மௌனம்...

மௌனத்தில் இருப்பது மிகவும் பயனுள்ளது. வருடத்தில் இரண்டு முறையாவது மௌனத்தில் இருக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆண்டுக்கு இருமுறை நல்லது.

மௌனம் நமது பேச்சை சுத்தப் படுத்துகிறது. பெரும்பாலும் நாம் பேசும்போது என்ன நடக்கிறது, கவனித்தீர்களா? நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். நீங்கள் பேசும்பொழுது மற்றவர்களிடம் என்ன பாதிப்பு ஏற்படுகிறது - நாம் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். பல நேரங்களில், நாம் இதை கவனிப்பதற்கு கவலைப்படுவதில்லை, நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம். நாம் என்ன சொல்ல நினைக்கிறோமோ அதை எல்லாவற்றையும் சொல்லி விட்டு ஓய்வாக இருக்க விரும்புகிறோம். இல்லை, மற்றவர்களின் மீது உங்கள் பேச்சு என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

பகவத்கீதையில் ஒரு வாக்கியம் உண்டு,‘அணுத்வேக- கரம் வாக்கியம் சத்யம் பிரியா-ஹிதம் சயத். மனதில் இரைச்சலை உருவாக்காத வார்த்தைகள் எதுவோ அதுவே உண்மை. அக்கறையோடும் இதமாகவும் உள்ள உண்மை, அப்படிப்பட்ட வார்த்தைகளையே பேச வேண்டும். அது பேச்சின் தவம் என்று அழைக்கபடுகிறது.

அதே போல உடலுக்கு, மிதமான உணவு, மிதமான உடற்பயிற்சி, மிதமான வேலை, மிதமான ஒய்வு.உடலுக்கு இது ஒரு உடற்பயிற்சி, ஒரு தபஸ் (எளிமையான நடவடிக்கை).மற்றும் பேச்சின் தபஸ் எதுவெனில், மற்றவர்களின் மனதை காயப்படுத்தாத பேச்சு ஆகும்.

பாருங்கள், சில நேரங்களில் நாம் சரி என்று நினைக்கிறோம் மற்றும் அது சரியாக இருக்கலாம்; நீங்கள் பேசுவது உண்மையாகக் கூட இருக்கலாம், அது அக்கறை உள்ளதாகவும் மற்றவர்களுக்கு நல்லாதாகவும் இருக்கலாம், ஆனால் அது இனிமையாக இல்லாமலும், மற்றவர்களை காயப் படுத்துவதாகவும் இருந்தால், அது முழுமையானதல்ல.

ஆகையால் இது ஒரு மிகப் பெரிய திறமை, இது சுலபமான செயல் அல்ல - மற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல் இருப்பது மற்றும் வலியை கொடுக்காமல் இருப்பது. உங்களுக்கு தெரியுமா, நீங்கள் சில வார்த்தைகளை யாரோ ஒருவரிடம் பேசி விடுகிறீர்கள், அவர் நாள் முழுவதும் அழுகிறார் அல்லது வருத்தமாக இருக்கிறார், இது நல்லது அல்ல.ஆகையால், இனிமையான, உண்மையான, அக்கறையுள்ள வார்த்தைகளையே பேசுங்கள். அதே நேரத்தில், இனிமையான பொய்களை பேச வேண்டாம். உண்மையுள்ள, அக்கறையான, இனிமையான மற்றும் மற்றவர்களை காயப் படுத்தாத வார்த்தைகளை பேச வேண்டும். உங்களின் இனிமையற்ற வார்த்தைகளால் மற்றவர்களின் மனதை மற்றும் இதயத்தை நசுக்க வேண்டாம்.

நீங்கள் சொல்லலாம், "நான் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இல்லை, மற்றும் காயப் படுத்தும் வார்த்தைகைள் என்னுடைய வாய்மூலம் வெளிப்பட்டு விடுகிறது, நான் என்ன செய்வது?" மௌனத்தில் இருங்கள். இது உங்களுக்கு உதவும். நீங்கள் மௌனத்தில் இருங்கள். தியானம் மற்றும் மௌனம் இவை எல்லாம் உங்களுக்கு உதவி செய்யும். சில நேரங்களில், இவைகளுக்கு பதிலாக, அவை வந்தால், அவை நடந்து விட்டால், அதை பற்றி நீங்கள் எதுவும் செய்ய முடியாது பிறகு நீங்கள் மன்னிப்பு கேளுங்கள்.

