வாழ்க்கையை கொண்டாட ஆபரணங்கள்

31 டிசம்பர் 2013

குருதேவர் இன்று சொன்னது என்ன?

பொதுவாக கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மௌனத்தின் பெருமையை உணர்வதில்லை. மௌனத்தில் மகிழ்ச்சி அடைபவர்கள் கொண்டாட்டத்தில் பங்கு பெறுவதில்லை. மௌனத்தில் இருப்பவர்கள் முகத்தில் மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் தெரியாது. மௌனத்தில் இருப்பவர்களின் முகம் பொதுவாக கடுகடுப்பாகவும், துக்கமாகவும் இருக்கும். ஆனால் நம் சிறப்பு என்னவென்றால், “நாம் மௌனமாக இருக்கும் போதும் கொண்டாட்டத்தில் பங்கு கொள்கிறோம். புது வருடத்தை வரவேற்க இது ஒரு அழகான சிறப்பான வழியாகும். 

இப்போது நாம் 2013 ம் ஆண்டுக்கு நன்றி சொல்வோம். 2013 ம் ஆண்டு பல நிகழ்ச்சிகளில் ஒன்று கூட வைத்தது. பல விதமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வைத்து நம்மை வலிமையானவர்களாக ஆக்கியது. பல விதமான பரிசுப் பொருட்களை நமக்கு அளித்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நாம் அறிவு வளர்ச்சி அடையாமல் எந்த ஆண்டும் கடந்ததில்லை. 

ஒவ்வொரு ஆண்டும் நமக்கு பல விஷயங்களைப் பற்றிய அறிவைக் கொடுக்கிறது. முன்பை விட அறிவாளிகளாக ஆக்கியிருக்கிறது. நாம் புத்தாண்டை நோக்கி முன்னே செல்வோம்.
காலம் (நேரம்) என்பது ஒரு ஓடும் நதியைப் போன்றது. ஒரு நதியில் கூட நீங்கள் அணைகட்டி நீரோட்டத்தைத் தடுக்க முடியும். ஆனாலும் நீரோட்டத்தை முற்றிலும் நிறுத்த முடியாது. நீர் மட்டம் உயர்ந்தால் அணையில் மேல்புறமாக நீர் ஓடி விடும். அதை நீங்கள் விட்டுத்தான் ஆக வேண்டும். ஓரளவுக்குத் தான் நீரைத் தேக்கி வைக்க முடியும். ஆனால் காலத்தை சிறிது கூட நாம் தடுத்து வைக்க முடியாது. காலம் என்பது மிக வேகமாக ஓடும் நதி போன்றது. காலம் வலுவாக வீசும் காற்றும் போன்றது. யாராலும் தடுக்க முடியாதது. காலம் நம் பூமி சுற்றிவரும் சூரியனைப் போன்றது. காலம் நம் மனதைப் போன்றது. மிக மிகப் பழமையானது. ஆனாலும் புத்தம் புதிய பொலிவோடு இருப்பது. நம் மனமும் மிகப் பழமையானது. இருந்தாலும் என்றும் புதிதாக இருப்பது.

ஆகவே புத்தாண்டைக் கொண்டாடுவது, காலத்தை மதித்து மரியாதை செய்வதை போன்றது. காலத்தை மதித்து மரியாதை செய்வதும் நம் மனத்துக்கு மரியாதை செய்வதும் ஒன்று தான். நம் மனத்துக்கு மரியாதை செய்வதும் ஆத்மாவுக்கு மரியாதை செய்வதும் ஒன்று. 

நாம் ஒரு குற்றவாளியோ, பாதிக்கப் பட்டவரோ இல்லை என்பதை அறிவதே ஆத்மாவுக்குச் செய்யும் மரியாதையாகும்.

எது உன்னை ஆத்மாவுக்கு மரியாதை செய்வதைத் தடுக்கிறது ? நீ தவறு செய்து விட்டதாக நினைத்தால் உன்னை ஒரு குற்றவாளி என்று நினைக்கும் போது, நீ குற்ற உணர்ச்சியோடு உன்னை ஒரு பாவியாக கருதுவாய். நீ ஒரு பாவியாக உணர்ந்தால், உன்னால் எதையும் கொண்டாட முடியாது. எப்போதும் அமைதியாக இருக்க முடியாது. அந்த உணர்ச்சி ஆழ்மனத்தில் பதிந்து அரித்து எடுத்து விடும். குற்ற உணர்விலிருந்து வெளியே வந்தால் தான் உனக்கு அமைதி கிடைக்கும். உனக்கு உள்ளே ஆத்ம ஜோதி ஒளிர்விடும்.

உனக்குள் ஒரு ஒளிர்ச்சுடர் இருக்கிறது என்பதை நீ அறிய வேண்டும். நீ அந்த ஒளியின் ஒரு பகுதி; இவ்வுலகத்தின் அன்பில் ஒரு பகுதி; அன்பில் ஒரு தீப்பொறி என்பதை அறிந்து கொள். இவ்வுலகில் ஒவ்வொருவரும் அன்பை அனுபவிக்க விரும்புகிறார்கள். அதில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள். அந்த அன்பெனும் சுடரில் ஒரு தீப் பொறியாக இருக்க விரும்புகிறார்கள். நீ குற்ற உணர்ச்சியிலிருந்து வெளியே வந்தால் தான் அப்படி நடக்கும்.
மற்றொன்று. நீ உன் னை ஒரு பலி (இரை) போல் பார்ப்பது. இரை போல் உணர்ந்தால் உன்னால் உண்மையை ஒருபோதும் உரைக்க முடியாது. இறைத் தன்மையை எடுத்துச் சொல்ல முடியாது.
இறைவன் திருவுள்ளத்தினால் தான் நீ இங்கு வந்திருக்கிறாய். அதன் படி உன்னால் வாழ்க்கையின் எல்லா பரிணாமங்களையும் (அன்பு, மகிழ்ச்சி மற்றும் ஞானம்) அனுபவித்து மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து, மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக இருப்பது ஒரு கொண்டாட்டமாகும். வாழ்க்கையில் அன்பு, மகிழ்ச்சி மற்றும் அறிவு பூர்வமான ஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்து சொல்வதற்காகத் தான் நீ இங்கு வந்திருக்கிறாய். ஒரு சூழ்நிலைக்கோ, காலத்துக்கோ இரையாகி விட்டதாக அல்லது மற்றவர்களின் செயல்களால் ஒரு பலி ஆடு போல் ஆகி விட்டதாக நினைத்தால் வாழ்க்கையை கொண்டாட முடியாது.

எனவே இந்த பலி ஆட்டு நிலையிலிருந்து எப்படி வெளியே வருவது ? வாழ்க்கையில் சில துக்ககரமான, கடினமான அனுபவங்கள் உன்னை வலிமையானவனாக்க வந்திருப்பதாக அறிந்து அதற்கு நன்றி சொல். வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்கள் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக வருகின்றன. அதற்கும் நன்றி சொல்.

வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்து வரும். கஷ்டமான நேரங்களும், துக்ககரமான அனுபவங்களும் உன்னை ஒரு நடு நிலையில் கொண்டு வரும். துக்கமான அனுபவங்களே உன்னை ஒரு நடு நிலையில் வைக்க சிறந்தது. துக்கம் உன்னை வெளிப்புற செயல்களிலிருந்து ஓய்வளித்து உன்னை ஆத்மாவுடன் இணைக்கிறது. உன் ஆளுமையை மேலும் சிறப்படையச் செய்கிறது. வாழ்க்கையில்  ஒரு ஆழ்ந்த அனுபவத்தையும் அளிக்கிறது. 

எனவே “நான் என் வாழ்க்கையில் 20 ஆண்டுகளை விரயப்படுத்தி விட்டேன். அந்த மனிதர் எனக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டார்” என்று சொல்வதை விட “இந்த கஷ்டமான காலம் என்னை வலிமையானவனாக ஆக்கியதற்காக நன்றி சொல்கிறேன்” என்று சொல்.
உன் உண்மையான திறமையைக் காட்டி, வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க உதவிய மகிழ்ச்சியான நேரத்துக்கும் நன்றி சொல்.

இன்பமான மற்றும் துன்பமான காலத்துக்கு நன்றி சொல்லும் போது, நம்மால் பலி ஆட்டு உணர்விலிருந்து விடுபட முடியும். வரும் புத்தாண்டை ஒரு திடசங்கல்பத்தோடு வரவேற்போம். ஒரு மிக நல்ல காரியத்தை மிகத் திறமையாக செய்வோம். மற்றவர்களுக்கு உதவியாக இருப்போம். மகிழ்ச்சியாக வாழ்ந்து மற்றவர்களும் மகிழ்ச்சியாக வாழ உதவுவோம். மற்றவர்களிடையே மகிழ்ச்சியைப் பரப்புவது மிக அவசியமாகும்.

உனக்குத் தெரியுமா ? நீ துக்கப்படுவதற்கு ஒரு காரணம் தேவை. ஆனால் ஒரு காரணமும் இல்லாமல் உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஒரு காரணமும் இல்லாமல் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற உண்மையை அறிவது தான் ஞானம் எனப்படும். இது நம் மனதில் எப்போதும் இருக்க வேண்டும்.

நான் துக்கப்படும் போது, ஏன் துக்கப்படுகிறேன் என்று காரணத்தை தேடுவேன். நீயும் அதைச் செய்ய வேண்டும். வேறு யாராலும் உன் துக்கத்தின் காரணத்தைத் தேட முடியாது. உன் துக்கம், நீ யாரையோ (உணர்ச்சி பூர்வமாக) அல்லது எதையோ (பொருள் தேவையினால்) சார்ந்திருப்பதால் ஏற்பட்டிருந்தால், அதன் காரணத்தை நீ அறிந்து கொள்ள வேண்டும். பொருள் தேவை அல்லது மன உணர்ச்சி தேவை உன் துக்கத்துக்கு காரணமாகிறது. முதலில் மன உணர்ச்சியின் தேவையை எப்படி நிறைவு செய்வது என்பதை அறிய வேண்டும்.

மன உணர்ச்சி தேவை என்றால் என்ன ?
மற்றவர்களிடமிருந்து பாராட்டு – என்னை மற்றவர்கள் பாராட்ட வேண்டும். என்னைப் புகழ வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு. மற்றவர்களுடன் வாக்கு வாதம் செய்ய முடியாத நிலை. அல்லது வாக்கு வாதத்தில் தோல்வி. தன்னைப் பற்றிய உயர்வான எண்ணம். – நாம் மிக நல்லவன். நான் எல்லோருக்கும் நல்லதே செய்வேன்.ஆனாலும் எல்லோரும் என்னை கெட்டவன் என்று நினைக்கிறார்கள்.

இப்படிப்பட்ட மன உணர்ச்சி சம்பந்தமான குழப்பத்தை நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம். இதற்கு நாம் தான் பொறுப்பு. மற்ற யாரும் குழப்பத்தை உண்டாக்குவதில்லை. ஞானமும் தியானமும் நம்மை இப்படிப்பட்ட நிலையிலிருந்து விடுவிக்க வழியாகும். மன உணர்ச்சி சம்பந்தமான குழப்பத்திலிருந்து வெளிவர ஞானமும் தியானமும் உதவும். 

மன அளவில் சார்ந்திருப்பதிலிருந்து வெளியே வந்தபின், பொருள் சம்பந்தமான தேவைகளிலிருந்து நீ வெளியே வர வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். உன் திறமையில் நம்பிக்கையோடு உன்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு காரியத்தில் ஈடுபடு. உன் தேவைகளைக் குறைத்துக் கொள். ஆசைகளை குறைத்துக் கொள்.  உன் தேவைகளும், ஆசைகளும் அதிகமாக இருந்து, உன் திறமையும் உழைக்கும் சக்தியும் குறைவாக இருந்தால் நீ துக்கத்தில் இருப்பாய். உன் தேவைகளும், ஆசைகளும் உன் திறமை மற்றும் உழைக்கும் சக்திக்கேற்ப இருக்க வேண்டும். உதாரணத்துக்கு உன் பற்கள் வலுவாக இல்லாத போது, நீ ஒரு பாதாம் கொட்டையின் வெளி உறையை பல்லால் கடித்து உடைக்க நினைத்தால் நான் உனக்குச் சொல்வது இதுதான். “கொட்டை உடையாது. ஆனால் உன் பல் உடைவது நிச்சயம்.” எனவே, உன் பற்களில் எவ்வளவு வலிமை இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அதன் படி செய்ய வேண்டும்.

என்னால் 15 கிலோ தான் தூக்க முடியும் என்று தெரியும் போது 50 கிலோவை தூக்க முயற்சி செய்ய வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக நம் உடல் வலிமையை அதிகப்படுத்திக் கொண்டு 15 கிலோவை விட சற்று அதிக எடையைத் தூக்கப் பழக வேண்டும். சக்திக்கேற்ப, திறமைக்கேற்ப ஆசைப்படு. திறமைக்கும் ஆசைக்கும் இடைவெளி இருந்தால் நீ துன்பப்பட நேரிடும்.

நீ ஒரு இதய நோயாளியாக இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏற ஆசைப் பட்டால் நான் உனக்கு என்ன சொல்ல முடியும் ? உன் வீட்டு மாடிப்படி உச்சியில் எவரெஸ்ட் என்று எழுதி வைத்து விட்டு நீ ஏற முடியும். நீ மாடிப்படி ஏறுவதே, உனக்கு எவரெஸ்ட் ஏறுவது போன்ற அனுபவமாக இருக்கும்.எனவே உன் திறமைக்கும் சக்திக்கும் ஏற்ப ஆசைப்படு. சில விஷயங்களில் விட்டுக் கொடுத்தே ஆக வேண்டும். சில விஷயங்களில் முயற்சியைக் கைவிடக் கூடாது. நம்பிக்கையை கை விட வேண்டாம். அதிகப்படியான ஆசைகளை கை விடுவது நல்லது. அப்படிச் செய்தால் நீ மகிழ்ச்சியோடு இருக்க முடியும்.

