கச்சிதமின்மையை கச்சிதமாய் ஏற்றுகொள்ளுங்கள்

ஆகஸ்ட் 30, 2013 பெங்களூரு, இந்தியா

கே: இடைவிடாது குற்றச்சாட்டுக்கு ஆளாகும் போது என்ன செய்வது, குறிப்பாக நமக்கு மிகவும் நெருங்கியவரிடமிருந்து வரும் போது?

குருதேவ்: இடைவிடாது வரும் போது அது பழகிவிடும் (சிரிப்பு). எனவே அதைப் பற்றி கவலை வேண்டாம். யாராவது தொடர்ந்து குற்றம் சாற்றிக் கொண்டிருந்தால், அதை பொருட்படுத்த வேண்டாம்.

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை குறை கூறிக் கொண்டே இருக்கும் போது, குழந்தைகள் அதை கண்டு கொள்வதை நிறுத்தி விடுவது அடிக்கடி நடக்கிறது. இது ஏனென்றால் தங்கள் அம்மா இப்படி தான் தினமும் செய்யப் போகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, சரி தானே?

பிரச்சினை எப்போதென்றால், எந்தக் குறையும் சொல்லாதவர் திடீரென்று குறை சொல்லும் போது தான். எப்போதும் முரட்டுத்தனம் காட்டாதவர், திடீரென்று முரட்டுத்தனமாய் ஆகும் போது, அது உங்களை அதிகம் பாதிக்கிறது, இல்லையா?

பிரச்சினையை நிரந்தரமாக ஆக்கிவிடுகிறீர்கள் அல்லது நடப்பதை சமாளிக்கும் திறன் இருப்பதில்லை. இந்த இரண்டு மட்டும் தான். எனவே சூழ்நிலைகளை திறமையாய் சமாளித்து அது நிரந்தரமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  சற்று கச்சிதமாய் இல்லாமலிருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. மற்றவர்களுடைய கச்சிதமின்மையையும் உங்களுடைய கச்சிதமின்மையையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். பிறருடைய கச்சிதமின்மையை ஏற்றுக் கொள்ள முடியாத போது கோபம் வருகிறது. உங்களுடைய கச்சிதமின்மையை ஏற்றுக் கொள்ள முடியாத போது குற்ற உணர்வும் உங்கள் மீதே கோபமும் வருகிறது. இந்த இரண்டு நிலைகளுமே உங்களுக்கு ஆரோக்கியமானதும் உகந்ததும் அல்ல. எனவே, வாழ்க்கையில் கச்சிதமின்மைக்கு சற்று இடம் கொடுத்து, மேலே செல்லுங்கள். இறந்தகாலத்தில் சிக்கி நிற்காதீர்கள்.

கே: குருதேவ், ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனருக்கு தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை அளித்தார். நீங்கள் உங்களுடைய விஸ்வரூப தரிசனத்தை எப்போது யாருக்குக் காண்பிக்கப் போகிறீர்கள்?

குருதேவ்: இந்த முழு படைப்பும் பகவானின் வடிவம். இதுதான் விஸ்வரூப தரிசனம் என்பதின் பொருள். அப்படியென்றால், ஒரு பகவானை உங்களை சுற்றி உள்ள எல்லாவற்றிலும் காண்பது, அது ஆறோ, மலையோ, கற்களோ, மக்களோ அல்லது விலங்குகளோ.

அன்பே இறைவன். இந்தப் பார்வையை நீங்கள் முதலில் கைக்கொண்டாக வேண்டும், அப்போது தான் இறைவனின் பிரபஞ்ச வடிவை உங்களால் உணர முடியும். இந்த உலகைப் பார்க்கும் குறுகிய பார்வை உதவாது. ஏனென்றால், ‘ஓ, இவர் அப்படி, அவர் அப்படி’, என்று நீங்கள் எண்ணிக கொண்டிருக்கிறீர்கள். உங்கள் பார்வை வேட்கைகளாலும், துவேஷங்களாலும் மங்கலாகி இருக்கும் போது உங்களால் இறைவனின் பிரபஞ்ச வடிவை உணர முடியாது. முதலில் நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றிணைக்கும் அன்புப் பார்வையை நீங்கள் கைக்கொள்ள வேண்டும், எப்படியும் அதை நான் உங்களுக்கு அளித்து வருகிறேன். இது உங்களுக்கு கைவந்தால் இறைவைனின் விஸ்வரூப வடிவை நீங்கள் தானாக பார்ப்பீர்கள்.

கே: குருதேவ், மனிதப் பிறவி மிக உன்னதமானது மற்றும் 84 இலட்சம் யோனிகளைக் (பிறவிகள் அல்லதி மெய்யுடல் எடுப்பது) கடந்த பின்னர் தான் இந்தப் பிறவி கிடைக்கிறது என்று சொல்கிறீர்கள். ஆனால் இன்றைய மனிதர்கள், அதிகாலையில் எழ வேண்டியிருக்கிறது, புற நகர ரயிலிலோ அல்லது இரு சக்கர வாகனத்திலோ அலுவலகத்திற்கு அவசரமாய்ச் சென்று, பல பிரச்சினைகளை சந்தித்து, முழுதும் களைப்படைந்தே வீட்டிற்கு வந்து தூங்க வேண்டியிருக்கிறது. சில சமயம் மன அழுத்தத்தில் தூக்கம் கூட வருவதில்லை. இந்தப் பாடு படுவதற்கு ஏன் 84 இலட்சம் யோனிகளைக் கடந்து வர வேண்டும் என்று நினைக்கிறேன்.

குருதேவ்: இது ஒரு நல்ல சிந்தனை. ஹிந்தியில் ஒரு பழமொழி இருக்கிறது: ‘அஜ்கர் கரே நா சாக்ரி, பண்ச்சி கரே நா காம். தாஸ் மலுகா கே கையே, சப்கா டாட்டா ராம்’ (இறைவன் எல்லோருக்கும் அளிப்பதால், ஒருவர் எதற்கும் எந்த முனைப்பும் செய்ய வேண்டாம்)

எல்லோருக்கும் எல்லாவற்றையும் அளிப்பது இறைவன் என்ற நம்பிக்கை ஒருவருக்கு இருந்தால், என்ன வந்தாலும் சரி நீங்கள் உங்கள் உற்சாகத்தை இழக்கவே மாட்டீர்கள். நீங்கள் அலுவலகம் செல்லும் போதோ அல்லது புற நகர ரயிலில் செல்லும் போதோ, உங்களைச் சுற்றிப் பாருங்கள், தன் தினசரி கடமைகளிடையே அவ்வளவு நல்ல நேர்மறையான எண்ணங்களை கொண்ட நல்லவர்கள் இருக்கிறார்கள்.

அதைப் பற்றி கவலைப்படுவதினால் எந்த வேலையும் முடிந்துவிடாது. அறிவுபூர்வமான எண்ணங்களாலும் புத்திசாலிதனமான செயல்களாலுமே முடிக்கப்படுகிறது. அதற்கு உங்கள் மனம் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்க வேண்டும். வேலையில் அவ்வ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது அந்த அமைதியையும் ஆனந்தத்தையும் ஏற்படுத்துவது எப்படி? எனக்குத் தேவையான எல்லாவற்றையும் அளிப்பதற்கும் பார்த்து கொள்ளவும் இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கை வைப்பதின் மூலம்.

நீங்கள் விரும்புவதெல்லாம் நிறைவேறுகிறது என்று உங்களில் எத்தனை பேர் உணர்கிறீர்கள்? (அவையிலிருக்கும் பல அடியவர்கள் கைகளை உயர்த்துகிறார்கள்).

கே: என்னால் எதையும் இடைவிடாமல் செய்ய முடிவதில்லை. இந்த குணத்தை நான் எப்படி வளர்த்துக்கொள்வது?

குருதேவ்: இதை நீங்களாகவே உணர வேண்டும். எப்படி உங்களால் எதையுமே இடைவிடாமல் செய்ய முடியவில்லை என்று கூறுகிறீர்கள்? உங்களை நீங்களே ஏன் அப்படி முத்திரை குத்திக் கொள்கிறீர்கள்?முதலில் உங்களை நீங்களே உண்மையாக அறியவில்லை என்பதை ஒத்துக் கொள்ளுங்கள். உங்களையே உங்களுக்குத் தெரியாத போது, உங்களுள் இருக்கும் நீங்கள் செய்யக்கூடிய திறன் உங்களுக்குத் தெரியாது.

எத்தனை விஷயங்கள் உங்களால் செய்யமுடியும் என்பதைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியவில்லை. எனவே முதலில் நீங்கள், ’என்னால் இதை இடைவிடாமல் செய்ய முடியாது’ என்ற முத்திரையை நீக்குங்கள். அது இறந்த காலம். இப்போது நீங்கள் வேறு. ஒவ்வொரு கணமும் நீங்கள் புதியவர், முன்பு எப்படி இருந்தீர்களோ அதிலிருந்து வேறானவர்.

நம் வாழ்கை ஒரு நதி போன்றது. ஒரே தண்ணீரில் இரு முறை இறங்க முடியாது. எனவே வாழ்கை என்பது ஒரே நேரத்தில் புதிதானது மற்றும் புராதனமானது. உங்கள் பேருணர்வு கற்களைவிட, நதிகளை விட, மலைகளை விட, பிரபஞ்சத்தில் உள்ள மற்ற எவற்றையும் விட பழமையானது. உண்மையில், அது மிகவும் பழமையானது. சூரியனைப் போல அவ்வளவு பழமையானது; சூரியனின் வயது 1900 கோடி வருடங்கள். ஆனாலும் சூரியனின் கிரணங்கள் ஒவ்வொரு தினமும் புத்தம் புதிது. அதே கிரணங்களை அடுத்த நாள் பார்க்கவே முடியாது.

கே: என் வாழ்கையின் முழு வீச்சையும் எப்படி வாழ்வது?

குருதேவ்: மிகச் சரியாக இதை தான் நீங்கள் இங்கு (வாழும் கலையில்) கற்றுக் கொள்கிறீர்கள். வாழ்க்கையில் உள்ள எதிரெதிர் விஷயங்களுக்கு இடமளிக்கும் திறன்: செயலில் ஓய்வு. எல்லா நேரமும் இயங்கிக் கொண்டிருந்தால் அது வேலைக்காகாது. ஓய்வு மட்டுமே எடுப்பதும் வேலை செய்யாது. இரண்டிற்கும் இடமளிக்க வேண்டும். புரிந்ததா? அதைப் போலவே குதூகலமாய் இருப்பது பிடித்து அதை மட்டுமே எப்போதும் செய்து கொண்டிருக்க முடியாது. எப்போதும் தீவிரமாய் இருக்கவும் முடியாது. குதூகலமும் வேண்டும் தீவிரமும் வேண்டும்.

