வியாழக்கிழமை 5 மே 2016,
பெங்களூரு, இந்தியா
உங்கள் மனத்தைக் காத்துக் கொண்டு மூளையைப் பயன்படுத்துங்கள்.
நாம் நமது மூளையைக் காத்துக் கொண்டு மனதை அதிகமாகப் பயன்படுத்துகிறோம். இங்குதான் பிரச்சினைகளைப்
பெறுகின்றோம். நமது மனதை எளிதில் உடையக் கூடிய நிலையில் வைக்கின்றோம், ஆகையால் சிறிய
விஷயம் கூட நமது சம நிலையைத் தகர்த்து விடுகிறது. அந்த நிலையிலேயே நாம் வெகுகாலம் இருந்து
பரிதாபமான சோர்வுற்ற மகிழ்ச்சியற்ற நிலையினை அடைகிறோம்.
அண்மையில் இந்தியாவிலுள்ள கல்லூரிகளில் மன அழுத்த விகிதம்
மிக அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிர மாநில காவல் துறையில் மிக அதிக அளவு சதவீத மன அழுத்தமுள்ளவர்கள்
இருக்கின்றனர். இது ஏனெனில் நாம் நமது மனதை உடையும் நிலையிலேயே வைத்திருக்கிறோம். சிறிய
விஷயங்கள் கூட நம் சமநிலையினை ஆட்டம் காண வைத்து
விடுகின்றன. தயவு செய்து உங்கள் மனத்தைக் காத்து, மூளையைப் பயன்படுத்துங்கள்.
மிக புத்திசாலியான ஒருவர் கூட தன்னுடைய வாழ்நாளில் 3 % முதல் 5 % வரையில்தான் மூளையை பயன்படுத்துகிறார். குறைந்தபட்சம் 5 % முதல்
6% வரையில் மூளையைப் பயன்படுத்த வேண்டும் என்று கருதுகிறேன். பயன்படுத்தாத மூளையை இயற்கையிடம்
திருப்பித் தராதீர்கள். உலகிற்கு என்னன்ன நன்மைகள் செய்யலாம், சமுதாயத்தை மேம்படுத்த என்ன செய்யலாம்? உலகில் எவ்வாறு
காழ்ப்புணர் வினை குறைக்கலாம் என்பதற்கு எல்லாம்
கருத்துக்களை முன்வையுங்கள்.
பெண்கள், முதியோர், ஜாதி,சமயம் இவற்றுக்கெதிராக காழ்ப்புணர்வு உள்ளது. கிராமங்களில் இத்தகைய உணர்வுகள் அதிகம். நகரத்திலிருந்து ஒருவன்
கிராமத்திற்குச் சென்றால், கிராம மக்கள் அவனைப்
பார்த்துப்பயப்படுவர். நகரத்தில் கிராம மக்கள் பயனற்றவராகவே கருதப்படுகின்றனர். நமது நாட்டில் ஜாதி காழ்ப்புணர்வு அதிகம். பெண்கள், ஊடகங்கள்
அரசாங்கம், அரசுப் பணித்துறை, குருமார்கள் ஆகியவர்களைப் பற்றியும் காழ்ப்புணர்வு நிலவி
வருகின்றது. நாம் இதிலிருந்து வெளி வர வேண்டும். என்ன எண்ணுகிறீர்கள்? நாம் இதற்கு
என்ன செய்யலாம்? மக்களுக்கு பரந்த பார்வையை ஏற்படுத்த எவ்வாறு கற்பிக்கலாம். இந்த வழியில்
யோசியுங்கள். அதிகப் படைப்பாற்றலுடன் இருங்கள் !
கடவுளின் ஒப்புமையில்
மனிதன் படைக்கப்பட்டானா அல்லது மனித உருவில் கடவுள் படைக்கப்பட்டாரா?
இரண்டுமே தான் என்று நான் கருதுகிறேன். கடவுள் தன் உருவில் மனிதனைப் படைத்து மனிதனும் தனது உருவிலே கடவுளைக் காண்கிறான். அதில்
தவறேதும் இல்லை. இணை உருவாக்கம் என்று சொல் உள்ளது. கடவுளை மனிதன் உருவாக்குகிறான்.
அது குற்றமன்று. பல சமயங்களில் கடவுள் என்றே ஒன்று இல்லை,மனிதனே கடவுளை உருவாக்கி விட்டதாகக் கருதுகிறோம்.
அவ்வாறு இல்லை. அனைத்துக் கலை வடிவங்கள், சிற்பங்கள், கற்பனைகள், வேதாந்தம், மற்றும்
அறிவியல் கூட மனிதனின் மனதிலிருந்து எழுந்தவை தாம்.