எப்போதும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு இரு.

“எனக்கு எப்போதும் நல்லதே நடக்கிறது. ஏதோ துக்ககரமான நிகழ்ச்சி ஏற்பட்டாலும், இயற்கை என் நன்மைக்காகவே அப்படிச் செய்திருக்கிறது. என்னை வலிமையானவனாக ஆக்குவதே அதன் நோக்கம்.” 

எப்போதும் இந்த நம்பிக்கையோடு இரு. கெட்ட நிகழ்ச்சி நடந்தால் அதை ஒரு விபத்தாக நினை. அக்கெட்ட நிகழ்ச்சி நடந்ததற்கு நீ காரணமென்றோ, நீ அந்த நிகழ்சிக்குத் தகுதியானவன் என்றோ நினைக்காதே.“கெட்ட நிகழ்ச்சி ஒரு விபத்து. எனக்கு எப்போதும் நல்லதே நடக்கும்” – இப்படி நினைப்பதால் உன் நம்பிக்கை மேலும் வளரும். ஆகவே இப்படிச் சில ஞான முத்துக்களைப் பெற்று, அதை விலை மதிப்பற்ற ஞானமாக ஏற்றுக் கொள்வதே உங்கள் வாழ்க்கையை கொண்டாட்டமாக்கும். இந்த ஞான முத்துக்கள் உங்கள் வாழ்க்கையை கொண்டாட உதவும் ஆபரணங்களாகும்.

மனதிலிருந்து விடுதலை

டிசம்பர் 30, 2013


பாத் அண்டோகஸ்ட், ஜெர்மனி 




சிறை குற்றவாளிகள் 5000 பேர் வாழும் கலை பயிற்சியை முடித்து விட்டதாக இன்று இந்தியாவிலிருந்து எனக்கு செய்தி வந்துள்ளது. செய்தி தாளில், இதைப் பற்றி ஒரு முழுப் பக்கத்திற்கு செய்தியும், அவர்களின் அனுபவங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

நமது கட்டுத்தளைக்கும், விடுதலைக்கும் நமது மனமே காரணம். நமது மனம் நம்முடைய நெருங்கிய நண்பனும் தீய விரோதியும் ஆகும். ஆகவே மனத்திலிருந்து விடுதலை என்பது தான் நாம் பார்க்க வேண்டியது. மனம் எப்போதும் தீர்ப்பளித்து கொண்டும், வேறுபாடு கண்டறிந்து கொண்டும் இருக்கின்றது. சில சமயங்களில் நாம் நம் மனதிடம், "சற்று இளைப்பாறு'' என்று கூற வேண்டும். எப்போது மனம் இளைப்பாறி, நீங்கள் விழித்து கொண்டிருக்கின்றீர்களோ அது தான் தியானம். சாதாரணமாக மனம் பல சண்டித்தனங்கள் செய்து கொண்டு நீங்கள் உறங்கிக் கொண்டிருந்தால் அது அறியாமை. மனம் ஒய்வு எடுத்துக் கொண்டு நீங்கள் விழிப்புடன் இருந்தால் அது ஞானம். அது தான் தியானம், அது தான் ஆனந்தம்.

எப்போதெல்லாம், நீங்கள் ஆனந்தத்தை அனுபவக்கின்றீர்களோ அப்போது என்ன நிகழ்கின்றது? சதா அலட்டிகொண்டிருக்கும் மனம் அதை நிறுத்தி, அசைவற்றதாகின்றது, அல்லது ஒய்வு அடைகின்றது. அப்போது நாம் மகிழ்ச்சியை உணருகின்றோம். மனம் அறிவு இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. அவை இருவேறு வகைப் பட்டவை. அறிவு என்பது காரணக் கூறுகள், வேறுபாடுகள், தீர்ப்புகள், புரிதல் இவற்றுக்குதவுகின்றது. அது தேவையானது. காரணக்கூறுகள் மூலம் நம்பிக்கை அடைகின்றோம். நம்பிக்கை என்பது தெரிந்து கொள்ள முடியாதது, காரணக்கூறுகள் தெரிந்து கொள்ளக் கூடியதில் சுழன்று கொண்டிருப்பவை.  அது திருப்பி திருப்பிக் கூறுவது.   நம்பிக்கை என்பது அறிவுக்கு எட்டாததை நோக்கி அடியெடுத்து வைப்பது. வாழ்க்கையில் இரண்டுமே அவசியம். நம்பிக்கை என்பது ஒரு வீரச்செயல், ஏனெனில் 
அது அறிவுக்கு எட்டாதது.

மனிதர்கள் ராக்கெட்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு, அல்லது சந்திரனுக்கு விண்வெளியில் செல்கின்றார்கள். திரும்பி வருவோம் என்னும் நம்பிக்கையில் செல்லுகின்றார்கள்.ஆகவே நம்பிக்கை என்பது தெரியாததை நோக்கி செல்வது. மக்கள், வானவெளியில் தாம் பத்திரமாக இருப்போம் என்னும் நம்பிக்கையுடன் முக்குளிக்கின்றார்கள். நம்பிக்கை இருப்பதால் அத்தகைய வீரச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். புதிய கண்டுபிடிப்புக்களுக்காக  அமேசான் காடுகளில் மலையேறிச் செல்லுகின்றார்கள். அத்தகைய ஆய்வுப் பயணங்களுக்கு நம்பிக்கை தேவை. அது போன்று நமது உள் இடத்தை ஆய்வது தியானம், அதற்கும் நம்பிக்கை தேவை. நம்பிக்கையுடன் தான் அது என்ன என்று கண்டறிய முயல்கின்றோம். தமிழ் நாட்டில் ஒரு நகைச் சுவை நடிகர் இருந்தார். அவருக்கு சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் விசிறிகள் உண்டு. அனைவருக்கும் தெரிந்தவர். தென் இந்தியாவில் மதுரையில் அவர் எனக்காக ஒரு பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அவர் கூறியது பின்வருமாறு:


