ஜூன் 05, 2014
பெங்களுரு, இந்தியா
ஒருவருடைய அறிவு கூர்மையாகவும் ஆழ்ந்தும்
உள்ளதோ அவர் ஒரு ஞானி (விவேகமும் அறிவும் உள்ளவர்) ஆவார்.அந்த மாதிரியான ஒருவர் அனைத்தையும்
மேலோட்டமாக அல்லாது ஆழ்ந்து புரிந்து கொள்ளுகிறார். ஒரு ஞானி எப்போதுமே இயற்கை மற்றும்
கடவுளோடு நெருங்கி இருக்கிறார்.
விவேகம் உள்ள ஒரு ஞானி இயற்கையின் விதிகளை புரிந்து
கொண்டு அவைகளை மீறாமல் அதன்படி நடக்கிறார். எனவே நீங்கள் உங்களுடைய பக்தி மற்றும் சரணாகதி
ஆகிய உணர்ச்சிகள் மூலமாகவும், அறிவு பாதையை பின்பற்றுவதன் மூலமாகவும் கடவுளை புரிந்து கொள்ளலாம். நேர்மையான
செயல்கள் புரியவும் அறியாமையை அகல செய்யவும் இது உதவியாக இருக்கும். உங்கள் இயல்புக்கு
ஏற்றதாகவும் உங்களுக்கு பிடித்த பாதையையே பின்பற்ற வேண்டும். நீங்கள் உங்களுடைய புத்தி
மற்றும் தர்க்க குணம் ஆகியவைகளால் அல்லாமல் உணர்ச்சிகளால் இயக்கப்படுபவராக இருந்தால்,
நீங்கள் உங்களை மேலும் சத்சங்களிலும் பக்தியிலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் தெரியும் என்று நினைத்திருப்பதை
விட தெரியாதது அதிகம் உள்ளது. இதை புரிந்து கொண்டாலே நம்முடைய வாழ்வில் உயர்ந்த அளவிற்கு
முன்னேறலாம். நீங்கள் புத்தி மற்றும் தர்க்க குணத்தால் வலுவுடன் இயக்கப்படுபவராக இருந்தால்,சத்சங்கத்தில் அமர்ந்திருக்கும் போதே நீங்கள் அமைதியற்றவராகி விடுவீர்கள்."இந்த
சத்சங்கத்தையும் கோஷத்தையும் நிறுத்துங்கள்! எவ்வளவு முறை சொன்னதையே மறுபடியும் சொல்லிக்கொண்டிருப்பீர்கள்? ஏன் இவ்வாறான நீளமான பஜனைகளை பாடுகின்றீர்கள்? கடவுளை அவரின்
பெயரால் ஒரு முறை அழைப்பதே போதுமானது." என்று சொல்லி சிரிப்பீர்கள்.
இரண்டு காதலர்களை பார்த்தால், எல்லா
இடங்களிலும் ஒருவர் மற்றவருடைய பெயரை எழுதிக் கொண்டிருப்பார்கள். நான் உன்னை காதலிக்கிறேன்
என்று எங்கெல்லாம் எழுதமுடியுமோ எழுதுவார்கள்.
ஒரு முறை எழுதுவது போறாது என்று பத்து முறை எழுதுவார்கள். நோட்டு புத்தகங்களின் பல பக்கங்களை அவர்களுடைய
அன்புக்குரியவரின் பெயரால் நிரப்புவார்கள். சுவர்களில் கூட அன்புக்குரியவர்களின் பெயர்களை
பதிய வைப்பார்கள். ஏனென்றால் ஒரு காதலர் தனது அன்பிற்குரியவர் பெயரை ஒரு முறை சொல்லுவதுடன்
நிறுத்துவதில்லை. அவர் அன்புக்குரியவரின் பெயரை மீண்டும் ஒப்புவிக்கிறார்.
இது புத்தி மற்றும் தர்க்கத்தினால் இயக்கப்படுபவர்களின் முறை அல்ல.
