ஆசைகளை சற்று தவிர்த்து விடுங்கள்

திங்கள்கிழமை 31 மார்ச், 2014

பெங்களூர், இந்தியா


கடந்த கால நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். கடந்த கால நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவேண்டும். மக்கள், கடந்த கால நிகழ்ச்சிகளில் கெட்டவைகளை மறக்காமல் இருக்கிறார்கள். வருங்காலத்தை பற்றிய கவலையும், பயமும் அவர்கள் மனதில் உள்ளது. இது முட்டாள்தனமான வாழ்க்கையாகும். அறிவாளிகள், சற்று ஞானம் பெற்றவர்கள், வாழ்க்கையை வேறு விதமாக வாழ்கிறார்கள். கடந்த கால நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள். வருங்காலத்தை பற்றி உற்சாகமும், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளவர்களாக இருக்கிறார்கள். வருங்காலத்தை பற்றிய பதட்டம் அவர்களிடம் இல்லை. நீங்கள் எல்லோரும் அறிவாளிகள். அப்படி வாழ்கிறீர்கள். இல்லையா?

கேள்வி - பதில்கள்

பார்வையாளர் யார்? பார்வையாளருடன் ஒன்றாக இணைவது நம் இலட்சியமா ?

இலட்சியம் என்று ஒன்றும் கிடையாது. ஒன்றாக இணைவதற்கு வேறு எதுவும் கிடையாது. அங்கு இருக்கிறது. அவ்வளவு தான். புரிகிறதா? அங்கு என்ன இருக்கிறதோ, அது அங்கு இருக்கிறது. அது எப்போதும் தற்சமயத்தில் உள்ளது. சாட்சியாக உள்ளது. எது இந்த கேள்வியைக் கேட்டதோ, அது தான் சாட்சி. தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான். மனம் ஒன்றன்பின் ஒன்றாக வரும் ஆசைகளால் நிரம்பி அடைத்துக் கொள்கிறது. தானியங்கி துப்பாக்கியிலிருந்து வரும் குண்டுகள் போல, ஆசைகள் மனதில் வருவதால், உன்னால் தெளிவான வானத்தை பார்க்க முடிவதில்லை. உண்மையில் நீயே அந்த தெளிவான வானம். எனவே ஆசைகளைத் தூக்கி எறி.

விஹாய காமான் ய: ஸர்வான் புமாம்ஸ் சரதி நிஸ்ப்ருஹ |
நிர்மமோ நிரஹங்கார: ஸ சாந்திமதி கச்சதி ||  [2 – 71]

பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் ஆசைகளை அறவே அகற்றினால், அமைதி கிடைக்கும் என்று சொல்கிறார். இல்லாவிடில், எதன் மீதோ தீவிரமான ஆசை கொண்டு நீ ஓடிக் கொண்டிருப்பாய். நீ ஒரு ட்ரெட்மில்லில் (உடற்பயிற்சிக்காக ஒரே இடத்தில் ஓட வைக்கும் இயந்திரம்) ஓடுவது போல ஆசைகளை துரத்திக் கொண்டிருக்கும் வரை உனக்கு ஓய்வு கிடைக்காது. ஓய்வு வேண்டுமானால், நீ இயந்திரத்தை நிறுத்தும் பொத்தானை அழுத்தி, அதிலிருந்து இறங்கி, ஒரு இடத்தில் உட்கார வேண்டும். ஆனால் வாழ்க்கையில் நாம் ஆசைகளைத் துரத்திகொண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆசைகளைத் துரத்தும் வரை எங்கும் சென்றடைய முடியாது. நீ அமைதியாக ஓய்வெடுக்கும் போது இந்த உண்மை உனக்குப் புரியும். ஆனால் இந்த அமைதி நிலைப்பதில்லை. மனதில் அடுத்த ஆசை தோன்றும்.

யோகி என்றால் யார் ?

