முடிவே இல்லாத அன்பு

திங்கட்கிழமை, 01-05-2015, 
அண்டோகஸ்ட், ஜெர்மனி
சத்சங் என்றால் இரண்டு விசயங்கள் உள்ளன.
1. இடது மூளையின் செயலாக்கம், புத்திசாலித்தனமான கலந்துரையாடல்.
2. வலது மூளையின் செயலாக்கம், பாடுவது.
இரண்டுமே தேவை தான். கொஞ்ச நேரம் பாடலாம், அதன் பின் உங்களுக்கு கேள்வி இருந்தால் கேட்கலாம், பின் கலந்துரையாடலாம்.
கேள்வி & பதில்
குருதேவ், அன்பினால் என்ன வெற்றி கிடைக்கிறது?
அன்பு வியாபாரமல்ல வெற்றி அல்லது தோல்வி அடைவதற்கு. அன்பு என்பது உத்யோகமல்ல, வெற்றி,தோல்வி அடைவதற்கு.அன்பு என்பது ஒரு செயலல்ல, வெற்றி,தோல்வி அடைவதற்கு. எனது அன்பானவர்களே, அன்பு தான் உங்களுடைய சுபாவம்! நீங்கள் வெளிப்பாடு செய்கிறீர்களோ, இல்லையோ, அது இருக்கிறது. அன்பு உங்களது இயற்கையான சுபாவம் என்பதை உணருங்கள். ,வெற்றி அல்லது தோல்வியை பற்றி நினைக்க வேண்டிய அவசியம் இல்லை.
உங்களை சிலர் புரிந்து கொள்ளலாம், சிலர் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். சிலர் உங்கள் மேல் அன்பு செலுத்தலாம், அவர்கள் எப்பொழுதுமே உங்கள் மேல் அன்புள்ளவராக இருப்பார் என்று நீங்கள் சொல்ல முடியாது. 20 வருடங்களுக்கு மேல் ஒன்றாக வசித்தவர்கள், சில சமயத்தில் ஒருவர்கொருவர் என்று சொல்பவர்கள் கூட, திடிரென இனிமேல் நமக்கு எப்பொழுதும் ஒத்து வராது என்று இருப்பவர்களும் உண்டு. திடிரென மக்கள் ஒன்றாக இனிமேல் இருக்க முடியாது என்று, அவர் அவர்கள் போக்கில் செல்ல விரும்பிகிறார்கள்.
அன்பு என்பது ஒரு செயல் அல்ல. வெறும் சூழ்நிலை அல்ல இயற்கையானது. நீங்கள் ஒருவர் மீது அன்பு வைத்திருப்பதாக இருந்தால், அறிவுடைமை அல்லது விவேகம் அந்த அன்பில் இல்லாது இருந்தால்,அது எப்பொழுதும் அப்படியே இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.ஞானத்துடன் கூடிய அன்பு, நித்திய ஆனந்தம்.சுயநலமான அல்லது தனிப்பட்ட இன்பத்திற்க்கான அன்பு, விரைவிலே அல்லது சிறிது காலம் கழித்தோ மனம் உடைந்து, துன்பத்தை கொடுக்கிறது. உங்கள் அன்பு மற்றவர்களுக்கு உதவுவதாக இருந்தால், யாராலும் அழிக்கமுடியாது.

மற்றவர்களிடமிருந்து எதோ ஒன்றை பெறுவதற்காக என்று இருந்தால் விரைவிலே அல்லது சிறிது காலம் கழித்தோ அது உடைந்து சிதறிவிடும். அன்பு என்றால் என்னவென்று நினைக்கிறீர்கள் என்று கண்டுபிடியுங்கள். பிறரிடமிருந்து மகிழ்ச்சியை பெறுவது தான் அன்பு என்ற சொல்லுக்கு அர்த்தமா? அப்படியென்றால்,அது மிக்க துன்பத்தை கொடுக்க போகிறது. உங்களது, அன்பு மற்றவர்களை கவனித்து கொள்வதாக இருந்தால் மற்றும் அன்பு இல்லாமல் நீங்கள் இருக்க முடியாது, பிறகு அது தான் உங்களது இயற்கையான சுபாவம். அது தான் உண்மையான அன்பு.

