அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டக் இறைத்துகளைப் பற்றிப் பேசுகிறார் ஸ்ரீ ஸ்ரீ

10
2012
July
ஜெர்மனி
இறைத்துகளைத் தாங்கள் கண்டுபிடித்து விட்டதாகவும், இந்த உலகம், ஏன் க்ரஹங்கள் நக்ஷத்திரங்கள் அனைத்துமே சக்தி மயமான இத்துகள்களால் நிரப்பப்பட்டப் பரப்பினாலேயே ஆக்கப்பட்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வேதாந்தம் படித்த ஒருவருக்கோ ஆழ்ந்த தியானத்தை அனுபவித்தவருக்கோ இது தெரிந்த விஷயமே. இந்த அண்ட ப்ரும்மாண்டமே ஒரே சைதன்யத்தின் வெளிப்பாடு தான்,‘அடிப்படையை முதலில் புரிந்து கொள்’ என்பதே நம் ரிஷிகளின் வாதமும் கூட. ‘இறைத்துகள்’ எனப் பெயர் சூட்டியிருப்பது போல ப்ரம்மத்தை ஒரு தத்துவமாகவும் ப்ரம்ம தத்துவத்தை ‘ப்ரும்ம நிலை’ என்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ப்ரம்ம நிலை என்பது என்ன? பார்க்க முடிந்த பஞ்ச பூதங்களைத் தாண்டிப் பார்க்க முடியாத மனம், புத்தி இவற்றைக் கடந்து நிற்க முடிந்தால் அடையும் நிலையே ப்ரம்ம நிலை.ஆகாசத்தை விட சன்னமானது மனம், மனதை விட சன்னமானது ஞானமடங்கிய புத்தி, புத்தியை விட சன்னமானது அகங்காரம், அகங்காரத்தை விட நு£று மடங்கு சன்னமான நிலை மிக மகத்தானது.

அந்நிலையையும் கடந்து நிற்பது மூல ப்ரக்ருதி & காலம் கடந்த சக்தி நிலை. இதையும் கடந்து நிற்பதே எல்லாவற்றுக்கும் ஆதாரமான, பிறப்பு இறப்பற்ற ப்ரம்மன். ரிக் வேதத்தில் படைப்பைப் பற்றி ஏழு ஸ்லோகங்கள் இருக்கின்றன. இன்று நாம் குவாண்டம் விசையியல் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள் அன்றே இந்த ஸ்லோகங்களில் காணப்படுவது ஆச்சரியம்.

இன்று விஞ்ஞானிகளால் பேசப்படும் நீக்கமற நிறைந்துள்ள ‘கரும் சக்தி’ யைப் பற்றியே இந்த சூத்திரமும் விளக்குகிறது.ஆகாசத்தத்துவத்தை கடந்து, படைப்பும் படைப்பற்ற நிலையும், பிறப்பும் இறப்புமற்றதாக ஆதியில் இருந்தது சக்திமயம் ஒன்றே. இது ‘கருமை சூழ்ந்த கருமை’ என மூன்றாவது ஸ்லோகத்தில் விவரிக்கப்படுகிறது. இன்று விஞ்ஞானிகளால் பேசப்படுவதும் இதுவே தான்.

