மகிழ்ச்சி என்பது முக்கியமான ஒன்று

சனிக்கிழமை - 04/05/2014,

பூனே, மகாராஷ்டிரா.


(கீழ் உள்ளது “ஆத்மாவின் சேவை”யின் தொடர்ச்சி)

சமுதாயத்தின் வளர்சிக்காக உழைப்பது ஒவ்வொருவரது பொறுப்பாகும். இந்த தோட்டக்காரரை மிக நேசிக்கிறோம், ஆனால் இந்த தோட்டத்தை (சமுதாயத்தை) விரும்புவதில்லை என சொல்லிவிட முடியாது. ஜனசேவா (மக்களுக்கு சேவை செய்வது) ஜனார்த்தன சேவை (கடவுளுக்கு செய்யும் தொண்டு). சேவைகள் செய்ய ஈடுபட வேண்டும்.

யாருக்கெல்லாம் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் இது மக்களுக்கு தொண்டு செய்ய, எனது சொந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாட்டின் தலைவர்கள் பணிவுடனும், உறுதியாக ஒரு சேவகன் போல் சேவை செய்ய வேண்டும். கடவுளை “தசானுதாச” என்று சொல்வதுண்டு. பொருள் தொண்டருக்கு தொண்டன் என்பதாகும். பகவான் “ஹரி”யை தொண்டர்களுக்கு தொண்டன் என்று சொல்வது உண்டு. கடவுள் அவரது பக்தர்களுக்கு பணிவு மற்றும் அன்புடன் சேவை செய்கிறார். ஆகவே நாமும் கடவுளை போல்  “தாசனாக” (எப்போதும் சேவை செய்ய தயாராக), ஆனால் நாம் “உதாஸ்” (கவலையோடு) சாக இருக்ககூடாது.

எல்லோரும் லஞ்சம் வாங்குவதாக சிலர் நினைக்கிறார்கள். உண்மை அல்ல. இன்றைக்கும், எல்லா இடங்களிலும் நல்ல மனிதர்கள் உள்ளனர். “துவாப்பர யுகத்தில், ஐந்து பாண்டவர்கள் மற்றும் நூறு கௌரவர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? இந்த கலியுகத்தில் நூறு பாண்டவர்கள் (இங்கு உயர்ந்த மனிதர்கள் என்று அர்த்தம் செய்ய வேண்டும்) மற்றும் ஐந்தே கௌரவர்கள் (கெட்ட மனிதர்கள்)    
மிக சிறிய எண்ணிக்கையுள்ளவர்கள் தான் தற்போது தொந்தரவு தருகிறார்கள்.ஆனால், நல்லவர்கள் அமைதியாக இருப்பதால் தான், மேலும் அவர்களது அட்டகாசம் தொடர்கிறது. சமுதாயத்தில் நல்ல மனிதர்களும் அமைதியாக இருக்கிறார்கள். ஓட்டுபோட கூட போவதில்லை. எதற்கு தொந்தரவு, வெளியில் மழை அல்லது வெயிலாக உள்ளது, வீட்டிலேயே சந்தோசமாக இருக்கலாம் என நினைக்கிறார்கள். இதுபோல நடத்தையால், அவர்கள் ஓட்டு போட செல்வதில்லை. நாம் நினைக்க கூடாது என கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் கண்டிப்பாக சென்று ஓட்டுபோட வேண்டும். இந்த பகுதியில் நான் நேரில் சென்று ஓட்டு பதிவு சதவிகிதத்தை பார்த்தேன். நாம் நூறு சதவிகித ஓட்டு பதிவு ஆவதை நிகழ்த்த வேண்டும்.

