உலக மாநாட்டில் விளையாட்டுப் போட்டிகளில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்...

வெள்ளிக்கிழமை, 19-09-2014

எஃப் ஐ எஃப் ஏ தலைமை அலுவலகம், சூரிச், ஸ்விட்சர்லாந்து.



(விளையாட்டுப் போட்டிகள், அரசியல், வியாபாரம், கல்வித்துறைகளில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் மற்றும் பல அரசு சாரா நிறுவனங்களை சேர்ந்தவர்களும்,ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள சூரிச் நகரில் எஃப் ஐ எஃப் ஏ தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடினார்கள். சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் விளையாட்டுப் போட்டிகளின் பங்கு என்ன என்று வரையறுப்பதற்காகவும், நடைமுறையில் இருக்கும் நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்கும் விளையாட்டு போட்டிகளின் சிறந்த வழக்கங்களை உதாரணத்துடன் எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதற்காகவும் இம்மாநாடு கூட்டப்பட்டது.

டபிள்யூ எஃப் ஈ பீ யின் நிறுவனர்களில் ஒருவரான குருதேவர், “விளையாட்டுப் போட்டிகளை நாம் அமைதியை நிலைநாட்டவும், சமரசத்துக்காகவும் பயன்படுத்த முடியும்“ என்று எடுத்துரைத்தார். குருதேவரின் பேச்சு பின் வருமாறு)

இங்கு கூடியிருக்கும் பெண்மணிகளுக்கும்,கனவான்களுக்கும் காலை வணக்கம். விளையாட்டுப் போட்டிகள், வியாபாரம், அரசியல் துறைகளில் சாதனை படைத்தவர்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபாடு உள்ள நல்லன்பர்களின் மத்தியில், இம் மாநாட்டில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். விளையாட்டுப் போட்டிகள் நம் வாழ்வில் இணைந்திருக்கும் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. ஒரு குழந்தை பேசத் துவங்குவதற்கு முன்பே விளையாட ஆரம்பிக்கிறது. மொழி பின்னால் வருகிறது.விளையாட்டு முன்னால் வருகிறது. விளையாட்டு என்பது நம் உள்ளார்ந்த இயல்பாக இருக்கிறது. அதனால் தான் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற முதியவர்கள் கூட காப்பி குடித்துக் கொண்டே கால்பந்து விளையாட்டை விரும்பிப் பார்க்கிறார்கள். வாழ்நாள் முழுதும் மக்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கிறார்கள். விளையாட்டு என்பது வாழ்நாள் முழுதும் தொடர்கிறது என்று நினைக்கிறேன். விளையாட்டு நம் வாழ்க்கையை அதிக சுவையாக்குகிறது.

உலக அளவில் நாடுகளிடையே விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் நாடுகளுக்கிடையே அமைதியை நிலை நாட்டுவதிலும் பங்கு பெற்றால், சொர்க்கத்தை நாடி துப்பாக்கி ஏந்தி வன்முறையில் ஈடுபடும் இளைஞர்கள் கால்பந்து விளையாடுவார்கள். இன்று உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூ எச் ஓ) கருத்துப் படி உலகை எதிர் நோக்கும் ஒரு பெரிய பிரச்சினை பெரும்பாலான மக்கள் மன உளைச்சலால் பாதிக்கப்படுவார்கள் என்பது தான். மன உளைச்சல், மன அழுத்தம், நெறி முறையற்ற ஆரோக்கியமில்லாத பழக்க வழக்கங்கள் இளைஞர்களிடையே இருக்க காரணம், வாழ்க்கையில் உற்சாகமில்லாமல் இருக்க காரணம், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருப்பது தான். விளையாட்டுப் போட்டிகள் சமுதாயத்திலும், தனி மனிதர் வாழ்விலும் மகிழ்ச்சி தர வல்லவை. விளையாட்டு வீரர்கள் ஒரு உதாரணமாக வாழ்ந்து பலருக்கு ஊக்கமளிக்கிறார்கள். விளையாட்டு வீரர்கள் நெறிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் பலர் ஏமாற்றமடைவார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக ஸ்டைராய்டு எடுத்துக் கொள்வது, முன்னதாகவே யார் வெற்றி பெறுவது என்று தீர்மானித்துக் கொண்டு விளையாடுவது ( மாட்ச் ஃபிக்ஸிங்) விளையாட்டுக் குழுவில் சேர்வதற்காக லஞ்சம் கொடுப்பது போன்ற வழக்கங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

லஞ்ச ஊழல் சிறிய அளவில் துவங்கி பெரிதாகி விடும். பெரிய குற்றங்களில் கொண்டு செல்லும். இது சமுதாயத்துக்குச் செய்யும் அநீதியாகும். லஞ்ச ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு பெரிய குற்றமாக தோன்றுவதில்லை. அங்கீகரிக்கப்பட்ட வழக்கம் என்று நினைக்கிறார்கள். எனவே அப்படிப் பட்டவர்களை விழிப்புணர்வடையச் செய்ய வேண்டும். ஸ்டைராய்டு ஊசி போட்டுக் கொண்டு வெற்றி பெறுபவர்கள் பல மக்களை ஏமாற்றுகிறார்கள். மாட்ச் ஃபிக்ஸிங் செய்பவர்களும் மக்களை ஏமாற்றுகிறார்கள். வாழ்வில் மேலும் பல தீயசெயல்களை செய்கிறார்கள். சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேற் சொன்ன தீய வழிகளில் மக்களை ஏமாற்றக்கூடாது. அப்படி செய்தால் தான் விளையாட்டுப் போட்டிகள் மக்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

விளையாட்டுப் போட்டிகளில் நெறிமுறைகள் பின்பற்றப்படும் போது கோடிக்கணக்கான மக்கள் உத்வேகத்தைப் பெறுவார்கள். மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களுடைய வாழ்க்கையிலும் நெறிமுறைகளைக் கடைப் பிடிப்பார்கள். இப்போது விளையாட்டுப் போட்டிகள் பெரியவர் சிறியவர் என்ற வித்தியாசமில்லாமல் பலதரப்பட்ட வயதுள்ளவர்கள், பல மொழிகளை பேசுபவர்கள், பல மதங்களை சார்ந்தவர்கள், சமூக பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுள்ளவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பது மட்டுமல்லாமல் உலக அமைதிக்கும் காரணமாகிறது. விளையாட்டு நிறுவனங்கள் உலக அமைதிக்காக உழைக்கும்போது, ஆயிரக்கணக்கான வழி தவறிய இளைஞர்கள், துப்பாக்கி எடுப்பதைக் கைவிட்டு கால் பந்து விளையாட முன் வருவார்கள். இளைஞர்களின் சக்தி விளையாட்டுப் போட்டிகளில் ஆக்க பூர்வமாக செயல்படும் போது சமூகத்தில் நிலவும் வன்முறை மற்றும் பல வகையான குற்றங்கள் தடுக்கப்படும். இதைப் பற்றி நாம் அனைவரும் சிந்திப்பது அவசியம். இளைஞர்களின் சக்தியை ஆக்க பூர்வமான திசையில் திருப்ப வேண்டும். இதற்கு விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறந்த சாதனமாக இருக்கும். இளைஞர்களின் வாழ்வில் விளையாட்டை விடச் சிறந்தது வேறு என்ன இருக்க முடியும் ?

