ஞானிகளிடம் அடைக்கலம் புகவேண்டும்

வியாழக்கிழமை 28 மே 2015 

பெங்களூர், இந்தியா


(கீழே வருவது “நல்லவர்களுக்கு ஏன் கெடுதல் நடக்கின்றது“ என்ற பிரசுரத்தின் தொடர்ச்சி)

கேள்வி - பதில்கள்

ஞானம் தேடுபவர், உருவ வழிபாடு செய்வதை விட உருவமற்ற இறைவனை வழிபடுவது சிறந்த்து என்று சொல்லப்படுகிறது. அது ஏன்?

நீ உருவ வழிபாட்டிலிருந்து, உருவமற்ற வழிபாட்டுக்கு செல்ல வேண்டும். நேராக உருவமற்ற வழிபாட்டுக்கு செல்லும்போது, அந்த வழி துன்பம் நிறைந்ததாக இருக்கும். பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில் ‘சில மக்கள் உருவமற்ற இறைவனை வழிபடுகிறார்கள். ஆனால் அந்த வழி வலியும், துன்பமும் நிறைந்தது“ என்று சொல்கிறார். நீங்களே இதை பார்க்க முடியும். உதாரணமாக மோசஸின் வாழ்க்கையைப் பாருங்கள். அவர் வழி துன்பமும் வருத்தமும் நிறைந்ததாக இருந்தது. ஏசுபிரானின் வாழ்க்கையும் துயரம் நிறைந்ததாக இருந்தது. முகமது நபியின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் தன் வாழ்க்கையில்,பல துன்பங்களையும், வலியையும் அனுபவிக்க நேர்ந்தது. அவர் சரித்திரம் இரத்தம் சிந்துவதாக இருந்தது. அவருடைய மரணத்துக்கு பின்பும், துக்கம் தொடர்ந்தது. அவருடைய குடும்பத்தினரும் துன்பத்துக்கும், வலிக்கும் உள்ளாக நேர்ந்தது.
ஆகவே புத்தர் “புத்தம் சரணம் கச்சாமி‘ என்று சொன்னார். ‘நான் புத்தரிடம் அடைக்கலம் புகுகிறேன் என்று அர்த்தம். புத்தர் என்றால், உருவமற்ற கடவுளுக்கு ஒரு உருவம் கொடுத்திருக்கிறோம் என்று பொருள்.

புத்தர் சொன்னது.“சங்கம் சரணம் கச்சாமி“.என்னை இந்த சமுதாயத்துக்கு அர்ப்பணிக்கிறேன் நான் இந்த சமுதாயத்துக்கு சேவை செய்து அடைக்கலம் புகுகிறேன்“ என்று அர்த்தம். மேலும் புத்தர் சொன்னார். “தம்மம் சரணம் கச்சாமி“ நான் இறுதியான உண்மையிடம்  அடைக்கலம் புகுகிறேன்.
துன்பத்திலிருந்து விடுபடுவதற்கு புத்தர் நான்கு விஷயங்களை சொன்னார்.துன்பத்தை அடையாளம் கண்டுகொள். ஒரு காரணம் உண்டு. துன்பத்திலிருந்து விடுபட முடியும். துன்பத்திலிருந்து விடுபட புத்தரிடம் (ஞானியிடம்) அடைக்கலம் புகவேண்டும். புத்தர் என்பது உருவமற்ற இறைவனின் உருவமுள்ள அடையாளமென கொள்ளலாம்.பகவான் கிருஷ்ணரும் இதையே சொல்லியிருக்கிறார்.   
அஹம் த்வம் சர்வ பாபேஹ்யோ, மோக்ஷபாபேப்யோ மோக்ஷயிஷயாமி மா சுசஹ“

உருவமற்ற இறைவனை வழிபடுபவர்களின் பாதை மிகக் கடினமானது, துயரம் நிறைந்தது என்று பகவான் கிருஷணர் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார். உண்மை. எல்லா வழிபாடுகளும் உருவமற்ற இறைவனையே அடைகின்றன. உருவ வழிபாட்டு வழி ஆனந்தமானது. மக்கள் புரிந்து கொள்ளக் கூடியது. நீங்கள் பாறைகளும்,குண்டுகுழிகளும் நிறைந்த பாதையைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது நெடுஞ்சாலை போன்ற அருமையான பாதையைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுப்பது உங்களை வேறு பாதைகளில் எடுத்துச் செல்லும்.