ஆகையால், அது நல்லது, நீங்கள் மௌனத்திற்கு செல்லும் பொது, நீங்கள் மன்னிப்பு கேளுங்கள். என்னுடைய எண்ணம், வார்த்தை மற்றும் செயல் மூலம் மற்றவர்களை காயபடுத்துமாறு ஏதாவது செய்திருந்தால், என்னை மன்னித்தருளவும். அது முழுவதுமாக நம்மை தலைகுனிவிலிருந்து மேலே உயர்த்தும். இது அர்த்தமுள்ளதா? ஆமாம்!

பாருங்கள், வாழ்கையில் எல்லாமே ரோஜாவாக இருக்கும் என நினைக்க வேண்டாம், வாழ்க்கையில் முற்களும் இருக்கும். மகிழ்ச்சியற்ற விசயங்களும் இருக்கும், அவைகள் வரும் போகும். நாம் எங்கும் சிக்கிக் கொள்ளாமல், வெறுமனே செல்ல வேண்டும்.


விளக்கங்கள் இல்லை - புகார்கள் இல்லை



ஹாலந்து, நெதர்லாண்ட்ஸ் – 17 ஜூன் 2012

ஹாலந்தில் ஆனந்த அலைகள் உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. உங்களுக்கு அப்படித் தோன்றவில்லை?
உங்களுக்குத் தெரியுமா, நம்மை பற்றி மட்டுமே நினைக்கும்போது சுருங்குகிறோம். ஆனால் நம் சமூகத்தைப் பற்றி, ஒவ்வொருவருக்குமாக நினைக்கும் போது நாம் அதிகம் மகிழ்கிறோம். ஆம், அதில் சோதனைகள் உள்ளது.
எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள், சரி தானே? யாராவது இங்கு மகிழ்ச்சியாக இருக்க விரும்பாதவர்கள் இருக்கிறார்களா? ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு விலங்கும், ஒவ்வொரு படைப்பும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறது. இப்போது, மகிழ்ச்சியாக இருக்க என்ன வழி? மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது தான் அந்த வழி. நீங்கள் மகிழ்ச்சியை பரப்பும்போது அது வளர்கிறது. நீங்கள் அதை பரப்பாமல் உங்களுக்குள் வைத்துக் கொள்ளும்போது, அது குறைந்து காணாமல் போகிறது. இதுதான் மக்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் மகிழ்ச்சியாய் இருக்க விரும்புகிறார்கள், ஆனால் அதை எப்படி எல்லோருடனும் பகிர்ந்துகொள்வது, தங்கள் குடும்பத்தை எப்படி விரிவாக்கிக் கொள்வது என்று தெரியவில்லை. அதுதான் வாழும் கலை. ஒருவருடைய மகிழ்ச்சியை எப்படி பெருக்குவது, தன் குடும்பத்தை எப்படி விரிவாக்குவது என்ற கல்வியே வாழும் கலை. எனவே, நாம் இதை செய்வதில் உறுதியோடு இருக்கிறோமா?
ஒரு பழைய சமஸ்க்ருத பழமொழி ஒன்று கூறுகிறது, ‘ஒரு உண்மையான வழிபாடு அல்லது இறைவனிடம் பிரார்த்தனை என்பது மற்றவரிடம் மகிழ்ச்சியை உண்டாக்குவது தான். இதில் சவால்கள் உள்ளன, அதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் சவால்கள் உண்டு. வேலை, கணவன், மனைவி, குழந்தைகள், சகோதரர், சகோதரி, அம்மா, அப்பா, குடும்பம், ஆரோக்கியம், முதலிய பல காரணங்களால் ஒருவருக்கு சவால்கள் இருக்கலாம். எல்லா சவால்களும் நம்மைச் சூழ்திருக்கிறது, சரியா? யாருடைய வாழ்க்கையிலும் சவால்கள் இல்லாத நேரம் இருப்பதில்லை. உங்கள் நண்பரால் இல்லாவிட்டால், உங்கள் உறவினரால் சவால்கள். இது எதுவுமில்லைஎன்றால், சோதனை தர இந்த உலகம் இருக்கிறது!
கிரீஸ் நாட்டில் இன்று தேர்தல். எல்லோரும் என்ன ஆகுமோ தெரியாது என்ற பதைபதைப்பில் இருக்கிறார்கள்.  கிரீஸ் மூழ்கினால், யுரோவுக்கும் (Euro) ஐரோப்பாவுக்கும் பெருத்த பாதிப்பு உண்டு. இந்த பயம் இருக்கிறது. எனவே ஒவ்வொருவருக்கும் கவலைப்படுவதற்கு ஒன்றில்லாவிட்டால் ஒன்று இருக்கிறது, சரிதானே?
