பேட் ஆண்டோகஸ்ட் ,
ஜெர்மனி
ஜூன் 20, 2014
கேள்வி - பதில்கள்
கே: அன்பு குருதேவ்! யாரவது என்னை விமர்சிக்கும் போது
நான் ஒளிந்து கொள்ளுகிறேன்.
சண்டை அல்லது வாதம் செய்யாமலும் எப்படி விமர்சனத்தை சமாளிப்பது ?
ஸ்ரீ ஸ்ரீ: நீங்கள் பெருந்தன்மையானவர் என்பதை
தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள்
விமர்சனத்தை எதிர்கொள்ளும் போதும் நீங்கள் கடல் போல பரந்திருப்பவர் என்றும் எதையும்
உள்ளே வாங்கிக் கொள்ளக் கூடியவர் என்றும் தெரிந்து இருக்கவும், நீங்கள் குறுகியவர் என்னும் எண்ணம் இருக்கும் போது தான் உங்களால் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்று தோன்றும்.
நீங்கள் பரந்தவர் என்னும் எண்ணம் தான், நான் இந்த விமர்சனத்தை விட பெரியவன் என்னால் இதை
எளிதாக எடுத்துக்கொள்ள முடியும் என்று தோன்றும்.
கே: குருதேவ்! கிரியாயோகா ஏற்கனவே
இருக்கும் போது, சுதர்சன கிரியாவை அறிமுகம் செய்ததின் காரணம் என்ன? இரண்டுமே பின்பற்றுபவர்களை
ஒரே இலக்கிற்கு கொண்டு செல்லுமா?
ஸ்ரீ ஸ்ரீ: மற்றொரு கிரியா எதனால் வந்தது
என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது நல்லதே, ஏன் என்றால் கிரியாயோகா செய்ததை
விட அதிகமானவர்களுடைய வாழ்க்கையில் உதவி செய்துள்ளது. மற்றொருபுறம், பிற உத்திகளை பற்றி கருத்துகள் கூற நமக்கு உரிமை கிடையாது.
அந்த சமயத்தில் மக்களுக்கு அது உபயோகமாக இருந்தது.இன்று இது மிகவும் உபயோகமாக உள்ளது. இன்றும் சிலருக்கு
கிரியாயோகா பயனுள்ளதாக இருக்கும். சுதர்சன கிரியா அதிக மக்களுக்கு மிகவும் பயன் தருவதாக
இருக்கின்றது என்பது நமக்கு நிச்சயமாக தெரியும்.
எனவே நாம் அதை ஏற்றுக்கொள்ளுவோம் இதை கொண்டாடுவோம்.
கே: குருதேவ்! பஜனைகள் பாடுவதை நேசிக்கிறேன், ஆனால் சில நேரங்களில் மிகவும்
மேலோட்டமாக இருப்பது போலவும் ஒரு நல்ல இசையை
மட்டுமே கொடுப்பது போலவும் தோன்றுகிறது. நான்
எவ்வாறு பாடும் போது உண்மையான பக்தியை கண்டுபிடிப்பது?
ஸ்ரீ ஸ்ரீ: இயல்பாக இருக்கவும். உங்களுடைய உணர்ச்சிகள் பற்றி கவலைவேண்டாம்.
உங்களுக்கு நேற்று பக்தி இருந்தது, அடுத்த நாள் ஏற்படவில்லை என்றால், அதை
நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது. அந்த பக்தி
கூட ஒரு அன்பளிப்பே. பக்தி உயர்ந்து வரும் பொது நன்றியுடன் இருக்கவும். அது வரவில்லை என்றால் ஒரு கல் போல பொறுமையுடன் இருக்கவும்.
இது கடந்து செல்லும் ஒரு கட்டமாகும். இம்மாதிரியான வெற்று உணர்ச்சி வாழ்வில்
சில நேரம் ஏற்படும். ஈடுபாடு ஏதுமற்று மனக்கிளர்ச்சி இல்லாமல் இருப்பீர்கள். இந்த மாதிரி
மந்தமான நிலை வரலாம், ஆனால் அது ஒரு குறுகிய நேரத்திற்கே.