மகாராஷ்டிராவில் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். முந்தைய காலத்தில் இதுபோல் நடந்ததில்லை. ஒரு லட்சம் இந்திய இராணுவ வீரர்கள், இரண்டாம் உலக போரில் உயிர் இழந்தனர். அதில் பெரும்பாலானோர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்.அதே சமயத்தில், நாடு முழுவதும் “பிளேக்கு“ நோய் பரவிய பயத்தில் இருந்த சமயத்தில் கூட யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. இப்பொழுது, ஒரு மகசூலில் நஷ்டம் ஏற்பட்டலே, மக்கள் இது போல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

போன வாரம் ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டார்கள் என அறிய வந்தேன். இதை தடுக்க, நாட்டின் பல இடங்களுக்கு சென்று, விவசாயிகளை சந்தித்து வருத்தமடைய வேண்டாம் என சொல்லி வருகிறேன். இப்பொழுதும் உலகத்தில் மனிதநேயம் இருக்கிறது. நான் உங்களோடு இருக்கிறேன். வாழும் கலையிலுள்ள அனைத்து ஆசிரியர்களும், தன்னார்வ தொண்டர்களும் உங்களோடு இருக்கிறார்கள். நீங்கள் தற்கொலை செய்ய விட்டுவிட மாட்டோம். அவ்வாறு செய்ய தேவையில்லை. எல்லா வகையிலும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். அன்பு மனிதநேயம் மற்றும் சார்ந்து இருப்பது நம் அனைவரிடத்திலும் உள்ளது. மக்களை சந்தித்து பேச வேண்டும். சமுதாயத்தில் நாம் மகிழ்ச்சி அலையை கொண்டு வரவேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட மொத்த உள்நாட்டு மகிழ்ச்சி என்ற முக்கியத்துவத்தை ஐக்கிய நாடுகள் அங்கீகரித்துள்ளது. இதை உதாசீனம் செய்ய கூடாது.மகிழ்ச்சி என்பது மிக முக்கிய பகுதி. மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்களா? தன்னிறைவுடன் உள்ளார்களா? இப்பொழுது, இந்த பகுதிகளும் அளக்கப்படுகிறது.
போன மாதம், நான் “வியானா” வில் இருந்தேன். அங்கு (IAC) மாநாடு இருந்தது, அதில் 50 நாட்டு முந்தைய பிரதம மந்திரிகள் கலந்து கொண்டனர். அனைவரும் உலகில் லஞ்சம் மிகுந்திருப்பதை கண்டு வருந்தினர். லஞ்சம், தீவிரவாதம், வன்முறை இதுபோல் உள்ள அனைத்து விசயங்களையும் விவரமாக விவாதித்தனர்.

ஜப்பான் மற்றும் கனடா நாட்டு முந்தைய பிரதம மந்திரிகள் கூட கலந்து கொண்டனர். கடந்த 20 ஆண்டுகளாக இந்திய பிரதமர் யாரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பியவர்கள்,அவர்களது உடல்நிலை குறைவால் கலந்து கொள்ளவில்லை. இந்தியாவிலிருந்து இதில் பங்கு கொள்ளவில்லை. இந்த கவுன்சில் ஏன் என்னை அழைத்தார்கள் என்று தெரியவில்லை. இன்றைய நிலையில், சமூகம் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றிய பல விவாதங்களை நடத்தினோம். நானும், எனது விசயங்களை முன் வைத்தேன்.

குருஜி, எங்கள் நாட்டிலும் மிகுந்த லஞ்சம் உள்ளது என்று அங்கிருந்த மக்கள் கூறினர். 5 அல்லது 6 வருடத்தில் ஒன்று அல்லது இரண்டு ஊழல்கள் நடக்கின்றன. ஆனால் ஒவ்வொரு மாதமும் ஐந்து அல்லது ஆறு ஊழல்கள் இந்தியாவில் நடக்கின்றனவே, அது எப்படி? பாருங்கள், இந்தியா மிகுந்த மக்கள் தொகை உள்ள நாடு. இப்பொழுது இந்திய மக்கள் தன் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நன்கு புரிந்து கொண்டுள்ளனர் என்று கூறினேன். வரும் காலத்தில், இந்தியா மிக பெரிய வளர்ச்சி அடையும், அதை கண்டு உலகமே வியக்கும்.