இப்போது, இந்த கடினமான சூழ்நிலைகளையும் தாண்டி, நாம் உயர்ந்தால், முன்னேறினால், திறந்த கரங்களோடு, சிறகு விரித்து, ஆனந்தமான உலகை இலக்காக கொண்டு வேலை செய்தோமானால், நான் சொல்கிறேன், நாம் வெற்றி பெறுவோம். புரிந்ததா?
1988 நான் முதன் முதலில் ஹாலந்து வந்தபோது ஒரு சிறு அறையில் உரையாற்றினேன். சுமார் 15 பேர் அப்போது இருந்தனர். அதில் இருந்தவர்களில் சுமார், 5 அல்லது 6 பேர் சூரினாம் நாட்டை சேர்ந்த இந்தியர்கள். அவர்கள் சொன்னார்கள், ‘ஹாலந்து மிக கடினம். இங்குள்ளவர்கள் ஆன்மிகம் சம்பந்தப்ப்பட்ட எதுவும் செய்ய மாட்டார்கள், உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்.’
நான் ஒரு சிறு புன்னகையுடன் அதை கேட்டுக் கொண்டேன். பிறகு, சூரினாம் சமூகம் வாழ்ந்த இடத்திலிருந்த ஒரு சிறு கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு என்னை பேச சொன்னார்கள். மறு நாள், வேறு ஒரு இடத்திலுள்ள கோவிலுக்கு நான் வர வேண்டும் என்று விரும்பினார்கள்.
நான் சொன்னேன், ‘நான் வருகிறேன், ஆனால் நான் எல்லோருடனும், அந்த முழு சமூகத்துடனும் பேசவேண்டும்.’ அவர்கள் சொன்னார்கள், ‘இங்குள்ளவர்கள் இந்தியாவுடன் சம்பந்தப்பட்ட எதையும் விரும்ப மாட்டார்கள், மக்களுக்கு பிடிக்காது; இந்த பேதம் இருக்கிறது.’
நான் கூறினேன்,’இல்லை, பரவாயில்லை’. முறுவலுடன் நான் சொன்னேன், ‘இந்த முழு உலகமும் எனது குடும்பம். ஒன்றல்ல எல்லா சமூகமும் என்னைச் சேர்ந்தது. டட்ச், சூரினாம், இந்தியர்கள் என்று மட்டுமல்ல, எல்லா சமூகமும் என்னைச் சேர்ந்தது.’ இங்கு இரண்டு தனித் தனி கோவில்களுள்ளன. ஒன்று சூரினாம் நாட்டைச் சேர்ந்தவர்களுக்காக, மற்றொன்று இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்திருப்பவர்களுக்காக. நான் இரண்டு கோவில்களுக்கும் சென்ற பின்னர் ஒரு சர்ச்சுக்கும் சென்றேன். அங்கு ஒருசிறு கூட்டம். அவர்களும் தியானத்தை நான்றாக அனுபவித்தனர்.
அவர்களுக்கு சிறு அளவு தியானமும், கொஞ்சம் சுதர்ஷனக் க்ரியாவும் கற்பித்தேன். பிறகு நான் சொன்னேன், ‘ஒரு நாள் இங்கு, ஹாலந்தில் நிறைய பேர் சுதர்சனக் க்ரியா செய்ய வருவார்கள். அதிலிருந்து நான் மேலும் நகரத் தொடங்கினேன். பெங்களூரின் வசதி, நல்ல தட்ப வெப்பம், அழகு, அதன் சொகுசில் இருந்திருந்தால் நான் என் வசதி வட்டத்திற்குள்ளேயே முடங்கியிருந்திருப்பேன்.
அந்த நாட்களில், இந்தியாவிற்கு வெளியே பயணம் செய்வது கடினமாயிருந்தது. செலவு அதிகம். மேலும் அப்போது இங்கு நல்ல குளிர். ஒரே இருட்டும் குளிருமாயிருக்கும். ஒரே ஒரு அறை கொண்ட ஒரு சிறு குடியிருப்பில் தங்கியிருந்தேன். அந்த அறையிலிருந்து சிறிய படிகள் வழியாக கீழே இறங்கி வந்தால், ஒரு கால்வாயின் முன் நிற்பீர்கள். நான் எப்போதுமே ஜன்னல் கதவை திறந்தே வைப்பேன். ஜன்னல்கள் மூடியிருப்பது எனக்கு பிடிக்காது. எனவே ஜன்னல் கதவை திருந்து வைப்பேன். குளிர் காற்று இரவு முழுதும் வீசியபடி இருக்கும். ஆனால் அதையெல்லாம் நான் மகிழ்ச்சியுடனேயே அனுபவித்தேன். ஏனென்றால் எனக்கு எல்லா ஹாலந்து மக்களையும் தொடர்புகொள்ள வேண்டிய இலட்சியம் இருந்தது. அவர்கள் எல்லோரும் இந்த அழகிய பரிசின் பலனைப் பெற்று மகிழ வேண்டும் என்று விரும்பினேன்.
