திங்கள்கிழமை - 30-03-15, சிங்கப்பூர்
(நீ
யார்? என்ற தலைப்பில் வெளியிடப்பட்டதின் தொடர்ச்சி)
நமது
வாழ்க்கையில், நாம் அனுபவித்து வரும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு அர்த்தமும், முற்காலத்தில் நடந்து முடிந்த செயலின் விளைவு அல்லது அதன் முடிவு
என்று தெரிகிறது ஆகையால் நீங்கள் நம்மை சுற்றி நடக்கும் செயலின் காரணத்தையும்,
அதன் விளைவையும் தொடர்புபடுத்தி பார்த்தீர்களானால், அமைதியாக இருக்க
முடியும். உதாரணமாக,
நீங்கள் எங்கோ சாலை விதிகளை மீறியதால் தண்டனை சீட்டு பெற்று கொண்டு அதை மறந்து
விட்டீர்கள் என வைத்துகொள்வோம். உங்களுக்குள் என்ன நடக்கிறது. நீங்கள் சலனம்
அடைகிறீர்கள் அல்லவா? ஆனால் நீங்கள் சாலை விதிகளை மீறிய காரணத்தையும், விளைவை நினைவுப்படுத்தி பார்க்கும் பொழுது என்ன நடக்கிறது? நீங்கள் மிக அமைதி
அடைந்து, சூழ்நிலைகளை ஏற்று கொள்கிறீர்கள். அதன் பின் மனது எந்த சலனத்திற்கும், ஏன்
என்ற கேள்விக்கும் இடமில்லாமல் இருக்கிறது.
நேற்று
நாம் செய்த சில காரியத்தால் தான் இன்று சில விஷயங்களை அனுபவிக்கிறோம் என்பதை நாம்
அறியும் பொழுது நமக்கு கோபம் வருவதில்லை. ஆகவே நீங்கள் சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு
முன்னேறி செல்லுங்கள். ஆன்மிக
அறிவின் குறைவால் தான் நீ அமர்ந்து இது ஏன் அவ்வாறு நடந்தது? இது ஏன் எனக்கு நடந்தது?
என்று அதிசயபடுகிறாய். இவ்வாறு நினைப்பது நல்லதல்ல. நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை
யோசிப்பதை விட்டு நமது மனதை தோண்டி பார்த்து கொண்டிருக்கிறோம். இப்பொழுதோ, நாளையோ
அல்லது இன்னும் பல வருடங்களுக்கோ பதில் கிடைக்க போவதில்லை. இந்த பயணம்
ஆரம்பித்து விட்டதென்றால் நீ எதிர்பார்ப்பதை விட அதிக அளவிலான பலன்களை கொடுக்க
வல்லது. இது தான் “விவேகம்”.
எது
மாறுவது? எது மாறாதது? எது நிரந்தரமானவை? எது நிரந்தரமற்றவை? என உன் மனதில்
பகுத்தறிந்து கொள்வது தான் “விவேகம்”. நாம் இரண்டு வகைகளால் ஆக்கப்பட்டிருக்கிறோம்.
ஒன்று மாறுவது, மற்றொன்று மாறாதது. சில வருடங்களுக்கு முன்பு எடுத்த உங்களது புகைப்படத்தை
பாருங்கள். இப்பொழுது இருக்கும் உங்களை பாருங்கள். இரண்டும் பார்ப்பதற்கு ஒன்றாகவா
இருக்கிறது? இல்லை!!!! இந்த
உடல் தொடர்ந்து மாறி கொண்டே இருக்கிறது என்பது நமக்கு தெரியும். வருடத்திற்கு ஒரு
முறை உடலில் உள்ள செல்கள் அனைத்தும் மாறுகின்றன. உடலில் உள்ள ரத்தம்
இருபத்திநான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை மாறுகின்றன. மாதத்திற்கு ஒரு முறை தோல்
மாறுகிறது. எலும்பு, மஜ்ஜைகள் மற்றும் வயிற்று பகுதியின் உட்புற பூச்சு ஐந்து
நாட்கள் ஒரு முறை மாறுகிறது.
