உலகம் நம் உணர்வுகளின் பிரதிபலிப்பு

24 ஆகஸ்ட் 2013 - பெங்களூர் - இந்தியா


நமக்கு இருக்கும் மகிழ்ச்சியையும்,உற்சாகத்தையும் இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்துக்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்து செல்ல வேண்டும்.

பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட சாங்லி என்ற கிராமத்தில் நடக்கும் ஒரு நல்ல சேவை திட்டத்தைப் பற்றி ரோகிணி என்ற வாழும் கலை உறுப்பினர் சொன்னார். அங்கு 4 தாலுக்காக்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்தன. அங்குள்ள 16 கிராமங்களுக்கும், 12 தோட்டங்களுக்கும் தண்ணீர் வசதி செய்தோம். தண்ணீரை லாரிகளில் எடுத்து வந்து இந்த மக்களுக்கு விநியோகம் செய்தோம். தண்ணீர் லாரி செல்லுமிடமெல்லாம் மக்கள் அதன் பின்னால் ஓடி வந்தார்கள். தண்ணீர் கிடைத்ததால் மக்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. ஒரு சிறுவனுக்கு தோல் வியாதி இருந்தது. சரியாக நீராடியதால் அவனுக்கு நோய் குணமாகி விட்டது. கிரமத்தில் இருந்த அசுத்த நீரைச் சேர்த்ததால் பால் திரிந்து போயிருந்தது. புதிதாகத் தண்ணீர் வந்ததால் பால் திரிந்து போகும் பிரச்சினை தீர்ந்தது. இந்த சம்பவத்தின் மூலம் நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது இது தான். “இந்த உலகம் நம் உணர்வுகளின் பிரதிபலிப்பு.” ஹிந்தியில் “ஜைசே பாவ் தைசே பாவ்” என்று சொல்வார்கள். முதல் பாவ் – உணர்வுகள் இரண்டாவது பாவ் – சிருஷ்டி. உன் உணர்வுகள் எப்படி இருக்கிறதோ, உலகம் அப்படியே தோற்றமளிக்கும். எண்ணங்களுக்கேற்ப  நீ பார்க்கும் உலகம் இருக்கும். 

நான் இந்த உதாரணத்தை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அங்குள்ள கிராமவாசிகள் நீரை பாலில் கலந்து காய்ச்சிய போது பால் திரிந்து போனது. அதே கிராமவாசிகள் நாம் கொடுத்த நீரைக் கலந்த போது அது கெட்டுப் போகாமல் உபயோகமாக இருந்தது. சில நாட்கள் முன் கிணற்று நீர் பாலைத் திரித்து விட்டது. அந்த நீரில் ஒரு உணர்வும் இல்லை. நல்ல எண்ணங்கள் இல்லை. அதே நீரை நம் வாழும் கலை தன்னார்வலர்கள் அன்போடு கொடுத்த போது அது தூய்மையாக இருந்தது.

மற்றொரு விஷயத்தைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் பசுக்களை தாய் (கோமாதா) என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. ஆராய்ச்சியின் படி பசும் பாலில் இரண்டு விதமான புரோட்டின்கள் உள்ளன. ஒன்று ஏ1 புரோட்டின்; மற்றொன்று ஏ2 புரோட்டின் என அழைக்கப் படுகின்றன. வெளிநாட்டு ஜெர்சி இனப் பசுக்களின் பாலில் ஏ1 புரோட்டின் உள்ளது. அது மனிதர்களின் உடல் நலத்துக்குக் கெடுதல் விளைவிப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. அதனால் தான் ஜெர்சி இனப் பசுக்களை வளர்ப்பதை நாம் எதிர்க்கிறோம். ஆனால் நம் நாட்டுப் பசுவின் பாலில் ஏ2 புரோட்டின் இருக்கிறது. தாய்ப்பாலிலும் ஆட்டுப் பாலிலும் ஏ2 புரோட்டின் உள்ளது. எனவே நாட்டுப் பசும்பால் தாய்பாலைப் போல் மனிதர்களுக்கு  ஊட்ட சக்தியை அளிப்பதாகக கண்டறியப்பட்டிருக்கிறது. மனிதர்களுக்கு ஏ2 புரோட்டின் மிக உகந்தது.
பல ஆண்டுகளாக நாம் பசுக்களை கோமாதா என்று அழைக்கிறோம். தற்காலத்தில் பாலின் புரோட்டின் கூட மாறி விட்டது. நாட்டுப் பசுக்களின் பாலில் உள்ள ஏ2 புரோட்டின் புற்று நோயைக் கூட குணப் படுத்தும் திறன் வாய்ந்தது. நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே உணர்வுகளுக்கு ஏற்ப இயற்கையும் மாறுகிறது. நாம் பசுக்களை வணங்கி வந்ததால் அவை நமக்கு தாய்ப்பாலைப் போன்ற நல்ல பாலை நமக்குக் கொடுத்து வருகிறது. இந்திய பசுக்கள் ஏ2 புரோட்டின் நிரம்பிய பாலைத் தருவதால் ப்ரேசில் நாட்டில் இந்திய பசுக்களை இறக்குமதி செய்கிறார்கள்.

