நம் வாழ்கையில் மாற்றம் ஏற்படுத்த என்ன தேவைப்படுகிறது?


டிசம்பர் 30 - 2012, பாட், ஆண்டோகாஸ்ட், ஜெர்மனி

கே: அன்பான குருதேவா! இந்தியாவில் கற்பழிக்கப் பட்ட பெண்ணின் மரணத்தைப் பற்றி கேள்விப்பட்டதால், நான் மனம் உடைந்து போயிருக்கிறேன். இந்தியாவில் ஏன் இப்படி கொடூரமான கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன?

குருதேவர்: அப்படி நடப்பது ஒரு இடத்தில் மட்டும் இல்லை. இந்தியாவில் மட்டுமல்ல. இந்தச் சம்பவம் மிக அதிகமாக பொது மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இப்படிப்பட்ட கொடூரமான சம்பவங்கள் உலகில் பல்வேறு இடங்களில் நிகழ்கின்றன. பெண்கள் மீது மட்டுமல்ல. குழந்தைகள் மீதும், வயோதிகர்கள் மீதும் கொடுமை இழைக்கப்படுகிறது.
இப்போது தான் வாழும் கலையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர், கென்யா நாட்டின் நைரோபியில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி என்னிடம் சொன்னார். மக்கள் அங்கு பாதுகாப்பின்றி இருக்கிறார்கள். அதைக் கேட்ட நான் அப்பெண்மணியிடம் “இப்படிப்பட்ட நேரத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது” என்று சொன்னேன். அதற்கு அவர் “மக்கள் தங்கள் வீட்டுக்குள் இருக்கவே பயப்படுகிறார்கள். ஏனென்றால் மக்கள் வீட்டில் இருக்கும் போதே பல கொள்ளைகள் நடந்து வருக்கின்றன” என்று சொன்னார். மக்கள் கார்களில் வெளியே செல்லும்போது பாதுகாப்பாக உணர்கிறார்கள்.

உன் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. மும்பையில் வயதானவர்கள் தனியாக இருக்கும் வீடுகளில் கொலை,கொள்ளை நடப்பது சகஜமாகி விட்டது. இப்படிப்பட்ட குற்றங்கள் ஏறக்குறைய உலகில் பல பாகங்களில் நடக்கின்றன.

இத்தாலி, ஸ்பெயின் மற்றும் துருக்கியிலும், இங்கு ஜெர்மனியில் கூட இப்படிப் பல குற்றங்கள் பதிவாகின்றன. இல்லையா? ரஷ்யாவில் இதை விட அதிகமாக குற்றங்கள் நிகழ்வதாக அறிந்தேன். ரஷ்யாவில் தெருக்களில் கூட பாதுகாப்பாக நடக்க முடியாது என்கிறார்கள். கேள்விப்படும் போது நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்று வியப்படைகிறேன். 

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒரு பெரிய போராட்ட அலையை எழுப்பியது. உங்களுக்குத் தெரியுமா? வாழும் கலையைச் சேர்ந்தவர்கள் முதன் முதலாக இந்த நிகழ்ச்சியைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினார்கள். முதல் நாள் யெஸ் ப்ளஸ் இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து கைகளில் மெழுகுவத்தி தீபமேற்றி இந்தியா கேட்டுக்கு அணி வகுத்துச் சென்றார்கள்.

நாம் எதை ஆரம்பித்தாலும் பெரிய பரிமாணத்தில், பெரிய அளவில் மக்களைச் சென்றடைகிறது. எல்லா இடங்களிலும் மக்களிடையே இப்படிப்பட்ட விழிப்புணர்வு பெருகும் போது, குற்றங்கள் குறைய உதவும். நாமனைவரும் சேர்ந்து ஒரு வன்முறையற்ற, மன அழுத்தமில்லாத சமுதாயத்தை உருவாக்க செயல்பட வேண்டும்.
குற்றவாளிகளைத் தூக்கில் போட வேண்டும் என்ற கோரிக்கையைப் பற்றி நான் அறிவேன். அதன் பின்னும் தங்கள் காம இச்சைகளையும் உணர்ச்சிகளையும் அடக்க முடியாத, அவர்களின் நடத்தை அதிக கொடூரமாகிறது. என்ன செய்ய முடியும்? எவ்வளவு பேரைத் தூக்கில் போட முடியும்? எவ்வளவு பேருக்குத் தண்டனை அளிக்க முடியும்? அப்படிப்பட்ட கொடியவர்களை சீர் திருத்துவது அவசியம்.

இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கொடூரமான நிகழ்ச்சிகள் அடங்கிய திரைப் படங்களை பார்க்கிறார்கள். அவர்கள் விளையாடும் வீடியோ விளையாட்டுக்களும் கொடூரமாக இருக்கின்றன. உலகில் வளரும் குற்றங்களுக்கு அவர்களும் பொறுப்பாகிறார்கள். சிறுவர்கள் வீடியோ விளையாட்டின் போது துப்பாக்கியால் சுடும் போது, அவர்கள் கற்பனை உலகுக்கும் நடைமுறை உலகுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வதில்லை. அவர்கள் மனதில் இரண்டு உலகங்களுக்கும் இடையில் ஒரு மெல்லிய கோடு தான் எல்லையாக இருக்கிறது.

கற்பனை உலகில் மனிதர்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துவது பெரிய விஷயமாகத் தெரிவதில்லை. அமெரிக்காவில் கனெக்டிகட்டில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது ஒரு அறியாச் சிறுவன், தன் தாயையும், மற்றும் பல சிறுவர்களையும் நிஜ துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, தன் உயிரையும் போக்கிக் கொண்டான்.