ஒருவர் உடல் நலமற்று டாக்டரிடம் சென்றார். டாக்டர் அவரைப் பரிசோதித்து விட்டு உங்களுக்கு ஒன்றும் இல்லை என்றார். ஆனால் அவரோ "இல்லை நான் நோயுற்று இருக்கின்றேன் என்றார். டாக்டர் மீண்டும், இல்லை உங்களுக்கு எதுவுமே இல்லை மிக நன்றாகவே இருக்கின்றீர்கள் என்று கூறினார். அதை அவர் மறுத்து, இல்லை டாக்டர் எனக்கு ஏதேனும் மருத்துவம் செய்யுங்கள் நான் நோயுற்று இருக்கின்றேன் என்றே கூறினார். உடனே டாக்டர், சரி! நகரத்தில் ஒரு சர்க்கஸ் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது. நீங்கள் அங்கு சென்று அங்குள்ள கோமாளியை சற்று அங்கு அமர்ந்திருந்து கண்டு ரசியுங்கள். உங்களுடைய அத்தனை பிரச்சினைகளும் சரியாகி விடும் என்று கூறினார். அதற்கு அம்மனிதர் "டாக்டர் ! நான் தான் அந்தக் கோமாளி. அனைவரையும் நான் சிரிக்க வைக்கிறேன் ஆனால் நான் மகிழ்ச்சியற்று இருக்கின்றேன் என்று கூறினார். நகைச் சுவை நடிகர் என்னிடம், "இது என்னுடைய உண்மைக் கதை குருதேவ்! நான் அனைவரையும் சிரிக்க வைக்கின்றேன், ஆனால் நான் உங்களுடைய முன்னிலையில், இங்கு வந்து தியானம் செய்யும் போது தான் மகிழ்வாக உணருகின்றேன்" என்று கூறினார்.

இதை மிக நல்ல, கள்ளமில்லா விதத்தில் அவர் என்னிடம் கூறினார். நகைச்சுவையாளர்கள் மற்றவர்களை சிரிக்க வைத்தாலும், அவர்தம் உளஆவல் ஆழ்ந்த தியானத்தின் மூலமே திருப்தி அடைகின்றது.  ஞானமும் தியானமும் ஆன்மாவிற்கு உணவு. ஆகவே நாம் வரும் இரு நாட்களில்  நிறைய தியானம் செய்வோம். சில புதிய  நல்ல  தியானங்கள் உருவாகி உள்ளன. அவற்றைச் செய்வோம். இப்புத்தாண்டில்  அந்த புதிய தியானங்கள் உங்களுக்குப் பரிசு. நாம் செய்யலாம். நம்முடைய பயிற்சிக்கும் ஒரு புதிய பெயர் அளித்திருக்கின்றேன். நமது பயிற்சிகள் வாழும்கலை மகிழ்ச்சிப் பயிற்சி என்றும், நமது மையங்கள் மகிழ்ச்சி மையங்கள் என்றும் அழைக்கப்படும். இதை கூறும் போது எனக்கு சற்றுப் பதற்றமாக இருக்கின்றது. அதாவது நீங்கள் அனைவரும் இந்த மையங்களை மகிழ்ச்சிகரமாக வைத்துக் கொள்வோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாழும் கலையானது. பல்வேறு கூறுகள் நிறைந்த நிறுவனம். ஆட்டுமந்தை போன்று ஒரே விதமானவர்கள் அடங்கிய மரபுகோட்பாடு உடையது அன்று. இதிலுள்ளவர்கள் ஒவ்வொருவரும் வேறுபாடானவர்கள். நம்முடைய வளர்ச்சியுடன்,வேறுபாடுகளும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இதன் முக்கியத்துவமே, இத்தகைய வேற்றுமையில் ஒற்றுமையை காப்பது தான். இது ஒரு சவால். வேறுபாடுகளின் காரணமாக இந்த சவாலை நாம் ஏற்று வெற்றி காண வேண்டியது அவசியம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இருந்த போதிலும் அனைவரையும் ஒருங்கிணைப்பது உண்மையான அன்பு. இதை நாம் நன்கு உணர வேண்டும். அன்பு என்னும் நூல் அனைவரையும் பின்னிப் பிணைப்பதை கண்டு உணருங்கள். அந்த தூய அன்பை கண்டு உணர்ந்து மரியாதை செய்யுங்கள். பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. நாம் என்ன செய்கின்றோம்? சிலர் நன்னடத்தை உள்ளவர்கள் சிலர் அவ்வாறு இல்லாதவர்கள். நம்மில் சிலர் பண்பும் கொடையும் நிறைந்தவர்கள். சிலர் ஆத்திரம் மிக்கவர்கள், கொடாதவர்கள். என்ன செய்ய முடியும்

என்னிடம் சிலர்," ஏன் இத்தகைய பண்பில்லாத முரட்டுத்தனமானவர்களை சகித்துக் கொள்ளுகின்றீர்கள்? என்று கேட்கின்றார்கள்.என்னுடைய விடை,"அவர்களை நான் இங்கு வைத்துக் கொண்டிருப்பதன் காரணம் என்னவென்றால், அதன் மூலம் உலகம் ஒரு பத்திரமான இடமாக இருக்கும் என்பது தான்" அவர்களை நான் இங்கிருந்து போகச் சொல்லி விட்டால், அவர்கள் எங்கு செல்வார்கள்? எப்போது திருந்துவார்கள்? எனவே இங்கு மறுப்பு என்பதே கிடையாது. அதுவே ஒரு பிரச்சினைதான். சிலர் கடினமானவர்கள். எளிதில் கற்பதில்லை. எதையும் கவனித்து கேட்பதில்லை. இதெல்லாம் நமது பிரச்சினைகள் ஆனால் அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு சிரித்து மகிழ்ந்து கொண்டிருப்பது தான் எம் பலம். எல்லாமே எளிதாகவும் சரியாகவும் இருப்பது ஒரு பெரிய விஷயம் அல்ல. இங்கு யார் வேண்டுமானாலும் புன்முறுவலுடன் இருக்கலாம், சிரிக்கலாம், மகிழ்ச்சியாக இருக்கலாம். பல்வேறு விதமான  அறிவுத் திறன் ,உணர்ச்சித் தளங்கள் உள்ளவர்கள் இருந்தாலும் மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் இது வரை எமது வெற்றி ! (கண்ணேறு படாமல் இருக்கட்டும்)எங்கள் மகிழ்ச்சியை நாங்கள் இழந்ததே இல்லை.

நமது மகிழ்ச்சி மையங்கள் உண்மையில் மகிழ்ச்சியாக இருத்தல் வேண்டும்.புத்தாண்டிலிருந்து "மகிழ்ச்சி மையங்கள்" அறிக்கைப் பலகை கூட போட்டு விடலாம். யாருமே நான் மகிழ்ச்சி மையத்திற்குச் செல்ல விரும்ப வில்லை என்று கூற முடியாது! நான் மூச்சு விட விரும்பவில்லை என்று எப்படி யாரும் கூற மாட்டார்களோ அது போன்று யாருமே நான் மகிழ்ச்சி மையத்திற்குச் செல்ல விரும்பவில்லை என்று கூற முடியாது!   மகிழ்ச்சியின் மையத்தில் இருப்பதே மகிழ்ச்சி மையம். பலர் மகிழ்ச்சியாக இருக்கலாம், ஆனால் அவர்கள் மையம் கொண்டிருக்க மாட்டார்கள். அவ்வாறு மையம் கொண்டிராத போது மகிழ்ச்சி நீடித்திருக்காது. யாரோ ஒருவர் ,''நான் மையமாக இருக்கின்றேன் ஆனால் மகிழ்ச்சியாக இல்லை" என்று கூறினார். அப்போது மைய்யப்படுத்திக் கொண்டு என்ன பயன்? மகிழ்ச்சி மையங்கள் என்பவை உங்களை மையமாக்கி மகிழ்ச்சியாக்குபவை. இதுதான் நான் உங்கள் முன் வைக்கும் கருத்துரு ஆகும்.