அதன் பிறகு, பல முறை இங்கு வந்தேன் மற்றும் பலர் இதில் சேந்தார்கள். ஆனாலும் நாம் போக வேண்டிய வேகத்தில் நாம் இன்னும் போகவில்லை. அப்படி நீங்கள் நினைக்கவில்லை? மிக மெதுவான வண்டியில், கடைசி பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். வேகமான பாதைக்கு மாற வேண்டும். ஹாலந்து மக்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு இந்த நாட்டில் ஆனந்த அலை ஏற்படுத்த வேண்டும்.
ஆங்காங்கே மக்களை ஒன்று கூடச் சொல்லி கொஞ்சம் பாஸ்த்ரிகா கொஞ்சம் தியானம் என்று எல்லோருக்கும் கொஞ்சம் மாதிரி காண்பிக்க வேண்டும்.
வாருங்கள்! நாம் ஆடிப் பாடி ஒவ்வொருவருடன் பகிர்ந்து கொள்ளுவோம். வாழ்கை மிகச் சிறியது! இந்த கிரகத்திற்கு அழுது கொண்டே வந்தோம், ஆனால் அழுது கொண்டே இங்கிருந்து திரும்பிச் செல்ல விருப்பமில்லை. இங்கிருந்து போகும் போதாவது சிரித்துக் கொண்டே செல்வோம். ஆம் இந்த உடம்பு நோய்படும். பல காலமாக நோய் என்பது இந்த உலகில் இருந்து வருகிறது. இந்த உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். இந்த உடம்பிற்கு தேவையான உணவு, உறைவிடம் மற்றைய பிற தேவைகளை நாம் அளிக்க வேண்டும். ஆனால், உட்கார்ந்து இதைப் பற்றி கவலைப் பட்டுக்கொண்டிருப்பது தேவையில்லை. புரிகிறதா? கவலை தேவையற்றது.
கே: அன்பு குருஜி, மக்கள் சில நேரம் தாங்கள் கண்காணாமல் இருப்பது போல ஒரு உணர்வை எனக்கு அளிக்கிறார்கள். இதைப் பற்றி நாம் என்ன செய்யலாம்? தயவு செய்து என் குடும்பத்திற்கு ஆசீர்வாதம் செய்யுங்கள்.
குருதேவ்: கண்காணாமல், அப்படியென்றால் மக்கள் உங்களை கண்டுகொள்வதில்லையா? விட்டுத் தள்ளுங்கள். அது நல்லதே. யாரும் உங்களை கண்டுகொள்ளாதபோது, அவர்கள் உங்களிடம் எதையும் கேட்க முடியாது. உங்களுக்குத் தெரியுமா, குருவாக இருப்பது ஒரு பெரிய வேலை. பல வேண்டுதல்கள் உண்டு! ஒவ்வொரு நிமிடமும் கவனமாகவும் விழிப்போடும் இருக்க வேண்டும், ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் அவர்களுக்கு கிடைத்தாக வேண்டும். நீங்கள் கண்காணமல் இருப்பது நல்லதே. அதிர்ஷ்டத்தை அனுபவியுங்கள்! மற்றவற்றை விட்டுத் தள்ளுங்கள்.
கே: என் ஹாலந்து நாட்டு மக்கள் எப்படி அழகிய விஷயங்களை உருவாக்குகிறார்கள் என்று விளக்க முடியுமா? நாங்கள் பொருள் வாழ்கையை மட்டுமே பின்பற்றுகிறோம், மெய்யுணர்வைப் பற்றிய விழிப்பு கூட இல்லை. எப்படி இது முடிகிறது?
குருதேவ்: நான் அப்படி நினைக்கவில்லை. மக்களிடம் மெய்யுணர்வு இருக்கிறது. மக்களிடம் அவ்வளவு கருணை இருக்கிறது. ஹாலந்து மக்கள் நிறைய மதிப்புகளை கொண்டிருக்கிறார்கள்; துணை செய்யவும் சேவை செய்யவும் தயாராய் இருக்கிறார்கள். நீங்கள் அதற்கான வாய்ப்பும் அமைப்பும் தந்தாலே போதும்.
உலகில் எங்கு பேரழிவு நடந்தாலும் ஹாலந்தின் உதவிக்கரம் உடனடியாக நீளும். சுனாமி வந்த போது ஹாலந்த் உதவி செய்தது.  நிறைய துணிமணிகள் வந்து அவற்றை நாம் பகிர்ந்து அளித்தோம். உதவி நிறைய வருகிறது. ஹாலந்து மக்கள் பெரிய இதயம் படைத்தவர்கள். அவர்களை குறைவாக மதிப்பிடாதீர்கள். அவர்கள் துலிப் மலர்களைப் போன்றவர்கள் .
கே: அன்பு குருஜி, நான் ஒரு யோகா ஆசிரியர் மேலும் நான் கடுமையாக உழைக்கிறேன். நான் என்னை வேலையில் நன்கு ஆழ்த்திக் கொள்கிறேன், ஆனாலும் மேலும் நான் நிறைய செய்ய முடியும் என்று தெரிகிறது. உங்கள் அறிவுரை எனக்குத் தேவை.