இளைஞர்களுக்கு மன உளைச்சல், மன அழுத்தம், ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் வரக் காரணமே விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருப்பது தான். அவர்களில் பலர் வாழ்வில் உற்சாகமில்லாமல் இருப்பதற்கு காரணமும் இதுவே. எனவே விளையாட்டுப் போட்டிகள் தனி மனிதருக்கும், சமூக அளவிலும் மகிழ்ச்சி தரும் சாதனமாக விளங்குகின்றன. விளையாட்டு வீரர்களும், போட்டிகளை நடத்துபவர்களும், போட்டிகளை விரும்பிப் பார்க்கும் பொது மக்களும் கடைப் பிடிக்க வேண்டிய நெறி முறைகளை முறையாக பட்டியலிட்டு அவைகளை அமல் படுத்துவதில் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.

மூன்று C (Connectivity, Commitment and Context to Life) மூலமாக இதைச் செய்ய முடியும்.
·         கனெக்டிவிடி – தொடர்பு
·         கமிட்மெண்ட் – சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற மன உறுதி
·         காண்டெக்ஸ்ட் டு லைஃப் – வாழ்வில் ஒரு உயர்ந்த லட்சியம்.

வாழ்வில் ஒரு உயர்ந்த லட்சியம் இருந்தால், விளையாட்டு வீரர்கள் வெற்றி தோல்விகளை பொருட்படுத்த மாட்டார்கள். விளையாட்டு வீரர்கள் முன்னுதாரணமாக இருந்து மக்களுக்குக் கல்வி புகட்டும் பொறுப்பை ஏற்கும்போது, மக்களுக்கு சேவை செய்யும்போது திருப்தி அடைவார்கள். எனவே சமுதாய நலத் திட்டங்களில், அமைதிப் பேச்சு வார்த்தைகளில் விளையாட்டு வீரர்களை ஈடுபடுத்துவது மிகவும் பயனளிக்கும். இதனால் விளையாட்டு வீரர்களும் பயனடைவார்கள். ஏனென்றால், வாழ்க்கைக்குத் தேவையான மக்கள் தொடர்பு இருந்து கொண்டேயிருக்கும். ஒருவர் ஆரம்பநிலை விளையாட்டு வீரராக இருந்தாலும், மிகவும் தேர்ச்சி பெற்றவராக இருந்தாலும், போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் வீரராக இருந்தாலும் (ஆண் பெண் இரு பாலரும்), வாழ்வில் ஒரு உயர்ந்த நோக்கத்துக்காக உழைப்பதில் திருப்தி அடைய முடியும். இல்லாவிட்டால், பல முன்னாள் விளையாட்டு வீரர்கள் மன உளைச்சலால் அவதிப்படுவதை நான் பார்க்கிறேன். அவர்கள் முன் போல திறமையாக விளையாட முடியாத போது மன உளைச்சல் அடைகிறார்கள். தனியாக இருப்பதை விடுத்து, உயர்ந்த நோக்கத்தோடு, சமூக காரியங்களில் மற்றவர்களுக்காக உழைக்கும்போது மன உளைச்சல் வராது.

முன்னாள் விளையாட்டு வீரர்கள், விளையாட்டுப் போட்டிகளில் நெறி முறைகளைப் பின் பற்ற உதவ முன் வர வேண்டும். அப்படிச் செய்தால் விளையாட்டுப் போட்டிகளின் கௌரவத்தை மேம் படுத்த முடியும். உலகம் முழுதும் அதை பறை சாற்றி மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க முடியும். உலக மக்கள் அனைவரையும் விளையாட்டுப் போட்டிகள் மூலம் ஒன்று சேர்க்க முடியும். போர் நிகழும் நாடுகளில் விளையாட்டுப் போட்டிகள் போரை நிறுத்தி மக்களை ஒன்று சேர்க்க உதவும்.

நான் இந்தியாவிலிருந்து வருகிறேன். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், விளையாட்டுப் போட்டிகளின் போது ஒருமைப்பாட்டைக் காணலாம். இரு நாடுகளின் கிரிக்கெட் வீரர்களும் மிகுந்த உற்சாகத்தோடு விளையாடுவார்கள். விளையாட்டுப் போட்டிகளுக்கு, பல்வேறு விதமான மனிதர்களை, சமூகங்களை ஒன்றிணைக்கும் காந்த சக்தி உள்ளது. வாழும் இவ்வுலகம் மேலும் மகிழ்ச்சியாக வாழத் தகுந்த இடமாவதற்கு விளையாட்டுப் போட்டிகள் காரணமாக இருக்கும். விளையாட்டு வீரர்களை சமூக சேவையில் ஈடு படுத்தி விளையாட்டு மட்டுமல்லாமல், சமுக நல மேம்பாட்டில் அவர்களுடைய பங்கை உணரச் செய்வது அவசியம். இது விளையாட்டு வீரர்களுக்கும் பயனுடையதாக இருக்கும். அவர்கள் விளையாட்டுப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், சமூகத்தோடு இருக்கும் தொடர்பு அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

மகிழ்ச்சி என்பது நல்வாழ்வுக்கு ஒரு காரணமாக இருக்கிறது.விளையாட்டுக்கு ஒரு பெரிய பங்கு இருக்கிறது. இசை, கலை, விஞ்ஞானம் எல்லாமே நம் வாழ்வை சிறப்பிக்கின்றன. இருந்தாலும் விளையாட்டுப் போட்டிகள் நம் அனைவரின் வாழ்க்கைக்குத் தேவையான மகிழ்ச்சியை அளிப்பதில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இந்த உலக விளையாட்டுப் போட்டிகளின் உச்சி மாநாட்டில், விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் கடைப்பிடிக்க வேண்டிய நெறி முறைகளைப் பற்றிக் கலந்து பேசித் தீர்மானிப்பது ஒரு நல்ல துவக்கமாகும். உலகம் முழுதும் மக்களிடையே இந்த நெறி முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இரண்டு விஷயங்கள் மிகவும் முக்கியமானவை.

·         நடுநிலைமை தவறாமை மற்றும் விளையாட்டு விதிகளை மீறாமல் நெறி முறைகளைப் பின் பற்றுவது.
·         உலக அமைதிக்காக, விளையாட்டுப் போட்டிகளை ஒரு மார்க்கமாகப் பயன்படுத்துவது.  

இன்றைய உலகில் வன்முறை மற்றும் பகைமையால் பல நாடுகள் பாதிக்கப் பட்டிருக்கின்றன. எனவே மேற்கூறிய நெறி முறைகளைப் பின் பற்றும் போது விளையாட்டுப் போட்டிகளிலும் வன்முறைச் சம்பவங்களை குறைக்க முடியும். ஏனென்றால் விளையாட்டுப் போட்டிகள் நன்முறையில் நடக்கும்போது எல்லோருடைய கவனமும், நமது லட்சியமான உலக அமைதியைப் பற்றியதாகவே இருக்கும். பல் வேறு நாடுகளின் பல் வேறு இன மக்களிடையே ஒற்றுமை மற்றும் அமைதிக்கு விளையாட்டுப் போட்டிகள் உறுதுணையாக இருக்கும்.

