செவ்வாய்க்கிழமை 7 ஏப்ரல், 2016
பாலி, இந்தோனேசியா
(கீழே வரும் உரையாடல், “தைரியமாக முதல் அடியை எடுத்து வை” என்ற பிரசுரத்தின்
தொடர்ச்சி)
கேள்வி – பதில்கள்
இந்தோனேசியா போன்ற ஒரு நாட்டில் 51 % மக்கள் ஆண்களாக இருக்கும் போது,
பெண்களின் முக்கியத்துவத்தை, குடும்ப வாழ்க்கையில் பெண்களின் பங்கை ஆண்களுக்கு எப்படி
உணர்த்த முடியும் ?
நீங்கள் ஏற்கனவே அப்படிச்
செய்து விட்டீர்கள். இல்லாவிட்டால், நீங்கள் இந்த நிலையை அடைந்திருக்க மாட்டீர்கள்.
குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டே அரசியலில் பங்கேற்க முடியுமென்பதற்கு நீங்கள் ஒரு
சரியான உதாரணமாகத் திகழ்கிறீர்கள். உண்மையில் இந்தோனேசியாவில் பெண்களின் ஆதிக்கம் நிலவுகிறது.
மேதகு திருமதி மேகவதியின் தலைமையை(முந்தைய குடியரசு தலைவர், ஒரு பெரிய அரசியல்
கட்சியின் தலைவர் ) ஏற்கனவே மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
குடும்பத்தைப் பொறுத்தவரை பெண்களின்
பங்கு மிகவும் முக்கியமானது. “ஆதிக்கம் செலுத்த ஆக்கிரமிப்பு தேவையில்லை. மக்களின்
இதயத்தை வென்றால், மக்களின் மரியாதையை, மக்களின் நம்பிக்கையை வென்றால், குடும்பப் பொறுப்பையும்
ஏற்றுக் கொண்டு, அரசியலில் ஆதிக்கம் செலுத்த முடியும். இது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன்.
முடிவெடுக்கும் நிலையிலிருக்கும்
ஒரு பதவிக்கு, ஒருவரை நியமிக்க, நாம் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவரைத் தேர்ந்தெடுக்கிறோம்.
ஆனால் அந்தப் பதவிக்குத் தேவையான முன் அனுபவத்தைப் பார்ப்பதில்லை.
மூன்று விஷயங்களைக்
கவனிக்க வேண்டும். நாடு(நாடும் நாட்டு மக்களும்), அரசியல் கட்சி மற்றும் உங்கள் அரசியல்
அனுபவம். உங்கள் அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள, நீங்கள் நாட்டைப் பாதுகாக்க
வேண்டும். ஏனென்றால் அரசியலின் நோக்கமே நாட்டின் பாதுகாப்பு தான். நாட்டுக்கும் உங்கள்
அரசியல் வாழ்வுக்கும் நடுவில் அரசியல் கட்சி வருகிறது. எனவே பொது நன்மைக்காக, நாட்டின்
பாதுகாப்பு மீது கவனம் வைப்பது முன்னணியில் இருக்க வேண்டும். அடுத்தது அரசியல் கட்சி.
கடைசியில் நீங்கள் (உங்கள் சுயநலம்). இது நடைமுறைக்கு ஒவ்வாதது; கற்பனைக்கேற்றது என்று
நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் இதுவே சிறந்த முடிவைக் கொடுக்கும்.
உங்கள் ஆழ்மனதில் தோன்றுவதை உபயோகிக்கலாம்.
சில சமயம் தர்க்கரீதியாக நீங்கள் செய்வது சரியாகத் தோன்றலாம். ஆனால் உங்கள் உள்ளுணர்வு வேறு வழியைக் காட்டலாம். அது எப்போதும்
தோல்வியடையாது. அந்தத் திறமையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆழ் மனதின் குரலைக்
கேட்க வேண்டும். மனம் தெளிவாக இருக்கும் போது, இதயம் தூய்மையாக இருக்கும் போது, செயல்
நேர்மையாக இருக்கும் போது உள்ளுணர்வு வழியைச் சொல்லும்.
பெரும்பாலும் பெண்கள்
தங்கள் குடும்பத்துக்காக, தங்கள் ஆசைகளையும், கனவுகளையும் தவிர்த்து வாழ்க்கை நடத்துகிறார்கள்.
குடும்ப பொறுப்புகள் குறைந்த பின், தங்கள் கனவுகளைத் தொடராததை நினைத்து வருந்துகிறார்கள்.
இந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்கலாம் ?
