தெய்வம் உங்களை காயப்படுத்தப்படுவது - சாத்தியமற்றது

நவம்பர் 29, 2013 பெங்களுரு, இந்தியா 



கே: குருதேவ்! தெய்வமே ஒருவரை காயப்படுத்தப்படுவதாக நினைக்கும் போது, எங்கே செல்வார்?

குருதேவ்: எங்கும் செல்ல வேண்டியதில்லை.தெய்வம் உங்களைகாயப்படுத்தப்படுவது சாத்தியமற்றது.நாங்கள் பள்ளியில் பயின்ற போது ஒரு அழகான கன்னட செய்யுளை படித்து வந்தோம். கரும்பை மேலும், மேலும் பிழியும் போது தான் அதிலிருந்து வரும் சாறு அதிக இனிப்பாக இருக்கும் என்று அது கூறுகிறது. வைரமும் அதிகமாக வெட்டப்படும் போது அது அதிகமாக ஜொலிக்கிறது. தங்கம் அதிகமாக உருக்கப்படும் போது ஜொலிக்கிறது. சந்தனம் அதிகம் தேய்க்கப்படும் போது அது அதிக மணம்   பரப்புகிறது.

இயற்கை உங்களை பல வேறுபட்ட வேலைகளிலும் பரீட்சைகளிலும் புகுத்துகிறது. நீங்களும் அவை அனைத்திலும் இருந்து பிரகாசத்துடன் வெளி வருகிறிர்கள். இயற்கை உங்களால் சுமக்க முடியாத ஒரு பளுவை உங்களுக்கு தருவது இல்லை என்பதை நினைவில் வைத்திருக்கவும். இறைவன், விலங்குகள் அதனுடைய வாலை மேலும் கீழும் ஆட்ட வேண்டும் என்பதற்காகவே, முதலில் வாலின் அளவை அளந்து அதன் பின்னரே அதை அந்த விலங்குடன் இனைக்கிறான். ஒரு எலிக்கு யானையின் வால் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த எலியினால் வாலை சிறிதும் உயர்த்த கூட இயலாது. இயற்கை மிகவும் புத்தி சாதுர்யமானது. உங்களால் எந்த பிரச்னையை கையாள முடியுமோ அதை தான் உங்களுக்கு கொடுக்கும்.

கே: குருதேவ்! என்னிடம் வெளியில் சொல்ல முடியாத மனதில் வேரூன்றியிருக்கும் ஒரு ரகசியம் உள்ளது. நான் அதை வெளியே சொன்னால் நான் அனைவரையும் மற்றும் அனைத்தையும் இழந்து விடுவேன். முழுமையாக சரணாகதி அடைய இயலாமலும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்திலும் நான் ஒரு சடரீதியான உலகில் இருக்கின்றன். நான் என்ன செய்வது?

குருதேவ்: நீங்கள் விளைவுகளை அறிந்திருக்கிறீர்கள்.பிறகு எதற்காக எந்த பலனும் இல்லாத ஒரு செயலை நீங்கள் செய்ய வேண்டும்? வாக்குமூலம் என்று ஒன்று இருக்கிறது. இப்போது நீங்கள் முன் பின் தெரியாத எவரிடமும் வாக்கு மூலம் கொடுக்க முடியாது. யார் நீங்கள் சொல்லுவதை மிகவும் ரகசியமாக வைத்திருப்பாரோ அவரிடம் வாக்கு மூலம் கொடுக்கலாம். கிருத்துவ தேவாலயங்களில் இம்முறை பராமரிக்கப்படுகிறது. நீங்கள் ஒரு தனியான அறைக்குள் சென்று உங்களுடைய ஒப்புதல் வாக்கு மூலத்தை அளிக்கலாம்.  யார் வாக்குமூலம் அளிப்பது என்று அந்த பாதிரியார் கூட அறிய இயலாது. நீங்கள் சென்று வாக்குமூலம் அளித்தபின் பாதிரியார் ஒரு சிறிய சாளரத்தின் வழியாக உங்களுக்கு பரிகாரத்தை கூறுவார். அது உங்களை உயர்த்தி விடும். நீங்களும் வெற்றிடமாகவும் காலியாகவும் மாறவே இங்கு வந்திருக்கிறீர்கள். உங்களுடைய தொல்லைகளை ஒரு காகிதத்தில் எழதி இந்த கூடையில் போட்டுவிட்டு சுதந்திரத்தை உணரலாம். கடந்த காலத்தில் எத்தனையோ விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் நடந்திருக்கலாம். அவை முடுவுற்றவை, கடந்து சென்றவை. நீங்கள் ஏன் அவைகளுடன் ஒட்டிக்கொண்டு உங்களுடைய நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும் பரிதாபமாக்கிக் கொள்ளுகிறீர்கள்?. அதனால் எழுதி வைத்து விட்டு அவைகளை மறந்து விடுங்கள்.