பெரும் குழப்பங்களுக்கு மத்தியிலும் புன்னகையுடன் வாழ்வது .....

டிசம்பர் 28, 2013

பூன், நார்த் கரோலினா  



அன்பை கொண்டாடுதல், மௌனம் ஒரு கொண்டாட்டம் ஆகிய புத்தகங்களை படிக்கவும். 
ஞானப்பேழைகளை படிக் வேண்டும். அஷ்டவக்ர கீதையை கண்டிப்பாக கேட்க வேண்டும். உங்களை உணர்வு பூர்வமாகவும் ஆன்மிக பூர்வமாகவும் வலிமை மிக்கவராக்கும். நீங்கள் அஷ்டவக்ர கீதையை கேட்டிருந்தாலும் மற்றும் ஒன்று அல்லது இரண்டு முதுநிலை தியானப் பயிற்சி பெற்றிருந்தாலும் உங்கள் வீட்டில் சத்சங்கம் தொடங்கலாம். ஓரிரு பாடல்கள் பாடலாம், அஷ்டவக்ர கீதையை கேட்கலாம் அல்லது பார்க்கலாம். அதன் பின் ஒன்றாக அதைப்பற்றி விவாதிக்கலாம். அது ஒரு மையமாக இருந்தால் நல்லது, இல்லையென்றால் உங்கள் வீட்டிலேயே அதை நடத்தலாம்.

நமது அடிப்படை ஞானம்மிக்க வலிமை உள்ளதாக இருக்கவேண்டும். ஞானம் மட்டுமே குழப்பங்களுக்கு இடையிலும் நம் வாழ்வை நடத்திச் செல்லும். இந்த உலகத்தில் குழப்பங்கள் ஏராளமாக உள்ளன. அவைகளுக்கு மத்தியில் நாம் புன்னகையுடன் வாழ வேண்டுமென்றால், வலுவான ஞானம் அவசியமாகிறது. நீங்கள் ஏன் என்னை டுவிட்டரிலும் பேஸ் புக்கிலும்    பின்பற்றக்கூடாது? டுவிட்டரில் நான் எப்போதுமே சிறுசிறு ஞானத் துணுக்குகளை கொடுத்து கொண்டிருக்கிறேன்.

சமீபத்தில், எனக்கு பிடித்த, எனக்குள் தோன்றிய ஞானம் மிக நன்றாக இருந்தது. பெரும்பாலும், நான் சொல்லும் ஞானங்கள் அனைத்தும் எனக்கு பிடித்ததாக இருக்காது, அதனால் நான் வேறு ஏதாவது சொல்ல வேண்டி இருக்கும். இது ஏன் என்றால் உண்மை என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு சுருக்கமாக இருக்கும். ஆனால் சமீபத்தில் எனக்கு கிடைத்த ஒன்று நன்றாக இருந்தது. காரணம் என்பது தெரிந்த ஒன்றிலேயே சுழன்று கொண்டிருப்பது. நம்பிக்கை என்பது தெரியாத ஒன்றிற்குள் துணிந்து செல்லுவது. காரணம் என்பது வழக்கமானது மற்றும் ஒப்பிப்பது. நம்பிக்கை என்பது துணிந்து ஆய்வு செய்வது. 

மக்கள் ராக்கெட்டில் சந்திரனுக்கு சென்ற போது அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அதை ஒரு தற்கொலை பயணமாக எண்ணாமல், திரும்ப வருவோம் என்ற நம்பிக்கையோடு சென்றதால், அவர்களால் தெரியாத ஒரு விஷயத்தில் துணிச்சலோடு ஈடுபட முடிந்தது. அறிவியல் பூர்வமான மனம் எப்போதுமே தெரியாத ஒரு செயலில் ஈடுபடுவதையே விரும்பும், இல்லையென்றால் அது அறிவியலே ஆகாது. தெரிந்த விஷயங்களிலேயே மறுபடியும் மறுபடியும் சுழன்று கொண்டிருந்தால் அது பொது அறிவும், ஒப்பிப்பதுமே ஆகும்.அறிவியல் என்பது தெரியாத ஒன்றில் நம்பிக்கையோடு துணிந்து ஈடுபடுவது. பொதுவாக மக்கள் அறிவியல் என்பது நம்பிக்கை சார்ந்ததல்ல என்றே நினைக்கிறார்கள். நம்பிக்கை இன்றி நீங்கள் அறிவியலை ஆராய முடியாது என்று நான் கூறுகிறேன். ஆழ்ந்து சென்றால் அது மிகவும் சுவாரசியமானதாக இருக்கும்.    

நீங்கள் உங்களுடைய கவலைகளையும் பிரச்சினைகளையும் மூட்டைகட்டி இங்கேயே விட்டுச் சென்று விடவும். புன்னகையுடன் திரும்பி செல்லவும். ஆனந்தத்தை பரப்பவும். சிறுசிறு விஷயங்கள் குறித்து கவலை கொள்ள வேண்டாம். சிரமமான நாட்களும் வரும் சந்தோஷமான நாட்களும் வரும். வாழ்க்கை அவ்வாறு இனிமையானதும் கசப்பானதுமான கலவையாகவே இருக்கும், இறுதியில் அனைத்தும் நல்லதாகவே நடக்கும். இந்த நம்பிக்கையை தான் நீங்கள் உங்களுடன் கொண்டு செல்லவேண்டும்.

உங்கள் நண்பர்கள் அனைவரையும் வந்து தியானம் செய்யுமாறு அழைக்கவும். உங்களை சுற்றி தியானம் செய்பவர்கள் அதிகமாக இருப்பது, அங்குள்ள அனைவருக்கும் மற்றும் உலகத்திற்கும் சிறப்பாக இருக்கும். மக்கள் ஞானத்தை தேடிச் செல்லுபவர்களாக இருக்க வேண்டும். எனவே ஞானம் பெறுவது என்பது இந்த சமுதாயத்திற்கு சேவை செய்ய ஒரு சிறந்த வழி ஆகும்.  

