ஜூலை 20 - 2013 - மாண்ட்ரியல்
- கனடா
கே: குருதேவ், சமீபத்தில்,
ஹிக்க்ஸ்-போசோன் துகள் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது நம் விஞ்ஞானிகளை தூய உள்ளுணர்வை நோக்கிச் செலுத்துகின்றதா?
குருதேவ்: இறைத்துகள் என்பதனைக்
கண்டறிந்த (அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு) நிறுவனத்தை நான் பார்வையிட்டிடுக்கிறேன்.
நாங்கள் அவர்களுக்கு யோக வசிஷ்டா என்னும் புத்தகத்தையும், தியானத்திற்கான சில குறுந்தகடுகளையும்
பரிசாக அளித்தோம். அந்த நிறுவனத்தின் தலைவர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். விஞ்ஞானிகள்
ஆன்மீகத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஆன்மீகத்தில் நாம் சொல்வதையே தான் அவர்களும்
சொல்கின்றனர்.
நாற்பது ஆண்டுகளாக இந்த
நிறுவனத்திலிருக்கும் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி
“நான் இத்தனை ஆண்டுகளாக
பருப்பொருள் பற்றி படித்து ஆராய்ச்சி செய்து அப்படி ஒன்று இல்லவே இல்லை என்பதையே அறிந்து
கொண்டேன். பருப்பொருள் என்று ஒன்று இல்லை.
இருப்பதெல்லாம் வெறும் சக்தியே. மற்றதெல்லாம் வெறும் மாயை” என்று சொல்லி இருக்கின்றார்.
புனிதமான நம் பாரம்பரியத்தின் குருமார்களும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இதையே
சொல்லி இருக்கின்றார்கள். எல்லாமே வெறும் மாயை.
ஏனென்றால் இருப்பதெல்லாம் ஒன்றே வேறெதுவுமில்லை. இன்று விஞ்ஞானிகளும் இதையே
தான் சொல்கின்றார்கள்.
கண்டறிந்து கொள்பவருக்கும்,
கண்டறியபபடுபவைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நீங்கள்
அங்கு இல்லையென்றால் உங்களால் மின்னுவை கூட பார்க்க இயலாது. அதுவும் அங்கு இருக்காது.
நீங்களே மின்னணு அங்கு இருப்பதற்கான தாக்கத்தை ஏற்படுத்துகின்றீர்கள். ஆகவே பார்ப்பவர்,
பார்க்கப்படுபவை, பார்ப்பதாகிய செயல், அறிந்து கொள்பவர், அறிந்து கொள்ளப்படுபவை, அறிந்து
கொள்வதாகிய செயல் ஆகிய அனைத்துமே ஒன்றே. இதையே தான் நம் ஆன்மீகமும் சொல்கின்றது. இதையே
சிறிதும் மாறாமல் ஒரு விஞ்ஞானியிடமிருந்து கேட்பது புத்துணர்ச்சி அளிக்கின்றது. விஞ்ஞானிகளும்
இது குறித்து பெரும் மகிழ்ச்சியடைகின்றனர். விஞ்ஞானிகள்,"இந்த பிரபஞ்சத்தைப் பற்றி நாங்கள்
நிறைய அறிந்து கொண்டு விட்டதாக நினைத்தோம்.மேலும்
பல விஷயங்கள் தெரிய வந்த போது கரும் சக்தி, கரும் பொருள் போன்று எங்களுக்குத் தெரியாத விஷயங்கள் நிறைய இருப்பதை
உணர்ந்தோம்" என்று சொல்கின்றனர். வாழும் கலை அமைப்பின் சார்பில் பாரத் ஞானம் வெளியிட்டுள்ள ’படைப்பு’ என்னும்
புத்தகத்தை நாங்கள் அவர்களுக்கு பரிசளித்தோம்.
