மே 22, 2014
பெங்களுரு, இந்தியா
ஒருவன் எப்போது அறியாமையில், எதிர்மறை தன்மையில் இருந்தும் வெற்றி பெறுகிறான்? இது பகவத் கீதையில் ஒரு பத்தியில்
மிக அழகாக விளக்கப்பட்டுள்ளது. "யாத்ரா யோகேஷ்வர கிருஷ்ணா யாத்ரா பர்தோ தனுர்
தரஹ. தத்ர ஸ்ரிர்விஜயோ புதிர் துருவ நிதிர் மதிர் மமஹா" .
சஞ்சயன் பகவத் கீதையில் கடைசி பத்தியாக
இதை ஒப்புவித்திருக்கிறான். இந்த கடைசி பத்தி மிகவும் சுவையானது. "வில்லாளர்களில் மிக சிறந்தவனான
அர்ஜுனா! யோகா இறைவனான பகவான் கிருஷ்ணன் எங்கு
இருக்கிறாரோ, அங்கே வெற்றி தொடர்வது நிச்சயம்" என்பதே இதன் பொருள். மகாபாரத போரில் ஆயுதங்கள் எதையும்
உபயோகிப்பதில்லை என்று பகவான் கிருஷ்ணர் சபதம் எடுத்திருந்தார். இதுவே ஞானத்தை அறிந்திருப்பதின்
அடையாளம் மற்றும் சாத்வீக குணத்தில் மலர்ந்திருப்பது.
அர்ஜுனன் கடமையின் அடையாளம் (இயற்கையிலேயே
ஒருவனின் கடமை அல்லது நேர்மையான செயல்). ஒருவனிடம் ஞானமும் நல்ல செயல்களும் சேர்ந்து இருக்கும் போது தான் அவன் புகழ் பெறமுடியும்.
அர்ஜுனனால் மட்டுமே யுத்தத்தில் வெற்றி பெற
இயலாது. (ஒருவன் அவனுடைய செயலால் மட்டுமே முக்தி பெற முடியாது). அதை போலவே பகவான் கிருஷ்ணர் ஞானத்தில் இருந்ததனால் மட்டும்
எதையும் வெற்றி கொள்ளவில்லை. குஜராத்தில் பகவான் கிருஷ்ணருக்கு இருக்கு பல பெயர்களில்
ஒன்று ராஞ்சொத்ரை என்பது (யுத்தத்தில் வீரத்துடன் போரிடாமல் ஓடி ஒளிந்து கொள்ளும் ஒருவனை குறிப்பது). அதனால் தான் பகவான் கிருஷ்ணரும் (ஞானத்தின் முழுமையை
குறிப்பிடுவது) அர்ஜுனனும் (தர்ம செயலை குறிப்பிடுவது) சேர்ந்து வெற்றி பெற முடிந்தது.
அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில்
இந்தியா ஒரு பெரிய வெற்றியை சந்தித்தது. நிச்சயமாக
இந்த இரண்டு விஷயங்களும் நிறைந்திருந்தன மேலும் அவை இந்த வெற்றியில் பங்களித்தன. இன்று இங்கே நிறைய சிறு பூச்சிகள்
பறக்கின்றன. அவைகளை பார்த்துக் கொண்டிப்பதே ஒரு வியப்பாக உள்ளது. அவைகள் திடீரென எங்கிருந்தோ
பிறந்து வருகின்றன. அவைகள் இங்கும் அங்கும் பறந்து கொண்டிருக்கின்றன திடீரென்று ஒன்றுமே
இல்லாதவாறு அவைகள் மறுபடியும் மறைந்து விடுகின்றன. அது போலவே தான் அனைத்து மக்கள் தொகையும் பிரம்மத்தில்
இருந்து பிறக்கின்றன. விரைவிலேயே மறுபடியும் பிரம்மத்தில் கரைந்து விடுகின்றன. இவை
அனைத்துமே மிகவும் விசித்திரமாக உள்ளது அல்லவா!
உதாரணத்திற்கு ஒரு காலி கொள்கலனை
எடுத்து அதில் முழு அளவிலும் உணவு தானியத்தை,
காற்றோ அல்லது ஈரமோ இல்லாதவாறு இறுக்கமாக
அடைத்து மூடவும். சில நாட்களுக்கு பிறகு பார்த்தால் தானியங்களுக்கு இடையே சிறுசிறு பூச்சிகள் ஊர்வதை காணலாம். இந்த
பூச்சிகள் எங்கிருந்து வந்தன? யாரும் அதை தானியங்களுடன்
கொண்டு வரவில்லை. விண்வெளியில் உள்ள துகள்கள்,அணுக்களால் ஆன உயிர்ச்சக்தியானது நம்மை சுற்றியுள்ள சூழலில் நிறைந்துள்ளது. அது தான்
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது புரிந்து கொள்ள
வேண்டியது
கேள்வி பதில்கள்:
குருதேவ்! நான் அன்பு செலுத்துபவர்களை, காயப்படுத்தவும் விலகிச் செல்லவும் செய்கிறேன்.
