சனிக்கிழமை,
30 ஆகஸ்ட் 2014,
டெல்லி, இந்தியா
மருத்துவ
அறிவியல் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் டெல்லி, மற்றும் உலக தியான டாக்டர்கள் சங்கம் ஏற்பாடு
செய்திருந்த ' உளவியல் துறை மன அழுத்த குறைப்பு திறன்கள்: அறிவியல் மேம்படுத்தல் '
என்னும் மாநாட்டிற்கு பூஜ்ய குருதேவ் தலைமை விருந்தினராக இருந்தார். அரசு மற்றும் தனியார் துறை டாக்டர்கள், நர்சுகள்,விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், உளத்துறை நிபுணர்கள், மருந்து விற்பனையாளர்கள், உடல்நல
நிர்வாகிகள்,மருத்துவ மாணவர்கள் மற்றும் நாடு முழுவதும் இருந்து பல்வேறு துறைகளில் உள்ள உடல்நல நிபுணர்கள் இந்த நிகழ்ச்சியில்
கலந்து கொண்டனர்.
பூஜ்ய
குருதேவின் உரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.
நான்
உங்களுக்கு ஒரு சிறிய கதை கூற விரும்புகின்றேன். ஒரு சமயம் பொறுமையற்ற ஒரு நோயாளி டாக்டரை காண வந்திருந்தார். அவருக்கு உடலெங்கும் வலி இருந்தது.முதுகு வலித்தது, தலை வலித்தது,
உறக்கம் இல்லை. அதிக அளவு பிரச்சினைகள் இருந்தன. எனவே டாக்டர், தலையில் இருந்து
கால் கட்டைவிரல் வரை பரிசோதனை செய்து பாப்போம் என்று கூறினார்.
முழுமையான
பரிசோதனை நடத்தப்பட்டது. அனைத்து அறிக்கைகளும் சரியாகவே இருந்தன. அவரது ரத்த பரிசோதனை
அறிக்கை, சரியாக இருந்தது,ரத்தஅழுத்தம் சரியாக இருந்தது,கொழுப்பு இல்லை,சிறுநீரகங்கள்
சரியாகவே இயங்கின. டாக்டர் அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவே கூறினார், ஆனால்
நோயாளி இல்லை என்றே வலியுறுத்தினார். அந்த நோயாளி எனக்கு உடல் நிலை சயில்லை, மீண்டும்
ஒரு முறை பரிசோதனை செய்யுங்கள் என்று டாக்டரை கேட்டுக் கொண்டார்.டாக்டர் அவருக்கு
நோய் ஒன்றும் இல்லை என்று மீண்டும் உறுதியளித்து அவரிடம், " பாருங்கள்! நகரத்தில் ஒரு சர்க்கஸ் நடந்து கொண்டிருக்கின்றது.
அதில் ஒரு கோமாளி மக்களை சிரிக்கும்படி செய்கின்றான்.அங்கு சென்று சற்று நேரம் அமர்ந்து
நன்றாக சிரியுங்கள். நலமாக உணருவீர்கள். உங்களுக்கு நோய் எதுவும் இல்லை" என்று
கூறினார்.
இதற்கு
நோயாளி,"டாக்டர்! நான் தான் அந்த கோமாளி.. நான் மக்களைச் சிரிக்க வைக்கின்றேன் ஆனால் எனக்கு மிகுந்த அழுத்தம் உள்ளது" என்று கூறினார். இரண்டு
ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மருத்துவர்களின் கூட்டத்திற்கு பேசும்படி அழைக்கப்பட்டிருந்தேன்.
அங்கு நிகழ்ந்திருந்த ஒரு ஆய்வில் 60% டாக்டர்களே உடல்நலம் அற்றவர்கள் என்று கண்டு
பிடிக்கப்பட்டிருந்தது.அவர்களுக்கு அதிக அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இருந்தன.