அதைப் போலவே நீங்கள் உணர்வு பூர்வமாகவும் இருக்க வேண்டும் காரண பூர்வமாகவும் இருக்க வேண்டும். உணர்வு பூர்வமாக இருப்பவர்கள் காரண பூர்வமாய் இருப்பதில்லை, காரண பூர்வமாய் இருப்பவர்கள் உணர்வு பூர்வமாய் இருப்பதில்லை. உங்களுக்கு இரண்டும் வேண்டும். நீங்கள் நேரடியாக இருக்க வேண்டும் அதே நேரம் மென்மையாகவும் இருக்க வேண்டும். நேரடியாக இருப்பவர்கள் தங்களை முரட்டுத்தனமாய் இருப்பதாக அடிக்கடி முத்திரை குத்தப்படுவதை காண்பார்கள், மென்மையாக இருப்பவர்கள் தாங்கள் பலவீனமானவராக கருதப்படுவதை பலமுறை காண்பார்கள். இந்த இரண்டின் கலவை தேவைப்படுகிறது; நேரடியாகவும் மென்மையாகவும்.

கே: குருதேவ், ஸ்ரீ கிருஷ்ண பகவான் புருஷோத்தம யோகா வில் (உச்ச நிலை புருஷரின் யோகம்) க்ஷரா, அக்ஷரா மற்றும் உத்தம புருஷர் என்று மூன்று வகை புருஷர்களை அல்லது ஜீவன்களைப் பற்றி கூறுகிறார். இதைப் பற்றி சற்று கூறுங்களேன்.

குருதேவ்: க்ஷரா என்றால் மாறிகொண்டேயிருப்பது. முழு உலகமும் அதில் உள்ள அனைத்தும் மாறிக் கொண்டேயிருக்கிறது. எனவே இடைவிடாமல் மாறிக் கொண்டேயிருப்பது ஒரு வகை புருஷர் (மனிதர் அல்லது ஜீவன்).
உங்களுக்குள் சற்றே உற்று நோக்கினால், பலபல எண்ணங்கள் உங்களுக்குள் எழுவதையும், பலபல உணர்வுகள் உங்களுக்குள் ஏற்படுவதையும் காணலாம். உங்கள் உடல், உங்கள் எண்ணங்கள் மற்றும்  உணர்வுகள், இவை அனைத்தும் இடைவிடாமல் மாறிய வண்ணம் இருக்கின்றன. எது மாறாமலிருக்கிறதோ அது அக்ஷரா எனப்படுகிறது. இருப்பதிலேயே மிகச் சூக்ஷுமமானதும், அடிப்படைத் தத்துவமானதும் மற்றும் இவை இரண்டிற்கும் அப்பாற்பட்டதை பரம-புருஷர் என ஆழைக்கிறோம்.

கே: குருதேவ், நம்முடைய முன்னோர்கள் நம் புனித நூல்கள் எந்த ஒரு இடத்திற்கும் காலத்திற்கும் மட்டும் பொருந்துமாறு அனுமதிக்கவில்லை என்று கூறியிருக்கிறீர்கள். அப்படியென்றால், இந்தப் புனித நூல்கள் நம் முன்னோர்களான மேதைகள் எழுதிய கதைகள் தானா அல்லது அவை உண்மையான வாழ்கை நிகழ்வுகளா?

குருதேவ்: அவை அனைத்தும் உண்மையான நிகழ்வுகளே. ஆனாலும், அவற்றை எழுதும்போது அந்த விளக்கங்கள் எந்த ஒரு இடத்திற்கும் காலத்திற்கும் மட்டும் பொருந்திவிடுமாறு அனுமதிக்கவில்லை. இதுதான் நம் புனித நூல்களின் சிறப்பு.

ஒருவரை எல்லா காலத்திற்கும் எல்லா இடத்திற்கும் பொருத்தமான கவிதைகளை எழுதுமாறு சொல்வது போன்றது இது. தீபாவளி, ஹோலி போன்ற ஒரு குறிப்பிட்ட விழாவைப் பற்றியோ அல்லது ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப்பற்றியோ நீங்கள் ஒரு கவிதை எழுதினால் அந்த நிகழ்வின் போது மட்டுமே அதைப் பாட முடியும். ஹோலிக்கான பாட்டை மற்ற எந்த பண்டிகையின் போதும் பாட முடியாது அல்லவா? அப்படிப்பட்ட பாடல்கள் ஒரு சிறப்பான நிகழ்விற்காக அல்லது அந்த கால கட்டதிற்காக மட்டுமே.
ஆனால் சில பாடல்கள் எந்த காலத்திலும் பாட உகந்தவையாக இருக்கும். எனவே நம்முடைய புனித நூல்கள் எந்த காலத்திற்கும் எந்த இடத்திற்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு அவற்றை இயற்றினர்.

கே: குருதேவ், ‘இருக்கும் குழப்பங்களுக்கிடையேயும் உங்களுக்குள்ளே இருக்கின்ற அந்த நிர்சலனத்தொடு கொண்டாடுங்கள். ஆழ்ந்த ஓய்வில் சின்னஞ்சிறு கிருஷ்ணரை எழுப்புங்கள், ஏனென்றால் நாம் தீவிரமாக, விகடமாக இருக்க வேண்டிய நேரம் இது! ஞானத்தை விளையாட்டாக கற்றுக்கொள்ளுங்கள்’, என்று டிவிட்டர் மூலம் கூறியுள்ளீர்கள். இதைப் பற்றப் பேசுங்களேன்.

குருதேவ்: ஆம், வெளியே இருக்கும் அத்தனை குழப்பங்களுக்கிடையே உங்களுக்குள்ளே உள்ள அந்த நிர்சலனத்தோடு கொண்டாடுங்கள். எனவே வெளியே குழப்பங்கள் இருக்கும் போது உள்ளே நிர்சலனதைக் காணுங்கள்.
ஞானம் என்பது உங்கள் தலை மேல் உள்ள பாரமாய் இருக்கக் கூடாது. அது வெகு இயல்பாக இருக்க வேண்டும். ஞானத்தைக் கொண்டு நீங்கள் சற்று விளையாட்டாக மாற வேண்டும். புரிந்ததா?

கே: நான் மிகவும் அன்பும் மரியாதையும் வைத்திருப்பவரின் முன்னே புத்திசாலித்தனமாய் இருக்க முடியவில்லை. இதனால் நான் பல முட்டாள்தனமானவற்றை செய்கிறேன். நான் என்ன செய்வது?

குருதேவ்: பரவாயில்லை, கவலை வேண்டாம். முட்டாள்தனமாக நடப்பதில்கூட ஒரு அழகு இருக்கிறது. அது கூட மக்களை கவர்கிறது.
சில நேரங்களில் தன்னுடைய நடவடிக்கையால் ஒரு முட்டாள் தரும் சந்தோஷத்தையும் வியப்பையும் ஒரு புத்திசாலியால் கூடத் தர முடியாது.

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாள் (ஜன்மாஷ்டமி)

ஆகஸ்ட் 28, 2013 – பெங்களுரு - இந்தியா



நம்முள் திறனாற்றல் மலரும் போது தோன்றுவது தான் யோகா.யோக கர்மாசு கௌசலம்' என்று கூறப்பட்டுள்ளது. நாம் ஒரு செயலை செய்யும் போது அரை மனதுடன்,' இது நடக்குமா நடக்காதா?' இதை அரை குறையாக செய்திருக்கிறோமோ?' இதை முடிக்க வெகு நேரமாகுமோ' என்றெல்லாம் எண்ணிக் கொண்டு செய்யக் கூடாது. ஒன்றை செய்ய வேண்டும் என்று நினைத்தால் செய்யுங்கள். நினைத்த மாத்திரத்திலேயே சில காரியங்கள் நடக்கும்.அது தான்  சித்தி என்பது. அது ஒரு அபூர்வமான திறன். மனித வாழ்க்கையில் அத்தகைய சித்தியை அடைய வேண்டும் என்று குறிக்கோளாக கொள்ள வேண்டுமேயன்றி, சிற்றின்பங்களையும், பொருள் சேர்ப்பதையும் இலக்காக கொள்ளகூடாது.

இந்தியாவில் ராமாயணம், மகாபாரதம் போன்ற பெருங்காப்பியங்கள் நீக்கி விட்டால், இந்தியாவே இல்லை. நமது நாட்டின் இரு கண்களை போன்ற இந்தக் காப்பியங்கள் ஒருங்கிணைந்து இதிகாசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்தையோ கருத்துப் பள்ளியையோ சார்ந்தவை அல்ல. அவை நமது பண்பாடு மற்றும் பாரம்பரியத்துடன் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளவை. நம் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ராமாயணமும், மகாபாரதமும் படிக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. இவற்றின் முக்கியத்துவம் என்னவென்றால், அவை ஏதோ ஒரு காலத்தில் நடந்து முடிந்தவற்றையோ அல்லது இனி நடைபெற முடியாதவற்றையோ குறிப்பிடுவன  அல்ல. இந்த இரு காப்பியங்களும் உயிருள்ளவை, அவை இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொருவருடைய வாழ்விலும் தினந்தோறும் மகாபாரத நிகழ்ச்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளவை ஒவ்வொரு நாளும் உண்மையாக உணரப்படுகின்றன.

கிருஷ்ண பகவானின் பிறந்த நாள் ஜன்மாஷ்டமியாகக் கொண்டாட படுகின்றது. கிருஷ்ண பகவான் என்று குறிப்பிடப்படுவது ஆனந்தம் (பேரானந்தம், தூய மகிழ்வு). எந்தக் கொண்டாட்டத்திலும் நாம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றோம்.ஜன்மாஷ்டமி என்பது பேரானந்தத்தின் பிறப்பைக் குறிப்பதாகும். இந்த நாளில் தான் தெய்வீக ஆனந்தம் வெளிப்படுத்தப்பட்டது. உண்மையில் பிறப்பு என்னும் சொல் கூடச் சரியல்ல. கிருஷ்ண பகவானுக்கு பிறப்பு என்பது கிடையாது. பேரானந்தம் எப்போதுமே இருக்கின்றது. அது (கிருஷ்ண பகவான் உருவில்) வெளிப்படுத்தப்பட்டு தெளிவாக தெரிந்தது இந்த நாளில் தான். நாம் கிருஷ்ணரை எங்கு தேட வேண்டும்? எங்கிலும்! ஒருவன், எல்லோரிடத்திலும் என்னை காண்கிறானோ மற்றும் என்னிடத்தில் எல்லோரையும் காண்கின்றானோ, அவனே புத்திசாலி. இவ்வுலகில் யாருமே முட்டாளாக இருக்க விரும்புவதில்லை. எல்லோருமே புத்திசாலியாக இருக்கவே விரும்புகின்றார்கள். யார் பரமாத்மாவை (எங்கும் நிறை பரப்ரம்ம விழிப்புணர்வு) படைப்பின் வெளிப்பாடுகள் அனைத்திலும் காணப்படும் ஆனந்த தத்வம் (பேரானந்தம்) என்று அறிகின்றானோ அவனே புத்திசாலி. இதுதான் ஜன்மாஷ்டமியின் சிறப்புச் செய்தி. இதற்கு ஒருவனுக்கு என்ன தேவை? குழந்தை போன்று களங்கமில்லாத மனம் வேண்டும்.போலேபவாமிலேரகுராய்’’ (களங்கமில்லாத தூய்மையான உணர்வுகளுடன் இறைவனை அடைதல்) என்று கூறப்பட்டுள்ளது.

