கோபத்தை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?


7 – நவம்பர் – 2012 – பெங்களூர் - இந்தியா

கேள்வி: ஒவ்வொரு சத்சங்கத்துக்கும் முன் கூட்டியே தயார் செய்வீர்களா? அல்லது சத்சங்கத்தில் வந்தபின் யோசித்து தியானப் பயிற்சி அளிப்பீர்களா?

குருதேவர்: தற்சமயம் மனதில் என்ன வருகிறதோ, அதுதான். முன் கூட்டி தயார் செய்வதில்லை. நான் எப்போதுமே தயார்.

கேள்வி: நடு நிலைமை தவறாமல் நேர்மையை எப்படி கடைப்பிடிக்கலாம். நான் செய்வது சரியல்ல என்றால் நான் பின் வாங்கி விடுகிறேன். அது என் மன்னித்து மறக்கும் இயல்பைப் பாதிக்கிறது.

குருதேவர்: யாருக்கெல்லாம் கோபம் வருகிறதோ, அதன் காரணம் அவர்கள் அநீதியை ஏற்றுக்கொள்ள மறுப்பதால் தான். அவர்கள் நேர்மை என்று நினைப்பது ஒரு குறுகிய எல்லைக்குள் இருக்கும். இவ்வுலகில் எல்லா விதமான நிகழ்ச்சிகளும் நிகழ்கின்றன. நீ பொறுமையாய் இருக்க வேண்டும்.

நேர்மையை மட்டும் மனத்தில் வைத்து,“நான் சரியான வழியில் செல்வேன். எல்லோரும் சரியான வழியில் செல்ல வேண்டும். அதுவும் இப்பொழுதே செல்ல வேண்டும்” என்றால் அது நடக்காது. எல்லோரும் நல்வழி நடக்க வேண்டும் என்று நினைப்பது சரிதான். ஆனால் அவர்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். பொறுமையோடு மற்றவர்களை நல்வழிப் படுத்தலாம். கோபத்தால் முடியாது.

நான் நேர்மையானவன். மற்றவர்களும் நேர்மையாக நடக்க வேண்டும் என்று கேட்கும் போது அப்படி இல்லா விட்டால் கோபம் வரும். கோபம் வரும் போது நீ நேர்மையை இழந்து விடுகிறாய். நீ கோபம் அடைவது மற்றவர் நல்வழியில் செல்லாமல் தவறு செய்வதற்கு ஒப்பானது.

இந்த இடத்தை ஒருவர் சுத்தமாக வைத்துக் கொள்ள வில்லை. இந்த இடம் மிகவும் அழுக்காக இருக்கிறது என்று வைத்துக் கொள். நீ இங்கு வந்தவுடன் கோபம் கொள்கிறாய். அவர் இந்த இடத்தைச் சரியாக சுத்தம் செய்யவில்லை. இது அவர் தவறு தான். ஆனால் நீ கோபம் கொண்டு அவர் மேல் சத்தம் போடுவது மற்றொரு தவறாகும்.

இரண்டு தவறுகள் ஒரு தவறைச் சரியாக்க முடியாது. எனவே, யாராவது தவறு செய்தால், பொறுமையாக ஒரு முறை, இரண்டாவது ,முறை, மூன்றாவது முறை… சொல்லி அவருக்குச் சொல்லிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும்.

மற்றவர்களுக்குச் சொல்லித் தர உனக்கு அதிக அளவு பொறுமை இருக்க வேண்டும். இன்றைய பள்ளி ஆசிரியர்களுக்கு இது பெரிய சவால். அவர்கள் மாணவர்களுக்கு 10 முறை சொன்னாலும் அவர்கள் ஆசிரியரின் பேச்சைக் கேட்பதில்லை. இன்றைய பள்ளிக் குழந்தைகளுக்கு கவனக் குறைவு நோய் இருக்கிறது. குழந்தைகள் சரியாக பாடத்தைக் கவனித்துக் கேட்பதில்லை. ஆசிரியருக்கு மிகவும் பொறுமை அவசியம்.

பொறுமை என்பது அரிய நற்குணமாகும். ஆறு செல்வங்களுள் ஒன்று.

