ஏப்ரல் 12 – 2013 - மாண்ட்ரீல், கனடா
கே: குருதேவ், ஒருவர்
எனக்குச் செய்த எல்லா உதவிகளுக்கும்
அவர் காட்டிய
அக்கறைக்கும் நான் எப்படி நன்றி உடையவனாக இருப்பது? நான் என்
வழியிலேயே செல்ல விரும்புகின்றேன்
என்று அவர்
மனம் புண்படாமல் எப்படிச் சொல்வது?
குருதேவ்: மிகவும்
திறமையாக செய்ய வேண்டும்.
அந்த திறமை
என்ன என்று என்னிடமே கேட்காதீர்கள்.மிகவும்
பயனுள்ள இந்த ஒரு வரியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ‘நரகத்திற்கான
மூன்று கதவுகள்' நரகத்திற்கு மூன்று கதவுகள்
இருக்கின்றன.அவை காமம், பேராசை, கோபம். பேராசை மேலோங்கினால், உங்களை
நரகத்தில் தள்ளிவிடும். ஆகவே அதை மெல்ல உதறி விடுங்கள்.
காமமும் கோபமும் அதே போல் தான். அதிக காம
வயப்பட்டிருந்தால் நீங்கள்
மற்றவர்களின் உணர்வுகளை கண்டு கொள்வதில்லை. காமமும் உங்களை
நரகத்திற்கு இழுக்கும்.
காமம், பேராசை, கோபம் என்னும் இந்த மூன்றும் உங்கள்
கட்டுப்பாட்டில் இல்லையென்றால்,அவை உங்கள் மீது அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும். அவை உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் நீங்கள் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள். இல்லையென்றால்
நீங்கள் நரகத்தை நோக்கிச் செல்கின்றீர்கள்.
புரிகின்றதா?
உங்கள்
வாழ்க்கையில் இவை மூன்றும் உங்களை ஆட்கொண்டுள்ளனவா என்று பாருங்கள். அப்படி
இருந்தால் நீங்கள்
பரிதாபத்திற்குரியவர்.
உங்களை
முழுவதுமாக கவலை என்னும் நரத்தில் தள்ளி விடும். அப்படியில்லாமல் அவற்றை
கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
சக்தி
உங்களுக்கிருந்தால் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்.
கே: குருதேவ், ஒருவர் தான்
வெறுப்பவரைப் பற்றியே அதிகம் நினைத்துக் கொண்டிருந்தால், தானும் அவரைப் போலவே
மாறத் துவங்கிவிடுவார்
என்று சொல்லி
இருக்கின்றீர்கள்.
குருதேவ்: நல்லது. சாந்தம் அல்லது
பற்றுதல் இல்லாத நிலை
இல்லையென்றால்
வாழ்க்கையில் முன்னேற்றம்
இல்லை. அது உங்கள்
மனதிற்கு சுதந்திரம் அளிக்கின்றது.
உங்களை நிகழ்
காலத்தில் இருக்கச் செய்கின்றது.
உங்கள்
முகத்தில் புன்னகையைக் கொண்டு
வருகின்றது. உங்களுக்கு
சக்தியையும் உற்சாகத்தையும் தருகின்றது. வளர்த்துக் கொள்கின்றேன். இவ்வாறு
செய்யாமலிருக்க நான் என்ன செய்வது? நீங்கள் எதைப்
பற்றிக் கொண்டிருக்கின்றீர்கள்?
நீங்கள்
யாரையேனும் வெறுக்கின்றீர்களா?
எதனால்? இந்த உலகத்தில்
இது போன்ற மக்கள் எப்போதும் நிச்சயம் இருப்பார்கள். வரலாற்றில் இந்த
கிரகத்தில் தீயவர்களே இல்லாமலிருந்த
காலம் என்று ஒன்று
இருந்தால் சொல்லுங்கள்
பார்க்கலாம் அல்லது
பிறருக்கு துன்பம் தருபவர்களே இல்லாத காலம் ஒன்று இருந்ததா? அப்படிப்பட்டவர்கள்
எப்போதுமே இருந்திருக்கின்றார்கள்.
