அடுத்தவரின் தீர்ப்பு உங்களை வரையறுக்க அனுமதிக்காதீர்கள்.


சனிக்கிழமை, 2 ஜனவரி 2016,

பாத் அண்டோகஸ்ட் ஜெர்மனி


 ஒவ்வொரு கேள்வியையும் அதிசயமாக்குங்கள். "ஆஹா" என்பது தான் யோகாவின் முன்னுரையாகும். யோகா என்பது வெறும் உடற்பயிற்சியல்ல,பிரபஞ்சத்துடன் ஐக்கியமாவதேயாகும்.

யோகாவின் முன்னுரை “ஆஹா”. எந்த சமயத்தில் நீங்கள் “ஆஹா” என்று வியந்தாலும் அங்கு உங்கள் மனம் நிற்கின்றது. அழகு மூலமாக மற்றும் அதிர்ச்சியின் காரணமாக அவ்வாறு “ஆஹா” என்று வியந்து நிற்க இயற்கை உங்களுக்குப் பல சந்தர்ப்பங்களை அளித்திருக்கின்றது. இது சகித்முத்ரா என்று அழைக்கப்படுகின்றது. சகித்முத்ரா என்றால் (குருதேவர் திகைப்பை வெளிப்படுத்திய முகபாவத்துடன் ஆழ்ந்த உள்மூச்சு எடுத்து ஹா என்னும் ஒலியுடன் செய்து காட்டுகிறார்)

நீங்கள் செய்கிறீர்களா? (அவையோரை அதே முகபாவத்துடன் செய்யுமாறு கேட்கின்றார் ). ஓர் அதிர்வுடன் “ஹா” எனும் ஒலி எழுப்புங்கள். பின்னர் சிறிது காத்திருங்கள். அசைவின்றி இருங்கள். என்ன நிகழ்கின்றது என்பதை கவனியுங்கள். நீங்கள் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்துடன் இருக்கும் போது ஓர் கலக்கம் ஏற்படுவதைக் கவனித்தீர்களா? உங்களது தாடைகள் இறுக்கமின்றி கீழிறங்க வேண்டும். கண்கள் அகலமாக விரிய வேண்டும். அப்போது முடிவில்லாததற்குள் நழுவிச் செல்வீர்கள்.

மிக அழகான இசையும், மற்றும் மிக அழகிய கலை வடிவங்களும் ஏன் சோகம் மற்றும் ஏக்கம் இவற்றிலிருந்து எழுகின்றன?

வாழ்க்கையில் எல்லா விதமான மனநிலைகளும் உள்ளன. ஒரே ஒரு மனநிலை என்பது உதவாது. இந்தியாவில் அவை நவரசம் அதாவது ஒன்பது விதமான அழகிய உணர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றது. அதில் பயம் என்பதும் ஒன்று ஆகும். பரதநாட்டியம் என்னும் அழைக்கப்படும் இந்திய பரதக் கலையில் இந்த ஒன்பது விதமான உணர்ச்சிகளும் (மகிழ்ச்சி, சிரிப்பு, துக்கம், கோபம், வீரம், பயம், வெறுப்பு, அதிசயம் மற்றும் அமைதி) சித்தரிக்கப் படுகின்றன.

தவிர எவ்வாறு பரத நாட்டியமும் எலும்புகளையும் தசைகளையும் இயக்குவதன் மூலம் நோய் நீக்குதல் முறையும் தொடர்புள்ளவை என்பதையும் நாம் அறிய வேண்டும்.நிச்சயமாக இவற்றுக்கிடையே உறவு உள்ளது. ஏனெனில் பரத நாட்டியத்தில் முதன்முதலாக கற்பிக்கப் படுவது கழுத்தை அசைத்தலே யாகும். நன்றாக முன்னும் பின்னும் கழுத்து லாவகமாக அசைய வேண்டும். இரண்டாவதாக கண்ணசைவு கற்பிக்கப்படுகிறது. எனவே கழுத்தசைவு, கண்ணசைவு, கையசைவு, விரல்களசைவு போன்ற அசைவுகள் பரதநாட்டியத்தில் கற்பிக்கப் படுகின்றன. இது போன்றே எலும்புகளையும் தசைகளையும் இயக்குவதன் மூலம் நோய் நீக்குதல் முறையிலும் முதுகெலும்புடன் தொடர்புடைய வகையில் உங்கள் கைகளை ஒரு விதமாக அசைக்கும்படிக் கற்பிக்கின்றனர்.