வேதங்களில் படைப்பு பற்றிய
ஒரு ஸ்லோகத்தில் "ஆரம்பத்தில் இருள் இருளால்
சூழப்பட்டிருந்தது" என்று சொல்லப்பட்டிருக்கின்றது. எந்த அறிஞராலும் இதனை புரிந்து
கொள்ளவோ, பொருள் கூறவோ இயலவில்லை. இன்று அதே கருத்தினை தான் விஞ்ஞானிகளும் "கரும்
பொருள் மற்றும் கரும் சக்தி உள்ளது" என்று சொல்கின்றனர். இந்த பிரபஞ்சத்தில் உள்ள
பொருட்கள் எல்லாம் ஏன் உருண்டையாக இருக்கின்றன?
அனைத்தையும் சுற்றி இருக்கும் கரும் பொருளின் அழுத்தத்தினால் உருண்டையாக இருக்கின்றன.
சூரியன் வட்டமாக இருப்பது
ஏனென்றால் அதனை சுற்றியுள்ள அதிக அளவிலான கரும் சக்தி சுற்றிலும் அழுத்துவதனால் தான்.
இது தண்ணீர் பாட்டிலில் இருக்கும் காற்றுத் துகள்கள் போன்றது. நீங்கள் நுரைத்திடும்
ஒரு பானத்தை பாட்டிலில் குலுக்கினால், நீர்க் குமிழ்கள் உருவாகின்றன. உள்ளிருக்கும்
நீர்க்குமிழ்கள் சுற்றியிருக்கும் தண்ணீரின் அழுத்தத்தினால் உருண்டையாக உள்ளன. அது
போலவே பிரபஞ்சத்தில் கரும் சக்தி நிறைந்துள்ளது. பார்க்க இயலாததினால் கரும் சக்தி என்று
அழைக்கப்படும் அது இருப்பதனால் தான், நட்சத்திரங்கள், கிரகங்கள், போன்ற எல்லாப் பொருட்களும்
உருண்டையாக உள்ளன. மேலும், நாம் பார்க்கும் நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவை படைப்பில்
10 % மட்டுமே. 90% கரும் சக்தி மற்றும் கரும் பொருளால் ஆனது. அதுவே சிவதத்துவம் ஆகும்.
பிறகு விஞ்ஞானிகள் என்னிடம்
அவர்களது கண்டுபிடிப்பு இறைத்துகள் என ஏன் அழைக்கப் பட்டது என்று கூறினர். ஒரு துகள்
என்பது அதன் நேர் மின்னி (புரோட்டான்), மின் அணு (எலெக்ட்ரான்), நொதுமி (நியுட்ரான்)
மற்றும் துணை அணுத் துகள்கள் சேர்ந்ததாகும்.
எதிலிருந்து துகள்கள் அனைத்தும் வந்தனவோ அதுவே துகள்களின் இறைவன் ஆகும். அந்த துகள்களின் இறைவனை விஞ்ஞானிகள் கண்டறிந்த
போது அவர்கள் மிகமிக நுண்ணிய துகள்களில் மூன்று isotopes இருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தனர்.
பருப்பொருள் இந்த மூன்று isotopes இல்லாமல் இருக்க முடியாது என்று கண்டறிந்தனர். இதே
கருத்தினைத் தான் ரிஷிகளும் சொல்லி இருக்கின்றனர். இந்த படைப்பு நிலைத்திருப்பதற்கு
சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் என்னும் மூன்று குணங்களும் அவசியம் இருக்க வேண்டும் என்று
கூறியுள்ளனர் .
இந்த மூன்றில் ஏதாவது ஒன்று
இல்லையென்றாலும் படைப்புகள் இருக்க இயலாது. விஞ்ஞானிகள் பருப்பொருள் நிலைத்திருக்க மூன்று பொருட்கள் அவசியம் என்று கூறியுள்ளனர்.
