உங்கள் வாழ்வின் இறுதிச் செயலாக இது இருக்குமா?

24 ஜனவரி 2013 பெங்களூர், இந்தியா

கே: குருதேவ்நம் வாழ்வின் இறுதித் தருணத்தில் நாராயணனின் நாமத்தை உச்சரிப்பது ஒருவருக்கு முக்தியை அளிக்கும் என்று சொல்லப்படுகின்றது. நாம் மேற்கொண்டு செல்லவேண்டிய பாதையை நிர்ணயிப்பதில் நம் வாழ்வின் இறுதிச்செயல் தான் மிகவும் வலிமையானது என்பது உண்மையா?

குருதேவ்: ஆம்.உண்மை தான். இறக்கும் தருவாயில் தான் நம் மனம் உடலை விட்டுப் பிரிகின்றது. ஆகவே,அந்த நேரத்தில் மனதில் என்ன பதிவாகி உள்ளதோ அதுவே அடுத்த பிறவிக்கு காரணமாகின்றது. இது அறிவியல் பூர்வமான உண்மை. கவனித்துப் பார்த்தால், நீங்கள் காலையில் எழுந்தவுடன், உங்களது முதல் எண்ணம் நீங்கள் உறங்கப்போவதற்கு முன்னர் உங்களுக்கிருந்த அதே எண்ணமாக இருக்கும்.

பொதுவாகவே உங்கள் மனம் என்று ஏதேதோ எண்ணங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுவதால் இறக்கும் தருணத்தில் நாராயணன் நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்ற நினைவு உண்டாவதில்லை. ஆகவே தான் நம் முன்னோர்கள் இறைவன் நாமத்தை எல்லா நேரமும் உச்சரிப்பதன் மூலம் இறைவனை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள். 

ஒவ்வொரு இரவும் உறங்கப் போவதற்கு முன்னும், குளிக்கும் போதும், உணவு உண்ணும் போதும்,  எல்லா நேரங்களிகளிலும் இறைவனை நினைவு கொள்ளுங்கள். உணவிற்காக இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். புதிதாக எதைத் துவங்குவதற்கு முன்னரும் அது நல்ல ஆரம்பமாக இருக்க வேண்டுமென்று இறைவனை நினையுங்கள். நம் முன்னோர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக இதை ஒரு வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு கடை புதிதாக திறக்கும் போது இறைவன் நாமத்தை நினைவு கொள்வதையே முதல் வேலையாக வைத்திருந்தனர்.  புதியதாக ஏதாவது வாங்க வேண்டுமென்றாலும் முதலில் இறைவனை வணங்கிய பிறகே துவங்குவார்கள்.

இன்றும் நாம் இவ்வாறு செய்கிறோம் இல்லையாதேர்வு எழுதப் போவதென்றாலும் தேர்வில் கேள்விகள் எளிமையாக இருக்க வேண்டுமென்றும் நன்றாக விடை எழுத வேண்டுமென்றும் இறைவனை வேண்டுகின்றோம். குழந்தைள், இளைஞர்கள், முதியவர்கள் என்று அனைவரும் இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர்.உங்கள் பிரார்த்தனையை பயத்தினால் செய்யாதீர்கள். இறைவன் மீதுள்ள அன்பினாலும் மிக ஆழமான நன்றி உணர்வாலும் செய்யுங்கள். மிகுந்த அன்பினாலும் நம்பிக்கையுடனும்  நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது தான் நீங்கள் மலர்வீர்கள். 
ஏதாவது ஒரு புது வேலையை துவங்குவதற்கு முன் இறைவனை நினைப்பதில் என்ன கஷ்டம்?  