சென்ற வருடம் நார்வே நாட்டிலும் ஒரு சம்பவம் நடந்ததைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இது மிகவும் கொடுமையானது. உலகம் முழுவதும் இப்படி நிகழ்கின்றது. மெக்ஸிகோ நாட்டில் இரு டாக்ஸி ஓட்டுபவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அவர்கள் டாக்ஸியை விட்டு வெளியேறி ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டு இறந்தார்கள். டாக்ஸியில் இருந்த பயணிகள் உள்ளே இருக்கும் போதே இது நிகழ்ந்து விட்டது. ஒரு சாதாரண வாக்கு வாதம் துயரில் முடிந்தது. மக்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து விட்டது.

ஈராக்கில் இப்படிப் பட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்துத் பார்த்து மக்கள் மனம் மரத்துப் போய் விட்டார்கள். சமீபத்தில் வன்முறை காரணமாக 40 பேர்கள் இறந்து விட்டார்கள். ஒவ்வொரு நாளும் இப்படி நடந்தாலும் யாரும் இதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. சிரியாவிலும், எகிப்து நாட்டிலும் என்ன நடக்கிறது என்று பாருங்கள்? மக்கள் தொகையில் பாதிபேர் அழிக்கப்பட்டு விட்டார்கள். வாழும் கலையில் நாம் செய்யும் காரியம் எவ்வளவு முக்கியமானது என்று அறிந்து கொள்ளுங்கள்.

வன்முறையற்ற மன அழுத்தமற்ற சமுதாயத்தை உருவாக்குவது மிகவும் முக்கியம். பல இடங்களில் வாழும் கலை மையங்கள் ஏற்படுத்தி, ஆசிரியர்களை அனுப்பி பயிற்சி அளிப்பது அவசியம். அங்கு வாழும் மக்களுக்கும் ஆசிரியர் பயிற்சி அளித்து மேன் மேலும் இந்த ஞானத்தை மக்களிடையே பரப்புவதால், அவர்களை வன்முறையிலிருந்து திசை திருப்ப முடியும். அவர்கள் அமைதியை நோக்கிச் செல்வார்கள்.

நம் ஆசிரியர்கள் சிறைக்கைதிகளுக்கு பயிற்சி அளிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில் நான் அர்ஜெண்டினாவில் உள்ள சிறைச் சாலைக்குச் சென்றேன். அங்கு பல குற்றங்களும், வன்முறைச் சம்பவங்களூம் நிகழ்ந்திருந்தன. சிறைச்சாலைக்குள் இருக்கும் அறைகளிலேயே ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது வழக்கமாக இருந்தது. அங்கு வாழும் கலைப் பயிற்சி அளித்த பின்பு, பயிற்சி பெற்ற கைதிகள் “நாங்கள் வன்முறையில் ஈடு படமாட்டோம்” என்று எழுதிய பட்டைகளை அணிவது பழக்கமாகியிருக்கிறது. அர்ஜெண்டினா சிறையில் இருக்கும் 5200 பலசாலிகளான மனிதர்களின் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது. “எங்கள் வாழ்க்கையே மாறி விட்டது. இந்த ஞானம் எங்களுக்கு ஏன் முன்னமே கிடைக்கவில்லை” என்று சொல்லி வருத்தப் பட்டார்கள்.

அதே போல் ரியோவில், ப்ரேசில் நாட்டு சிறைச்சாலையையும் நான் சென்று பார்த்தேன். அங்கு வாழும் கலை மையம் ஒன்று உள்ளது. ஒரு அறையில் என் ஃபோட்டோவையும், வாழும் கலை பற்றிய ஞானம் அடங்கிய புத்தகங்களையும் வைத்திருந்தார்கள். அந்த அறைக்குள் காலணிகள் அனுமதிக்கப் படுவதில்லை. யோகா செய்வதற்காக பல பாய்கள் வைத்திருந்தார்கள். பலர் அங்கு வந்து யோக சாதனைகள், தியானம், சித்திரம் வரைவது முதலான காரியங்களில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நிகழ்ச்சி என் மனதைத் தொட்டது.
இவ்வுலகை வரப்போகும் சந்ததியார் வாழத்தகுந்ததாகச் செய்வதற்கு, பல காரியங்கள் செய்யவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், உங்கள் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். எப்படிப்பட்ட உலகை நமக்காக, பெரியவர்கள் விட்டு சென்றிருக்கிறார்கள் என்று நினைப்பார்கள். ஒரு சிறந்த உலகை நாம் அவர்களுக்கு அளிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். ஒரு அன்பு நிறைந்த உலகை, வன்முறையற்ற அமைதியான உலகை நாம் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.

உங்களுடைய சின்னச் சின்ன தேவைகள், நண்பர்களுடனும் மற்றவர்களுடனும் இருக்கும் சின்னச் சின்ன மன வேற்றுமைகளில் சிக்காதீர்கள். நல்ல சிந்தனைகளுடன், உலகில் வன்முறையைக் குறைக்க, மக்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க, உங்களாலான காரியங்களைச் செய்யுங்கள். இதைப் பற்றி நாம் தீவிரமாக யோசிக்க வேண்டும்.
மற்றவரின் நலனைப் பற்றிக் கவலையில்லாதவர்களுக்கு, காம இச்சைக்குள்ளாகி துன்புறுத்துபவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். உடலில் இருக்கும் ஹார்மோன்களின் சமநிலை தவறியதால் அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். கொடும்பாவ செயல்களை செய்கிறார்கள். அப்படிச் செய்யும் போது மற்றவர் படும் பாட்டைப் பார்க்காமல் அவர்கள் கண்கள் மறைக்கப்படுகின்றன. அவர்கள் மனமும் இருண்டு கிடக்கிறது. கண்ணிருந்தும் குருடராக நடந்து கொள்கிறார்கள். அறிவில்லாமல் நடந்து கொள்கிறார்கள்.