நீங்கள் அவைகளை சொல்லுவதனால் நன்மை ஏற்படும் என்றாலோ அல்லது சொல்லாமல் விடுவதனால் மற்ற அப்பாவிகளுக்கு ஊறு விளைவுக்கும் என்றாலோ, இறக்கத்த தன்மையுடன் மற்றவர்கள் அதில் சிக்கிக்கொள்ளாதவாறு சொல்லிவிடுங்கள். ஆனால் அவ்வாறு சொல்லுவது யாருக்கும் உபயோகம் இல்லாதது என்றால்,அதை சொல்லுவதிலோ அதிலேயே மூழ்கி இருப்பதிலேயோ எந்த அர்த்தமும் இல்லை. ஞானமுள்ள ஒரே ஒருவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து விடுங்கள் அல்லது ஒரு சீட்டில் எழுதி இறைவனிடம் சமர்ப்பித்து விடலாம். நிம்மதியாக இருங்கள்.

கே: எதனால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகின்றனர். ஏழைகள் ஒரு வேலை முழு சாப்பாட்டிற்காக   போராடிக் கொண்டிருக்கும் போது இறைவன் எவ்வாறு அவர்களை பராமரிக்கின்றார்?.

குருதேவ்!: என்னுடைய பார்வையில் ஏழைகள் அவ்வாறு இருப்பதற்கு காரணம்   இறைவன் அவர்களை ஏழ்மையில் இருக்குமாறு தண்டிப்பது அல்ல, மது பானமே அவர்களை ஏழ்மையில் கிடத்துகிறது. ஒரு கூலித் தொழிலாளி ஏறக்குறைய அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் பெரும் சம்பளத்தை பெறுகிறார். ஆனால் அவர் மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்தை மது பானத்திற்கு செலவு செய்வதனால் ஏழ்மையில் இருக்கின்றார்.

ஏழ்மைக்கு இரண்டாவது காரணம் சோம்பேறித்தனம். இன்றும் ஒரு ஏழை பையனோ பெண்ணோ கடின முயற்சி செய்தால் நிச்சயமாக மேலே வரலாம். அடிமட்டத்தில் இருந்து மேல் நிலைக்கு வந்து பலருடைய உதாரணங்கள் உள்ளன. அதை அடைவதற்கான ஆர்வம், உற்சாகம் மற்றும் விருப்பம் ஆகியவை தேவைப்படுகின்றன. பல சமயங்களில் மக்களிடம் அவை இருப்பதில்லை.

இந்த பெங்களுரு ஆசிரமம், நாங்கள் இந்த இடத்துக்கு முதலில் வந்தபோது யாராலும் விரும்பப்படாத தரிசு நிலமாக இருந்தது. இங்கு எதுவுமே விளையாது, புற்களோ, மரங்களோ கிடையாது. 60 ஏக்கர் நிலத்தில் ஒரே ஒரு மரம் தான் இருந்தது. வேறு எந்த மரமும் இல்லை. வேறு எதுவுமே இல்லை. விளைச்சலும் தண்ணீரும் இல்லாத பாறை நிலமாக இருந்தது.

அந்த நாட்களில், பிலிப், பிரமிளா, கிரண், வினோத் மேனன் மற்றும் பலர் இங்கே இருந்தார்கள். இந்த மரங்கள் அனைத்தையும் நட்டனர். ஆரம்ப நாட்களில் அவர்கள் மரங்களுக்கு வாளி வாளியாக தண்ணீர் விடுவார்கள். ஆசிரமத்தை சுற்றிலும் மக்கள் ஓலை கூரையினால் ஆனா குடிசைகளில் வசித்தார்கள். எனக்கு நினைவில் உள்ளபடி பஞ்சாயத்து தலைவருடைய ஒரே ஒரு வீடு மட்டுமே ஒட்டு கூரையினால் ஆனது. மற்ற எல்லா வீடுகளுமே மழையிலே ஒழுகுகின்ற பலமான கற்று வீசும் போது பிய்த்துக்கொண்டு செல்லுகின்ற ஓலை கூரைகளால் ஆனவையே. இந்த கிராமத்தில் மட்டும் அல்ல, சுற்றியிருக்கும் அனைத்து கிராமங்களும் அவ்வாறானவையே.