கே: குருதேவா! பகவத் கீதையில் “நீ உயிரோடு இருக்கும் வரை கர்ம வினை செய்ய வேண்டும்” என்று பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். ஆனால் ஒரு கர்மவினை மற்றொரு கர்மவினையை ஏற்படுத்துகிறது. அதனால் தான் நாம் இந்த வட்டத்திலிருந்து (பிறப்பு-இறப்பு) வெளியேற முடியவில்லை. என் கேள்வி இது தான். எந்த கர்மத்தை செய்வதால் நாம் முக்தியடைய முடியும்?

குருதேவர்: நிஷ்காம கர்மத்தைச் செய்வதால் நீ முக்தியடையலாம். (பலனை எதிர்பாராமல் ஜுரவேகமின்றி செய்யும் செயல் நிஷ்காம கர்மம் எனப்படும்)

கே: குருதேவா ! எனக்கு சக்தி கிரியா மிகவும் பிடித்தது. இதற்கான சக்தி எங்கிருந்து வருகிறது. இதன் பின் இருக்கும் இரகசியம் என்ன? தயவு செய்து விளக்குங்கள்.

குருதேவர்: சக்தி எல்லா இடத்திலும் இருக்கிறது. படைப்பில் இருக்கும் எல்லாவற்றிலும் தெய்வ சக்தி நிரம்பியிருக்கிறது. இதை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.

கே: குருதேவா! மகாராஷ்டிரத்தில் பல சாதுக்கள் அற்புதங்களால் மக்களை ஆன்மீக பாதையில் கொண்டு வந்தார்கள். இன்றும் மக்கள் ஆன்மீகத்தில் வர அற்புதங்கள் தேவையாயிருக்கிறது. சுயநலத்தை மட்டும் பார்க்கும் மக்களை எப்படி ஆன்மீக பாதையில் கொண்டு வரமுடியும்?

குருதேவர்: முக்தியடைய ஏணியில் ஒரு ஒரு படியாக ஏற வேண்டும். முதல் படியில் அவர்களுக்கு இருக்கும் வலியும் வருத்தமும் நீங்கும் போது, ஆன்மீக நாட்டம் வரத் துவங்கும். இதன் பிறகு ஞானத்தை தேடும் தாகம் உருவாகும். ஞானத்தில் மூழ்கிய பிறகே மனிதர்கள் முக்தியை நாடுவார்கள்.  எனவே எல்லாவிதமான மனிதர்களும் ஆன்மீகப் பாதையில் வருவார்கள். இன்று மட்டுமல்ல. பல காலமாக இது நடந்து வருகிறது.

பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். “நான்கு வகையான மனிதர்கள் என்னைத் துதிக்கிறார்கள். சிலர் பணம் மற்றும் வாழ்க்கை வசதிகளை வேண்டி என்னை வழிபடுகிறார்கள். சிலர் தங்கள் வலியையும், துக்கத்தையும் நீக்குவதற்காக என்னை வழிபடுகிறார்கள். சிலர் முக்தி வேண்டி என்னிடம் வருகிறார்கள். ஞானிகளும் என்னைத் துதிக்கிறார்கள். “

பகவான் தெளிவாக சொல்வது இது தான். ஞானிகள் மட்டுமல்ல, ஞானம் தேடுபவர்களும், மனத்தின் ஆழத்தில் இருக்கும் கேள்விகளுக்கு விடை தேடுபவர்களும், தங்கள் ஆர்வத்தைத் தணித்து கொள்ள பகவான் கிருஷ்ணரை நாடுகிறார்கள். நான்கு விதமான மனிதர்களும் பகவானிடம் சரணடைகிறார்கள்.