இந்த உலகத்தில்
தொடர்ந்து இருப்பார்கள்.
அவர்களை
இவ்வுலகில் வைத்திருக்க வேண்டுமென்றால் என்ன செய்யலாம்? நீங்கள்
எப்போதும் அவர்களையே நினைத்துக் கொண்டிருப்பதனால் தான் இவ்வாறு
நடக்கின்றது. துரதிருஷ்டவசமான நிகழ்ச்சி
ஒன்று நிகழ்ந்து விட்டது.
நிகழ்ந்தது
நிகழ்ந்து விட்டதென்று நீங்கள் மேற்கொண்டு செல்லுங்கள், உட்கார்ந்து அதையே அசை
போட்டுக்கொண்டு இருக்காதீர்கள்.
பற்றற்ற நிலை என்பது
நடந்து முடிந்தவற்றை அப்படியே விட்டு விடுதல் ஆகும். மேலும்
அனைத்துமே ஒரு நாள் முடியப் போகின்றதென்று அறிந்து கொள்ளுதல். அனைவருமே ஒருநாள்
மடியப் போகின்றோம்.
அவர்களும்
நீங்களும் இறக்கத் தான் போகின்றீர்கள்.எனவே உங்கள்
மனதையாவது காலியாக தூய்மையாக வைத்திருங்களேன்.அனைத்துமே
நாடகத்தில் நடிக்கப்படும் வெவ்வேறு பாத்திரங்கள் என்று அறிந்து கொள்ளுங்கள். சில நேரங்களில்
இது ஒரு திகில் திரைப்படம் போன்றது.
என்ன செய்வது? பயங்கரம்
நிகழும்போது நீங்கள் எதுவும்
செய்யாமல் செயலற்று இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை. திருட்டு, கற்பழிப்பு, அல்லது வேறு
ஏதேனும் தீய செயல் நிகழும்போது
நீங்கள்
எழுந்து நின்று அதனைத் தடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்ய
உங்களுக்கு சக்தி எப்போது கிடைக்கும்? உங்கள் மனம்
சாந்தமாக இருக்கும் போது தான் உங்களால்
எழுந்து நின்று எதிர்க்க முடியும்.
இல்லையென்றால்
உங்கள் செயல் உங்களுக்கே துன்பம் உண்டாக்கும். நீங்களே
குற்றவாளி ஆகி விடுவீர்கள். ஒரு
குற்றவாளியை மற்றொரு குற்றவாளி ஒழிக்க முடியாது. குற்றவாளியை ஒழிக்க முயன்று
நீங்களே குற்றவாளியாக மாறி விடுகின்றீர்கள். பாதிக்கப்பட்ட ஒருவர் மற்றொரு
பாதிக்கப்பட்டவருக்கு
உதவ முடியாது.
நீங்களே உங்களுடைய கோபம்,
ஆத்திரம்
போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் போது நீங்கள்
மற்றொரு பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ முடியும்? குற்றவாளியை
ஒழிக்க நீங்களே குற்றவாளியாக மாறினால், நீங்கள் சிறைச்சாலையில் தான் இருப்பீர்கள்.
பலருக்கு
இப்படித் தான்
நடந்திருக்கின்றது.
சிறைக்குச்
சென்றிருக்கும் பலர் மிகவும் நேர்மையானவர்களே.அவர்கள்
சொல்கிறார்கள், "அவர் எனக்கு
இப்படிச் செய்ததனால் தான் நான்
இப்படிச் செய்தேன்".
'ஒரு கண்ணுக்கு
மற்றொரு கண் அல்லது ஒரு
பல்லுக்கு மற்றொரு பல்'
என்னும்
பழிவாங்கும் போக்கு எந்த
நன்மையையும் தராது.
மொத்த உலகமும்
கண்ணை இழந்து குருடாக வேண்டி வரும். நாம் சாந்தமாக எழுந்து நின்று சிறந்த சமுதாயத்திற்காக
உழைக்க வேண்டும். வன்முறையற்ற
ஆன்மிகம் நிறைந்த ஒரு சமுதாயத்திற்காக உழைக்க வேண்டும்.