மேலும், கனகபுரா சாலையில் காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றுமாக இரண்டு பேருந்துகளே சென்று கொண்டிருந்தன. கீழே உள்ள ஆற்றில் இருந்து நகரத்துக்கு மணல் கொண்டு செல்லும் லாரிகள் மட்டுமே இருக்கும். சுதர்சன கிரியா நாடாக்களில் நீங்கள் அந்த லாரிகளின் சப்தத்தை கேட்கலாம். அப்போது ஜயநகரில் இருந்து ஆசிரமம் வருவதற்கு நீங்கள் இரண்டு பேருந்துகள் பிடிக்க வேண்டி இருக்கும்.

நாங்கள் இந்த இடத்திற்கு வந்த போது இது முழுவதுமாக ஒரு கிராமமாகவே இருந்தது. சுற்று வட்டாரத்தில் உள்ள இருபது கிராமங்களில் இருந்து குழந்தைகளை கொண்டு வந்து ஒரு பள்ளிக்கூடம் திறந்தோம். சுற்றியிருந்த மக்கள் அனைவரும் ஏழைகள்.  வாழும் கலை அமைப்பிலும் எங்களிடம் குறைந்த பணவளமே இருந்தது. அடிக்கடி நாங்கள் வங்கியில் இருந்து ஆசிரமத்தின் பெயரில் தற்காலிக கடன் பெற்று இரண்டு அல்லது மூன்று மாதங்களில் திரும்ப செலுத்தியிருக்கின்றோம். 

1990ஆம் ஆண்டுகளில் என நினைக்கிறேன், நான் சுற்று வட்டாரங்களில் இருந்த 20 முதல் 35 வயதான வேலையற்ற இளைஞர்களை கூப்பிட்டு ஏதாவது ஒருவேலையை செய்யுமாறு கூறினேன். அவர்கள் வேலை ஏதும் செய்யாமல், நாள் முழுவதும் ரேடியோ கேட்டுக்கொண்டும், சீட்டு அல்லது கிரிக்கெட் ஆடியும், வெறுமனே அமர்ந்தும் அவர்களுடைய குடும்பக்களுக்கு பாரமாக இருந்தனர்.

மாலை வேளைகளில் அவர்கள் குடிக்க சென்று விடுவார்கள். நாங்கள் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்கள் அமைத்தோம் ஆனால் அந்த இளைஞர்களோ   வேலையின்றி இருந்தனர். அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் வயல் வெளிகளில் வேலையோ விவசாயமோ செய்ய விரும்பவில்லை. பள்ளிக்கே   செல்லாதவர்கள் அல்லது ஆரம்ப பள்ளி வரை சென்றவர்கள் மட்டுமே விவசாயம் செய்பவர்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதில் இருந்தது. அவர்கள் ஏன்   விவசாயம் செய்வார்கள்? வயல் வெளிகளில் சென்று வேலை செய்ய அவர்கள் விரும்பவில்லை.   

நான் கர்நாடக அரசு சிறு தொழில் துரையின் இயக்குனரிடம் இந்த 200 வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தரக்கூடிய திட்டங்களை அளிக்கும்படி கேட்டுக்கொண்டேன். நான் அவர்கள் எதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினேன். (நாங்கள் அஷ்டவக்ர கீதையை சொல்லும் கூடத்திற்கு அந்த இளைஞர்களையும் இயக்குனரையும் வரவழைத்தோம்). அந்த இயக்குனர் மிக ஆர்வத்துடன் வந்து, கடும் முயற்சியோடு 225 திட்டங்களை பற்றி மூன்று நான்கு மணி நேரம் எடுத்துரைத்தார். அந்த இளைஞர்கள் இது எப்படி சாத்தியப்படும் அது எப்படி சாத்தியப்படும் என்றெல்லாம் சாக்குகள் கூறினர். இயக்குனர் ஒரு திட்டத்தை பற்றி விளக்கி கொண்டிருக்கும் போதே "குருதேவ்! இது சாத்தியமல்ல" என கூறுவார். இறுதியாக நான் அவர்களிடம் எது சாத்தியப்படும் என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் காவல் துறையிலோ அல்லது பேருந்து நடத்துனர் வேலையோ பெற்று தருமாறு கேட்டனர். அரசாங்கத்தில் காவல் துறையிலோ, நடத்துனராகவோ எத்தனை வேலை கிடைக்கும்? ஒருவரும் தொழிலதிபராகவோ அதற்க்கான முயற்சியை எடுக்கவோ விருப்பப்படவில்லை. இவர்கள் ஏழைகளாக இருக்கவே விரும்புகின்றனர். நீங்கள் என்ன செய்ய முடியும்.