யாருக்கு ஒரு வருடத்தில் ஒரு ஆசை தோன்றுகிறதோ அவரே யோகி.யோகியில்லாதவர் யார் ?யாருக்கு ஒவ்வொரு மணித்துளியிலும், ஒவ்வொரு நாளிலும் ஒரு மில்லியன் ஆசைகள் தோன்றுகிறதோ, அவரை யோகி என்று சொல்ல முடியாது. எனவே உங்கள் ஆசைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். புரிந்ததா ?

ஆசைகளை எப்படிக் குறைப்பது  என்று நீ என்னைக் கேட்பாய். எல்லாமே அழியக் கூடியது என்பதைப் புரிந்துகொள். அவ்வளவு தான். இதை வைராக்கியம் என்று சொல்வார்கள். இதற்காக நீ எதுவும் செய்ய வேண்டியதில்லை. எல்லாம் அழியப்போகிறது. இந்த எண்ணமே ஆசைகள் தோன்றாமலிருக்க வழியாகும். எல்லாம் அழியப் போகிறது என்று அறிவதே தியானம். வைராக்கியம் இல்லா விட்டால் தியானம் நிகழ வாய்ப்பில்லை.

குருதேவா ! கடவுளே தொந்தரவாகி விட்டால் நான் என்ன செய்வது ?

நீ கடவுளைத் தொந்தரவு செய்யாதே. கடவுள் உன்னைத் தொந்தரவு செய்வதாக நினைக்கும் போது, நீ கடவுளைத் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறாய். இது ஒரு பிரச்சினையாகி விடும்.ஒரு முறை, ஜபல்பூரிலோ, வேறு எங்கேயோ, ஒரு பெண் எட்டு நாட்களாக ஒன்றும் உண்ணாமல் இருந்தாள். குருதேவரோடு பேசாமல் நான் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தாள்.
நான் சொன்னேன். இது ஒரு பெரிய பிரச்சினை. நான் உலகம் முழுதும் பயணம் செய்கிறேன். ஃபோனில் சில இடங்களிலிருந்து தொடர்பு கொள்ள முடியும். சில இடங்களில் தொடர்பு கிடைக்காது. மக்கள் இப்படி நினைத்து அடம் பிடித்தால், பெரிய பிரச்சினையாகி விடும்.
நான் அவளைத் திட்டி, ‘இப்படி சாப்பிடாமல் இருக்காதே. உடனே சாப்பிடு “ என்று சொன்னேன்.
இது சேவையல்ல. என்னை சேவை செய்ய வைக்கிறார்கள் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

நான் சேவை செய்யத் தயார். ஆனால் இது சேவையல்ல. தலைவலியாகி விடுகிறது. இப்படிப் பட்ட செயல்கள் எனக்குப் பிடிக்காது. கடவுள் தொந்தரவு செய்வதாக நீ எப்போதும் சொல்லக் கூடாது. நீ கடவுளுக்காக, குருவுக்காக, இதய பூர்வமாக ஏங்கினால், அது நல்லது. இது உன்னை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லும். அந்த ஏக்கம் இல்லாவிட்டால், வாழ்க்கையில் எந்த ரசமும் இல்லை. கடவுளுக்காக ஏங்கா விட்டால் வாழ்க்கையில் வரட்சி வரத் துவங்கும். மக்கள் பொருளுக்காக ஆசைப் படுகிறார்கள். மேலும் மேலும் பொருளை சேர்க்க விரும்பி இறந்து விடுகிறார்கள். ஆனால் நீ கடவுளுக்காக ஆசைப் பட வேண்டும்.  ஞானியாகலாம். கடவுளுக்காக ஏங்கும் போது, வாழ்க்கையில் விரும்பும் எல்லாவற்றையும் அடைந்து, உயர்ந்த நிலைக்குச் செல்லலாம். கடவுளுக்கான ஏக்கம் இப்படி இருக்க வேண்டும்.

