நவம்பர் 30,
2013
குருதேவ்! அசாராம் பாபு
நிகழ்விற்குப் பின்னர் (அண்மையில் ஒரு ஆன்மீகத் தலைவர் ஒரு பெண் பக்தருடன் தவறான உறவு கொண்டதாக ஏற்பட்ட அவதூறு) என்னுடைய
நண்பர்கள் நான் வாழும் கலையில்
கொண்டுள்ள நம்பிக்கையையை கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டனர். வாழும் கலை
வேறுபட்டது என்று அவர்களை நம்ப வைக்க நான் என்ன கூற வேண்டும்?
குருதேவ்: என்ன தான் ஒருவர் கூற முடியும்?
நம்பிக்கையற்று
அச்சப்பட வேண்டாம் என்று கூறுங்கள். சில
சமயங்களில் சாலை விபத்துக்கள் ஏற்படும். அதனால் சாலைகளில் நடப்பதை நிறுத்தி
விடுகின்றோமா என்ன? அவ்வாறு செய்தால் மனம்
சமநிலையில் இல்லாது பீதி நோயுற்றிருப்பதாகும். இங்கும் அதே நிலை தான்.
உதாரணமாக
மருத்துவத் துறையில் சில டாக்டர்கள் சிறுநீரகங்களைத் திருடுகின்றார்கள். அது பற்றி பெரிய அவதூறுகள்
எழுந்தன. ஏதோ
சில டாக்டர்கள் அவ்வாறு செய்ததால் நீங்கள் மருத்துவரிடம் செல்லாமலேயே இருக்க
வேண்டும் என்று பொருளல்ல. சரியா?
ஏதோ
சில நிறுவனங்கள் மக்களுடைய பணத்தை ஏமாற்றி விட்டன. அதனால் நீங்கள் நிறுவனங்களில்
பண முதலீடு செய்வதையே நிறுத்தி விட வேண்டும் என்பதல்ல.
முதலாவதாக
அந்த மனிதர் தவறிழைத்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஒரு வேளை அவர் குற்றமற்றவர்
என்று நிரூபிக்கப்பட்டு விட்டால்? காஞ்சி
மடத்தின் தலைவர் சங்கரச்சாரியாரின் நிலை (காஞ்சிபுரம் ஆன்மீக மடத்தின் தலைவர்
குற்ற வழக்கில் விடுதலை அடைந்ததை குறிப்பிட்டு) என்ன ஆயிற்று பாருங்கள்! ஒன்பது
ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். இன்று அந்த வழக்கின் அத்தனை
குற்றங்களிலும் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப் பட்டுள்ளார். தவறான
குற்றச்சாட்டின் பாரத்தை அவர் ஒன்பது ஆண்டுகள் அனுபவிக்க வேண்டியதாயிற்று. இதற்கு என்ன கூறுகின்றீர்கள்?
சுமார்
17 அல்லது 19
ஆண்டுகளுக்கு
முன்னர் இந்தியாவில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை கூற விரும்புகின்றேன். 1998: ஒரு சிறந்த
விஞ்ஞானி, ஒற்றர் என்று குற்றம்
சாட்டப்பட்டார். பல
விதமான சித்திரவதைகளுக்கு ஆளானார். ஆட்டோரிக்சா
ஓட்டுனர்கள் கூட அவரைக் குற்றம்
சாட்டினர். அவர்
ஒரு தலைசிறந்த விஞ்ஞானி. க்ரியோஜெனிக் தொழில் நுட்பத்தில் ஆய்வு செய்து,
அமெரிக்க
விண்வெளியூர்தியின் மொத்தச் செலவில் மூன்றில் ஒரு பகுதி செலவில் ஒரு விண்வெளியூர்தியினைத்
தயாரித்தார். அது
குறைந்த செலவில் அதிகத் திறனுள்ள விண்கலமாக இருந்தது.