கடவுள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? கடவுள் என்பது
படைப்பு, மற்றும் உருமாறும் ஆற்றல் கொண்ட ஓர் நியமம். படைத்து, காத்து அழிப்பதே
கடவுள். மனிதன் இவை மூன்றையும் செய்வ தில்லையா என்ன? எனில் வித்தியாசம் எங்கே? உங்களிடமிருந்து
கடவுள் வேறுபட்டவர்; எங்கோ சுவர்க்கத்தில் அமர்ந்து கொண்டு தனது சுண்டு விரலை நீட்டி நீங்கள் பற்றிக் கொள்ள முயலும் போது ஓடிவிடுவது போன்று கருதிக் கொண்டிருக்கின்றீர்கள். கடவுள் பற்றிய இத்தகைய கருத்து தான் துன்புறுத்துகின்றது.
இந்தக் கோட்பாடே கம்யுனிசம் மற்றும் நாத்திகம் தோன்றவும் வழி வகுத்தது. அல்லது கடவுள்
என்பது ஒரே ஓர் வடிவம் என்று எண்ணுகின்றீர்கள். இல்லை! எந்த வடிவத்தில் வேண்டுமானாலும்
கடவுளை அர்ச்சிக்கலாம். கடவுள் என்பது படைப்பின்
உச்சக் குறிக்கோள் நன்மை ஆகும். அனைத்து உயிர்களின் அடிப்படையும் ஆகும். இருப்பின்
அஸ்திவாரம், உண்மையில் இருப்பே இறைமை ஆகும்.
நவக்கிரகங்களின்
அதிபதி சிவபெருமான் ஆவாரா? ஒவ்வொரு பூஜையிலும் ஏன் கிரகங்கள் வழிபடப்படுகின்றன?
உங்கள் உடலில் வெவ்வேறு பாகங்கள் உள்ளன அல்லவா? பாதத்திற்கு ஒரு வகையான க்ரீம் முகத்திற்கு
ஒரு வகையான க்ரீம் உள்ளன அல்லவா? பாததிற்க்குரியதை முகத்தில் தடவ மாட்டீர்கள். தலைத்
தைலம் வேறு உடலுக்குத் தடவும் தைலம் வேறு. பற்பசையினை பல்லுக்குப் பயன்படுத்தாமல் வேறெங்கோ
தடவுவேன் என்று கூறமாட்டீர்கள். அது போன்றே இரு வகையான விஷயங்கள் உள்ளன. ஒன்று ஒரே தெய்வீகம் பின்னர், குறிப்பிட்ட விஷயங்களுக்கான
யக்ஞங்கள். இவை தாம் கோட்பாடுகள்.
யக்ஞம் என்பது ஓர் அறிவியல். குறிப்பிட்ட வகையான மூலிகைகள்
மற்றும் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு நமது உடலின் வெவ்வேறு பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்துன்றன.
நவகிரகங்கள் என்பது கோள்கள் மட்டுமன்று. அவை நமது உடலின் வெவ்வேறு பகுதிகளில் தாக்கத்தை
ஏற்படுத்தும் பிரபஞ்சத்திலுள்ள குறிப்பிட்ட அதிர் வலைகள். யக்ஞத்தின் பின்னால் முழுமையான அறிவியல் உள்ளது. நுண்ணுயிர் மற்றும் அண்டசராசத்திற்கிடையே உள்ள இணைப்பு ஆகும். உதாரணமாக, செவ்வாய் கல்லீரல் மற்றும்
புரதங்கள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. இது போன்று, பல்வேறு மூலிகைகளுக்கிடையே, பொருட்களுக்கிடையே பிரபஞ்சத்துடன் அதிர்வலைகளில் தொடர்பு உள்ளது.
இப்பிரபஞ்சத்தில்
பல்வேறு அதிர்வலைகள் உள்ளன. குறிப்பிட்ட அதிர்வலைகள் பல்வேறு கிரகங்களுடன் அவற்றின்
நகர்தலுக்கு தொடர்புள்ளவையாக இருக்கின்றன. இங்கு நீங்கள் செய்யும் எதுவும் சூரியனைப்
பாதிக்காது, ஆனால் ஓர் குடையினைப் பிடித்துக் கொள்வது நிச்சயமாக சூரியனிடமிருந்து உங்களைக்
காக்கும். அது போன்றே வெவ்வேறு பருவ காலங்களில் வெவ்வேறு வகையான உணவுகளை உண்கின்றீர்கள்.
குளிர் காலத்தில் மாம்பழங்கள் கிடைப்பதில்லை. அவை கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும்.