அன்பான குருதேவா ! அன்பு கசப்பாக மாறிவிடும் போது என்ன செய்யலாம் ?

காத்திரு. எதிர்ச்செயல் செய்யாதே. கசப்பு மறுபடியும் அன்பாக மாறிவிடும். பல முறை நீ இதைப் பார்த்திருப்பாய். யாருக்கு நீ அதிகமாக நன்மை செய்திருக்கிறாயோ, அவர்களுடைய அன்பு கசப்பாக மாறுகிறது. நீ எல்லோரும் ஞானிகள் போல் நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர் பார்க்கிறாய். அப்படி நடக்க வாய்ப்பில்லை. உலகில் எல்லோரும், நீ எப்படி இருந்தாலும், ஒரு புன்முறுவலோடு உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நிபந்தனையற்ற அன்பைக் காட்ட மாட்டார்கள். அப்படி நடக்க வாய்ப்பு கிடையாது. மக்களின் எதிர்ச்செயல்களை (கோபம், வெறுப்பு, உதாசீனம் முதலியன) நீ சந்திக்க வேண்டும். கண்டிப்பாக எதிர் கொள்ள வேண்டும். உலகம் அப்படித் தானிருக்கும்.

குருதேவா, நம் ஆத்மா நித்தியமானது, தூய்மையானது, பண்டைய காலத்திலிருந்து இருப்பது என்றால், அது ஏன் தன்னை அறிவதில்லை? தன் உண்மையான நிலையை ஏன் தெரிந்து கொள்ளவில்லை ?

இதன் பெயர் அதிபிரஷ்ணா. இந்தக் கேள்வியைப் பற்றி உண்மையில் உனக்கு கவலை இல்லை. இதைக் கேட்பது மிகவும் அதிகமானது. எனவே எப்போது முதல் அஞ்ஞானம் ஏற்பட்டது. இப்படிப் பட்ட கேள்விகளுக்கு எப்போதுமே விடை அளிக்கப்படவில்லை. நம் பண்டைய வேதங்களில் கூட இதற்கு விடை கிடையாது. இது அதிபிரஷ்ணா என்று சொல்லப்படுகிறது. இதைத் தெரிந்து கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய் ? யாராவது “ஆம், இது  2  பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது” என்று சொன்னால், அதனால் என்ன உபயோகம்?  உனக்கு  என்ன கிடைக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. முதலில் ‘ நீ யார் ? ‘என்பதைத் தெரிந்து கொள். பிறகு முதல் அஞ்ஞானம் எப்போது ஏற்பட்டது என்று உன்னால் சொல்ல முடியும்.

குருதேவா, நான் எல்லா பொருட்களையும் சரியான இடத்தில் வைத்து எடுக்கும் பழக்கம் உள்ளவன். என் மனைவியும், மகளும் இதற்கு எதிரானவர்கள். இவர்களுடைய இந்த குணம் எனக்கு எரிச்சல் வர ஒரு காரணமாகிறது. அவர்களை எப்படி சரி செய்வது ?

அதை ஏற்றுக் கொள். நீ உன் பழக்கப்படி சரியாக நடந்து கொள். உன்னைப் பார்த்து அவர்களும் ஒரு நாள் கற்றுக் கொள்வார்கள். அவர்கள் அப்படியில்லா விட்டால், வாழ்க்கையில் ஒரு வேடிக்கையும் இருக்காது. ஒருவர் நிதானத்தை இழக்க வேண்டும். மற்றவர் அவரை சமாதானப் படுத்த வேண்டும். இல்லா விட்டால் வாழ்க்கை சலிப்பாகவும், ருசியில்லாததாகவும் இருக்கும். ஆனால் எதையுமே மிக அதிகமாக இழுக்க வேண்டாம். சில சந்தர்ப்பங்களில் நிதானத்தை இழப்பதால் ஒன்றும் ஆகி விடாது.