இந்த நேரத்தில் தான் நாங்கள் இளைஞர்களுக்கான தலைமை பயிற்சி திட்டத்தை (YLTP)  ஆரம்பித்தோம். நாங்கள் அவர்கள் அனைவரையும் 3 மாத தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தினோம். அவர்களிடம் இருந்த மெத்தனப்போக்கை அகற்ற காலையில் உடற்பயிற்சிகள் செய்ய வைத்தோம்.  அவர்கள் சுதர்சன கிரியாவும், தியானமும் செய்ய ஆரம்பித்த போது, அவர்களுக்கு நாங்கள் 3 மாதம் வேலை கொடுத்தோம்.     எனினும் அவர்களிடம்" நீங்கள் ஏதாவது தொழில் செய்ய வேண்டும்" என்று சொன்னோம்.இன்று அவர்களில் பலர் தொழிலதிபர்கள் ஆகியுள்ளனர்.       

இப்போது நீங்கள் ஆசிரமத்தை சுற்றி ஓலை வேய்ந்த கூரையை காண முடிகிறதா? இல்லையே! மக்கள் வீடுகள் கட்டிக் கொண்டுள்ளனர். இந்த கிராமத்தில் மட்டும் அல்ல. சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் வளம் பெற்றுள்ளன. பொருளாதாரம் மலர்ச்சியடைகிறது. இந்த பகுதியில் வேலையாட்கள் கிடைப்பதில்லை. அவர்கள் வேறு பகுதிகளில் இருந்து வருகிறார்கள்.  

அதே போல், இங்கே வாயிற்காவலராக வேலை பார்த்த ஒரு பையன் இருந்தான். இன்று அவன் கீழே 400 பேர் வேலை செய்கின்றனர். அவனுடைய கதை மிக சுவாரசியமானது. குழந்தையாக இருக்கும் போது அவன் பள்ளியில் அனைவரிடமும் சண்டையிட்டுக் கொண்டு தொந்தரவு கொடுப்பவனாக இருந்தான். எந்த பள்ளியும் அவனை சேர்த்துக் கொள்ள தயாராக இல்லை. அவனுடைய பெற்றோர் மிகவும் சோர்வுற்று நோய் வாய்பட்டு அவனை இங்கே கொண்டு வந்து விட்டு விட்டனர்.  அவன் அனைவரையும் அடிப்பதாலும் சுற்றிலும் உள்ளவகளுக்கு மிகவும் தொந்தரவு    தருவதாலும் அவனை அவர்கள் வீட்டில் வைத்துக்கொள்ள விரும்பவில்லை, நீங்கள் அவனை என்ன செய்ய விரும்புகிறீர்களோ அவ்வாறு செய்து கொள்ளலாம் என்று கூறி சென்று விட்டனர். அவன் சக்தி குடீருக்கு வெளியே அமர்ந்து என்னுடைய அறைக்குள்ளே வருபவர்களை தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பான்.அந்த நாட்களில் எங்களுக்கு பாதுகாப்பு காவலர்கள் யாரும் கிடையாது. அவன் ஒருவனே இருந்தான்.      அவன் அனைவரையும் நிறுத்திவிடுவான், என்னுடைய அம்மாவையும் கூட. என்னுடைய அம்மா உள்ளே வருவதற்காக அவனுடன் சண்டையிட வேண்டி இருக்கும்.

இங்கே இருந்ததே அவனுள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கியது. அவன் திரும்ப சென்று திருமணம் செய்து கொண்டான். அவன் அதிகம் படிக்கவில்லை ஆனால் ஒரு பெரிய தொழிலை துவக்கினான். அவனிடம் 300-400 ஆட்கள் வேலை செய்கின்றனர். இம்மாதிரியாக ஒன்றல்ல, பல உதாரணங்கள் உள்ளன. இந்த மெத்தனப்போக்கு நீங்க வேண்டும்.

நம் நாட்டில் மந்திரியாக இருக்கின்ற ஒருவர் ஒரு காலத்தில் தேனீர் விற்பனை செய்து கொண்டிருந்தவர் ஆவார். அவர் ஒரு மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர். இன்று அவர் ஒரு மாநில முதல் மந்திரியாக இருக்கிறார். இன்னுமொரு உதாரணம் ராம்நாத் கோயங்காஜி. அவர் இந்திரா காந்தியின் பதவிக்கே ஆபத்தை உருவாகிய இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை ஆரம்பித்தார். அவர் இரண்டாம் வகுப்பு வரை தான் படித்தவர். மும்பையில் கைவண்டியில் தெருதெருவாக காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்று கொண்டிருந்தவர். அவர் மிக ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்தவர் எனினும் இன்று ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கியிருக்கிறார். 