நீங்கள் உங்களுக்கு எது பிடித்திருக்கின்றதோ அந்த நாமத்தை சொல்லி இறைவனை பிரார்த்திக்கலாம். நாராயணா என்றோ, ஓம் நமசிவாய அல்லது ஜெய் குருதேவ் உங்களுக்கு எது பிடித்திருக்கின்றதோ அந்த நாமத்தை உச்சரித்து இறைவனை வணங்கலாம். அப்படி இல்லையென்றால், குளிக்கும் போது, உணவு உண்ணும் போது என்று எல்லா நேரங்களிலும் அர்த்தமற்ற பாடல்களை பாடிக்கொண்டிருப்பீர்கள். எனக்கு நேரம் இல்லாததனால் நான் இன்றைய நவீன பாடல்களை கேட்டதில்லை.ஆனால் புது பாடல்கள் பல அர்த்தமே இல்லாதவைகளாக இருக்கலாம். இப்பொழுது மிகவும் பிரபலமாகி இருக்கும் பாடல் "கொலை வெறிடி" என்பதன் பொருள் "யாரையாவது கொலை செய்ய வேண்டும் என்று ஆசை" என்பது. இது போன்று அர்த்தமுள்ள பாடல் ஒரு நல்ல பாடலாஇறைவன் நாமத்தை சொல்லுங்கள். ஓம் என்னும்  ஓங்காரத்தையோ, ஓம் நமசிவாய என்னும் நாமத்தையோ எது விருப்பமோ அதை பக்தியோடு சொல்லுங்கள்.

நான் எந்த பாடலையும் மட்டமாகச் சொல்லவில்லை. நீங்கள் விரும்பினால் "கொலைவெறி" பாடலும் பாடலாம். தவறில்லை. ஆனால் இது போன்ற சில பாடல்களின் கவர்ச்சிகரமான  இசை அந்த வரிகளை மீண்டும் மீண்டும் உங்கள் மனதில் ஓடவிட்டு உங்களை பாதிக்கலாம். நல்ல வேளையாக பலருக்கு இந்த பாடலின் பொருள் புரியவில்லை. அது வேறு மொழியில் உள்ளது. அவர்கள் இந்த வரிகளின் பொருள் புரிந்து  பாடினால் பிரச்சினைகள் உண்டாகலாம்.  

நீங்கள் ஒரு பஜனையின் பொருள் புரிந்து அதை நன்றியுணர்வோடும் பக்தியோடும் பாடும் போது அது உங்கள் வாழ்வில் அளவற்ற பலன்களைத் தருகின்றது. ஒவ்வொரு வார்த்தையும் அதற்கென தனி அதிர்வுகளைக் கொண்டுள்ளது. நீங்கள் நல்ல வார்த்தைகளை பேசும் போது அவற்றிலிருந்து வரும் அதிர்வுகள் மனதையும் வாழ்வையும் தூய்மைப்படுத்தும் சக்தியைப் பெற்றுள்ளன. நேர்மறை அதிர்வுள்ள வார்த்தைகளை பேசும் போதும் உச்சாடனம் செய்யும் போதும் மனம் உடல் இரண்டுமே சக்தி பெறுகின்றன. 

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு முறை நாம உச்சாடனம் செய்யுங்கள். காலையில் உணவு உட்கொள்வதற்கு முன் இறைவன் நாமத்தை உச்சரியுங்கள். ஒவ்வொரு  வேளையும் உணவு உண்பதற்கு முன் "அன்னதாதா  சுக்ஹி பவ"(எனக்கு இந்த உணவை அளித்தவர் அமைதியும் வளமும் அருளப் பெறுவாராக) என்னும் மந்திரத்தை உச்சரிக்கும்படி நான் எல்லோருக்கும் சொல்லி வருகின்றேன். இந்த உணவை அளித்தவர் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டுமென்று உங்கள் இதயத்திலிருந்து வாழ்த்துங்கள். இதன் மூலம் நீங்கள் வீட்டில் இந்த உணவை சமைத்து பரிமாறுகின்ற பெண்மணி மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்கின்றீர்கள். உணவு தானியங்களை கொள்முதல் செய்து உங்கள் வீட்டிற்கு வழங்கிய வியாபாரியை வாழ்த்துகின்றீர்கள். மேலும் இந்த உணவை அளித்த பயிர்களை வளர்த்து விவசாயம் செய்த விவசாயியை வாழ்த்துகின்றீர்கள், இவ்வாறு உணவை அளித்த அனைவரையும் வாழ்த்துவது எவ்வளவு நல்ல விஷயம்அதேபோல் நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் முதல் வேலையாக 'ஓம் நமோ நாராயணாஅல்லது 'ஓம் நமசிவாயஎன்ற மந்திரத்தை உச்சரியுங்கள். ஏதாவது தவறு நேர்ந்துவிட்டால், "ஹே ராம்" என்று சொல்லுங்கள்.