ஒரு வருடத்திற்குள் நம் உடம்பில் பல விஷயங்கள் மாறுகின்றன. இதேபோல் எண்ணங்களும், உணர்ச்சிகளும் மாறுகின்றன. ஆகையால் எல்லாமே
மாறுகிறது என்பதை நாம் எப்படி தெரிந்து கொள்வது? நம்முள்
“ஏதோ ஒன்று” மாறாமல் இருப்பதை வைத்து தான் தெறிந்து கொள்ள முடிகிறது. “அந்த ஏதோ”
ஒன்று தான் நம் கவனத்தை கவரக்கூடியது. அது விரிவடைகிறது மற்றும் அது
சுருங்குகிறது. நம்முள் ஏதோ ஒன்று விரிவடைவதையும் சுருங்குவதையும் தியானத்தின்
வாயிலாக அறிந்து கொள்ளலாம். அதை சுழ்நிலைகள் மற்றும் மற்றவர்களின் கட்டுபாட்டிற்கு
விடுவதை விட, நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். உதாரணமாக யாராவது உன்னை
புகழும் போது உன்னுள் என்ன நடக்கிறது? ஏதோ ஒன்று உன்னுள் விரிவடைவதை உணர்கிறாய்.
நீங்கள் தவறு செய்யாது இருக்கும் பொழுது, மற்றவர்கள் குற்றம் கண்டு
பிடித்தார்கள் என்றால் உங்களுள் என்ன நடக்கிறது? உங்களுள் “ஏதோ ஒன்று”
சுருங்குகிறது. உங்களுள்
ஏதோ விரிவடைகிறது சுருங்குகிறது என்பது என்ன?
இதை
பற்றி அறிந்து கொள்வது மிக பலனளிக்க கூடியது. அதுதான் உங்களுள் மாறாமல் இருப்பது.
உங்களுள் எப்பொழுதும் மாறாமல் இருக்கும் ஒன்று தான் எப்பொழுதாவது
விரிவடையவும், சுருங்கவும் செய்கிறது அது தான் நமது அனுபவம். மற்றவர்களின் வார்த்தை
என்ற உதைபந்திற்கு ஆளாகாமல் நம்மில் ஏதோ ஒன்று விரிந்து சுருங்குவதை நாம் நம்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது முக்கியம். உங்களுடைய மகிழ்ச்சியை நீங்கள் கட்டுப்பாட்டிற்குள்
வைத்திருப்பது மிகவும் உன்னதமானது. அது தியானத்தின் மூலம் ஏற்படுகிறது. நம்முள்
இருக்கும் ஏதோ ஒன்று விரிவடைவதையும், சுருங்குவதையும் மற்றும் சூழ்நிலை மற்றும்
மற்றவர்களின் கட்டுபாட்டிற்கு விடுவதை விட நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க தியானம்
உதவுகிறது என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நம்முள் ஏதோ ஒன்று மாறாமல் நமது
வாழ்க்கை முழுவதும் இருப்பது மற்றும் தொட்டு உணர கூடிய பொருளாக இல்லாமல் இருப்பதை பற்றி
அறிந்து கொள்வது மிக பயனுள்ளதாகும்.அது தான் “நீ”. ஆகையால் மறுபடியும் அதே
கேள்விக்கு வருவோம்.
எது உங்களது ஆரம்ப நிலை மற்றும் இந்த உடலை பிரிந்து நீங்கள்
எங்கு செல்கிறீர்கள்? உடலை விட்டு ஏதோ ஒன்று பிரிந்து செல்கிறது. அதை எதனாலும்
அழிக்க முடியாது. அதை எதனாலும் எரிக்க முடியாது, நனைக்க முடியாது, புதைக்க முடியாது
மற்றும் இறப்பினால் இறக்காதது என்ற ஒரு பாடலை கேட்டீர்கள் நம்முள் இருக்கும் “ஏதோ
ஒன்று” தான் அழிவிற்கு அப்பாற்பட்டது. இந்த உடல் அழிக்கப்பட்டு விட்டாலும் இதை
அழிக்கவே முடியாதது. காற்றை உங்களால் அழிக்க முடியுமா? முடியாது. உங்களிடம் ஒரு
குடம் இருக்கிறது. குடத்தினுள் வெற்றிடம் இருக்கிறது. அந்த இடத்தில் காற்று
உள்ளது. நீங்கள் குடத்தை உடைத்து விடலாம். ஆனால் குடத்தினுள் இருந்த காலி இடத்தையோ
அதுனுள் இருந்த காற்றையோ அழிக்க முடியுமா? முடியாது அல்லவா? ஆகவே அவ்வெற்றிடம்
போல் தான் “நாம்”.