துரதிஷ்டவசமாக போரை விளையாட்டுப் போட்டிகள் போலவும், விளையாட்டுப் போட்டிகளை போர் போலவும் நடத்துகிறோம். இந்த நிலை மாறுவது அவசியம். மாநாட்டில் கலந்து கொள்ளும் அறிஞர்கள், விளையாட்டு விரும்பிகள் எல்லோரும் ஒரு மனதாக விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் கடைப் பிடிக்க வேண்டிய நெறி முறைகளைத் தீர்மானித்து, உலகில் எல்லா மூலை முடுக்குகளுக்கும் இந்த செய்தியை எடுத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன்.  

கர்மத்தின் அளவு

செவ்வாய்கிழமை, 9 செப்டம்பர்,

பெங்களூரு. இந்தியா


செய்யக் கூடிய, கூடாத கர்மாக்களை அறிய ஒருவன் எதை நாட வேண்டும்?

குருதேவ்: உள்ளிலிருந்து மனசாட்சியை கவனியுங்கள். உங்களுக்குப் பிறர் செய்யக் கூடாது என்று விரும்புகின்றீர்களோ அதைப் பிறருக்குச் செய்யாதீர்கள்.அதுதான் அடிப்படையானது. குறுகிய காலத்திற்கு விரும்பத் தகாத சூழலை ஏற்படுத்தினாலும் எது நீண்ட காலப் பயனை அளிக்குமோ, அதைச் செய்யுங்கள். குறுகிய கால இன்பத்தினை அளித்து நீண்ட காலத்திற்கு பிரச்சினை அளிக்கும் எதையும் நாம் செய்யக் கூடாது. இதுவே கர்மாவின் அடிப்படை ஆகும்.

மற்றொரு ஆன்மீகத் தலைவர் மரியாதை குறைவான நடத்தையுடன் காணப் பட்டால், அல்லது வெட்கக்கேடான செயலில் பிடிபட்டால், தங்களது மனதில் எழும் எண்ணங்கள் என்ன ?

குருதேவ்: இரக்கமும் வியப்பும். முதலில் ஞானமுள்ள ஒருவர் இவ்வாறு எப்படி இருக்க முடியும் என்னும் வியப்பு. நகைக்கடை வைத்திருப்பவர் சில காய்கறிகளையோ, ஒரு டஜன் வாழைப் பழங்களையோ அல்லது ஆப்பிளையோ திருடமாட்டார். அவ்வாறு ஒருவர் செய்தால் நீங்கள் வியப்படைவீர்கள், அல்லது இரக்கம் கொள்வீர்கள்.ஆழ்ந்து வேரூன்றிய அறியாமை இருந்திருக்க வேண்டும் என்று அதை பற்றிய இரக்கமே கொள்ள முடியும். அவர்களிடம் கோபப்பட்டுப் பயன் இல்லை. அதனால் யாருக்கும் பயன் இல்லை. உயரே சென்று கொண்டிருந்த இந்த மனிதர் சறுக்கி விட்டார். அவர் தனது அடித்தள ஏக்கங்கள் மற்றும் வெறுப்புகளுக்கு இரையாகி விட்டார். அவர்கள் உண்மையானவர்களாக இருந்தால்,தாங்களாகவே தண்டனையை ஏற்றுக் கொள்வார்கள். அது பிராயச்சித்தம் என்று அழைக்கப்படும். தவறு செய்யும் ஒருவர் அதை உணர்ந்தவுடன், பிறர் தண்டிப்பதற்கு காத்திராமல்,தாமாகவே தன்னைத் தண்டித்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் இல்லையெனில் அவர்கள் ஆன்மீகத் தலைவர்கள் என்று கருதவே முடியாதவர்கள். தங்களுடைய சுயநலனிற்காக ஆன்மீகத் துறையை தவறாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

ஆன்மீகப் பயிற்சிகளையும் சூழலையும் நான் மிகவும் விரும்புகின்றேன். ஆன்மீக முதிர்ச்சி பெற்றவர்கள் மத்தியில் நான் சமநிலையிலும் திருப்தியுடனும் உணருகின்றேன். இந்த ஆன்மீகப் பயிற்சிகளை தொழிலாகக் கொள்ள முடியுமா? ஆம் என்றால் எனக்கு என்ன ஆலோசனை கூறுவீர்கள்?

குருதேவ்: ஆன்மீகப் பயிற்சிகள் தொழிலாக இயலாது.வாழும் கலையில்,பல வாய்ப்புக்கள் உள்ளன. பல பள்ளிகள், நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன, எங்களிடம் வேலைவாய்ப்பு பணியகம் உள்ளது. அதில் வந்து பதிவு செய்து கொள்ள உங்களை வரவேற்கின்றோம். நம் நாட்டில் ஆன்மீக மனப்போக்குடைய செயல்திறன் மிகவும் தேவையானது. எனவே வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

மக்களிடமிருந்து எந்த வகையான கேள்விகள் உங்களை சங்கடப்படுத்துகின்றன?

குருதேவ்: இதுவரையில் யாரும் அத்தகைய கேள்விகளைக் கேட்டதாக எனக்கு நினைவில்லை. யாரிடமும் நான் சங்கடமாக உணர்ந்ததில்லை. இது வரையில் இல்லை.வருங்காலத்தை பற்றித் தெரியாது.

துன்பம் மற்றும் பயம் இவற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கின்றீர்கள். தங்கள் வாழ்வில், சந்தித்த மனஅழுத்தம் மற்றும் பதட்டம் இவற்றுடன் கூடிய தருணங்கள் யாவை?

குருதேவ்: பதட்டம் என்று கூற முடியாது, அழுத்தம் நிறைந்த தருணங்கள் இருந்திருக்கின்றன.  சுனாமி ஏற்பட்டபோது 48 மணி நேரங்கள் இடைவிடாது பயணம் செய்தோம். அந்த நாட்கள் மிகுந்த மன அழுத்தம் நிறைந்தவை. இராக்கில் முன்னும் பின்னும் குண்டுகள் நிறைந்த அபாயச் சிவப்புப் பகுதியில் நான் சென்றிருந்திருக்கின்றேன். நான் பதட்டம் அடையவில்லை அனால் என்னை சுற்றியுள்ளோருக்கு பதட்டம் அளித்திருக்கின்றேன். எங்களுக்கு எதுவும் நேராது என்பதை நான் உணர்ந்திருந்தேன். அரசு தடை செய்த போதிலும் அந்த அபாயப் பகுதிக்கு சென்று பழங்குடி மக்களைச் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.இரண்டு டாங்கர்கள் உட்பட12 வாகனங்கள் என்னுடை பாதுகாப்பிற்காக அளித்தார்கள். அரைமணி நேரம் கூட ஆகாத அளவுள்ள தூரத்தைக் கடக்க இரண்டு மணி நேரம் ஆயிற்று. போர் நிகழும் இடத்தில் பயணம் செய்வது சிலிர்ப்பாக இருந்தது, ஆனால் பதட்டம் இல்லை.