இந்தியாவிலுள்ள ஆன்மீகத்தால் எப்பொழுதுமே இந்தியா மிக சக்தி வாய்ந்த நாடு. நம் நாடு பாதுகாப்பான மற்றும் வலிமையான நாடு என்ற பெயரை நாம் கொண்டு வருவது அவசியம். இந்தியாவில் கற்பழிப்பு நிறைய நடப்பதாக மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று இன்று மக்கள் பேசுகிறார்கள். நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு முக்கிய காரணம் மதுபழக்கம் தான். மது பழக்கத்தால் தான் நிறைய மக்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்கிறார்கள். இந்த நச்சுப்பொருளை நம் சமூகத்தில் இருந்து ஒழித்தால் ஒழிய, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடரும்.

இதுபோல் சில நிகழ்ச்சிகள் பத்திரிக்கையில் வெளிவருகிறது. கிராமக்களில் நடக்கும் இத்தகைய நிகழ்ச்சிகள் வெளி வருவதில்லை. கணவர் குடித்துவிட்டு வீட்டிற்க்கு வந்து, மனைவியை அடிக்கிறார். காலையில் குடி போதை தெளிந்தவுடன், அதே கணவர், அவள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். அவளது இரக்கமுள்ள மனதால் அவனை மன்னித்து விடுகிறாள். ஆன்மீக அலையால் இன்றைய இதுபோல் உள்ள நிலையை நாம் மாற்ற வேண்டியது அவசியம். (VBI) வின் தன்னார்வ தொண்டர்கள் கிராமம், கிராமமாக சென்று மக்களிடையே அமர்ந்து பேச வேண்டும். அவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கவேண்டும். முடிந்த இடங்களில் “சத்சங்கம் நடத்துங்கள். ஆன்மீக அலையை கொண்டு வருவதால் மட்டுமே,மிக பெரிய மாற்றத்தை கொண்டு வரமுடியும். இது போல் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்து உள்ளன, மற்றும் எல்லா இடங்களிலும் தேவையான மாற்றங்கள் நிகழ்கின்றன.

வாழும் கலையில் உள்ள யுவாச்சாரியர்கள் மற்றும் ஆசிரியர்களை நான் வாழ்த்துகிறேன். வரண்டு கிடந்த, தண்ணீர் ஓடாத ஐந்து ஆறுகளை இவர்கள் புதுப்பித்துள்ளனர். இந்த மகத்தான சாதனையை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். கர்நாடகாவில் குமதவதி ஆறு, மகாராஷ்டிராவில் தரணி ஆறு – ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். சோலாப்பூர் ஏரியில் மிகுந்த பாசிகள் வளர்த்து இருந்தன. அங்கு இருந்த VBI இளைஞர்கள் ஒன்று கூடி முழுவதுமாக சுத்தம் செய்தனர்.இப்பொழுது, அந்த தண்ணீர் சுத்தமாக உள்ளது. இதுபோல் நல்ல விசயங்கள், மேலும் நல்ல விசயங்களை செய்ய ஊக்கம் அளித்தது.

மகராஷ்டிராவில் கிடைத்த ஊக்கத்தை வைத்து, கர்நாடகாவிலுள்ள மூன்று நதிகளுக்கு புனர்வாழ்வு கொடுத்தனர். டெல்லியில் மட்டும் நூறுக்கு மேற்ப்பட்ட பணிகளை நிறைவு செய்துள்ளனர். மாற்றங்களை கொண்டுவர நம்முள் சக்தி இருக்கிறது, ஆகவே, நாம் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். இன்றும் இந்த சமுதாயத்தில் நல்ல மனிதர்கள் உள்ளார்கள் என்பதில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். நல்ல மனிதர்களால் தான் நம் சமுதாயம் உயர்ந்து நிற்கிறது. ஒவ்வொருவரும் நேர்மையற்ற அல்லது கெட்டவர்கள் என்று நினைக்காதீர்கள். எல்லோரும் ஏமாற்றுக்காரர்கள் என்று எண்ணும் போது, அவர்கள் அவ்வாறு இருக்க அக்கீகாரம் கொடுத்து விடுகிறோம். 

