நல்லிணக்கம் என்பதே நிசப்தத்தின் பொருள்

திங்கள்கிழமை, 2 பிப்ரவரி 2016,

பெங்களூரு, இந்தியா


குருதேவ், இசை, சக்கிரங்களைப் பாதிக்கும் என்று கூறப் படுகிறது . குறிப்பிட்ட இசைக் கருவிகளைப் பற்றியும் சக்கிரங்களின் மீது அவற்றின் விளைவுகளையும் பற்றியும் சற்றுக் கூற முடியுமா?

முரசு மூலாதாரத்தினைப் பாதிக்கிறது. பெரிய, சிறிய முரசுகள் மூலாதாரத்திலிருந்து இரண்டாம் சக்கிரமாகிய ஸ்வாதிஷ்டானம் வரையில் விளைவினை  ஏற்படுத்துகின்றன. தாரை போன்ற பெரிய காற்று இசைக் கருவிகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் சக்கிரங்களாகிய ஸ்வாதிஷ்டானம் மற்றும் மணிபுரா சக்கிரங்களில் விளைவினை ஏற்படுத்துகின்றன. உலோக இசைக்கருவி ஒலிகள் மணிபுரா மற்றும் அனஹாதா ( நான்காம் சக்கிரம்) இவற்றில் விளைவுகளை  ஏற்படுத்துகின்றன. ஓர் உலோகம் கீச்சிடும் ஒலி எழும்போது வயிற்றில் ஏதோ ஓர் உணர்வு ஏற்படுகிறது.

எத்தனை பேர் இதைக் கவனித்திருக்கிறீர்கள்? கம்பியிசைக் கருவிகள் நாபியிலிருந்து இதயப் பகுதி வரையில் விளைவினை ஏற்படுத்துகின்றன. வீணை மற்றும் சிதார் போன்ற கருவிகள் அனஹாதா எனும் இதயச் சக்கிரத்தில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. புல்லாங்குழல் போன்ற காற்றிசை கருவிகள் சில சமயங்களில் பியானோ இசை, அனஹாதா முதல் விஸ்ருதி ( தொண்டைச் சக்கிரம்) வரையில் விளைவினை ஏற்படுத்துகின்றன. மணிகள், நீரின் ஒலி, பறவைகளின் ஒலி, மிக மெல்லிய நுண்ணிய ஒலிகள் தொண்டை முதல் ஆக்ஞய சக்கிரம்  ( புருவங்களின் நடுவிலுள்ள சக்கிரம் ) வரையில் விளைவை ஏற்படுத்துகின்றன. பிற அனைத்து இசைக்கருவிகள் மற்றும் தியானம் சஹாஸ்ராரத்தில்  (தலையின் உச்சியிலுள்ள  சக்கிரம்) விளைவினை ஏற்படுத்துகிறது.

இந்திய சடங்குகளைக் கவனித்துப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்வீர்கள். கோவில்களில் முரசுகளை  வெளிப்புற எல்லையிலும், பெரிய காற்றிசைக் கருவிகளை அதற்கடுத்த  நிலையிலும், உட் புரத்தில்  மணிகள் மற்றும் சங்கும், வைக்கப் பட்டிருக்கும். முரசுகளில் துவங்கி, கம்பியிசைக் கருவிகள் பின்னர் காற்றிசைக் கருவிகள் அதற்கும் அடுத்து மணிகள் என ஒலி அலைகள் சமச்சீர் செய்யப்பட்டு, அனைத்தும் நிசப்தத்தில் முடிவடைந்து விடுகின்றன. சப்தத்தின் குறிக்கோள் நிசப்தமேயாகும். இது உங்களனைவருக்கும் தெரியுமா? சப்தம் நிசப்தத்திலிருந்து தோன்றி அதன் நோக்கமும் நிசப்தமேயாகிறது. நிசப்தம் என்பதன் பொருள் முழு நல்லிணக்கம் என்பதாகும். உங்களுக்குள்  மிக ஆழத்தில் முழு நல்லிணக்கம் ஏற்படும்போது, சப்தம் கூட மிக கனமாகத் தோன்றும். ஆனால் சப்தம், இசை ஆகியவை பாதையேயாகும்.. இசையே ஓர் தனி மனிதனை பிரபஞ்சத்துடன் இணைக்கிறது. குறுகிய மனம் இசையின் மூலம் விரிவடைந்து அது ஏற்கனவே மிகப்பெரிய மனதின் அல்லது மெய்யுணர்வின் ஓர் பகுதியே என்று கண்டறிகின்றது.

உலகில் மோதல்களுக்கு காரணம் என்ன? அவற்றை முற்றிலும் அகற்றி விட முடியுமா அல்லது அதற்கென்று ஓர் பங்கு இருக்கின்றதா?