நீங்கள் எப்படி
எழுத்தறிவுள்ள சமுதாயமாக மாற்றி இருக்கின்றீர்களோ அதே போல் தான்.
கனடாவிலுள்ள ஒவ்வொருவருக்கும்
எழுதப் படிக்கத் தெரியும்.
அடையாளக்
குறியீட்டுப் பலகையில் உள்ளதைப் படிக்கத் தெரியாத ஒருவர் கூட
கனடாவில் இல்லை. யாராவது
இருக்கின்றார்களா?
பெரிய மேதைகளாக
இல்லாவிட்டாலும் அவர்களுக்கு எழுதவும்,படிக்கவும்
தெரியும். ஆன்மீகமும்
அதேபோல் அனைவரையும் அடைய வேண்டும்.
நாம் சரியான
உணவு உண்ண வேண்டும்.
சரியாக நடந்து
கொள்ள வேண்டும். மக்கள் அனைவரிடமும் அன்பாக இருக்க வேண்டும். இந்தத் திசை
நோக்கி உழைக்க வேண்டும்.
நூறு சதவீதம் இது நிகழாமல்
போகலாம்.அனைவரும் உடனே மாறிவிட
மாட்டார்கள். ஆனாலும், சமுதாயத்தின்
பெரும் பகுதி நல்லவிதமாக
மாறினால் அதுவே போதும்.
நாம் இத்தகைய
சமுதாயம் உருவாக கனவு காணலாம்.
ஆனால் அது நிஜமாக
நீண்ட காலம் ஆகும். குற்றம் என்பதே
இல்லாத சமுதாயம் என்பது
தொலை தூரத்தில்
இருக்கும் உண்மை. அடைவதற்கு
நீண்ட காலம் பிடிக்கும்.
இருந்தாலும்
நாம் அந்த திசை நோக்கி நடக்கவாவது முயற்சி செய்ய வேண்டும்.
கே: நான் மிகவும்
நேசிப்பவர்களுக்கு தாராளமாக நிறைய கொடுக்கின்றேன். என்னை
கவனித்துக் கொள்வதை விட அதிகமாக
அவர்களை பார்த்துக் கொள்கின்றேன்.
பிறகு வருத்தப்படுகின்றேன்.
நான் சரியான
பாதையில் செல்வது எப்படி?
குருதேவ்: உங்களுக்கு
அதிக ஓய்வு நேரம் இருப்பதுபோல் தெரிகின்றது. ஏன்
அதிகமாக சிந்தனை
செய்கின்றீர்கள்?கொடுக்க
வேண்டுமென்று விரும்பினால் கொடுங்கள். பிறகு அதை மறந்து விடுங்கள். இந்தியில்,'நேகி கருடரியா
மே டால்' என்றொரு பழமொழி உள்ளது.
'நற்செயல்களை
செய்யுங்கள், பிறகு அவற்றை கடலில் போட்டு விடுங்கள். அவற்றையே
நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம்’
என்று பொருள்.
நான் செய்தேன்,நான் செய்தேன் என்று நீங்கள்
நினைத்தால், நீங்கள் என்ன
செய்து விட்டீர்கள்?
பெறுவதற்கு
தகுதியில்லாத எது ஒன்றையும் யாருக்கும் நீங்கள் கொடுக்கமுடியாது. அது நடக்கவே
நடக்காது. நீங்கள்
கொடுக்க விரும்பினாலும்,
அவர் அதை
பெறுவதற்கு ஏற்ற நேரமாக இல்லையென்றால் அவரால் அதைப் பெற முடியாது. ஆகவே நீங்கள்
எதையும் கொடுத்த பின்னர் அதைப் பற்றி மறந்து விடுங்கள்.
இயல்பாக
இருங்கள். அதை பற்றி அதிகம் நினைக்க வேண்டாம்.
தேவை ஏற்படும் போது இயல்பாக பெற்றுக்
கொள்ளுங்கள்.குற்ற உணர்ச்சி
தேவையில்லை அவ்வளவு தான். நீங்கள் எல்லா
நேரங்களிலும் அனைவரது ஆசைகளையும் திருப்தி செய்ய முடியாது.ஆனாலும்
உங்களால் முடிந்ததை
நிச்சயம் செய்ய வேண்டும்.