யாராவது இறந்து விட்டால் "ராம நாம் சத்ய ஹை" (பகவான் ராமனின் நாமம் ஒன்றே  இறுதியான உண்மை) என்று  உச்சாடனம் செய்யுங்கள். இறைவன் நாமத்தை நினைவு கொள்வதில் என்ன சிரமம்எந்தவித சிரமும் இல்லை.

நீங்கள் காருக்குள் செல்லும்போது ' ஓம் நமோ நாராயணா' என்று சொல்லிவிட்டு காரில் உட்காருங்கள். அதே போல் காரை விட்டு இறங்கும் போதும் இறைவன் நாமத்தைச் சொல்லிவிட்டு பிறகு இறங்குங்கள். இவ்வாறாக இறைவன் நாமத்தை உச்சரித்தவண்ணம் இருப்பது உங்களுக்கு ஒரு வழக்கமாகி விடும்இல்லையாஅதனால் நீங்கள் இறக்கும் தருவாயிலும், உங்கள் உடலை விட்டு உயிர் பிரியும்  இறுதி நேரத்திலும் , நீங்கள் இறைவன் நாமத்தை உச்சரிப்பீர்கள் ஏனென்றால் அந்த நேரத்தில் அது தானாகவே இயல்பாகவே உங்களுக்கு ஏற்படும். இது உங்களை பெருமளவில் மேம்படுத்தும்.

கே:  ஆன்மீகப் பாதையில் நான் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கின்றேன் என்று அறிய விரும்புகின்றேன். இப்பொழுதெல்லாம் நான் உங்கள் காரின் பின்னால் ஓடி வருவதில்லை.  இதற்கு நான் ஆன்மீகத்தில் முன்னேறி உள்ளேன் என்று அர்த்தமா அல்லது உங்களிடம் என் பக்தி குறைந்துவிட்டது என்று அர்த்தமா?

குருதேவ்: அது உங்களுக்குத்தான் தெரியும். நீங்கள் இந்த ஆன்மீகப் பாதைக்கு வந்து விட்டீர்களென்றால் உங்களிடம் முன்னேற்றம் மட்டுமே இருக்கும். நீங்கள் முன் நோக்கி மட்டுமே செல்வீர்கள். 

நீங்கள் என் காரின் பின்னால் ஓடி வருகின்றீர்களா இல்லையா என்பதைப் பொறுத்து உங்கள் முன்னேற்றத்தை அளவிடாதீர்கள். நீங்கள் பார்க்க வேண்டியதெல்லாம் நீங்கள் எவ்வளவு தூரம்  உங்களது மையத்தை அடைந்துள்ளீர்கள் என்பது தான். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் அதே நிலையில் ஸ்திரமாக சலனமின்றி நில்லுங்கள். உங்கள் மனதை உங்களுக்குள் கொண்டு வாருங்கள். நீங்கள் எவ்வளவு நடுநிலையில் நிற்கின்றீர்களோ அவ்வளவு முன்னேறி இருக்கின்றீர்கள்.  

நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியதெல்லாம் உங்களிடம் பக்தியில் எந்தக் குறையும் இல்லை.  உங்களிடம் போதிய  அளவு பக்தி இல்லை என்ற எண்ணம் கூட உங்களுக்கு வேண்டாம்.  சில சமயங்களில் பக்தி மறைந்து காணப்படும்.  ஆனால் அது கொஞ்ச நேரத்திற்கு மட்டுமே.  விரைவில் அது வெளிப்படும்.