ஆப்பிரிக்காவில் செரெங்கெட்டி என்னும் இடத்திற்கு நீங்கள் பயணம் செய்தால் அங்கே சிறு சிறு  கிராமங்களில் மக்கள் பல் துலக்கும் ப்ரஷ். துணிகள், சாப்பிடுவது மற்றும் தீ ஆகியவை பற்றி கூட தெரியாமல் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு அங்கு இருக்கும் மக்களுக்கும் மற்ற நாகரிகமடைந்த மக்களுக்கும் இடைவெளி உள்ளது, ஏனென்றால் அவர்களுக்கு பற்களின் சுகாதாரம் பற்றி கூட தெரியவில்லை. யாருக்குமே, இளைஞர்கள் உட்படவும், அங்கு எல்லா பற்களும் இருப்பதில்லை. அவர்கள் பற்களை துலக்கியதே கிடையாது, ஏனென்றால் அவர்களுக்கு அதை பற்றி தெரியாது. திடீர் என்று தான் நீங்களும் பற்களின் சுகாதாரம் அல்லது தூய்மையை பற்றி உணருகிறீர்கள். அது போலவே தான், இங்கே வந்து இந்த சந்தோஷமான சூழ்நிலையில் இருக்கும்போது தான், நீங்களும் மன சுகாதாரம் மற்று தூய்மையை பற்றி உணருகிறீர்கள்.

எங்கே மக்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும், சோகமாகவும், கவலையாகவும் மற்றும் மன அழுத்தத்துடனும் இருக்கிறார்களோ அங்கே நீங்கள் சென்று அவர்களுக்கு மன சுகாதாரம் பற்றி சொல்ல வேண்டியுள்ளது. மக்கள் அவர்களுடைய மனதை சரி வர துலக்காத போது தான் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

நீங்கள் உங்கள் மனதை துலக்கும் போது தான் உங்களுக்குள் ஞானமும் ஒளியும் உள்ளன என்று பார்க்கலாம். நீங்கள் தான் ஒளி உங்களுக்குள் அது உள்ளது. ஆனால் நீங்கள் ஒரு போர்வையை கொண்டு அதை மூடிவிட்டால் உங்களால் அதை பார்க்க இயலாது. நீங்கள் அந்த திரையை விளக்க வேண்டும்.  ஞானம் என்பது உங்களுக்குள்ளே உள்ள ஒளியை வெளியே கொண்டு வர பயன்படுவதாகும். எனவே உங்களுடைய கவலைகளையும் பிரச்சினைகளையும் இங்கேயே விட்டு விடவும். அவைகளை எனக்கு கொடுத்து விட்டு நீங்கள் வீடு சென்று உங்கள் வாழ்க்கையை கொண்டாடலாம்.


நீங்கள் என்னிடம் சொல்லலாம்" குருதேவ், நீங்கள் சுலபமாக சொல்லிவிட்டீர்கள், ஆனால் எனக்கு அது மிகவும் கடினமாக உள்ளது. ஏன் என்றால், நான் நாளை நான் என் வீட்டிற்கு செல்ல வேண்டும், பில்களை கட்டுவது, என்னுடைய மனைவி குழந்தைகளை கவனிப்பது போன்ற பல வேலைகள் இருக்கும்." உங்களுக்கு என்ன சொல்கிறேன் என்றால் இவை அனைத்தும் கடினமானவை என்று நினைக்க வேண்டாம். நீங்கள் அவை சுமை என்றோ கடினமானவை என்றோ நினைத்தால் அவைகள் மேலும் மிகப் பெரிய சுமைகளாக தெரியும். உங்களுடைய ஆற்றலுக்கும், சக்திக்கும் உட்பட்ட  ஒரு வேலையே உங்களுக்கு தரப்படும் என்பதை தெரிந்து கொள்ளவும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட வேண்டாம். ஆசீர்வாதம் அளிக்கும் பயிற்சியை கற்று அறிந்தவராக இருப்பவர்கள் ஆகிய நீங்கள் உங்கள் சக்தியை குறைத்து மதிப்பிடக் கூடாது. உங்களுக்கு என்ன தேவைப்பட்டாலும், உங்களுடைய வலுவான விருப்பம் நிறைவேறத் துவங்கும்.      

முறையீடு செய்வதை நிறுத்துவீர்களா?

27 டிசம்பர் 2013

போன், வடகரோலினா

கொண்டாட்டம், பாடுதல், ஆடுதல், தியானம் இவற்றின் போது கேள்விகள் எழுவதில்லை. வாழ்வின் நோக்கம் என்ன? இவற்றுக்கெல்லாம் பொருள் என்ன? என்பது போன்ற கேள்விகள் எல்லாம் "இது" இல்லாதபொழுதோ, அல்லது "இது" மறைந்திருக்கும் பொழுதோ தாம் எழுகின்றன. 

கடவுளுக்கு ஐந்து கடமைகள் உள்ளன. படைத்தல், காத்தல், கரைதல், ஆசீர்வதித்தல், மற்றும் மறைத்தல். (கடவுள் எல்லாவற்றையும் காப்பவராயினும்,வெளிப்படையாக்குவதில்லை). கடவுளின் பண்பு சத் சித் ஆனந்தா. சத் என்றால் உண்மை, சித் என்பது விழிப்புணர்வு, ஆனந்தா என்றால் பேரின்பம். கடவுளுக்கு நீங்கள் நெருங்கியவர் என்பதை  எவ்வாறு கண்டறிவீர்கள்? கடவுளுடன் இருக்கும் நிலையை நெருங்கும் போது நீங்கள் மிகுந்த பேரின்பத்துடனும், விழிப்புணர்வுடனும் இருக்கின்றீர்கள். 

மதுமயக்க நிலையில் ஏற்படும் நினைவற்ற நிலையன்று, பேரின்ப மயக்கநிலை. இது வேறுபட்டது. உண்மை (சத்) இதை மறுக்க முடியாது. நீங்கள் "அங்கு" இருப்பதை எவரேனும் மறுக்க முடியுமா? யாரேனும்," நான் அங்கு இல்லை" என்று கூற முடியுமா? அங்கு தான் நீங்கள் இருக்கின்றீர்கள்" என்று தெரியும். சில சமயங்களில் "நான் எதையும் நம்ப மாட்டேன்" என்று சிலர் கூறுகின்றார்கள். நீங்கள் எதையும் நம்ப மாட்டீர்களா? நீங்கள் கூறுவதை நம்புகின்றீர்களா? நீங்கள் கூறுவதையாவது நீங்கள் நம்ப, அங்குதான் இருக்க வேண்டும்.உங்கள் கூற்றையே  நீங்கள் நம்ப வில்லைஎன்றால் நீங்கள் கூறுவது செல்லாதது ஆகும். இது புலனாகின்றதா?

குருதேவ், சில சமயங்களில் ஏன் குரு தனது சீடர்களைப் பொருட்படுத்தாமல் இருக்கின்றார்கள்? ஒரு குருவால் தன்னுடைய சீடனைப் புறக்கணித்து விட, அல்லது சலிப்புற்று விட முடியுமா?

குருதேவ்: நீங்கள் மிக முக்கியமானவர் என்று எண்ணிக் கொண்டால் அப்போது நீங்கள் பொருட்படுத்தப்படாமல் இருப்பீர்கள். புரிந்ததா? புறக்கணிப்பு என்பதற்கு இடமேயில்லை. காற்று உங்களை புறக்கணிக்கின்றதா? சூரியன் உங்களைப் புறக்கணிக்கின்றதாபுறக்கணிப்பு என்பதே  கிடையாது. அவ்வாறு உணர்ந்தால், அது மனதில் உள்ள பிரச்சினை. கவலை கொள்வதற்கும், முறையிடுவதற்கும் எதுவும் இல்லையென்றால் மனமானது , கவலை, மற்றும் முறையீட்டுக்கு எதையாவது, தானே உருவாக்கும். இது மிக விசித்திரமான உண்மையாகும்.