வெறும் உணர்ச்சிகள் அல்ல. “அன்பின் கொண்டாட்டம்” மற்றும் “நாரத பக்தி சூத்திரத்தில்” அன்பை பற்றி நிறைய பேசியுள்ளேன். அதை படித்து பாருங்கள். அன்பு என்ற பெயரால் உலகத்தில் பெரிய குழப்பங்கள் தான் நிகழ்கின்றன. மக்களும் அன்பு என்ற பெயரால் என்ன தான் செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை, மிக பாவமாக உள்ளது.

குருதேவ், நம் வாழ்க்கையில், நம்மோடு இருந்து மறைந்தவர்களை எப்படி மறப்பது?

உங்களை பற்றியும்,வாழ்க்கையை பற்றியும்,பிரபஞ்சத்தை பற்றியும், பார்வையை மிகைப்படுத்தி
பாருங்கள். இந்த பிரபஞ்சம் குறைந்தபட்சம் 19 பில்லியன் ஆண்டுகள் இருக்கிறது மற்றும் இது பலபில்லியன் நட்சத்திர கூட்டத்தின் ஒரு பகுதியாகும்.பிரபஞ்சத்தை பார்க்கும் போது சூரிய மண்டலம்ஒரு புள்ளி போன்றது. பில்லியன் கணக்கான நட்சத்திர கூட்டத்தின் ஒரு பகுதி தான் நமது வான் மண்டலம்.வான்மண்டலம் மிக சிறியது அதில் சூரிய மண்டலம் ஒரு புள்ளி, அதில் நமது பூமி,
அதில் நீ. பூதக்கண்ணாடி எடுத்து பார்க்கும் முன், நீ அங்கு தெரிவதில்லை.உங்கள் வாழ்க்கை 
என்பது என்ன? நீ அதில் மிக மிக சிறியது. 
அடுத்த விஷயம் காலம். பல பில்லியன் வருடங்களாக, மக்கள் இந்த புவியில் நடந்திருப்பார்கள். இன்று, ஏழு பில்லியன் மக்கள் இந்த பூமியில் உள்ளனர், தினமும் பிறந்து கொண்டு உள்ளனர், பலர் தினமும் இறந்து கொண்டுள்ளனர். உங்கள் வாழ்க்கை என்பது என்ன? கண் இமைக்கும் பொழுதில், நீங்கள் அதற்குள் மறைந்து விடுகிறீர்கள்.இந்த பிரமாண்டத்தை ஒப்பிடும் போது,உங்கள் வாழ்க்கையை என்பது ஒன்றுமில்லை என்பதை உணர்வீர்கள்!
பூமியில் 80 வருடங்களாக நீங்கள் வாழ்வதாக இருந்தால், அதில் 40 வருடங்கள் தூங்கி கழித்து விடுகிறோம். 10 வருடங்கள் குளியலறையில் கழித்து விடுகிறோம்.10 வருடங்கள் சாப்பிட கழித்து விடுகிறோம்.15 வருடங்கள் வேலைகளில் கழித்து விடுகிறோம்.வாழ்க்கையில், விழித்திருக்கும் காலமே மிக சிறியது. நான் என்பது என்ன? ஒன்றுமே இல்லை. யோசித்துப் பாருங்கள், வாழ்க்கை முக்கியமற்ற ஒன்று என்பதை உணர்வீர்கள்.
ஒவ்வொரு நாளும் பில்லியன் கணக்கான எண்ணங்கள் உங்களது மூளையில் வந்து செல்கின்றன. சில எண்ணங்களை மட்டும் பிடித்துக் கொள்கிறோம். எல்லா எண்ணங்களையும் பிடித்து கொள்வதாக இருந்தால், நீங்கள் மன நோயாளி மருத்துவமனையில் தான் இருக்க வேண்டும். உங்களது வாழ்க்கையை மிக பெரிய கோணத்தில் பார்த்தால், எல்லா கவலைகளும் மறைந்து, புதிய பரிமாணத்தை காணலாம்.
இப்பொழுது, மிக நுண்ணிய வியத்தை பார்த்தால்,அது மேலும் மிகுந்த ஆச்சரிய படக்கூடியதாக இருக்கும். மூளையில் பில்லியன் கணக்கான செல்கள்,  தினமும் செல்கள் பிறக்கின்றன, பல செல்கள் இறக்கின்றன. நமது வயிற்றில் 50,000 வகையான பாக்டீரியாக்கள் உள்ளன. நெற்றியில் மிக நுண்ணியதாக பிரிக்கப்பட்ட 3 விதமான பகுதிகள் உள்ளன. அவைகள் எல்லை கோட்டை தாண்டாமல், அந்தந்த பகுதியில் இருக்கும். இந்தியாவில், மக்கள் விபூதியை மூன்று கோடுகளாக நெற்றியில் இட்டுக் கொள்வார்கள். ஏன் என்று ஆச்சிரியப்பட்டளேன். ஆனால், மிக நுண்ணியதாக பிரிக்கப்பட்ட 3 விதமான பகுதிகள் உள்ளன, அவை ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டது என்று  இப்பொழுது விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இது போலவே, நிறைய வகையான பாக்டீரியாக்கள் மூக்கின் நுனியில் உள்ளன. விஞ்ஞானிகளை பிரமிக்க செய்கிறது. DNA விலிருந்து கிடைக்கக்கூடிய தகவல்களை விட அதிகமாக மூக்கு நுனியிலிருந்து கிடைக்கிறது. மூக்கு நுனியிலிருந்து மேலும் எவ்வளவு தகவல்கள் கிடைக்கும் என்று புரியாத நிலையில் விஞ்ஞானிகள் உள்ளனர். மிக நுண்ணிய விசயங்களில் ஆழமாக செல்ல, செல்ல நிறைய உள்ளன! அவைகள் நம்மை மிக பிரமிக்க செய்கிறது.
அணுவை எடுத்துக் கொள்ளுங்கள், இரண்டு பிரபஞ்சத்திற்குள் உள்ள இடைவெளி போன்று அணுவிலும் உள்ளது. அணுவில் 99.99% வெற்றிடம் தான் உள்ளது. நமது உடலில் உள்ள செல்களிலும் அவ்வாறு தான் உள்ளது. நமது உடலில் உள்ள செல்களில் வெறும் வெற்றிடம் தான் உள்ளது.அறிவியல் அல்லது ஆன்மீக பாதையை எடுத்துக் கொண்டால், நீங்கள் சேரும் இடம் ஒன்று தான். எல்லாமே வெற்றிடம் தான் என்று இரண்டுமே சொல்கிறது. 