ஷம் (அமைதி அல்லது மன அமைதி), தமா (சுயக் கட்டுப்பாடு), உபரதி ((உலகப் பொருட்களின் மேல் பற்றின்மை), திதீக்ஷா (சகிப்புத் தன்மை), ஷ்ரத்தா (நம்பிக்கை), சமாதானா ( சமநோக்குப் பார்வை அல்லது மனத்தின் ஒருப்பாடு (ஏக சிந்தனை) )
சமாதானா என்பது திருப்தியோடும், பொறுமையோடும் இருப்பது. இந்தக் குணம் கட்டாயமாக இருக்க வேண்டும்.

கேள்வி: வாழ்வதற்கு உன்னை விட உயர்ந்த நோக்கத்தை எப்படித் தேடுவது? தேடிக் கண்டுபிடிக்க ஏதாவது வழி இருக்கிறதா? அல்லது அந்த நோக்கம் உன்னைத் தேடி வருமா?

குருதேவர்: வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். நீ என்னவாக விரும்புகிறாய் என்ற தொலைநோக்கப் பார்வை, நீ என்ன செய்ய விரும்புகிறாய் என்று உனக்குத் தெரிய வேண்டும்.

ஒன்று: உன்னைப் பற்றிய தனி நோக்கம்.  வாழ்க்கையில் இதை அடைய விரும்புகிறேன். இதையும்… இதையும்…. அடைய வேண்டும்.

மற்றது: இந்த பூமிக்கான நோக்கம். இந்த பூமிக்கு நான் என்ன கொடுக்க விரும்புகிறேன்?
பொதுவாக உன் நோக்கத்தின் பின், உனக்கு என்ன கிடைக்கும் என்று நீ பார்க்கிறாய். அதனால் தான் இரண்டு நோக்கங்கள் வேண்டும் என்று சொல்கிறேன். ஒரு நோக்கத்தால் உனக்கு என்ன கிடைக்கும். மற்ற நோக்கத்தை அடைய நீ என்ன கொடுக்க விரும்புகிறாய்? 
இரண்டு நோக்கங்களும் ஒன்றாய் இருந்தால், அது இன்னும் நல்லது.

கேள்வி: நம் உணவுப் பழக்கத்தை மாற்றி கோபத்தை அடக்க முடியுமா? உப்பு, காரம் புளிப்பான உணவை உண்பதால் நிறைய கோபம் உண்டாகும் என்று சொல்கிறார்களே?

குருதேவர்: நீயே அனுபவத்தில் உணரலாம். ஒரு வாரத்துக்கு உப்பு, மிளகாய்ப் பொடியும் சேர்த்துக் கொள்ளாதே. என்ன ஆகிறது என்று பார். அப்படி இருக்க முடியும். ஆனால் சிலர் நிறைய உப்பு, மிளகாய் சாப்பிடுபவர்கள் கூட கோபம் கொள்ளாமல் இருக்கிறார்கள். அப்படி நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது.




நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.....


5 - நவம்பர் 2012 பெங்களூர் இந்தியா,

கேள்வி: நாம் ஏன் பாதபூஜை செய்கிறோம் (விருந்தினரின் பாதங்களை கழுவி பூக்களால் பூஜித்து வரவேற்கும் ஒரு தொன்று தொட்ட சடங்கு)? அதன் முக்கியத்துவம் என்ன?

குருதேவ்: அந்தக் காலத்தில், மரியாதைக்குரிய விருந்தினர் நம் வீட்டிற்கு வரும்போது, அவருடைய பாதங்களை கழுவி வரவேற்பது பழக்கம். அவர்கள் நடந்து வந்திருப்பதால் அவர்களின் கால்கள் அழுக்காய் இருக்கும், எனவே முதலில் அவர் பாதங்களை கழுவுவார்கள். நம் வினயத்தையும் இது தெரிவிக்கும் (வினம்ரதா).

சில நேரங்களில், நம் இல்லத்திற்கு விருந்தினர் வரும்போது, மாலை போட்டோ அல்லது மலர்களை தந்தோ அல்லது பூச்செண்டு தந்தோ மரியாதை செய்கிறோம். ஒரு காலத்தில் விருந்தினரை இப்படி வரவேற்கும் இந்த வழக்கம் உலகெங்கும் இருந்து வந்தது.

