனால் ஜோதிடர்கள் அல்ல. அவர்கள் ஒரு வகையாக இட்டுக்கட்டி
விடுகிறார்கள். நீங்கள் உங்கள் உள்ளுணர்வை பின்பற்ற வேண்டும். இதைப்பற்றி நீங்கள்
அதிகமாக கவலைப் படக்கூடாது. பொதுவாக ஒரு தெரிதல் போதும். உதாரணமாக, பௌர்ணமி
அன்றும் அமாவாசை அன்றும் உங்கள் மனநிலை சந்திரனால் பாதிக்கப்படுகிறது. எத்தனை பேர்
இதை உணர்ந்திருக்கிறீர்கள்? எத்தனை பேர் ஆமாவாசை யன்றோ அல்லது பௌர்ணமியன்றோ
தூக்கம் வராமல் அவதிப்பட்டிருக்கிறீர்கள்? சந்திரன் மனதோடு வெகுவாக இணைக்கப்
பட்டிருக்கிறது. எனவே இது நடக்கிறது.
ஜோதிடம்
கூறுவதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், அவ்வளவு தான், பீதியடையத் தேவையில்லை.
பீதியடைவதற்கும் தெரிந்து வைத்துக் கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
இதை கவனித்தவாறு இருந்தால் போதும்.
கே: குருதேவ், நான் நிறைய ஞானத்தைப் பற்றி படிக்கிறேன் கேட்கிறேன். ஆனால்
கேட்டதை எல்லாம் உடனேயே மறந்து விடுகிறேன். நான் என்ன செய்வது?
குருதேவ்: கவலை வேண்டாம். நான் உங்களுக்கு சொல்லிக் கொண்டே தான் இருப்பேன்.
நீங்கள் நூறு முறை மறந்தாலும், கவலை வேண்டாம். எனக்குப் போதுமான அளவு பொறுமை
இருக்கிறது. அதே விஷயத்தை நான் கூறியபடியே இருக்கிறேன்.
உங்களிடம்
பேசிக்கொண்டிருபவர்களின் கதையும் அதே தான். பலர் சொல்கிறார்கள், ஆனால் அவர்களும்
அந்தப் பக்கத்திலேயே இருக்கிறார்கள். விட்டுதள்ளுங்கள்!
அஷ்டவக்கிர
கீதாவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மறந்துவிட்டது, சரியா?! அதில்
கூறப்படிருப்பதை கேட்டிருக்கிறீர்களா? ‘மறந்துவிட்டவர்கள் பாக்கியம் செய்தவர்கள்’
எனவே
நீங்கள் அந்த வகை. அதில் ஒரு உரையில் அஷ்டவக்கிரர் கூறுகிறார், ‘எல்லாவற்றையும்
மறக்கக் கூடியவர்கள் பாக்கியவான்கள்’ நீங்கள் அந்த வகை போலிருக்கிறது. நீங்கள்
பாக்கியம் செய்தவர்கள் என்பதையாவது மறக்காமலிருங்கள்.
‘நான்
ஆசீர்வதிக்கப் பட்டுள்ளேன்’ – இதை மட்டும் மறக்காமலிருங்கள்.
கே: குருதேவ், நான் என்னுடைய உள்ளுணர்வை இழந்துவிட்டேன். நான் என்ன
செய்வது?
குருதேவ்: நீங்கள் சரியான இடத்திலிருக்கிறீகள். பிரச்சினையே இல்லை. பாருங்கள், நேற்று
மாடியில் கிருஷ்ணா கூடத்தில் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று நான் கீழ்
தளத்திற்குப் போக வேண்டும் என்று கூறினேன். நான் அங்கு சென்று சுமார் ஒரு
வருடத்திற்கும் மேல் இருக்கும்.
நான்
கீழே போகவேண்டும் என்று கூறினேன், உடனே எல்லோரும் கீழே சென்றோம். கீழ் தளத்தில்
ஒரு அறையைக் காண்பித்து இங்கு யார் இருக்கிறார்கள் என்று வினவினேன். அவர்கள், ‘யார் என்று தெரியவில்லை, யாரோ இருக்கிறார்கள்.’ கதவைத் திறந்து
பாருங்கள் என்றேன். உள்ளே ஒரு மெழுகு வர்த்தி எரிந்து கொண்டிருந்தது. அது முடியும்
தருவாயில் இருந்தது. இன்னும் சற்று நேரம் யாரும் பார்க்கவில்லையென்றால் கீழ்
இருக்கும் மெத்தை மற்றும் கட்டிலில் தீப்பிடித்திருக்கும். மெழுகுவர்த்தி தேய்ந்து
தீப்பிடித்திருக்கும். பத்து நிமிடம் கழித்து வந்திருந்தோமானால் கட்டில்
தீப்பிடித்திருக்கும். யாரோ மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து விட்டு மறந்து
விட்டார்கள். எனக்கு அங்கு எந்த வேலையும் இல்லை. அது தான் உள்ளுணர்வு. எனக்கு
அங்கு போக வேண்டும் என்று தோன்றியது, அந்த அறையை மட்டுமே திறந்தேன்.
நான்
யாருடைய அறையையும் திறக்க மாட்டேன். எதுவும் நடக்கும் என்று இப்போது உங்களுக்குத்
தெரியும். நான் எந்த அறைக்கு வேண்டுமானாலும் திடீரென்று நுழையலாம். அப்படித் தான்
நுழைந்தேன், யாருமில்லை ஆனால் மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருந்தது. எனவே
உள்ளுணர்வு என்பது எல்லோருக்கும் உடன் பிறந்தது. எல்லோரிடமும் அது இருக்கிறது.
நிறைய காலியாக வெறுமையாக இருக்கும்போது, தியான நிலையில் இருக்கும்போது இது
வெளிப்படையாக தெரியும். இல்லையா? எனவே உங்கள் அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி
வைத்துவிட்டு காணாமல் போய்விடாதீர்கள். சரியா?
கே: ஆன்ம உலகம் எங்கே இருக்கிறது?
குருதேவ்: அது எங்கோ இல்லை, இங்குதான் இருக்கிறது.