அவர்கள் அந்த மூன்று பொருட்களையும் மேலும் உடைத்துப் பார்த்த போது அவை வெறும் அதிர்வுகளே
என்பதை கண்டறிந்தனர். அந்த அதிர்வுகளைத் தான் அவர்கள் துகள்களின் இறைவன் என்றனர்.
நிறுவனத்தின் விற்பனைத்
துறையினர் 'துகள்களின் இறைவன்' என்றழைக்கப்பட்டால் நன்றாக விற்பனை செய்ய இயலாது என்பதனால்
இறைத்துகள் என்றழைத்தனர். ஆக விற்பனைத் துறையினர்
துகள்களின் இறைவன் என்பதனை மாற்றி இறைத்துகள்
கண்டு பிடிக்கப்பட்டது' என்று அறிவித்தனர். பிறகு ஊடகங்கள் இதைப் பெரிய அளவில் வெளிக்கொணர்ந்தன
என்று அவர்கள் கூறியது மிகவும் சுவாரசியமாக இருந்தது.
இப்பொழுது இந்த ஆராய்ச்சிக்கான
எந்திரங்கள் பழுது பார்க்கப்படுவதற்காக 18 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஒரு மலையைத் துளைத்து உருவாக்கப்பட்ட 27 கி.மீ. நீளமுள்ள ஒரு குகையின் இரண்டு பக்கங்களிலிருந்தும்
துகள்கள் அதிவேகமாக வந்து மோதிகொள்வதை பல கோணங்களிலிருந்து படம் பிடிக்கின்றனர். இந்த
ஆராய்ச்சிகள் பல ஆண்டுகள் தொடரும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள்
ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சுமார் 3000 விஞ்ஞானிகள் இந்த நிறுவனத்தில்
துகள்களை ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இறைத்துகள் என்றால் என்ன?
துகள்களின் தாய் என்பதே அதன் பொருள். இவையனைத்துமே மிகவும் சுவாரசியமானவை. இறைத்துகள்
பற்றி விஞ்ஞானிகள் சொல்லியிருப்பவற்றை எல்லாம் வேதங்களின் ஞானத்திற்கு இணையாகக் கொள்ளலாம்.
இரண்டும் ஒரே மாதிரியாகவே உள்ளன.
கே: குருதேவ், தற்போதைய
அதிர்வேடித் தத்துவம் (பிக் பேங் தியரி) இந்த பிரபஞ்சம் ஒரு எல்லையற்ற மிகச்சிறிய புள்ளி விரிவடைய ஆரம்பிக்கும்போது
தான் துவங்கியது என்று கூறுகின்றது. இந்த பிரபஞ்சத்தின் எல்லைக்கு அப்பால் விஞ்ஞானத்தால்
விளக்க இயலாததாக இருப்பது என்ன? இதனை சற்று விளக்கமாகக் கூறுங்கள்.
குருதேவ்: நிகழ்வுகள் ஆரம்பித்த போது என்றோ அல்லது இது துவங்கிய
போது என்றோ சொல்வதெல்லாம் நீளம் சார்ந்த சிந்தனை (linear). நீங்கள் யோக வஷிஸ்டா படித்தீர்களென்றால்
கானல் நீர் எப்போது தோன்றியது என்று கேட்பீர்கள்.இதற்கு பதில் சொல்வதென்றால் கானல்
நீருக்கு துவக்கம் எதுவும் இல்லை. அப்படி ஒன்று உருவாக்கப்படவில்லை. அப்படி ஒன்று இல்லவே
இல்லை.
தண்ணீரால் நிரப்பப்பட்ட
ஒரு கண்ணாடி குடுவைக்குள் ஒரு பேனாவை வைத்தீர்கள் என்றால் அது வளைந்திருப்பது போல்
தோற்றமளிக்கும். எப்போது பேனா வளைந்தது என்று கேட்டால், பேனா உண்மையில் வளையவே இல்லை.