இதோ இதனுடைய மொழி பெயர்ப்பு.
ஆதியில் ஏதுமில்லை, வாயுவும் ஆகாசமுமின்றி, எங்கு, எதைப் பாதுகாக்க எது சூழ்ந்திருந்தது?
காண முடியாத ஆழத்தில் நீர் இருந்ததா? இறப்பில்லை, இறப்பற்ற நிலையுமில்லை, இரவுமில்லை, பகலுமில்லை, எந்த அடையாளமுமில்லை. காற்றின்றித் தானே சுவாசித்த ஒன்றைத் தவிர வேறேதுமில்லை. எங்கும் கடல், கருமை சூழ்ந்த கருமை, சக்தி மயம். வெற்றிடத்தால் மட்டுமே மறைக்கப்பட்ட அது தன் சக்தியால் தானே உந்தப்பட்டு வந்துள்ளது. ஆதியில் மனதின் ஆதார அணுவான அன்பு எழுந்தது. ஞானத்தோடு தங்களுக்’குள்’ ஆராய்ந்த ஞானிகள் ப்ரம்மத்திற்கும் ப்ரம்மமற்றதற்கும் உள்ள உறவைக் கண்டறிந்தனர். ப்ரம்மத்தையும் ப்ரம்மமற்றதையும் வித்தியாசப்படுத்துவது ஒரு கோடு.
அதற்கு மேலென்ன உள்ளது, கீழென்ன உள்ளது? ப்ரம்ம விதையைத் தாங்கி நிற்கும் சக்திகள் கீழிருந்து உந்தப்பட்டு முன்னோக்கிச் செல்கின்றன.
யாருக்குத் தெரியும்? யார் கூற முடியும்? எப்போது பிறந்தது? தேவர்களும் வந்தது இதன் பின்பே எனில் இதன் பிறப்பை யார் கூற முடியும்? யாரிடமிருந்து உருவானதோ அவருக்குத் தெரியுமோ, தெரியாதோ!
இது கவனிக்கப்பட வேண்டியது & அவருக்குத் தெரியுமோ, தெரியாதோ! & ஏனெனில் அவருக்கும் இதில் பங்கு உள்ளது. மூன்று வித ஆகாச நிலைகள் விவரிக்கப்பட்டுள்ளது. நாம் வெளியில் பார்க்கும் பூதாகாசம், எண்ணங்களும் உணர்வுகளும் நிறைந்த சித்தாகாசம். சித்தாகாசத்தில் உள்ள ஒவ்வொரு அணுவும் ஞானத்தினால் நிரம்பப்பெற்றுள்ளது. கடந்த காலத்தில் நடந்தவை, அனைவரும் பேசியவை, எதிர் காலத்தில் நடக்க இருப்பவை, அனைவரும் பேச இருப்பவை & இவை அனைத்தும், சித்தாகாசத்தில் பதிவாகியுள்ளது. ஞான த்ருஷ்டி உள்ளவர்களும், நடப்பதை முன்கூட்டியே அறியும் ஆற்றல் உள்ளவர்களும் இந்த சித்தாகாசத்துடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களாக இருப்பர்.சித்தாகாசத்தை விட உயர்ந்தது, து£ய்மையான சைதன்ய சக்தி நிறைந்த, பருப்பொருள் போல் தோன்றும்சிதாகாசம். பருப்பொருள் போல் தோன்றுவது உண்மையில் பருப்பொருளே அல்ல, அது சக்தி மயம், ஞான மயம். சித்தாகாசம் படைப்பு என்றால், சிதாகாசம் படைப்பவன். அதுவே ப்ரம்மன், எல்லோரும் எல்லாமும் அதுவே. தியானத்தில் ஆழ்ந்து செல்லச் செல்ல, இந்த வெளிகளைக் கடந்து ஆன்ம தரிசனத்தைப் பெற முடியும்.

தியானத்தின் ஆரம்ப கட்டத்தில் பல எண்ணங்கள் மனதை ஆக்ரமிப்பதைப் பார்க்கலாம், பின் ஆகாச வெளியைப் போல் நிச்சலனத்தை அனுபவிக்கலாம், இதற்குப் பின் ஒரு சக்தி நிலையின் அனுபவம் வருகிறது, அதுவே சிதாகாசம்.

எனவே ப்ரம்மன் அல்லது இறைமை என்பது அவனோ அவளோ அல்ல. அது பரந்து விரிந்த ஆகாசத் தத்துவம், அனைத்தின் ஆதாரம், அனைத்துமே அதன் ப்ரதிபலிப்புத்தான். ஆகாசம்
போன்ற வெறுமையும் சமுத்திரம் போன்ற முழுமையுமான அற்புதக் கலவை.அது இருப்புமல்ல, இருப்பற்றதுமல்ல. ஹிக்ஸ் போஸன் கூறும் இறைத் துகளும் இது தானே?
இந்த உண்மை கடந்த கால விஞ்ஞானிகளாலும் எதிர்கால விஞ்ஞானிகளாலும் அறியப்படும் என்றும் கூறியுள்ளனர். கண்டறிபவருக்குப்பெயர் ‘ரிஷி’.இது விஞ்ஞானிகளால் அறியப்படாமலும் போகலாம். யாருக்குத் தெரியும், அவர்களுக்குத் தெரிய வருமா, வராதா என்று. இவ்வாறு புலனாய்ந்து இதை ‘அறிய முடியாதது’ என அறிந்து கொண்டனர்.‘கருமையால் சூழப்பட்டது, இதுவுமல்ல, அதுவுமல்ல, இருப்பது, இருப்பற்றது’ --& இந்தக் கூற்றுக்களின் அர்த்தத்தைக் கண்டு கொள்ள சமஸ்க்ருதம் தெரிந்த வேத விற்பன்னர்கள் வெகுவாக முயன்றனர்.