இன்றைய ஞானச் செய்தி: நாம் கருத்தூன்றிக் கொண்டாடி மகிழ வேண்டிய காலம் வந்து விட்டது! (சிரிப்பு). நீங்கள் ஆழ்ந்த ஓய்வின் மூலம் தான் ஸ்ரீ கிருஷ்ணரை உணர முடியும். உங்கள் போராட்டங்கள், முயற்சிகள் மூலம் உணர முடியாது. எப்போது உங்களால் ஆழ்ந்த ஒய்வு எடுக்க முடியும்? எப்போது உங்கள் மனம் ஜுரவேக ஆசைகள்விருப்பங்கள், வெறுப்புகள் இவற்றால் அலைக்கழிக்கப்படாமல்அமைதியற்று இல்லாமல் உள்ள நிலை ஏற்படுகின்றதோ அப்போது தான் ஆழ்ந்த ஒய்வு உண்டாகும். அந்த கணங்களில் தான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பை (தெய்வீகப் பேரானந்தத்தை) காண முடியும்.

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பை ஆன்மீகக் கண்ணோட்டத்தில் காண வேண்டும். தேவகி (ஸ்ரீ கிருஷ்ணரின் தாய்) ஸ்தூல உடலைக் குறிப்பிடுவது. வசுதேவர் (ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தை) உயிர்ச்சக்தியை (ப்ராணா) குறிப்பிடுவது. உயிர்ச்சக்தி உடலில் பாய்ந்தோடும் போது ஆனந்தம் (ஸ்ரீ கிருஷ்ணரைக் குறிப்பது) பிறக்கின்றது. அந்த நேரத்தில், தான் என்னும் அகங்காரம் (கம்சன்-கிருஷ்ணரின் தாய் மாமன் மற்றும் தீய அரசன்) இந்த ஆனந்தத்தை அழிக்க முற்படுகின்றது. எங்கு மகிழ்ச்சி இருக்கின்றதோ அங்கு அகந்தை இருக்கமுடியாது. மகிழ்ச்சி நிறைந்த ஒருவன் யாரிடமும் தவறாக நடந்து கொள்ள மாட்டான். அப்படிப் பட்டவன் பிறருக்குத் தொல்லை தந்து அவர்களை துன்புறுத்த மாட்டான். பிறருக்கு துன்பம் தருபவன் ஏதோ ஒரு விதத்தில் தானே காயப்பட்டு வருந்திக் கொண்டிருப்பான். அப்படிப்பட்டவன் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு துன்பம் விளைவித்துக் கொண்டிருப்பான்.

அநீதியை அனுபவித்த ஒருவன் பிறரையும் அநீதியுடன் துன்புறுத்தி  கொண்டிருப்பான். நிறைவுடனும் மகிழ்வுடனும் உள்ள ஒருவன் எங்கும் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டான். பிறர் பொருளை அபகரிக்க மாட்டான். எனவே ஞானம், மகிழ்ச்சி மற்றும் அன்பு, இவை அகந்தையின் எதிரிகள். ஸ்ரீ கிருஷ்ணர் அன்பு மற்றும் ஆனந்தத்தின் குறியீடு. அன்பிருக்கும் இடத்தில் எவ்வாறு அகந்தை பிழைத்திருக்க முடியும்? அன்பு என்றால் அகந்தைக்கு பயம். வேறொன்றும் இல்லை. அன்புக்கு அகந்தை, தலை வணங்க வேண்டும். உலகில் எப்படிப் பட்ட வீர புருஷனும் தனது குழந்தையின் அன்புக்கு முன் கரைந்து விடுவான். மிகுந்த தைரியசாலி கூட தனது  குழந்தை உடல் நலமற்று இருந்தால், தன்னுடைய குழந்தை மீதுள்ள அன்பினால் கரைந்துருகி விடுவான். இயல்பாகவே கவலை மேலோங்கும். அன்பு, மகழ்ச்சி, இயல்புத்தன்மை எல்லாமே அகந்தையின் எதிரிகள். ஸ்ரீ கிருஷ்ணர் எதை குறிக்கிறார்? ஆனந்தம் மகிழ்ச்சி மற்றும் இயல்புத்தன்மை ஆகியவற்றின் குறியீடாகின்றார். பேரானந்தத்தின் மூலாதாரமும் அவரே.

அதனால் தான் அகந்தைக்கும் அன்புக்குமிடையே போர் ஏற்படும் போது அகந்தை கரைந்து, மறைந்து அன்பு உள்ளிருந்து மலருகின்றது. கம்சன் அகந்தையை குறிப்பிடுவது, அது இந்த உடல் பிறக்கும் போதே தோன்றி விடுகின்றது. தேவகி (இவ்வுடல்) கம்சனின் சகோதரி. ஸ்ரீகிருஷ்ணர் சிறைச் சாலையில் பிறக்கும் போது, சிறைக் காவலர்கள் அனைவரும் உறங்கி விட்டனர். மகிழ்வும் ஆனந்தமும் (ஸ்ரீகிருஷ்ணர்) இல்லாத போது  இந்த உடல் ஒரு சிறைச் சாலை போன்று தோன்றுகிறது. எப்போது அன்பு (ஸ்ரீகிருஷ்ணர்) சிறையில் (உடல்) தோன்றுகிறாரோ அப்போது அத்தனை புலன்களும் (சிறைக் காவலர்கள்) உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஐம்புலன்கள் (கண்கள், செவிகள், மூக்கு, நாக்கு மற்றும் தோல்) உடலின் காவலர்கள், எப்போதும் வெளியிலேயே இன்பத்தை தேடுபவை. உண்மையில் அவைகள் கம்சனின் (அகந்தை) காவலர்கள். ஒருவன் உள்நோக்கி, இன்பத்தின் மூலாதாரத்தை தேடி, அங்கு பிறக்கும் பேரின்பத்தை (ஸ்ரீகிருஷ்ணர்) காணும் போது, புலன்கள் உறங்கி விடுகின்றன. பிறந்தவுடன் ஸ்ரீ கிருஷ்ணர், ஆதரவு மற்றும் பாதுகாப்பு (கம்சனிடமிருந்து) இவற்றின் காரணமாக, வேறொரு இடத்திற்கு அழைத்து செல்லப் பட வேண்டியிருந்தது. எனவே விருந்தாவனத்தில் இருந்த நந்தா மற்றும் தேவி யசோதாவின் இல்லத்திற்கு சென்றார். இந்தக் கதைகளை நீங்கள் ஆழ்ந்து கவனித்து படித்தால், அவற்றிலுள்ள சிறந்த ஆன்மீகக் கருத்துக்களையும், பண்புகளையும் புரிந்து கொள்ளலாம். ராமாயணம் அல்லது மகாபாரதம், எதை எடுத்துக் கொண்டாலும்அதில் கூறப்பட்டுள்ள கதைகள் அல்லது நிகழ்வுகளின் முக்கியத்துவம் மற்றும் உள்ளுறை நீதிகள், குறிப்பிட்ட இடத்திற்கோ, அல்லது காலத்திற்கோ மட்டும் வரையறுக்க பட்டவை அல்ல.

கே: குருதேவ்! கிருஷ்ண பகவான் எதற்காக மயில் இறகை தன் கிரீடத்தில் வைத்திருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? 

குருதேவ்: உங்களில் எவ்வளவு பேருக்கு இதன் பின் உள்ள ரகசியம் தெரியாது. கிருஷ்ண பகவான் எப்போதும் நேராக நிற்பதோ நடப்பதோ கிடையாது. ஒரு கால் தரையில் முழுவதுமாக ஊன்றியிருக்கும், மற்றொரு கால் சற்று மேலாக நுனிக்கால் மட்டும் தரையை தொட்டவாறு இருக்கும், அவர் அப்படித் தான் நின்றிருப்பார் ஆனால் நேராக பார்த்துப் பேசுவார். எதற்காக மயிலிறகு கிரீடத்தின் மேல் உள்ளது. பொதுவாக கிரிடம் மிகவும் பளுவானது. அது அதிக பொறுப்புகளை குறியிட்டு காட்டுகிறது. கிரீடம் அணியும் ஒருவர் இந்த முழு சமுதாயத்திற்கு பொறுப்பானவர். எனவே கிரீடம் அணிந்திருப்பவருக்கு அது மிகப்பெரிய சுமை ஆகும். சமுதாயத்தில் ஏதாவது தவறாக நடந்து விட்டால் நீங்கள் யாரை அதற்கு பொறுப்பாக்குகிறீர்கள்?.

நீங்கள் அரசரை இந்த சமுதாயத்திற்கு பொறுப்பாக்குகிறீர்கள் இல்லையா? அரசரின் தலையில் உள்ள கிரீடம் அந்த பொறுப்பின் சுமையை எடுத்துக் காட்டுகிறது. ஆனால் நீங்கள் அந்த பொறுப்புகளையும் கடமைகளையும், மயிலிறகைப் போல லேசாகவும் அதிக முயற்சியின்றியும் செய்யும் போது உங்களுக்கு அந்த சுமை தெரியாது. மயிலிறகை கிரீடத்தின் மேல் வைத்திருப்பதன் அர்த்தம் இதுவே. பலவிதமான பொறுப்புகளையும் எவ்வித சுமையும் இன்றி தாங்கிக் கொள்ளுவதையே இது குறியிட்டுக் காட்டுகிறது.
 