குருதேவ்: எனக்கு நிறைய தன்னார்வ சேவையாளர்கள் தேவை. இங்கு நான்கு மையங்கள் உள்ளது. இந்த மையங்களில் வேலை செய்ய சேவையாளர்கள் நிறைய தேவைப் படுகிறார்கள். நீங்கள் தன்னார்வ சேவையாளராக பதிவு செய்து கொள்ளுங்கள். மாதத்தில் இரண்டு நாட்கள் சேவை செய்தால் கூட மிக நல்லது.
நீங்கள் மாதத்தில் இரண்டு நாட்கள், ஒரு மூன்று அல்லது நான்கு மணிநேரம் வேலை செய்தால் கூட போதும். என்ன வேலை தேவைப் படுகிறதோ அதை செய்யலாம். உங்களில் எத்தனை பேர் சேவையாளராக வரத் தயாராக இருக்கிறீர்கள்? உங்களால் என்ன முடியுமோ அதுதான் சேவை என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு மூன்று அல்லது நான்கு மணிநேரம் வந்து சேவை செய்வது மட்டுமே. சில மணி நேரம் நம் மையத்திற்கு வந்து, சில தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்லலாம், இங்கு வருபவர்களுக்கு சில நல்ல வார்த்தைகள் சொல்லலாம், உதவிகள் சில செய்யலாம், இதை நம்மால் செய்ய முடியாது?
இந்த அளவு பெரிய நாட்டிற்கு ஐந்து மையங்கள் போதாது என்பது உங்களுக்குத் தெரியும். டெல்லியில் எத்தனை சத்சங்கக் குழுக்கள் இருக்கின்றன தெரியுமா? 280  சத்சங்கக் குழுக்கள் இருக்கின்றன. இந்த எல்லா இடத்திலும் சுதர்சனக் கிரியா நடக்கிறது.
பெங்களூரில், ஆசிரமம் இருந்தாலும், அதற்கு மேல சுமார் 195 மையங்கள் இருக்கிறது. இங்கு, அந்தப் பகுதியிலுள்ள மக்கள் இணைந்து சுதர்சனக் கிரியா செய்வது, தியானம் செய்வது, பஜனை செய்வது, இணைந்து உண்பது என்று இருக்கிறார்கள்.
ஆம்ஸ்டர்டாம், ஹேக் போன்ற நகரங்களுக்கு பல மையங்கள் தேவை. இங்கு மக்கள் குழுமி சுதர்சனக் கிரியா தியானம் போன்றவற்றை செய்யலாம். எத்தனை இடத்தில் மக்டோனால்ட்ஸ் இருக்கிறதோ அத்தனை மையங்கள் தேவை என்று சொல்வேன். அது இந்த நாட்டில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
கேள்வி: குடும்ப உறவை மேம்படுத்துவது எப்படி?
குருதேவ்: குடும்ப உறவை மேம்படுத்த, அதற்கான எந்த முயற்சியும் செய்யாமலிருக்க வேண்டும். ஒரு தவறான புரிதலை சமாளிக்க நினைக்காதீர்கள். அதை பார்த்து விட்டு அப்படியே விட்டு விடுங்கள். சரியானதை சொல்லித்தந்து விட்டு அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். மேலே செல்லுங்கள். நடந்தவற்றை ஆராயாதீர்கள். ‘இதை ஏன் செய்தாய்?’, ‘என்னை நீ விரும்பவில்லை.’ போன்ற குப்பைகள் எல்லாம் நேரத்தை மட்டுமே வீணாக்கும். நாம் உணர்ச்சிக் குப்பையில் வாழ்கிறோம். அதை எல்லாம் எறிந்துவிட்டு கொப்பளிக்கும் புத்துணர்ச்சி கொள்ளுங்கள். அந்த ஆர்வம் தேவை.
யாரிடமாவது இந்த ஆர்வம் இல்லையென்றால், அவர்களை ஆர்வத்தில் தள்ளிவிடுங்கள். அதைப் பற்றி புகார் செய்வதோ விளக்கம் கேட்பதோ செய்ய வேண்டாம். குடும்ப உறவை மேம்படுத்த முக்கியமான இரண்டு – விளக்கங்கள் இல்லை! மற்றும் புகார்கள் இல்லை! அவ்வளவுதான். புரிந்ததா? மற்றவர்களிடம் விளக்கம் கேட்பது முட்டாள்தனமானது? புரிந்துகொள்வார்கள் என்று மற்றவர்களுக்கு விளக்குவது மற்றொரு முட்டாள்தனம். இரண்டு விதத்திலும் அது வேலை செய்யாது. அப்படியே விட்டுவிட்டு மேலே செல்வதுதான் சிறந்தது.