கே: நான் என் இலக்கை அடைய ஆசைப்படுகிறேன்.ஆனால் அதை அடைய உழைக்கும் போது சலிப்படைகிறேன்.தவிக்கிறேன். இதை எப்படி சமாளிக்கலாம்?

குருதேவர்: ஆசையோடு பற்றின்மையும் கருணையும் வேண்டும். (பாஷன், டிஸ்பாஷன், கம்பாஷன்). ஆசை மட்டும் போதாது. பற்றின்மையும் வேண்டும். (பலனைப் பற்றி நினைக்காமல் உழைக்க வேண்டும்)

கே: ஆன்மீகம், மற்றும் மனிதாபிமானம் மிகவும் பழங்காலத்தை சேர்ந்ததாக இன்றைய இளைஞர்கள் கருதுகிறார்கள். இந்த பெருமதிப்பிற்குரிய குணங்களை இளைஞர்களிடையே எப்படி வளர்க்க முடியும்?

குருதேவர்: இல்லை. நீ நினைப்பது சரியல்ல. ஆன்மீகம், மனிதாபிமான பண்புகள் புது நாகரிகமாகும். யெஸ் ப்ளஸ் இளைஞர்களைக் கேட்டுப் பார். நாகரிகம் என்பது மாறிக் கொண்டேயிருக்கும் ஒன்று. நீ சொன்னது 60,70,80 களில் இருந்த நிலை. 2000 ஆண்டுக்குப் பின் ஆன்மீகம் புதிய நாகரிகமாகக் கருதப்படுகிறது.

கே: வாழ்க்கையில் தேர்ந்தெடுக்க பல வழிகள் இருக்கும் போது, வெற்றிக்கு எந்த வழியை தேர்ந்தெடுப்பது என்று அறிவது எப்படி?  

குருதேவர்: பொதுவாக நான் சொல்வது. நீ தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆசிர்வதிப்பது மட்டும் என் பொறுப்பு. ஓய்வாக இரு.எதையும் சாதித்தே தீர வேண்டும் என்ற எண்ணத்தோடு தேர்ந்தெடுக்க வேண்டாம். ஓய்வாக உனக்கு வேண்டியதை தேர்ந்தெடு.

கே: தற்போது குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் மேல் கோபம் மற்றும் ஆத்திரம் கொள்வது அதிகரித்து வருகிறது. இதற்கு என்ன செய்யலாம்?

குருதேவர்: என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அவர்களை இசை, ஞானம் பற்றிய விஷயங்களிலும், சேவை செய்வதிலும் ஈடுபடுத்துங்கள். சிறு வயதிலிருந்தே இப்படி ஆரம்பித்தால், அவர்களுக்கு இருக்கும் கோபம் மற்றும் ஆத்திரம் குறைந்து விடும்.

கே: தினசரி வாழ்வில் “யோக வசிஷ்ட” எப்படி முக்கியமாகிறது. நான் அதை படிக்க முயற்சி செய்தேன். அதைப் புரிந்து கொள்ள மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

குருதேவர்: ஒரு முறை படித்து “யோக வசிஷ்ட”வை புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். “யோக வசிஷ்ட” என்பது ஒரு பவித்திரமான புத்தகம். இப்புத்தகத்தில் வசிஷ்ட முனிவருக்கும், ஶ்ரீ ராமருக்கும் இடையே நடந்த உரையாடல் ஸ்லோகங்களாக இருக்கின்றன. இதற்கான உரையுடன் இப்புத்தகம் கிடைக்கிறது. இப்படைப்பின் இரகசியங்களைப் பற்றியும் முக்தியடைவதற்கான வழியும் விளக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த ஸ்லோகங்களை மீண்டும் மீண்டும் படித்து அதன் விளக்கங்களை புரிந்து கொள்ள வேண்டும். முடிந்தவரை படித்து அறிந்து கொள். ஒவ்வொரு நாளும் ஒரு பக்கம் அல்லது 2 பக்கம் படிக்கலாம். ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் ஒலி நாடாக்களும், ஒலித் தட்டுகளும் கிடைக்கின்றன. இவற்றை வாங்கி தினமும் கேட்கலாம்.