மனதைக் குழப்ப இவை போதும். ஹிக்ஸ் போஸனின் கண்டு பிடிப்பால் ‘படைப்பு கீதங்கள்’ என அழைக்கப்படும் இந்த ஸ்லோகங்களை உங்களால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது என நான் நினைக்கிறேன். இந்தப் படைப்பு கீதங்கள் ஏதோ கதையைப் போல் நேரடி அர்த்தங்கள் கொடுப்பதாக இல்லை. ‘இது’வுமல்ல, ‘அது’வுமல்ல எனப் புரியாத புதிர் போல உள்ளது. ஆகாச வெளி என்னவென்று தெரிந்தால் தானே அதைக்கடந்து நிற்க முடியும். ப்ரம்மன் ஆகாச வெளிக்கு அப்பாற்பட்டது. ஆகாச வெளியோ படைப்பு முழுதும் நிரம்பியுள்ளது.
விஞ்ஞானிகள் உண்மையை அறுதியிட்டுக் கூறுவதில்லை. அவர்கள் எப்போதுமே கூடுதல் ஆராய்ச்சிக்கு வழி வகுக்கின்றனர். வேதங்களும் அப்படியே செய்துள்ளன. யாரேனும் கண்டறியலாம், அறியாமல் போகலாம், அல்லவா? எனவே நாமும் வேதங்கள் கூறுவதை விஞ்ஞானியின் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும். வேதம் தெரிந்தவருக்கு விஞ்ஞானம் தெரிவதில்லை, அது கடினம் கூட. விஞ்ஞானம் தெரிந்தவருக்கு வேதங்கள் தெரிவதில்லை & இதுவே இடைவெளிக்குக் காரணம். விஞ்ஞானிக்கு வேத ஞானம் கற்றுக்கொள்வது கடினமல்ல. அது மிக உபயோகமாக இருக்கும்.
கே: இன்ன கர்மா இன்ன பலனைக் கொடுக்கும் என உள்ளதா-? உதாரணமாக நாம் யார் கண்ணையாவது குத்தியிருந்தால் நமக்குக் கண் நோய் வந்து சேருமா?
ஸ்ரீ ஸ்ரீ: அல்ல அல்ல. கர்மாவின் ஆழத்தை அறிய முடியாது. அதில் எந்தப் பயனும் இல்லை, குப்பையைக் கிளறி & இது காலையில் சேர்த்தது, இது மதியம் சேர்த்தது, இது நேற்று சேர்த்தது, இது மூன்று நாள் முன் சேர்த்தது என ஆராய்வதில் ஏதாவது பலன் இருக்க முடியுமா? எந்தக் கர்மாவாக இருந்தாலும் அதை ஞானம் எரித்து விடும். எனவே இது பற்றிய கவலையை விடுத்து முன்னேறிச் செல்.
கே: ஞானிகள் புலன்களைக் கட்டுப்படுத்தச் சொல்கிறார்களே, அப்படியிருக்கையில் கடவுள் ஏன் புலன் நுகர் பொருட்களைப் படைத்தார்?
ஸ்ரீ ஸ்ரீ: புலன்களைக் கட்டுப்படுத்தும் போது தான் அவற்றை மேன்மையான முறையில் வெளிப்படுத்த முடியும். புலன் நுகர் பொருட்களை அனுபவிக்கும் திறன் நமக்குக் குறைவு. ஆனால் அந்த அனுபவத்திற்கான ஆசை அளவற்று உள்ளது. இது ஒரு வித சமச்சீர்மை யின்மையைத் தோற்றுவிக்கிறது. அப்போது கவனம் அவசியம். த்ருப்தியின்றி சாப்பிட்டுக் கொண்டேயிருந்தால் உடலுக்குக் கெடுதல் தானே விளையும். சிறிதளவு உட்கொண்டால் சக்தி கிடைக்கும், கொஞ்சம் அதிகம் சாப்பிட்டால் களைப்படைகிறோம் அல்லவா?
அனுபவம் இருக்க வேண்டியது தான், ஆனால் அதையும் கைவிடக் கற்றுக்கொள்ள வேண்டும். மூச்சை உள்ளிழுத்தால் மட்டும் போதாது, வெளிவிடவும் கற்றுக்கொள்ள வேண்டும். சம்பாதித்தால் தானே செலவு செய்யலாம்? நாக்கிற்கு நல்ல சுவையளிக்கலாம், கண்ணிற்கு குளுமையான காட்சிகள் தரலாம், காதிற்கு இன்ப ஒலிகளை அளிக்கலாம். இவையெல்லாம் அத்து மீறினால் களைப்புறும். எனவே இவற்றை அனுபவிக்கும் அதே சமயம் தியானத்தில் ஆழச் சென்று, சக்தியைத் தக்க வைத்துப் பேரின்பத்தைக் கண்டு கொள்ள வேண்டும்.
கே: கஜூரா கோவிலைப் பற்றியும் தாந்த்ரீக முறைகள் பற்றியும் விளக்குங்களேன்.
ஸ்ரீ ஸ்ரீ: தாந்த்ரீகம் என்பது திறமையுடன் ஆற்றும் ஒரு செயல்முறை. மந்திரம், யந்திரம், தாந்த்ரீகம் என மூன்று வழிகள் பேசப்படுகின்றன. மந்திரம் என்பது ஒலி, யந்திரம் என்பது வரை படம் அல்லது தேகத்தை நிறுத்தி வைக்கும் நிலை. தாந்த்ரீகம் என்பது இந்த இரண்டையும் கெட்டிக்காரத்தனத்துடன் ஒன்று சேர்ப்பது, பண்டைய காலத்தில் நமது ரிஷிகள் உடல் உறவு முறைகள் பற்றிக் காம சூத்திரம் என்னும் நு£லை எழுதி வைத்துள்ளனர். அதில் தேகத்தை நிறுத்தி வைக்கும் பல்வேறு நிலைகள் மற்றும் விதிகளை அதாவது தாந்த்ரீக முறைகளை, மனதின் தீவிர ஆசைகளை நீக்கும் நோக்கத்துடனே விளக்கியுள்ளனர். இவை ஏன் கோவிலின் வெளி ப்ராகாரத்தில் காணப்படுகின்றன? க்ஷேத்ராடனம் செல்பவர்கள் முதலில் கோவிலின் வெளி ப்ராகாரத்தையே பார்க்கின்றனர். அங்குள்ள சிலைகளில் ஏதாவதொன்று நம்மைக் கிளர்ச்சியடையச் செய்தால் நாம் அதையே பார்த்துக் கொண்டிருப்போம்.