நீண்ட காலத்திற்கு முன்னர் போரின் பிடியில் இருந்த காஷ்மீரில் பல பகுதிகளில் நான் பயணம் செய்திருக்கின்றேன். ஸ்ரீலங்காவிலும் பயணம் செய்திருக்கின்றேன் ஆனால் அது எனக்கு ஏமாற்றத்தையே அளித்தது. அமைதியை ஏற்படுத்தவே நான் அங்கு சென்றேன். ஸ்ரீலங்காவின் தலைவருடன் பேசினேன், பிரபாகரனுடனும் பேச விரும்பினேன். போருக்குச் செல்லாமல் பேச்சுவார்த்தை நடத்தும்படி கூற விரும்பினேன். அவர் என்னைச் சந்திக்கவில்லை. அது சற்று ஏமாற்றத்தை அளித்தது. கிளிநொச்சியில் ஒரு நாள் தங்கி இருந்தேன். அந்த ஒரு மனிதரின் அகம்பாவம் கீழிரங்காவிடில் எண்பதாயிரம் பேர் அழிக்கப்படுவார்கள் என்பதைக் காண முடிந்தது.  அவர் மட்டும் பேச்சு வார்த்தைக்கு இணங்கியிருந்தால், ஸ்ரீலங்காவில் போர் தவிர்த்திருக்கப் படும். அவருக்குக் கீழிருந்த மக்களும் நம்பிக்கை இழந்திருந்தார்கள். அவர்கள்,''குருதேவ், தயவு செய்து எங்கள் தலைவரைச் சந்தியுங்கள்” என்றே கூறினார்கள். உங்களை சந்தித்தால் அவர் மனம் மாறக்கூடும் என்று கூறினார்கள். பிரபாகரன் என்னைச் சந்திக்க மறுத்து விட்டார். ஆன்மீகத் தலைவர்களைச் சந்திக்க மாட்டேன் என்றே கூறினார்.

வட கொரியா மற்றும் தென் கொரியாவிற்கு இடையே பிரச்சினை ஏற்பட்டபோது, அங்கு புதிய தலைவரை சந்திக்க முயற்சி எடுத்தேன். தனது இருபது வயதுகளில் உள்ள இளம் தலைவர் அவர். ஆனால் மாஃபியாக்களினால் சூழப்பட்டிருந்தார்.அவர்கள் தலைவரை சந்திக்க அனுமதிக்கவில்லை. அந்த அளவு நெருங்கிய பின்னர் அம்முயற்சி தோல்வி அடைந்து விட்டது. இவையெல்லாம் நிகழ்ந்தன, ஆனால் இவற்றால் நான் பாதிக்கப்பட வில்லை.

எனக்கு 30 வயது ஆகின்றது. ஆயினும் வாழ்வில் எனக்கு என்ன வேண்டும் என்று தெரிய வில்லை.. எது ஒன்றிலும் எனக்குத் தீவிர ஈடுபாடு இல்லை. பிறர் எதையேனும் தீவிரப் பற்றுடன் செய்யும்போது நான் என்னுள்ளில் காலியாகவே உணருகின்றேன். எனக்கு வாழ்வில் என்ன வேண்டும் என்பதை எவ்வாறு நான் கண்டு பிடிப்பது?


குருதேவ்: என்ன வேண்டும் என்பதைத் தவிர்த்து சுற்றியிருப்பவர்களுக்கு என்ன வேண்டும் என்று மாற்றிச் சிந்திக்கத் துவங்குங்கள். எனக்கு என்ன தேவை என்பதிலிருந்து என்னால் என்ன பயன் என்று மாற்றினால் வாழ்வின் முழுமையை உணருவீர்கள். நாட்டின் மேன்மைக்கு என்ன செய்ய முடியும், சமுதாயத்திற்கு என்ன செய்ய முடியும் என்று யோசிக்கத் துவங்கினால் வெற்றிடம் மறைந்து விடும். வாழும்கலையில் பல திட்டங்கள் உள்ளன. ஒரு தன்னார்வத் தொண்டரை நீங்கள் அழைத்தால், அவர் தங்களுடன் உங்களை அழைத்துச் செல்வார்.ஒரு சமூகப் பணியில் ஈடுபடும் போது ஏற்படும் மகிழ்ச்சி கொண்டாட்டம் இவற்றை அறிந்துணர்வீர்கள். இத்தகைய மகிழ்ச்சியை நீங்கள் எங்கும் வாங்க முடியாது.

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் வழி

திங்கள், 8 செப்டம்பர், 2014,

பெங்களூரு இந்தியா.

ஏதேனும் ஒரு கால கட்டத்தில், நீங்கள் அனைவரும் உண்மையில் நிரஞ்சனாக (பொருள்: தொடப்படாமல் மாசற்றவர்களாக) இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். பல சமயங்களில் சாலையில் கார் ஓட்டிச் செல்லும்போது, சாலையோரத்தில் இருவர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு,அவர்களை கடந்து செல்வீர்கள். அவர்களது சண்டை எந்த வகையிலும் உங்களை பாதிப்பதில்லை. நீங்கள் தொடப்படாமலேயே இருக்கின்றீர்கள். அது போன்றே எங்கேனும் கொண்டாட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தால் அதைப் பார்த்துக் கொண்டே கடந்து சென்று விடுகின்றீர்கள்.

நிரஞ்சனா என்பதன் பொருள் என்ன? எது ஒன்றும் நம்மைத் தொடவோ பாதிப்பதோ இல்லை என்பதே பொருள் ஆகும். உதாரணமாக, சிறு குழந்தைகள் உங்களுடன் சண்டையிட்டாலோ, கோபப்பட்டாலோ அது உங்களை காயப்படுத்துவதில்லை. பாதிப்பதும் இல்லை. அது போன்றே தாய்மார்கள் குழந்தைகளின் மீது கோபப்படும் போது குழந்தைகள் அதை மனதில் எடுத்துக் கொள்கின்றார்களா? இல்லவே இல்லை. இன்று தாய் கோபித்துக் கொள்ளும் போது கவனிக்கின்றார்கள், அடுத்த நாளே அதே குறும்பைச் செய்யத் துவங்குகின்றார்கள்.



உங்கள் தாய் கோபிக்கும் போது அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் மாமியார் அல்லது மாமனார் கோபிக்கும் போது, ஆழமாக மனதில் எடுத்துக் கொள்ளுகின்றீர்கள்.  




பெற்றோருக்கும் மாமனார் மாமியார் ஆகியோருக்கும் இடையில் உங்கள் அணுகு முறையில் உள்ள வித்தியாசத்தை பார்த்தீர்களா? எனவே பெரிய அல்லது சிறிய அளவில் நாம் அனைவரும் நிரஞ்சனாக இருப்பதை அறிகின்றோம். உண்மையான நிரஞ்சனாக இருப்பது எவ்வாறு? நிகழ்வுகள், சூழல்கள், இவற்றைப் பொருட்படுத்தாமல், நமது சுயத்தில் நிலை பெற்று இருந்தால், நாம் மகிழ்ச்சியுடனும் பேரின்பத்துடனும் இருக்கலாம்.