இந்த
செயல் திட்டத்தில் ரஷ்யா ஒரு பங்குதாரராக ஆக விரும்பியது. அமெரிக்க கூட இதில் பங்கு பெற
விரும்பியது. அந்த
விஞ்ஞானி நாசாவினால் அழைக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் அவரிடம்,
"நான் அமெரிக்கக் குடியுரிமையை உங்களுக்கு அளிக்க
விரும்புகின்றேன். இங்கேயே
தங்கியிருந்து, உங்கள் பணியைத் தொடருங்கள்"
என்று கூறினார். அவர்
நாசாவில் 10 மாதங்கள் தங்கியிருந்தார்.
பின்னர்
நம் நாட்டு இஸ்ரோ விலுள்ள விக்ரம் சாராபாயை தொடர்பு கொண்டார். விக்ரம் சாராபாய்,
இந்தியாவிற்குத் திரும்ப வந்து அதே பணியைத் தொடருமாறு கூறினார். எனவே,
விஞ்ஞானி
இந்தியாவிற்குத் திரும்பி, பின்னொரு
காலத்தில் இந்தியக் குடியரசுத் தலைவராக ஆன அப்துல் கலாம் உடன் இணைந்து பணியாற்றத்
தொடங்கினார்.
அந்த
சமயத்தில், இந்தியத் தகவலகத்திலிருந்து
ஒருவர், விஞ்ஞானி ஒற்றாடுவதாகப் பொய்
வழக்கு ஒன்றை பதிவு செய்தார். விஞ்ஞானி,மோரிஷியஸ்
அல்லது மால்டைவஸ் தீவிலுள்ள ஒரு பெண்மணிக்கு நமது நாட்டின் ரகசியங்களை விற்று
வருவதாக் குற்றம் சாட்டினார்.
உண்மையில்
விஞ்ஞானி தங்கி இருந்த வீட்டுக்கு அடுத்த வீட்டில் மால்டைவஸ் தீவைச் சேர்ந்த
எட்டாம் வகுப்பு மட்டுமே தேறிய இரு பெண்கள் விருந்தினராக வசித்து வந்தனர். இந்த
வழக்கு 10 ஆண்டு காலம் நடந்து இறுதியில் விஞ்ஞானி குற்றமற்றவர்
என்று நிரூபிக்கப் பட்டது. அதற்குள்
அவரது ஆய்வுப் பனி முடிந்து விட்டது.
அவர்
இந்த தொழில்நுட்ப ஆய்வினை வீழ்த்துவதற்காக ஒரு வேளை CIA
பணம் கொடுத்துப் பொய் வழக்கை ஜோடிக்கச் செய்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டார். இந்த நிகழ்விற்கு பின்னர் ஒரு
ஸ்தம்பித்த நிலை ஏற்பட்டு நம் நாடு விண்வெளி ஆய்வில் புதிதாக எதையும் கண்டு பிடிக்கவில்லை. இந்தக் முழுக் கதையையும் அவர் கூறினார். நீங்களும் அறிந்திருக்கலாம். இது டைம்ஸ் நௌ (Times
Now) தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. வழக்குகள்
பொய்யாகக் கூட இருக்கலாம். சில
சமயங்களில் உண்மையாகவும் இருக்கலாம். கேள்விக்குறிய மனிதர் ஏதேனும்
தவறிழைத்திருக்கலாம். அந்த
நிலையில், நாம் அவரிடம் கருணை மட்டுமே
காட்ட முடியும். அவரை
எது அத்தகைய கொடிய குற்றத்தைச் செய்யத் தூண்டியது என்று நமக்குத் தெரியாது. 75 வயதான ஒருவர் இவ்வாறு
செய்வது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
இரண்டாவதாக,
இவ்வாறு
குற்றம் புரிந்தவர் மீது இரக்கப்படுவதை விட்டு அவரை வெறுக்கத் துவங்கி
விடுகின்றோம். மிகக் கொடிய குற்றவாளி, அல்லது
குற்றவாளி என்று நிரூபிக்கப் பட்ட ஒருவரை நாம் வெறுக்கக் கூடாது. இரக்கப் பட
வேண்டும். அக்குற்றம் உங்கள் மூலம் நடைபெறவில்லையே என்று கடவுளுக்கு நன்றி
செலுத்துங்கள். நாம் அத்தகைய குற்றங்களை செய்யவில்லை
என்னும் அதிர்ஷ்ட உணர்வுடன் இருங்கள். யார்
என்ன செய்ய முடியும்? ஒவ்வொரு துறையிலும்
இத்தகைய நிகழ்வுகள் இருக்கின்றன. ராவணன் துறவி போன்று பொய்த் தோற்றத்துடன்
சீதாதேவியை ஏமாற்றினான். இது
புதிதல்லவே!
