துயரம் மட்டுமே வாழ்கை அல்ல

பிப்ரவரி 11, 2014

பெங்களூரு, இந்தியா

கேள்வி - பதில்கள்

கே: நம் உயிரின் அல்லது இருப்பின் ஆறு அடுக்குகளும் தெளிவாகினால் நம்மால் ஏழாவது அடுக்கான ஆத்மாவை பார்க்க முடிகிறது. இந்த ஆறு அடுக்குகளில், புத்தி அடுக்கை எப்படி தெளிவாக்குவது என்று தயவு செய்து கூறமுடியுமா?

குருதேவ்: புத்தி என்றால் என்ன என்பதை புரிந்து கொள்வோம். நம் கைப்பேசி பல வித பாங்குகளில் இயங்குவது போல நம் பேருணர்வு பெரும்பாலும் நான்கு வித பாங்குகளில் இயங்குகிறது. நம் பேருணர்வின் நான்கு வகை பாங்குகள் இவை தான்:

  1. மனம் – அனுமானிக்கும் பாங்கு: இப்போது நீங்கள் என்னை பார்கிறீர்கள், நான் உங்களைப் பார்க்கிறேன். மனதின் மூலமே கண்கள் அனுமானிக்கிறது, மனதின் மூலமே காதுகள் அனுமானிக்கிறது, மூக்கு நுகர்வதும் மனதின் மூலமே அனுமானிக்கிறது. சுற்றிலும் நறுமணம் வீசினாலும் உங்கள் மனம் வேறெங்கோ இருந்தால் அந்த நறுமணத்தை உங்களால் கவனிக்கக் கூட முடியாது. எனவே எதை நாம் நுகர்கிறோமோ, சுவைக்கிறோமோ, கேட்கிறோமோ,பார்க்கிறோமோ, தொட்டு உணர்கிறோமோ, அது தான் மனம்
  2. புத்தி – ஆராயும் பாங்கு: அனுமானித்த பின், மனமானது அது நல்லதா கேட்டதா என்று ஆராய்ந்தவாறு இருக்கிறது. நுகர்ந்த நறுமணத்தை புரிந்து கொள்வது, பார்த்த காட்சியைப் புரிந்துகொள்வது, காதில் கேட்டவற்றை புரிந்து கொள்வது, இதுவே புத்தி எனப்படுகிறது. எதையும் வகைப்படுத்தி ஆராய்வது மனதின் வேலை; இது சரி அல்லது தவறு, அல்லது இது எனக்குப் பிடிக்கும் அல்லது பிடிக்காது என்று சொல்கிறது. புத்தி இப்படி ஆராய்வதற்கு மற்றொரு அடுக்கு தேவைப்படுகிறது, அதுதான் ஞாபகம்.
  3. ஞாபகம் – சேமித்து வைக்கும் பாங்கு: ஞாபகத்திற்கும் மனதிற்கும் நடுவே இருப்பது புத்தி. மனமும் ஞாபகமும் சேர்ந்து புத்தியை செயல்பட வைக்கிறது. ஞாபகம் இல்லையென்றால் புத்தி வேலை செய்ய இயலாது. புத்தியின் அடிப்படை ஞாபகமும் அனுமானமும். ஆழமான பதிவுகளை ஞாபகம் பிடித்து வைத்துக் கொள்கிறது, அதுவே ஞாபகத்தின் எல்லையுமாகும். இன்பமான நினைவுகளையும், இன்பமற்ற நினைவுகளையும் (கலவரமான பெருந்துயர்களான தேவையில்லாத ஆழமான பதிவுகள்), என எல்லாவற்றையும் ஞாபகம் சேமித்து வைத்துக் கொள்கிறது.
  4. அகங்காரம் – அடையாளப்படுத்திக் கொள்ளும் உணர்வு: ஞாபகத்தையும் தாண்டி பேருணர்வானது ஏதோ ஒன்றுடன் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிறது, அதுவே அகங்காரம்.