குருதேவ், நாம் ஒருவருடைய படத்தை பார்க்கும் போது அவர்களை நினைவு கூர்ந்து, இல்லாத குறையை  உணருகின்றோம். இது  போன்று செய்வது கடவுளுக்கும் பொருந்துமா? சரியாகுமா? இது ஆன்மீகத்தின் சாரத்திலிருந்து சிதறி விலகல் அல்லவா?

குருதேவ்: யாராவது அவ்வாறு உணர்ந்தால் சரி பரவாயில்லை. உண்மையில் நீங்கள் அவ்வாறு 
உணரத் தேவையில்லை. ஏனெனில் இந்த படைப்பு முழுமையுமே இறைவனின் சித்திரமே. படைப்பில் நாம் பார்க்கும் அனைத்துமே இறைவன் வரைந்த சித்திரமே ஆகும்.   இது இறைவனின் வெளிப்பாடே ஆகும். மிக நன்றாக உணருவதால் இறைவனின் படத்தை வைத்துக் கொள்ள ஒருவர் விரும்பினால் அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்? பல சமயங்களில் ஒரு படத்தின் மூலம் உங்களுக்கும்  இறைவனுக்கும் இடையே மனதின் மூலம் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றீர்கள்.

நமது வீட்டில் குடும்பத்தினர், மற்றும் தாத்தா, பாட்டி படங்களை வைத்திருக்கின்றோம். அதைப் பார்த்தவுடனேயே என் தாத்தா, என் பாட்டி என்று அன்புடன் அவர்களை நினைவு கூர்ந்து அவர்களுடன் ஒரு ஆழ்ந்த தொடர்பை உணருகின்றோம். அவர்களது படத்தைப் பார்க்கும் போது நீங்கள் அவர்கள் இல்லாக்குறையை உணருகின்றீர்கள் அல்லவா? அது போன்று குருநானக், மகாவீரர், புத்தர் போன்ற துறவிகளின் படங்களையும் நாம் வீட்டில் வைத்திருக்கின்றோம். புத்தரின் சிலைகள் ஏன் ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ளன? அவற்றை பார்த்தவுடன் அவர்களை நினைவு கூர்ந்து, தியான நிலைக்குச் செல்கின்றீர்கள். ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தை பருவப் படங்களை வீட்டில் வைத்திருக்கின்றோம் ஏனெனில் அப்படத்தைப் பார்த்தவுடனேயே குழந்தையின் பேரின்ப, களங்கமில்லா நிலையை நினவு கூறுகின்றோம். ஆனால் படத்தின் மூலம் மட்டுமே இறைமையை உணருகின்றோம் என்பது அல்ல.

மகாராஷ்ட்ராவில் பத்து நாட்கள் கணேச உத்சவம் நடைபெற்று வருவது  உங்களுக்குத் தெரியும். அந்த சூழலே முற்றிலும் வித்தியாசமானது. நேர்மறையான புனிதமான அதிர்வலைகள் சூழலில் எங்கும் நிறைந்திருக்கும். அங்கு ஒருவரது மனமானது இந்த பொருள் உலகினின்றும் விலகி ஆழமான ஆன்மீக நிலையில் லயித்திருக்கும். எங்கும் கொண்டாட்டம் நிறைந்திருக்கும். அதனால் நாம் ஹோலி, தீபாவளி,கணேச சதுர்த்தி, நவராத்திரி பண்டிகைகளை கொண்டாடுகின்றோம். இறைமையை நம்முள் உணருவதற்கே இவை ஆகும். அதனால் இறைவன் மற்ற நேரத்தில் இல்லை என்பதல்ல. இறைவன் எப்போதும் எல்லா நேரத்திலுமே உள்ளார். இறைவன் எல்லோரிடமும், இருக்கின்றார், அனைவரையும் சார்ந்துள்ளார், அனைத்தும் அறிந்தவர். உண்மையில் கடவுள் எங்கிலும் நிறைந்திருக்கும் இறைவன் உங்களுள் வசிக்க மாட்டாரா என்ன? 

உங்களுள்ளும் நிச்சயம் இருக்கின்றார் எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் இங்கும் இப்போதும் உள்ளார். எங்கும் எப்போதும் நிறைந்திருக்கும் இறைவன் உங்களை சார்ந்திருக்க மாட்டாரா என்ன? நிச்சயம் சார்ந்துள்ளார். அது அன்பு எனப்படுவது. நீங்கள் ஏதோ ஒன்றை, அல்லது ஒருவரை நேசிக்கும் போது  அவர்கள் உங்களுக்குச் சொந்தமாவதை உணருகின்றீர்கள். அது பக்தி.
எப்போதும் நினைவில் வைத்திருங்கள்: கடவுள் ஒரு மனிதன் அல்ல. அவர் ஒரு சக்தி. எங்கும் வியாபிக்கும் ஒரு அதிர்வலை. அந்த சக்தி  நம்முள்ளும் வாழ்கின்றது.. மனித வாழ்வின் நோக்கம் அவனது ஆழ்மனதிலிருந்து எழும் இக்கேள்வியே ஆகும். நான் யார்? கடவுள் யார்? இது போதுமானது ஆகும்.

இக்கேள்விக்கு விடை அறிந்தவர் கூற மாட்டார், கூறுபவர் அறிய மாட்டார் (சிரிப்பு) கேள்வி அநேக மனிதர்களிடம் எழுவதில்லை.பலர் இப்பொருள் உலகில், மேலோட்டமாக இயந்திர கதியில் உணவு உண்டு,  குடித்து, உறங்கி வாழுகின்றார்கள். எப்போது ஒருவன் உண்மையாக வாழ்வினை பற்றியும் அதன் ரகசியங்களை பற்றியும் விபரம் ஆராய   துவங்குகின்றானோ அப்போது அவனது ஆன்மீக பயணம் துவங்குகின்றது.

குருதேவ், ஏன் நமது நாட்டில் பிரபலமான ஆலயங்கள் மலையின் மீதோ குன்றின் மீதோ அமைந்துள்ளன? மக்கள் அங்கு சென்றைடைய கடினமான வகையில் ஏன் அமைத்துள்ளார்கள்?