வறுமை அல்லது ஏழ்மையில் இருந்து வெளி வர உங்களுக்கு அந்த ஆன்மீக சக்தி, நம்பிக்கை மற்றும் விருப்பம் ஆகிய அனைத்தும் தேவைப்படுகிறது. ஏழைகளுக்கு உணவு மற்றும் பொருட்களை கொடுப்பது பயனற்றதாகும்.

எதியோபியா நாடு இன்னொரு உதாரணம் ஆகும். அங்கே ஏழு ஆண்டும் பஞ்சம் இருந்தது. எட்டாவது ஆண்டு, அங்கே மழை பெய்த பின்பும் யாரும் வேலை செய்ய விரும்பவில்லை. அவர்களுக்கு மற்ற நாடுகளில். இருந்து உதவிகள் கிடைத்துக் கொண்டிருந்தன. எவரிடமிருந்தாவது உணவு மற்றும் பொருள் உதவி கிடைக்கும்   என்று அவர்கள் எதிர்பார்த்தனர். இன்றும் எதியோபியாவில் பெரும் அளவிலான நிலங்கள் உள்ளன. அந்நாட்டு மக்களிடம் ஆர்வம் இல்லாததால் இந்தியர் மற்றும் சீனர் அங்குள்ள நிலங்களை வாங்கி பயிர் செய்கின்றனர்.

எதியோபியாவில் மிகப் புதுமையான இன்னொரு வழக்கமும் உள்ளது. ஏதோ ஒரு மத நம்பிக்கையினால் அந்நாட்டு மக்கள் வருடத்தில் ஆறு மாதங்கள் பால் பண்ணை பொருள்கள் எதையும் உபயோகிப்பதில்லை. பால் பண்ணை பொருள்களை விற்க இயலாது என்பதனால் யாரும் அங்கே அந்த வியாபாரத்தை செய்ய விரும்புவதில்லை. ஒரு வேலை பண்டைய நாட்களில், குளிர் காலத்தில் குளிர்ந்த பால் அருந்தக்கூடாது என்று சொல்லப்பட்டிருக்கலாம் அல்லது அது தர்க்கரீதியான ஒரு முடிவாக இருக்கலாம். எனினும் ஆறு மாதங்களுக்கு பால் அருந்தாமல்   இருப்பதும் இதர பால் பண்ணை பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதும் அந்த தொழிலை மிகவும் பாதிக்கும். ஏழ்மையில் இருந்து வெளி வருவதற்கு ஒருவருக்கு சரியான மனப்போக்கு தேவைப்படும். நான் என்ன சொல்கிறேன் என்றால் ஏழ்மை மற்றவர்களால் பலியாக்கப்படுவதை விட அதிகமாக  சுயமாக திணிக்கப்பட்டு கொள்வதே ஆகும். நான் பலியாக்கப்படுகிறேன் யாரோ ஒருவரிடம் பணம் உள்ளது, என்னிடம் அது இல்லை என்று பலர் கூறுவர்.   

ஏன் உங்களிடம் பணம் இல்லை? ஏன் என்றால் நீங்கள் அதற்காக உழைக்கவில்லை. ஆயினும் ஏழைகள் சுரண்டப்படுகிறார்கள் என்கின்ற இன்னொரு பக்கமும் உள்ளது. அதுவும் சரி அல்ல.

கே: குருஜி, என்னுடைய புகுந்த வீட்டில் சாதத்தை கையால் தொட்டால் கையை கழுவ வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். அதே போல் மாத விடாய் காலத்தில் பூஜை அறை, சமையல் அறை உள்ளே போக கூடாது, துணி மணிகளையும் தொடக்கூடாது என்கிறார்கள்.அவர்கள் ஏன் இந்த வழக்கங்களை பின்பற்றுகிறார்கள்? இதற்கு எதாவது விஞ்ஞான பூர்வமான காரணம் இருக்கிறதா?