பெரியோர்களின் கால்களை கழுவுவதற்கு காரணம், கைகளும் கால்களும் சக்தியை வெளிப்படுத்தும். அதனால் தான் நாம் நம் தலை மீது கைவைத்து ஆசிகளை அளிக்குமாறு கேட்கிறோம். கால்களை தொட்டு வணங்குவது இந்தியாவில் ஒரு பாரம்பரியமான பழக்கம். 

ஆனால் சக்தியோ அல்லது அதிர்வுகளோ கை மற்றும் கால்களில் இருந்து மட்டுமே வெளிப்படும் என்பது உண்மையல்ல. அது உடல் முழுவதிலுமிருந்து வெளிப்படும். அதே அளவு நன்மை, பார்வை மற்றும் சொற்களின் அதிர்வுகள் மூலமும் வெளிப்படுகிறது. இதுவே அருளாசிகளின் சாரம்.

வெறுமே பெரியோர்களை நினைத்தாலேயே நமக்கு அவர்கள் அருள் கிடைக்கிறது.நினைவு, சொற்கள், பார்வை மற்றும் ஸ்பரிசம் ஆகியவை மூலம் நமக்கு அருள் கிடைக்கிறது. தர்ஷன், ஸ்பர்ஷன் மற்றும் திருஷ்டி மூலம் நமக்கு அருள் கிடைக்கிறது. ஆனால் நீங்கள், ‘குருதேவ், தயவு செய்து என் தலை மீது கைவைத்து உங்கள் அருளாசிகளை சரியாக அளிக்க வேண்டும்’, என்று கேட்கக் கூடாது.

இப்போதெல்லாம், சில அடியார்கள் எப்படி ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று கூட கற்றுத் தர முயற்சிக்கிறார்கள். அருளாசி தானாக கிடைக்கும். என் கால்களை தொடுவதோ அல்லது உங்கள் தலைமீது கைவைக்க என்னைக் கேட்பதோ அவசியமில்லை. பார்ப்பதில் அல்லது வார்த்தைகளை கேட்பதில் என் அருளாசிகள் கிடைத்துவிட்டதாகவே அனுமானம் செய்து கொள்ளுங்கள் போதும்.

எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து கொண்டு உங்கள் மனதில் என் அருளாசிகளை வேண்டினால் உங்களுக்கு கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். இப்படி தான் ‘ஷ்ராத்’ (முன்னோர்களுக்கான மரியாதை சடங்குகள் – திவசம்) செய்யப்படுகிறது. அந்தப் பக்கம் (அமரரானவர்களுக்கு) சென்றவர்களை நினைத்து தியானித்து அவர்களின் அருளாசிகளை வேண்டுகிறோம். இப்படி அமர்ந்து நினைப்பதன் மூலம் நமக்கு அந்த அதிர்வுகள் கிடைக்கிறது.

இது எப்படி முடியும் என்று கேட்கலாம். காம வாசனா எப்படி எழுகிறது என்று சொல்லுங்கள்? அந்த நினைப்பின் மூலமாகவே அல்லவா? பின்னர் உடம்பில் அதற்கான உயிர் இரசாயனங்கள் (ஹார்மோன்கள்) அதிகமாக சுரக்கிறது.

எப்படி கோபப்படுகிறீர்கள்? ஒன்றை நினைப்பதால் மட்டுமே அல்லவா? எப்படி வெறுப்பு ஏற்படுகிறது? உங்களுக்கு பிடிக்காதவர்களை நினைப்பதின் மூலமாக அல்லவா? உங்களுக்கு பிடிக்கவதர்களைப் பற்றி நினைக்க நினைக்க உங்கள் உடம்பில் உதறல் ஏற்படுகிறது அல்லவா? எப்படி பயம் வருகிறது? நினைப்பத்தின் மூலம்.

எனவே நினைப்பதினால், காமம், கோபம், பயம், வெறுப்பு ஆகியவை வரமுடியும் என்றால் அருளாசி வர முடியாதா என்ன? அருளாசி என்ன அவ்வளவு வலுவில்லாதவையா? அல்லது கிடைக்க நீங்கள் அவ்வளவு உழைக்க வேண்டும் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை! நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. நினைத்தால் மட்டுமே போதும் உங்களுக்கு அருளாசி கிடைக்கும்.‘துர்கா சப்தஷதி’ போன்ற நூல்களை படிப்பதனாலேயே மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதன் உட்பொருள் இறை நினைப்பில் மூழ்குவதாலேயே  ஒருவருக்கு அருளாசி கிடைக்கும். இப்படித்தான் இது நடக்கிறது.