வருத்திக்கொள்ள எதுவும் இல்லையென்றால், பத்து நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு, அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவருடன் நிகழ்ந்த நிகழ்வு ஆகியவற்றை நினைவு கூர்ந்து அது அநீதி என்று எண்ணிக் கொண்டிருப்பீர்கள். இதுதான் மனதின் இயல்பு. இதன் மூலம் நீங்கள் பலியான விழிப்புணர்வுக்குள் செல்கின்றீர்கள். இதில் கவனமாக இருக்க வேண்டும். ஆன்மீகப் பாதையில் இரண்டு விஷயங்கள் தீங்கிழைக்கக் கூடியவை:

1. குற்ற உணர்ச்சி: முற்காலத்தில், உங்களை குற்றவாளியாக உணர வைத்திருக்கின்றது. இத்தகைய குற்றவாளியாக உணரும் நிலை உங்களை ஆன்மீகத்திலிருந்து விலக்கிக் கீழே தள்ளுகின்றது. உங்கள் மனதை ஆட்டுவித்து, ஆழ்ந்த குற்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. துரதிர்ஷ்டவசமாக பலர் இந்த குற்ற உணர்வுடனேயே வாழ்ந்து மடிந்து விட்டார்கள். இக்குற்ற உணர்வு அவர்களது சிறு மனதிலிருந்து வெளிவர அனுமதிக்கவில்லை. அம்மக்கள், இறைமையுடன் ஒன்றுதல், ஆழமான அமைதி, இன்பம் இவற்றை உணராமலேயே வாழ்ந்திருக்கிறார்கள்.

ஏசுநாதர் "நானும் என் தந்தையும் ஒன்றே (அதாவது இறைமையுடன் ஒன்றியிருத்தல்) என்று கூறினார். ஒருபோதும், அவர், "நீ குற்றவாளி, கழிவிரக்கம் கொள்" என்று கூறவில்லை.உண்மையில் ஏசுநாதர் யாரும் பாபம் செய்தவர் என்று கருத்துக்கு எதிராகவே இருந்தார். பிற்காலத்தில், மக்களை அச்சமயத்திற்குள் இழுத்துக் கொள்ளும் பொருட்டு, சமயவாதிகள் குற்ற உணர்வை கருவியாகப் பயன்படுத்தினர்.

2. பலியான உணர்வு: ஒ! நான் பலியாகி விட்டேன். நான் தான் சரி, நீ எனக்கு விளக்கம் தர வேண்டும்.வேறு எதுவும் இல்லாவிட்டாலும் விளக்கமாகிலும் தர வேண்டும். மனமானது இரையாகி விட்டதாக அலை பாய்ந்து கொண்டிருக்கின்றது. இத்தகைய பலியான உணர்வு குற்ற உணர்வுக்கு முற்றிலும் மறு புறத்தில் உள்ளது.  இது மனித இனம் இரையாகி விட்ட மிகப் பெரிய பிரச்சினை ஆகும். குற்ற உணர்வு, பலியான உணர்வு இரண்டுமே ஆன்மீகப் பாதையில் தீங்கிழைக்க கூடியவை ஆகும். அவை உங்களை வருத்துபவை. பலியாகி விட்டதாக உணர்ந்தால், உங்களுக்கு சரியான ஓய்வு கிட்டாது. அழுது கொண்டோ, அல்லது பிறர் மீது கோபப் பட்டுக் கொண்டோ இருப்பீர்கள்.

குருதேவ், அஷ்ட வக்கிர கீதையில் நாம் செயல் முதல்வர் அல்ல என்று அறிகின்றோம்.சுய முயற்சி என்பதுடன் இது முரண்பட வில்லையா? முக்கியமாக தியானத்தில் சுயமுயற்சி எவ்வாறு பயன் படுத்தப்பட வேண்டும் என்று எங்களுக்கு அறிவுறுத்துங்கள்.

குருதேவ்: நூறு சதவீதம் உங்கள் சுய முயற்சியை கொடுத்தால் தான் நீங்கள் செயல் முதல்வர் அல்ல என்பதை தெளிவாக அறிந்து கொள்வீர்கள். நீங்கள் கைகளைக் கட்டிக் கொண்டு எதுவும் செய்யாமலிருந்தால் நான் செயல்முதல்வன் அல்ல என்பதை ஒருபோதும் உணர மாட்டீர்கள்.
தியானம் முயற்சியற்றது. ஆயினும் தியானத்திற்குள் நுழைய சிறிது முயற்சி எடுக்க வேண்டும். நேற்று, முதலில் நாம் சற்று முயற்சி எடுத்தோம், கவனித்தீர்களா? முதுகில் தோள்களில் சற்று வலி ஏற்பட்டது, சில நிமிஷங்களுக்குப் பின்னர் அவையெல்லாம் மறைந்து விட்டன. முதலில் சிறிது முயற்சி தேவை, பின்னர் விட்டு விடுங்கள். அஷ்ட வக்கிரா (கீதை) நகர்ந்து செல்வது அல்லது அல்லது ராக்கெட்டுக்களுக்கிடையே பறப்பது போன்றதாகும்.

பறப்பதில் பல விதங்கள் உண்டு. வரைபடத்தைப் பார்த்து, எங்கு செல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்ளுவது ஒரு வழி, ஆகாய வாணம் போன்று நேராக மூலத்தை அடைவது வேறொரு வழி. அது போன்று, ஞானத்திற்கும் பல படிகள்  உண்டு. அது தான் நமது இலக்கியப் பாரம்பர்யத்தின் செழுமை. அது, தன் சிறப்பான செழுமையால், புதிதாகத் துவங்குபவரிலிருந்து சிறந்த விஞ்ஞானி வரையில் யாருக்கு வேண்டுமானாலும் வழி கட்ட முடியும். ஒவ்வொருவருக்கும் வழங்குவதற்கு அதில் ஏதேனும் உண்டு.( பழங்காலத்தில், எந்த தலைமுறைக்கும் ஞானம் மறுக்கப்படவில்லை, நீங்கள் அதை தட்டி எடுக்க வில்லையெனில்  அது உங்கள் தனிப்பட்ட பிரச்சினை, ஞானம் அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாகவே இருந்திருக்கின்றது.)