குருதேவ்: ஒரு மலையின் மீது ஆலயம் அமைக்கப்படுவதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் உள்ளன. மலையின் மீது ஏறும்போது, நடக்கும்போது உங்கள் ரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. உங்களது மூச்சு வேகமும் மாறுகின்றது. அது ஒரு பிரணாயமம் செய்வது போன்றதாகின்றது. நீங்கள் வைஷ்ணோ தேவி (ஜம்மு காஷ்மீரில் உள்ள உயர்ந்த மலையில் அமைந்திருக்கும் தேவியின் ஆலயம்) ஆலயத்திற்கு செல்லும் போது மிக அதிகமான பிரணாயாமம் செய்தது போன்று உணருவீர்கள். நடந்து ஆலயத்தினை அடையும் போது அக்கணத்தில் உங்கள் மனம் காலியாக உணரப்பட்டு ஒரு தியான நிலையினை அடைகின்றீர்கள்

உங்கள் மனம் காலியாக உணரப்படும் போது எந்த விருப்பம் அல்லது வேண்டுதல் இருந்தாலும் உடனடியாக வெளிப்படுகின்றது. இது ஒரு அரிய ரகசியம்.சுதர்சன க்ரியா செய்து முடித்தவுடன் உங்கள் மனம் காலியாக உணரப்படுகின்றது, அதே சமயம் உள்ளிருந்து மகிழ்ச்சி மலர்ந்து எழுகின்றது. சுறுசுறுப்பாக உணருகின்றீர்கள். நிலை ஏற்படும்போது என்ன விரும்பினாலும் வேண்டினாலும் அது நிகழ்ந்தேறுகின்றது. இதை உங்களில் எத்தனை பேர் அனுபவித்து அறிந்திருக்கின்றீர்கள்? (பலர் கை தூக்குகின்றார்கள்) பிராணாயாமம், சுதர்சனக்ரியா மற்றும் தியானம் செய்து முடிக்கும்போது எழுகின்ற விருப்பம் நிறைவேறுகின்றது. அல்லவா? அதை அடைய, அழவோ கஷ்டப் படவோ தேவை இல்லை. விரும்புவது நடைபெறத் துவங்குகின்றது. எனவே சின்ன விஷயங்களை விரும்பாதீர்கள். அனைவருக்கும் பலன் தரக்கூடிய விஷயங்களையே விரும்புங்கள்.

குருதேவ், ருத்ர என்பதன் பொருள் அழும் அல்லது அலறும் ஒருவன் என்று கூறப் படுகின்றது. இது சரியா?

குருதேவ்: ருத்ர என்பதற்கு பல அர்த்தங்கள் இணைந்துள்ளன. இது அவ்வகையான பல அர்த்தங்களில் ஒன்று, அதாவது ஒருவனை அழ வைப்பவன் என்பது ஆகும். எந்த மாற்றமும் உங்களை அழ வைக்கும். பல ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன. அவற்றை வேறொரு தருணத்தில் பார்ப்போம்.

குருதேவ், நாங்கள் சத்தீஸ்கரிலிருந்து வருகின்றோம். எங்களிடம் இரண்டு பயணச் சீட்டுக்கள் இருந்தன. அவற்றில் ஒன்று மட்டுமே உறுதி செய்யப்பட்ட சீட்டு. எனவே நான் என்னுடைய நண்பருடன் என்னுடைய தூங்குமிடத்தை பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. ஒரு வயதான பெண்மணி தரையில் படுத்திருந்தாள் ஏனெனில் அவளுடைய சீட்டும் உறுதி செய்யப்பட்டிருக்க வில்லை. இந்நிலையில் நாங்கள் என்ன செய்திருக்க வேண்டும்?

குருதேவ்: நீங்கள் ஆஸ்ரமத்தை அடைந்து விட்டீர்கள். ஏன் அப்பெண்மணியைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கின்றீர்கள்? உங்களை தளர்த்திக் கொள்ளுங்கள். பெண்களை மதிக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியோரிடம் பரிவு காட்ட வேண்டும். முதியோருக்கு எப்போதும் பரிவு காட்ட வேண்டும். நமது நாட்டில் காலங்காலமாக இதுவே மரபு. கடந்த எட்டு பத்து ஆண்டுகளாக நமது கலாச்சாரத்தில் இம்மரபு மறைந்து விட்டது. பஸ்களில் முதியவர்கள் பயணம் முழுவதும் நின்று கொண்டிருக்கையில், இளைஞர்கள் உட்கார்ந்தே இருக்கின்றனர். எனது பள்ளிப்பருவத்தில், வயதானவர்கள் வந்தால் உடனேயே அவர்களுக்கு எங்கள் இருக்கையை மரியாதையுடன் தருவது வழக்கம். இது இந்தியக் கலாச்சாரத்தில் தனிப்பட்ட சிறப்பு ஆகும். வெளிநாடுகளில் அவ்வாறு இல்லை. அங்கெல்லாம், முதியவர்கள் நின்று பயணம் செய்யும் போது இளைஞர்கள் அமர்ந்தே இருக்கின்றார்கள்.

(கேள்வி செவிக்குப் புலப்படவில்லை)

குருதேவ்: சமுதாயத்தில் நல்ல, கெட்ட மற்றும் தந்திரமானவர்கள் என்னும் மூன்று விதமான 
மக்கள் இருக்கின்றார்கள். நல்லவர்களை கண்டும் தெரிந்து கொண்டும் நாம் அகத் தூண்டுதலை அடைகின்றோம். நன்மை செய்து முன்னேறலாம் என்னும் படிப்பினையை கெட்டவர்களிடமிருந்து அடைகின்றோம். தந்திரமானவர்களிடமிருந்து அவ்வாறு நாம் இருக்கக் கூடாது என்பதை படிக்கின்றோம். கெட்டவர்கள் தமக்குதாமேயும், பிறருக்கும் இடையூறு விளைவிக்கின்றார்கள். அவர்களின் முகங்களில் உற்சாகமோ மகிழ்ச்சியோ சிறிதும் இருக்காது. துக்கமாக இருப்பவர்கள் தங்களை சுற்றி துக்கத்தையே பரப்புகின்றார்கள். அவர்களிடமிருந்து வேறெதுவும் கிடைக்காது. ஆனால் அவர்களிடமிருந்து என்ன கற்றுக் கொள்ளலாம்? அவர்கள் எந்த செயலை செய்ததால் துன்ப நிலையை அடைந்தார்களோ, அந்தச் செயலை நீங்கள் செய்யக் கூடாது என்பதைக் கற்கலாம். எனவே, நல்லவர்களை தலை குனிந்து வணங்குவதற்கு முன்னர் தீயவர்களைத் தலை குனிந்து வணங்குங்கள்,  ஏனெனில் அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது.. துன்பக் குழியில் அவர்கள் வீழ்ந்து விட்டார்கள்.அதன் மூலம் (அவர்கள் செய்த தவறான செயல்களை நீங்கள் செய்யாமல் இருக்கும்) விலைமதிப்பில்லாத பாடத்தை வாழ்வில் உங்களுக்குக் கற்பிக்கின்றார்கள். 

குரு உத்சவ தினம்


வெள்ளிக்கிழமை , 5 செப்டம்பர் 2014,

பெங்களூரு, இந்தியா.