எப்போதெல்லாம் நன்றியுணர்வு பெருகுகிறதோ அப்போதெல்லாம் உங்களுக்கு அதனோடு நிச்சயமாய் அருளாசியும் கிடைக்கிறது என்று நினையுங்கள்.

கேள்வி: சரணாகதி மூலம் ஒருவருக்கு எல்லாம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது; எல்லாம் கிடைக்காத ஒருவர் முழுமையாக சரணாகதி அடையாதவர் என்பது சரியா?

குருதேவ்: எல்லாம் வேண்டும் என்று கேட்பதற்கு முன் ஒருவர் கவனமாக யோசிக்க வேண்டும். எல்லாம் வேண்டும் என்று கேட்டால், அதில் நல்லதும் உண்டு தீதும் உண்டு. மகிழ்ச்சி, துன்பம், பிரச்சினைகள் இவை எல்லாம் அடங்கியதே ‘எல்லாம்’ என்பது. இவை எல்லாம் வாழ்க்கையில் ஒரு பகுதி.

உங்கள் மனதில் தெளிவில்லை. உங்களுக்கு என்ன வேண்டும் என்பது கூடத் தெளிவாகத் தெரியவில்லை. ஒருநாள், நன்கு வசதியாக அமர்ந்து, உங்களுக்கு உண்மையில் என்ன வேண்டும் என்பதை தெளிவாக யோசியுங்கள். உங்களுக்கு டஜன் கணக்கில் தேவைகள் இருக்கும் உங்கள் மனம் அதைப் பற்றிக் கொண்டிருக்கும்; அது சரியல்ல. ஒரு தேவை வைத்துக் கொள்ளுங்கள் அதில் உங்கள் மனத்தைக் குவியுங்கள். என்னுடைய ஆசைகள் ஒன்று கூட நிறைவேறவில்லை என்று சொல்பவர் ஒருவர் கூட கிடையாது. அதேபோல, தன்னுடைய எல்லா ஆசைகளும்  நிறைவேறிவிட்டது என்று சொல்பவர் ஒருவர் கூட இல்லை.

அதிக அளவு சத்வம் இருக்கும்போது, நிறைவேறுதல் நடக்கிறது, நீங்கள் மேற்கொள்ளும் வேலைகள் சரிவர முடிகிறது. அதிகம் மகிழ்ச்சியாய் இருந்தால் உங்கள் வேலை அதிகமாய் முடிகிறது. உங்கள் ஆசை நிறைவேறுவதில் வெறி குறைவாக இருந்தால் உங்கள் ஆசை அதிகமாய் நிறைவேறுகிறது.

ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ஆசையோடு உட்கார்ந்தால், கணினியைப் போன்ற உங்கள் பேருணர்வு குழுப்பமடைந்து அப்படியே வேலை செய்யாமல் நின்று விடுகிறது – அதாவது நீங்கள் பொதுவாகச் சொல்வதுபோல் உங்கள் கணினி ‘ஹேங்’ ஆகிவிடுகிறது.

உங்கள் கை பேசியில் கூட பல பிரயோகங்களை ஒரே நேரத்தில் திறந்தால் அது வேலை செய்யாமல் நின்று போகிறது. அந்த கை பேசியைப் போல, உங்கள் பேருணர்வு ஒரு பெரிய கணினியைப் போன்றது. அதனால் தான், ஆசைகள் ஒரு கலை, அதை நிறைவேற்றி கொள்வதும் 
ஒரு கலை. மேலும் சொல்வதென்றால், ஆசைப்படாமலேயே ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வது அதை விடப் பெரிய கலை. அது தான் சித்தி (அசாதாரணமான திறன்

ஆசைப்படுவதற்கு முன்னதாகவே உங்கள் தேவைகள் பூர்த்தியாவதை இங்கு எத்தனை பேர் அனுபவித்திருக்கிறீர்கள்? (அவையில் உள்ள பலர் கைகளை தூக்குகிறார்கள்) பல சித்தர்கள் (பூர்தியானவர்கள் / துல்லியமானவர்கள்) இங்கு அமர்ந்திருக்கிறார்கள்.எல்லோரும் கைகளை தூக்குகிறார்கள். நீங்கள் ஆசைப்படுவதற்கு முன்னாலேயே உங்கள் வேலைகள் முடிகிறது என்றால் அது நிச்சயம் பாராட்ட வேண்டியது தான்.

