திங்கள்கிழமை
- ஏப்ரல் 20,
பாத் அண்டோகஸ்ட்
- ஜெர்மனி
நமது
உடல் ஒரு மாயத்தோற்றம். உடல் எப்பொழுதும் நிலையாக இருப்பதில்லை. அது மாறி கொண்டே
இருக்கும். நமது உணர்ச்சிகளும் மாறி கொண்டே இருக்கும். இதை பார்க்கும் பொழுது,
எல்லாமே மாயை தான். நீங்கள் மகிழ்ச்சியை பற்றி எனது “ட்வீடில்” படித்தீர்களா? நீங்கள் மற்றவர்களின் முகத்தை பார்க்கும்
பொழுது, அவர்கள் மகிழ்ச்சியற்று காணப்பட்டால் அதற்கு அவர்கள் மனதில் ஏற்பட்ட
ஆசையெனும் முள்தான் காரணம். வருத்தத்திற்கும் ஆசையெனும் முள் தான் காரணம். நீங்கள் கவனிக்க தவறினால் அது பழிச்சொல் சொல்வது, நல்ல விஷயங்களில் நம்பிக்கையில்லாமை,
ஏமாற்றம் மற்றும் கோபமாக மாறி விடும். நீங்கள் அந்த முள்ளை எடுத்து எறிந்துவிட
வேண்டும். நீங்கள் முன்னேற்றமடைதவர்களாகவும்,
மகிழ்ச்சியுள்ளவர்களாகவும் உணரலாம்.
கீழ்கண்ட
நான்கு நிலைகள்:-
1. பழிச்சொல் மற்றும் கேலி பேசுதல்.
2. நல்ல விஷயங்களில் நம்பிக்கையற்ற தன்மை.
3. ஏமாற்றம்
4. கோபம்
மற்றவர்களை
பழிச்சொல் சொல்வது அல்லது நல்ல விஷயங்களில் நம்பிக்கையற்று இருப்பது அல்லது
ஏமாற்றம் அடைவது மற்றும் கோபமடைவது போன்றவைகளை பல நேரங்களில் நாம் ஏன் உணர
முடிவதில்லை? நீங்கள்
கோபம் அடைந்தால், உங்களை நீங்களே புண்படுத்திக் கொள்கிறீர்கள் அல்லது மற்றவர்களை
புண்படுத்துகிறீர்கள். நீங்கள் மற்றவர்கள் மேல் கோபப்பட்டாலும் அல்லது உங்கள் மேல் கோபப்பட்டாலும் வருத்தம் அடைகிறீர்கள். கோபம் யார் மேல்
இருந்தாலும் வருத்தமடைய தான் செய்கிறீர்கள். மனிதர்கள் பல நேரங்களில் இதை
கவனிப்பதேயில்லை. எவன் ஒருவன் இதை எப்பொழுதாவது கவனத்திற்கு கொண்டுவந்தாலும் அதை
பிடுங்கி எறிய தைரியமோ விருப்பமோ எற்படுவதில்லை. எப்பொழுது நீங்கள் ஆசை எனும்
முள்ளை இழுத்து எறிய பழக்கப்படுத்திவிட்டீர்களோ. அப்பொழுது நீங்கள் சந்தோஷமாகவும்
ஊக்கத்துடனும் திருப்தியுடனும் இருக்கலாம். அதை தான் “சித்தி” என்கிறோம். இதை அடைய
சொந்த முயற்ச்சியும் மற்றும் கடவுளின் கிருபையும் அவசியம். நீங்கள் சொந்த
முயற்சிகளை செய்யும் பொழுது, கடவுளின் கிருபை தானாக பின் தொடருகிறது.
கேள்வி-பதில்
எப்படி இந்த ஆசையெனும் முள்ளை எடுப்பது?
சொந்த முயற்சியில்
தான்.முதலில் நாம் எதனால் வருத்தமடைகிறோம் என்ற காரணத்தை உணர வேண்டும். நாம் ஏன்
நிலை தடுமாறுகிறோம்? ஏனென்றால் நம்மை சுற்றி நடக்கும் செயல்கள் சரியானதாக
இருப்பதில்லை அல்லது மக்கள் சரியானவர்களாக இருப்பதில்லை அல்லது நீயே சரியாக இருப்பதில்லை. பாருங்கள்.
நீங்கள் உங்கள் வேலைகளை பற்றி அல்லது உங்களது ஆரோக்கியத்தை பற்றி எண்ணி
வருத்தப்படுகிறீர்கள். இவைகள் அனைத்தும் உங்களுக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும்
நீங்கள் ஒருநாள் இறக்கத்தான் போகிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை
என்ற நாடகம் ஒரு நாள் முடிந்தே விடும். நீங்கள் கதாநாயகனாகவோ அல்லது வில்லனாகவோ
இருந்தாலும் நாடகம் முடியத்தான் போகிறது. இச்சணத்தில் நீங்கள் இதை உணர்வீர்களானால்,
என்ன நடக்கிறது என்று பாருங்கள்? உங்களால் அனைத்து விஷயங்களையும் பரந்த கண்ணோட்டத்துடன்
பார்க்க முடிகிறது மற்றும் ஒரு எல்லைக்குள் இருக்கும், நசுக்கப்பட்ட உங்களது உள்
உணர்வுகள் திடீரென விரிவடைகிறது.