பொதுமக்களின் உடல் நலனைப் பேணுவதால், டாக்டர்கள்
நல்ல உடல்நலத்துடனேயே இருப்பார்கள் என்று மக்கள் எண்ணுகின்றார்கள். ஆனால் அவ்வாறு இல்லை. ஏன்? இந்த
ஏன் என்னும் கேள்வியில் நமது கவனத்தை செலுத்த வேண்டும். மருத்துவத் தொழில் என்பது
மக்களுக்கு மருந்துகளை கொடுக்கும் பணி மட்டுமே
அல்ல. ஒருவரது வாழ்வு முறையை பற்றியதாகும். ஒருவர் உள்ளிலிருந்து சிரித்து
மகிழ வில்லையென்றால் அவர் உடல்நலமானவர் என்று இந்திய பண்பாட்டில் கருதப்படுவதில்லை.
இந்தியாவில் பண்டைய காலத்தில் ஸ்வஸ்தா
என்று கூறப்படுவதன் பொருள் என்னவென்றால் தன்னில்
நிறுவப்பட்டுவிட்ட ஒருவர், மற்றும் சொல்வதும் செய்வதும் ஒத்திருக்கும் ஒருவர் என்பது
ஆகும். அப்படிப்பட்ட ஒருவரே நலமானவர்
என்று கருதப்பட்டார். ஒன்றை கூறி வேறொன்றை செய்பவர் உடல் நலமற்றவர் என்றே கருதப்பட்டார், அவரை யாரும் குறை கூறுவதில்லை.
நமது
நாட்டில் நாம் குற்றவாளியைக் குறை கூறுவதில்லை. உடல் அல்லது மனநலமற்றவர் என்றே கருதப்பட்டு, யோகா மற்றும் ஆயுர்வேத மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த
ஏற்பாடுகள் அனைத்தும் ஒருவன் நலத்துடன்
இருக்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப் பட்டு இருந்தன. அர்ப்பணிப்பு மற்றும் நல்ல
குணங்களுடன் இருக்கும் ஒருவன் தான் முழுமையாக நலமானவன் என்று கருதப்பட்டான். தனக்கு என்ன வேண்டும் என்று விரும்புகின்றானோ அவையே
பிறருக்கும் வேண்டும் என்று கருதுபவனே நலமானவன். இனிமையான மற்றும் ஈடுபாடு கொண்ட மன நிலையே நலத்தின் அடையாளம் ஆகும். மகிழ்ச்சியே
உடல்நலத்திற்கு ஒரு காரணியாக உள்ளது. அதிர்ஷ்டவசமாக உலகெங்கும் ஏற்றுக் கொள்கின்றனர். நீங்கள் மகிழ்ச்சியற்று இருந்தால்
ஏதோ சரியில்லை. கடந்த ஆண்டுகளில் அறிவியல் கடினமானது என்று எண்ணியிருக்கின்றோம்.
ஆனால் அவ்வாறு அல்ல. அறிவியலும் வளர்ந்து வரும் எப்போதும் வளரும் ஒரு பாடப் பொருள்.
அறிவியல் முடிவடையாது, முடிவடைந்து விட்டால் அது இறந்து விட்டது என்றே கருதலாம். அறிவியல் எப்போதுமே இளமையானது. இளமையின் அடையாளம்
வளர்ச்சி. அறிவியலும் எப்போதும் வளர்ந்து வருகின்றது. துரதிர்ஷ்டவசமாக அறிவியல் நீண்ட
காலமாக பாரபட்சத்த்தால் தாக்கப்பட்டிருந்தது, ஆனால் இப்போது அந்நிலை மாறி வருகின்றது.
இனிமையான ஈடுபாடு கொண்ட மனநிலை நல்ல ஆரோக்கியத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றது.