பேரூந்தில் கற்பழிப்பு. அதுவும் பலர் சேர்ந்து செய்த கொடுஞ்செயல். இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.சமுதாயத்தில், நன்னெறிக்கு ஒரு மரியாதை இருக்க வேண்டும். மக்களிடையே மனிதாபிமான குணங்களை வளர்க்க வேண்டும். மக்களுக்கு ஆன்மீகத்தைப் போதிக்க வேண்டும்.அப்போது தான் அவர்கள் நடத்தையில் மாற்றம் ஏற்படும் ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள ஒருவரும் இப்படிப்பட்ட கொடுஞ்செயலைச் செய்ய மாட்டார்கள். இந்த தலைமுறையில் உலகிலிருந்து வன்முறையை அறவே ஒழிக்க முடியாமல் இருக்கலாம். ஆனாலும் நாம் அதற்காக உழைக்க வேண்டும். கட்டாயமாக வன்முறையை நம்மால் குறைக்க முடியும்.
சமீபத்தில் டெல்லி போலீஸ் 756 குற்றவாளிகளுக்கு வாழும் கலைப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார்கள். 5 நாட்களுக்கான இந்தப் பயிற்சியில் குற்றவாளிகள் பிராணயாமம், சுதர்சன கிரியா கற்றுக் கொண்டு பயிற்சி பெற்றார்கள். அப்பயிற்சி முடிந்த பின் அவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட போது அது நம் மனதைத் தொட்டது. போதை மருந்துக்கு அடிமையான சிலர், 5 நாள் பயிற்சிக்குப் பின் போதை மருந்தை அறவே வெறுத்தார்கள்.

யார் பெண்களின் கழுத்துச் சங்கிலியை அறுத்து ஓடினார்களோ, அவர்கள் அப்பழக்கத்தை விட்டு, குடிசைப் பகுதிகளில் சேவையில் ஈடுபட்டார்கள். நம் வாழும் கலை ஆசிரியர்கள் இக் கைதிகளுக்கு நல்ல முறையில் பயிற்சி அளித்து, நல் வாழ்க்கை வாழ வழி காட்டினார்கள். கடைசி நாள் பயிற்சியின் போது நான் அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் அனுபவத்தின் படி இவ்வுலகை நாம் வாழத் தகுந்ததாக நம்மால் மாற்ற முடியும் என்று நம்பலாம். நம்மால் வன்முறையற்ற வளமான சமுதாயத்தை உருவாக்க முடியும்

கே: குருதேவா! பயிற்சியின் போதும், அதற்குப் பின்னும் அபாரமான சக்தியை உணர்கிறோம். நம்முள் ஒரு வெடி குண்டு வெடிப்பதைப் போன்ற அனுபவமாக இருக்கிறது. ஆனால் 2 – 3 நாள் கழித்து நான் செய்த காரியங்களால் அந்த சக்தி குறைந்து விடுகிறது. அப்படி சக்தி குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

குருதேவர்: சக்தியில் ஏற்றத் தாழ்வு இருக்கும். ஆனால் அதைப் பற்றி பெரிதாகக் கவலை வேண்டாம். உன்னிடத்தில் உன் சக்தியைப் பற்றி யோசிக்க நிறைய நேரம் இருப்பதாகப் படுகிறது. அது மேலே போகிறதா அல்லது கீழே போகிறதா என்று பார்க்கிறாய். ஏதாவது காரியத்தில், சேவையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள். எல்லாம் சரியாகி விடும்.
மேலும் நீ காரியத்தில் முழுமையாக ஈடுபடும் போது கவலைப்பட நேரம் ஏது? நீ தூங்கி எழுந்தவுடன், காரியம் காத்திருக்கிறது. அவ்வேலைகளை முடித்தவுடன் நீ களைத்து தூங்கச் செல்வாய். சேவை செய்யும் போது குற்றம் சொல்ல, துக்கமாக இருக்கவும் நேரம் கிடையாது. தீவிர சேவையில் ஈடுபடுபவர்களுக்கு மனச் சிதைவு ஏற்படாது ஒரு வேலையும் செய்யாமல் அமர்ந்திருப்பவர்களுக்குத் தான் மனச் சிதைவு ஏற்படும்.
சேவை செய்யாமலிருக்கும் போது ஞானம் பற்றிய சிந்தனைகளில் பொழுதைக் கழியுங்கள். யோக வசிஷ்ட படியுங்கள். அதில் இருப்பது சிறந்த ஞானமாகும். நாரத பக்தி சூத்திரத்தின் விளக்கத்தைக் கேளுங்கள். அல்லது அஷ்டவக்ர கீதையை கேளுங்கள். இப்படிப்பட்ட ஞானம், எப்போதும் உங்கள் சக்தியைக் குறையாமல் வைத்திருக்கும்.

உங்களுக்குப் பிடித்த பாட்டைப் பாடுங்கள். நீங்கள் தனியாக இருக்கும் போதும் பாடலாம். அல்லது குளியல் அறையில் இருக்கும் போது ஐந்து நிமிடம் பாடலாம். குளியல் அறையில் நீ பாடுவதை யாரும் தடுக்க முடியாது. நீ மகிழ்ச்சியாக இருக்க பல யோசனைகள் சொல்லியிருக்கிறேன். இதையெல்லாம் மறந்து நீ துக்கமாக இருக்கத் தீர்மானித்தால், என்னால் என்ன சொல்ல முடியும்? 


நீ இவ்வுலகை வண்ண மயமாக்குகிறாய். 

எதிர்மறையாகத் தோன்றும் தத்துவங்கள் ஒன்றை ஒன்று நிறைவு செய்கின்றன நீ எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே இரு. 