விஜயநகரப்
பேரரசு எவ்வாறு அழிந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களில்
எத்தனை பேருக்குத் தெரியாது?(பலர் கைஉயர்த்துகின்றார்கள்).
சன்யாசிகளைப் போன்று பொய்த்தோற்றம் பூண்ட ஐந்து பேரால்தான் விஜயநகரப் பேரரசு
அழிந்தது. விஜயநகரப் பேரரசு மிகுந்த பலமும் சக்தியும் வாய்ந்து யாராலும் அசைக்க
முடியாத நிலையில் இருந்தது. இந்தியாவின்
பாதிப் பகுதிகளும்,
ஸ்ரீ லங்காவிலும் கூடப் பேரரசின் ஆளுகைகுட்பட்டிருந்தன. அது உலகிலேயே மிகுந்த வளம்
பொருந்தியதாகவும் இருந்தது. சீன
யாத்ரிகர்களும் கூட நம்ப முடியாத அளவு செல்வம் மிகுந்த பகுதி என்று
விவரித்துள்ளார்கள். தெருக்களில்
வணிகர்கள் வைரங்களை "லிட்டர்" அளவுகளில் அளந்தார்கள். முத்துக்கள்
கனஅளவுகளில் அளக்கப்பட்டன. பேரரசுக்கு
மிகுந்த பலம் பொருந்திய படை இருந்தது.10000 யானைகளும், ஒரு
லட்சம் படை வீரர்களும் இருந்தனர். ஆனால்
போர் எதுவுமின்றி 10 மணித்துளிகளில் பேரரசு முழுமையும் அழிந்து விட்டது. என்ன நடந்தது தெரியுமா?
ஐந்து
பாமினி சுல்தான்கள்,
துறவிகளை போன்று வேடம் அணிந்து நதியின்
மறுகரையில் ஒரு கூடாரம் அமைத்துக் கொண்டு இருந்து வந்தனர். “துறவிகள்
நதியைக் கடக்க மாட்டார்கள் ஆகையால் அவர்களால் நதியை கடந்து மாளிகைக்கு வர
இயலாது.எனவே பேரரசர் கூடாரத்திற்கு வந்து துறவிகளைக் காண வேண்டும்”
என்று அவர்கள் பேரரசருக்கு ஒரு செய்தி அனுப்பினர்.
ஆகவே,
பேரரசர்
மிகுந்த மரியாதைகளுடன் அத்துறவிகளை காண வந்தார். பழங்கால முறைப்படி,
பேரரசர்
துறவிகளிடம் சென்று தலை வணங்கி ஆசிகளைக் கோரினார்.
அவர்கள்
படைகளின்றி தனியே பேரரசர் வர வேண்டும் என்று கூறியதால், பேரரசர்
எளிமையான உடையணிந்து மலர்கள் பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்றார். ஆனால் துறவிகள் உண்மையானவர்
அல்லவே! அவர்கள் பாமினி சுல்தானின் படைத்
தலைவரும்
வீரர்களும் ஆவார்கள். அவர்கள்
தலை வணங்கிய பேரரசரின் தலையைக் கொய்து ஹம்பி நகரத்தின் மத்தியிலுள்ள ஒரு
கம்பத்தில் அத்தலையை தொங்க விட்டனர். பத்து
நிமிடங்களில் அவர்கள் போர் எதுவும் இன்றி பேரரசு முழுமையையும் கைப்பற்றினர்.