கேள்வி: குருதேவ், ஜனக மகாராஜா ஞானம் பெற்ற பின்னும் உயிரோடு இருந்ததே தவம் என்று கூறியிருக்கிறீர்கள். ஞானம் பெற்ற பின்னும் தவம் செய்ய முடியுமா?

குருதேவ்: ஞானம் பெற்ற பின் போகத்தில் (புலன்களை பிரயோகிப்பது) இருப்பதே தவம். ஞானம் பெற்ற பின் உயிர் வாழ்வது என்று நான் சொல்லவில்லை. ஞானம் அடைவதற்கு முன் யோகம் தவம், ஞானம் அடைந்த பின்னர் போகம் தவம்.

கேள்வி: சிவ பரிவாரம், அதாவது சிவ பெருமானின் குடும்பதிலுள்ளவர்களின் வாகனங்கள் எல்லாம் எதிரிகளாயிருந்தவர்கள் – சிம்மம், எருது, பாம்பு மற்றும் எலி போன்றவை. இதன் பின் உள்ள இரகசியம் என்ன?

குருதேவ்: எதிரெதிர் மதிப்புகள் ஒன்றை ஒன்று நிறைவு செய்யும். சிவபெருமான் இருக்குமிடத்தில் எல்லோரும் ஒற்றுமையாய் இருப்பார்கள். ஆன்மிகம் வளரும்போது, வெவேறு விதமான மக்களும் இணைவார்கள். சிவ தத்துவம் அல்லது  குரு தத்துவம் இருக்குமிடத்தில், ஒரே வகையான மக்கள் மட்டுமே இருக்க மாட்டார்கள், ஆனால் வகைவகையான மக்கள் ஒற்றுமையாய் ஒரு இடத்தில் வாழ்வார்கள். இதுதான் சிறப்பு.

கேள்வி: கலியுகத்தில் தமோ குணம் எங்கும் வியாபித்து இருக்கும்,ஆனால் ஆன்மீக சாதகர்களுக்கு அது நல்ல நேரமாக இருக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். தமோகுணம் ஆதிக்கமாய் இருப்பது எப்படி சாதகர்களுக்கு நன்மையாய் இருக்க முடியும்?

குருதேவ்: பாருங்கள், சாதகர்களாய்(ஆன்மீக தேடலில் இருப்பவர்கள்)மாறும்போது எல்லா நேரமும் புனிதமானவையே, பயன் தருபவையே,மகிழ்ச்சி துக்கம் இவை இரண்டும் அதற்கென ஒரு காரணம் கொண்டுள்ளது. ஒருவர் எல்லா கணங்களையும் சூழ்நிலைகளையும் சாதகமாகவும், நம் ஆன்மீக சாதனைக்கு பயனளிப்பதாகவும் கருத வேண்டும்.

கேள்வி: உங்கள் அருள் எல்லோருக்கும் சமமாய் இருக்கும்போது, ஏன் சில சாதகர்கள் நிறைய கஷ்டப்படுகிறார்கள் சிலருக்கு அப்படி இல்லை?

குருதேவ்: எல்லோரும் ஒன்று போல அல்ல.இறைவன் ஒன்றை போலவே எல்லாவற்றையும் படைக்கவில்லை. விதவிதமான மக்கள், வெவ்வேறு கொள்திறன், வெவ்வேறு வளர்ப்பு, வெவ்வேறு என்ன ஓட்டம் மற்றும் வெவ்வேறு சம்ஸ்காரங்கள்(மனப் பதிவுகள்)என்று இருக்கிறார்கள். உங்களை நீங்கள் சாதகராக கருதினால், உங்களை யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

உங்களை நீங்கள் ஒப்பிட முடியாதவராக கருதவேண்டும். எல்லோரும் தங்களை தாங்களே ஒப்பிட முடியாதவராக கருதவேண்டும். நாம் மற்றவரோடு ஒப்பிடும்போது வெளிப்புறம் பார்க்கத் தொடங்குகிறோம். பிறகு, தாபம், வெறுப்பு போன்றவைகளில் சிக்கி அந்தக் குழப்பத்தில் நம்மை நாமே இழக்கிறோம்.