கே: குருதேவா! சைவ சித்தாந்தத்தில் “பிரமசாரியத்தின் மூலம் முக்தியடையலாம்” என்று சொல்லப்படுகிறது.(சைவ சித்தாந்தம் – சிவனுக்கு பூஜை ஆராதனை செய்து முக்தி அடையும் வழிகளை தரும் பழம் பெரும் இலக்கியம்) அமைதியாக இருந்து இறைவனை அடைய முடியும் என்று நினைத்திருந்தோம். குடும்ப வாழ்க்கையிலிருந்து கொண்டு இறைவனை அடைய முடியுமா?

குருதேவர்: ஒருவருக்கு உலக வாழ்க்கையில் ஆசை இருக்க வேண்டும். அதே சமயம் உண்மையை பற்றிய அறிவு, திட மனது மற்றும் அமைதியும் அவசியம். வாழ்க்கையில் பல பரிமாணங்கள் உண்டு. ஆக்க பூர்வமான செயல்களுக்கும் (டைனமிஸம்), அமைதிக்கும் (ஸ்டில்னெஸ்) இடம் உண்டு. எல்லாமே தேவை.

கே: குருதேவா! நீங்கள் எங்களுக்கு எல்லாம் அளித்திருக்கிறீர்கள். ஞானம், அன்பு, ஆசிர்வாதம், ஆனந்தம், எங்களுக்கு தேவையான எல்லாமே கொடுத்திருக்கிறீர்கள். ஆனால் ஒன்று மட்டும் கொடுக்க வில்லை – உங்களுடைய மொபைல் நம்பர் – எப்போது நான் அதை தெரிந்து கொள்ளலாம்?

குருதேவர்: நான் எப்போதும் மொபைல் போனை எடுத்து செல்வதில்லை. ஆனாலும் நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்கு தெரிந்து விடும்.உனக்கும் எனக்கும் இருக்கும் மனம் மிக சக்தி வாய்ந்தது. மொபைல் போனை கண்டு பிடித்ததும் மனிதனின் மனம் தான். போன் இல்லாமலே நம்முடைய மனங்கள் இணைய முடியும். மொபைல் போன் எதற்கு?

நீங்கள் ட்விட்டர் உபயோகப்படுத்துகிறீர்களா? எவ்வளவு பேர் ட்விட்டர் வைத்திருக்கிறீர்கள்? இதன் வழியாக நான் ஞானம் பற்றிய ட்வீட்களை அனுப்புகிறேன். @ஶ்ரீஶ்ரீஸ்பீக்ஸ் என்ற ட்விட்டர் முகவரியில் நீங்கள் படிக்கலாம். நீங்கள் எனக்கு இ-மெயில் கூட அனுப்பலாம்.

கே: குருதேவா! சாதாரண மனிதர்கள் அசாதாரணமான சேவைகள் செய்து வருவதை பற்றிப் படிக்கிறோம். கல்வியறிவு குறைந்தவர்கள் கூட தொலைநோக்கு பார்வையோடு நன்மை புரிந்திருக்கிறார்கள். என் கல்வித் தகுதி, நல்ல மனத்தோடு என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் எப்படி தொலை நோக்குப் பார்வையை அடைய முடியும்?

குருதேவர்: ஏற்கனவே உனக்கு தொலை நோக்கு பார்வை இருக்கிறது என்ற நம்பிக்கை வேண்டும். நீ ஒரு தொலை நோக்கு பார்வை உடையவன். உன் மனதில் இந்த கேள்வி வந்திருக்கிறது. 

கே: தியானம் செய்வது மிக நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த வெற்றிடம், காலியிடம் இவை என்னவென்று புரியவில்லை. இதை புரிந்து கொள்வது அவசியமா?

குருதேவர்: இல்லை. இதை பற்றி அறிய அவசியம் இல்லை. நீ ஏற்கனவே காலியான பின் அதை பற்றி அறிய என்ன இருக்கிறது? இன்னும் காலியாகா விட்டால் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். ஒரு காலியிடத்தை பிடித்து வைக்க முடியாது. எது நடந்தாலும் சரியானதே நடக்கிறது. இந்த நம்பிக்கையோடு ஓய்வாக அமர்ந்திரு. “போலே பாவ் மிலே ரகுராயி” என்று சொல்வார்கள். இதன் பொருள் எளிமையான, தூய்மையான ஒருவன் கடவுளை அடைய முடியும்.