இந்தியாவில் ஆசிரியர் தினம் இன்று ஒரு புதிய பெயரை அடைந்துள்ளது.  இனி குரு உத்சவ தினம் என்று அழைக்கப்படும். மிகவும் பொருத்தமானதும் கூட. குரு என்னும் சொல் நடுநிலையான பால்வகை சொல்லாக கருதப்பட்டால் இந்த தினத்தின் பெயர் " பெரிய கொண்டாட்டம் " என்று மொழிபெயர்க்கப்படலாம்.
குரு என்பதன் பொருள் எப்போதுமே பெரியது என்பது.  நமது நாட்டின் பிரதமர், இந்த நாளுக்குப் புதுப் பெயர் கொடுத்தது ஒரு நல்ல கருத்து என்றே நான் எண்ணுகின்றேன்.   உலகெங்கிலும் மக்கள் மேலாண்மை குரு, ஆலோசனை குரு  என்றெல்லாம் குரு என்னும் சொல்லை பல விதங்களில் பயன் படுத்துகின்றார்கள்


அப்போது ஏன் ஆசிரியர் தினம் என்று அழைக்க வேண்டும்ஆசிரியர் என்பவர் கல்வி கற்பிப்பவர், ஆனால் குரு வழிகாட்டியும் கூட.  ஆசிரியர் குருவை விட ஒரு படி கீழேயே உள்ளார்ஏனெனில் ஆசிரியர் தகவல்களையும் திறன்களையும் கற்பிக்கின்றார்,குரு உங்களது இலக்கை அடைய உதவுகின்றார்இந்த வித்தியாசத்தைப் பார்த்தீர்களாஇது ஒரு புதிய, கண்ணோட்டம்.

ஒரு ஆசிரியர் உங்களுக்கு நிறைய தகவல்களை தரமுடியும். அத்தகவல்கள் முழுமையானவையாக இருக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை. ஆனால் குரு என்பவர்  உங்களது இலக்கை நோக்கி அழைத்து செல்கின்றார். எனவே இந்த நாள் இதை கொண்டாடச் சிறந்த நாளாகும்பல ஆண்டுகளாக நாம் இந்தியாவில் ஆசிரியர் தினமாகவே கொண்டாடி வருகின்றோம். இன்று புதிய பெயரிடப்பட்டு குரு உத்சவ தினமாக நமது வாழ்வில் உயர் பீடத்தில் இருத்தப்பட்டு மிகுந்த கண்ணியத்தினை அடைந்துள்ளது

ஒருவன் தன்னுடைய  பாத்ரதா வை ( அருள் மற்றும் ஆசியினைப் பெறுவதற்கான திறன்) உயர்த்திக் கொள்வதற்கு என்ன செயல்களைப் புரிய வேண்டும்?

குருதேவ்பாத்ரதாவை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்னும் ஆசை எழும்போது பாதி வேலை     முடித்து விடுகின்றதுஇந்த ஆசை எழும்போது தன்னுடைய குறைகளை உணர்ந்து அவற்றை கடக்க முயற்சி எடுக்கின்றான்அதுவும் அந்த உண்மையான நோக்கத்தின் மூலம் தானாகவே நிகழ்கின்றது. முக்கியமானது என்னவென்றால், இயல்பாகவும் எளிமையாகவும் பணிவாகவாகவும் இருப்பதுவே ஆகும். பணிவு உள்ளிருந்து எழவேண்டும்பாத்ரதா இயல்பாகவே அதிகரிப்பதை  காண்பீர்கள். ஒருவரது பாத்ரதாவிற்கு தகுந்தபடியே வாழ்வில் அனைத்தும் நடை பெறுவதாக உங்கள் மனதில் எண்ணம் கொள்ளாதீர்கள். சில சமயங்களில் குறைவான தகுதியுடையவன் சிறப்பானவைகளை அடைகின்றான்காலம் செய்யும் வேலை அதுஉதாரணமாக நம் நாட்டில் ஒரு முதல்வர் விபத்தில் சிக்கி ஆறு மாதங்கள் கோமாவில் இருந்தார்அப்போதும் பதவியை ராஜினாமா செய்யவில்லை, கோமாவிலேயே பதவியைத் தொடர்ந்தார்

ஒரு மாநிலத்தில், ஒரு முதல்வர் மனச்சோர்வினால் ஏற்படும் டிமென்ஷியா நோயினால் பாதிக்கப் பட்டிருந்தார். டிமென்ஷியா என்பது ஒரு மூளை நோய். அதனால் ஒருவன் நினைவுத் திறனை இழந்து விடுவான். அனைத்து மக்கள் , சம்பவங்கள் ஆகியவற்றை மறந்து விடுவான்முதல்வராக இருந்த போதிலும், எந்த வேலையும் செய்யவில்லை.அவரது செயலாளரே அனைத்தையும் கவனித்து  கொண்டார்செயலாளர் என்ன எழுதிக் கொடுத்தாரோ அதைப் பேசுவார், எதுவும் நினைவில் இருப்பதில்லை.

ஒரு முதல்வருக்கு எந்த ஒரு  ஒரு சிறு விஷயமும்  கோபத்தை அளிக்கும். காற்றில் இலைகள் அசைந்து ஓசை எழுப்பினால்கூட கோபம் ஏற்படும். இத்தகைய மனிதர்கள் நமக்கு ஆட்சியில் இருக்கின்றார்கள்இத்தகையவர்கள் முதல்வர்களாக ஆகக் கூடுமானால்,  அவர்கள் மன நல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.( சிரிப்பு)  எனவே உங்களுக்கு இரண்டு விருப்பத் தேர்வுகள் உள்ளன.   ஒன்று, எல்லாமே கர்மாவின் விளையாட்டு என்று எடுத்துக் கொள்வது.  குறைந்த தகுதி உள்ளவர்களும் பூர்வ ஜென்மத்தின் புண்ணியத்தால் இப்போது பலன்களை அனுபவிப்பதாக ஏற்றுக் கொள்வது.   இது காலத்தின் விளையாட்டு என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லது இதைப் பற்றி எண்ணியே வருந்தி  உங்களை பலவீனப்படுத்திக் கொள்வது. அவ்வாறெனில் நீங்கள் நடுங்கியே உண்மைப் பாதையிலிருந்து விலகி விடுவீர்கள் அல்லது சோர்வடைந்து உண்மையாக இருந்து நான் என்ன கண்டேன்? நானும் குறுக்கு வழியில் சென்று நான் விரும்புவதை அடையலாமே என்று எண்ணுவீர்கள்.

நான் உங்களுக்கு ஒரு ரகசியம் கூறுகின்றேன்.  இவ்வாறு தவறான குறுக்கு வழிகளை பின்பற்றினால் இன்னும் அதிகமான துன்பத்தில் மிக ஆழமாக மூழ்கி விடுவீர்கள்ஒரு வேளை, ஒருவன் பிறரிடமிருந்து திருடுவதன் மூலம் செல்வச் செழிப்பினை அடைவதை பார்த்து நீங்களும் அவ்வாறே ஆக வேண்டும் என்று விரும்பினால் நான் கூறுவதை கவனியுங்கள்.  அவன்  சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடுவான், ஆனால் நீங்கள் மாட்டிக் கொண்டு தண்டனை அனுபவிப்பீர்கள். ஏனெனில் அத்தகைய தவறான செயல்பாடுகள் உங்கள் உண்மையான சுபாவம் அல்ல. அத்தகைய தீயவை உங்கள் இயல்பானால் ,   இங்கு சத்சங்கத்திற்கு வந்து என்னுடைய ஞான சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டு இருக்க மாட்டீர்கள்.

