செவ்வாய் கிழமை, 19 ஜனவரி 2016,
பெங்களூரு இந்தியா
திருமணமான சிலர் மகிழ்வின்றி இருக்கின்றனர்,
திருமணமாகாத சிலரும் மகிழ்வின்றி இருக்கின்றனர். திருமணமான சிலர் ஆனந்தமாக
இருக்கின்றனர், ஆகாதவர்களும் ஆனந்தமாக இருக்கின்றனர். இரண்டாவது வகையில் இருப்பதே சிறந்தது. திருமணமோ இல்லையோ நீங்கள்
மகிழ்ச்சியாக நடு நிலையில் இருந்தால் ஞான ஒளிக்கு அருகாமையில் இருக்கிறீர்கள்.
உலக வாழ்க்கை
நடவடிக்கைகளில் ஈடுபட்டு கட்டுண்டு இருக்கும் போது
எவ்வாறு மனதைத் தளையிலிருந்து விடுபட்டு வைத்துக் கொள்வது?
அதைத் தளை என்று எண்ணினாலே அது தளையாகும். அதை ஓர் தொண்டாகக் கருதினால் அது தளை போன்று
தோன்றாது. ஒருவர் உங்களிடம் இதைச் செய்தேயாக வேண்டும் என்று கூறினால் அது உங்களைக்
கட்டுப்படுத்துவது போன்றாகும். ஆனால் அதையே
நீங்களாகவே இதயபூர்வமாக விரும்பிச் செய்தால் அதையே செய்து கொண்டிருப்பீர்கள்.
நமது ஆஸ்ரமத்தில் நாங்கள் சிலரை ஓய்வெடுக்கும்படி
கூற வேண்டும். இப்படிப் பலரிடம் கூற வேண்டியுள்ளது ஏனெனில் அவர்கள் ஆத்ம திருப்தியுடன்
இடைவிடாது பணி புரிகின்றனர். சிலர் எதுவுமே செய்வதில்லை. ஆகவே ஒரே தீர்வு அனைவருக்கும்
ஏற்புடையதாக இருக்காது. சிலரை ஏதேனும் பணி செய்யுமாறு கூற வேண்டும். சிலரிடம் பணியினை
நிறுத்தி ஓய்வெடுக்குமாறு கூற வேண்டும். தளையுண்டு உணர்வதற்கும் விடுதலையாக
உணர்வதற்கும் காரணம் மனமேயாகும். மனம் மகிழ்ச்சியாக இருந்தால், எதைச் செய்தாலும்
மகிழ்ச்சியாகவே இருக்கும். ஆனால் மன வருத்தம், மற்றும் மனப்பாரம் இருக்கும்போது எதுவுமே
சுவாரஸ்யமாக இருக்காது. பிறருக்கு ஆனந்தத்தையோ அல்லது வருத்தத்தையோ உங்களால் அளிக்க
முடியாது. யாருக்கு என்ன விதியோ அதை அவர்கள் அடைவார்கள். ஆனால் அது பிறருக்கு மகிழ்ச்சியை
எடுத்து வருவதைத் தடுக்க முடியாது. உங்களுடைய பங்கில் முயற்சிகள் எடுப்பதைத் தவிர்க்க
வேண்டாம்.
பூஜை அறையில்
விளக்கேற்றுவது கட்டாயமா?
இல்லை. கட்டாயமில்லை. அது உங்கள் விருப்பம். உங்களுக்கே நீங்கள் ஒளியாகுங்கள். நமது
உடல் திரி போன்றது, நமது மெய்யுணர்வு விளக்காகும். அது முக்கியமானது. ஆனால் நமது இல்லத்தில்
ஓர் விளக்கேற்றுவதோ, அல்லது சில சடங்குகளைச் செய்வதோ ஓர் நல்ல சூழலை ஏற்படுத்துகிறது.
அதற்காக மட்டும் செய்யப்படுகின்றன. கடவுளை மகிழ்விப்பதற்கு அல்ல. அது சூழலில் ஓர்
அமைதியினை எடுத்து வருகின்றது.
ஏன் முதியவர்களுக்கு
முன்னாலேயே இளையவர்களும் நல்லவர்களும் இறந்து விடுகின்றனர்? அது கர்மாவா?
இது ஐந்து நித்திய ரகசியங்களில் ஒன்றாகும்.
"ஏன் பழுக்காத கனிகள் மரத்திலிருந்து விழுந்து விடுகின்றன அல்லது மலராத மொட்டுக்கள் உதிர்ந்து விடுகின்றன என்றெல்லாம் என்னைக் கேட்காதீர்கள். அவையெல்லாம்
இயற்கையின் ஓர் பகுதி. ஒரு தோட்டக்காரன் எவ்வாறு
முதிர்வதற்குள் இளம் தேங்காய்கள் உதிர்ந்துவிடாமல் காக்க தன்னால் முடிந்தவற்றையெல்லாம் செய்வது போன்று, நாமும் இவற்றைத் தடுப்பதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும்
செய்வோம். நோய் மற்றும் பிற காரணங்கள் அனைத்தையும் தாண்டி ஒன்றிருக்கின்றது, அதுவே
கர்மா. கர்மா மிக ஆழமானது. அதில் ஆழமாகச் சென்று பார்த்தால் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும்.