புத்தியால் இயக்கப்படும் அத்தகைய
ஒருவர், இந்த படைப்பினை கவனிக்கும் போது அதன் பெருந்தன்மையைக் கண்டு வியப்பில் நின்று
விடுகிறார். இந்த படைப்பு அதிசயமானது, விளங்காதது மற்றும் கேளிக்கை நிறைந்தது. ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு தருணமும் புதிய கண்டுபிடிப்புகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும்
இந்த படைப்பை பற்றி மேலும கண்டுபிடிக்கும் ஒருவர் இந்த படைப்பின் ரகசியங்கள் ஒருவர்
கற்பனை செய்வதை விட மிகவும் ஆழமானவை மற்றும் புதிரானவை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள
முடியும். இந்த புரிந்து கொள்ளும் தன்மை தான் ஒருவரிடம் அதிசயிக்கும் உணர்ச்சியை அதிகரித்து
அதன் மூலமாக இறுதியில் யோக நிலையை அனுபவிக்க வைக்கிறது. மேலும் அவர் இயற்கையோடு ஒன்றி
விடுகிறார்.
அதனால் தான் ஆச்சரியப்படும் உணர்ச்சி
யோகப் பாதையில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே ஆச்சரியப்படும்
நிலையில் இருப்பது யோகாவில் ஒரு முக்கியமான படிக்கல் ஆகும். இது எதனால்? நாம் தெரியும்
என்று நினைத்திருப்பதை விட அதிகமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது, நமக்கு தெரியாதது
மிகவும் அதிகம் உள்ளது. இதை மட்டும் புரிந்து கொண்டாலே நம்முடைய வாழ்வில் மிக உயர்ந்த
அளவிற்கு முன்னேறலாம். இந்த படைப்பு பரந்தது, முடிவில்லாதது மற்றும் முழுதும் ஆச்சரியங்கள்
நிறைந்தது. கரைகளோ முடிவோ இல்லாதது. இதை தெரிந்து கொண்டிருப்பது ஞான யாகத்தில் இருப்பது
போன்றது.
ஒரு ஞானியும் விஞ்ஞானியும் இந்த
உண்மையை எப்போதுமே அறிந்திருப்பதால் அவர் எப்போதுமே இறைவனுக்கு அருகில் இருப்பார்.
இயற்கை அதனுடைய ரகசியங்களை வெளிப்பதுத்துவதனால் அவர் எப்போதுமே ஆச்சரிய நிலைகளை கூர்ந்து
கவனிப்பார்.
ஜெனிவாவில் 27 கிலோமீட்டர் நீளத்திற்கு செயற்கை குகைப்பாதை உள்ளது. ஒரு விஞ்ஞானி குகைப்பாதையில் தன்னுடைய பரிசோதனைகள் மூலமாக
கடவுள் துகளை கண்டுபிடித்தார். நான் ஜெனிவாவுக்கு
சென்று அந்த விஞ்ஞானியை சந்திக்க அழைப்பை பெற்றேன்.கடவுள் துகள் என்பது என்ன? மிகவும்
அடிப்படையான மேலும் பிரிக்க முடியாத ஒன்று, அதிலிருந்து தான் அனைத்துமே உருவாக்கப்படுகின்றன. எதில் இருந்து இந்த படைப்பில்
அனைத்துமே உருவாக்கப்படுகிறதோ மற்றும் எது
மற்ற அனைத்தினுடைய சாரமோ அதுவே கடவுள் துகள் ஆகும். இதைக் கண்டு பிடித்ததன் மூலமாக
நாம் கடவுளை கண்டு பிடித்தோம், ஏனென்றால் அனைத்துமே இதனால் மட்டுமே உருவாக்கப்பட்டவை.
எனவே ஞானி மற்றும் விஞ்ஞானி இருவருமே
கடவுளுக்கு நெருங்கியவர்கள்.அவர்கள் இருவருமே கடவுளைப் பற்றியே சிந்தனையிலேயே இருப்பவர்கள். நாள்
முழுவதும் கோவிலில் அமர்ந்து கொண்டும் தெய்வீக பாடல்களை பாடிக்கொண்டு கோவில் மணியை
அடித்துக் கொண்டு இருப்பவர் மட்டுமே கடவுளை உண்மையாக வழிபடுபவர் என்று நினைக்க வேண்டாம்.அல்ல!
ஒருவர் இந்த படைப்பின் மர்மத்தை எண்ணி ஆச்சரியம் கொள்ளுகிறாரோ, எவர் ஒருவர் அதன் உயர்வை
பற்றி தெரிந்திருக்கிறாரோ மற்றும் இந்த படைப்பின் சக்திக்கு சரண் அடைகிறாரோ அவரே உண்மையில் கடவுளை பற்றிய சிந்தனையில்
இருப்பவர்.