அந்த மாதிரி தருணங்கள் நம் வாழ்வில்
வருவதை நாம் பொருட்படுத்துவது இல்லை. நான் இன்று கண்டிப்பாக பக்தியுடன் இருக்கவேண்டும் என்று சொல்லிக் கொள்வது
இல்லை. மேகமூட்டமான தினங்களுள் ஒன்று
என எண்ணி சூரிய ஒளிக்காக காத்திருக்கவும்.
கே: குருதேவ்! எனக்கு பேசவோ அல்லது வெளிப்படுத்தவோ யாரும் இல்லாத போதும்
நீங்கள் என்னுடன் இருந்தீர்கள். இதுவரை நான் என்னுடைய வேலையில் வெற்றி அடையவில்லை மற்றும்
பெரும்பாலும் அதிர்ஷ்டம் இன்றி இருக்கிறேன்.
என்னால் எதையும் ஒரு முடிவுக்கு கொண்டு வர இயலவில்லை. உங்களுடைய அறிவுரையை கொடுத்து
உதவவும்.
ஸ்ரீ ஸ்ரீ: என்னால் எதையுமே முடிக்க முடியவில்லை
என்ற வலியும் அக்கறையுமே உங்களை ஒரு வேலையை முடிக்கக்கூடிய நிலைக்கு கொண்டு செல்லும். ஓய்வாக இருக்கவும்.உங்களால் வேலைகளை முடுக்க முடியவில்ல
என்னும் அக்கறை உங்களிடம் இல்லை என்றால் தான் அது பிரச்சினை. ஆனால் உங்களிடம்,ஒ என்னால் முடிக்க முடியவில்லை. முடித்துவிட விரும்புகிறேன் என்னும் அந்த அக்கறை உள்ளது.முடிக்க வேண்டும் என்ற அந்த தீவிர ஆசை உங்களிடம் இருக்கும்
வரையில் நீங்கள் கவலைப்பட தேவை இல்லை. அது
உங்களை முடிக்கும் நிலைக்கு கொண்டு செல்லும்.
கே: குருதேவ்!தினமும் கிரியா மற்றும்
தியானம் செய்த பின்னரும், தற்கொலை செய்து கொள்ளும் போக்கு கொண்டவர்களை என்ன செய்வது?
ஸ்ரீ ஸ்ரீ: அவர்கள் இன்னும் அதிக பயிற்சிகள்
பயில வேண்டும் மற்றும் சத்சங்கங்களில் அதிக நேரம் செலவிட வேண்டும். அவர்கள் அவர்களை
எப்போதும் ஏதாவது வேலையிலும் மற்றும் சேவையிலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
கே: குருதேவ்! என்னுடைய தினசரி வாழ்க்கையிலே
நான் மிகவும் மெதுவாகவும் ஆழ்ந்தும் சுவாசித்தி கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் என்னால் உடல் உழைப்பு
உள்ள வேலைகள் செய்வதும் மற்றும் சூழ்நிலைக்கு
ஏற்ப வேலை செய்வதும் கடினமாக இருக்கிறது. தயவு செய்து அறிவுறுத்தவும்.
ஸ்ரீ ஸ்ரீ: சிறிது யோகப் பயிற்சிகளும், உடல் பயிற்சிகளும் செய்யவும். மேலோட்டமான மூச்சு தியானம் செய்ய நல்லது, ஆனால் வேலைகள் செய்து கொண்டிருக்கும் போதல்ல.
கே: குருதேவ்! எவ்வாறு நான் என்னுடைய
சுய மதிப்பையும் சுய மரியாதையையும் அதிகரித்துக் கொள்ளுவது?
ஸ்ரீ ஸ்ரீ: இந்த பூமியில் அது சாத்தியமானதல்ல. சூரியன் மேற்கில் உதித்து கிழக்கே மறைந்தாலும் கூட உங்களால் உங்களுடைய சுய மரியாதையை
அதிகரிக்க முடியாது. அதை ஏற்றுக்கொள்ளவும்.
முடிந்ததா! உங்களிடம் அது இல்லை என்று நினைத்து அதை அடைய நீங்கள் முயற்சி செய்கிறீர்கள் என்றாலும்,
அது நடக்கப்போவது இல்லை. அது உங்களிடம் ஏற்கனவே உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளவும்.