புதன்கிழமை, 3 ஜூன் 2015
பெங்களூர், இந்தியா
கேள்வி - பதில்கள்
குருதேவா! அகம்பாவம், ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாமல் இருப்பது மற்றும்
சந்தேகம் என் உறவை அழித்துவிட்டது. அன்பான உறவின் இரகசியம் என்ன?
நீ உன் இயற்கையான குணத்தோடு இரு.அன்பு என்றால் கொடுப்பது.இந்த பூமியில் வந்ததற்கு
காரணம், மற்றவர்களுக்கு அன்பை கொடுப்பதற்காக மட்டுமே.யாரையும் உன் மேல் அன்பு செலுத்த கட்டாயப்படுத்தாதே.
மந்திரங்களை உச்சரிக்கும்போது உரத்த குரலில் சொல்லவேண்டுமா? அல்லது மனதுக்குள்
மௌனமாக ஜபிக்க வேண்டுமா? உதாரணமாக ஓம் நமசிவாய சொல்வது?
இரண்டுமே சரிதான். ஆனால் உரத்த குரலில் சொல்ல தேவையில்லை.
ஒரு குழுவில் எல்லோரும் சேர்ந்து உரத்த குரலில் பாடுவதை கீர்த்தனை என்று சொல்வார்கள். நடுத்தரமாக, மென்மையாக சொல்வதை சாண்டிங் என்று சொல்வார்கள். மனதுக்குள் ஓசை வெளியே வராமல் சொல்வதை ஜபம் என்று
சொல்வார்கள்.
யோக சாதனைகளை முறையாக செய்து, சேவையில் ஈடுபட்டபோதிலும், சில பழக்க வழக்கங்களை என்னால்
கைவிட முடியாமலிருக்கிறது. அது ஏன்?
பேராசை தான் இதற்கு காரணம்.அப்பழக்கத்தால் ஒரு சுகமும் கிடைக்காவிட்டாலும், ஏதோ சுகம் கிடைப்பதாக நினைக்கிறாய். ஆனால் இப்பழக்கத்தால் உனக்கு எதுவும் கிடைப்பதில்லை.
பெரிய சுகத்துக்காக, ஆனந்தத்துக்காக, பேராசைப்பட்டு இப்பழக்கத்தில் சிக்கியிருக்கிறாய். இப்பழக்கம், நீண்ட காலத்துக்கு
உன்னை அடிமைப்படுத்தாது. சில காலத்துக்கு பின், இப்பழக்கத்தால் என்ன நன்மை கிடைக்கிறது என்பதை உணர்ந்து,பழக்கத்தை கைவிடுவதே நல்லது என்று முடிவெடுப்பாய். இப்படி தோன்றவில்லையா? இந்த அனுபவம்
எத்தனை பேருக்கு உள்ளது ? (பலர் கைகளை உயர்த்துகிறார்கள்.) இப்பழக்கத்தை போதும் போதும் என்று அனுபவித்தாகி விட்டது. இப்போது அதற்கு தேவையில்லை. இதைக் கைவிட்டுவிடலாம் என்று நீ நினைப்பாய்.
நான் இரண்டு வருடமாக இங்கு வருகிறேன். என் நடத்தையில்,செயலில், உறவுகளில் எந்த பெரிய
மாற்றமும் ஏற்படவில்லை. ஏன் அப்படி?
உன்னிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்ளாதே.நேர்மையாக உன்னை கவனித்துப் பார். உனக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று எப்படி நீ சொல்லமுடியும்? ஒரு மாற்றமும் நிகழாமல் இருக்கவே முடியாது. நீ மாறி வருகிறாய். மிக விரைவில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கக்கூடும். அப்படி நடக்காமல் இருந்திருக்கும். அதற்கு சிறிது காலம் ஆகும். எனவே பொறுமையாக இரு. பொறுமை மற்றும் விடாமுயற்சி ஒரு மாற்றத்தை அளிக்கும்.
முயற்சியை கைவிடாதே. உன்னில் ஓரு பகுதி மாறாமலே இருக்கிறது. அதைப் பிடித்துக்கொள். அது தான் உன் உண்மையான நிலை. அது எப்போதும் மாறாது. எப்போதும்
மாறிக் கொண்டிருக்கும் பகுதிகளைப் பற்றிக் குழப்பமடையாதே.
வாயு ஸ்திதி என்றால் என்ன ?
குருதேவர் பரிஸ்திதி (ஓரு குறிப்பிட்ட நிலைமை) பற்றி எனக்குத் தெரியும். நீ
சொல்வது எனக்குத் தெரியாது. ‘வாயு’ என்றால் காற்று. ‘ஸ்திதி’ என்றால் நிலைமை அல்லது தரம் என்று அர்த்தம். உதாரணமாக புதுடில்லி போன்ற மாநகரங்களில் காற்றின்
தரம் மிக மோசமாக உள்ளது. ஒவ்வொருவரும் புதுடில்லியின் சுற்றுச் சூழலை எப்படி மேம்படுத்துவது என்று சிந்திக்கிறார்கள். வாயு ஸ்துதி என்பது ஒரு
வித்தியாசமான ஒன்றாகும். தெய்வங்களை பற்றி
பல பாடல்கள் இருப்பது போல காற்று தேவதையை நினைத்து பாடுவதை வாயு ஸ்துதி என்று சொல்லலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில் யந்திரங்களின்
(பவித்திரமான அல்லது மறைபொருளான வரைபடம்) பங்கு என்ன ?
யந்திரங்கள் ஒரு வரைபடம் போன்றவை. ட்ரான்சிஸ்டர் ரேடியோ அல்லது
சிப்பை கவனித்தால், அதில் மின் இணைப்பு வரைபடம்
இருக்கும்.அதே போல் யந்திரங்கள் இப் ப்ரபஞ்சத்தின் சக்தியை சேகரிக்க உதவும் வரைபடங்களாகும். அவற்றின் மூலம் ப்ரபஞ்சத்தின் வலிமை வாய்ந்த சக்தியை சேகரிக்க முடியும். இவற்றை
ஆழ்ந்து படித்து புரிந்துகொள்ள சில காலமாகும்.இன்று பலர் தாங்கள் யந்திரங்களை உருவாக்குவதாக பொய்யான பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள். 5லிருந்து 10 லட்சம் ரூபாய் வரை விலை சொல்லி விற்கிறார்கள். இப்படி யந்திரங்களை வாங்க வேண்டாம் என்று
நான் சொல்வேன். இந்த ஏமாற்றுக்காரர்களின்
பிடியில் சிக்கவேண்டாம்.ஒன்றும் கிடையாது. இன்று டி.வி.யில் லக்ஷ்மி யந்திரம் 5 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும் என்று
விளம்பரப் படுத்துகிறார்கள். இப்படி விளம்பரம்
செய்பவர்களுக்கு யந்திரங்களின் விஞ்ஞானத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது.
இன்று யந்திர சாஸ்திரம் கற்றறிந்த சில பண்டிதர்களே உள்ளனர். அவர்கள் இந்த யந்திரங்களைப்
பயன்படுத்தும் முறைகளையும், அதன் பயன்களை பற்றியும் அறிவார்கள். நீ ஶ்ரீ யந்திரத்தை
வாங்கி வீட்டில் வைக்கலாம். அதில் ஒரு பிரச்சினையும் இல்லை.