பலதரப்பட்ட மக்கள் இருப்பது போல்
வழிபடுவதிலும் பல்வேறு வகைகள் உள்ளன. அனைத்துமே மிக சிறந்தவை. அனைத்தையுமே நாம் மதிக்கவும்,மரியாதை
செய்யவும் வேண்டும்.கிருஷ்ண பகவான் இதைத்தான் இங்கு கூறுகிறார். கடவுள் ஒருவரே. நீங்கள்
அவரை ஒருவராகவே பார்க்கலாம் அல்லது விருப்பப்பட்டால் அவரை பல வடிவங்களிலும் பல வழிகளிலும்
பார்க்கலாம். நீங்கள் அவரை செடிகள், மரங்கள், விலங்குகள், குழந்தைகள் ஆண்கள் மற்றும்
பெண்கள் ஆகிய அனைத்திலும் பார்க்கலாம். நீங்கள் அவரை கழுதை, நாய் அல்லது மிக சிறிய
பூச்சிகளிலும் கூட பார்க்கலாம். நீங்கள் இவை அனைத்தையும் மதிக்கவும் கௌரவிக்கவும் செய்ய
வேண்டும். ஏனென்றால் அவை அனைத்தும் தெய்வீகத்தின் பல்வேறு வெளிப்பாடுகள் ஆகும். கடவுள்
எங்கும் நிறைந்திருக்கிறார். அனைத்திலும் நிறைந்திருக்கிறார். அதனால் நீங்கள் அனைவரையும்
மதிக்கவும் கௌரவிக்கவும் வேண்டும்.
பிரம்மன் (ஒரு உயர்வான உணர்வு) மிக
சிறிய பூச்சிகளில் இருந்து மிகப் பரந்த இந்த படைப்பு வரை அனைத்திலும் வெளிப்படுகிறார்
என்று சொல்லப்படுகிறது. எனவே நீங்கள் இதில் முழு நம்பிக்கையும் மரியாதையும் கொள்ள வேண்டும்.
நீங்களும் அதே உணர்வுடன் தான் ஆக்கப்படிருக்கிறீர்கள். உங்கள் உடலின் ஒவ்வொரு துகளும்
பிரம்மனால் செய்யப்பட்டது. நீங்கள் எப்போதுமே
ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள்
1. எங்கும் நிறைந்திருக்கிறார் எனவே
அவர் எனக்குள்ளும் இருக்கிறார்.
2. அவர் அனைவருக்கும் சொந்தமானவர்
அதனால் எனக்கும் சொந்தமானவர்.
3. கடவுள் அனைத்து திறனும் பெற்றவர்.
என்னிடம் உள்ள எந்த பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்யக் கூடியவர்.
கடவுள் என்பவர் சில நாட்களுக்கு
முன் இருந்தார். இப்போது அவர் இல்லை என்பது கிடையாது. கடவுள் எங்கும் எப்போதும் நிறைந்திருக்கிறார்
என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் இப்போது இருக்கிறார், ஒவ்வொரு கணமும் அவர் இருக்கிறார்.
இது குறித்து உங்களுக்கு நினைவுபடுத்திக் கொள்ளவும். இது தான் நம்பிக்கை என்பது. இதற்காக
நீங்கள் என்ன செய்ய வேண்டி இருக்கும். பல மணி நேரங்கள் அமர்ந்து தியானம் செய்ய வேண்டுமா?
இல்லை! இதற்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். இத்தருணம் இந்த உண்மையில் முழு நம்பிக்கையோடு
இருந்தாலே போதும். அவ்வளவு தான்.
ஒரு காதலராக மாறுவதற்கு உங்களுக்கு
எவ்வளவு நேரம் தேவைப்படும். அதற்கு நீங்கள் அதிக பயிற்சி செய்ய வேண்டுமா? எதாவது கல்லூரியில்
சேர்ந்து படிக்க வேண்டுமா அல்லது ஏதாவது சான்றளிக்கும் பட்டம் தேவையா? நீண்ட நேரம்
வசனங்களை படிக்க வேண்டுமா அல்லது அதற்காக மிக கடுமையான பயிற்சிகள் செய்ய வேண்டுமா?
நீங்கள் காதலராக மாறுவதற்கு என செய்ய வேண்டும்? நீங்கள் எதுவும் செய்ய தேவை இல்லை.
கடவுள் மீது முழு நம்பிக்கை கொள்ளவும். அவ்வளவே! நான் ஒரு உண்மையான காதலன் என்ற நம்பிக்கை
போதும்.