பேரரசரே
கொலையுண்ட பின்னர் மக்களால் என்ன செய்ய முடியும்? தங்களை
தாக்கியவர்களிடம் சரணடைந்தார்கள்.பாமினியர்கள் அதன் பின் பேரரரசைக் கொடூரமாக
அழித்தனர்.அவர்களது படைகளும் மாறு வேடத்தில் காத்திருந்தன. அவர்கள் நகரை முழுவதுமாக
சூறையாட ஆறு மாதங்கள் ஆகின என்று கூறப்படுகின்றது.
நம் நாடு சுதந்திரமடைந்ததற்குப் பின், பண்டிதர் ஜவஹர்லால் நேரு
அவர்கள் நம் இந்திய வரலாற்றின் சில தவறான நிகழ்வுகள் பிறரால் அறியப்படாமலும், முக்கியத்துவும்
அளிக்கப்படாமலும் இருக்க வேண்டும் என்பதற்காக அவை மறைக்கப்பட வேண்டுமென்ற அரிய கருத்தினைக்
கொண்டிருந்தார். எதிர்காலத்தில் அச்சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு அவை மக்களுக்கு
ஒரு பாடமாக அமையும் என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. அவர் எல்லாவற்றையும் மறைத்துவிட்டு,
அனைத்தும் நன்றாகவே நிகழ்ந்ததாக தோரணை செய்தார். உண்மைக் கதைகளை கம்பளத்திற்கு அடியில்
தள்ளுவது போல் தள்ளி மறைத்துவிட்டு, அப்படியே மகிமை வாய்ந்த நாட்களையும் மிகவும் சௌகர்யமாக மறந்து விட்டார்.
இவ்வாறாக நம் இந்திய வரலாறு உப்பு சப்பற்று சாதாரணமாகிப் போனது. (நம் இந்திய வரலாற்றின் புகழையும்
பெருமைகளையும் குறிப்பிடுகின்றார்). (நம் வரலாற்றின் இருண்ட சங்கடங்கள் நிறைந்த காலங்களைக்
குறிப்பிடுகின்றார்). நம் கடந்த காலம் வெறும் குப்பை என்றும் அதில் பெருமைப்பட ஏதுமில்லை என்றும் படம்
பிடித்துக்காட்ட விரும்பிய கம்யுனிஸ்டுகள் இம்முயற்சிகளுக்கு துணை புரிந்தனர். அவர்களது வேதாந்தங்களைப் படித்தால் கம்யுனிசம் ஒன்றே முன்னே இருக்கும் பாதை
என்று அவர்கள் எடுத்துக் காட்டியிருப்பதை அறியலாம். அதற்கு வசதியாக அவர்கள் நம் இந்திய
வரலாற்றின் கிருஷ்ண பகவான், ராமபிரான் போன்ற சரித்திர நாயகர்களை எல்லாம் புராண கதாபாத்திரங்கள்
என்று சொல்லி ஓரம் கட்டிவிட்டனர். அவர்கள் மகாபாரதம் உண்மையில் நடக்கவில்லை என்றும்
அது யாரோ ஒருவரின் கற்பனையில் விளைந்த கட்டுக்கதை என்றும் கூட சொல்லி இருக்கின்றனர்.
இயேசு நாதர் தண்ணீரின் மீது நடந்தார் என்பதாலும், அவர் ரொட்டியையும்
திராட்சை ரசத்தையும் பன்மடங்காகப் பெருக்கிக் காட்டினார் என்பதனாலேயும் மட்டுமே அவர்கள்
இவையெல்லாம் வெறும் கதைகள் என்றும் உண்மையில் நடந்தவை அல்ல என்றும் சொல்வதை கவனித்துப்
பாருங்கள். சில அதிசய நிகழ்வுகளைத் தேர்ந்தெடுத்து அவை தர்க்க ரீதியாக இல்லை என்பதனால்
அவை உண்மையில் நிகழ்ந்தவை அல்ல என்று சொல்வதைப் போல் உள்ளது. இது அர்த்தமற்றதாகத் தெரிகின்றது.