எப்படி இருந்தாலும் நான் உன்னை ஏற்றுக் கொள்வேன். நீ ஞானத்தின் மேல் விருப்பம் கொள்ளும் போது துக்கமாக இருக்க முடியாது. வாழ்வில் சில நாட்கள் இன்பமாகவும், சில நாட்கள் துன்ப மயமாகவும் இருக்கும் என்பதை நீ அறிவது தான் ஞானம். வாழ்க்கையில் சில நல்லவர்களையும், பொல்லாதவர்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். சில சமயம் நண்பர்கள் விரோதிகள் போல நடப்பார்கள். சில சமயம் உன் விரோதிகள் உன்னுடைய நண்பர்களாக மாறுவார்கள். வாழ்க்கையில் போக்கு. இப்படி நடக்கக் கூடும். இந்த அனுபவங்கள் உன்னைத் திடமாகவும், நடுநிலையில் வைக்கவும் உதவுகின்றன. எந்தவிதமான புயலும் உன்னை அசைக்க முடியாது.

நான் முன் சொன்ன எல்லாவற்றையும் மறந்து விட்டாலும், இந்த 5 வரிகளை நினைவில் வைத்திருந்தால் அது போதும். நீ வெற்றி அடைந்து விட்டாய் என்று நான் சொல்வேன். அதனால் தான் வாழ்க்கையை மாயை என்று சொல்கிறார்கள். உன் எண்ணங்களை, உணர்ச்சிகளை உண்மை என்று நீ நினைக்கிறாய். ஆனால் அவை உண்மை அல்ல. மாயத் தோற்றம் தான். மற்றவர்களைப் பற்றியும், நம்மைப் பற்றியும் நாம் வைத்திருக்கும் கணிப்புகளும் பொய் தான். எல்லாவற்றையும் உதறி விடு. விழித்துக் கொள். நீ ஒரு சக்தியும், உற்சாகமும் பெருக்கெடுக்கும், அன்பின் ஊற்று என்று தெரிந்து கொள்ளலாம்.

கே: குருதேவா! “எடர்னிடி ப்ராஸஸ்” பற்றி தயவு செய்து விளக்குங்கள். அதனால் நமக்குக் கிடைக்கும் பயன் என்ன?

குருதேவர்: “எடர்னிடி ப்ராஸஸ்” என்பது உன் மனத்தைப் பின்னோக்கி எடுத்துச் செல்லும் ஒரு செயல் முறையாகும். உன் மனத்தில் புதைந்திருக்கும் நிகழ்வுகளை அறிவதும், அவைகளை ஒரு முறை வாழ்ந்து அனுபவித்து, விட்டு விடுவதும் இச்செயல் முறை மூலம் நடக்கிறது.

கே: குருதேவா! இறந்த பின் நம் உடல் உறுப்புக்களை தானமாக அளிப்பது, இந்த உறுப்புகள் பிறர் உடலில் பொறுத்தப் படுவது சரியான செயல் என்பீர்களா?

குருதேவர்: கட்டாயமாக! நீ உன் உறுப்புக்களை தானமாக அளிக்கலாம். அதில் தவறொன்றும் இல்லை.

கே: குருதேவா! வாழும் கலையில் முழு நேர ஆசிரியராக ஆவது எப்படி? எப்படிப் பட்டவர்கள் முழு நேர ஆசிரியராக முடியும்?

குருதேவர்: நல்லது! நீ முழுநேர ஆசிரியராக வேண்டிய அவசியம் கிடையாது. நீ ஒரு பகுதி நேர ஆசிரியராக ஆகலாம். ஒவ்வொரு நாளும் இரண்டு – மூன்று மணி நேரம் நீ கற்பிக்கலாம். பொதுவாக பயிற்சிகள் மாலை நேரத்தில் நடக்கின்றன. மக்கள் தங்கள் அலுவலக, வியாபார வேலைகளை முடித்துக் கொண்டு பயிற்சிக்கு வருவார்கள்.
நீ 3 நாள், 4 நாள் அல்லது 5 நாள் பயிற்சி அளிக்கலாம். மாதத்தில் 1 அல்லது 2 பயிற்சிகள் நடத்தலாம். 2 – 3 ஆசிரியர்கள் சேர்ந்து ஒரு பயிற்சி நடத்தலாம். உனக்கும் பாரமாகத் தோன்றாது. உன் மற்ற காரியங்களையும்  பாதிக்காது. ஒரு நாள் உன் குழந்தைக்குத் தேவையான பொருட்களை வாங்க வேண்டியிருந்தால், நீ எனக்கு வகுப்பு இருக்கிறது என்று நினைக்க வேண்டாம். மற்ற ஆசிரியர் அன்று வகுப்பைப் பார்த்துக் கொள்வார். 2 ஆசிரியர்கள் சேர்ந்து ஒரு பயிற்சி ஏற்பாடு செய்வது நல்லது. நீ உன் தொழிலையோ, அலுவலக வேலையையோ பாதிக்காமல் மக்களுக்கு உதவியாக வாழும் கலைப் பயிற்சி அளிக்கலாம்.

உனக்கென்று தேவைகள் எதுவும் இல்லாமலிரூந்தால் (உனக்கு குடும்பப் பொறுப்பு ஏதும் இல்லையென்றால்) உன் வாழ்க்கையை இப்பணிக்காக அர்ப்பணிக்கலாம். “என் தேவைகள் மிகக் குறைவு. நான் முழுநேர ஆசிரியராக விரும்புகிறேன்” என்று நீ சொன்னால் முழு நேர ஆசிரியராகலாம். ஆனால் முதலில் பகுதி நேர ஆசிரியராகி சில நாட்கள் வேலை செய் என்று நான் சொல்வேன். 