உங்கள்
வாழ்கையில் பின் நோக்கி சென்றால் உங்களது நிறைவடைந்த விருப்பங்கள் எத்தனை? மற்றும்
நிறைவடையாத விருப்பங்கள் எத்தனை என்பதை எண்ணிப்பாருங்கள்? இன்றும்
வாழ்க்கை நடந்து கொண்டு தானே இருக்கிறது? ஒன்றும் இல்லாத விசயங்களுக்காக நீங்கள்
வாழ்க்கையில் தடுமாறியதை பார்க்க முடிக்கிறதா? நீங்கள் குழந்தையாக இருந்த போது பல
விஷயங்களுக்காக தடுமாறி இருப்பீர்கள். சரி தானே!! பள்ளி பருவத்தில் நீங்கள் செய்த
சில முட்டாள்தனமான செயல்களுக்காகவும் தடுமாறி இருப்பீர்கள். உங்களுடன் உங்கள்
நண்பன் பேசவில்லை என்றாலும் நீங்கள் நிலை தடுமாறி இருப்பீர்கள். இல்லையா?
ஆகையால்
இப்பொழுது நீங்கள் நடந்தவைகளை விழித்து எழுந்து பார்த்தால் அனைத்தும் அற்பமானதாக
தோன்றுகிறது அல்லவா? இதை உணர்வது தான் விவேகம். நாம் சிறு
வயதினராக இருக்கும் பொழுது நமது விருப்பங்களை ஆசிரியர்களிடம் தெரிவித்தால் அவர்கள்
நமது விருப்பங்களை நிறைவடைய அனுமதிப்பதில்லை. அவர்கள் நமது விருப்பங்களை
முழுவதுமாக அழித்து விடுவார்கள். நாம் அனைவரும் இந்த மாதிரியான சூழ்நிலையில் வளர்ந்திருக்கிறோம்.
நமது சின்ன சின்ன ஆசைகளை கூட அழித்து விடுவதில் நமது ஆசிரியர்கள்
உறுதியுடன் இருந்தார்கள். ஏதோ ஒன்று சரியானதாக இல்லை என்று கூறினீர்களானால், இல்லை
அது சரியாக தானே இருக்கிறது. நீங்கள் சொல்வது தான் சரியில்லை என்று ஆசிரியர் கூறி
விடுவார். பண்டைய காலத்தில் நம் முன்னோர் இம்மாதிரியாக உங்களது விருப்பங்களை
அடியோடி நசுக்கிவிடும் வழிகளை கையாண்டார்கள். ஆகையால் நீங்கள் மகிழ்ச்சியாகவும்
நடுநிலையுடனும் இருக்க முடிந்தது. அந்த காலத்தில் நீங்கள் ஏதேனும் ஒன்றைத்தான்
தேர்வு செய்ய முடியும். அது உங்களது விருப்பம் அல்லது உங்களது குரு. இந்த இரண்டும் சேர்ந்து அல்ல.
எந்த வித எதிர்பார்ப்பும் அல்லது எந்த வித ஆசைகளும் இல்லாமல் இருக்க
முடியுமா?
விருப்பங்கள்
இருக்கவே தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. ஆசைகளும் விருப்பங்களும்
இருக்க கூடாது என நான் சொல்லவில்லை. உங்களின்
விருப்பத்தில்னால் தான் உங்களை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. நீங்கள் இந்த “சத்சங்கத்திற்கு”
வர விரும்பியதால் தான் நீங்கள் இங்கு வந்துள்ளீர்கள். விருப்பப்படுவதால் தானே உணவை சாப்பிடுகிறீர்கள். விருப்பப்படுவதால் தானே எல்லா காரியங்களையும்
நாம் செய்ய முடிகிறது. எவ்வளவோ
ஆசைகள் விருப்பங்கள் நம்முள் எழுந்தாலும் சில தான் நிறைவடைகின்றன. மற்றும்
சில நிறைவடைவதில்லை. ஆசைகள் நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும் நீங்கள்
மகிழ்ச்சியாகவே இருந்துவிட்டால் அப்பொழுது அந்த ஆசைகள் முள்ளாக குத்துவதில்லை.
உதாரணமாக நீங்கள் சினிமா பார்ப்பதற்காக சினிமா அரங்கத்திற்கு செல்கிறீர்கள்.அங்கு
உங்களுக்கு அனுமதி சீட்டு கிடைக்கவில்லை என்றால்,நீங்கள் நிலைகுலைந்து
விடுகிறீர்களா?
நீங்கள்
நிலைகுலைந்து விட்டீர்களானால் அந்த ஆசை உங்களது மனதினுள் சென்று விட்டது எனலாம். உங்கள் மனதிற்குள் செல்லவில்லை என்றால் அனுமதி சீட்டு கிடைக்கவில்லை என்றாலும்
பரவாயில்லை நாம் வேறொரு சினிமாவிற்கோ அல்லது கடைகளுக்கோ அல்லது சுற்றி பார்ப்பதற்கோ
தயாராகி விடுகிறோம்.