கேள்வி: குருதேவ், நீங்கள் அந்தர்யாமி, உங்களுக்கு எல்லாம் தெரியும். என் மனதிலுள்ள கேள்விக்கு விடை தாருங்கள்.

குருதேவ்: அந்தக் கேள்விக்கு நான் அங்கேயே பதில் கூறுகிறேன். ஒரே ஒரு கேள்வி இருந்தால் வித்தியாசமாக இருந்திருக்கும், ஆனால் அங்கே பல கேள்விகள், சங்கிலித் தொடர்போலக் கேள்விகள் உங்கள் மனதில். சாந்தமாய் தளர்வாய் இருங்கள். உங்கள் கேள்விகளுக்கெல்லாம் தானாய் பதில் கிடைப்பதைப் பார்ப்பீர்கள்.

கேள்வி: குருதேவ், ‘புருஷா’ மற்றும் ‘பிரகிருதி’ எப்படி பிறப்பிக்கப் பட்டது? இதற்கிடையே என்ன உறவு?

குருதேவ்: அவர்களின் பிறப்பு எப்போது என்று எனக்கு இப்போது தெரியாது. உண்மையில், அவர்கள் முதலில் பிறந்தார்களா என்றே தெரியாது. காலத்தை கடந்து அவர்கள் இருப்பு இருக்கிறது.


காரணமும், விளைவும்…


4 – நவம்பர் 2012 – பெங்களூர் - இந்தியா



கே: குருதேவ், நீங்கள் இவை எல்லாவற்றையும் யாரிடமிருந்து கற்றீர்கள்உங்களுக்கு தியானம் கற்றுக்கொடுத்தது யார்

குருதேவ்: நீங்கள் ஒரு கவிஞரையோ அல்லது ஒரு எழுத்தாளரையோ பார்த்து அவர்கள் யாரிடமிருந்து கற்றுக்கொண்டார்கள் என்று கேட்பீர்களா? அவர்கள் அவர்களாகவே  எழுதுகிறார்கள் இல்லையா

ஒரு கவிஞரோ அல்லது எழுத்தாளரோ இங்கிருந்தும் அங்கிருந்தும் நகலெடுத்து அளித்தால் அதனை தங்களுடைய சொந்த படைப்பு என்று சொல்லிக்கொள்ள முடியுமா? ஒருவர் தியானத்தில் ஆழ்ந்து செல்லும்போது எல்லாமே ஒரே ஆதாரத்திலிருந்து தானாகவே  உள்ளுணர்வாக தோன்றும்.

கே: சில பண்டிகைகளின் போது நாம் எல்லா விதமான தானியங்களையும் தானமாக  கொடுக்கின்றோம். அந்த தானியங்களுடன் சேர்த்து உப்பை தானமாகக் கொடுக்கக்கூடாது  என்று சொல்லப்படுவது ஏன்?

குருதேவ்: இது வெறும் பழக்கத்தில் வந்தது தான். இவ்வாறு சாஸ்த்திரங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்

உப்பில்லாத உணவுப் பண்டம் எதுவும் இல்லை. அனைத்துப் பொருட்களிலும் சிறிதளவாவது உப்பு இருக்கின்றது. சமய சடங்குகளில் அளிக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும்  சிறிதளவாவது உப்பு இருக்கின்றது. தேங்காய்த் தண்ணீரில் உப்பு இருக்கின்றது. பழங்களில் உப்பு இருப்பதாக சொல்லப்படுகின்றது. நாம் சுவாசிக்கும் மூச்சுக்காற்றில் கூட உப்பு இருக்கின்றது

நாம் மற்றொருவருக்கு நேரடியாக எண்ணெய், உப்பு, மிளகாய் (சிவப்பு/பச்சை) தண்ணீர்  போன்றவற்றை கைகளில் கொடுக்கக்கூடாது என்று சொல்லப்படுகின்றது. எனவே தான் நாம் பிறருக்குக் கொடுக்கும்போது அவற்றை தரையில் வைத்து விடுகின்றோம். இவற்றை நேரடியாக மற்றொருவர் கைகளில் கொடுக்கும்போது ஒருவருடைய அதிர்வுகள் மற்றொருவருக்கு இவற்றின் வழியாகச் சென்று விடும் என்று நம்பப்படுகின்றது

ஒருவேளை, நீங்கள் மற்றொருவருடைய அதிர்வுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தால் பஜனைகள் பாடுங்கள். ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை உச்சாடனம் செய்யுங்கள்பிராணாயாமப் பயிற்சி செய்யுங்கள். எதிர்மறை விளைவுகள் எல்லாம் சென்று விடும்.