பிறகு இந்த நான்கு வித வேலைகளையும் விஞ்சி நிற்பது - சுயம். இதுவே எல்லா மாற்றங்களுக்கும் ஆதாரப் புள்ளி. எல்லாமே மாறிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், எல்லாமே மாறி கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள், உடல் மாறி கொண்டிருக்கிறது, உங்கள் எண்ணங்கள் மாறி கொண்டிருக்கிறது; எண்ணங்கள் மனதின் ஒரு பாகம். உங்கள் கோட்பாடுகள் மாறி கொண்டிருக்கிறது; அது புத்தி. உங்கள் ஞாபகம் மாறி கொண்டிருக்கிறது,சில விஷயங்கள் நினைவில் இருக்கிறது, சில விஷயங்கள் நினைவில் இல்லை. எல்லாம் மாறி கொண்டிருக்கிறது. எல்லாமே மாறி கொண்டிருக்கிறது என்று நீங்கள் கூறினால், மாறவே மாறாத ஏதோ ஒன்று நிச்சயம் இருக்கிறது; இதுதான் அதன் பின்னே உள்ள கோட்பாடு.

ஏதோ ஒன்று மாறி கொண்டிருக்கிறது என்பதை எப்படி அறிகிறீர்கள்? அது எப்படி என்றால் ஏதாவது ஒன்று மாறாமல் இருக்கிறது. இப்போது, அந்த மாறாத ஏதோ ஒன்று என்ன என்பது உங்களுக்குத் தெரியவில்லை! ஆனால் ஏதோ ஒன்று இருக்கிறது, இனம் புரியாத ஏதோ ஒன்று இருக்கிறது, அது இருப்பதாலேயே உங்களால் மாற்றத்தை உணர முடிகிறது. பத்து வயதாக இருந்த போது உள்ள உங்கள் புகைப்படத்தை நீங்கள் பார்த்தால், இப்போது உங்களாலேயே அது நீங்கள் தான் என்று அடையாளம் காண முடியவில்லை. அதே உடம்பு இல்லை, ஆனால் அது நீங்கள் தான் என்று உங்களை சொல்ல வைப்பது என்ன?

ஒரு வருடத்தில் உங்கள் உடம்பில் உள்ள செல்கள் அனைத்தும் மாறி விடுகிறது. வயிற்றில் உள்ள உட்புற தோல் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மாறுகிறது. 24 மணி நேரத்திற்கு ஒரு முறை உங்கள் இரத்தம் மாறுகிறது.மாதத்திற்கு ஒருமுறை உங்கள் தோல் மாறுகிறது. உங்கள் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் ஒரு வருடத்தில் மாறிவிடுகிறது என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். எனவே, எல்லாமே மாறிவிடும் போது, 10 அல்லது 15 வருடத்திற்கு முன் உள்ள அதே ஆள் தான் நீங்கள் என்று எப்படிச் சொல்கிறீர்கள்? மாறாத ஏதோ ஒன்று இருக்கிறது. மாற்றங்களினாலேயே நீங்கள் மாறாத ஏதோ ஒன்று இருப்பதை நீங்கள் கண்டுணர்கிறீர்கள்.

அந்த எதோ ஒன்று என்ன? புத்தபிரான் இதைக் கண்டறிய விரும்பினார். தியானம் செய்து தியானம் செய்து ஒன்றுமே இல்லை என்பதைக் கண்டு கொண்டார்! இது வெறுமை. அவர் சொன்னார், ‘நான் சுயத்தை தேடினேன், தேடினேன், தேடினேன், ஆனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எதுவுமே இல்லை.’ அவர் சொன்னார், ‘சூன்யம் (பூஜ்யம்); எல்லாமே வெறுமை. வெறுமை மட்டுமே இருக்கிறது; என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.’

வேத பாரம்பரியத்தில் வந்த ஆதி சங்கராச்சாரியார் புத்த பிரானுக்குப் பின் வந்தவர். (புத்தபிரானுக்கு எந்த ஆசானும் இல்லை. தானே அறியும் கடுமையான பயணத்தை மேற்கொண்டார். ஆனால் ஆதி சங்கராச்சாரியாருக்கு அப்படி இல்லை. அவருக்கு ஒரு ஆசான், ஒரு வழிகாட்டி இருந்தார்.)