குருதேவ்: ஒரு வழக்கம் சரியா தவறா என்று நிர்ணயம் பண்ணுவதற்கு விஞ்ஞான
பூர்வமான பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு நம் பழங்காலத்து வீடுகளில், கழிவறைக்கு செல்லும் போது பூணுலை காதில் சுற்றி மாட்டி கொள்வார்கள்.  இதற்கு விளக்கம் கூறுகையில் ஒரு வேளை பூணுல் மிகவும்  நீளமாக இருந்ததால் இப்படி செய்தார்களோ என்று நினைத்தார்கள். ஆனால் நியூ யார்க்கில் ஒரு விஞ்ஞானி காது மடல் மற்றும் காதின் பின்புறமும் நம் குடல் உறுப்புக்களும் நேரடியாக சம்பந்த பட்டிருக்கின்றன என்று நிரூபித்தார். இதனால் காதை அழுத்திய பிறகு நம் ரத்த அழுத்தம் சீராகிறது அதனால் குடல் உறுப்புக்கள் சரியாக வேலை பண்ணுகின்றன என்பதை நிரூபித்தார். அதனால் இந்த பழக்கத்திற்கும் நம் உடல் ரீதியான வழக்கத்திற்கும் சம்பந்தம் உள்ளது. அதனால் எல்லாமே மூட நம்பிக்கைகள் என்று ஒதுக்கி விட முடியாது. மூட நம்பிக்கை என்று நினைத்தது கூட விஞ்ஞான பூர்வமாக பார்க்கும் பொழுது சரியாக படுகிறது.

அதே போல மஞ்சளை பற்றி நிறைய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தார்கள். அதை சமையலில் சேர்ப்பதை பற்றி; பாத்திரங்கள் சுத்தபடுதுவது பற்றி ; எல்லாமே மூட நம்பிக்கைகள் என்றார்கள். பல பதார்த்தகங்களில் சமைத்த பின் துளசி இலை போடுவார்கள். எண்பதாம் ஆண்டுகளில் ஆராய்ச்சி செய்தவர்கள் அது வெறும் நிறம் மட்டும் தான் கொடுக்கும் மற்றபடி அதை சமையலில் சேர்ப்பதால் எந்த ஒரு உபயோகமும் இல்லை என்றார்கள். ஆனால் தொண்ணூறாம் ஆண்டுகளில் மஞ்சள் ஒரு நல்ல ஆண்டியாக்சிடண்ட்(Anti Oxidant) என்று கண்டுபிடித்தார்கள்.

ஆயுர்வேத மருத்துவர்கள் மஞ்சள் “வயச்தாபன்" ஆக செயல்படுகிறது, அதாவது முதுமை அடைவதை நிறுத்துவது என்று கூறினார்கள். ஆங்கில மருத்துவர்கள் இதை ஒத்துக் கொள்ளவில்லை. பிற்காலத்தில் விஞானிகள் மஞ்சள் உடலுக்கு நல்லதே என்று நிரூபித்தார்கள். அது கான்சரை கூட தடுக்க வல்லது. அதனால் நாம் எந்த ஒரு வழக்கத்தையும் தவறு என்று நிரூபிக்கும் வரை ஒதுக்கிவிட முடியாது. எனவே நாம் எதையும் திறந்த மனதுடன் பார்க்க வேண்டும்; ஒரு சமயம் சரி என்று சொன்னதை இன்னொரு சமயம் தவறு என்று பின்னல் நிரூபிக்க கூடும்.

கடலை எண்ணெய் மிகவும் மோசமானது என்று பெரிய சர்ச்சை. தென் இந்திய வீடுகளில் கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தான் உபயோகபடுத்துவார்கள். பாமாயில் தயாரிக்கும் நிறுவனங்கள் தன்னுடைய பொருளை விற்பதற்காக இந்த எண்ணைகள் மோசமானவை, பாமயில் தன் உயர்வானது என்றன. திடீரென எல்லோரும் பாமாயிலை உபயோகிக்க ஆரம்பித்து விட்டனர்.

இப்போது ஆராய்ச்சியில் கடலை எண்ணெய் மிக நல்லது என்று நிரூபித்து விட்டது. அதுதான் உன்னதமானது என்று புகழ் பாடுகிறார்கள். சொல்ல போனால் கடலை எண்ணெயை நூற்றுகணக்கான, ஆயிரகணக்கான வருடங்களாக உபயோகித்து வருகிறார்கள். எள் எண்ணையை தமிழ் நாட்டில் நல்லெண்ணெய், நல்ல எண்ணெய் என்று கூறினார்கள். அது நமது உடலுக்கு நல்லதை செய்யும். பாமாயில் முழுவதும் மலேசியாவில் இருந்து இறக்குமதியாவதால் சில விஞ்ஞானிகள் இந்த ஆராய்சிகள் பாமாயில் நிறுவனங்களின் நிதி உதவியால் செய்யப்படுவதால் இந்த மாதிரி கதைகளை, தவறான எண்ணங்களை கொடுத்தனர். எனவே ஆராய்சிகள் உண்மையானவையாக இருக்க வேண்டும், மேலும் திறந்த மனதுடன் ஆராய்ச்சியை வரவேற்க வேண்டும். பிற்காலத்தில் இந்த முடிவு தவறானவை என்றால் பழையதை பற்றிகொள்ளாமல் அதையும் ஏற்று கொள்ள வேண்டும்.