அது ஒரு வளைந்திருப்பது போன்ற தோற்றமே. அது
போலத் தான் இந்த பிரபஞ்சத்திற்கு துவக்கம் என்பது கிடையாது. இது ஒரு டென்னிஸ் பந்து
போன்றது. இது கோள வடிவான சிந்தனை எனப்படுகின்றது. ஒரு கோளத்திற்கு துவக்கம் கிடையாது.
அதன் ஒவ்வொரு புள்ளியும் ஒரு துவக்கம். ஒவ்வொரு புள்ளியும் ஓர் முடிவும் ஆகும். அது
போலவே இந்த உலகத்தில் எல்லா பொருட்களுமே நாள்தோறும் பிறக்கின்றன நாள் தோறும் அழிகின்றன.
கே: குருதேவ், பில்லியன்
ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிரகத்தில் மனித இனம் இருந்ததா?
குருதேவ்: யாருக்குத் தெரியும்?
எனக்கும் தெரியாது. நான் உங்களுக்கு சொல்லக் கூடியதெல்லாம் என்னவென்றால் நம் முன்னோர்கள்
மிகத் துல்லியமாக பஞ்சாங்கம் முக்கியமான நாட்களையும் நிகழ்வுகளையும் அட்டவணை வடிவத்தில்
அளிக்கும் இந்துக்களின் கால அட்டவணை) கணித்து வைத்துள்ளனர் என்பது தான். அவர்கள் அந்நாளில்
தொலை நோக்கிகளும் மிக விலையுயர்ந்த கருவிகளும் வைத்திருக்கவில்லை. இருந்தாலும் எப்படி
அவர்களால் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் நகரும் பாதைகளையும், நேரத்தையும்
சரியாக கணக்கிட முடிந்தது அனைத்துமே மிக சரியாக துல்லியமாக சொல்லப்பட்டிருப்பது மிகவும்
வியப்பாக உள்ளது. கிரணம் எந்த நிமிடம் துவங்கி எப்போது முடியும், அடுத்த நூறாண்டுகளில்
அது மீண்டும் உலகின் எந்த பகுதியில் நிகழும் என்று கணக்கிட்டுச் சொல்லியிருக்கின்றனர்.
நம் வானவியல் தரும் மிகத் துல்லியமான தகவல்கள் மற்றும் நம் முன்னோர்களின் பஞ்சாங்கத்திற்கான
கணக்கிடல்கள் போன்றவை மிகவும் ஆச்சரியம் அளிப்பவை.
கே: குருதேவ், கடந்த சில
ஆண்டுகளில் சுனாமி, நில நடுக்கம், புயல், வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்கள் அதிகரித்துள்ளது
போல் தெரிகின்றது. சாதனா, தியானம், யாகங்கள் போன்றவற்றின் மூலமாக இவற்றின் நிகழ்வுகளை
முழுவதுமாக ஒழிக்க வழி இருக்கின்றதா?
குருதேவ்: மக்கள் பூமிக்கடியில் டைனமைட் போன்ற வெடிகளை வெடித்தல்,
மலைகளை குடைதல், சுரங்கம் வெட்டுதல் அளவுக்கதிகமாக செய்யும் போது இயற்கையின் எதிர்வினைகளும்
அதிகரிக்கின்றன. நாம் இயற்கையை பாதுகாக்க வேண்டும். மக்கள் இயற்கையின் மீது போதுமான
அளவு அக்கறை கொள்வதில்லை. அதிக அளவில் மரங்களை வெட்டுவதே சுனாமிக்கான காரணங்களுள் ஒன்று
என்று சொல்லப்படுகின்றது. நீர்த் தேக்கத் திட்டம் என்னும் பெயரால் பொருத்தமில்லாத இடங்களில்
அணைகள் கட்டப்படுவதும் ஒரு காரணம். எனவே முதலாவதாக இவையெல்லாம் இயற்கையின் சீற்றம்.