நாம்
பெரிய செல்வக்குவியல் மேல், பிழைக்க தெரியாத ஏழையாக உட்கார்ந்து இருக்கிறோம். நம்
வாழ்க்கை முழுவதற்க்கும் தேவையான பொக்கிஷம் இருந்தும் ஒன்றுமில்லாத
விசயத்திற்க்காக துக்கப்பட்டு, புலம்பி, அழுது கொண்டிருக்கிறோம்.எது ஒன்று நம்மை
துன்பம், மனவருத்தம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றிலிருந்து உயர்நிலைக்கு கொண்டு
செல்கிறதோ, அதுவே மூல காரணமாய் இருக்கும் “ஞானம்”. நீங்கள்
எல்லாம் இங்கு தான் உள்ளீர்களா? நான் மிக சுலபமாக தெளிவுபடுத்த முயற்சிக்கிறேன்.
ஆகையால் நீங்கள் இதை புரிந்து கொள்ளலாம், அல்லது அந்த ஞானம் நம் புத்திக்கு
எட்டாது போய்விடும்.
வேதாந்த
சொற்பொழிவுகளை கேட்க உட்கார்ந்தவுடன் நமக்கு தூக்கம் வந்துவிடுகிறது.ஏன்?
என்று ஒருவர் கேட்டார். இந்த மாதிரியான சொற்பொழிவுகள் ரோசாப்பூ படுக்கை போன்றது.
அது உள்மனதில் சௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்று மற்றொருவர் அதற்கு பதில்
அளித்தார். நம்மகென்று சற்று நேரத்தை எடுத்து கொண்டு, காலாற நடந்து கொண்டு உங்களுக்குள்
நான் யார்?, எனக்குள் நான் என்ன? என்ற கேள்வியை கேட்டு பாருங்கள். நீங்கள்
ஒருவருக்கு கணவராகவோ, மனைவியாகவோ, மகளாகவோ இருக்கிறீர்கள், ஆனால் உங்களுக்குள்
நீங்கள் வைத்திருக்கும் உறவு தான் என்ன? நீங்கள் யார்? உங்களுக்கு என்ன தேவை?
என்று உங்களுக்குள் கேட்டு பார்க்கலாம். ஒவ்வொருவரும் இந்த பிரபஞ்சத்தில் குறுகிய காலமே
வாழபோகிறோம் மற்றும் இந்த உடலை திரும்ப இந்த பூமியில் விட்டு செல்கிறோம் என்பதை
அறிகிறோம் அல்லவா?
ஆனால்
எனக்குள் நான் யார்? இந்த மாதிரியான கேள்விக்கு பின் நமது வாழ்வு மற்றொரு
உயர்ந்த நிலைக்கு உயர்வதும் மற்றொரு கோணத்தில் மாறி நம் வாழ்க்கை மலர்கிறது.
வாழ்க்கை
என்பது ஆதியந்தம் இல்லாதது. நாடகத்தில் வரும் சில கதாபாத்திரங்களாக அல்ல, வாழ்க்கை
தொடர்ச்சியானது. நாம் இந்த பிரபஞ்சத்திற்கு பல முறை வந்திருக்கிறோம். இதை சற்று
நான் அறிந்திருக்கிறேன். மற்றும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. நீங்கள் இதை அறிய
முடியாது என்று ஒன்றுமில்லை. நீங்களும் கூட இதை அறிந்து கொள்ள முடியும். ஆகையால்
நான் சொல்வது போல் உங்களது மூலப்பொருளை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள்
வாழ்க்கை 8௦-9௦ வயதுடன்
முடிந்துவிடுவதல்ல. அது நிரந்தரமானது மற்றும் மிகவும் பேரின்பமானது. குழப்பங்கள்
அனைத்தும் நம் வாழ்வில் ஒரு விளையாட்டை போன்று. ஆகவே நம் வாழ்வில் ஒவ்வொரு
நிகழ்ச்சிகளையும் மிக பெரிய தோற்றத்தில் பார்க்க ஆரம்பித்தால், அது வேடிக்கையானது.