ஆயுர்வேதத்தின் பெருமை அது 5000 ஆண்டு காலத்து சோதனைகளை கடந்தது .எனவேதான் பழக்கங்களை ஒதுக்கிவிட முடியாது. அப்படி சொன்னாலும் பல நேரங்களில் பழக்கம் என்ற பெயரால் பல மாறுபட்ட விஷயங்களும் கடைபிடிக்கபடுகின்றன. உதாரணமாக அரிசி பாயசத்தை சிறு குழந்தையின் உடலில் தடவினால் குழந்தை நன்றாக வளரும், அல்லது குழந்தையை தலைகீழாக சில நிமிடங்கள் வைத்திருந்தால் சில கடவுள்களுக்கு திருப்தி அளிக்கும் என்று சொல்லுவார்கள். இவை முட்டாள்தனமானவை. இவை மிகவும் அரிதானவை. சில கிராமங்களில் மதத்தின் பெயரால் செய்யக்கூடும். இது கேலிக்குரியது. நான் எல்லா பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. அதே சமயம் பழக்க வழக்கங்களை முழுவதுமாக ஒதுக்கி விட முடியாது. நாம் நடு பாதையை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு வீட்டில் குழந்தை பிறந்தாலோ அல்லது யாராவது இறந்து விட்டாலோ தீட்டு என்று சொல்வார்கள். பத்து நாட்களுக்கு அவர்களுடைய மற்றும் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களால் இது அனுசரிக்கப்படும்.அவர்கள் இந்த நாட்களில் எதையும் கொண்டாட மாட்டார்கள். எங்கும் செல்ல மாட்டார்கள். அவர்களில் வீட்டில் இருந்து யாரும் உணவு வாங்கிக்கொள்ள மாட்டார்கள். இதற்கு என்ன காரணம். யாராவது இறக்கும்போது உறவினர்கள் மிகுந்த துக்கத்தில் இருப்பார்கள்.அந்த துக்க சூழ்நிலையில் அவர்கள் எல்லா விதமான கடமைகளில் இருந்து விடுபடுகிறார்கள்.  அவ்வளவு தான். யாரையாவது தொடுவதினால் ஒன்றும் ஆகிவிடாது. அந்த சூழ்நிலை துக்கமானது, அவ்வளவு தான்.

ஒரு குடும்பத்தில் யாராவது வெகு நாளாக உடல் நிலை சரியாக இல்லாமல் இருந்து இறந்து விட்டால் துக்கம் இருப்பதில்லை. சந்தோஷபடுகிறோம். அவருக்கு முக்தி கிடைத்து விட்டது. நான் அவருக்காகவும் எனக்காகவும் சந்தோஷபடுகிறேன். அப்படி இருந்தால் மறை முறை எண்ணங்களோ, மன அழுத்தமோ, துக்கமான அலைகளோ இருப்பதில்லை. சந்தோஷமாக இருக்கிறார்கள். எல்லோரும் என்றாவது ஒருநாள் போகத் தானே வேண்டும்.

அதே போல் குழந்தை பிறக்கும் போது மிகுந்த உத்வேகம் மற்றும் சந்தோஷபடுகிறார்கள். உற்சாக அலைகள் அமைதி அடைவதில்லை .அந்த நிலையிலும் கடமைகளில் இருந்து விடுபடுகிறார்கள். மக்கள் நமது அறிவுக்கு புலப்படாத அளவிற்கு மனதை விரிவடைய செய்து விடுகிறார்கள்.

பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்படும் போது நல்ல ஓய்வு தேவை. அந்த நோக்கத்தை கொண்டு தான் பெண்களை எந்த வேலையும் செய்யகூடாது என்ற சம்ப்ரதாயம்  ஏற்பட்டது.  பெண்கள் தூக்கம் ஓய்வு, படிப்பு, பின்னுதல் போன்ற வேளைகளில் ஈடுபடலாம். இல்லாவிடில் வேலை என்று ஆரம்பித்தால் பெண்களுக்கு நிறைய வேலை செய்ய வேண்டி இருக்கிறது.