ஆதி சங்கராச்சாரியார் புத்த பிரானைக் கண்ட போது கூறினார், ‘ஆம், எனக்குப் புரிகிறது, இவை இல்லாம் தற்காலிகம், எல்லாமே மாறிக் கொண்டிருக்கிறது.’ அவர் புத்தபிரானிடம் கேட்டார், ‘நீங்கள் உங்கள் சுயத்தைக் காண முடியவில்லை என்று கூறுகிறீர்கள், ஆனால் யாரால் உங்கள் சுயத்தைக் காண முடியவில்லை. யாராவது அதை தேடியிருக்க வேண்டும். தேடியது யார்? யாரால் கண்டுபிடிக்க முடியவில்லை? அதுவே சுயம்!’ இந்த வாதத்தை வைத்துக் கொண்டு ஆதி சங்கராச்சாரியார் வேத கலாசாரத்தை இந்தியாவிற்கு திரும்பக் கொண்டு வந்தார். இல்லையென்றால், அந்த காலத்தில் இருந்தது போல முழு இந்தியாவும் புத்த மதத்தில் இருந்திருக்கும்.

புத்தமதத்தில் உள்ள பெரும் குறைபாடு அது எல்லாவற்றையும் வெறுமை என்று கூறிய கருத்து தான். எல்லாவற்றிலும் துன்பமும் வெறுமையும் உள்ளது. இதுவே புத்த மதத்தின் முக்கிய கொள்கையாக இருந்தது. வேதங்களின் படி பார்க்கையில் எல்லாமே நிறைவானது; இது எல்லாமே பிரபஞ்ச உணர்வு. நாம் வெறுமை என்று உணர்வதெல்லாம் பேரானந்தம்.

எந்த ஒன்றினால் காண முடியவில்லையோ (சுயத்தை), எந்த ஒன்று தேடுகிறதோ, அந்த ஒன்றுதான் சத் சித்து ஆனந்தம் என்று ஆதி சங்கராச்சாரியார் கூறினார். அதற்கு மூன்று குணங்கள் உள்ளன. சத்தியம், பேருணர்வு மற்றும் பேரானந்தம்இது சத்தியம்; நான் என்பது இருக்கவில்லை என்று யாரும் சொல்ல முடியாது. நான் இல்லை என்று யாராவது கூறினால் கூட, தான் இல்லை என்பதை எப்படி அவரால் சொல்ல முடிகிறது. அதைச் சொல்வதற்கு யாராவது ஒருவர் தேவை, அப்படியென்றால் அவர்கள் இருக்கிறார்கள்; புரிகிறதா? இதற்கு கூர்மையான புத்தி தேவை; சங்கராச்சாரியாரின் புத்தி கூர்மை இணையில்லாதது.

தொன்மையான வேதங்களில் கூறப்பட்டிருப்பவற்றை தான் இப்போது குவாண்டம் இயற்பியல் கூறுகிறது என்பதை இன்றைய விஞ்ஞானிகள் உணர்ந்து வியந்து போகிறார்கள். வேதங்கள் என்ன சொல்கிறது? இந்த முழு உலகமும் ஒரு பொருளினால் ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரே ஒரு பொருளிலிருந்து மட்டுமே இந்த எல்லாமும் ஆக்கப்பட்டிருக்கிறது, அதுவே பிரபஞ்சப் பேருணர்வு; அதுவே சத் சித்து ஆனந்தம்; அதுவே பேரானந்தம். எனவே இந்த முழு உலகமும் பேரானந்தத்தால் ஆக்கப்படிருக்கிறது என்று கூறினார். இப்போது, எப்படி மாறி இருக்கிறது? ‘இது கெட்டது, இது தவறு, இது முட்டாள் தனம்’, என்று அவர் கூறவில்லை, இல்லவே இல்லை. அவர் புத்தரை வெகுவாக மதித்தார். புத்தர்  கூறியது முக்கியமான படிக்கல், ஆனால் அதுவே இறுதியான படி அல்ல என்று கூறினார். உங்களுடைய கவனத்தை தற்காலிகமான விஷயங்களிலிருந்து நிரந்தரமான ஒன்றிக்கு கொண்டு செல்ல புத்தர் கூறிய கருத்து, அந்தப் படி அவசியம்.