அன்பிற்கான மந்திரம் என்ன? அனைவரும்
உங்களுக்கு சொந்தமானவர்கள். தெரியாதவரோ, அன்னியமானவரோ கிடையாது. கடவுளைத்
தவிர வேறு யாரும் எங்கும் நிறைந்திருககவில்லை என்பதை தெரிந்து கொண்டும் அந்த நம்பிக்கையுடனும்
இருக்க வேண்டும்.(கடவுளை ஆழ்ந்தும் உண்மையாகவும் நேசிப்பதே அவர் எங்கும் இருக்கிறார்
என்பதன் பொருள்) இதை நீங்கள் எப்போது பின்பற்றப்போகிரீர்கள். ஒரு 10-20 வருடங்களுக்கு
பிறகா? வயதான பின் செய்வீர்களா? நான் சொல்லுகிறேன்! இப்போதே செய்யுங்கள். இந்த தருணமே! நான் கடவுளை நேசிப்பவன் என்னும் உறுதியோடு இருங்கள். கடவுளை முழுமையாக நேசிப்பவராக இருப்பது
உங்களுக்கு யாரும் அந்நியர் இல்லை என்ற நிலையை ஏற்படுத்தும். அனைவரும் உங்களுக்கு சொந்தமானவரே.
இந்த உலகின் பாகிஸ்தான் நேபால் ஈரான் ஈராக் அமெரிக்கா போன்ற அனைத்து நாடுகளிலும் உள்ளவர்கள் உங்கள் சொந்தமே.
நாம் எல்லோரையும் நமக்கு சொந்தமானவர்களாக
கருதும்போது, மற்றவர்களுக்கும் நம்மை அவர்களுடைய சொந்தமாக ஏற்றுகொள்ளுவதில் சிரமம்
இருக்காது.பொதுவாகவே நம்முடைய
உள் மனதில் எங்கோ ஒரு இடத்தில் "அவர் என்னுடையவர் அல்ல, அவர் என்னுடைய சொந்தமல்ல
அல்லது அவர் என்னுடைய எதிரி போன்ற விதைகள் இருக்கும். பின்னர் அந்த மற்றவர்களுடைய மனத்திலும்
அதே எண்ணங்கள் தோன்றும். எனவே நாம் யாரையும் எதிரியாக நினைக்கக்கூடாது.
உங்களுக்கு உண்மையிலேயே எதிரிகள்
வேண்டும் என்று விரும்பினால், ஊழலை உங்கள் எதிரியாக கருத வேண்டும். வன்முறையையும் கோபத்தையும்
உங்களுடைய எதிரிகளாக கருதவும். இவை அனைத்தும் இவ்வுலகில் இருந்து அகற்றப்பட வேண்டும்.
கோபம், வன்முறை, ஊழல், ஒடுக்கு முறை
மற்றும் ஒழுக்கமற்ற நடைமுறைகள் ஆகியவை இவ்வுலகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டியவை.
நாம் அனைவரும் அவைகளுக்கு எதிராக நிற்க வேண்டும். ஆகையால் ஒரு மனிதன் அல்லது மனிதர்களின்
கூட்டத்தை எதிர்ப்பது அல்லது அவர்களுடன் சண்டையிடுவதை விடுத்து,உலகத்தில் உள்ள இந்த
எதிர்மறையான சக்திகளை எதிர்க்கவேண்டும். அனைவரும் நமக்கு சொந்தமானவர்கள் என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்.மேலும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதில் எந்த தாமதமும் இருக்கக் கூடாது.
இந்த உலகில் உள்ள அனைவரும் இதை கவனித்து கேட்டால், பிறகு அனைத்து சண்டைகளும் முடிவுக்கு
வந்து விடும். நீங்கள் மற்ற அனைவரும் இதை ஒப்புக்கொள்ள
வேண்டும் என்றோ நம்ப வேண்டும் என்றோ வற்புறுத்தவோ,கட்டாயப்படுத்தவோ கூடாது.
சிலர் இந்த உண்மையை ஒப்புக்கொள்ள
மறுக்கும் வாய்ப்பும் உள்ளது. பரவாயில்லை.அது அவர்களுடைய இயல்பு. அவர்கள் அவ்வாறு தான்
நடந்து கொள்வார்கள். நாம் என்ன செய்ய வேண்டுமா அதை செய்ய வேண்டும்.