இரண்டு
விதமான ஆசைகள்:-
1. அனைத்து இயக்கத்திற்கும் காரணமான, இந்த பிரபஞ்சத்தினுடைய ஆசை. இது
இயல்பானது.
2. ஆசைகளை மனதிற்கு கொண்டு சென்று அதை மீண்டும் வளர்த்தல்.
ஆசைகளை
நல்லது அல்லது கெட்டது என்று பிரிக்கவில்லை. ஆனாலும் சில மேலோட்டமான ஆசைகள் வந்து போகும்.
அதனால் மிக பெரிதாக எதையும் அடைந்து விடுவதில்லை. மனதினுள் ஆசைகள் வரும்பொழுது,
அது சில பெரிய விஷயங்களை செய்விக்க முடிகிறது. மகாத்மா காந்தி அவர்கள் இந்தியாவை
சுதந்திர நாடாக்க ஆசை கொண்டார். இத்தகைய ஆசை அவர் மனதினுள் ஆழமாக சென்றது. மேலும்
அது நிறைவேறாததால், அவர் மிகவும் நிலைகுலைந்தார் பிறகு அவர் என்ன செய்தார்?
அமைதியுடன்
பிரார்த்தனை செய்து , உபவாசம் இருப்பதை மேற்கொண்டார். அவரது ஆசைகளை வேறு விதமாக
வளர்த்தார்.நல்ல விஷயத்தில் நம்பிக்கையில்லாமை, வருத்தம் மற்றும் ஏமாற்றம் இவைகள்
ஏதும் இல்லாமல் இருந்தார். எனென்றால் அந்த ஆசை அவரது உள்ளத்தில் இருப்பதை அவரே உணர்ந்தார். நம்மால் அவரது முகத்தில் எப்பொழுதும் எந்த ஏமாற்றமும் இல்லாமல் இருப்பதை
காண முடிந்தது. இதே போல் தான் நெல்சன் மண்டேலாவும். ஆகையால்
இந்த மாதிரியான ஆசைகள் முள்ளாக மாறுவதில்லை.
சமீபத்தில் எனது குடும்பத்தினருடனும் மற்றும் நண்பர்களுடனும் தனிமைபட்டிருப்பதாக
உணர்கிறேன். அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவது சரிதானா?
மிக தன்னிச்சையாக
இருங்கள். நான் இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என்ற எண்ணங்களை
மனதினில் திணிக்க வேண்டாம். உங்களுடைய இயற்கையான சுபாவத்தில் இருங்கள்.
மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதையோ, அன்பு செலுத்தாமல் இருப்பதையோ கட்டாயபடுத்த
முடியாது. உங்களின் இயற்கையான தன்மையுடன் இருங்கள். உங்களுடைய உணர்வுகள் விரிவடையும்
பொழுது மற்றும் நீங்கள் பரந்த மனப்பான்மையுடன் இருக்கும் பொழுதும். நீங்கள் பேசிய
உரையாடல்கள் அனைத்தும் அர்த்தமற்றதாக தோன்றிவிடும். அதற்காக நீங்கள் வேடிக்கையாக
பேசுவதை நிறுத்த சொல்லவில்லை. சில நேரங்களில் வேடிக்கையாக நடந்து கொள்வதில்
விருப்பப்படுவது, தயங்காது விளையாட்டுதனமாக இருப்பது தவறில்லை. மிக ஆழ்ந்த
யோசனையில் இருக்க தேவையில்லை. நீங்கள் அவர்களுடைய தொடர்பை இழந்து விட்டதாக
உணர்ந்தால் ஒன்றும் வருத்தப்பட தேவையில்லை. ஏற்கனவே ஒரு ஆழமான தொடர்பு
இருக்கத்தான் செய்கிறது.
இதற்கு
முன்பு நீங்கள் உணர்ச்சிபூர்வமாக மட்டுமே வாழ்ந்துள்ளீர்கள். இப்பொழுது தான்
நீங்கள் உங்களோடு வாழ்கிறீர்கள். அது மிகவும் விஸ்தாரமானது மற்றும் உங்கள் உணர்ச்சிகளை
விட மிகவும் சக்தி வாய்ந்தது. இதற்கு முன்னால்,மிக விரைவில் தங்கள் நிலையிலிருந்து
தடுமாறி விடுவதும் அல்லது தீவிர உணர்ச்சிகளினால் மாட்டிக்கொள்வதும் சகஜம்.
இப்பொழுது நீங்களே உங்களை கவனித்தால் உங்களது மனது நிலையாகவும் சம நிலையுடனும் இருப்பதை
உணரலாம்.
இப்பொழுது
மற்றவர்கள் தங்களை ஆட்கொள்ள முயல்வதை, நீங்கள்
பொருட்படுத்தாது இருப்பதே, நல்ல வளர்ச்சிக்கு அடையாளமாக இருக்கும்.