நம் உணர்வுகள் எப்போதும் ஒரே நிலையாக இருப்பதில்லை.அதே போல் நம் பற்றுதலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஏற்ற இறக்கங்கள் இருக்கத் தான் செய்யும். உணர்வுகள் கல் போன்றவை அல்ல. அவை நீர் போன்றவை. தண்ணீரில் சிற்றலைகள் எழும்பி மறைவதைப் போல் நம் உணர்வுகளும் மேலெழுந்து பின்னர் அடங்கி விடும். மீண்டும் எழும்பி மறையும். இதுவே இயற்கை. எனவே தான் அன்பும் ஏக்கமும் ஒன்றிணைந்து செல்கின்றன. சில நேரங்களில் நீங்கள் அளவுகடந்த ஏக்கமும் தவிப்பும் உணர்வீர்கள். சில நேரங்களில் அளவில்லா அன்பை உணர்வீர்கள். மீண்டும் நீங்கள் ஏக்கத்தையும் பிறகு மீண்டும் மிகுந்த அன்பையும் உணர்வீர்கள். இது வாழ்க்கையில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும். 
கே: குருதேவ்! தாங்கள் மூன்று வகையான பக்தர்களைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். அது போன்று பல்வேறு சுவையுள்ள ஆசான்களும் உள்ளனரா?
குருதேவ்: ஆம். நிச்சயமாக.! வரலாற்றில் பல்வேறு விதமான குருமார்களைக் காண்கிறோம். உண்மையில், ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்களாகவும், வேறுபட்டவர்களாகவும் உள்ளனர். சிலர் ரஜஸ்விக், சிலர் தமஸ்விக் வேறு சிலர் சத்விக் குணமுள்ளவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.
1980களில், எனக்கு 23 அல்லது 24 வயதிற்கும் போது, நான் டெல்லியின் புறநகர் பகுதியில் ஒரு துறவியை சந்தித்தேன், அவர்,  24 காரட் பொன்னினால் ஆபரணம் செய்ய முடியாது. அத்துடன் சிறிது செம்பு கலந்தால் தான் ஆபரணம் செய்யமுடியும். அது போல, நீயும் உன்னிடத்தில் சிறிது உலோகம் கலந்து கொள்ள வேண்டும். நீ 24 காரட் தங்கமாக இருந்தால் மக்களுக்குப் பயன்பட முடியாது என்று கூறினார்.
நான்'' இல்லை பாபா ! நான் 24 காரட் தங்கமாகவே இருக்க விரும்புகிறேன். எது நடக்கிறதோ நடக்கட்டும்" என்றேன். அவர், “நீ சிறிது தந்திரம், மந்திர மாயம் கற்றுக்கொண்டால் அதன் மூலம் சில மாயா ஜாலங்கள் செய்து அதிகமான புகழடையலாம்" என்றார். நான் "எனக்கு இவற்றை செய்ய விருப்பம் இல்லை. இவைகள் உயர் நிலையடைய வழி வகுக்காது" என்றேன்.
ஆகவே, மாயஜால வித்தைகள் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அது சிறிது காலமே நீடித்திருக்கும். பின்னர் எந்த ஆவிகள் மூலம் இவ்வித்தைகள் செய்யப்படுகிறதோ அவற்றாலேயே தீங்கு ஏற்படும். இந்த விதமான சக்தி நீடித்திருக்காது, அதனால் தான், ஒத்திசைந்த சத்விக் ஞானம் என்பது சிறந்ததுநீடித்திருக்கும். தமோகுணமும், ரஜோகுணமும், இதில் கிடையாது. இதன் தாக்கம் நீடித்தது, உயர்நிலைக்கு வழி வகுப்பது. நான் சந்தித்த இந்த துறவி அப்போது 70 வயதுகளில் உள்ள ஒரு நல்ல துறவி. என்னிடம் அவர் கூறியதும் ஒரு ஆலோசனை தான். நான் மறுத்ததும் அவர் அதைப் பாராட்டி " சரி! மிக்க நன்று" என்று கூறினார். ஒருவேளை, நான் இது போன்ற எதேனிலும் ஈடுபட  சபலப்படுகிறேனா என்றும் சோதித்திருக்கலாம்.