கம்யூனிஸ வரலாற்று ஆசிரியர்கள் இந்திய வரலாற்றில் இது போன்ற
இயல்பிற்கு மாறான நிகழ்வுகளை பெரிது படுத்தினர். இந்தியா என்பது நாகரிகமற்ற படிப்பறிவில்லாத
மூட நம்பிக்கைகள் கொண்ட மக்கள் நிறைந்த நாடு என்பதே அவர்களது தத்துவம். அவர்களது இந்த
வாதத்தினை நிரூபனம் செய்ய அவர்கள் விரும்பினார்கள். இது மிகவும் துரதிருஷ்டவசமானது.
அவர்களுக்கு சமஸ்கிருதத்தின் அரிச்சுவடி கூடத் தெரியாது. இந்த
நாட்டின் அடிப்படை சம்ஸ்கிருத மொழியே. ஒரு கால கட்டத்தில் இந்த நாடு முழுவதையும் ஒன்றாக
இணைத்தது அதுவே. இந்நாட்டின் மற்ற மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்து உருவானவையே ஆகும். உங்களுக்கு சமஸ்கிருதமோ அல்லது பாலி மொழியோ தெரியாதென்றால் உங்களால் இந்நாட்டு வரலாற்றினை முழுமையாகத் தெரிந்து கொள்ள
முடியாது.
அதேபோல் தென்னிந்திய மொழிகளில் தமிழ் மிக முக்கியமானது. இந்த
கம்யூனிச வரலாற்று ஆசிரியர்களில் ஒருவருக்கும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம்
,சமஸ்கிருதம் என்று எந்த மொழியுமே தெரியாது.
அவர்களுக்கு சிறிதளவு ஆங்கிலமும், இந்தியும் மட்டுமே தெரியும். அப்படி இருந்தும் அவர்கள்
இந்திய வரலாறு பற்றி பல தொகுதிகளாகப் புத்தகங்கள் எழுதியுள்ளனர். அவை அனைத்தும் காலாவதி
ஆகிவிட்டன. அவற்றை படிப்பதென்பது நேரத்தை வீணடிப்பதாகும்.
இருந்தாலும் அவை பல நூல் நிலையங்களில் இன்றும் இடம் பெற்றுள்ளன.
சாதுக்கள் போன்று மாறுவேடத்திலிருந்த ஒரு சிலரால் விஜயநகரப்
பேரரசு முழவதும் போர் எதுவுமின்றி பத்தே நிமிடங்களில் கைப்பற்றப்பட்டது. இது போன்ற
நிகழ்சிகள் கடந்த காலத்தில் நடைபெற்றன. ஆனால் அதற்காக இந்த நாட்டில் இனி நல்லவர்கள்
எவருமில்லை என்று சொல்ல முடியாது. அல்லது இந்த நாட்டில் முனிவர்கள் என்று எவரும் கிடையாது என்றும் சொல்ல முடியாது.
முனிவர் கபீர் தாஸ் மக்களால் குற்றம் சாட்டப் பட்டார். இயேசு
நாதர் கூட குற்றம் சாட்டப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். புத்த பகவான் அவருக்கு
எதிராக மாறி விட்ட அவரது உறவினராலேயே துன்புறுத்தப்பட்டார்.
இது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியாது?
(பார்வையாளர்களில் பலர் தங்கள் கைகளைத் தூக்குகின்றனர்).
புத்த பிரான் தியானம் கற்பித்துக் கொண்டிருந்தார். அவரது உறவினரும்
நெருங்கிய சீடருமாகிய ஒருவர் அவர்மீது பெரும்
பொறாமை கொண்டதனால் அவரது மூளையில் என்ன கோளாறு
நேர்ந்ததோ தெரியவில்லை. புத்தர் அமர்ந்து தியானம் கற்பித்துக் கொண்டிருந்த இடத்திற்குப்
பின்புறம் மலை உச்சிக்குச் சென்றார். அவர் தனது ஆதரவாளர்கள் சிலருடன் சேர்ந்து ஒரு
பெரிய பாறையினை புத்தர் இருக்கும் திசை நோக்கி தள்ளி விட்டார். அப்பாறை புத்தர் அமர்ந்திருந்த
இடத்திற்கு மிக அருகில் சற்றே தள்ளி சென்றது. இவற்றால் எல்லாம் எதுவும் பாதிக்கப்படாமல்
புத்தர் அமர்ந்திருந்தார். அங்கே அமர்ந்திருந்த மற்ற சீடர்களும் பக்தர்களும் இதைப்
பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். புத்தர் மிகுந்த கருணையோடு புன்னகை புரிந்தார். புத்தர்,
"பாவம். இச்செயலை செய்தவர் அவருக்குள் மிகுந்த வலியும் வேதனையும் கொண்டுள்ளார்"
என்று கூறினார்.