அத்தருணத்திலேயே அக்கிளர்ச்சி மடிந்து மனம் ஆகாசம் போல் பரந்து விரிந்த நிலைக்குச் சென்று உள்ளொளியை அதாவது உள்ளிருக்கும் சூரியனைக் காண முடிவதைப் பார்க்கலாம். கஜூராவும் சூரியனது கோவில் தான்.
சூரியனோ வெளியில் இருப்பவர், அவரை ஏன் கோவிலின் உள்ளே சென்று பார்க்க வேண்டும்? சூரியன் வெளியில் தான் இருக்கிறார், ஆனால் சைதன்யமாகிய, ஆன்மாவாகிய, பரம் பொருளான சூரியன் உள்ளில் இருக்கிறாரல்லவா?
உள்ளிருக்கும் சூரியனைக் காணத் தடையாயிருப்பது எது?
புலன் நுகர் வஸ்துக்களால் உண்டாகும் கிளர்ச்சிதானல்லவா? வெளியில் உள்ள புலன் நுகர் வஸ்துக்களின் பின் செல்லும் புலன்கள் நமது உள் நோக்கிச் செல்ல வல்ல பிரயாணத்தைத் தடை செய்கின்றன.
எனவே கோவிலின் வெளியில் உள்ள இச்சிலைகள் உடல் உறவுக்கான நமது தீவிர இச்சையை குணமாக்க வல்ல சிகிச்சை முறையைப் போல் பயன் படுகிறது. உடல் உறவுக்கான தீவிர இச்சை என்பது ஒரு பழைய வியாதி. அதை வியாதி என்று கூட சொல்ல முடியாது, மரபு முறையாக அடையப் பெற்ற ஒன்று. அதைத் திறமையுடன் கடந்து ஆன்ம ஒளியைக் காணவேண்டும்.
அதற்குக் கஜூரா கோவிலில் காணப்படும் சிலைகள் உதவி செய்கின்றன. அவற்றைக் காணக் காணக் கிளர்ச்சி மறைந்து மனம் அமைதி பெறுவதைப் பார்க்கலாம்.
தாந்த்ரீக முறைகள் கைதேர்ந்த நிபுணரின் கீழ் தான் பயிற்சி செய்யப்பட வேண்டும், கத்தி முனையில் நடப்பதைப் போல் அபாயமானது. மிக்க கவனம் வேண்டும்.யோக சாதனையே எல்லாவற்றிலும் சிறந்தது. மனதை அமைதிப்படுத்தத் தாந்த்ரீக முறையை யோக சாதனைகளில் ஈடுபடுத்துவது ஒரு செயல்முறை.
கே: குருஜி, என் மனைவியுடன் என் உறவு முறை மோசமாகிக் கொண்டு வருகிறது, சரியான புரிதலில்லை, நம்பிக்கையில்லை, உங்கள் புத்திமதி வேண்டும்.

ஸ்ரீ ஸ்ரீ: வாழ்க்கையில் கடினமான தருணங்கள் வரும் போகும், அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம், குழப்பான முரண்பாடான தருணங்களில் பொறுமையைக் கடைபிடிக்கவும்.