இறைவன் எப்போதுமே அவருடைய படைப்புகளை அவருக்கு ஒரு சுமையாக எண்ணுவது  கிடையாது. ஒரு தாயும் எப்போதும் தன்னுடைய குழந்தைகளை ஒரு சுமையாக எண்ணுவது இல்லை. அது போலவே தான் யோகேஸ்வரர் (யோகிகளுள் சிறந்தவர்) என்று அழைக்கப்படும் கிருஷ்ண பகவானும் எப்போதுமே பொறுப்புகளை சுமையாக எண்ணுவது இல்லை. ஒவ்வொரு பொறுப்புமே லேசானவையும் சுலபாமானவையும் ஆகும். அதனால் தான் அவருடைய கிரீடம் ஒரு மயிலிறகால் அழகுபடுத்தப்பட்டுள்ளது. மயிலிறகு பல வண்ணங்களை கொண்டிருப்பது போல் அவரும் பல பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் அவை அவருக்கு ஒரு சுமையே அல்ல. அவை யாவுமே ஒரு விளையாட்டாக தோற்றமளிக்கின்றன.

கிருஷ்ண பகவானின் பல பெயர்களுள் ஒன்று வெண்ணெய் திருடன் என்பது. நமக்கு பாலில் இருந்து தயிரும், தயிரில் இருந்து வெண்ணெயும் கிடைக்கின்றன. பால் திரவ வடிவானது. ஊட்டச்சத்து மிக்கது. அதிலிருந்து நமக்கு சற்று கெட்டியான தூய்மை படுத்தப்பட்ட தயிர் கிடைக்கிறது. தயிரை கடைவதன் மூலம் நமக்கு வெண்ணெய் கிடைக்கிறது. வெண்ணெய் திரண்டு வரும் போது அது நீரின் மேற்புறத்தில் மிதக்கின்றது. பாத்திரத்தின் அடிப்பகுதிக்கு மூழ்கி செல்வது இல்லை. எனவே அது மிகவும் லேசானது மற்றும் ஊட்டச்சத்து மிக்கது ஆகும். நமது அறிவாற்றலும் வெண்ணெய் போலவே  தூய்மைப்படுத்தப்படும்போதும் முதிர்ச்சியடையும் போதும், நாம் அறிவாற்றலில் மலரும் போதும் 'ஸ்திதப்ராஜ்னா' (எப்போதும் அமைதியான மன நிலையில் இருப்பவர்) ஆகிறோம். ஆனால் மிக அமைதியாக இருக்கின்ற ஒருவரின் மனதையும் இதயத்தையும் கூட திருடக் கூடிய ஒருவர் கிருஷ்ண பகவானே. கிருஷ்ண பகவான் சுத்தமான ஈர்ப்புடையவர். மிகவும் அறிவாற்றலும் புத்தி கூர்மையும் உள்ளவர்களையும் கூட ஈர்க்கக்கூடிய மற்றும் கவரக் கூடிய திறமை உள்ளவர் கிருஷ்ண பகவான் ஒருவரே. சிறிதும் உணர்ச்சி வசப்படாத மற்றும் பற்றற்ற முனிவர்களையும் கூட கவரக் கூடியவர் கிருஷ்ண பகவான். 

அறிவாற்றலில் வெண்ணெய் போல பழுத்த நிலையில் உள்ளவர் ஒரு புத்திசாதுரியம் மிக்க முனிவர் ஆவார். கிருஷ்ண பகவான் அத்தகையவரின் மனதையும் இதயத்தையும் கவரக் கூடியவர் ஆவார். அதனால் தான் அவர் வெண்ணெய் திருடன் என்று அழைக்க படுகிறார். கிருஷ்ண பகவான் மட்டுமே, சிறிதும் உணர்சிவயப்படாத அறிவார்ந்தவர்களின் இதயத்தையும் உருக்கி அவர்கள் மனதையும் கிண்டக்கூடியவர். அதை அவரால் எப்படி செய்ய முடிகிறது? அன்பு செலுத்துவதன் மூலமாகவே. 
                                 
சரி, நீங்கள் அனைவரும் இப்போது 'க' என்ற எழுத்தை 'அ' என்ற ஒலியை சேர்க்காது உச்சரிக்க முயற்சி செய்யவும்.(கூட்டத்தில் இருப்பவர்கள் முயற்சி செய்து பின்னர் விட்டு விடுகிறார்கள்) நீங்கள் எவ்வளவு தான் முயன்றாலும் உங்களால் முடியவில்லை அல்லவா? அவ்வாறு செய்ய முடியுமா? கண்டிப்பாக முடியாது. 'க' என்று சொல்ல முயலும் போதே நாம் அந்த  ஒலி  எங்கு தோன்றுகிறதோ அந்த இடத்திற்கு அழைத்து செல்லப்படுகிறோம். அதுவே பிரம்மன் என்கின்ற தொடக்கம். ஒலியும் சப்தமும் திரும்ப செலுத்தப்படுகின்ற இடமே அது. ஏனென்றால் பிரம்மன் அல்லது ஆத்ம தத்துவத்தை (அனைத்து படைப்புகளிலும் பரவி இருக்கும் அடிப்படையான மூலம் போன்ற ஆன்மா) சப்தம் அல்லது வார்த்தைகள் மூலம் அடைய முடியாது.

பிரம்ம வெளியில் உதறல் எடுக்கும் மனம் கூட ஒய்வு கொள்ளுகிறது. அங்கு ஒலியோ குரலோ இல்லை. ஆழ்ந்த அமைதி பெற்ற ஒரு நிலை. அந்த நிலையில் ஒருவர் ஆழ்ந்த  தியானத்திற்கு சென்று விடுவார். நீங்கள் உங்களுள் ஒருவராகி விடுவீர்கள். எனவே 'அ' ஒலியில்லாமல் 'க' என உச்சரிக்க முயற்சி செய்வதே ஒரு தியானம் போன்றது. நீங்கள் அனைவரும் இதை படுக்கச் செல்லுவதற்கு முன்போ அல்லது காலையில் படுக்கையில் இருந்து எழுந்த உடனோ அல்லது பகலில் எதாவது ஒரு நேரத்திலோ முயற்சி செய்ய வேண்டும். அதை செய்ய முயன்று கொண்டிருக்கையில் உங்கள் மனம் மற்றும் புத்தியில் என்ன ஏற்படுகிறது என்பதை கவனிக்கவும்.மிக விரைவாக உங்களை சுற்றி அனைத்துமே அசையா நிலைக்கு வந்து விடுவதையும் ஒரு ஆழ்ந்த அமைதி ஏற்படுவதையும் காணலாம்.

அந்நிலையில் நீங்கள் வியப்பில் ஆழ்ந்து விடுவீர்கள். அழகிய பாமரத்தன்மையும் உங்களுக்குள் உதிக்கும். நீங்கள் சிறு வயதினராக இருந்த போது, கேட்கின்ற அனைத்து வார்த்தைகளையும் அப்பாவித்தனத்துடன் உச்சரிக்க  முயற்சி செய்து கொண்டே இருப்பீர்கள். நீங்கள் அத்தகைய நிலைக்கு திரும்புவதன் மூலமாக, வார்த்தைகள் மற்றும் ஒலிகள் எங்கு தோன்றினவோ அந்த மூலத்திற்கு அழைத்து   செல்லப்படுவீர்கள்.  

பகவத் கீதையில், கிருஷ்ண பகவான், " யோகா பற்றி ஆராய்ந்து அறியும் எண்ணம் உடைய ஒரு புத்திசாலி கூட இறுதியில் வார்த்தைகளுக்கு அப்பால் எல்லை கடந்து அவைகளுடைய மூலத்தை அடைகிறார்" என்று கூறுகிறார். உலகம் முழுவதும் உள்ள மக்கள் பலர் நம்முடன் இணைந்து ஆயிரக்கணக்கான வாழும் கலை மையங்களில் நடைபெறும் கொண்டாட்டங்களை பார்க்கின்றனர். இவ்வுலகில் நாம் னைவரும் ஒன்று சேர்ந்து ஜன்மாஷ்டமியை கொண்டாடுகிறோம். நாம் சமுதாயத்தில் இது போன்ற ஆனந்த அலைகளை ஏற்படுத்த வேண்டும். இது நம் அனைவருடைய கடமை ஆகும். 

கே: குருதேவ்! கிருஷ்ண பகவான், காலத்தை வென்று தொடக்கமும்,முடிவும் இல்லாமல் நிலைத்து நிற்பதன் பின் உள்ள ரகசியம் என்ன? காலம் வேகமாக சென்று கொண்டே இருக்கும் போது கூட கிருஷ்ண பகவான் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறார்.

குருதேவ்: ஆம், இது நீங்கள் உங்கள் மனதில் விரிவாக்க படுதிக்கொள்ளகூடிய ஒரு ரகசியம் ஆகும். இதை நீங்களே கண்டுபிடிக்க வேண்டும். உண்மையே நிலையானது. உண்மையே இறுதியில் வெற்றி பெறும். அது அழிக்க முடியாதது. அதனால் தான் கிருஷ்ண பகவான் 5100 ஆண்டுகளுக்கு பின்னும் வாழ்ந்து வருகிறார். இது ஏன் இப்படி? மக்கள் கிருஷ்ண பகவானை ஒரு போதும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கோ ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ உட்படுத்திக்கொள்ளவில்லை.

கிருஷ்ண பகவான் நிலையானவர் முடிவில்லாதவர் (சனாதன்). முதலும் முடிவும் இல்லாதவரே “சனாதன்” என அழைக்கப்படுவர். எப்போதும் நிலைத்திருப்பது மற்றும் காட்சியளிப்பது என்பதே அதன் பொருள். அது எங்கே தொடங்கியது என யாருக்கும் தெரியாது. கிருஷ்ண பகவான் கொடுத்தது அத்தகைய அறிவே.

கிருஷ்ண பகவான் அர்ஜுனனிடம் "நீயும் நானும் பல பிறவிகள் எடுத்துள்ளோம். நான் அவைகளை ஞாபகத்தில் வைத்துள்ளேன். ஆனால் நீ அவைகளை ஞாபகத்தில் வைத்திருக்கவில்லை. நாம் இருவருமே ஆரம்பமற்றவர்கள். நாம் எத்தனை முறை மனித வடிவம் கொண்டோம்? எத்தனை பிறவிகள் எடுத்தோம்? என்று யாருக்கும் தெரியாது. நாம் இவ்வுலகில் வந்துள்ளோம். நாம் இங்கிருந்து சென்று விடுவோம். நாம் மறுபடியும் வருவோம்". 