அப்பொழுது
நீங்கள்
"இல்லை, எனக்கு செய்ய
விருப்பமில்லை"
என்று சொல்ல
முடியாது.அது உங்களை
உறுத்தும். நீங்கள் எதோ
ஒன்றை கொடுக்க விரும்பினாலும் உங்களால் கொடுக்க முடியவில்லையென்றால் அது உங்களை உறுத்தாது.
உங்களால்
இயன்ற போதும் நீங்கள்
கொடுக்க வில்லையென்றால் அப்போது தான் உறுத்தும்.
கே: குருதேவ், உபநிடதத்திலிருந்து
சில இரகசியங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்?
குருதேவ்: உபநிடதத்தின்
இரகசியம் 'நீங்கள் ஓம்' என்பது தான். உங்களின்
உண்மையான பெயர் ஓம் என்பது தான். உங்கள்
பெயர் எதுவாக இருந்தாலும்,
அது இந்த
பிறவியில் உங்கள் பெற்றோர்களால் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்தப்
பிறவிக்கு முன் நீங்கள் என்னவாக இருந்தீர்கள்? உங்கள் பெயர்
என்னவாக இருந்தது?
ஓம். பிற்காலத்தில் நீங்கள் இந்த
உடலை விட்டுப் பிரிந்து செல்லும்போது உங்கள் பெயர் என்னவாக இருக்கும்? ஓம்.
உலகமெங்கும்
எல்லா நேரமும் உணர்வில்
ஒலித்துக் கொண்டிருக்கும் ஓம் என்னும் ஒலியிலிருந்து தான் அனைத்துமே பிறந்துள்ளன.
நீங்கள்
அனைவரும் அந்த ஒலியிலிருந்து தான்
பிறந்திருக்கின்றீர்கள்.
நாம் அதிலே தான் இருக்கின்றோம். ஓம்
என்னும் ஒலி இப்போதும் எப்போதும்
இருக்கும்.
நீங்கள் உங்கள் உடலை
விடும்போது இந்தப் பெயரை உங்களோடு கொண்டு செல்வோம் என்று நினைக்க வேண்டாம். உங்கள் பெயர் இந்த உருவத்தோடு போய் விடும். ஆனால் நீங்களாக இருக்கும் ஒளி, நீங்களாக இருக்கும்
உள்ளுணர்வு ஆகிய இவற்றிற்கு இருக்கும் ஒரே பெயர் அது தான் ஓம்.
இறை வழிபாட்டில்
அதுவே சொல்லப் படுகின்றது.'ஏக் ஓங்கார்' (இறைவன் ஒருவன்).
சத்நாம் (அவன் பெயர்
சத்யம்) கர்த்தா
புரக்ஹ் (அவனே படைத்தவன்) நிர்பாவ்
(அவன் பயம் அற்றவன்) நிர்வைர் (அவன் பகை
அற்றவன்) அகால்முராத் (அவன்
மரணமற்றவன்) அஜுநிசைபாங் (பிறப்பு
இறப்பைக் கடந்தவன்)
குருப்பிரசாத் (குருவின்
கருணையால் உணரப்படுபவன்) ஆதிசச் (எதுவுமே
படைக்கப்படுவதற்கு முன் உண்மை வடிவானவன்). ஜூகாட்சச் (நிரந்தரமாக
உண்மை வடிவானவன்).
ஹைபீசச்
(இப்போதும் உண்மையானவன்) நானக் ஹோ பி
சச் (எதிர்காலத்திலும்
உண்மையாக இருக்கப் போகின்றவன்) பண்டைக்காலத்திலிருந்து
படைப்பவனாக இருக்கும் ஓங்காரம்
ஒன்றே. அதிலிருந்து தான் அனைத்துமே உருவானது.