இந்த ஞானத்தில் ஆழமாக செல்லும் போது மனத் தடுமாற்றத்தை உணர்ந்தறிவீர்கள். உங்கள் ஆத்மாவை மற்றும் விழிப்புணர்வை அறியும் போது சக்திச் சொட்டுப் பொறியியல் பற்றி முழுமையாக  அறிய முடியும். தற்காலத்தில் விஞ்ஞானிகள் கூறுவது என்னவென்றால் ஒரே ஒரு சக்திப் பரப்பு மட்டுமே உள்ளது, இதையேதான் பண்டையக் கால மக்களும் கூறினார்கள். கடவுள் என்பது தனியொரு மனிதர் கிடையாது, ஆயினும் கடவுளை அவன் அல்லது அவள் என்று அழைக்கலாம், ஏனெனில் அது விழிப்புணர்வு, உயிரோட்டமுள்ளது. கடவுள் ஒரு சடப்பொருள் கிடையாது, உயிரோட்டமுள்ள சக்தி ஆகும். மனம் என்பதை அவன், அவள், அது என்று அழைக்கலாம். மனதில் சிறிய மனம் பெரிய மனம் என்று உண்டு. பெரிய மனம் என்பது உளதாம் தன்மை, அதனுள் சிறு மனங்கள் உள்ளன.

நீங்கள் ஆழ்ந்த  தியானத்தில் செல்லும் போது, பாலின வேறுபாடு உள்ளதா என்ன? பாலினம் என்பது உடலுடன் மட்டுமே தொடர்புள்ளது. உயிரோட்டத்தில் ஆண் பெண், என்பதே கிடையாது. அத்தகைய அடையாளத்தை தாண்டிச் செல்கின்றீர்கள். இறைமை அந்த அடையாளத்திற்கு அப்பாற்பட்டது. அதனால் தான் கடவுள் தனி மனித உருவில் அமர்ந்திருப்பவர் அல்ல என்று அறிகிறோம். நிறையப் பேர் கடவுள் உருக்கொண்டு அமர்ந்திருப்பது போன்றும், அவருடன் தாம் பேசுவது போன்றும் கோட்படுத்தி கொள்கின்றனர். அது உங்கள் மனதுடன் நீங்களே பேசிக் கொள்வது ஆகும்.

கடவுளின் அண்மையை உணர முடியும். நீங்களே  இறைமையாக முடியும். உணருதல் இரண்டாம் பட்சம், இருத்தலே முதன்மையானது. இதையன்றி எதுவும் இல்லை என அறிதல், இப்போது என்ன உள்ளதோ அதுவே இருக்கின்றது. அதாவது உண்மை, இருத்தல், பேரின்பம்) மனதில் கடந்து போன எண்ணங்கள், முடிந்து போன தொடர்புகள், நடந்து முடிந்த நிகழ்வுகள் இவையனைத்தும் தற்போது இல்லை. இருக்கின்றனவா என்ன? அவையனைத்தும், நூலகத்திலுள்ள ஒளி நாடாக்களில் தாம் உள்ளன. யாரும் அவற்றைப் பார்ப்பதில்லை. இந்த க்ஷணத்தில் ஆயிரக்கணக்கான அலைவரிசைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஏழு நூறு கோடி மனங்களில் நூறாயிரம் கோடி எண்ணங்கள் வெளியாகின்றன. அனைத்தும் அடுத்த க்ஷணம் போய் விடுகின்றன. விழித்தெழுந்து படைப்பின் பேராற்றலை காண்கின்றீர்களா? நூறு கோடிக்கணக்கான கிரகங்கள் நூறுகோடிக் கணக்கான நட்சத்திரங்கள் உள்ள பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் ஒரு மிகச் சின்னஞ்சிறிய  சூரிய மண்டலத்தில் உள்ளோம்.

பண்டைய காலத்தில்,அனந்த வை லோக" எண்ணிக் கணக்கிட முடியாத அளவுக்கு எண்ணிலடங்கா உலகங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய பேரளவு மனதை திடுக்கிட வைத்து நிகழ் காலத்திற்கு அழைத்து வருகின்றது. எது நிகழ்ந்து கொண்டிருக்கின்றதோ அதுவே சரி மற்றவை அனைத்தும் விளையாட்டு. அதுதான் அஷ்ட வக்கிர கீதையின் சாரம்.  எல்லாமே கடலின் அலைகள் போன்றவைஎப்போதாவது கடலின் அலைகளைக் கணக்கிட முடிந்திருக்கின்றதா? கடலில் கரையில் மட்டுமின்றி  அனைத்துப் பகுதிகளிலும் அலைகள் உள்ளன. இந்த க்ஷணத்தில் எத்தனை அலைகள் என்பது ஒரு புறம் இருக்கட்டும், படைப்பின் துவக்கத்திலிருந்து எத்தனை அலைகள் எழுந்துள்ளனஅது போன்று தனிச் சிறப்புக்குறிய இவையனைத்தும் விழிப்புணர்வு என்னும் மாபெரும் கடலில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, இப்பெருங்கடலே சத் சித் ஆனந்தா.

குருதேவ், பிரம்மா படைப்பவர், விஷ்ணு காப்பவர் சிவா கரைப்பவர் என்பதானால், யார் மறைந்திருப்பவர்? யார் ஆசீர்வதிப்பவர்?

குருதேவ்:  ஐந்து செயல்களும் ஒரே கடவுளிடம் உள்ளது. அனைவரும் ஆசீர்வதிக்கின்றனர், நீங்கள் என்ன பெயரிட்டு அவரை அழைக்கின்றீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. கடவுள் இவ்வுலகனைத்தையும் காக்கின்றார். நாம் விரும்புவதெல்லாம் என்னவென்றால், அவர் அதை இன்னும் சற்றே வெளிப்படையாக்கினால் உங்கள் கவலைகளில் இருந்து விடுபடுவீர்கள் என்பது தான்.

குருதேவ், குண்டலினி சக்தி என்பது என்ன? காலி மற்றும் வெற்றிட தியானத்தின் போது அது எழுந்தால் என்ன ஆகும்?

குருதேவ்: குண்ட என்றால் மண்பானை. குண்டலினி என்பது பானையில் ஏற்படும் சக்தி. உடல் பானைக்கு ஒப்பானது. உடலின் சக்தி எழும்போது, பல அவதாரங்களை எடுக்கின்றது. பல்வேறு விதமான உணர்ச்சிகளும் ஒரு அழகான சக்தியின் வெளிப்பாடு ஆகும். ஒரே சக்தி உடலின் பல பாகங்களில் அவதரிக்கின்றது. முதுகுத் தண்டின் கீழ் பகுதியில் அது சோம்பல் மற்றும் உற்சாகம். சற்று மேலேறி, அது படைப்பாற்றல் (பாலுணர்வு) ஆகின்றது. அதற்கும் சற்று மேலே, அச்சக்தி மகிழ்ச்சி அல்லது தயாளம் அல்லது பொறாமை ஆக அவதரிக்கின்றது. இதயப் பகுதிக்குச் செல்லும்போது அன்பு, பயம் அல்லது வெறுப்பு எனத் தோன்றுகின்றது. பின்னர் தொண்டையில் அந்த சக்தி துக்கம் அல்லது நன்றியுணர்வு என வெளிப்படுகின்றது.