கே: நாம் ஒருவரை முதல் முறையாக சந்திக்கும் போது, ஒரு கருத்து மதிப்பீடு ஏற்படுகிறது. சிலரைப் பார்த்தவுடனேயே நமக்குப் பிடித்து விடுகிறது, சிலரை எந்தக் காரணமும் இன்றியே பிடிக்காமல் போகிறது. இது ஏன் குருதேவ்?
குருதேவ்: அது அப்படி தான். இந்த உலகமே அதிர்வுகளால் இயங்குகிறது. நாம் அனைவரும் அதிர்வுகளாலேயே இயங்குகிறோம். சிலரின் அதிர்வுகள் மனதிற்கு உகந்ததாக இருக்கின்றன, நமது  ஏற்புணர்வும் சுலபமாக இருக்கின்றது. ஆனால் சிலரின் அதிர்வலைகள் வெறுப்பூட்டுவதாக  அமைந்து விடுகிறது.
நீங்கள் மையம் கொண்ட மனதுடன் இருக்கும்போது யாரையும் வெறுப்புணர்வுடன் கூடிய அதிர்வலைகளில் பார்க்கத் தோன்றாது. உங்கள் மைய நிலையையும் யாராலும் அசைக்க முடியாது. அதுதான் மிகச் சிறந்த நிலை. ஆசைகள், வெறுப்பு, எதிர்ப்பு, கட்டாயம்,கவர்ச்சி இவை ஏதுமற்ற நிலை. அந்நிலையில் எல்லாமே இனிமையாக இருக்கும்.எல்லோருடனும், எல்லாவற்றிலும் ஒத்திசைந்து இயங்க முடியும். இதுவே உள்ளார்ந்த பேரின்பம்.
கே: குருதேவ்! உறக்கத்தைப் பற்றிய அறிவு, விடுதலையை அளிக்கும் என்று கூறியிருக்கிறீர்கள். இதன் பொருள் என்ன?
குருதேவ்: உறக்கத்தையும் கனவுகளையும் பற்றிய அறிவு நிலை உங்களை ஒரு  விதமான சமாதி நிலைக்கு அழைத்துச் செல்லும். பதஞ்சலியின் யோகசூத்ராவில் செயல் நுட்பமாகக்  கூறப்பட்டுள்ளது. மகரிஷி பதஞ்சலி "' ஸ்வப்னநித்ராஞ்சனாலம்பனம் வாஎன்கிறார். பல்வேறு விதமான சமாதி நிலைகளில், இது ஒரு வகையான சமாதி என்பதாகும். நீங்கள் உணர்ந்து பார்த்தால், உறக்கம் வருகின்ற நிலையில், விழிப்பும் உறக்கமும் இல்லாத நிலையில் ஒரு ஒளிர்முனை அளவு நேரம் மனம் நிச்சலனமாக இருக்கும்.அந்த ஒளிர்முனை அளவு என்பது மிகுந்த ஆற்றலும், உயிர்த்துடிப்பும் உள்ளது. அதைத் தான் பதஞ்சலி கூறுகிறார்.
மேலும், நீங்கள் கவனித்தீர்களானால், உறங்குவதற்கு சற்றே முன்னால் அல்லது விழித்தவுடன் - முழு உறக்கமும், முழு விழிப்பும் அற்ற நிலையில் உள்ள இடைவெளியில், மிக அழகான,இதமான,ஒரு வித அமைதி நிலை ஏற்படுவதை உணரலாம். அதைத்தான் இங்கு கூறப்பட்டிருக்கிறது.
கே: குருதேவ்! ஆசையினால் ஏக்கம் உருவாகும் போது  சிலசமயம், கோபம் மற்றும் விரக்தி ஏற்படுகிறதே? இதை எவ்வாறு கையாள்வது?