நிர்பய
என்றால் பயமற்றது. இரட்டைத் தன்மைற்றது.அங்கே இரண்டு என்பது இல்லை. அது முழுவதும்
தூய்மையானது. அது அனைத்தும்
உண்மை, உண்மை பொருள். அந்த உண்மையே
நமது பிறப்பிடம். ஆதி என்றால்
துவக்கம். அனைத்துமே
அங்கிருந்து தான் வந்தது அல்லது
அனைத்துமே அங்கு தான் ஒன்று
சேர்ந்தது. நமது மூலம் உண்மை, நம் குறிக்கோள் அல்லது இலக்கு உண்மை. இதுவே உண்மையான
பெயர் 'ஏக ஓம்கார், சத்னம்'. இதுவே
உபநிடதங்களின் சாரம். உபநிடதம் சொல்வது என்னவென்றால்,'சிவம் சாந்தம்
அத்வைதம் சதுர்த்தம் மன்யண்டே, சாத்ம,சவிக்யயஹா'(முடிவில்லாத
மௌனமாகிய சிவம், முடிவில்லாத
அமைதியாகிய சாந்தம்,
இரண்டாகப்
பிரிக்கவியலாத அத்வைதம்
என்னும் உண்மையே சதுர்த்தம்,
அதாவது
நான்காவது, இது விழிப்பு நிலை, கனவு நிலை, உறக்க நிலை
என்னும் உள்ளுணர்வின் மூன்று நிலைகளையும் கடந்தது. தான்
எனப்படுகின்ற அந்த நான்காவது
நிலை தான் அறியப்பட வேண்டியது.
உறக்கமுமில்லாத,விழிப்புமில்லாத,கனவு
நிலையுமில்லாத நான்காவது நிலை.
அதுவே முழு படைப்பின் அடித்தளம்
ஆகும். அதுவே அறியப்பட
வேண்டியது; கவனம் செலுத்தப்பட வேண்டியது.
கே: குருதேவ்! என்
தாயார், கடவுள் நம் மனதில்
இருக்கிறார். ஏதேனும் தவறாக நிகழ்ந்தால், நாம்,
உள்நோக்கிக் கடவுளைப் பிரார்த்தனை செய்ய வேண்டும்
என்கிறார். ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிரார்த்தனைக்குப் பின்னரும் பிழைப்பதில்லையே?
குருதேவ்: ஆம், அது
இயற்கையின் ஒரு பகுதி. அதில்
பல ரகசியங்கள் உள்ளன. எவ்வாறு
ஒரு சிசு உருவாகிப் பிறக்கின்றது, ஏன்
அது குறைந்த காலமே வாழ்கின்றது என்பவையெல்லாம்,மிகவும்
பாதுகாக்கப்பட்ட ரகசியங்கள். ஒரு
காலத்தில் புரிந்து கொள்வீர்கள்.
பல சமயங்களில்,
ஒரு குழந்தை பிறந்ததும், கணவன்
மனைவிக்கு இடையில் உள்ள காதல் மறைந்து
விடுகின்றது. எப்போதுமல்ல. சில
சமயங்களில்.இது ஏன் என்றால், ஒரு
ஆத்மா, இரண்டு பேருக்கிடையே
ஒரு கவர்ச்சியை ஏற்படுத்துகின்றது. ஒருவருக்கொருவர்
பொருத்த மில்லாத போதிலும், அவர்கள்
கவர்ச்சியால் உந்தப்பட்டு இணைகின்றனர்.
திருமணம் செய்து கொண்டு குழந்தை பிறந்தவுடன்,
அவர்களுக்கிடையே இருக்கும் எல்லாப் பிணைப்புகளும் அறுந்து
விடுகின்றன.
சமூகத்தில் இவ்வாறு
நிகழ்வதைப் பார்த்திருக்கிறீர்களா? இது
ஏனெனில் பிறக்க விரும்பும் ஆத்மா இருவரிடையே பிணைப்பை ஏற்படுத்தி விடுகின்றது.
பிறந்து, அந்த வேலை முடிந்தவுடன்,
அவ்வளவு தான்! இத்தகைய நிகழ்வு மிகவும்
சுவாரஸ்யமானது.
கே: என்னுடைய தாய்
என்னை ஓயாது குற்றம் கண்டு தொல்லைப்படுத்துகிறாள். என்ன செய்வது?