கே: குருதேவ், பகவத் கீதை 17ம் அத்தியாயம் 27வது ஸ்லோகத்தில் கிருஷ்ண பகவான் தான்தான் பரப்ரம்ஹதிற்கு மூல காரணம்(எங்கும் நிறைந்த உணர்வுகள்), மற்றும் அதன் இருப்பிடம் என்று சொல்லி இருக்கிறார் இது பல கல்வி மான்களிடையே குழப்பதை ஏற்படுவதாய் இருந்தது. ஆதி சங்கராச்சார்யா விற்கும் குழப்பதை ஏற்படுத்தியது. தயவு செய்து இது பற்றி சிறிது தெளிவுபடுத்தவும்

குருதேவ்: கிருஷ்ண பகவான் மூன்று வெவ்வேறு வழிகளில் ஞானத்தை கொடுத்தார். பிரத்ம்புருஷ் (பிரதாம்புருஷ்) (முதல்வர் என்று அர்த்தம்) மத்யம்புருஷ் (இரண்டாமவர் என்று அர்த்தம்) உத்தம் புருஷ் (அதாவது பற்றற்ற நிலையில் இருந்து பார்க்கும் மனிதராகவும்). அதனால் கிருஷ்ண பகவான் கடவுளை பற்றி பேசும்பொழுது "அவருடைய","அது","அவர்" என்றும், மற்றும் சில சமயங்களில் "நீ", "உன்னுடையது" என்றும், பல் வேறு சமயங்களில் பரமாத்மாவை பற்றி கூறும்பொழுது "நான்," "  என்னுடையது" என்றும் கூறுகிறார். 

அதனால் நாம் "தத்வமசி" (அதாவது " நீதான் அது") என்று கூறுகிறோம். மேலும் நாம்   சர்வகல்விதம் பிரம்மாசி" (அதாவது எல்லாமே பிரம்மா தான்) என்றும் கூறுகிறோம் .  தத்வமசி என்றால் "நீ தான் அது" என்று அர்த்தம். அந்த "அது" (ஆத்மா)  உன்னுள்ளேயே இருக்கிறது. மேலும் நாம் "அஹம் பிரம்மாஸ்மி" (அதாவது நானே தான் பிராமன்) என்றும் கூறுகிறோம். அதனால் சில சமயம் கிருஷ்ண பகவான் "வா , என்னிடம் வந்து சரணடை" என்று கூறுகிறார். வேறு சில சமயங்களில் "கடவுளிடம் சரணடை" என்று கூறுகிறார். இரண்டும் சரியானது தான். ஒரு குருவின் பணியே இந்த பாதையில் இருப்பவனை முன்னோக்கி அழைத்து செல்வது தான்.

தன்னுடைய விஸ்வரூப தரிசனத்திற்கு முன்பு கிருஷ்ண பகவான் அர்ஜுனனிடம் இவ்வாறு கூறுகிறார். "இஷ்வரம் சர்வ பூதானாம் ஹரித தேஷே அர்ஜுன திரிச்தடி ப்ரமையன் சர்வ பூதானி யந்த்ர உதாணி மையாய"

கிருஷ்ண பகவான் சொல்கிறார் "கடவுள் எல்லாருடைய இதயத்திலும் வசிக்கிறார்" என்று. பிறகு அர்ஜுனனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டிய பிறகு எல்லாமே அவருள் வசிப்பதை உணர்த்துகிறார். "எல்லாவற்றையும் துறந்து விட்டு என்னிடம் மட்டுமே வந்து சரணடை" என்கிறார். கீதைக்கு ஆயிரம் விளக்கங்கள் (தீகா) இருக்கின்றன. ஆனால் இவற்றில் முக்கியமான விஷயம் "உண்மை என்பது ஒன்று தான்" என்பதே. அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறும் மனித குலத்தின் அவசியத்திற்கு ஏற்றவாறும்

இதை பல்வேறு விதங்களில் விளக்கியிருக்கிறார்கள். கீதையில் ஆரம்பித்திலிருந்து கடைசி வரை முரண்பாடுகள் உள்ளன. அர்ஜுனன் கூட கிருஷ்ணனிடம் சொல்கிறார் "இந்த துன்பங்களிலிருந்து விடுபட ஒரே ஒரு நிச்சயமான வழி இருந்தால் கூறவும். பல்வேறு வழிகளை கேட்டு நான் மிக குழப்பத்தில் உள்ளேன். நீங்கள் ஒரு சமயம் ஒரு வழியும் அடுத்த சமயம் இன்னொரு வழியையும் கூறி என்னை மேலும் குழப்பத்தில் ஆழ்த்துகிறீர்கள். பகவத்  கீதை மட்டும் தான் ஒரு மனிதனை படிப்படியாக இறைவனை நோக்கி, நம் ஆன்மாவை நோக்கி செல்வதற்கான சிறந்த வழியை காட்டுகிறது.வேறு எந்த பாடமும் கீதைக்கு சரி சமமானது இல்லை. இத்தனை முரண்பாடுகளுக்கு இடையேயும் ஒருவனை அந்த அழியாத உண்மையை நோக்கி செல்ல உதவுகிறது.

கே: குருதேவ்! இராமாயணத்தில் இராவணன் சீதையை அபகரித்தான். மகாபாரதத்தில்  ருக்மணி தேவியை சிசுபாலனை மணக்கும்படி வற்புறுத்தும் போது கிருஷ்ண பகவான் ருக்மணி தேவியை அபகரிக்கிறார். கடவுள் கிருஷ்ணனாக அவதாரம் எடுத்தபொழுது இராவணன் சிசுபாலனாகவும், சீதா தேவி ருக்மணி தேவியாகவும் அவதாரம் பெற்றார்கள். கர்ம விதியின் சம்பந்தம் இதிலும் உள்ளதா ?

குருதேவ்: “கஹநோகர்மனோ கடித்” என்று சொல்வதுண்டு. அதாவது கர்மாவின் வழிகளை அளப்பது என்பது முடியாது. கர்மாவின் வழிகளும் வேகமும் மிகவும் மர்மமானது. அளக்க முடியாதது. ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாதது.

கே: குருதேவ்! ட்விட்டரில் "இந்த கால கட்டத்தில் நம்மை சுற்றி கணக்கற்ற துட்சாதனர்களும், சகுனிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய சரியான இடத்தை இந்த சமுதாயத்தில் காட்ட வேண்டும்” என்று எழுதியுள்ளீர்கள். யார் துட்சாதனர்கள்? யார் சகுனிகள்? அவர்களுக்கு உரிய சரியான இடம் எது?


குருதேவ்: ஊகிப்பதை உங்களிடமே விடுகிறேன். அனைத்து துட்சாதனர்களும் சகுனிகளும் இருக்க வேண்டிய இடம் கிருஷ்ணர் பிறந்த இடம் (சிறைச்சாலை) புரிந்ததா? சிறைச்சாலை தான் இவர்களுக்கு உரிய சரியான இடம். நீங்களும் அவ்வாறே நினைக்கிறீர்களா? 

பேரானந்தமே நம் இயல்பு


27 ஆகஸ்ட், 2013 - பெங்களூரு - இந்தியா 

கே: புத்த மதத்தினர் கடவுளை நம்புவதில்லை என்கிறார்கள். புத்தரும்  கூட, தெய்வச் சிலைகளை வழிபடக் கூடாது என்று கூறி இருக்கின்றார்.ஞான ஒளி அடைந்த அவர் இதன் மூலம் கூறும் கருத்து என்ன

குருதேவ்: கடவுளைப் பற்றி புத்தர் ஒருபோதும் கூறியதில்லை. கடவுளைப் பற்றிய எந்த விவாதத்திலும் அவர் ஒருநாளும் ஈடுபட்டதில்லை. அவர் கூறியது என்னவென்றால் : முதலில் துன்பம் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்பதே ஆகும். 


பலர் துன்பத்தை அனுபவிப்பதையே மறுத்து வந்தார்கள். பலர் அதை உணரவில்லை .பல சமயங்களில் நோயுற்ற ஒருவரிடம் கேட்டால், அவர், தான் மிக  நலமாக இருப்பதாகக் கூறுவார். தான் எனும் அகந்தை உள்ளவர், இன்னும் அதிகமாகவே, தனது உடல் நலக் குறைவை மறுப்பார்.

சிலர் உள்ளூரத் துன்பமாக இருப்பார்கள்.ஆனால் வெளியில் உற்சாகமாக இருப்பது போன்ற முகத்திரை அணிந்து, தன்னம்பிக்கையுடனும், சில சமயம் அதிகாரத் தோரணையுடனும் காணப் படுவார்கள்.எல்லாம் நன்றாக இருப்பது போன்று பாசாங்கு செய்வார்கள், ஆனால் அவர்கள் முகத்தில் வேதனை  சொட்டு வதைக்  காணலாம். அவர்தம் உடலின் ஒவ்வொரு பகுதியும் கோபம்,கசப்பு,வெறுப்பு, துன்பம் ஆகிய வற்றை வெளிப் படுத்துவதைக் காணலாம். இதைத் தான் புத்தர் கூறினார்: வாழ்வில் துன்பம் உள்ளது. அதை அறிந்து கொள்ளுங்கள். அதற்கு தீர்வுகள் உண்டு.யாராவது சோகமாக இருப்பது என்  இயல்பு என்று கூறினால் அதற்கு யாரும் எதுவும் செய்ய முடியாது; கடவுளே கூட எதுவும் செய்ய முடியாது. துன்பமாக இருப்பது என்பது நமது இயல்பு அல்ல. அது சம்ஸ்காரம் (முற்பிறவி எண்ணப் பதிவுகள்) அல்லது கர்மங்களினால் ஏற்படுவது.இதை மற்ற சம்ஸ்காரங்களினால் நீக்க முடியும்.அவற்றில் ஒன்று பிரத்யாஹாரா ( யோகாவின் எட்டு அங்கங்களில் ஒன்று அதாவது புலனுணர்வுகளைக் கட்டுப் படுத்தி, அவற்றை உள் நோக்கித் திருப்புதல்) மற்றொரு தீர்வு தியானம். எனவே தியானம், பிராணாயாமம் மற்றும் சத்சங்கத்தின் மூலம் நாம் துன்பங்களிலிருந்து விடுபடலாம்.அப்பொழுது, நாம் நமது உண்மையான இயல்பு மகிழ்ச்சி, பேரானந்தம் என்று புரிந்து கொள்கின்றோம். ஒளி இருளை விலக்குவது  போன்று நமது ஆத்மசக்தி (ஆத்மா என்னும் சக்திவாய்ந்த விழிப்புணர்வு) நமது துன்பங்களை விலக்குகின்றது. ஆன்மீகப் பயிற்சிகளின் வழியாக பயம், கோபம் ஆகிய எதிர்மறை எண்ணங்கள் மறைகின்றன. ஆன்மீகப் பயிற்சிகளின் நோக்கமே , நமது இயல்பாகிய விவரிக்க முடியாத  பேரானந்தத்தில் மூழ்குவதே ஆகும்.