இந்தியா, ஏன் ஞானிகள் விரும்பி வந்து சேருமிடமாக உள்ளது? ஏன் ஆன்மீக வளம் பெற்ற தனி நாடாக இருக்கிறது? இந்தியாவுக்கு ஏதாவது தனிச் சிறப்பு உள்ளதா?

உலகின் எல்லாப் பகுதிகளிலும் புனிதர்கள் இருந்திருக்கிறார்கள்.கலிஃபோர்னியாவின் நகரங்களுக்கு புனிதர்களின் பெயரையே வைத்திருக்கிறார்கள்.க்விபெக் அல்லது மாண்ட்ரியால் சென்றாலும் பல நகரங்களுக்கு புனிதர்களின் பெயர் உள்ளது. ஆனால் இந்தியா பட்டியலில் முதலிடம் பெறுகிறது.
இந்தக் கேள்வி, ஸ்விட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலை ஏன் உள்ளது என்று கேட்பதை போலிருக்கிறது. அமெரிக்காவில் ஏன் பெரிய அழகான ஏரிகள் உள்ளன? ஏன் நயாகாராவில் மட்டும் பெரிய நீர்வீழ்ச்சிகள் உள்ளது? அப்படித்தான்! ஒவ்வொரு நாடும் ஏதோ ஒன்றுக்குப் பிரசித்தமானது. வெந்நீர் ஊற்றுகளை அமெரிக்காவில் யெல்லோஸ்டோன் பூங்காவில் பார்க்கிறோம். பல ஆண்டுகளாக இந்தியா அறிஞர்களும், ஞானிகளும் வசிக்கும் நாடாக இருந்து வருகிறது. எனவே இன்றைய கால கட்டத்திலும், கம்ப்யூடர் துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது. கம்ப்யூடர் துறை அறிவு சார்ந்த தொழிலாக இருப்பதால் இந்தியா இத்துறையில் முதலிடம் பெற்றிருக்கிறது. ஒருவேளை நாட்டின் டி.என்.ஏ வில் அறிவாளிகள் மற்றும் ஞானிகள் பலரை உருவாக்கும் திறன் உள்ளது என்று நினைக்கிறேன். ஆனால் உலகில் எந்த நாட்டிலும் ஞானிகளுக்கு குறைவில்லை. சைனா மற்றும் ஜப்பானிலும் பல ஞானிகள் உள்ளனர்.

குருதேவா ஏன் பக்தி யோகம், கர்ம யோகத்தையும் ஞான யோகத்தையும் விட சிறப்பாக சொல்லப்படுகிறது ?

பக்தி யோகம் மிகவும் ருசிகரமானது. எளிதானது. சீக்கிரம் அடையக் கூடியது. மிகக் குறைந்த உழைப்பில், நிறையச் சாதிப்பது அறிவாளிகளின் போக்கு.

ஆசிர்வாதத்துக்கு காலாவதியாகும் தேதி உள்ளதா? சில சமயம் ஆசிர்வாதம் பலிக்காமல் போகிறது. அதன் காரணம் என்ன?

நான் உன்னை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். தங்கம், வைரத்துக்கு காலாவதியாகும் தேதி உண்டா? நீ ஆசிர்வாதத்தை, தங்கம் வைரத்தை விட, மஞ்சள் கற்களை விட, உலோகத்தை விட குறைவாக நினைக்கிறாயா? ஒரு போதும் அப்படி நினைக்க வேண்டாம்.

குருதேவா ஸாதனா என்ற செல்வம் நாம் இவ்வுலகை விட்டுச் செல்லும் போது நம்மோடு வரும் என்றால், ஏன் நாம் ஸாதனாவிலேயே முழு நேரத்தையும் ஈடுபடுத்துவதில்லை?