அன்பில்லாத வாழ்கை வெறுமையானது............


17
2012...............................
ஹார்லெம் - ஹாலந்து
ஜூன்

ஸ்ரீ ஸ்ரீ: இந்த மாலைப் பொழுதை எவ்வாறு கழிக்க விரும்புகிறீர்கள்? என்ன விவாதிக்க விரும்புகிறீர்கள்? 

அவையோர்: ஆற்றுதல் பற்றிப்பேசுங்கள் - தியானம் செய்யலாம்- ஆயுர்வேதம் பற்றிப்பேசுங்கள்- நெருக்கடி பற்றி பேசுங்கள்.


ஸ்ரீ ஸ்ரீ : பாருங்கள்! உலக நெருக்கடி பற்றி பேசும் போது உங்கள் முகங்களில் புன் முறுவலும் சிரிப்பும் தெரிகிறது. சாதரணமாக நெருக்கடி நிலை என்றால் மக்கள் அழுவார்கள். வாழும் கலையில் ஒவ்வொரு நெருக்கடியும் ஒரு வாய்ப்பாக மாறுகிறது. ஒவ்வொரு பிரச்சினையும் ஒரு சவாலாகவும் , நல்ல வாய்ப்பாக எடுத்துக்கொள்ள கூடியவாறு உலகை மாற்ற வேண்டும் அல்லவா? சீன மொழியில் நெருக்கடி, வாய்ப்பு இரண்டிற்கும் ஒரே சொல் தான் பயன்படுத்த படுகிறது. நெருக்கடி என்றால் அது வாய்ப்பு என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. சரி ! வேறு என்ன விவாதிக்கலாம்? 

அவையோர்: விடுதலை- அன்பு - எவ்வாறு முடிவுகள் எடுப்பது? - குழப்பம்- உலகளாவிய கல்விமுறை- கால்பந்து 


ஸ்ரீ ஸ்ரீ: இதில் எதுவுமே எனக்குத் தெரியாது! இந்தியாவில் கால்பந்து  பிரபலமானது அல்ல. கிரிக்கெட் தான். அதுவும் எனக்கு சரியாக தெரியாது. ஆக, இதில் எதுவுமே எனக்கு தெரியாது!


அவையோர்: பரவாயில்லை. இங்கு உங்களுடன் இருப்பதே இதமாகத்தான் இருக்கிறது.


ஸ்ரீ ஸ்ரீ: பார்த்தீர்களா? வார்த்தைகளைவிட,சேர்ந்து  இருப்பதின் மூலம் நாம் நெருக்கமாக உணர்கிறோம். ஒரு உதாரணம் கூறுகிறேன். நாம் விமானத்திலிருந்து இறங்கும் போது விமானப்பணிப் பெண் ' இன்று நல்ல நாளாக அமையட்டும்" என்று வாழ்த்து தெரிவிக்கிறாள். அது அவளது உள்ளத்தில் இருந்து வரும் வாழ்த்து அல்ல. மனம் எங்கேயோ இருக்கிறது. வாய் வாழ்த்தி கொண்டிருக்கிறது. அதுஉதட்டளவில் வரும் வாழ்த்து.ஆனால் நமது அன்னையோ அல்லது பாட்டி, அத்தை,மாமா போன்ற நெருங்கிய உறவினரோ  இதே வாழ்த்தை  உளமார தெரிவிக்கும் போது ஒரு அதிர்வு ஏற்படுகிறது. கவனித்திருக்கிறீர்களா?