பாலியில் பாலி  நடனத்தில் உங்கள் சுண்டு விரலை அசைக்கக் கற்றுத் தருகின்றனர். இந்த நடனத்தில் உங்கள் ஆள்காட்டி விரலையும்  நடுவிரலையும்  ஒன்றாக இணைத்து வைத்துக் கொள்வது முக்கியம். மீதமுள்ள இரு விரல்களை அசைக்க வேண்டும். இது கடினமானது. சுண்டு விரலையும், மோதிர விரலையும்  தனித்தனியாக அசைப்பது கடினம், முயற்சி தேவைப்படும்.

நமது உடலில் தீர்க்க ரேகைகள் (உயிர் சக்தி பாய்ந்து செல்ல வழிவகுக்கும் வாய்க்கால்கள்) உள்ளன. பாலி நடனத்தில் இது மிக முக்கியமானது. நடன நிகழ்ச்சி முழுவதிலும் நடனக் கலைஞர் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு தனது விரல்களை அசைத்துக் கொண்டிருக்கின்றார். ஐந்து நிமிடங்களுக்கு விரல்களை அசைத்தலே வலி ஏற்படுகிறது. அவர்கள் ஓரிரு மணி நேரம் இதைச் செய்கின்றனர், அத்துடன் கண்களையும் அசைக்கின்றனர். இவற்றால் உடலிலுள்ள பல்வேறு வாய்க்கால்கள் செயல்படுத்தப் படுகின்றன. இது நடனத்தின் மூலம் நிகழ்கின்றது. இது மிக ஆச்சரியமானதும் கூட. உங்களது உள்ளங்கையில் ஒவ்வொரு விரலும் ஓர் கிரகத்துடன் தொடர்புள்ளது. கட்டை விரல் செவ்வாய் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. அது மட்டுமே தனியாக உள்ளது.
ஆள் காட்டி விரல் குருவுடன் தொடர்புடையது.(வழிகாட்டுபவர்,ஆசான்).எதையேனும் சுட்டிக் காட்ட விரும்பினால் ஆள்காட்டி விரலையே பயன்படுத்துகின்றீர்கள்.அது குரு. நடுவிரல் சனியுடன் தொடர்பு கொண்டது. சனி பணியாளர். மோதிர விரல் சூரியனுடன் தொடர்புடையது. சூரியனே அரசன். நகைகள் யாரிடம் இருக்கும்? அரசரிடமே, அதனால் மோதிர விரலில் மோதிரம் அணிந்து கொள்கின்றீர்கள். அதனால் தான் அது மோதிர விரல் என்று அழைக்கப்படுகிறது. சூரியன் அல்லது அரசன் தனியாக இருக்க முடியாது. கட்டாயம் பணியாள் தேவை. ஒவ்வொரு நாட்டின் தலைவருக்கும் உயரமான சிவந்த கட்டுமஸ்த்தான ஒரு மெய்க்காப்பாளர் இருக்கிறார். ஆகையால் மோதிர விரலையும் நடு விரலையும் பிரிக்க முடியாது. சுண்டு விரல் புதனுடன் தொடர்புடையது. சின்முத்திரை செய்யும் போது என்ன நிகழ்கின்றது? ஆள்காட்டி விரலும் (குரு) கட்டை விரலும் (செவ்வாய்) ஒன்றாக இணைகின்றன. அதுவே ஞானமும் சக்தியும் ஆகும்.

ஏன் கட்டை விரல் செவ்வாயுடன் தொடர்புடையது? ஏனெனில், நீங்கள் வெற்றியடையும் போது கட்டை விரலை உயர்த்திக் காட்டுகின்றீர்கள். தோல்வியுறும் போது கட்டை விரலை கீழ் நோக்கிக் காட்டுகின்றீர்கள். இந்த சைகைகள் நம்முள் கட்டமைக்கப்பட்டவை. இது போன்று வெவ்வேறு கிரகங்கள் நமது உடலின் பல்வேறு பாகங்களை பாதிக்கின்றன. பற்கள் சனியுடன் தொடர்புடையவை. கண்கள் சூரியனுடன் தொடர்புடையவை. கன்னங்கள் சுக்கிரனுடன் தொடர்புடையவை. நெற்றி புதனுடன், மூக்கு குருவுடன் தொடர்புடையன. இந்தத் தொடர்புகள் நுண்ணுயிர் நிலைக்கும் இப்பிரபஞ்ச நிலைக்கும்  இடையேயான தொடர்புகளாக நான் குறிப்பிடுகின்றேன். இது மிகவும் கவர்ச்சியான விஷயம்  !