உன்னால் அப்படி செய்ய முடியாது. உடலால் எல்லா நேரமும் ஸாதனாவில் ஈடுபட முடியாது. ஒரு வருடம் சாப்பிடக் கூடிய உணவை, நீ இரண்டே நாட்களில் உண்ண முடியாது. ஒவ்வொரு நாளும், நீ குறிப்பிட்ட உணவையே உண்ணமுடியும். அதே போல், ஸாதனாவிலும் அதிகப்படியாக ஈடுபட முடியாது. அப்படி செய்தால், நீ ஒரு நீல நட்சத்திரமாகி விடுவாய். (வாழும் கலையில் நீல நட்சத்திரம் என்று சொல்வோம்.) நீல நட்சத்திரம் என்றால் அவன் நிலத்தில் நடக்கமாட்டான். மரை கழன்றவன். (மனநலமற்றவன் )

வாழும் கலை துவங்கிய காலத்தில், ஒருவர் சஹஜ் சமாதி தியானப் பயிற்சி எடுத்துக்கொண்டார். அவர் ஒரு புத்திசாலி. அவருக்கு அந்த பயிற்சி மிகவும் பிடித்துவிட்ட்து. நான் இன்றே ஞானமடைய விரும்புகிறேன்; ஞானமடையும் வரை விடாமல் தியானம் செய்வேன் என்று சொன்னார். அவர் அமர்ந்து, ஒரு நாளில் எட்டு மணி நேரம் வரை தியானம் செய்வார். டெல்லி ராமகிருஷ்ண ஆசிரமத்துக்கு சென்று, நாள் முழுதும் அங்கு அமர்ந்து தியானம் செய்வார். மக்கள் தியான மண்டபம் மூடும்போது வெளியே போக சொல்லும் வரை அங்கேயே அமர்ந்திருப்பார். திடீரென்று ஒரு நாள், அவர் தான் ஹனுமான் என்று எண்ணத் துவங்கினார். அங்குள்ள கோவிலுக்கு சென்று, “நான் தான் ஹனுமான். நானிருக்கும் போது ஏன் மக்கள் இந்தக் கல்லை வழிபடுகிறார்கள்”? என்று சொன்னார்.

அங்கு என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். 12 போலீஸ் காரர்கள் வந்து அவரை அங்கிருந்து கூட்டிச் செல்ல வேண்டி வந்தது. அவரை மனநோய் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த நாட்களில் செல்ஃபோன் கிடையாது. நான் ஜான்சியில் இருந்தேன். இந்தூரில் ஒரு நிகழ்ச்சிக்காக செல்ல வேண்டியிருந்தது. ஜான்சி இரயில் நிலையம் சென்ற பின்பு, நாம் டெல்லி செல்ல வேண்டுமென்று சொன்னேன். நான் டெல்லிக்குச் சென்ற பின், அங்குள்ளவர்களுக்கு பாரம் இறங்கியது. அந்தப் பையனை எப்படி நடத்துவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

நிச்சயமாக அந்தப் பையன் குணமாகிவிட்டான். என்ன சொல்கிறேன் என்று புரிந்து கொள்ளுங்கள். ஸாதனா என்பதை நாம் படிப்படியாகச் செய்ய வேண்டும். முதுநிலைப் பயிற்சி சற்று அதிகம் செய்யலாம். ஆண்டுக்கு 4 அல்லது 5 முறை செய்யலாம். நாள் முழுதும் ஸாதனாவில் அமர்ந்திருப்பது சாத்தியமில்லை. வளர்ச்சி படிப்படியாக இருக்க வேண்டும். ஒருநாள், திடீரென்று உனக்குப் புரியும். ஓ நான் மாறி விட்டேன். எதுவும் என்னைத் தொந்தரவு செய்வதில்லை. நான் ஆனந்தமாக இருக்கிறேன். என் மகிழ்ச்சியை எதுவும் கெடுக்க முடியாது. இப்படிப்பட்ட ஆச்சரியம், நீ வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் போது வரும்.