குருதேவர் : ஒரு காலத்தில் பெண்கள்
சைக்கிள் சவாரி செய்ததில்லை. ஏனென்றால் அவர்கள் புடவை அல்லது குட்டை பாவாடை அணிவது
வழக்கமாக இருந்தது. அந்த ஆடையுடன் சைக்கிள் விடுவது சிரமமாக இருந்தது. ஆனால் நாகரீகம்
மாறி இன்று பல விதமான வசதியான ஆடைகள் வந்து விட்டதால் பல பெண்கள் சைக்கிள் சவாரி செய்கிறார்கள்.
நீங்கள் சமநிலையைக் கற்றுக் கொண்டு சைக்கிள் விடத் தெரிந்தவரானால்,
வாழ்க்கையிலும்
அந்த சமநிலையைக் கொண்டு வர முடியும். குடும்பப் பொறுப்புடன், அலுவலகம் அல்லது தொழில்
பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள முடியும். வெளியே செல்வதன் காரணமாக குடும்பப் பொறுப்பை
புறக்கணிக்க அவசியமில்லை. உங்கள் கனவுகளையும் கைவிடத் தேவையில்லை.இன்றைய தொழில் வளர்ச்சியடைந்த
உலகில், பெண்கள் சுய தொழில் துவங்கி, பெரிய தொழிலதிபராக வர பல வாய்ப்புகள் உள்ளன.
சுரபயாவில் நாங்கள் பல
சிவப்பு விளக்குப் பகுதிகளை மூடி விட்டோம். பல குழந்தைகள் போதை மருந்து மற்றும் செக்ஸ்
அடிமைகளாகி விட்டார்கள். எங்களுக்கு உதவி தேவை.
கண்டிப்பாக இதற்கு
உதவி செய்ய முடியும். போதை மருந்துக்கு அடிமையாவது மன சம்பந்தமான ஒரு நிகழ்வு. மனம்
பெரிய மகிழ்ச்சியை விரும்புகிறது. மூச்சுப் பயிற்சி மூலம் மன நிலையை மாற்றி ஒரு ஆனந்த
நிலைக்கு எடுத்துச் செல்லும் போது, போதை மருந்து மற்றும் செக்ஸ் இவற்றுக்கு அடிமையாவதைக்
குறைக்க முடியும். பல மக்கள் மூச்சுப் பயிற்சிகள் மூலம் இப்பழக்கங்களிலிருந்து விடுபட்டுள்ளார்கள்.
இளைஞர்களுக்கு இப்பயிற்சியளித்து, அவர்கள் பயனடைவது மட்டுமல்லாமல், மற்றவர்களை இப்பழக்கத்திலிருந்து
விடுவிக்க உதவி செய்ய முடியும்.
அகில உலகத்துக்கும் வாழ்க்கையில்
நன் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ள, நீங்கள் பல வகையான பயிற்சிகளைக் கற்றுத் தருகிறீர்கள்.
பெண்கள் தலைமைப் பொறுப்பேற்க இப் பயிற்சிகள் எப்படி உதவும் ?
தியானம் செய்யும்
போது, மூளையின் அமைப்பு மாற்றமடைகிறது. ஒரு அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரையின்
படி, இரண்டு வார தியானத்துக்குப் பின் மூளையின் சாம்பல் நிற செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
அப்படிப்பட்ட ஆராய்ச்சிகளின் படி “தியானத்தின் மூலம் மூளையின் இடது மற்றும் வலது
பாகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, உங்கள் ஆளுமை முழுமையடைகிறது” என்று தெரிய வருகிறது.
தியானம் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். உற்சாகமும் சக்தியும் அதிகரிக்கும். மனம்
அழுத்தமில்லாமல், குழப்பம் நீங்கி, தங்கு தடையற்ற அறிவாற்றல் பெருகும். நீங்கள் பழகுபவர்களிடையே
நல்லிணக்கம் ஏற்படும். வாழ்க்கை ஆனந்தமயமாகும்.
மக்கள் மிகவும் பாரபட்சமாக நடந்து
கொள்கிறார்கள். ஆண்களிடம் பெண்களைப் பற்றிய தவறான கருத்தும், பெண்களிடம் ஆண்களைப் பற்றிய
தவறான கருத்தும் நிலவுகிறது. அதே போல் இளைஞர்கள் மற்றும் முதியோர்களிடையே பாரபட்சமான
கருத்து நிலவுகிறது. நாடுகளிடையே, சமூக அமைப்புகளிடையே பாரபட்சமான கருத்து வழக்கில்
உள்ளது. இந்த கருத்து வேறுபாடுகள் நீங்கினால், நாம் ஒரு பாரபட்சமில்லாத சமுதாயத்தை,
அதிர்ச்சியற்ற நினைவுகள் கொண்ட வருங்காலத்தை உருவாக்க முடியும்.