உபநிஷதங்களில் கூறப்பட்டுள்ளவையே புத்தரும் கூறுகின்றார். அந்த செய்யுள் :
ந கர்மாண ந ப்ரஜாய தானென த்யகேனைகே அம்ர்த த்வமானசு I  
பரேன நகம் நிஹிதம் குஹயாம் விப்ரஜதே யத்யாதயோ விசந்தி || 
(சன்யாச சுக்த மஹாநாராயணோஉபநிஷத், 4.12)

இதன் பொருள் என்னவென்றால், ஒருவனுடைய செயல்களாலோ, (கர்மா) மேன்மையான குடும்ப சந்ததியாக இருப்பதாலோ (பிரஜா) செல்வத்தினாலோ (தனா) இறைவனை அடைய முடியாது. தியாகம் மற்றும் பற்றற்ற நிலையினாலேயே (தியாகா)) ஒருவன் நிலைத்திருக்கும் நிலையை அம்ருதா) அடைய முடியும். இதையேதான் புத்தரும் கூறியிருக்கின்றார். உபநிஷதங்களைக் கவனமாகப் படித்துப் பின்னர் புத்தர் என்ன கூறியிருக்கின்றார் என்று படித்தீர்களானால் அவை இரண்டும் ஒன்றே என்று புரிந்து கொள்வீர்கள்.எந்த வேறுபாடும் கிடையாது. அதனால் தான் ஆதி சங்கராச்சார்யார் "ப்ராச்சன்ன பௌத்தா" ( மறைந்திருக்கும் அல்லது விளம்பரபடுத்தப் படாத புத்தர்: அதாவது ஞானஒளி அடைந்தவர் ) என்று அழைக்கப் படுகின்றார். ஏனெனில் அவர் கூறியுள்ள அனைத்துமே புத்தமதத்தில் கூறப் பட்டவை போன்றிருப்பதாகும். ஆகவே சனாதன தர்மத்திற்கும் (ஹிந்து மதத்தின் வேறொரு பெயர்) புத்த மதத்திற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. கொள்கைகள் ஏறக்குறைய ஒன்றேதாம். முழுவதுமாக இரண்டும் ஒன்றேதான் என்று கூற மாட்டேன், ஆனால் இரண்டும் நெருங்கியவையாக இருக்கின்றன. புத்த மதம் சூன்ய வாதம் (ஒவ்வொன்றும் ஒன்றுமே இல்லாதது – சூன்ய என்றால் சமஸ்க்ருதத்தில் ஒன்றுமில்லாத என்று பொருள்) என்பதை ஆதரிக்கின்றது, ஆனால் வேதாந்தம் பூர்ண வாதம் (ஒவ்வொன்றும் முழுமையானது) என்பதை வலியுறுத்துகின்றது. புத்த மதத்தில் துன்பம் என்றிருப்பதை உணருவதுதான் முதல் நிலை

ஆனால் துன்பம் என்று ஒன்றே கிடையாது; விழித்தெழுந்து பாருங்கள், நீங்கள் முழுமையான மகிழ்ச்சியுடையவர் (ஆத்மா பேரானந்தம் உடையது) என்று வேதாந்தத்தில் கூறப்பட்டுள்ளது. புத்த மதம்  துக்கம் மறைந்தவுடன் மகிழ்ச்சி ஏற்படுகின்றது என்கிறது, ஆனால் வேதாந்தா எப்போது ஆத்மமகிழ்வு உணரப்படுகின்றதோ அப்போது தானா கவே துக்கம் மறைந்து விடுகின்றது என்று கூறுகிறது. எனவே, கீழிருந்து மேல், அல்லது மேலிருந்து கீழ் என்னும் அணுகுமுறைகள்தாம் வெவ்வேறு, ஆனால் இலக்கு ஒன்றே தான்.வேதாந்தத்தில் கூட கட்டாயமாக தெய்வச் சிலைகளை வழிபட வேண்டும் என்று கூறப்படவில்லை. ஆத்ம தெய்வத்தை (உடல் என்னும் கோவிலில் குடிகொண்டிருக்கும் ஆத்மா என்னும் தெய்வீகம்) வழிபடுதலே மிக உயர்ந்த வழிபாடு என்று கூறுகின்றது. ஆனால் அத்தகைய நிலையை அடைவதற்கு ஆரம்பத்தில் ஒரு தகுந்த சூழ்நிலை தேவை. அது தான் பூஜை என்பது. ஒரு கால கட்டத்தில் எல்லாமே உங்களுடைய விரிவு நிலை, எல்லாமே ஒன்று என்பதாக தோன்றும். முடிவாக, உலகிற்கும் இறைவனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை - இறைமை - மரங்களில், தெய்வச்சிலைகளில், மண்ணில், நீரில், நீல வானத்தில் எங்கும் நிறைந்துள்ளது என்றுணரும்போது ஒருவன் எதையும் எங்கிலும் வழிபடலாம். (பொருள்: ஒருவன் ஒவ்வொன்றும் தெய்வீகத் தன்மையின் காட்சி என்று உணரும் நிலையை அடையும் போது).

ருத்ர பூஜையில் கூட ஒரு விதி உள்ளது: ந ருத்ரம் ருத்ரம் அர்ச்சயேதி" அதாவது நீங்களே சிவனாகும் வரை (உங்களில் உள்ள தெய்வீகத் தன்மையை உணரும் வரை) இறைவனை  வழிபட முடியாது. எனவே, முதலில் நீங்கள் இறைவனாகி பின்னர் இறைவனை வழிபட வேண்டும்.அதாவது உங்களில் உள்ள இறைமையில் ஆழ்ந்து நிலை பெறவேண்டும். உங்களின் இறைத்தன்மையில் ஆழ்ந்து நிலை பெற்றுப் பின்னர் இறைவனை வழிபட வேண்டும். பூஜை என்பது ஒரு லீலை - இந்த வழிபாட்டுணர்வை வெளிக்காட்டும் விளையாட்டு.

கே: குருதேவ்! சுகஸ்ய துக்கஸ்ய நகோபி தாஸ்ய ( உங்களுடைய மனதை தவிர வேறு யாரும் வேதனையையோ மகிழ்ச்சியையோ தருவதில்லை) என்று தாங்கள் கூறி இருக்கின்றீர்கள். அப்படியானால் நமது செயல்கள் பிறர் மீது எந்த பாதிப்பையுமே ஏற்படுத்துவதில்லையா?

குருதேவ்: எந்த அளவு எடுத்துக் கொள்கிறார்களோ அந்த அளவு நமது செயல்கள் பிறர் மீது பாதிப்பை ஏற்படுத்தும். (அதாவது பாதிப்பு என்று அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்பினால்) அவ்வாறு எடுத்துக் கொள்ளவில்லை என்றால் நல்லதோ கேட்டதோ எதுவானாலும் அவர்களைப் பாதிக்காது. மன்னர் அலெக்சாண்டரால் அடிமைப்படுத்தப்பட்ட டியோகேன்ஸ் என்ற ஒரு முனிவர் இருந்தார். அலக்சாண்டர், அவரைச் சங்கிலிகளால் பிணைத்துக், கை விலங்கிட்டார். சந்தையில் அடிமை என்று விற்க முற்படும்போது, டியோகேன்ஸ் பலமாகவும், நம்பிக்கையுடனும் இருக்க, அவரை விற்பவர் அடிமை போன்று காணப்பட்டார். டியோகேன்ஸ் ஒரு அடிமை போன்று தோற்றமளிக்கவே இல்லை. எனவே நமது செயல்கள் எந்த அளவு எடுத்துக் கொள்ளப்படுகின்றதோ, அந்த அளவே பாதிப்பை ஏற்படுத்தும்.

உங்கள் பேச்சைக் கேட்காத ஒருவரை நீங்கள் சபித்தாலும், அது வேறு ஏதோ மொழி என்றோ, அல்லது நீங்கள் அவரைப் புகழ்வதாகவோ எண்ணிக் கொண்டால், உங்கள் சொற்கள் அவரிடம் என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? நீங்கள் சீரிய அறிவுபூர்வமான கருத்துக்களை ஒருவரிடம் கூறும்போது அவர் கல் போன்று அமர்ந்திருந்தால், உங்களுடைய பேச்சு அவரிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? ஒருவர் கூறப்பட்ட எதையும் உள்ளார்ந்து ஏற்றுக் கொண்டால் தவிர அவரிடம் நேர்மறை அல்லது எதிர்மறையான பாதிப்பு ஏற்படாது.

அதற்காக, நீங்கள் பிறருக்கு துன்பத்தையும் வருத்தத்தையும் தரலாம் என்ற பொருள் அல்ல. சுகஸ்ய துக்கஸ்ய நகோபி தாஸ்ய என்பது நீங்கள் உங்களால் முடிந்த அளவு பிறருக்குத் துன்பத்தைத் தரலாம் என்பது அல்ல. இல்லவே இல்லை. நீங்கள் நுண்ணுணர்வுடன் இருக்க வேண்டும். உங்களுக்காக என்று நீங்கள் விரும்பாததை ஏன் நீங்கள் பிறருக்குச் செய்ய வேண்டும்? அது தான் தர்மம். பிறர் நம்மை சபிக்கும் போது நாம் மிகவும் வருந்துகிறோம். நம்மிடம் இருந்து பிறர் திருடுவதை விரும்பாத போது, நாம் பிறர் பொருளைத் திருடக் கூடாது. எதையெல்லாம், நமக்கு நிகழக் கூடாது என்று எண்ணுகிறோமோ, அதையெல்லாம் பிறருக்குச் செய்யக் கூடாது. இதுதான் தர்மம் என்பதன் எளிய சாரம்.ஒருவரின் கடமை என்னும் ஞானம்.

கே: ஸ்ரீ கிருஷ்ணருக்கும் ராதாவிற்கும் இடையே என்ன உறவு? ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவிக்குக் கூடக் கிடைக்காத அத்தகைய சிறப்பான உறவு என்ன?

குருதேவ்: நான் ஸ்ரீமத் பாகவதம் படித்ததில்லை.ஆனால்அதில் ராதா என்று எங்கும் குறிப்பிடப் படவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ராதா என்னும் சொல்லுக்குப் பொருள்,தோற்றுவாய்க்கு திரும்புவது என்பதாகும்.தாரா என்பது தோற்றுவாயிலிருந்து வருவது,‘ராதா என்பது தோற்றுவாய்க்கு திரும்புவது. ராதா என்று அழைக்கப்படுவது ஒரு தெய்வீக சக்தி ஆகும். தோற்றுவாய்க்குத் திரும்பினாலொழிய நம்மால் கிருஷ்ணரை அனுபவிக்க முடியாது. ஏன் அவ்வாறு? ஏனெனில், கிருஷ்ணர் தான் தோற்றுவாய். ராதா அதற்கு அழைத்து செல்லும் பாதை. ருக்மிணியோ, சத்யபாமாவோ கூட, (கிருஷ்ணரின் இரு மனைவியர்) ராதாவாகும் வரை கிருஷ்ணரை அடைய முடியாது. இதுதான் இக்குறியீட்டில் மறைந்திருக்கும் பொருள்.