தங்களது சமூக அமைப்பிலிருப்பவர்களே தங்களைப் பற்றி தீர்ப்பு நிலையிலிருந்து புறம் பேசும் போது தாங்கள் என்ன செய்கின்றீர்கள்?

என்ன வேண்டுமோ பேசட்டும். அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகின்றீர்கள்? அவர்கள் தீர்ப்பளித்து பேசட்டும்.அதனால் என்ன? பேசியதால் எதுவும் மாறப்போவதில்லை. எது எது வரவேண்டுமோ அது வந்து சேரும், என்ன நிகழ வேண்டுமோ அது நிகழும். அவ்வளவு தான். மற்றவர்கள் உங்களைப் பற்றிப் பேசினால் அவ்வாறே செய்யட்டும். அனைவருக்கும் அறியாமையுடன் இருக்கும் உரிமை உண்டு. தங்கள் அறியாமையினை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். மற்றவர்களின் தீர்ப்புக்கணிப்பை காட்டிலும்  ஏன் உங்களுடைய புரிதலுக்கும் அப்பாலும் கூட  நீங்கள் பெரியவர்,  தயாளம் கொண்டவர் என்பதை மறந்து விடாதீர்கள்.

கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் இவற்றிலிருந்து எவ்வாறு விடுபடுவது?

என்ன கருத்துக்கள்? அவற்றைத் தூர எறியுங்கள். இந்தப் பிரபஞ்சம் உங்களுக்கு ஆச்சரியப் படவும் நெஞ்சார உணரவும் ஏராளமாக அளித்துள்ளது. எனது புத்தாண்டு செய்தியில் நான் கூறியுள்ளபடி, நீங்கள் ஓர் நதிக்கரையில் அமர்ந்திருப்பதை நினைவில் கொள்ளுங்கள். நதி ஓடிச் செல்வதைக் காண்கின்றீர்கள். அதில் என்னவெல்லாம் செல்கின்றன? சில குப்பைகள் செல்கின்றன.சில அழுக்குகள்,மரக்கட்டைகள், கப்பல்கள், மலர்கள் அனைத்தும் மிதந்து செல்கின்றன. என்ன மிதந்து கடந்து செல்கின்றன என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். கடந்து செல்லும் அனைத்தையும் காண்கின்றீர்கள் அவ்வளவு தான்.

எனக்கு மனஉறுதி மற்றும் ஒழுங்கு கொஞ்சம் கூட இல்லை. நான் பெரிதும் முயற்சி செய்துழைத்தாலும் என்னால் அவற்றை வளர்த்துக் கொள்ள முடியவில்லை. நான் என்ன செய்வது?

உங்களுக்கு மன உறுதி இல்லையென்று யார் கூறியது? உங்களுக்கு மனஉறுதி இல்லையெனில் இங்கு வந்திருக்க மாட்டீர்கள். ஒவ்வொரு எண்ணத்தையும் நீங்கள் செயல்படுத்தும் போது அது உங்கள் மன உறுதியினை எடுத்துக் காட்டுகின்றது. “நான் எழுந்து அடுத்த அறைக்குச் செல்லவேண்டும்“ என்று ஓர் எண்ணம் எழுகின்றது. அதை நீங்கள் செய்யும் போது, அது உங்கள் மன உறுதியை குறிப்பிடுகிறது. மன உறுதி இல்லாமல் இருப்பது சாத்தியமே இல்லை.சில விஷயங்கள் நடைபெறாமல் இருக்கலாம். ஏனெனில், உங்கள் மனம் சில பழக்கங்கள், அல்லது சில சபலங்கள் ஆகியவற்றுக்கு ஆட்பட்டிருக்கலாம், அப்போது நீங்கள் உங்களுக்கு மன உறுதி இல்லையோ என்று எண்ணுகின்றீர்கள். அவ்வாறில்லை உங்களுக்கு விருப்பம் இருக்கும் வரையில் சக்தியும் உண்டு.