நான் எதனால் இதை செய்கிறேன். நான் இப்போது அன்பை கண்டு பயப்படுகிறேன்.
பயப்பட வேண்டாம். இந்த பாணி மாறி
விடும். நீங்கள் யாரையாவது நேசித்தால் அவர்களுக்கு
சேவை செய்யவும். காவலர் போன்று அவர்களையே சுற்றிக் கொண்டிருக்க வேண்டாம். நடு நிலைமையுடன்
இருக்கவும். நீங்கள் ஒருவரிடம் சென்று நான் உங்களை நேசிக்கிறேன்! நான் உங்களை நேசிக்கிறேன்!
நான் உங்களை நேசிக்கிறேன்! என்று சொல்லுங்கள். அவர்கள் சரி என்று தான் சொல்லுவார்கள்.
அவர்களால் வேறு என்ன செய்ய முடியும். அவர்களுக்கு எப்படி பதில் அளிப்பது என்று தெரியாமல்,
அங்கிருந்து ஓடி விடலாம் என்றே எண்ணத் தோன்றும். நாம் நம்முடைய அன்பை மிக அதிகமாகவும்
வெளிப்படுத்தக் கூடாது.
நீங்கள் ஒருவர் மீது மிக அதிகமான
அன்பை வெளிப்படுத்தினால், அதை எவ்வாறு சமாளிப்பது என்பது அவருக்குத் தெரியாமல் இருக்கலாம்.
அவர்கள் முதிர்ச்சி அடைந்தவராகவும் நடுநிலைமை உள்ளவராகவும் இருப்பின் அவர்கள் அதை ஒரு
புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளுவார்கள். இல்லையென்றால் அன்பை சமாளிக்க தெரியாது. மக்களுக்கு கோபத்தையும் வெறுப்பையும்
சமாளிக்கத் தெரியாதது போலவே அதிக அன்பையும்
சமாளிக்கத் தெரியாது. பலர் விலகிச் செல்லுவதன்
காரணமும் இதுவே. எனவே நீங்கள் அன்பை வெளிப்படுத்துவதில்
அளவுடன் இருக்க வேண்டும். தெரிகிறதா?
மேற்கு திசையில் உள்ளவர்கள் அன்பை
அதிகமாக வெளிப்படுத்துவதையும் கிழக்கு திசையில் உள்ளவர்கள் அன்பையே வெளிப்படுத்தத்
தெரியாமல் இருப்பதையும் நாம் காணலாம்.இரண்டுக்கும்
இடைப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு விதையை மண்ணில் மிக
ஆழத்தில் புதைத்தால் அது என்றுமே முளைக்காது. அது போலவே அதை மண்ணில் மிக மேலேயே வைத்தாலும் அங்கும் அது முளைக்காது. நீங்கள்
சிறிதளவே மண்ணை வெளியே எடுத்துவிட்டு விதையை
சற்றே மேற்பரப்பிற்கு கிழே விதைத்தால், முளைக்கும். அன்பும் அதைப் போன்றதே. அதை
மிக அதிகமாக வெளிப்படுத்தாமல் நடு நிலைமையுடன் இருக்க வேண்டும். நீங்கள் தான் அன்பு
என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்கவும்.
குருதேவ்! பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமிக்கும் நம்முடைய நாசி
அல்லது முகரும் தன்மைக்கும் தொடர்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. நம்முடைய உணர்வுகள் மற்றும் தனிமங்கள் பற்றி கூறவும்.
ஆம். பூமி நம்முடைய முகரும் தன்மையுடனும், நாசியுடனும் தொடர்பு கொண்டது.நீர் சுவையுடன் தொடர்புள்ளது. தீ ஒளியுடனும் கண்களுடனும்
தொடர்புடையது. யாருக்காவது கண்களில் தொந்தரவு உள்ளதென்றால் அது வயிற்றுடன் சம்பந்தப்பட்டது. வயிறு துன்பப்படுவதால் கண்களும் துன்பப்படுகிறது. அஜீரணம் கண்களை பாதிக்கிறது. கண்களுக்கு
கண்ணாடி வாங்குவதற்கு முன்பு கண்டிப்பாக வயிற்று தொந்தரவு இருந்திருக்கும். இது ஏன்
என்றால் வயிறு, தீ தனிமத்துடன் தொடர்புடையது.
குருதேவ்! நம் நாட்டில் ஆயிரக்கணக்கான
வாழும் கலை தன்னார்வத் தொண்டர்கள் வாக்காளர் விழிப்புணர்வை பரப்புவதில் கடினமாக வேலை
செய்தனர். இப்போது எந்த திட்டத்தை எடுக்க வேண்டும்?