மோதல்கள் நல்ல மனிதர்களை ஒருங்கிணைக்கிறது, இல்லையெனில் நல்லவர்கள் ஒன்று சேர மாட்டார்கள். மோதல் என்பது ஒருவரது இயல்பு, அதனை தீர்ப்பதும் இயல்பின் ஒரு பகுதியே. மனித கண்ணியம் மோதலை தீர்ப்பதேயாகும்.

இன்றைய உலகில் தீவிரவாதமே மிகப் பெரிய சவால். அதைக் கவனிக்க வேண்டும். பல்வேறு வித்தியாசங்கள் இருந்தபோதிலும் மக்கள் அனைவரும்  ஒரே குடும்பம் என்று அறிந்துணர்ந்து கொண்டால்தான் அதைக் கவனிக்க முடியும். வித்தியாசங்களையும் வேறுபாடுகளையும் கொண்டாடுவதே  புத்திசாலியான மக்களின் அடையாளம்.

குருதேவ், வேதங்கள் மனிதர்களல்லாத மூலத்திலிருந்து உருவானதாகக் கூறப்படுகிறது. அதன் பொருள் என்ன?

வேதங்கள் தரமிறக்கம் செய்யப்பட்டவை. ரிஷிகள் ஆழ்ந்த தியானத்தில் தாங்கள் கண்டு கேட்டவற்றைப் பகிர்ந்து கொண்டனர். ஒரு அருமையான கதையை உங்களுக்கு கூற விரும்புகிறேன். வேத வியாசர் படைத்தவனிடம் சென்று, தனக்கு  ஞானம் அளிக்கும்படி வேண்டினார். இறைவன்  பளபளக்கும் ஓர் மலையினைக் காட்டி, "அதுவே ஞானம் , உன்னால் எடுத்துக் கொள்ள முடிந்த அளவு எடுத்துக் கொள்" என்று கூறினார். வேதவியாசரின்  கைகளால் எவ்வளவு அள்ளிக் கொள்ள முடிந்ததோ அதுவே வேதங்கள்.

ஓராயிரத்திற்கும் மேற்பட்ட முனிவர்கள் ஆழ்ந்த தியானத்தில் சென்று, அவர்கள் என்ன அறிந்து கொண்டார்களோ அவையே  வேதங்கள். ஆயுர்வேதத்திற்கும் அது போன்ற ஓர் கதை உண்டு. சமுதாயத்தில் உடல்நலம் பெருக விருப்பத்துடன் 88000 முனிவர்கள் ஓரிடத்தில் கூடி தியானம் செய்தனர். அவர்கள்  அறிந்தவற்றை எழுதுவதற்கு ஒருவர் தேவைப்பட்டார். எனவே பாரத்வாஜ முனிவர், தாம் தியானம் செய்யாமல் பிற முனிவர்கள் தியானத்தில் அறிந்தவற்றை கூறும்போது எழுதுவதற்கு முன்வந்தார். இன்று அது உடலின் எந்தப் பகுதிக்கு எந்த மூலிகை பயன்தரும் என்று அறிந்த, பூரணத்துவம் வாய்ந்த அறிவியலாகத் திகழ்கிறது. ஆச்சரியமான விஷயம். இன்னும் அதிகமாக உள்ளாழ்ந்து சென்றால் இந்த ஞானம் மிக ஆச்சரியத்தைத் தரும்.

குருதேவ், யோக சூத்திரங்களில் யோகத்தின் நோக்கம் துன்பத்தை அகற்றுவது என்று கூறப்பட்டிருக்கிறது. யோகாவிற்கு ஆன்மீக நோக்கம் எதுவும் இல்லையா?

 அது வரக்கூடிய   துன்பத்தினைத்  தடுக்கும். அது எதிர்காலத்தில் வரக்கூடிய சோகத்தினை  நீக்குகிறது. துன்பத்தின்  மூல காரணம் யோகாவின்  மூலம் வெளியேற்றப்படுகின்றது. இது ஒரு துணைப் பொருள் ஆகும். இறுதியானது அல்ல.

யோக வசிஷ்டாவில் உள்ள ஓர் கதையில் காகபுஷுண்டி என்னும் காகம், உலகமே அழிந்த பின்னரும் உயிருடன் இருந்ததாகக் கூறப் படுகிறது. இந்தக் கதையின் முக்கியத்துவம் என்ன?


யோக வசிஷ்டா மர்மமானது. The Matrix and Inception போன்ற அண்மைக்காலத் திரைப்படங்கள் யோக வசிஷ்டாவினை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப் பட்டுள்ளன. யோக வசிஷ்டா மிக ஆழமானது. பல்வேறு பொருட்களை உள்ளடக்கியது. உங்களை வேறொரு பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லும்.