இரண்டாவதாக, நாம் இவற்றை
எல்லாம் தவிர்க்க முடியாது. படைத்தல்,அழித்தல் இரண்டுமே இயற்கையின் அம்சங்கள். இதில்
காலம் முக்கிய பங்கு வகிக்கின்றது. சில கால கட்டங்களில் இயற்கை இந்த சுழற்சிகளுக்கு
உட்பட்டே ஆக வேண்டும்.நம் சூரிய மண்டலம் கரும் துளைகளால் சூழப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள்
சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா? நம் சூரியன் அந்த கரும்துளைகள் அனைத்திலிருந்தும்
தப்பித்து அவற்றினிடையே நகர்ந்து கொண்டிருக்கின்றது. எப்போது வேண்டுமானாலும் நம் சூரியன்
அத்துளைகளால் உறிஞ்சப்பட்டு விடலாம். கரும் துளைகள் மிகவும் நெருங்கி வரும் போது சூரியன்
அவற்றிடமிருந்து விலகிச் சென்று விடுகின்றது. துளைகளும் விலகி விடுகின்றன. சூரியன் துளைக்குள் உறிஞ்சப்பட்டு விட்டால் சூரிய
மண்டலம் முழுவதும் அழிந்து ஒன்றுமில்லாமல் போய்விடும்.கணப்பொழுதில் அனைத்துமே ஒன்றுமில்லாமல்
போய்விடலாம். அதுவும் எப்போது வேண்டுமானாலும் இவ்வாறு நிகழலாம் என்பதை கற்பனை செய்து
பாருங்கள். பயமாக இருக்கின்றது இல்லையா?ஒருபுறம்
மகிழ்ச்சியாவும் இருக்கின்றது. அப்படி நிகழ்ந்தால் நீங்கள் வேலை தேட வேண்டிய அவசியமில்லை.
வாழ்க்கைத்துணை தேட வேண்டிய கவலை இல்லை. உண்மையில் அனைவரும் ஒரே வாழ்க்கைத் துணையில்
கரைந்து போய் விடுவோம். அனைத்துமே கரைந்து போய் விடும். முடிந்து போகும்.
கே: நாம் தொழில் நுட்பத்தில் மென்மேலும் முன்னேற்றம்
அடைவது நம் இனத்திற்கு அபாயம் உண்டாக்கும் என்று எண்ணுகின்றேன். நாம் நம் பண்டைய ஞானத்திலிருந்து
துண்டிக்கப் படுகின்றோமோ? அப்படியென்றால் அது குறித்து நாம் என்ன செய்ய வேண்டும்?
குருதேவ்: உண்மையில் நாம்
அறிவியல், கணிதம், இயற்பியல் ஆகியவற்றிற்கு நெருக்கமாக செல்கின்ற போது நம் முன்னோர்களின்
ஞானத்தையும் நெருங்கி செல்கின்றோம். வேதாந்தத்தை ஒதுக்கித் தள்ள இயலாத அளவிற்கு நீங்கள்
அதனை நெருங்கிவிடுவீர்கள். ஏனென்றால் அறிவியல்,
தொழில்நுட்பம் ஆகியவை சொல்வதையே தான் வேதாந்தமும் சொல்லியிருக்கின்றது.
கே: இன்றைய விஞ்ஞான கோட்பாடுகளின்படி
பூமியின் வயது 4 பில்லியன் ஆண்டுகள் என்று
அனுமானிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேதங்களின் கணிப்பில் பூமியின் வயது வேறுபடுகின்றது. இந்த முரண்பாட்டினை கொஞ்சம் விளக்குங்கள் குருதேவ்.
குருதேவ்: மேற்கத்திய அறிவியலின்படி
பூமியின் வயது 4 பில்லியன் ஆண்டுகள்! இல்லை. தவறு. அறிவியலின்படி பூமி 12.8 பில்லியன் ஆண்டுகள் பழமையானது. வேதாந்தத்தின்படி
அது 19 பில்லியன் ஆண்டுகள் ஆகும்.