கே:
குருஜி! இது ஒன்று தான் உச்ச அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் வழி வகுக்கும் பாதையா?
குருதேவ்:
தாகத்தை தணிப்பதற்கான பதில் தண்ணீர் ஒன்று தான் என்று நீங்கள் கூறினால் நான் என்ன சொல்ல
முடியும். நுரையீரலை நிரப்புவதற்கு மூச்சு ஒன்றே வழி என்று கூறினால் நான் என்ன சொல்ல
முடியும். எந்த பாதை உங்களை உள்மன அமைதி,சாந்தி, மகிழ்ச்சி மற்றும் அன்பு ஆகியவற்றிற்கு
கொண்டு செல்லுகிரதொ அதுவே நற்பாதை. அனைத்து பாதைகளுமே அடிப்படையில் ஒன்றே. முறைகள் பலவாக இருக்கலாம்.
யாரோ ஒருவர் "இவ்வாறு பிராணயாமம் செய்யுங்கள்" என்று
கற்பிக்கலாம். மற்றொருவர் வேறு மாதிரியாக செய்யுமாறு கற்பிக்கலாம். வேறு ஒருவர் அதை
போல செய்யவே வேண்டாம் என்று சொல்லலாம். எனவே பலவிதமான முறைகள் இருக்கின்றன.
வாழும் கலையில் கற்றுத் தரப்படும் இந்த உத்திகள் இந்த காலத்திற்கும்,
நம்முடைய சந்ததியினருக்கும், அனைத்து மக்களுக்கும் உகந்தவை என்று பல ஆண்டுகளாக நாம்
பார்த்திருக்கிறோம். இவை காலத்தினால் மற்றும் அனைவரும் இந்த பயிற்சிகளில் சவுகரியமாக
உள்ளனர். கடந்த காலத்தில் மக்களுக்கு செய்ய வேண்டியவை அதிகம் இருந்ததில்லை. வயல்களில்
விதை விதைத்து விட்டு, அது முளைத்து வளர்வதை பார்க்க வெறுமனே அமர்ந்திருப்பார்கள்.
பறவைகள் அந்த விதைகள் அல்லது பயிர்களை சேதமாக்காதவாறு பார்த்துக் கொள்ளுவார்கள். எனவே
அவர்களுக்கு நேரம் இருந்தது, எட்டு மணி நேரம் அல்லது அதற்கு மேலும் தியானம் செய்ய நேரம்
இருந்தது. ஆனால் எட்டு மணி நேரம் தியானம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தினமும் பத்து
நிமிடம் சுதர்சன கிரியா செய்வதே போதுமானது, நல்லது.
சிலர் பத்து நாட்கள் விபாசன தியான பயிற்சியில் கலந்து கொள்ளுகின்றனர்.
அங்கே அவர்கள் பத்து நாட்கள் மூச்சை கவனிக்கின்றனர். இறுதியில் பத்தாவது நாள் முடிவில்
அவர்களுக்கு உடலில் சில உணர்வுகள் ஏற்படும். பத்தே நிமிட சுதர்சன கிரியாவில் உங்களால்
அந்த உணர்வுகளை அறிய முடியும். எட்டு அல்லது பத்து நாட்கள் அமர்ந்து தான் உங்கள் உடலில்
ஏற்படும் அந்த உணர்வுகளை கண்டுபிடிக்க விரும்புவீர்களா அல்லது நம்முடைய உடல் காலி மற்றும்
வெற்றிடமானது என அறிய விரும்புவீர்களா என்று தேர்வு செய்து கொள்ளுங்கள். நான் அவை கெட்டவை
என்றோ அந்த மாதிரியானது என்றோ கூறவில்லை. அனைத்திற்குமே ஒரு மதிப்பு உள்ளது.