சுற்றியுள்ள மக்களின் சிறப்பின் மேல் நம்பிக்கை கொள்ளுங்கள்


3, மார்ச் 2012

வாழ்க்கையை பெரிய கண்ணோட்டதிலிரிந்து பாருங்கள். நான் எப்பொழுதும் இங்கே இருப்பேன் என்று எத்தனை பேர் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அடுத்த 30 வருடங்களுக்கு இங்கே இருப்பேன் என்று எத்தனை பேர் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?, உங்கள் கைகளை உயர்த்துங்கள். அடுத்த நூறு வருடங்களுக்கு எத்தனை பேர் இங்கே இருக்க போகிறீர்கள்?
நாம் வாழ்க்கையை பெரிய கண்ணோட்டதிலிரிந்து பார்ப்பதில்லை. என் அன்பார்ந்தவர்களே எப்பொழுதும் நீங்கள் இங்கே இருக்க போவதில்லை, அதை நினைவில் கொள்ளுங்கள். இவை எல்லாம் இங்கேயே இருக்கப் போகின்றன. மலேசியா இங்கேயே இருக்கும், கோலாலம்பூர் இங்கேயே இருக்கும் ஆனால் நீங்கள் இருக்க மாட்டீர்கள். உங்களுக்கு முன்னும் இது இங்கே இருந்தது.

நீங்கள் அடுத்த முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு இங்கே இருப்பீர்கள் பிறகு என்ன,
எங்கே இருப்பீர்கள்? வாழ்க்கை என்றால் என்ன? நீங்கள் யார்? இந்த கேள்விகள் உங்களில்
எழ வேண்டும், அப்படி நடந்தால், உங்கள் புத்தி முதிர்ச்சி அடைந்திருப்பதை காட்டுகிறது.
நீங்கள் என்னுடன் இருக்கிறீர்களா?. நான் என்ன சொல்கிறேன் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?. ஆகையால், நாம் வாழ்க்கையை பெரிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போது, பிறகு சிறியவைகள், முக்கியமில்லாத விஷயங்கள் எல்லாம் வெளியேறிவிடும் . எல்லா சிறிய சண்டைகள், கவலைகள், அவர் என்ன சொன்னார், இவர் என்ன சொன்னார், அவை எல்லாம் மறைந்துபோகும்.. ஆகையால், உங்களை யாரோ அவமதித்து இருந்தால் என்ன?, அதனால்
என்ன! உங்களை அவமதித்தவர் நீண்ட காலத்திற்கு இங்கே இருக்க போவதில்லை. எல்லோரும் மூட்டையை கட்டவேண்டியது தான். வெறுமனே சென்று விடுவார்கள். மூட்டையை கட்டுவதற்கு இங்கே ஒன்றும் இல்லை.

உங்களுடைய தற்காலிக பயணத்தில் குறைந்தது உங்களுடைய மூட்டையையாவது கட்ட வேண்டி இருக்கும். ஆனால் இங்கே ஒருநாள் வெறுமனே காணமல் போய் விடுவீர்கள், அவ்வளவு தான். இந்த தற்காலிகமான பகுதியை பரந்த கண்ணோட்டத்தில் இருந்து பாருங்கள். வாழ்க்கையை பரந்த சித்திரத்தின் பார்வையில் பார்க்கும் போது உங்களுக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழும். நீங்கள் விழித்தெழுந்து பார்ப்பீர்கள். "ஓ, நான் எதற்காக கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன்.என்று?நீங்கள் திரும்பி பாருங்கள்,பத்து வருடங்களுக்கு முன் நீங்கள் கவலைப் பட்டுக்கொண்டிருந்தீர்கள், இன்னும் நீங்கள் இப்பொழுது இங்கே இருக்கிறீர்கள். ஐந்து வருடங்களுக்கு முன் ஒன்றும் இல்லாததற்கு கவலைப் பட்டுக்கொண்டிருந்தீர்கள், நீங்கள் இன்னும் இங்கே இருக்கிறீர்கள், உயிருடன்! எவ்வளவு காலத்தை தீர்மானிப்பதில், கவலைபடுவதில் மற்றும் ஆக்க வளமற்ற சிந்தனைகளில் நீங்கள் விரயம் செய்திருக்கிறீர்கள்?ஆமாம் அல்லவா?

ஆமாம் நம்முடைய அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டும். நாம் குறை சொல்வதில் எவ்வளவு காலத்தை விரயம் செய்கிறோம் மற்றும் நம்முடைய ஆற்றல் எல்லாம் வற்றி விடுகிறது. மற்றும் நோய்கள் வருகின்றன. இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்று நோய் போன்றன இவை எல்லாம் ஆக்க வளமற்ற மற்றும் எதிர்மறை எண்ணங்களின் விளைவுகள். ஆகையால் இந்த சுழற்சி எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். நாம் எதிர்மறையாக உணர்கிறோம்  பிறகு எல்லாவற்றையும் எதிர்மறையாகவே காண்கிறோம் பிறகு நாம் மன அழுத்தமாக உணர்கிறோம். நாம் மன அழுத்தமாக உணர்ந்த பின் எதையுமே நேர்மறையாக பார்ப்பதில்லை மற்றும் இதைப் போல நீங்கள் நச்சு சுழற்சிக்குள் சென்று விடுகிறீர்கள். அதிலிருந்து நீங்கள் வெளி வர வேண்டும் மற்றும் தியானம், யோகா மற்றும் பிரணாயாமம் எல்லாம் இதைப் பற்றியது தான்- எப்படி உங்கள் மனதை நிர்வகிப்பது, எப்படி உங்கள் ஆன்மாவை மேம்படுத்துவது மற்றும் அது தான் உண்மையான ஆசீர்வாதம்.
 
மூன்று விதமான நம்பிக்கைகள் வாழ்க்கையில் அத்தியாவசியமானவை. ஒன்று இந்த உலகத்தை ஆண்டு கொண்டிருக்கிற அந்த அளவற்ற சக்தியின் மீது நம்பிக்கை.