நாம் குழந்தையாக இருந்த போது இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. எது பேசினாலும் அது உள்ளத்திலிருந்து  வரும் உண்மையானதாக இருக்கும். ஆனால் வயதாகும் போது பேச்சும் எண்ணமும் ஒன்றானதாக இல்லாமல் முரண்படுகிறது.


சில சமயங்களில் மக்கள் " மிக்க நன்றி" என்று எல்லாவற்றிக்கும் கூறுகிறார்கள். முக்கியமாக அமெரிக்காவில் ஒரு க்ளாஸ் தண்ணீர் கொடுத்தாலும் "மிக்க நன்றி'' என்கிறார்கள். ஒரு டம்ளர் தண்ணீருக்கு ஏன் இவ்வளவு பெரிய நன்றி தெரிவித்தல்? சௌதி அரேபியா பாலைவனத்தில் சிறிது தண்ணீர் கொடுத்து உதவினால் அது உயிரைக்காக்கும் அளவிற்கு பெரும் உதவி.அதற்கு நன்றி தெரிவித்தல் உள்ளத்திலிருந்து வருவது. நன்றி கூறக்கூடாது என்று நான் சொல்ல வில்லை. சொல்லுக்கும் எண்ணத்திற்கும் இடையே வேறுபாடு ஏற்படும் போது அதை சற்று  கவனியுங்கள்,என்கிறேன். அப்போது தான் வாக்கு உண்மையானதாக இருக்கும்.


இத்தகைய உண்மை நிலை இல்லையென்றால் வாழ்கை சோர்வாகவும் வரண்டதாகவும்  இருக்கும். வாழ்கையில் உங்களுக்கு என்ன வேண்டும்? நல்ல உணவு, நல்ல உடை, நல்ல படுக்கை எல்லாமே இருந்து அன்பு, சார்பு நிலை, கவனிக்க யாருமற்ற நிலை என்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.அப்படிப்பட்ட நிலையில் இந்த உலகில் வாழ விரும்புவீர்களா?

அன்பும் சார்பு நிலையும் இல்லாத வாழ்கை அர்த்தமில்லாதது. மனித அல்லது எந்த ஜீவனின்  நிலைத்தத்துவமே இது தான். பூனை,நாய்,பசு,குதிரை போன்றவைகள் கூட இந்த அடிப்படை யிலேயே ஜீவிக்கின்றன.ஒரு குதிரை உங்கள் வீட்டில் இருந்து, நீங்கள் ஒரு மாதம் வெளியூர் சென்று திரும்பியதும் அது தன் அன்பை உங்களுக்கு உடனே தெரிவிக்கிறது அல்லவா? நமது உணர்வுகளுடன் தொடர்புடயவர்களாக  இருப்பதே மனித வாழ்கையின் சாராம்சம்.

அதற்காக, நீங்கள் " நீல நட்சத்திரம் '' ஆக இருக்க வேண்டியதில்லை. வாழும்கலையில்
நீல நட்சத்திரம் என்ற சொல் அதிக உணர்ச்சிகளுடன் அறிவற்ற நிலையில் உள்ளவர்களை குறிப்பிடுவதாகும். அதுவும் சரியில்லை.உணர்ச்சிகளுக்கும் அறிவிற்கும் சமநிலை வேண்டும். அதுபோல் சொந்த வாழ்விற்கும், பொது  வாழ்விற்கும் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சிலர் தன்னைப்பற்றி மட்டுமே கவலைப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்.
சிலர் தன்னை பற்றிய அக்கறையே இல்லாமல்,பிறருக்காகவே எப்போதும் செயல்பட்டு கொண்டிருப்பார்கள். வாழும் கலை இந்த இரண்டிற்கும் இடையே ஒரு சம நிலையை உருவாக்கும். உங்கள் உடல், மனம், உணர்வுகள் ஆகியவற்றை கவனித்து கொண்டு, சமுதாயத்தையும் கவனித்து கொள்ள வேண்டும்.சமுதாயத்திற்காகப் பொறுப்பெடுத்து கொள்ளுங்கள், அதே சமயம் உங்கள் தனிப்பட்ட வாழ்கை உயர்வு, முன்னேற்றம்
ஆகியவற்றை உதாசீனப்படுத்தி விடாதீர்கள். 