குருதேவ்: ஏக்கம் என்பதை உள்நிலைப்படுத்த ஆழ்ந்த தியானம் செய்ய வேண்டும்.அல்லது ஏதாவது ஆக்கபூர்வமான செயலில் ஈடுபடலாம்.கவிதைகள், கட்டுரைகள் எழுதலாம். எழுதுதல் என்பது மிகவும் உதவும். பல படைப்புகள் -  ஓவியங்கள், சங்கீதம்,நாடகங்கள் மற்றும் இலக்கியங்கள் ஆகியவை இந்த ஏக்க நிலையின் விளைவாகவே உருவானவை. எனவே, உங்கள் ஆழ்ந்த ஏக்கங்களை படைப்பாற்றலில் செலுத்துங்கள்அல்லது ஆழ்ந்த தியானம் செய்யுங்கள்.
கே: குருதேவ்! அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறதே? அதிகாரத்தைக்  கையாளும் வழி என்ன என்று கூற முடியுமா?
குருதேவ்: உங்கள் நோக்கம் சரியானதாக இல்லாதபோது அதிகாரம் சீர்கேடிற்கு வழி வகுக்கிறது. நோக்கங்கள் சரி இல்லாத போது சீர்கேடான முறையில் அதிகாரத்தை அடைய விரும்புவீர்கள்.
சிலர் அதிகாரம் விஷம் போன்றது என்கிறார்கள்.அதிகாரத்தை உங்கள் சுய நலனுக்கு பயன் படுத்திக்கொள்ளும் போது அது விஷம் என்று நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதிகாரத்தை தொண்டிற்காக பயன்படுத்தும் போது அது ஒரு கருவி ஆகிறது. மக்களுக்குத் தொண்டு செய்யும் நிலையில் அதிகாரம் ஒரு கருவியே.
கே: குருதேவ் ! எல்லாம் சுமுகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது நன்றி உணர்வுடன் இருக்க முடிகிறது. அவ்வாறு இல்லாமல் இருக்கும் போது எப்படி நன்றி உணர்வுடன் தங்கள் அருளை உணர்வது?
குருதேவ்: உங்கள் வாழ்கையில் முன்பு  எவ்வாறு சிரமமான காலங்கள் கடந்து சுலப நிலை ஏற்பட்டது என்று நினைவு படுத்திப்பாருங்கள். எத்தனையோ கஷ்டங்களைக் கடந்திருக்கிறீர்கள். அவை உங்களுக்கு தைரியத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.
கே: குருதேவ்! தொழில்நுட்ப இயல்வசதியை அளிக்கிறது. ஆனால் சூழலை மாசு படுத்துகிறதே? வசதியா மாசுக்கட்டுப்பாடா என்கிற நிலையில் வளர்ச்சிக்கு எதைச் சுட்டிக்காட்டுவது?
குருதேவ்: தொழில்நுட்பம் என்பது எப்போதும் சூழலை மாசுபடுத்துவதாக இருக்காது. தற்போது  பல தொழில்நுட்பங்கள் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் அமைந்துள்ளன. ஆகவே, தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தலாம், ஆனால் சுற்றுச்சூழலையும் காக்க வேண்டும். ஏனெனில் சுற்றுச்சூழல் என்பது மிக முக்கியமானது.
கே: குருதேவ்! எந்த ஒரு உறவிலும் ஒருவர் நம்மை வழங்கப்பட்டதாகக் கருதிக் கொள்ளாமல் இருக்குமாறு எவ்வாறு உறுதி செய்து கொள்வது?
குருதேவ்: கவலைப் படாதீர்கள். இது இயல்பானது தான். ஏனெனில், உங்களை தன்னை சார்ந்தவராக எண்ணுவதால், விருந்தினர் போன்ற மற்றவர்களைக்  கவனிப்பது என்பது நிகழ்கிறது. குடும்பத்தில் ஒருவரான உங்களிடம் '' காப்பிகுடித்தீர்களா ?இப்போது சாப்பிடுகிறீர்களா என்றெல்லாம் ஏன் கேட்க வேண்டும் ? அது இயல்பு நிலை அல்ல.