உங்களை சுற்றியுள்ள மக்களின் நற்குணங்களின் மீது நம்பிக்கை. இந்த உலகத்தில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், எல்லோரும் மோசமானவர்கள் என்று நீங்கள் நினைத்தால், பிறகு நீங்களும் அவர்களை போலவே மோசமானவர் ஆவீர்கள். எல்லோரும் நல்லவர்கள் என்று நீங்கள் நினைத்தால் பிறகு நீங்கள் மிகச் சிறியவர் ஆகி மற்றும் சுருங்கிஅவர்களில் நீங்கள் ஒருவராவீர்கள். இந்த கிரகத்தில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்களின் சிறப்பில் (நல்ல குணத்தில்) நம்பிக்கை வையுங்கள்.

மூன்றாவது உங்களின் மேல் நம்பிக்கை வையுங்கள். பல நேரங்களில் மக்கள் அவர்களின் மீதே நம்பிக்கை வைப்பதில்லை மற்றும் அது தான் மிகப் பெரிய பிரச்னை. ஆகையால்,உங்களின் மீது நம்பிக்கை வையுங்கள், மக்களின் சிறப்பில் (நல்ல குணத்தில்) நம்பிக்கை வையுங்கள் மற்றும் அளவற்ற சக்தியின் மீது நம்பிக்கை வையுங்கள். மூன்று விதமான நம்பிக்கைகள் வாழ்க்கையில் அத்தியாவசியமானவை. பின் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். இல்லையெனில் நீங்கள் சித்தபிரம்மை பிடித்தவர் ஆவீர்கள். நீங்கள் சித்த பிரம்மை பிடித்த மக்களை பார்க்கிறீர்களா அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அவர்கள் எல்லாவற்றையும் பார்த்து பயப்படுவார்கள் மற்றும் அவர்கள் தங்களை அறைக்குள் வைத்து பூட்ட முற்படுகிறார்கள். அது ஒரு மனோ வியாதி. நீங்கள் இந்த மன வியாதியிலிருந்து வெளி வரமேண்டுமெனில் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் மற்றும் மூன்று வகையான நம்பிக்கைகளை அறிந்து அவற்றை பின்பற்ற வேண்டும்.

இப்பொழுது, நம்பிக்கையை பற்றி புரிந்து கொள்ள வேண்டுமெனில்,முதலில் சந்தேகத்தை பற்றி அறிய வேண்டும். சந்தேகம் என்பது எப்பொழுதும் நேர்மறையாக இருக்கும் ,ஏதோ ஒன்றின் மீதுதான், இதை கவனித்தீர்களா? நீங்கள் ஒருவரின் நேர்மை மீது சந்தேகப் படுகிறீர்கள் மற்றும் அவரின் நேர்மையின்மையின் மீது அல்ல.யாராவது ஒருவர் அவர் நல்லவர் அல்ல என்று சொன்னால், நீங்கள் நம்புவீர்கள். சரியா! நாம் மற்றவரின் நேர்மையின் மேல் சந்தேகப் படுவோம். யாரவது ஒருவர் உங்களிடம் " நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்" என்று சொன்னால், நீங்கள் "உண்மையாகவா என்று கேட்பீர்கள். யாரவது ஒருவர் உங்களிடம் " நான் உங்களை மிகவும் வெறுக்கிறேன்" என்று சொன்னால், நீங்கள் "உண்மையாகவா" என்று கேட்க மாட்டீர்கள். நீங்கள் அவர் வெறுக்கிறார் என்று எடுத்துக்கொள்வீர்கள். ஆகையால் எப்பொழுதும் அன்பில் மேல் சந்தேகம். யாரவது "நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்" என்று சொன்னால், "அப்படியா" என்று சொல்கிறீர்கள். யாரவது "நீங்கள் துக்கமாக இருக்கிறீர்கள்" என்று சொன்னால், நீங்கள் துக்கத்தில் ஆழ்ந்து விடுகிறீர்கள் .உங்களின் துக்கத்தின் மேல் எப்பொழுதும் சந்தேகப் படுவதில்லை ஆனால் உங்கள் மகிழ்ச்சியின் மீது சந்தேகப் படுகிறீர்கள்.

நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாதபோது நீங்கள் கவலையாக இருப்பதில் உறுதிப் படுத்துகிறீர்கள். ஆனால் மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் ஏன் உறுதி படுத்துவதில்லை? நமது சந்தேகம் எப்பொழுது நேர்மறையானதின் மீதே. நாம் மக்களின் நற்குணங்களின் மீது சந்தேகப் படுகிறோம். நமது திறன்களின் மீது சந்தேகப் படுகிறோம். நாம் நமது பலவீனங்களின் மீது சந்தேகப் படுவதில்லை. நீங்கள் உங்களின் திறன்களின் மீது உறுதியாக இருப்பது இல்லை, ஆனால் உங்கள் பலவீனங்களின் மீது உறுதியாக இருக்கிறீர்கள். நாம் இங்கு ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும், எத்தனை பேர்

ஏற்றுக் கொள்கிறீர்கள், கைகளை உயர்த்துங்கள். நான் உங்களின் கைகளை மீண்டும் மீண்டும் உயர்த்தச் சொல்கிறேன்,வழக்கமாக ஆன்மீக சொற்பொழிவுகளில் மக்கள் தூங்கி விடுகிறார்கள் ஆன்மீக சொற்பொழிவு ரோஜா பூக்களின் படுக்கை போல, தூக்கத்தில் ஆழ்வதற்கு மிகவும் இனிமையானது. ஆனால் நீங்கள் ஒரு திரைப் படத்தில் தூக்கத்தில் ஆழ்வதில்லை, ஏனெனில் அது ஒரு முட்படுக்கை போல, உங்களை அது விழிப்பாய் வைத்திருக்கிறது. குறிப்பாக அது
ஒரு குற்ற படமாக இருந்தால், உங்களுக்கு தூக்கமே வராது.
 