குருதேவ்: சரி! அது
அவளது வேலை. நீங்கள் எவ்வளவு பலமானவர், எவ்வளவு
பொறுமையானவர் என்று சோதித்துக் கொண்டிருக்கிறாள்.தாய்மார்கள் வழக்கமாக உங்களுக்குப் பொறுமை ஏற்பட உதவுவார்கள். ஒன்று,
நீங்கள் உங்கள் தாய்க்குப் பொறுமை ஏற்படச்செய்வீர்கள்
அல்லது உங்கள் தாய் உங்களுக்குச் செய்வாள். ஒன்று நீங்கள் உங்கள் தாயின்
பொறுமையை சோதிப்பீர்கள் அல்லது உங்கள் தாய் உங்கள் பொறுமையை சோதிப்பாள். உண்மையில் நீங்கள் இருவரும்
முறை எடுத்துக் கொள்வீர்கள்
கே: குருதேவ்! வயதான
ஏன் பெற்றோர்கள் திருமணமாகி ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் விவாதங்களிலும்
சண்டைகளிலும் ஈடுபடுகின்றார்கள். எப்போது அவர்கள் மாறுவார்கள்?
குருதேவ்: அவர்கள்
வாழ்க்கையில் விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அதை ஏன் தடுக்க விரும்புகிறீர்கள்? விவாதங்களும்
சண்டைகளும் இல்லாத வாழ்கை அலுப்பானது.சுவை இருக்காது. அவர்கள் காரசாரமான உணவை
அருந்திக் கொண்டிருக்கிறார்கள்.காரம் மிக அதிகமாகி விட்டால்,
சிறிது நெய் ஊற்றுங்கள், நடிவில்
சிறிது வெண்ணை தடவுங்கள். இவ்வாறு தான் நிகழ்கின்றது,
என்ன செய்ய முடியும்?
ஒருவர்,
தனது மனைவியுடன் எப்போதும் சண்டையிட்டுக்
கொண்டிருக்கும் மற்றொரு மனிதரிடம் ஏன்
இவ்வாறு மிகுந்த சண்டையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? என்று
கேட்டார். அவர் அதற்கு என்ன கூறுகிறீர்கள்? நான்
ஏன் மனைவியை மிகவும் நேசிக்கிறேன். அதனால்
சண்டை போடுகிறேன். அவளையன்றி
வேறு யாருடன் சண்டையிட முடியும்? என்றார். அது சரிதான். இவ்வாறு தான் சில சமயங்களில்
நிகழ்கின்றது.
கே: குருதேவ்! நான்
அடைந்த இந்த அறிவை மற்றவருக்குப் பரப்ப விரும்புகின்றேன். ஆனால் எனக்கு என்
நண்பர்களிடையே பேசும் போது
மிகவும் பதற்றமாக இருக்கின்றது. இதை
எவ்வாறு தாண்டி வெல்வது?
குருதேவ்: உங்களுக்கு என்ன பயம்?
உங்களைக் கேலி செய்வார்கள் என்றா?அதையும்
அனுபவியுங்கள் அவர்கள் உங்களை கேலி செய்து
விளையாடட்டும். கேலிக்கு
ஆளாவதை பொருட்படுத்தாமல்,அதை
விரும்பினால், உங்கள் தயக்கத்தைத்
தாண்டி விடுவீர்கள். ஒரு
தடவை அதை முயன்று,என்ன
நடக்கின்றது என்று பாருங்கள்.
கே: குருதேவ்! நான்
ஆன்மீக அறிவை அடைய படித்தாலும், ஆன்மீக
பயிற்சிகளை செய்தாலும், சேவையில்
ஈடுபட்டாலும், என் மனம்,
சிலசமயம் நவீனமான கைபேசிகள், துணிமணிகள்
இவற்றில் சிக்கி கொள்கின்றதே!
இவற்றிலிருந்து விடுபட என்னை ஆசிர்வதியுங்கள்.
குருதேவ்: அது
பரவாயில்லை. சிறிது
காலம் ஆகும். நீங்கள்
இவற்றில் சிறிது ஒட்டிக் கொண்டால், உங்களைக்
கிளறி விட இன்னும் சிறிது சூடு தேவைப் படுகின்றது. அல்வா செய்யும் பொது அது
முதலில் ஒட்டிக்கொள்ளும். சூட்டில்
கிளறக்கிளற அது ஒட்டாமல் உருவாகும்.