இதுபோன்ற கேள்விகளை அதிகமாகக் கேட்கும்போது உங்களுக்கே ஏன் இவ்வாறு ஏன் மீது தனிக்கவனம் செலுத்துகிறார்கள்?ஏதோ சரியில்லை' என்று சந்தேகப் பட ஆரம்பிப்பீர்கள்.
அன்று ஒருவர், "குருதேவ்! என் மனைவியிடம் சற்று அதிகக்கவனமும் அன்பும் காட்டினால் அவள் சந்தேகப்படுகிறாள். ஏதோ தவறு செய்திருக்கிறீர்கள். நீங்கள் உண்மையாக இல்லை என்கிறாள். சரியென்று சாதரணமாக இருந்தால், தன்னை அலட்சியப்படுத்துவதாக நினைக்கிறாள். என்ன செய்வது குருதேவ்" என்று கேட்டார். ஆக, ஒருவர் உங்களை சந்தேகிக்க வேண்டும் என்றால் எப்படி ஆனாலும் சந்தேகப்படலாம். மேலும் அவர், “ எனக்கு மிக சிரமமாக உள்ளது. அரை மணி நேரம் தாமதமாக வந்தாலும் ஒரு விசாரணைக்குழு போன்று கேள்விகள் கேட்க ஆரம்பிக்கிறாள். எங்கு போனாய்? அலுவலகத்தை விட்டு எத்தனை மணிக்கு கிளம்பினாய்? என்ன நடந்தது? என்றெல்லாம் கேள்விக்கணைகள்’’ என்றார்
அதனால் தான், நான் நமது மனதைக் கையாளத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறேன். உங்கள் மனம் உங்கள் மீது பல சூழ்ச்சிக் குறும்புகளைச் செய்யும். உங்கள் கட்டுக்குள் அடங்கி இருந்தால் உங்கள் மனமே உங்கள் நண்பன். நீங்கள் உங்கள் மனதின் கட்டுக்குள் இருந்தால் உங்கள் மனமே உங்கள் விரோதி.
கே: குருதேவ்! கிருஷ்ணபரமாத்மா எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் சண்டைகளும் சச்சரவுகளும் பெருகும். தாங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்களோ அங்கு, வேறுபாடுகள் மறைகின்றன.
குருதேவ்: ஆம்! ஒரு இடத்திற்கு நான் வரப்போகும் செய்தி தெரிந்தவுடனேயே அங்கு சண்டைகள் ஆரம்பித்து விடுகின்றன. ஒருவர் குருதேவ் என் காரில்தான் வருவார் என்பார்; மற்றொருவர் என் வீட்டில்தான் தங்குவார் என்பார்; வேறொருவர் என் வீட்டில் தான் உணவருந்துவார் என்பார். இவ்வாறு சண்டைகள் துவங்க ஆரம்பிக்கும். ஆயின், என் வருகைக்குப் பிறகு அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் மனம் மகிழ்வதை நான் உறுதிப்படுத்தி கொள்வேன்.
கே : என் திருமண வாழ்கை பந்தத்தை வெறும் கணவன் மனைவி என்கிற நிலையிலிருந்து அடுத்த மேல் நிலைக்கு எவ்வாறு எடுத்துச் செல்வது?
குருதேவ்: இருவரும் இணைந்து செல்ல வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டும். சில சமயம், ஒருவருக்கு திருமண வாழ்கையில் ஈடுபாடு குறையலாம்; மற்றவருக்கு ஈடுபாடு இருக்கலாம். அப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இவ்வாறு நடக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. அப்போதும், ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து வாழ்வில் இணைந்தே செல்ல வேண்டும்.