இயற்கை விளைவிக்கும் அவற்றை அப்பருவ காலங்களில் மட்டும் உண்டால் உங்கள் உடல்நலன் மேம்பட்டு
இருக்கும். இயற்கையே இதை வடிவமைத்திருக்கின்றது. காலம், அதிர்வலைகள், உணவு, சூழல் ஏன்
விலங்குகள் கூட ஒன்றோடொன்று தொடர்புடையவை ஆகும்.
மற்றொரு முக்கியமான விஷயம் என்னவெனில், அனைத்துக் கிரகங்களும்
அவற்றின் தேவதைகளும் (அதிர்வலைகள்) ஓர் குறிப்பிட்ட வாகனத்தில் வருகின்றன. வாகனம் என்பது
என்ன? அதை ஆய்வது ஓர் சுவாரஸ்யமான விஷயம். ஆடு செவ்வாயின் அதிர்வலைகளை எடுத்து வருகின்றது.
அது போன்று ஒவ்வொரு விலங்கும் இயற்கையிலிருந்து குறிப்பிட்ட அதிர்வலைகளை நிலத்திற்கு
எடுத்து வருகின்றன. இடைக்காலத்தில் வண்ணத்துப்
பூச்சிகள் குறிப்பிட்ட செயல்களைச் செய்யும் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை.
வண்ணத்துப் பூச்சிகளின்றி உணவுப் பயிர்கள் விளையாது.
சரியான அறிவற்ற மக்கள் பயிர்களுக்கும் வண்ணத்துப் பூச்சிகளுக்கும் என்ன தொடர்பு என்று
வினா எழுப்பிக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில் பூச்சிக் கொல்லி மருந்துகள் பரவப்பட்ட போது, வண்ணத்துப் பூச்சிகள்
மற்றும் புழுப்பூச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதைக் கருதவேயில்லை. அதனால் என்ன
நிகழ்ந்தது? அனைத்து வண்ணத்துப் பூச்சிகளும் மறைந்து விட்டன. இப்போது பயிர்கள் விளையவும்
மகரந்த சேர்க்கைக்கும், கொள்கலன்களில் வண்ணத்துப் பூச்சிகளை எடுத்து வந்து பயிர் நிலங்களில் விடுகின்றனர். மகரந்த சேர்கை ஏற்படாத
போது, விளைபொருட்களின் தரம் தாழ்ந்து விடுகின்றன.ஆகவே எறும்பிலிருந்து யானை வரையில்
ஒவ்வொன்றுக்கும் பூமியில் ஓர் செயல்பங்கு உள்ளது. அவற்றினைப் போற்றிப் பாராட்ட வேண்டும்
என்பதே முக்கியமானது.
.
ஒரே ஓர் மெய்யுணர்வு என்று கூறுவது குவாண்டம் இயற்பியல்.
பல்வேறு பொருட்கள் உள்ளன என்பது பாரம்பரிய வேதியல். இவை ஒன்றோடொன்று முரண்பட்டவை அல்ல.
இரண்டும் ஒன்றாகவே இணைந்துள்ளன. அனைத்து ஒன்பது கிரகங்களையும் வழிபட வேண்டும் என்பதில்லை.
"ஓம் நமசிவாய” என்று ஜெபித்தாலே போதும்.
பிரார்த்தனை ஒன்று மட்டும்தான். அதில் அனைத்துமே அடங்கி யுள்ளன. ஆனால் யஞ்யங்களில்
குறிப்பிட்ட விஷயங்கள் செய்யப் படுகின்றன, அவை அனைத்தும் முழுமையின் பகுதிகளாகவே காண்பீர்கள். தனிப்படுத்தியல்ல.
உங்கள் இல்லங்களில் சமையலறை, சாப்பிடும் அறை, உறங்கும்
அறை, என்றெல்லாம் பல அறைகள் உள்ளன. ஒவ்வொன்றையும் அழகு படுத்துகிறீர்கள் அல்லவா? வீட்டின்
வெளியில் அலங்கரித்து விட்டீர்கள் ஏன் உள்ளே ஒவ்வொரு அறையையும் அலங்கரிக்க வேண்டும்
என்று கேட்க முடியுமா? ஒவ்வொன்றையும் அழகு படுத்த விரும்புகிறீர்கள் ஏனெனில் அவை வீட்டின்
ஓர் பகுதியாகிறது. இவ்வாறுதான் இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சிவனிடமிருந்து வேறுபட்டு
தேவதைகள் உள்ளதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அனைத்தும் சிவனின் அம்சங்கள் , மற்றும்
பகுதிகள் ஆகும்.