கே: குருதேவ், யோக வசிஷ்டாவிலிருந்து ஒரு கேள்வி. பிருகு மகரிஷியின் மகன் சுக்ராச்சாரியர் இறந்துபோன ஒருவரை புனித நீர் தெளித்தும் மந்திரங்கள் உச்சரித்தும் மீண்டும் உயிர்ப்பிக்கின்றார். இது சாத்தியமா?

குருதேவ்: யோக வசிஷ்டாவில் சொல்லப்பட்டிருக்கும் கதைகள் நிறைய ஆழ்ந்த மறை பொருட்களைக் கொண்டுள்ளன. அதை ஒரு முறை படித்தால் போதாது. அதை  மீண்டும் மீண்டும் படிக்கும் போது தான் நீங்கள் அதில் மறைந்திருக்கும் இரகசியங்களை புரிந்து கொள்ள முடியும்

கே: நாம் மந்திரங்களை உச்சாடனம் செய்யும்போது, அவை நம் சுற்றுச் சூழலையும்நம்மைச் சுற்றியுள்ள மக்களையும், இந்த உலகம் முழுவதையும் எவ்வாறு பாதிக்கின்றன?

குருதேவ்: இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்துமே  மற்ற அனைத்தையும் பாதிக்கின்றன. ஆகவே, நீங்கள் மந்திரங்கள் ஓதும்போதும், யாகங்கள் செய்யும்போதும் அவை சுற்றுப்புறத்தில் மிகவும் நல்ல நேர்மறை பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உங்களுக்கு நல்ல அதிர்வுகளை அளிப்பதுடன் இந்த காற்றுவெளி முழுவதிலும் நேர்மறை அணுக்களை அதிகப்படுத்துகின்றன

கே: சிவனின் குருவடிவமான தட்சிணாமூர்த்தி சாமவேதப்பிரியர் என்று சொல்லப்படுவது ஏன்

குருதேவ்: சாமவேதத்துடன் தொடர்புடைய மக்களால் அவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம். ரிக் வேதத்தினைச் சேர்ந்தவர்கள் அவரை ரிக்வேதப்பிரியர் என்று அழைக்கலாம். யஜூர் வேதத்துடன் தொடர்புடையவர்கள் யஜூர் வேதம் தான் வேதங்கள் அனைத்திலும் தலை சிறந்தது என்று சொல்லலாம்

பகவான் கிருஷ்ணர் 'vedanamsamavedosmi'  (பகவத்கீதை அத்தியாயம் 10,வரிகள் 22) என்று சொல்லியிருக்கின்றார் ஏனென்றால் சாமவேதம் பக்தி, இசை என்னும் இரண்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றது. நம் மூளை இரண்டு அரை கோளங்களைக்  கொண்டதுஅவற்றில் இடது புறம் பகுத்தறிவுடனும், வலது புறம் இசையுடனும் தொடர்புடையவை. சாம வேதமும் அதே போல் பகுத்தறிவு இசை போன்றவற்றோடு தொடர்புடையதால் அவ்வாறு சொல்லப்பட்டிருக்கலாம்.  

கே: கன்னட மொழி கஸ்தூரியுடன் ஒப்பிட்டு சொல்லப்படுவது ஏன் ?

குருதேவ்: நீங்கள்  வேண்டுமானால் மல்லிகையுடன் ஒப்பிட்டு சொல்லிக்கொள்ளுங்கள் கவிஞர்கள் கஸ்தூரி கன்னடம் என்று அழைத்தார்கள். ஏன் அப்படி அழைத்தார்கள் என்று நீங்கள் கேள்வி கேட்க முடியாது. உதாரணத்திற்கு ஓர் அழகான பெண் சந்திரமுகி’,அதாவது சந்திரன் போன்ற அழகான முகம் உடையவள் என்று அழைக்கப்படுகின்றாள். சந்திரனில் ஏராளமான புள்ளிகள் உள்ளன. இருந்தாலும் ஏன் பெண்ணின் முகம் சந்திரனுடன் ஒப்பிடப்படுகின்றது?