ஆதி சங்கராசாரிய கூறினார், ‘ஆம், எல்லாமே எதுவுமில்லை என்று ஒத்துக் கொள்கிறோம், ஆனால் அந்த எதுவுமில்லை தான்  எல்லாமுமாய் இருக்கிறது.’ இப்படித் தான் ஆன்மீகப் புரட்சி ஏற்பட்டது. புத்த பிரான் தான் ஒரு புதிய மதத்தை ஆரம்பிப்பதாக சொல்லவேயில்லை. அவர் ஒரு இந்துமதத் துறவியாகவே இருந்தார், ஆனால் அந்த காலத்தில் மக்கள் பின்பற்றி வந்த சில சடங்குகளுக்கு எதிராக புரட்சி செய்தார்.மக்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? காலை முதல் மாலை வரை வெறும் சடங்குகளை மட்டுமே செய்து கொண்டிருந்தார்கள்; அதன் பின்னே உள்ள ஞானத்தை மறந்து விட்டார்கள். மக்கள் தியானத்தை மறந்த கால கட்டத்தில், புத்தபிரான் வந்து, நீங்கள் தியானம் செய்தாக வேண்டும்’, என்றி நினைவுபடுத்தினார்.

அவர் கூறினார், ‘நீங்கள் தியானம் செய்தாக வேண்டும் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறியதை மறந்து விட்டீர்கள். அதைப் பின்பற்றாமல், இரவும் பகலும் சடங்குகள் செய்வதிலேயே ஈடுபட்டிருக்கிறீர்கள்.’ எனவே மக்களின் அந்த முழு போக்கை அப்படியே தலைகீழாக மாற்றினார்.

ஆதிசங்கராச்சாரியர் வந்த போது தொன்மையான பாரம்பரிய சத்தியத்தை நிலை நாட்டினார். ஏசு பிரானைப் போல 32 ஆண்டுகளே வாழ்ந்தார். கேரளாவில், கடற்கரைக்கு அருகே பிறந்த அவர், ஹிமாலயத்தில் மலைப் பகுதியில் இறந்தார். அவர் பயணம் செய்த கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளில் இடங்கள் இந்தியாவின் எல்லைகளாகின. தொன்மையான வேத ஞானத்தை இடங்களில் மறு நிர்மாணம் செய்தார். இந்தியாவில் எப்படி வேதாந்த ஞானம் மறு நிர்மாணம் செய்யப்பட்டது என்பது உலகில் வெகு சிலருக்கே தெரியும் என்று நினைக்கிறேன்.

கே: குருதேவ், மனம் ஞாபகத்தை அலசும் போது எண்ணங்கள் எழுகின்றன என்று  நீங்கள் யோகசார உபநிஷத்தில் கூறியிருக்கிறீர்கள். அப்படியென்றால் எல்லா எண்ணங்களும் ஞாபகத்திலிருந்து தான் வருகிறதா, புதிய எண்ணங்களே எழுவதில்லையா?

குருதேவ்: இல்லை, நான் முன்பு சொன்னது போல, அனுமானம் (மனம்) மற்றும் ஞாபகம் இவை இரண்டுமே புத்தியை செயல்பட வைக்கிறது. எனவே, புதிய எண்ணங்கள் பழைய எண்ணங்களோடு தொடர்புடையது. சில நேரங்களில், உள்ளுணர்வாக தோன்றும் எண்ணங்கள் எதனோடும் தொடர்பில்லாமல், புதிய எண்ணமாகக் கூட எழலாம்.

கே: குருதேவ், நான் கிறிஸ்த்துவ சமய பின்னணி கொண்டவன், உங்களது உரைகளில் கிறிஸ்துவின் மீது உங்களுக்குள்ள அன்பை நான் காண்கிறேன். ஆனால், கிறிஸ்துதான் ஒரே வழி என்று பைபிள் கூறுகிறது.

குருதேவ்: அன்பு ஒன்றே வழி. இயேசு கிறிஸ்துவின் காலத்திற்குப் பிறகு 70 வருடங்களுக்குப் கழித்தே பைபிள் எழுதப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? கிருஸ்துவ மதத்தில் 72 உட்பிரிவுகள் உள்ளன, இவை ஒவ்வொன்றும் பைபிளை தங்களுக்கே உரிய விதத்தில் புரிந்து கொள்கின்றன.புத்த மதத்தில் 32 உட்பிரிவுகள் இருப்பது போல. புராண நூல்களில் பார்த்தால், ஸ்ரீ கிருஷ்ண பகவானும் அதையே தான் கூறுகிறார், ‘இது மட்டுமே வழி!’ அந்த காலகட்டத்தில் இருந்த மக்களுக்கு நிகழ் காலத்தில் இருக்க வேண்டும் என்று அறுதியிட்டுக் கூறினார்.