ஆனந்தமளிக்கும் பயிற்சி. நாம் அனைவரும் ஆனந்த அலையை
உருவாக்க வேண்டும். உங்களுக்கு தெரியும், ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம் என்னவென்றால், நீங்கள் உங்கள் நண்பருடன் சிறிது நேரம் அமர்ந்து விட்டு செல்லும் போது உங்களுக்குள் முன்னேற்றம் ஏற்பட்ட உணர்வு ஏற்பட வேண்டும். உங்களுடைய பிரச்சினைகள் மிக சிறியவைகளாக தோன்ற வேண்டும். அப்போது தான் அது நல்ல நட்பு.
குருதேவ்! திருப்பதி செல்லும் பக்தர்கள்
தங்களுடைய தலை முடியை இறைவன் சன்னதிக்கு பிரசாதமாக அளிக்கின்றனர். மேலும் இந்தியாவில்
நமக்கு நெருங்கிய உறவினர் இறக்கும் போதும் தலையை மொட்டை அடித்துக்கொள்ளுவது வழக்கமாக
உள்ளது. இது எதனால்? தலையை மொட்டை அடித்துக் கொள்ளுவது
நம்முடைய மனதிற்கும் செயல்களுக்கும் சம்பந்தம் உடையதா?
இது பல வருடங்களில் சம்பிரதாயமாக மாறிவிட்ட ஒரு வழக்கமான விதிமுறையே அன்றி வேறல்ல. இது கட்டாயமானது என்று எந்த வேதங்களிலும் பரிந்துரைக்கப்படவும் இல்லை. இந்தியாவில்
செய்யப்படும் சடங்குகளுக்கு இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று வழக்கமான விதிமுறையாகும்.
மற்றொன்று நம்முடைய வேதங்களில் விரிவாக கூறப்பட்டுள்ளதும் பரிந்துரைக்கப்பட்டதும் ஆகும். அவை நாளடைவில் பாரம்பரியமாக்கப்பட்டு அந்த சடங்குகள் பற்றியும் அவைகளை பின்பற்றுவதனால் ஏற்படும் நன்மைகள்
குறித்தும் வேதங்களும் கூறுகின்றன.
உதாரணத்திற்கு பலர் கழுத்துப்பட்டை
வைக்கப்பட்ட பனியன்களை அணிகிறார்கள். அந்த
கழுத்துப்பட்டை எதனால் அங்குள்ளது? அதன் நோக்கம் என்ன? குளிர்காலத்தில் வெளி நாடுகளில்
மக்கள் கழுத்துப்பட்டையை மேலே தூக்கி விட்டு குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுவார்கள். கோடைக்காலத்தில் பட்டையை தளர்த்தி விட்டு இளைப்பாறுவார்கள். ஆங்கிலேயர்கள் இதை ஆரம்பித்து வைத்தார்கள்,
மெதுவாக மற்ற அனைவரும் கூட இந்த பாணியை ஏற்றுக் கொண்டார்கள். அதனால் இது ஒரு வழக்கம்
தானே தவிர மேற்கொண்டு வேறு ஏதும் இல்லை.
குருதேவ்! கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார்
என்றால், எதனால் ஒரு குறிப்பிட்ட அறைக்குள் தான் பிரார்த்தனை செய்ய
வேண்டும் என்று எங்களுக்கு சொல்லப்படுகிறது.
நீங்கள் எங்கு வேண்டுமானாலும்
பிரார்த்தனை செய்யலாம். ஆனால் ஒரு அறையில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் போது நீங்கள்
அந்த அறையில் மிகவும் விரும்பத்தக்க அதிர்வுகளை உண்டாக்குகிறீர்கள். நீங்கள் எங்கே வேண்டுமானாலும் சாப்பிடலாம், தாழ்வாரம்
அல்லது வரவேற்பு அறையில் அமர்ந்தும் சாப்பிடலாம். ஆனாலும் சாப்பிடும் கூடம் அங்கே தான் சாப்பிடுகிறீர்கள். ஏன் என்றால் அங்கு தான் மேஜை, தண்ணீர், மற்ற அனைத்தும் உள்ளன.
இல்லையா? அது மாதிரியாக நீங்கள் சாப்பிடுவதற்கு என்று சாப்பிடும் கூடம் என்று ஒன்று
உள்ளது. அதனால் நீங்கள் அமர்ந்து பிரார்த்தனை
செய்யவும் ஒரு நல்ல அறையை வைத்திருப்பது விரும்பத்தக்கதது. நீங்கள் வரவேற்பு அறையிலேயே சோபாவில் படுத்து உறங்கலாம். எதற்காக
நீங்கள் படுக்கை அறைக்கு சென்று அங்கே உறங்குகிரீர்கள். ஏன் என்றால் அங்கே சில ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. அதைப் போலவே தான், பூஜை அறையிலும்
சிறு சிறு ஏற்பாடுகள் செய்து வைக்கப்பட்டுள்ளன. அங்கே விளக்கு எரிந்து கொண்டிருக்கும், கொஞ்சம் மலர்கள் வைக்கப்பட்டிருக்கும். நீங்கள்
அங்கே அமர்ந்து பூஜை அல்லது பிரார்த்தனை செய்யலாம்.