நமது வீட்டிலும், பள்ளியிலும், அதிர்வுகள், உணர்வுகள்,மற்றும் உணர்ச்சிகளை எவ்வாறு தூய்மையாக,தெளிவாக,மென்மையாக மகிழ்ச்சியாக வைத்து கொள்வது என்பது பற்றி யாரும்
கற்று தருவதில்லை.அவை இயல்பான விஷயம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு விடுகிறது. ஆம். உண்மை தான்.மகிழ்ச்சி என்பது நமது இயல்பு. ஆனால் நடுவில் எங்கோ இதை தவற விட்டு விடுகிறோம். அல்லவா? ஆனால் இது பங்கு சந்தையை பொறுத்த விஷயம் அல்ல.பூட்டான், பங்களாதேஷ் ஆகிய பின்தங்கிய பகுதி மக்கள் மிக மகிழ்ச்சியாக  இருக்கிறார்கள்.

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் பூட்டான் பிரதமர் '' மொத்த மனையியல் மகிழ்ச்சி ''என்பது பற்றி  ஒரு கருத்தரங்கம் நிகழ்த்தினார். எவ்வாறு  மகிழ்ச்சியை உருவாக்குவது? என்பது இதன் மையக்கருத்து. தற்போது ஒவ்வொருவரும் இது பற்றி பேசி வருகிறார்கள். கடந்த
முப்பது வருடங்களாக பேசி வருகிறோம். ஒரு வழியாக, உலகத்தலைவர்கள் மனித மன மகிழ்ச்சி  பற்றி கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பது எனக்கு திருப்தியை தருகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், அரசாங்கங்கள் மக்கள் நலத்தைப்பற்றி கவனம் செலுத்தியது  கிடையாது. மெதுவாக, மக்கள் உடல் நலம் பின்னர் மனநலம், இப்போது ஆன்மீக நலம்  பற்றி சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். உலக நல சங்கம் பத்து ஆண்டுகளுக்கு முன் இதை சேர்த்து கொண்டது. இப்போது மனையியல் மகிழ்ச்சி பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஹாலந்து நாட்டில் மகிழ்ச்சி அலைகள் உருவாக்கவே  நான் இங்கு வந்திருக்கிறேன். நான் எங்கு சென்றாலும் மக்கள் " குருஜி! நீங்கள் இங்கேயே இருங்கள். நீங்கள் இருக்கும் போது மகிழ்ச்சியாக உணருகிறோம் என்கிறார்கள். ஆனால் நான் இல்லாத போது மகிழ்ச்சி இழப்பது சரியான தீர்வு அல்ல. நான் வரும்போது மகிழ்வலைகளை ஏற்படுத்துகிறேன். அவற்றை நீங்கள் மற்றவர்களுக்கு பரப்ப வேண்டும். வாழும் கலை பயிற்சி பெற்றவர்கள் இந்த மாற்றத்தை உணர்வார்கள். நமக்காக என்று சிறிது நேரம் ஒதுக்கி தியானம் செய்து, சமுதாய நலனிலும்  ஈடுபட வேண்டும்.

முதலில், மக்களை மகிழ்ச்சியனவர்களாக ஆக்குவதே என் வாழ்வின் நோக்கம் என்று உறுதி எடுத்து கொள்ளுங்கள். இதற்கு நான் என்னால் முடிந்ததை செய்கிறேன். நீங்கள்  உங்கள் நேரம், திறமை மற்றும் வழிகள் ஆகியவற்றைத் தாருங்கள். இது பற்றி சிந்தியுங்கள். ஆக்க பூர்வமான வழிகளில் இந்த சமுதாயத்தை மகிழ்ச்சி கரமானதாக மாற்றுவோம். வன்முறையற்ற உலகமே எனது தொலைநோக்கு கனவு. வன்முறையற்ற சமுதாயம், நோயற்ற உடல், குழப்பமற்ற மனநிலை, தடையற்ற அறிவு, உணர்வதிர்ச்சியற்ற நினைவு நிலை, துன்பமற்ற ஆத்மா இவையனைத்தும் ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை. மனதில் தடைகள் அதிகம் உள்ளன. அவற்றை களையவேண்டும்.ஐரோப்பாவில் முப்பது சதவீதம் பேர் மன அழுத்தத்தில் அவதிப்படுகிறார்கள். தற்கொலைகள் அதிகமாகின்றன. நான், நவீன தொழில்நுட்பமமும் பழங்கால ஞானமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறுகிறேன். முற்காலத்தில் பல நல்ல விஷயங்கள் கூறப்பட்டன. அவற்றை நவீன சிந்தனைகளுடன்  இணைத்தால் உலகம் சீர்படும்.