ஒருவர் தன் வாழ்க்கையில் அதிர்ச்சியான
நிகழ்வுகளை அனுபவித்தால், நீண்ட நாட்களுக்கு அந்த அதிர்ச்சியின் நினைவு அவருடைய மனதில்
பதிந்து விடும். அந்த அதிர்ச்சியான நினைவு காரணமாக, அவரால் வாழ்க்கையை ஒரு புதிய கண்ணோட்டத்தில்
பார்க்க முடியாது. “யோகா, தியானம், மூச்சுப் பயிற்சிகள் அதிர்ச்சியான நினைவுகளிலிருந்து
விடுவித்து, வருத்தமற்ற ஆத்மாவை உருவாக்க உதவும்.”
இந்தோனேசியா அரசியலுக்கு
எப்படிப்பட்ட பெண் தலைவர்கள் பொருத்தமாக இருப்பார்கள்? பெண்கள் அரசியலுக்கு வந்தால்
உலகை மாற்றியமைக்க முடியுமென்று நினைக்கிறேன்.
நான் உங்கள் கருத்தை
ஏற்கிறேன். பெண்கள் மேலும் மேலும் அரசியலுக்கு வரும்போது, இவ்வுலகம் வாழ்வதற்குச் சிறந்த
இடமாகி விடும். இந்தோனேசியப் பெண்கள் உலகின் மற்றப் பகுதிகளில் வாழும் பெண்களை விட
வித்தியாசமானவர்கள் என்று நான் நினைக்க வில்லை. ஒரு வேளை அவர்களுக்கு அடிப்படை வாதிகளின்
எதிர்ப்பு ஒரு சவாலாக இருக்கலாம். அடிப்படைவாதிகள் பெண்களுக்கு அதிகாரம் கொடுப்பதை
விரும்ப மாட்டார்கள். மற்றபடி, இந்தோனேசியாவும், இந்தியாவைப் போல் இளைஞர்கள் அதிகமாக
வாழும் ஒரு நாடாகும். மக்களில் பெரும்பாலானவர்கள் 20 முதல் 40 வயது வரை உள்ளவர்கள்.
அதனால் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சிக்கு மிக அதிக வாய்ப்புள்ளது.
இன்றைய உலகில் தனித்தொழில் திறமையுள்ளவர்கள்
மற்றும் பொதுவான தொழிலாளர்களின் தேவை மிக அதிக அளவில் உள்ளது. எனவே இளைஞர்கள் பல துறைகளில்
வேலை செய்ய வாய்ப்புள்ளது. (செவிலியர்கள், வாகனம் ஓட்டுபவர்கள், பல்வேறு தொழில் நுட்பவியலாளர்கள்) பெண்களுக்கு தலைமைப் பொறுப்பு
மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியில் பயிற்சியளிக்க வேண்டும். பெண் விமான ஓட்டிகள், பெண்
இஞ்சினியர்கள், பெண் கட்டிடக் கலை வல்லுனர்கள் அதிக அளவில் வர வேண்டும். சுற்றுலா துறையில்
பெரிய அளவில் வளர்ச்சி காண வாய்ப்பு இருக்கிறது. அதே போல் வியாபாரத் துறையில், ஏற்றுமதி,
இறக்குமதிப் பொருட்களைப் பற்றி நீங்கள் ஏற்கனவே
அறிவீர்கள். கலாசார ரீதியில் பெண்கள் ஏற்கனவே மேல் நிலையில் இருக்கிறார்கள்.
இந்தோனேசியாவில், பெண்கள் சுகாதாரத்
துறையிலும், போலீஸ் துறையிலும் பெரும் பங்கு வகிப்பதாகக் கேள்விப்பட்டேன். பெண்களுக்கு
மதக் கட்டுப்பாடுள்ள சூழ்நிலையில், அவர்கள் உற்சாகத்தோடு பணி செய்ய முன் வருவதை, சமுதாயம்
ஏற்றுக் கொள்வதை அறியும்போது புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அடிப்படை மதவாதிகள், உங்கள்
வாழ்வின் வளர்ச்சியைத் தடுக்க அனுமதிக்காதீர்கள். இந்தோனேசியா தன் நாட்டின் கலாசாரத்தைக்
கைவிடக் கூடாது. மற்ற நாடுகளின் கலாசாரத்தை இறக்குமதி செய்யத் தேவையில்லை. அது இங்கிருக்கும்
சூழ்நிலைக்குப் பொருந்தாது.