”ஒவ்வொருவரும் இப்படித்தான்” என்று நாம் நினைப்பதால் தான், ஏன் நான் கூட அவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது என்ற எண்ணங்கள் வருகின்றன.நான் மட்டும் மற்றவர்களை விட வித்தியாசமாக நடக்க வேண்டும்? எல்லோரும் கெட்டவர்கள் என்று சொல்வதே தவறு. எல்லோரும் தவறு செய்பவர்களாக இருக்க முடியாது. உலகத்தையே கட்டி காக்கும் மிக பெரிய தெய்வீக சக்தி மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். கடவுள் என்னை சார்த்தவர் மற்றும் என்னை நேசிப்பவர் என்பதில் நம்பிக்கை வைக்க வேண்டும். பிறகு, உங்கள் வாழ்வு மலர்வதை பாருங்கள். நீங்கள் செல்லும் இடமெல்லாம் ஆனந்தத்தை பரப்புங்கள். இந்த நம்பிக்கையை வைக்கும்பொழுது, விரும்புவது நடக்க ஆரம்பித்து விடும். இங்கு உள்ளவர்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். இந்த பாதையில் வந்தபின், தாங்கள் நினைப்பது நடக்க ஆரம்பித்துள்ளதை, எத்தனை பேர் உணர்கிறீர்கள். கையை உயர்த்தி காட்டுங்கள். (கூட்டத்திலுள்ள பலர் கையை உயர்த்தினர்.)“நான் நினைப்பது நடக்கிறது“ என்று நான் சொல்லும் போது, “ஓ,குருஜி, நீங்கள் வித்தியாசமானவர் என்று கூறுகிறீர்கள். 

பாருங்கள் தெய்வீக தன்மை எல்லோருக்கும் பொதுவானது தான்.கடவுள் எங்கும் இருக்கிறார் என்று சொல்லும் போது, பிறகு அவர் எல்லோருள்ளும் இருக்கிறார். அப்படிதானே? கடவுள் எல்லோருக்கும் சார்த்தவர் என்று சொல்லும் பொழுது, பிறகு நிச்சயமாக உங்களையும் சார்த்தவர் தானே? கடவுள் எல்லா நேரங்களிலும், எப்பொழுதும் நம்முள் தொடர்ந்து இருந்து கொண்டுள்ளார். வாழ்க்கையில் நமக்குள்ள குறைகளை, தொந்தரவுகளை நீக்கக்கூடிய மிக சக்தி வாய்ந்த தெய்வீக தன்மையில் நாம் அசைக்க முடியாத நம்பிக்கையை வைக்க வேண்டும். ஆகவே, கடவுள் என்னுள் இருக்கிறார், அவர் என்னை சார்ந்தவர் என்பதை சற்று உணருங்கள். அறிந்து நம்பிக்கையுடன், ஆழ்ந்த ஓய்வெடுப்பது தான் தியானம்.


இந்த அசைக்க முடியாத நம்பிக்கையுடன், தினமும் நீங்கள் தியானம் செய்யும் போது என்ன பலன் கிடைக்கிறது? உங்களது ஆழ் மனசக்தி திடப்படுகிறது. நீங்கள் மற்றவர்களை ஆசீர்வாதம் செய்து, அவர்களது தேவைகளையும் நிறைவேற்றலாம். நம்முள் இந்த நம்பிக்கை இருந்தால், நம் வாழ்க்கையில் எந்த மாதிரியான சூழ்நிலைகளையும் சமாளித்து வெளிவந்து விடலாம். ஆகவே, இந்த செய்தியை விவசாயிகளுக்கு, இளைய சமுதாயத்திற்கு மற்றும் மாணவ சமுதாயத்திற்கு பரப்புங்கள். ஒரு மகசூலை விட நமது வாழ்க்கை மிக முக்கியமானது.ஒரு மகசூல் சரியாக விளையாததால், தற்கொலை செய்து கொள்வது புத்திசாலிதனம் அல்ல.வாழ்க்கை அதை விட மிக கிடைப்பதற்கு அரியது. நீங்கள் அவர்களுக்கு சொல்லி புரிய வைக்கவேண்டும்.