கே: குருதேவ்! சில சமயங்களில், யோகா என்னும் பாதையில் சில சித்திகளை அடைகிறார்கள். அச்சித்திகளே  கவன மாற்றத்திற்கு வழி வகுக்கின்றது. எவ்வாறு இவற்றைக் கையாள்வது?

குருதேவ்:அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்காதீர்கள். அவற்றின் பின்னால் ஓடாதீர்கள். அத்தகைய சில உங்களுக்கு வந்து சேரும். பலர் அதை அறிந்திருப்பார்கள். அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டாம். உங்களிடம் அறிமுக அட்டையைக் கேட்கும் போது தருகிறீர்கள். ஆனால் நீங்கள் அந்த அறிமுக அட்டை அல்ல. உங்களுடைய ஆத்மாவில் நீங்கள் நிலை பெற்று ஒன்றி இருங்கள். இதுதான் குறிக்கோள்.

கே: குருதேவ்! எனக்கு மிகவும் பிரியமான நெருங்கியவர்களின் மரணத்தை பற்றி பயந்து கொண்டிருக்கின்றேன். இப்பயத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது?

குருதேவ்: இந்த உலகத்தில், உங்களை சேர்ந்தவராக இல்லாமல் யாராவது இருக்கின்றார்களா? வேற்று மனிதர் என்பது யார்? சற்று இதை கவனித்துப் பாருங்கள். இங்கு தான் கடவுள் நம்பிக்கை என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. இறைவனை நம்புங்கள். உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் இறைவன் கவனித்து உங்களை எப்போதும் பாதுகாப்பான் என்று நம்புங்கள். பகவத் கீதையில், ஸ்ரீகிருஷ்ணர் கூறுகின்றார்:

அனன்யாச் சிந்த யந்தோ மாம் எ ஜனாஹ்  பர்யுபசதே
தேஷாம் நித்யபியுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம் யஹம் (9.22)

எப்போது நீங்கள் இறைவன் தாழ் பணிந்து, பூரண சரணாகதி அடைகிறீர்களோ, அப்போது இறைவன் உங்களுக்கு ஏற்கனவே இருப்பதப் பாதுகாத்து, தேவையான அனைத்தையும் வழங்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றான். ஸ்ரீ கிருஷ்ணர் கூறுவதாவது: யோக க்ஷேமம் வஹாம் யஹம். இங்கு யோக என்பது என்ன வேண்டுமோ அவை, க்ஷேமம் என்பது உங்களுக்கு ஏற்கனவே வழங்கப் பட்டதைப் பாதுகாத்து கவனித்தல் என்று பொருள்.இரண்டுமே அவரது பொறுப்பு.இதை ஸ்ரீ கிருஷ்ணர் தெளிவாகக் கூறுகின்றார்.இதை அறிந்து, உங்களை தளர்த்திக் கொள்ளுங்கள்.

கே: குருதேவ்! தாங்கள் எங்கள் அனைவரையும் சமமாகக் கருதுகின்றீர்கள். ஆனால், யாராவது, உங்களை தனது குரு என்று கூறிக் கொண்டால் எனக்கு மிகுந்த பொறாமை ஏற்படுகின்றது. நீங்கள் எங்கள் அனைவரையும் சார்ந்தவர் அல்லவா? நான் இதை என்னுடைய மனம் புரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்னால் மற்றவருடன் எதையும் பகிர்ந்து கொள்ள முடியும். உங்களை மற்றவருடன் எவ்வாறு பகிர்ந்து கொள்வது?

குருதேவ்: யாராவது குருதேவ் என்னுடையவர் என்று கூறினால், நீங்கள் என்னுடையவரும் கூட' என்று கூறுங்கள்.அவர் ஒரு முறை கூறினால், நீங்கள் இரு முறை கூறுங்கள் (சிரிப்பு) நீங்கள் உங்கள் வீட்டிலுள்ள ஜன்னல் கதவைத் திறந்தால், முழுமையாக சூரிய ஒளி வருகின்றது. அல்லவா? வேறொருவர் தனது வீட்டு ஜன்னலைத் திறந்தால், அங்கும் முழுமையாக சூரிய ஒளி பரவுகின்றது. உங்களுக்குக் குறைவாகவும், அவருக்கு அதிகமாகவும் வெளிச்சம் வருகின்றதா என்ன? அது போன்று தான் காற்று.வீட்டில் அதிகமாகவும் மற்ற இடங்களில் குறைவாகவும், பாரபட்சமாக வீசுகிறதா? சூடு அதிகமாக இருக்கும் போது, ஒரு வீட்டில் அதிகம் மற்றொரு வீட்டில் குறைவு என்று இருக்கின்றதா? இயற்கை எல்லோரையும் ஒரே விதமாகத் தான் அணுகுகின்றது. நீங்கள் முழு நிலவைக் காணும் போது, பிற நகரங்களிலுள்ள மக்களனைவரும் முழு நிலவைக் காண முடியும்.ஒரு இடத்தில் அதிகம், ஒரு இடத்தில் குறைவு என்று இராது. எங்கு சென்றாலும் முழு நிலவு முழு நிலவு தான். உங்களுக்கு நான்கு குழந்தைகள் என்று வைத்துக் கொள்ளுவோம். தற்காலத்தில் இரண்டு குழந்தைகள்தாம் சாதரணமாக இருக்கின்றன. எது எப்படியானாலும் நீங்கள் அத்தனை குழந்தைகளையும் சமமாகத் தானே கருதுவீர்கள்? ஒரு குழந்தைக்கு உணவு தந்து விட்டு மற்றக் குழந்தைகளைப் பட்டினியில் வாட விடுவீர்களா? ஒரு தாயால் ஒரு நாளும் அவ்வாறு செய்ய முடியாது.

நாம் மேலே உயரும் போது, விரிந்த உடமை உணர்வும், பரந்த மனப்பான்மையும்,எந்த முயற்சியும் இன்றி ஏற்பட்டு தானாகவே அவை நம் வாழ்வின் ஒரு அங்கமாகின்றது. சில சமயங்களில் கோபமும் பொறாமையும் ஏற்படும்.பரவாயில்லை.கோபம் பொறாமை போன்றவை வரும், அவை தானாகவே போகும்..ஞானத்தின் மூலமாகவே இத்தகைய எதிர்மறை எண்ணங்களையும், சிதைவுகளையும் கையாள முடியும்.

கே: குருதேவ்! நான் ஒருவரிடத்தில் ஆழ்ந்த அன்புடன் இருக்கின்றேனா அல்லது வெறும் பிணைப்பா என்று எப்படி அறிந்து கொள்ளுவது?

குருதேவ்: காலம் அதை கூறும்.(சிரிப்பு) அன்புடன் ஒரு தியாக உணர்வு தொடர்பு கொண்டிருக்கும். அன்பு என்னும் பெயரில் பிணைப்பு அல்லது கவர்ச்சி ஏற்படும் போது அது துன்பத்தையே தரும்.உண்மையான அன்பில், தியாகம் கூட ஒரு மன நிறைவை ஏற்படுத்தும். அன்பு தியாகம் மற்றும் மன நிறைவுக்கு வழி வகுக்கும், ஆனால் பிணைப்பும் ஜுரவேகமும் துன்பத்துக்கே அடிகோலும்.

கே: குருதேவ்! நமது  மனசாட்சிக்கு எது சரி எது தவறு என்று தெரியும். ஆயினும், பல சமயங்களில் இந்த உட்குரலைக் கேட்காமல் இருக்கின்றோம். மனசாட்சிக்கு செவி கொடாமல் செயல்பட எது நம்மைத் தூண்டுகின்றது? இதைத் தாண்டுவது எப்படி?

குருதேவ்: பழைய பழக்க வழக்கங்களாக இருக்கலாம் அல்லது வேறேதாவது செய்தால் மகிழ்ச்சி காணலாம் என்னும் மயக்கமாகவும் இருக்கலாம். இவை இரண்டும் மட்டும் தான்.

கே: குருதேவ், சில மாதங்களுக்கு முன்பு தான் எனக்கு தங்களுடன் தொடர்பு ஏற்பட்டது.  தாங்கள் ஏற்கெனவே என்னை தங்கள் மீது பித்து பிடித்தது போல் அன்பு கொள்ள வைத்து விட்டீர்கள். நான் கடந்த ஆண்டுகளில் இழந்துவிட்ட மொத்த அன்பையும் மீண்டும் பெற முடியுமா? நான் என் பின்னடைவை சரி செய்ய விரும்புகின்றேன். 

குருதேவ்: நம் அன்பின் பிணைப்பு மிகப் பழமையானது. நம் இதயம் பழமையில் பெருமை கொள்ளும் தன்மையுடையது. பழையனவற்றைத் தேடி ஓடக் கூடியது. ஆனால் மனமானது புதியவற்றால் கவரப்படுகின்றது. உதாரணத்திற்கு, மனம் நவீன உடைகள், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்றவற்றால் கவரப்படுகின்றது. இதனால் தான் அறிவியலும் புதிய கண்டுபிடிப்புகள், உருவாக்கங்களைத் தேடிச் செல்கின்றது. மனமும், புத்தியும் எப்போதும் புதியனவற்றால் வசீகரிக்கப் படுகின்றன. ஆனால் இதயம் அப்படியில்லை. நாம் யார் மீதாவது அன்பு கொண்டிருந்தால் இரண்டு நாட்களாக அல்லது இரண்டு வாரங்களாக அன்பு கொண்டிருப்பதாக சொல்வதில்லை. நாம் பல காலமாக ஏன் பல பிறவிகளாக அவர்களை நேசிப்பதைப்போல்  உணர்கின்றோம். இவ்வாறாக, நமக்கு பரிச்சயமானவை மற்றும் பழமையானவைகளுக்காக ஏங்குவதே இதயத்தின் தன்மையாகும். பழமை, புதுமை ஆகிய இரண்டும் கலந்ததே நம் வாழ்க்கை. இரண்டையும் ஒன்றாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 

நீங்கள் மாயையில் சிக்கியிருக்கும் போது அல்லது உங்கள் இதயமும் புத்தியும் முரண்படும் போது ஏற்படும் சச்சரவுகள் அனைத்தும் கடந்த காலம் குறித்தவையே ஆகும். ஏக்கம் வெறுப்பு  போன்ற அனைத்தும் கடந்த கால சம்பவங்கள் தொடர்பானவையே. 'நான் 20 வருடங்களுக்கு முன்பு உங்கள் வீட்டு திருமணத்திற்கு வந்த போது நீங்கள் என்னை முறைப்படி கவனிக்கவில்லை. போதுமான அளவு இனிப்புகளும், பரிசுகளும் அளிக்கவில்லை. உங்கள் அப்பாவும் அம்மாவும் இப்படிச் செய்தார்கள்;அப்படிச் செய்தார்கள்' என்று ஒருவர் சொல்லலாம்.    மக்கள் தங்கள் மனதில் கசப்புணர்வை 20 ஆண்டுகளுக்குப் பிறகும் பேணி வளர்க்கின்றனர்.  போதிய அளவு விவேகமும் பகுத்தறியும் ஆற்றலும் இல்லாத காரணத்தினால் மக்கள் இது போன்ற உணர்வுகளில் சிக்கி விடுகின்றனர். எனவே நீங்கள் விவேகத்தைப் பயன்படுத்தி இவை பற்றியெல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். 
  