1980ஆம் ஆண்டு ஆயுர்வேதிக் வைத்தியர்களின் முதல் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அப்போது
எனக்கு 24 -25 வயதுதான். ஆயுர்வேத டாக்டர்களைத் தவிர AIIMSலிருந்து அலோபதி முறை டாக்டர்களும் வந்திருந்தார்கள். அந்த
மாநாட்டில் ஆயுர்வேதிக் டாக்டர்கள் மஞ்சளை பற்றி விவாதித்தார்கள். அவர்கள் மஞ்சள்
ஒரு அயோச்டப்னி அதாவது அது முதுமையை கட்டுப்
படுத்துவதன் கூட ஒரு உயிர் வளியேற்ற எதிர்ப்பி (Antioxident) என்றும் கூறினர். ஆயுர்வேதிக்
டாக்டர்கள் மஞ்சளின் முக்கியத்துவத்தை கூறியபோது அதை அல்லோபதி டாக்டர்கள் ஏற்றுக்
கொள்ளவில்லை. அவர்கள் அது மூட நம்பிக்கை மற்றும் மஞ்சளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கிடையாது என்றே கூறினர். இன்று ஒரு
ஆய்வில் மஞ்சள் மன அழுத்தத்திற்குச் சிறந்த மருந்து என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதில் 19 முக்கிய உயிர்காக்கும் மருந்துகளின் குணம் உள்ளதாக அண்மையில் ஒரு ஆய்வு எடுத்துக்
காட்டுகின்றது.
இப்போது
ஆயுர்வேத டாக்டர்கள் கூறியது சரி என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. இது போன்றே ஒரு
தலைமுறை முழுவதும் வெண்ணை உடல்நலத்திற்குக் கேடானது என்றே எண்ணி வந்தனர். இரண்டு மாதங்களுக்கு
முன்னர் டைம் பத்திரிகை ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் வெண்ணை இதயத்திற்கு நல்லது
என்று கூறப்பட்டுள்ளது.ஒருவர் ஒரு நாளைக்கு
இரண்டு தேக்கரண்டி வெண்ணை எடுத்துக் கொண்டால் இதயநோயை தடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.
ஐம்பது
ஆண்டுகளாக மக்கள் வெண்ணை கெடுதல் என்று கருதி மார்கரினை பயன்படுத்தினர். இப்போது
அது கெடுதல், வெண்ணையே நல்லது என்று கூறுகின்றார்கள். உங்கள் கையில் வைத்திருக்கும்போது உருகும் எதுவும்
உங்களுக்கு நல்லது, அது ரத்தக் குழாய்களை அடைக்காது.
மார்கரின் உருகாது, வெண்ணை உருகும். அதனால் அறிவியலில்
பாரபட்சம் கூடாது, ஏனெனில் அது எப்போதும் வளர்ந்து வருவது. அதே சமயம், ஆன்மீகத்தில்
மூட நம்பிக்கைகள் கூடாது. வெளிப்படையான விவாதங்கள், இருக்க
வேண்டும். வேத நூல்களில் கூறப்பட்டுள்ளதால் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டாம். தற்காலத்திற்கு
பொருந்துமா என்று என்று பார்க்க வேண்டும். அவை எழுதப்பட்டதற்கான காரணக் கூறுகளை ஆராய
வேண்டும். வேத
நூல்களில் நீர் குடிப்பதற்கு முன்னர் ஒரு துணியில் வடிகட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பல ஜைன சமயத்தைச் சார்ந்தவர்களின்
வீடுகளில் குழாயில் ஒரு துணி கட்டப்பட்டிருக்கும். பல பூச்சிகளும் கொசுக்களும் அத்துணியில்
வந்து அமருவதால் பல பிரச்சினைகள் எழுகின்றன. ஆகையால் சுத்தமான தண்ணீர் கூட இதன் மூலம் தூய்மையற்றதாக ஆகி விடுகின்றது. கைகளால் உண்ண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நாம் கவனிப்பதில்லை. ஆகவே ஏன்
வேத நூல்களில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
பழமையான
முறைகள், மீளாய்வு மற்றும் அறிவியல் தேர்வுக்கு உட்பட திறந்த நிலையில் வைக்கப்பட வேண்டும்.அவற்றை
ஓரவஞ்சனையுடன் ஒதுக்கவும் கூடாது, மூட நம்பிக்கையுடன் கண்மூடித்தனமாகப் பின்பற்றவும்
கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நடு நிலையில்,எடுத்துச் செல்லுங்கள். ஒரு மரத்தின் வேர்கள் பழமையானவையாகவும் கிளைகள் புதியனவாகவும் இருக்கின்றதோ அது போன்றதே
வாழ்க்கை.
தொடரும்
..............