ஒருவர் தொடர்ந்து 8 வாரங்களுக்கு தியானம் செய்து வந்தால்,மூளையின் கட்டமைப்பில் மாற்றம், மற்றும் மந்த தன்மையிலிருந்து முன்னேற்றம் ஏற்படுகிறது என்று சமீபத்தில் அமெரிக்க மருத்துவ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. தியானம் செய்வதால் இதுபோல் நிறைய பலன்கள் உள்ளன. மரபணுவை பற்றி படிப்பது மிகவும் கவரக்கூடியது. மனித மரபணுவில் மற்ற அனைத்து மரபணுக்களையும் காணலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு மனித மரபணுவில், பல தரப்பட்ட மிருகங்களின் மரபணுக்கள் உள்ளன. உங்கள் உடம்பில் உள்ள ஒரு அணுவிலிருந்து , ஒரு யானை கூட உருவாக்க முடியும். மனித உடம்பு மிக முழுமையானது, அதிலிருந்து மற்ற மரபணுக்களை உருவாக்க முடியும்.இதெல்லாம் மிக்க ஈர்க்கக் கூடியதல்லவா! இவைகள் எல்லாம் இருக்கும் போது, கவலைபட என்ன உள்ளது? நான் உங்களது கேள்வியையே மறந்துவிட்டேன்.
  
அன்புள்ள குருதேவ், இந்த புவியில் மனிதனாக பிறந்ததின் உண்மையான நோக்கம் என்ன?

நீங்கள் யார் என்று அறிந்து கொள்வதும், மற்றும் சிறு தேவதைகளாக இருப்பதும் தான். நீங்கள் இந்த பூமியில் வாழும் பொழுது, நம்மை சுற்றியுள்ள மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பது, மற்றும் நீங்கள் சந்தோஷமாக இருப்பது. உலகத்தில் தேவதைகளாக இருங்கள். 

இரண்டு வகையான உலகத்தில் வாழ்வதாக உணர்கிறேன். “வாழும் கலை” யில், மற்றொன்று வெளி உலகத்தில். சில நேரங்களில் இந்த இரண்டையும் இணைப்பது கடினமாகிறது. இதை பற்றிய உங்களது அபிப்பிராயம்?


நல்லது. பாலமாக இருங்கள். நீங்கள் பாலமாக இருந்து, மக்களை இங்கிருந்து அங்கு செல்ல உதவியாக இருங்கள். அது மிகவும் சிறிய பாலம் தான்.