கடந்த காலத்தை விட்டுவிட வேண்டும். மனமும் புத்தியும் கடந்த காலத்திலேயே சுழன்று கொண்டிருந்தால் எதிர்மறை உணர்வுகளில் நிலைத்து கெட்டு விடுகின்றன. இதயம் புதியனவற்றை நாடி செல்லும்போது ஸ்திரத்தன்மையை இழந்து விடுகின்றது. ஆகவே அனைத்தையும் அவற்றிற்கு உரிய இடத்தில் வைப்பதே விவேகம் ஆகும். சரியான முறையில் செயல்பட வாழ்க்கையில் புத்தியும் உணர்வுகளும் இரண்டுமே அவசியம்.அறிவை பயன்படுத்தி தொழில் செய்யுங்கள். வாழ்க்கையை உணர்வுபூர்வமாக வாழுங்கள்.அவ்வாறில்லாமல் வீட்டில்  அறிவிற்கும் தொழிலில் இதயத்திற்கும் இடம் கொடுத்தால் இரண்டுமே பிரச்சினையாகிவிடும். 

கே: குருதேவ், ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருகின்றது. முன்னேற்றம் வருமா?   நான் மத சார்பின்மை என்ற பெயரால் என் மதத்திலிருந்து அந்நியப்படுத்தப்படுகின்றேன்.  எகிப்தில் நிகழ்வனவற்றை நாங்களும் சந்திக்க நேருமா? (சமீபத்தில் நிகழ்ந்த உள்நாட்டுப்போர் மற்றும் கலவரத்தைக் குறிப்பிடுகின்றார்).

குருதேவ்: கடவுள் கிருபையில் நம் நாட்டில் அவ்வாறு நடக்காமல் இருக்கட்டும். எகிப்திலும் சிரியாவிலும் நடப்பவை எப்போதுமே நம் நாட்டில் நடக்கக் கூடாது. இங்கே இந்தியாவில் மத சார்பின்மை என்ற பெயரால் ஏதேனும் அநீதி இழைக்கப்படுமென்றால் அதற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பாக இருக்கமுடியும். வேறு யாரும் பொறுப்பாக முடியாது ஏனென்றால் நீங்கள் அனைவரும் இவற்றிற்கு எதிராக சேர்ந்து நிற்பதில்லை. நம் மதத்தை நாமே மதிக்க வில்லையென்றால் மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள்? மற்றவர்களை கைகாட்டி குற்றம் சொல்ல வேண்டாம். நம்மை நாமே தன்னாய்வு செய்து கொள்ள வேண்டும். இன்று ஜாதி மற்றும் இன வேறுபாடுகள் மிக அதிக அளவில் உள்ளன. ஜாதியின் பெயரால் மிகவும் பிளவு பட்டு இருக்கின்றோம். நாம் இவற்றை எல்லாம் மீறி மேலெழுந்து அன்பு மற்றும் கருணையினால் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டியது மிகவும் அவசியம். நாம்  பொறுப்புள்ள குடிமக்களாக மாற வேண்டும். 

வேறெதுவும் செய்யவில்லையென்றாலும் மாதத்திற்கு  ஒருமுறையாவது ஒரு கோவிலிலோ அல்லது அதுபோன்ற வேறொரு இடத்திலோ அனைவரையும் ஒன்று சேர்க்க முயற்சி செய்ய வேண்டும். கிராமங்களிலும் இவ்வாறு செய்ய வேண்டும். பண்டிகைகள் கொண்டாடும் போது நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடுவதற்கான முயற்சிகள் செய்வதே இல்லை.  ஒவ்வொருவரும் அவரவர்கள் தனித்தனியாக கொண்டாடவே விரும்புகின்றனர். விநாயக சதுர்த்தி, ஜன்மாஷ்டமி போன்ற பண்டிகைகளை அவரவர்களுடைய தெருவிலோ அல்லது காலனியிலோ தனியாக கொண்டாடுகின்றனர். ஒவ்வொருவரும் 'நான்',' எனது' 'என்னுடையது' என்று நினைப்பதனால் தான் இவ்வாறு நடக்கின்றது. நாம் ஒன்றாக இணைந்து நிற்காமல் இவ்வாறு பிரிந்து கிடப்பது நம் இந்தியாவின் மிகப்பெரிய துரதிருஷ்டம். நாம் மொழி, இனம், ஜாதி,மாநிலம், ஏன் அரசியல் கட்சிகள் போன்றவற்றால் பிரிந்து நிற்கின்றோம். அவ்வாறில்லாமல் நாம் ஒன்றாக  இணைவோமேயானால் தர்மம் மேலோங்கும். பிறகு உங்களை யார் காயப்படுத்தவோ அல்லது இழிவுபடுத்தவோ முடியும்? அதனால் தான் 'சங்க சக்தி கலியுகே' என்று சொல்லப்பட்டுள்ளது. (நல்லவர்கள் மற்றும் நேர்மையானவர்களின்  தொடர்பே இருள் சூழ்ந்த கெட்ட நேரங்களில் சக்தி தரும் ஆதாரமாகும்.)

இன்று பலர் தாங்கள் அநீதியால் துன்பப்படுவதாகச் சொல்கின்றனர். ஜம்மு காஷ்மீரிலும் கேரளாவிலும் இருக்கும் மக்கள் பலர் தங்கள் நாட்டிலேயே அவர்கள் இரண்டாம்தர குடிமக்களாக மாறிவிட்டதைப் போல் உணர்வதாக புகார் செய்துள்ளனர். வட கிழக்கிலும் ஆந்திராவிலும் கூட மக்கள் அதிக அளவில் அக்கறையின்மையும், அநீதியும் இருப்பதாக சொல்கின்றனர். யாரும் அவர்கள் மீது அக்கறை கொள்வதில்லை என்று சொல்கின்றனர்.  மேற்கு வங்காளத்திலும் பெரும்பான்மை இனத்தில் மிக அதிக அளவில் அநீதியும் தவறான நடவடிக்கைகளும் இருப்பதாக சொல்கின்றனர். பலமுறை மக்கள் என்னிடம் வந்து இதை சொல்லி என் முன்னால் அழுகின்றனர். 

"நீங்கள் அனைவரும் இந்த அநீதிக்கு எதிராக இணைந்து நிற்க வேண்டும். உங்கள் கால்களில் நிற்க வேண்டும். நீங்கள் உங்களுக்குள் பிரிந்து சிதறி கிடக்கும் வரையில் மற்றவர்கள் அதனை  தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்வார்கள். இதை செய்யாமல் நாம் மற்றவர்களைக் குறை கூறுகின்றோம். ஒன்று சேர்ந்து சங்கங்கள் அமைத்து முன்னேறுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அவ்வாறு யாராவது முன்னேறும் போது நாம் ஏன் அவர்களை தடுத்து கீழிறக்கவேண்டும்? அவர்களும் முன்னேறட்டும். நாமும் வெற்றி பெற முயற்சிகள் செய்வோம். இந்த எண்ணம் நம் அனைவருக்குள்ளும் எழவேண்டும். 

இன்று சிறு நகரங்களில் கூட பத்து வெவ்வேறு கோவில்கள் கட்டப்படுகின்றன. பத்து கோவில்கள் இருப்பது தவறில்லை. ஆனால் அவர்களுக்குள் போட்டி உணர்வு உண்டாகி விடுகின்றது. ஒரே கோவிலிலும் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கிடையே சிறு  விஷயங்களுக்கெல்லாம் கருத்து வேறுபாடுகளும்,விவாதங்களும் ஏற்படுகின்றன.  இவையெல்லாம் விவேகமற்றவை.பிறகு அவர்கள் தாங்கள் சரியாக கவனிக்கப்படவில்லை,அவர்களுக்கு தேவையானவை கிடைக்கவில்லை என்றெல்லாம் புகார் செய்கின்றனர். மதம், அரசியல், பொருளாதாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் விவேகம் மிக அவசியம்.இதற்கான மாற்றம் உண்டாக வேண்டும். நம் இளைஞர்கள் இந்த குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளி வந்து பெரும் மாற்றத்தினைக் கொண்டு வருவார்கள் என்று நான் நம்புகின்றேன். அவர்கள் ஒன்றாக சேர்ந்து நன்முறையில் செயல்பட வேண்டும்.

கே: நீல நட்சத்திரம் என்பது என்ன? நான் அதைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். தயவு செய்து விளக்கம் கூறுங்கள், குருதேவ்.

குருதேவ்: நீங்கள் ஏன் வேறு யாரையாவது கேட்க கூடாது? நட்சத்திரங்களை வானத்தில் தான் பார்க்க முடியும்; தரையில் அல்ல. யாராவது தங்கள் பாதங்கள் தரையில் இல்லாமல் ஆகாயத்தில் நடப்பது போல் நடந்தால் (அதாவது  கிறுக்குத்தனமாகவும்  நடைமுறைக்கு மாறாகவும்  நடந்தால்) அவரே நீல நட்சத்திரம் என்று அழைக்கப்படுவார்.(சிரிப்பு)அது தான் பொருள். சரியா? ஆசிரமத்திலும் யாராவது நடைமுறையிலிருந்து விலகி நடந்தால் அவர் நீல நட்சத்திரமாகி விட்டார் என்று சொல்வார்கள்.அவர் என்ன சொல்கிறார் என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இதற்கும் தீர்வு உண்டு.