‘எனக்கு முன்னே வந்தவர்கள் திருடர்கள்,’ என்று இயேசுபிரான் கூறியதற்கும் இது தான் காரணம். ஏன் அப்படி சொன்னார்? அவர் ஏன் சொன்னாரென்றால், இப்போது நீங்கள் இங்கே இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் இறந்த காலத்தை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்; உங்கள் மனதை யாரோ திருடிவிட்டார்கள். எனவே, மக்களை நிகழ்காலத்துக்கு கொண்டுவர, விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி – இப்போது இங்கே அவர்கள் இருக்க வேண்டி அப்படிக் கூறினார்.

இவை எல்லாவற்றையும் திரித்து புரிந்துகொள்ளக் கூடாது. இயேசுபிரான் கூறினார், ‘அமைதியை ஏற்படுத்த நான் இங்கே வரவில்லை, ஆனால் நெருப்பை வைக்க வந்துள்ளேன். தந்தையை மகனுக்கு எதிராக, தாயை மகளுக்கு எதிராக முட்டிக்கொள்ள வைக்க வந்திருக்கிறேன்.’ இயேசுபிரான் இப்படியா கூறினார் என்று நீங்கள் நினைத்தால், இல்லை, அப்படி இல்லை. இவை எல்லாவற்றிற்கும் ஏதோ உள் அர்த்தம் இருக்கிறது, வேறு காரண காரியங்கள் இருக்கிறது.

நீங்கள் உங்கள் முன்னேற்றத்திற்காக ஏதாவது செய்தால், நீங்கள் செய்பவை உங்களை அன்பானவராகவும், மேலும் அமைதியானவராகவும், உயர்ந்த மனிதராகவும் ஆக்க உதவுமானால், இயேசுபிரான் அதனால் நிச்சயம் மகிழ்ச்சியடையாமல் இருக்க மாட்டார். எனவே நீங்கள் யோகா, தியானம் போன்றவற்றை செய்வதால், சிலர் உங்களிடம், ‘ஓ, நீங்கள் இயேசுவை புறக்கணிக்கிறீர்கள்!’, என்று சொல்லக்கூடும், நான் சொல்கிறேன் அது முழு முட்டாள் தனம். நீங்கள் யோகா செய்தால், தியானம் செய்தால், உபநிஷத்துக்களை படித்தால் இயேசு ஏன் மனவருத்தம் கொள்ள வேண்டும். இல்லவே இல்லை! உண்மையில், இயேசுபிரான் தன் வாழ்வில் 12 வருடங்களை இந்தியாவில் கழித்தார்.



தொன்மையான ஞானத்திற்கு, குறிப்பாக தியானம் மற்றும் யோகாவுக்கு எதிராக இயேசுபிரான் நிச்சயம் இருந்திருக்க மாட்டார். 


இந்துமதமும் கிருஸ்துவ மதமும் என்ற ஒரு சிறிய நூலை நான் எழுதியிருக்கிறேன்; 
நீங்கள் அதைப் படிக்க வேண்டும். இரண்டு மதத்திற்கும் எவ்வளவு ஒற்றுமைகள் இருக்கிறது என்று அதில் எழுதியிருக்கிறேன். எனவே, தியானம் செய்வது மற்றும் பிற பயிற்சிகளைச் செய்வது நிச்சயம் கிறிஸ்துவின் போதனைகளுக்கு எதிரானது அல்ல. யாரவது அப்படிச் சொன்னால், அவர்கள் அறியாமையினாலேயே சொல்கிறார்கள்.    
  
கே: ஊடகங்கள் எப்போதும் எதிர்மறையான செய்திகளையே பிடித்துக் கொள்கின்றன. நல்ல செய்திகளை எப்படி சுவாரசியமாக ஆக்குவது?

குருதேவ்: இந்த ஒரு விஷயத்தை நீங்கள் செய்யக்கூடாது; அதாவது எல்லாமே அப்படித் தான் என்று நினைப்பது. ஊடங்கங்கள் எப்போதுமே அப்படித் தான் அல்லது எல்லா ஊடங்கங்களும் அப்படித் தான் என்று சொல்லக்கூடாது. அது அப்படி அல்ல.

