தந்தேராஸ் தினத்தில் நிறைவாக உணருங்கள்

திங்கள்கிழமை, 9 நவம்பர் 2015,

பெங்களூரு, இந்தியா 



அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! இன்று தந்தேராஸ் தீபாவளி இன்று துவங்குகின்றது. தந்தேராஸ் அன்று நீங்கள் மிக நிறைவாக, அனைத்தையும் அடைந்திருப்பதாக உணருகின்றீர்கள். நிறைவிலிருந்து நிறைய வளருகின்றது. எனவே அனைவரும் திருப்தியுடனும் நிறைவாகவும் உணருகின்றனர்.  



நமக்கு தேவையானதெல்லாம் ஏற்கனவே நமக்குக் கிடைத்துவிட்டதாக உணர்ந்து நடங்கள். இதுவே தந்தேராஸ் செய்தியாகும். நமக்கு எது வேண்டுமோ அது நடக்கும். நமக்கு நிறையவே வந்து கொண்டேயிருக்கும். எப்போதெல்லாம் வெற்றி கிடைக்கின்றதோ ஓர் அருளினால் தான். விளையாட்டில், லாட்டரியில், படிப்பில், போட்டியில் அல்லது அரசியலில் எதில் வெற்றியானாலும், அது அருளினால் மட்டுமே நிகழ்கின்றது. அதை மறந்து ஒருவன் தான் எனும் அகந்தையில் மூழ்கினால் வீழ்ச்சி ஏற்படுகின்றது. எனவே எப்போதெல்லாம், எங்கெல்லாம் வெற்றி ஏற்பட்டாலும் அது அருளினால் மட்டுமே என்பதை எப்போதுமே நினைவில் கொள்ளுங்கள்.