வாழ்க்கை எனும் இம் முழு நிகழ்வு ஒரு நித்திய
தொடர்புடையது; மற்றும் அது ஒரு குறிப்பிட்ட
நேரத்தில் வந்து மற்றொரு குறிப்பிட நேரத்தில் அகன்று விடுமாறு திட்டமிடப்பட்டது. இறப்பு விகிதத்தைக் குறைக்க முயற்சித்து,
மற்றவைகளை தெய்வீக சட்டத்துக்கு விட்டு விடுவது நல்லது. எதையுமே செய்யாமல் ஆரம்பத்திலேயே
தெய்வீக சட்டத்துக்கு விட்டு விடுவது என்பது
சரியல்ல மனிதர்களாகிய நாம் , நம்மால் முடிந்தவற்றைச் செய்வது என்பதே நமது இயல்பு.
நிழலிடா
விமானத்தில் என்ன உள்ளது? சற்று விவரித்துக் கூற முடியுமா?
நாம் இந்த உலகத்தில் காண்பது ஒரு பனிப்பாறையின் முனையே என்று வைத்துக் கொள்வோம். நமக்குத்
தெரியாதவை ஏராளமாக உள்ளன. ஏராளமானவை ஆழம், வேகம், மற்றும் பரப்பு மிகுந்தவை. இன்று
விஞ்ஞானிகள் மில்லியன் கணக்கான உலகங்கள் உள்ளதாக இன்று கூறுகின்றனர். பல மில்லியன்
மற்றும் ட்ரில்லியன் சூரியன்களும் இருக்கின்றனவாம்.
பிறப்பு
மற்றும் இறப்பு என்னும் சுழற்சியிலிருந்து எவ்வாறு விடுபட முடியும்?
ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? ஏனெனில் இதில் களைப்படைந்து விட்டீர்கள். அதனால் தான் தியானம்
செய்யுங்கள், நீங்கள் சாந்தி பெறுவீர்கள் என்று நான் கூறுகின்றேன்.
நீங்கள் விளையாடும் போது களைப்படைந்து வீட்டிற்குச்
சென்று ஓய்வெடுக்க விரும்புகிறீர்கள். ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் விளையாட விரும்புகிறீர்கள்.
இதுவே விடுதலை என்பது.
நாம் இந்த உலகத்திற்கு வந்திருப்பது விளையாடவேயாகும்.
விடுதலை பெற்ற ஒருவன் மீண்டும் திரும்பி வரவே விரும்புவான். பஜ கோவிந்தத்தில் ஸ்ரீ
சங்கராச்சாரியார்," என்னுடைய வீடு சுவர்க்கத்திலிருக்கும் சுரதரு, இங்கு சிறிது
காலம் விளையாடவே வந்திருக்கின்றேன் என்று கூறுகிறார்.
உரையாடல்
பற்றிக் கூறுங்கள்
அறிவிலிருந்து
இதயத்துடன் உரையாடுதலே இன்றையத் தேவை. ஒரு மதத்தில் இருந்து மற்றொன்றுக்கு மாறும் போது, எது நல்லது என்று ஒப்பிட்டு பார்க்கத் துவங்கு
கிறீர்கள் . ஒரு ஆன்மீக நபர் என்றால், நீங்கள் எல்லாவற்றிலுமிருந்து ஞானம் ஏற்று, அனைவரையும் மதித்து, உங்கள் பாதையில் நடப்பீர்கள். ஞானம் எல்லாவிடங்களிலிருந்தும் பாய்ந் தோடட்டும் என்பதே
பண்டைய பாரம்பரியம் ஆகும். அதுவே திறந்த மனமும் கூட. இதுவே இன்றைய பயங்கரவாதத்தின் காரணமாக உள்ளது. மக்கள் தங்கள் கடவுள் மட்டுமே உண்மையான
கடவுள் மற்றும் பிறர் வணங்கும் கடவுள் சரியல்ல என்று எண்ணுகின்றனர். அவர்கள் அழிவினையே
உருவாக்குகிறார்கள்.
வெறுப்பைக்
கையாளுவது எவ்வாறு? இனிமையற்ற எண்ணங்களும் பற்றுகளும் இருக்கும் போது நிகழ் தருணத்தில்
இளைப்பாறுவது எவ்வாறு?
டெல்லியிலுள்ள ஒரு குருவைப் பற்றிக் கூறுகிறேன்
கேளுங்கள். இவர் ராணுவத்தில் சிப்பாயாக இருந்தவர்.
1971 இல் இந்தியப் பாகிஸ்தான் போர் நிகழ்ந்த போது, கழுத்தில் குண்டு சுட்டு
விட்டது. அவர் மயக்கமாகி, அப்போதே அறிவொளி பெற்றார். தத்வ ஞானம் பற்றிய அனைத்தையும்
அறிந்தார். அக்காலத்தில் நான் 19 வயது இளைஞனாக
இருந்தேன். எனக்கு மிகுந்த மரியாதையளித்து, என்னை யோகிராஜ் என்று அழைப்பார். எனக்கு வெட்கமாகவே இருந்தததுண்டு. என்னைப் பெரிய
மனிதனாகக் கருதி, அனைத்து ஞான விஷயங்களையும் என்னிடம் பேசுவார். யாருமே வெறுப்படையும்
அளவுக்கு மிக அதிக அளவில் அங்கு ஈக்கள் இருந்தன. ஆனால் அவர்," ரெஹ்னே தோ "( அப்படியே இருக்கட்டும்)
என்று கூறுவதுண்டு. அந்த ஒரு வார்த்தையான அப்படியே
இருக்கட்டும் என்பது முழு அணுகுமுறை மனப்பான்மையையும்
மாற்றக் கூடும். அதுவே முக்கியமானது. வெறுப்பை தவிர்க்க தியானம் செய்ய வேண்டும். ஓய்வெடுக்க
வேண்டும். ஆசை மற்றும் வெறுப்பு இரண்டையும் தியானம் மற்றும் அசைவற்று இருப்பதன் மூலம் கடந்து விட முடியும்.