முதுநிலை பயிற்சியில் நீங்கள் நான்கு அல்லது ஐந்து நாட்கள் மௌனம்
கடைப்பிடிக்கும் போதும், மாறுபட்ட தியானங்கள் செய்யும் போதும், யோகா மற்றும் பிராணயாமா
செய்யும் போதும், உங்களுடைய ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. உடலுக்கு சக்தி கிடைக்கிறது.
உங்களுக்கு மேலும் பல அனுபவங்கள் கிடைக்கிறது. அதிர்ஷ்டவசமாக வாழும் கலையில் உங்களுக்கு ஆழ்ந்து செல்லுவதற்க்கான எல்லா வழிவகைகளும் உள்ளது.
நாரத பக்தி சூத்திரம் (நாரதரின் முனிவர் கூறிய அன்பின் மூதுரை பற்றிய கருத்துக்கள்) வழங்கும் ஆன்மிக அம்சம்,
அஷ்டவக்ர கீதா அளிக்கும் அறிவார்ந்த விசாரணை மற்றும் ஊக்குவிப்பு ஆகியவை உள்ளன. பதஞ்சலி
யோகா சூத்திரம் மூலமாக நமக்கு யோகா ஞானமும் கிடைக்கிறது. நம்முடைய விழிப்புணர்வு மற்றும்
உடல் மன நலம் காக்கும் அணைத்து அம்சங்களும் உள்ளன. மேலும் அது அறிவியல் சார்ந்தது.
நாம் அறிவியல் முறையில் மேலே செல்ல வேண்டும் கண்மூடித்தனமான
நம்பிக்கையில் அல்ல என்பதை நான் நம்புகிறேன். இது தான் வாழும் கலையின் சிறப்பு தன்மை.
மக்கள் உண்ணாவிரதம் பற்றி அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ளாமலேயே உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
அவர்கள் வழக்கமாக நாள் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் இருந்து இரவில் மிக அதிகமாக சாப்பிடுகிறார்கள்
அல்லது வறுத்த உணவை சாப்பிடுகிறார்கள். நவராத்திரி நேரத்தில் பல இந்துக்கள் உண்ணாவிரதம் இருந்துவிட்டு
உருளைக்கிழங்கு சிப்ஸ், வேபர், இனிப்பு வகைகள்
ஆகியவற்றை சாப்பிடுகிறார்கள்.
இனிப்பு சாப்பிடுவது சரி. ஆனால் உண்ணாவிரதம் இருக்கும் போது
உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் வேபர் ஆகியவற்றை சாப்பிடுவது நல்லதல்ல. தென் இந்தியாவில்
உள்ளவர்கள் இட்லி (புளிக்க அரிசி மாவில் செய்யப்படுவது) சாப்பிடுவது சரி என்றும் அரிசி
சோறு சாப்பிடுவது சரி ஆல் என்றும் கருதுகிறார்கள். அவள் சாப்பிடுவதும் சரியே ஆனால்
அதனுடன் மற்ற ஏதேனும் சாபிடுவது சரியல்ல. இது
தவறான முறையிலான உண்ணாவிரதம் ஆகும். முஸ்லிம்கள் கூட நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து மாலை நேரத்தில்
அது முடிவுறும் போது அதிகமாக சாப்பிட்டு விடுகிறார்கள். அது சாப்பாட்டு முறைக்கு முரண்பாடானது.
அது மேலும் விஞ்ஞானபூர்வமற்ற உண்ணாவிரத முறை ஆகும். நாம் எப்போதுமே இங்கே விஞ்ஞானத்தை
பின்பற்ற வேண்டும். உண்ணாவிரதம் நல்லதே, ஆனால் நாம் அதை அறிவியல் வழியாக செய்வதை பின்பற்ற
வேண்டும். உண்ணாவிரத நேரங்களில் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உண்ணாவிரதத்தில்
இருந்து வெளியே வரும் போது மிக மென்மையாக வெளி வர வேண்டும்.(உண்ணாவிரதத்தில் சுத்தப்படுத்தப்பட்ட
உடலை அதிகம் வருத்தாமல்). அது தான் உடலுக்கும்
மனதுக்கும் நல்லது.