நீங்கள் இந்து மதக் கோவிலுக்கு சென்றால் அங்கே எப்பொழுதும் ஒரு தேங்காய் வைத்திருப்பார்கள். ஏன் தெரியுமா? தேங்காய் மனித வாழ்க்கையின் ஒரு சின்னம். அது ஒரு அதிர்ச்சியை தன்னுள் இழுத்து தக்கவைக்கும் தன்மை உடையது., நாம் அதை போல நம் வாழ்கையில் இருக்க வேண்டும், அதிர்ச்சி உருஞ்சியாக. மிக உயரத்தில் இருந்து தேங்காய் விழும்போது அது உடைவதில்லை,ஏனெனில் அது அதிர்ச்சியை தாங்கி கொள்கிறது. நம்முடைய நடத்தை சமூகத்தில் ஒரு அதிர்ச்சி தாங்கி போல இருக்க வேண்டும், நம்முடைய மனதையோ, உணர்ச்சியையோ யாரும் காயப் படுத்த முடியாது. நமது உடல் தேங்காயின் மேலோடு போல உறுதியாக இருக்க வேண்டும். நமது மனம் உள்ளே இருக்கும் தேங்காய் (வெண்மையாய் இருக்கும் உட்பகுதி) போல மென்மையாய் வெண்மையாய் இருந்து உள்ளே இனிப்பான தண்ணீர் போல உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். ஆகையால் தான் கோவில்களில் தேங்காய் உடைக்கிறார்கள் மற்றும் "என் அன்பான இறைவா என்னுடைய வாழ்க்கை இந்த தேங்காய் போல உடல் உறுதியாகவும், மனம் மென்மையாக, வெண்மையாக மற்றும் இனிப்பாக வைக்கவேண்டும்." என்பதை உணர்த்த....
 
அதுவே மாறி இருந்தால் உடல் பலவீனமாகவும், மனம் கல் போல கடினமாகவும் இருந்தால் நீங்கள் பிரச்சனைக்குள்ளாவீர்கள். இன்று இதுதான் பிரச்சினை. நமக்கு

குளிர்ந்த தலை,சூடான பாதம் மற்றும் மென்மையான வயிறு வேண்டும்.இதுதான் நல்ல ஆரோக்கியமான உடல் நலதிற்க்கான ரகசியம். உங்கள் வயிறு மிகவும் கடினமாக இருந்தால் செரிமானத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறது, குடல்கள் சரியாகவில்லை என்று அர்த்தம். ஆகையால் வயிறு மென்மையாக இருக்க வேண்டும்,பாதங்கள் வெது வெதுப்பாக இருக்க வேண்டும், அதுவே மாறியிருந்தால், குளிர்ச்சியான பாதங்கள், சூடான தலை மற்றும் கடினமான வயிறு எனில் நீங்கள் நோயுற்றிருக்கிறீர்கள். அது நோயாளிகளின் அறிகுறி. வெது வெதுப்பான பாதம், குளிர்ச்சியான தலை, மென்மையான தொப்பை மற்றும் வெது வெதுப்பான இதயம்.

நமது வருமானத்தில் ஒரு சிறு தொகையினை தானம்(தொண்டு, கொடை) செய்ய வேண்டும். நமது வருமானத்தில் குறைந்த பட்சம் மூன்று சதவிதமாவது தானம் செய்யவேண்டும். நமது வருமானத்தை 100 % முழுவதும் உபயோகிக்க முடியாது. சமூகத்தில் ஏழை குழந்தைகளுக்கோ அல்லது தேவைப் படுபவருக்கோ தொண்டு செய்ய ஒரு பகுதியை ஒதுக்க வேண்டும். தானத்தின் மூலம், நமது பணம் தூய்மையாகிறது. சேவையின் மூலம் நமது செயல் தூய்மையாகிறது. இசையினால் நமது உணர்வுகள் தூய்மையாகிறது மற்றும் ஞானத்தின் மூலம் நமது புத்தி தூய்மையாகிறது. இந்த வாழ்க்கை எதற்காக என்ற ஞானம் புத்தியை தூய்மையாக்குகிறது. யோகா, பிரணாயாம மற்றும் உடற் பயிற்சிகள் உடலை தூய்மையாக்குகிறது.
 
கேள்வி: குருஜி, என்னுடைய கணவர் உண்மையாக இல்லாமல் இருக்கிறார். என்ன செய்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எனக்கு இதில் அனுபவம் இல்லை,இருந்தாலும் நான் சில கருத்துகளை சொல்கிறேன், கணவர் மற்றவர்களால் கவரப் படலாம், அவரின் மேல் உங்களுடைய பார்வை பரந்த கண்ணோட்டத்தில் இருந்தால் அவருக்கு உங்கள் மீதுள்ள அன்பு அதிகமாக இருக்கும். நீங்கள் பரந்த மனதோடு இரண்டு அல்லது மூன்று முறை அவரை மன்னித்தால் மற்றும்
நான்காம் முறை கறாராக மன்னிக்கமுடியாது என்று சொல்லுங்கள் அவர் திருந்தி விடுவார். முதல் முறையே கறாராக இருக்க வேண்டாம்.. மூன்று மறை அவரை மன்னித்து விடுங்கள் ஆனால் நான்காம் முறை மன்னிக்காதீர்கள்.