இதோ சில உதாரணங்கள். சுவீடன் நாட்டைச் சேர்ந்த அன்னிக்கா டோப்பிங் அவர்கள் ஞானத்தை அளிக்கும் பல ஆவணப் படங்களை எடுத்துள்ளார். மனத் தாழ்ச்சி கொள்ளும் முதியோர்களுக்கு (50 வயதுக்குப் பிறகு தாம் யாருக்கும் வேண்டாதவர்களாகிவிட்டோம் என்று நினைக்கத் தொடங்குகிறார்கள்) உதவும் வகையில் ‘அழகாய் முதுமையடைவது’ என்ற பெயரில் ஒரு ஆவணப் படம் எடுத்திருக்கிறார். முதியோர்களை மேலே உயர்த்தக் கூடிய அருமையான படம் அது. ‘மூன்று சான்றோர்கள்’ என்ற மிக நேர்மறையான உணர்வளிக்கும் படம் ஒன்றையும் எடுத்துள்ளார். தலாய் லாமா, தீபக் சோப்ரா மற்றும் என்னையும் அதில் நேர்காணல் செய்துள்ளார். அதில் மிக புத்திசாலித்தனமான கேள்விகளை போட்டு எல்லோரிடமிருந்தும் மிகச் சிறந்ததை வெளிக் கொணர்ந்திருக்கிறார்.
அந்தக் காட்சி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க கிட்டத்தட்ட ஒரு வருட காலம் நடத்தப்பட்டது. மக்களின் ஆன்மாவை உயர்த்தும் இப்படிப்பட்ட பல காட்சிகளை இந்தியர்களும் ஆக்கியுள்ளனர். எனவே, எல்லாம் இப்படித்தான் என்று சொல்லிவிடக் கூடாது.

அதே சமயம், சுவாரசியமான செய்திகளைத் தரும் ஊடங்கங்கள் எதிர்மறையான உணர்வுகளை மட்டுமே தூண்டுகிறது என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, மக்களுக்கு இது என்ன என்று தெரியும். கொஞ்சம் நேரம் பார்த்து விட்டு பிறகு தவிர்த்துவிடுகிறார்கள். அவர்கள் விரும்புவது என்னவென்றால், ஜோதிடம். ஏனென்றால் அவர்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்று அறியும் ஆவல்.

படைப்புத்திறன் மிக்க, உணர்வுபூர்வமான, நேர்மறையான செய்திகளை எப்படி கொண்டு வருவது என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நீங்கள் செய்யுங்கள். கர்நாடகாவில், சில தொலைக்காட்சிகள், ‘இதுவும் கூட முடியுமா’ போன்ற தலைப்புகளில் நிகழ்சிகள் நடத்துகின்றன. சில தொலைக்காட்சிகள் இப்படி நிகழ்சிகள் நடத்துகின்றன; உலக அதிசயங்களை காண ஆடாது அசையாது இந்த நிகழ்சிகளைப் பார்க்கிறார்கள் மக்கள்! உதாரணமாக சில கோவில்களில், குரங்குகள் எப்படி வேலை செய்கின்றன என்பது போன்ற நிகழ்சிகளைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். சில விலங்குகளின் வித்தியாசமான நடவடிக்கைகள், சில அதிசயங்கள்,சில அற்புதங்கள் போன்றவற்றை மக்கள் உண்மையில் விரும்பிப் பார்கிறார்கள். 

இங்கே ஒரு சக்தி பேசுகிறார்; ஒரு கல் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று சொல்கிறது. நாடி ஜோதிடம் அளிக்கும் பண்டைய ஓலைச் சுவடிகளைப் பற்றிக் கூட கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்கள் கை ரேகையை கொடுத்தால் உங்களுக்கான ஓலையை எடுக்கிறார்கள். இன்று இருக்கும் உங்களைப் பற்றி, உங்கள் பெயர் மற்றும் எல்லாவற்றையும் பற்றி, சுமார் 5000 வருடங்களுக்குப் முன்னே எழுதி வைத்திருக்கிறார்கள். இது அற்புதம் தவிர வேறில்லை.


மர்ம கதைகள் மற்றும் குற்றக் கதைகளை விடுத்து நகைச் சுவைக்கு மக்கள் மாறி வருகிறார்கள். அப்படித்தான் நான் நினைக்கிறேன். நான் அதிகம் பார்ப்பதில்லை, நேரமும் இல்லை. இப்போது காலம் மாறிவருகிறது.