கே:
குருதேவ்! நேற்று நீங்கள் இந்திராகாந்தியை பற்றி பேசும் போது அவர் புத்தமத நாடுகள்
அனைத்தையும் புத்தர் பிறந்த இந்தியாவுடன் இணைக்க முயன்றார் என்று கூறியுள்ளீர்கள்.
அது இன்று சாத்தியமாகுமா? யார் அதை செய்ய முடியும்.
குருதேவ்:
எல்லா நாடுகளும் ஒன்று சேர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாம் வாழும் கலையில்
அதைத் தான் செய்து கொண்டிருக்கிறோம். நாம் உலக மக்கள் அனைவரையும் ஒரே குடும்பமாக கொண்டு வந்து கொண்டிருக்கிறோம்.
அதுவே "வாசுதேவ குடும்பகம்" (அனைவரும் ஒரே குடும்பம்! அனைவருக்கும் ஒரே கடவுள்!)
காற்றுக்கு எல்லைகள் தெரியாது. சூரியனுக்கு எல்லைகள் தெரியாது. உண்மையில் இந்த பூமி
எல்லைகள் அற்றது.
பல தரப்பட்ட பிரிவுகள் வெவ்வேறு மக்களுக்கிடையே மனிதர்களால்
ஏற்படுத்தப்பட்டவையே. இந்த முழு உலகமும் தெய்வீக நோக்கத்தில் ஒரே மனித இனமாக ஒன்று
சேர வேண்டும் என்று கனவு காண வேண்டும். இந்த கருத்தோடு ஐக்கிய நாடுகள் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் துரதிருஷ்டவசமாக அங்கே தெய்வீக சிந்தனைகள் இல்லாததால் அது வெற்றி பெற வில்லை.
கே:
குருதேவ்! நம்முடைய உடலில் உள்ள உண்மையான வஸ்துவை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கி வைக்கலாம்
என்றும் மீதி உள்ளது வெற்றிடம் என்றும் சொல்லப்படுகிறதே. இந்த பின்னணியில் யோக ஆற்றல்
மூலம் மிதக்க செய்யும் நிகழ்வுகள் குறித்து சிறிது விரிவாக சொல்ல முடியுமா?
குருதேவ்: நீங்கள்
எழுந்து நிற்க வேண்டும் என்று விரும்பினால் என்ன செய்கிறீர்கள்? சரி, இப்போது எழுந்து
கொள் என்று உங்கள் மனம் உடலுக்கு சொல்லும் போது 65ல் இருந்து 70 கிலோ எடை உள்ள திரள்
எழுந்து நடக்க ஆரம்பிக்கிறது. கால் விரல் பகுதியின் உதவியுடன் எழுந்து நடக்கிறீர்கள்.
அவ்வாறு தான் உங்கள் உடல் தூக்கப்படுகிறது. எனவே எப்படி இது நடக்கிறது. இது அனைத்துமே
மனதில் ஏற்படும் ஒரு எண்ணத்தினால், உணர்வினால்
ஆரம்பமாகிறது. மனம் ஒரு சீரான நிலையில் உள்ள போது, ஒரே ஒரு எண்ணத்தினால் உடலை தூக்க முடிகிறது.
ஆனால், யோக ஆற்றல் மூலம் உடலை காற்றில் மிதக்க செய்யும் நிகழ்வுகள்
எதையும் நான் பார்த்ததில்லை என்று நான் உங்களுக்கு சொல்லிக் கொள்ளுகிறேன். உடல் தரையில்
இருந்து மேலே தூக்கப்படுகிறது. பலருக்கு இந்த அனுபவம் சிறிதளவு ஏற்பட்டுள்ளது. ஆனால்
காற்றில் மிதக்க ஆரம்பித்த எவரையும் நான் பார்த்ததில்லை.