சாதம் மற்றும் சாப்பாட்டை பற்றி கூறும்போது முற்காலத்தில் சமையலில் கஞ்சி மற்றும் பசை பதம்  உடையதாக இருந்தது. சாதரணமாக அது பாத்திரத்தில் இருந்து வெளியே வழியும். நீங்கள் பாத்திரத்தை தொட்டு விட்டு வேறு எவற்றை தொட்டாலும் அதிலும் ஒட்டிக்கொள்ளும். அதனால் தான் கைகளை அலம்பிகொள்ள வேண்டும். இந்நாளில் கைகளை உபயோகபடுத்துவது இல்லை, கரண்டி உபயோகிக்கிறோம். முன்னாட்களில் தூய்மைக்கு மிகுந்த மகத்துவம் உண்டு. எனவே பசை பதம் உள்ள உணவை தொட்டால் கைகளை அலம்ப வேண்டும். பழங்களையும் தனியாக வைத்திருந்தார்கள். இதை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

யுதர்களிடியே பாலை தொட்டால் மாமிசத்தை தொடாத வழக்கம் இருந்தது .சில விதி முறைகள் இருந்தன. ஜப்பான் நாட்டு மக்களிடமும் சில பழக்கங்கள் உண்டு. விருந்தாளிகளுக்கு என்று தனி கிண்ணங்களும் பாத்திரங்களும் உண்டு. அவை தனியான அலமாரியில் வைக்கப்பட்டு இருக்கும். அவர்கள் விருந்தாளிகளின் பாத்திரங்களை உபயோகிக்க மாட்டார்கள். தங்களுடை பாத்திரங்களையும் மற்றவர் உபயோகிக்க விடமாட்டார்கள். இந்த அதிசயத்தை நான் ஜப்பானில் கண்டேன். இந்தியாவிலும் சில குடும்பங்களில் இந்த வழக்கம் உள்ளது . ஜப்பானில் இந்த வழக்கம் பாரம்பரியம் உள்ள குடும்பங்களிலும் புத்த மதாலயங்களிலும் பின்பற்றபடுகிறது.

இந்த பழக்க வழக்கங்களுக்கு விஞ்ஞான அடிப்படை இல்லாவிட்டால் அதை நிறுத்திவிட வேண்டும். சில பழக்க வழக்கங்கள் இருந்தால் அவை நல்லவையா  என்று பார்க்க வேண்டும் அல்லது பரிசோதனையவது செய்கின்ற திசையில் செல்ல வேண்டும்.

கே: குருதேவ்! போதை மருந்துகளுக்கு அடிமைப்பட்டு தன்னையே காயப்படுத்திக் கொள்ளும் ஒருவரை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

குருதேவ்: அவரை அதில் இருந்து வெளிக்கொண்டு வர உங்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும். அன்பு திறமை அல்லது ஏதாவது ஒரு சக்தி மூலமாக அவர் வெளியே வர அவருக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். ஏதேனும் ஒரு மறுவாழ்வு மையத்தில் அவரை நாம் சேர்க்க வேண்டும். கல்கத்தாவில் ஒன்றும் மற்றும் பல இடங்களிலும் உள்ளன. அவரை அப்படி ஒரு மையத்திற்கு கொண்டு சென்று எப்படியாவது சுதர்சன கிரியா செய்ய வைக்கவும்.  அவர் பிரணாயமம் மற்றும் சுதர்சன கிரியா கற்றுக்கொண்டால் அது ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.சுதர்சன கிரியா பயிற்சி செய்த பலர் போதை மருந்து  மற்றும் குடிப் பழக்கத்தை விட்டிருக்கின்றனர்.        

கே: குருதேவ்! தற்போது அதிக மக்கள் பற்று நோயால் துன்பப்படுகின்றனர். எப்படி இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். நோயாளியும் அவருடைய குடும்பமும் எவ்வாறு அந்த துபத்தை குறைக்க முடியும்?.

குருதேவ்: வாழ்க்கை முறையில் மாற்றம் உதவியாக இருக்கும். நீங்கள் உறங்க செல்லுமுன் ஐ-போன், ஐ - பேட், வைபை போன்ற எல்லா மின்னணு சாதனங்களையும் அனைத்து விட்டு படுக்க செல்லவும். திரிபாலா சாவனப்ரகாஷ் எடுத்துக்கொள்ளவும். மஞ்சள் உபயோகிக்கவும். இம்மாதிரியான பிராணவாயுவை முன்னேற்றும் பொருட்கள் (ஆண்டியாக்சிடன்டஸ்) உடலுக்குள் செல்ல வேண்டும்.