கே: குருதேவ்! நான்,
எஞ்சியிருக்கும் என் வாழ்நாள் முழுதும் ஆஸ்ரமத்தில் வந்து தங்கி விட
விரும்புகின்றேன். என்
மனைவியும் இதையே விரும்புகின்றாள். தயவு
செய்து எங்களுக்கு வழி காட்டுங்கள்.
குருதேவ்: சரி!
வாருங்கள். உங்களில் யார் இங்கு ஆஸ்ரமத்தில் அல்லது பூநில் முழு நேரமும் ஈடுபட
விரும்பினாலும் உங்களுக்கு நல்வரவு. ஆனால், உங்கள்
தேவைகள் அதிகமாக இருந்தால், சிரமமாக
இருக்கும். உங்களுக்கு மிக குறைந்த தேவைகளுடன் கூடிய வாழ்வு விருப்பமானால், ஆஸ்ரம
வாழ்கை நன்றாகவே இருக்கும்.
எளிமையான வாழ்வும்
உயர்ந்த எண்ணங்களும் இருந்தால், ஆஸ்ரம
வாழ்கை இனிமையாக இருக்கும். உயர்ந்த வாழ்கை வசதி தேவைகளும் குறுகிய
எண்ணங்களும் இருந்தால், ஆஸ்ரம
வாழ்வு சிரமமானதாக இருக்கும்.
கே: நாம் நமது ஆன்மாவை நோக்கிச் செல்கிறோம் என்பதற்கான
அறிகுறி என்ன?
குருதேவ்:
நீங்கள் ஆன்மாவை நோக்கிச் செல்ல வேண்டியதே இல்லை. ஆன்மா அங்கேயே நிலை கொண்டிருக்கின்றது. எங்கும்
இருக்கின்றது. திடமானது,அசைக்க
முடியாதது. அதுவே ஆன்மா.
கே: குருதேவ், நீண்ட
காலத்திற்கு சைவ உணவை மட்டுமே உண்பது என்பது எனக்குச் சற்று சிரமமாகத்
தெரிகின்றது. சைவ
உணவிலிருந்து கிடைக்கும் புரதம் எனக்குப் போதுமானதாகத் தெரியவில்லை. மாமிசத்திலிருந்து
கிடைக்கும் புரதத்திற்காக பெரும் ஏக்கம் உண்டாகின்றது. அசைவ உணவு உண்ட
பிறகுதான் சரியாகின்றது. நிரந்தரமாக சைவ உணவு
உண்பவனாக இருக்க வேண்டுமென்றே விரும்புகின்றேன் ஏனென்றால் நான் அகிம்சை
பாதையை தீவிரமாகப் பின்பற்றுபவன்
எனக்கு அறிவுரை
சொல்லுங்கள் குருதேவ்.
குருதேவ்: புரதம் தேவைப்படுவது உங்கள் மனதிற்குத்தான்.குதிரைகள்
எவ்வளவு சக்தி வாய்ந்தவை என்று உங்களுக்கு தெரியும்.
அவை சைவம் தான் ஆனால்
அவற்றிடம் அவ்வளவு புரதம் உள்ளது.
யானைகள் கூட
சைவம் தான்.
ஆனால் எவ்வளவு
சக்தி வாய்ந்தவை? நினைத்துக் கூடப் பார்க்க
இயலவில்லை. காளைகள் கூட தாவர உண்ணிகள் தான். சக்தியை அளப்பதற்கு 'ஹார்ஸ்பவர்' என்று
சொல்லுகின்ற அளவிற்கு குதிரை சக்தி வாய்ந்தது.
அந்த குதிரைகள்
வெறும் புல்லையும் பச்சைப் பயறையும் தான் சாப்பிடுகின்றன. தாவர உணவில் நிறைய
புரதம் உள்ளது. மாமிச உணவில் தான் புரதம் உள்ளது என்பதில்லை,
உங்கள் மனதில்
தான் அத்தகைய எண்ணம் உள்ளது.