அது போல் இருப்பது தான் உத்தமமானது. உங்களுடைய
பிரச்சனைகளை என்னிடம் விட்டு செல்லுங்கள் என்று பெங்களூர் ஆசிரமத்திற்கு
வருபவர்களிடம் நான் கூறுவது வழக்கம். எனது மாமியார் தான் எனது பிரச்சனை, அவர்களை
இங்கு விட்டு செல்லவா? என்று ஒரு பெண்மணி கேட்டார்.மாமியாருக்கு என்ன பிரச்சனை
என்று அவரிடம் கேட்டபின் நீங்கள் இருவரும் ஒன்றாக இங்கேயே தங்கி விடுங்கள் என்று
கூறினேன். (கூட்டத்தில் உள்ள அனைவரும் சிரித்தார்கள்).
அடுத்த
பத்து நாட்களுக்குள் நீங்கள் இறக்க போகிறீர்கள் என கற்பனை செய்து பாருங்கள். பின்
யார் மேல் நீங்கள் பொறாமை கொள்வீர்கள்? யார் மேல் கோபம் கொள்வீர்கள்? மற்றும்
உங்களுக்கு என்ன வேண்டும்? ஒவ்வொரு
நாளும் நமது குறுகிய புத்தியால் எரிச்சல் அடையக்கூடியது, திடீரென்று நம்
வாழ்கையில் மேல் உள்ள பிடிப்பை விட்டு நாம் மலர ஆரம்பித்து விடுகிறோம்.
நாம்
பெரிய செல்வக்குவியல் மேல், பிழைக்க தெரியாத ஏழையாக உட்கார்ந்து இருக்கிறோம். நம்
வாழ்க்கை முழுவதற்க்கும் தேவையான பொக்கிஷம் இருந்தும் ஒன்றுமில்லாத
விசயத்திற்க்காக துக்கப்பட்டு, புலம்பி, அழுது கொண்டிருக்கிறோம். எது ஒன்று நம்மை
துன்பம், மனவருத்தம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றிலிருந்து உயர்நிலைக்கு கொண்டு
செல்கிறதோ, அதுவே மூலகாரணமாய் இருக்கும் “ஞானம்”.
நீங்கள் சம்பாதித்தவைகள், மற்றும் செய்த காரியங்கள்
அனைத்தும் இங்கு விட்டுவிட்டு நீங்கள் சென்று விடுகிறீர்கள். அது புன்னகையாகவும் தன்னம்பிக்கை மற்றும் உள்ளுணர்வை கொடுக்கிறது. அதற்கு நிகராக
வேறொன்றும் இல்லை. ஸ்ரீமத் பாகவதத்தில் அருமையான இரண்டு ஸ்லோகங்கள்
:“ஜன்மாதை அஸ்ய யாதோ த்வாயாத் இதரதஸ் சர்தேஸ்வ அபிஜினாஹ்
ஸ்வராத்”
மூலபொருளை பற்றிய விழிப்புணர்ச்சி மற்றும் அதனுடைய உச்ச
நிலையை அடைவது,உனக்குள் சுதந்திரத்தை கொடுக்கிறது. இந்த உள் உணர்வு மிக
பெருந்தன்மை கொண்டது மற்றும் மிக அழகானது.
“தேன பிரஹ்ம ஹ்ருதா யா ஆதி கவயே முஹ்யந்தி யாத் சூர்யாஹ
தேஜோ வாரி ம்ருதம்
யாதா வினிமயோ யத்ர த்ரிசர்கோ மிருஷா
தாம்னா ஸ்வேன நிரஷ்ட குஹகம் சத்யம் பரம் தீமஹி”
அந்த “ஏதோ ஒன்று” கோடிக்கனக்கான சூரியனின் ஜோதியை போன்றது
மற்றும் அது மகிழ்ச்சிக்கு மூல காரணமானது.அந்த உள்ளுணர்வு மிக உன்னதமான உண்மைக்கெல்லாம் உண்மையானது என்று
எனது புரிந்து கொள்ளும் சக்தியை ஊக்குவிக்கிறது. நான் இந்த உண்மையில் மூழ்கி
திளைக்கட்டும். உண்மை என்றால் என்ன? உண்மையென்பது இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலத்தில்
மாறாதது. அது மாறாமல் அப்படியே இருப்பது. அது மிக பெரிய நன்மையை இந்த
பிரபஞ்சத்திற்கு தர கூடியது. அதில் எனது புத்திசாலித்தனம் முழுமையாக மூழ்கி
இருக்கட்டும். மற்றும் அது தான் “தியானம்”.