நீங்கள் இங்கு அமர்ந்து அறிவார்ந்த விஷயங்களைக் கவனித்துக் கொண்டிருப்பதால், தீயவை உங்களது இயல்பு அல்ல என்பது தெளிவாகின்றதுஉங்கள் மரபணுக்களிலேயே தீமை என்பது இல்லை. ஒரு வேளை முன்வினைப் பயன் களினால், அம்மனிதன் தப்பித்துக் கொண்டு வருவானாக இருக்கும். ஆனால் அதைப் பார்த்து நீங்கள் செய்தால் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள்.

மனநிறைவுநுகர்விற்குப் பின்னர் வருகின்றதா அல்லது  நுகர்வினை தவிர்ப்பதால் வருகின்றதா?

குருதேவ்: மனநிறைவு  உங்களது விழிப்புணர்வு நிலை மேம்படுவதால் ஏற்படுகின்றது. அது , மீண்டும் மீண்டும் ஏதாவது ஒன்றில்  இயங்கிக் கொண்டே இல்லாத நிலையில் ஏற்படும் ஒரு உயர்ந்த அனுபவம் ஆகும். பதஞ்சலியின்  யோக சூத்திராவில் எவ்வாறு வைராக்யா (சாந்தமான நிலை) அடைவது என்னும் கேள்விக்கு மகரிஷி பதஞ்சலி பதில் கூறுகின்றார், " த்ரிஷ்டானு ஷ்ரவி கவிஷய விட்ருஷ சய வசிகர சஞ்சன வைராக்கியம் "

பார்க்கும் அனைத்திலும் கேட்கும் அனைத்திலும் உங்கள் மனதின் கவனத்தைச் செலுத்தி வந்தால் அவை மட்டுமே உங்களுக்கு அதிகமாகக் கிடைக்கும்பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகின்றார், " த்யாயதோ விஷயான் பும்சாஹ் சங்கச் தேஷு பஜாயதே . சங்கத் சஞ்சயதே காமஹ் காமத் க்ரோதோ பீஜயதே . க்ரோதாத் பவதி சம்மோஹாஹ் சம்மோஹத் ஸ்ம்ரிதி விப்ரமாஹ், ஸ்ம்ரிதி பிராமஷாத்  புத்தி -நாஷோ புத்தி நாசத் ப்ரனஷ்யதி " ( 2.62 & 2.63 )   

இதன் பொருள்: ஒரு நாள் முழுவதும் உணவையே பார்த்துக் கொண்டிருந்தால், பசி இல்லாவிடினும் அதிகமாக உணவினை உண்ண விரும்புவீர்கள். ஏனெனில் உங்கள் மனம் உணவிலேயே திளைத்துக் கொண்டிருக்கின்றதுநமது புலன்களின் அனுபவிக்கும் திறன் வரையறுக்கப்பட்ட ஒன்று , ஆனால் மனப் பசி எல்லையில்லாததுமனதிற்கும் உடலுக்கும் இடையே ஏறுமாறான நிலை இருந்தால் நல்லிணக்கம் அற்ற நிலை ஏற்படுகின்றது.

மனதிற்கும் உடலுக்கும் தேவைகள் வெவ்வேறானதுஇவையிரண்டும் இசைந்து ஒத்துவராமல் இருந்தால் சமநிலையற்ற பதற்றம் உருவாகும்பெருத்த சங்கடம் மற்றும் பல பிரச்சினைகள் ஏற்படும். புலிமியா (இயற்கை மீறிய பெரும் பசி) போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றனமுதலில் நீங்கள் மனதின் பழக்கங்கள் அல்லது போக்கிற்கு வேகத்தடை போட வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதற்கு மாற்று என்ன என்பதை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒருவர் புகைப் பிடிக்கும் பழக்கம் கொண்டிருந்தால், அதை நிறுத்த வேண்டும் என்று முடிவெடுத்தால், உடனேயே நிறுத்த முடியாது.  அதற்குப்  பதிலாக மாற்று  தரப்பட வேண்டும்மிகச் சிறந்த மாற்று சாதனா ஆகும். (பிராணாயாமம் ஆகியவை ) சாதனாவின் மூலம் வேறு வகையான மகழ்ச்சி உள்ளிருந்து எழுகின்றது. அது பிரத்யாஹரா என்று அழைக்கப்படுகின்றது.

வாழும் கலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் போது, பிரசன்னா மற்றும், கமோடர் ராவ் போன்றவர்கள்  உணவு உறக்கம் எதுவுமே இல்லாமல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இவர்களைப் போன்று பல குழுக்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். சுவாமி ப்ரக்யபாதா ஜி, மற்றும் பலர் ஆஸ்ரமத்தில் முழு ஈடுபாட்டுடன் பணி புரிந்தனர். அவர்களின் ஒரே நோக்கம் விழா சிறப்பாக அமைய வேண்டும் என்பது தான். நூறு சதவீதம் எப்போதும் தங்கள் திறனை செலுத்தி, வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் பணி புரிந்தனர்.  அவர்கள் மனதில் இருந்த ஒரே விஷயம் விழா வெற்றி கரமாக நிகழ வேண்டும் என்பது தான்பல சமயங்களில் உங்கள் வேலையில் உள்ள காலக்கெடு, உங்கள் உள்ளிருந்து ஒரு வேறு வகையான சக்தியை அளிக்கும். அச்சமயத்தில் வேறெதுவும் ஒரு பொருட்டாக தெரியாது. மன நிறைவு என்பது கூட அப்போது ஒரு பிரச்சினை அல்ல.

ஒரு பணியினை முடிக்கும் அர்பணிப்பு அல்லது எதையாவது ஒன்றினை முடிக்கும் அவசரம் ஏற்படும் போது உங்கள் அனைத்து சக்தியும் தாமாகவே அப்பணியினை நிறைவேற்றும் வகையில் வழிநடத்தப்படும்.  அனைத்து விருப்பு வெறுப்புக்களும் தாமாகவே குறைந்து விடும்.  ஆனால் இந்நிலை எப்போதும் இருக்காது. வாழ்வில் ஒரு குறிக்கோள், அல்லது காரணம் அவ்வப்போது இருந்து வந்தால், தீராத ஆசைகளின் பசியிலிருந்து வெளி வரலாம். ஆகவே, விவேகத்தின்  ஒரு பணி அல்லது இலக்கு இவற்றை நோக்கி மனதைச் செலுத்துவது உதவியாகும். இரண்டாவதாக உதவி செய்வது சாதனா.   இவையிரண்டுக்கும் மேலானது முழுமையான அன்பில் திளைத்திருக்கும் நிலை ஆகும். நீங்கள் மிக ஆழமாக அன்பில் திளைத்திருக்கும் போது எதனாலும் தொந்தரவு அடைய மாட்டீர்கள். அந்நிலையில் சட்ட திட்டங்கள் ஒழுங்குமுறைகள் இவற்றையெல்லாம் பின்பற்றுவது கூட பாரமாகத் தோன்றாது. ஏனெனில் அன்பும் அர்ப்பணிப்பும் ஒரு இலக்கை நோக்கி செலுத்தப்படுகின்றன.