பிரம்மச்சரியத்தின் உண்மையான பொருள்


அக்டோபர்  15 - 2013 - பெங்களூர் - இந்தியா 




கே: குருதேவ், சங்கராச்சாரியார் ஒரு அரசனின் உடலில் புகுந்து அதன் மூலம் வாழ்வின் இன்பங்களை எல்லாம் அனுபவித்ததாக சொல்லப்படுகின்றது. பிறகு அவர் எப்படி பிரமச்சாரியாக கருதப்பட முடியும்?

குருதேவ்: அது உணர்வு சம்மந்தமானது. உள்ளுணர்வின் தன்மையே பிரம்மச்சரியம் ஆகும்.பிரம்மா என்றால் முடிவில்லாதது என்று பொருள். ‘'சாரியா' என்றால் நகர்ந்து செல்லுதல் என்று பொருள். எல்லையற்ற ஒன்றினுள் செல்வதே பிரமச்சரியம்.  எல்லையற்றதை அடையாளம் கண்டு கொள்வதும் அதனை உணர்வதும் தான் பிரமச்சரியம். அது ஒரு நிகழ்வு. அது தானாக நிகழ்வது. அப்படியென்றால் நீங்கள் பேரின்பத்தை உணர உடல் சார்ந்த இன்பம் தரும் செயல்கள் எதையும் செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால் பேரின்பம் ஏற்கெனவே உள்ளது. பேரின்பம் இருப்பதனால் உடல் சார்ந்த செயல்கள் பற்றி ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?   இத்தகைய ஒரு நிலையே பிரம்மச்சரியம் ஆகும். உடலானது அதற்கான சுழற்சிகளில் செல்லும் தன்மையுடது ஆனால் நம் உள்ளுணர்வு அவற்றில் பங்கு பெறாமலும் சிக்கிக் கொள்ளாமலும் வாழ்வதே உண்மையான திறன்.  

கே: குருதேவ், யாகங்களில் ரிஷிகள் வேண்டி அழைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றனர். இதற்கான மிகச் சரியான முறை எது? நீண்ட காலத்திற்கு முன் வாழ்ந்தவர்கள் எப்படி இன்று இருக்க முடியும்?  

குருதேவ்: உள்ளுணர்வு என்றும் அழிவதில்லை. மனமும் அழிவதில்லை. உண்மையில் எதுவுமே எப்போதும் அழிவதில்லை, வடிவம் மட்டுமே மாறுகின்றது.   பருப்பொருள் ஆக்கப்படுவதுமில்லை; அழிவதுமில்லை. ஆற்றலும் அதே போன்றது தான். உள்ளுணர்வில் ரிஷிகளின் ஆற்றல் அடங்கியுள்ளது. இது உங்களுக்குள் பல மனநிலைகள் அடங்கியுள்ளதை போன்றது. நீங்கள் திரைப்படத்திலோ அல்லது நாடகத்திலோ நடிக்கும் போது வெவ்வேறான மனநிலைகள உருவாக்குகின்றீர்கள் நடிகர்கள் சமயங்களில் வெவ்வேறு மனநிலைகளை வெளிப்படுத்துகின்றனர். ஒரு நடிகர் கோபம், சீற்றம், வீரம்,பயம் போன்ற மன நிலைகளை வெளிப்படுத்துகின்றார்.  ஆக, நாம் இதுபோன்ற எல்லா உணர்சிகளையும் வெளிப்படுத்த முடியும். எப்போது   வேண்டுமானாலும் அவற்றை நடித்துக் காட்ட முடியும். எல்லா மனநிலைகளும் மனதினுள் அடங்கியுள்ளன. மனம் தன் விருப்பபடி எந்த நேரமும் எந்த மனநிலையை வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அதே போல் உள்ளுணர்வின்  உயர்ந்த நிலையில் அதன் வெவ்வேறு தன்மைகளையும் திறன்களையும்   வெளிப்படுத்தக் கூடிய தூண்டுதல்கள் அடங்கியுள்ளன. அவை வேண்டுதல்களால் அழைக்கப்பட்டு வழிபாடு செய்ய இயலும்.  

கே: குருதேவ், யாகத்தீயிலே நெய் விடுவதன் சிறப்பு என்ன?  

குருதேவ்: நெய் அடிப்படையில் எண்ணையே ஆகும்.அது உருக்கப்பட்ட வெண்ணை.  பாலின் இறுதி உற்பத்திப் பொருள். ஆனால் யாரும் யாகங்களில் எண்ணெய்  விடுவதாக நான் கேள்விப்பட்டதில்லை (சிரிப்பு) .

பல விதமான இயந்திரங்கள்  உள்ளன. சிலவற்றிற்கு பெட்ரோலும் சிலவற்றிற்கு டீசலும் தேவைப்படும். அது போல யாகங்கள் நெய் மூலமாகவே இசைவு பெருகின்றன. எண்ணையினால் அல்ல. யாராவது ஒருவர் யாகத்தில் நெய் ஊற்றும் போது என்ன ஆகின்றது என ஆராய்ச்சி செய்யலாம். நெருப்பிலே ஊற்றப்பட்ட நெய் ஆவியாக மாறி எந்த மாதிரியான வாயுவை உற்பத்தி செய்கின்றது என ஆராய்ச்சி செய்யலாம். நெய் உபயோகிப்பதற்கு கண்டிப்பாக ஏதாவது காரணம் இருக்க வேண்டும். இது தெரிந்து கொள்ளப்பட வேண்டிய சுவாரசியமான ஒன்று. மேலும்,   யாகத்திற்கு எல்லா விதமான கட்டைகளோ அல்லது மரப் பட்டைகளோ உபயோகிக்கப்படுவதில்லை.அரச மரத்தில் இருந்து எடுக்கப்படுகின்ற சமித்துக்கட்டை என்று அழைக்கப்படும் கட்டைகளே யாக நெருப்பில் பயன்படுத்தபடுகின்றன. எனவே அரசமர கட்டைகளும் நெய்யும் சேர்ந்து எரியும் போது என்ன மாதிரியான விளைவுகளோ அல்லது அதிர்வுகளோ ஏற்படுகின்றன, நாம் பார்க்க வேண்டும். அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒருவருக்கு இது ஒரு சிறந்த  ஆராய்ச்சிப் பொருள் ஆகும். வேதியல் பொறியியல் துறையிலிருப்பவர்கள் இதனை கண்டு பிடிக்கலாம்.  

கே: குருதேவ், ஆழ்ந்த பாவ நிலைக்கு செல்லும் போது உங்களுக்கு உண்மையில் என்ன நிகழ்கின்றது?  

குருதேவ்: எனக்கு தெரியவில்லை. அவ்வளவு தான் நான் சொல்ல முடியும்.  

கே: குருதேவ், நான் செய்யாத ஒரு பாவத்திற்காக மக்கள் என்னை குற்றம் சாட்டுகின்றனர். நான் என்ன செய்வது?  

குருதேவ்: நீங்கள் அதை செய்யாமலே மக்கள் நீங்கள் செய்ததாக நினைக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். அவ்வாறில்லாமல் நீங்கள் அதை செய்திருந்தால் மறுக்காமல் ஒப்புக் கொள்ளுங்கள்.