பசியோடு இருக்கின்ற ஒருவனுக்கு நிலவு ஒரு வட்டமான இனிப்புப்பண்டம் போல் தெரிவதாக ஒரு பழமொழி  உள்ளது. கஸ்துரி மிக இனிமையான மணம் உடையது. அதனால் கவிஞர்கள் கன்னட மொழியினை  இனிமையான மொழி என்று விளக்குவதற்காக அதனுடன் ஒப்பிட்டு சொல்லியிருக்கலாம்.  

கே: தற்சமயம் நம் நாடு மிகுந்த வரட்சியினை எதிர்கொண்டுள்ளது. நாம் கங்கை, காவேரி  ஆகிய நதிகளை இணைத்தால் நீர்ப்பாசனத்திற்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த விஷயத்தில் தீவிரமாக செயல்படுமாறு நீங்கள் அரசியல்வாதிகளுடன் பேச முடியுமா?

குருதேவ்: நம் நாட்டில் உள்ள எல்லா நதிகளிலும் அணைகள் கட்டி ஆற்று நீர் கடலில் சென்று கலந்துவிடாமல் தடுத்தால் இந்தியா முழுவதும் இரண்டடி உயரத்திற்கு  நீர் ( நீர்ப்பாசனத்திற்குத் தேவையான நீரைக் குறிப்பிடுகின்றார்) நிறைந்துவிடும் என்று விஞ்ஞானிகள் சொல்கின்றனர்

மிக அதிக அளவிலான ஆற்று நீர் வீணாக கடலில் சென்று கலக்கின்றது. நாம் ஆற்று நீரை சரியான முறையில் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இந்தியாவில் தண்ணீர்ப் பஞ்சமில்லை. மிக அதிக அளவு மழை பெறுவதில் உலகிலேயே இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இருந்தாலும் மழை நீரை நாம் சரியான முறையில் சேமித்து வைப்பதில்லை. நீங்கள் உங்களுக்குள்ளேயே குழுக்கள் அமைத்து அணைகள் கட்டி மழை நீரை  சேமித்து வையுங்கள்.

கே: வேத ஞானப் பயிற்சி' (vedic wisdom program) ஐரோப்பியர்களுக்காக மட்டும் அதிலும் குறிப்பாக 2012 ஆம்  ஆண்டில் அளிக்கப்படுவதற்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணம் உள்ளதா

குருதேவ்: அதனை நாம் வடஅமெரிக்கா மற்றும் தென்அமெரிக்காவிற்கென  துவங்கியிருந்தால், மிகப்பெரிய குழுவாக இருந்திருக்கும். நாங்கள் ஏறக்குறைய நூற்றி ஐம்பது பேர் கொண்ட சிறு குழுவாக அமைக்கவே விரும்பினோம். எனவே தான் தற்போது ஐரோப்பாவிற்கு மட்டும் அறிவித்துள்ளோம். உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அறிவித்திருந்தால், அது குரு பூஜை பயிற்சி போன்று ஆயிரத்து ஐநூறு பேருக்கும் மேல் கொண்ட மிகப் பெரிய குழுவாகி இருக்கும்.
                                                                                                                                                                                                                                                                                                                                                                     
தற்சமயம் அதற்கேற்ற இடமில்லை என்று நான் நினைக்கின்றேன். எனவே இப்போது சிறு குழுக்களாக செயல்படுவோம். இந்த ஆண்டு ஒரு புதிய ஞான அலை தேவையாக இருந்ததுஅது வந்து விடும். நீங்கள் அனைவரும் பெரிய வேலை ஒன்று செய்ய வேண்டி உள்ளதுஇன்று 

உலகம் முழுவதும் புராதான ஞானத்தை ஏற்க தயாராக உள்ளது. எனவே வேத ஞான பயிற்சி அமைப்பில் உள்ள நீங்கள் அனைவரும் இந்த ஞானத்தை கோடிக்கணக்கான மக்களுக்கு எடுத்துச் சென்று அவர்கள் வாழ்வில் ஒளியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வாருங்கள்

கே: தைராயடினால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதற்கு தீர்வு என்ன?

குருதேவ்: நம் உணவில் உள்ள பூச்சிக் கொல்லிகளும் இரசாயனங்களும் தான் காரணம் என்று நான் நினைக்கின்றேன்.