நிறைய பருப்பு
வகைகளும் பயறு
வகைகளும் உணவில் சேர்த்துக்
கொள்ளுங்கள்.அவற்றில் நிறைய
புரதம் உள்ளது. நீங்கள் பால் பொருட்கள் நிறைய சாப்பிடலாம். பால், பாலாடைக் கட்டி போன்றவற்றில் புரதம் அதிகம் உள்ளது. வட
அமெரிக்காவில் பழக்கத்தில்
இருக்கும் கோதுமைப் புல் சாறு
ச்பிருளினா
போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாலம்.
வட
அமெரிக்காவின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் தாவர உணவு உண்பவர்களே. உங்களுக்கு மாமிச உணவு
உண்மையில் தேவையில்லை.
எனவே அது தேவை
என்கின்ற எண்ணத்தை உங்கள் மனதிலிருந்து நீக்கி விடுங்கள். உங்கள் உடல்
தாவர உணவு உண்பதற்கு ஏற்பத்தான் ஆக்கப்பட்டுள்ளது. உங்கள் உமிழ்
நீரில் தாவர
உண்ணிகளிடம் மட்டுமே இருக்கும் 'டால்லின்' என்றொரு பொருள்
உள்ளது. சிங்கம், புலி, ஓநாய் போன்றவற்றிடம் நீங்கள் இதைப்
பார்க்க முடியாது. தாவர உண்ணிகளுக்கு இருப்பதை போல் உங்களுக்கும் மிக நீளமான குடல் பகுதி
இருக்கின்றது.சிங்கம், நாய்
போன்றவற்றிற்கு அப்படி இல்லை.மாமிச உண்ணிகளுக்கு இருப்பது போன்ற பற்கள் உங்களுக்கு இல்லை. குரங்குகள், பசுக்கள், யானைகள்
போன்றவற்றிற்கு இருப்பது போன்ற பற்கள் தான் உங்களுக்கு இருக்கின்றன.நான் யானையின்
தந்தத்தை குறிப்பிடவில்லை.
வாயின் உள்ளே
இருக்கும் பற்களை
சொல்கின்றேன். உங்கள் உடல்
அமைப்பின் ஒவ்வொரு குறிப்பும் உங்கள் உடல் சைவ உணவிற்கேற்ப ஆக்கப்பட்டுள்ளது என்பதைத்
தெளிவாக்குகின்றது.
ஆகவே, நான் மாமிசம்
உண்பதை நிறுத்திவிட்டதால்,
மிகவும்
பலவீனமாக உணர்கின்றேன்
என்பது தவறான எண்ணம்.
அது வெறும் மனதிலிருக்கும் தவறான கருத்து.
கே: குருதேவ், சுதர்ஷன
கிரியாவுடன் கூடவே நாங்கள் பரமஹம்ச
யோகானந்தரின்
கிரியா யோகா போன்ற மற்ற ஆன்மீக
பாதைகளையும்
பின்பற்றி பயிற்சிகள் செய்யலாமா?
குருதேவ்: ஒன்றை மட்டும்
செய்யுங்கள். அதுவே நல்லது. நீங்கள்
பலவற்றை செய்யும் போது அது
பெரும் குழப்பமாக மாறி விடும்.
நான் பல்வேறு
பயிற்சிகளை செய்து அதனால் சக்தி நிலை
கட்டுப்பாடின்றி தாறுமாறாகி விட்ட பலரை பார்த்திருக்கின்றேன்.அது
அவசியமில்லை. நீங்கள்
உங்களது கடந்த காலத்தில் அவ்வாறு செய்திருந்தால்,சுதர்ஷன கிரியா
செய்தவுடன் தியானம்
செய்யுங்கள். எது நடந்தாலும்
நடக்கட்டும்.பரவாயில்லை.உங்களுக்கு மந்திரங்கள் தோன்றினாலும்
கவலைப்பட வேண்டாம்.
ஆனால் நீங்கள் முயற்சி
செய்து நிறைய கற்று செய்வதானால் அது நிறைய குழப்பங்களை உருவாக்கும்.