உறவுகளைப் பற்றி ஒரு ரகசியம் உள்ளது, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? பெண்களுக்கான ரகசியம், நீங்கள் எப்பொழுதும் உங்கள் கணவரை கண்டிப்பாக புகழ்ந்து பேச வேண்டும். அவரை தாழ்த்தி பேச வேண்டாம். அவருடைய அகந்தையை(ஈகோ) உந்துங்கள். இந்த முழு உலகமும் அவரை மூளை இல்லாதவர் என்று சொன்னாலும், நீங்கள் சொல்லக் கூடாது. நீங்கள் ஒரு ஆணின் அகந்தையை தாழ்த்தி பேசினால், அவர் ஒரு காய்கறி போல் ஆகி விடுவார். "நீங்கள் ஒரு காய்கறி, நீங்கள் ஒன்றுக்கும் ஆகாதவர்" என்று ஒரு போதும் சொல்லாதீர்கள். நீங்கள் தான் மிகவும் உயர்வானவர் என்று அவரை புகழ வேண்டும் மற்றும் அவரை ஊக்கப் படுத்துங்கள், அவருக்கு நிறைய புகழாரம் கொடுங்கள், அவர் அகந்தையை உற்சாகப் படுத்துங்கள். புரிந்ததா?

ஆண்களுக்கான ரகசியம், உங்கள் மனைவியின் உணர்வுகளை புண்படுத்தாதீர்கள். அவருடைய சகோதரர் அல்லது அம்மா அல்லது அப்பாவை பற்றி புகார் செய்தால் நீங்கள் அவருடன் சேர்ந்துகொண்டு இகழாதீர்கள், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். அவருடைய குடும்பத்தை பற்றி புகார் செய்தால் அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவர் புகார் செய்யலாம் ஆனால் நீங்கள் வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்க வேண்டும் பிறகு வீட்டில் அமைதி இருக்கும். அவர் கடைக்கு செல்ல விரும்பினால், முடியாது என்று சொல்லாதீர்கள், கடன் அட்டையை (கிரெடிட் கார்டு) கொடுத்து அனுப்புங்கள். மத சம்பந்தமான விழாக்கள் மற்றும் கடைக்கு செல்வதற்கு அவரை(ளை) தடுக்காதீர்கள். ஆன்மீகத்தில் இருப்பது குடும்பத்தில் நாம் செய்ய வேண்டிய கடமைகளுக்கு உதவியாக இருக்கும். எத்தனை பேருக்கு இதில் அனுபவம் இருக்கிறது?

நீங்கள் மன ஆரோக்கியம் நன்றாகவும், வலுவாகவும் புத்திசாலியாகவும் உணர்ந்தால், நீங்கள் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்.

கேள்வி: எனக்கு தூங்குவதில் பிரச்சினை இருப்பதாக உணர்கிறேன்?.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுக்க வேண்டும். ஆயுர்வேதத்தில் சங்புஷ்பி
சிரப் என்ற ஒரு சிகிச்சை இருக்கிறது அது நன்றாக தூங்குவதற்கு உதவுகிறது. யோகா மற்றும் பிரணாயமாவும் கூட உதவி செய்யும். படுக்கைக்கு செல்லும் முன் பிரணாயாம செய்ய வேண்டும். தூங்குவதற்கு உதவி செய்யும்.அதே போல சில சீன மூலிகைகள் மற்றும் ஆயுர்வேத மூலிகைகள் இருக்கின்றன அவைகள் உங்கள் உடலை தூய்மை படுத்தவும்,குடல் மற்றும் வயிறை தூய்மையாக்கவும் உபயோக்கிறார்கள். எப்பொழுதாவது ஒரு முறை நீங்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். திரிபலா ஒரு ஆயுர்வேத மூலிகை அது கல்லீரல் மற்றும் குடலை தூய்மையாக்குகிறது. வாரத்தில் ஒரு முறை இந்த மூலிகைகளை உபயோகிப்பது நல்லது. மற்றும் தினசரி பிரணாயாம, உடற்பயிற்சிகள் உடலை சிறப்பாக்குகிறது.
 




காலப்போக்கில் நல்லிணக்கம் நல்விளைவு நல்கும்


மார்ச் 27, 2012
 

கேள்வி: தாங்கள் ஒருவரே. ஆனால் எப்படி ஒவ்வொருவருடனும் தொடர்பு கொண்டும், அவருடன் பேசிக்கொண்டும் இருப்பது போல் தோன்றுகிறது? என்ன தொலை தொடர்பு சாதனம் உபயோகப்படுத்துகிறீர்கள்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒரே ஒரு சூரியன்தான், ஆனால் எல்லா ஜன்னல்களிலும் முழுமையாக நுழைகிறதில்லையா?

கேள்வி: சூதாட்டத்தின் விளைவுகள் என்ன? அது எவ்வாறு மனதை பாதிக்கிறது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: மகாபாரத போரிலிருந்து இப்பாடத்தை கற்று கொள்ளலாம்.

கேள்வி: குருஜி! ஒவ்வொரு உருப்படிவமும் சக்தி, உருவில்லாதது சிவம். அப்போது மூச்சு என்பதின் உருநிலை என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சிவமும் சக்தியும் சேர்ந்ததே மூச்சு.

கேள்வி: குருஜி! நான் உங்களுடன் இருப்பதற்கு மிக நன்றியுடன் இருக்கிறேன்.என்னை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் தகுதியுள்ளவர் என்பதால்!

கேள்வி: குருஜி! இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆன உறவை எப்படி பல முள்ளதாக மாற்றுவது? இளைஞனாகிய நான் என்ன செய்ய வேண்டும்? கிரிக்கெட்டில்
மட்டுமே போட்டி நிலவ வேண்டும் என்று எண்ணுகிறேன்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இரு நாடுகளுக்குமிடையே நட்பு அதிகரிக்க வேண்டும். இரு நாடுகளிலிருந்தும் அதிகமான மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க வேண்டும்.
இரு நாட்டு மக்களிடையேயும் சகிப்புத்தன்மை அதிகரிக்க வேண்டும்.அப்போது உறவு மேம்படும்.

கேள்வி: கடவுளின் பெயரை ஜபித்தபின்னரும் பூரண திருப்தி நிலையையும் மகிழ்ச்சியையும் அடைய முடியவில்லையே? என்ன செய்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அதற்குத்தான் வாழும்கலை பயிற்சியை அளிக்கிறோம். வாழும்கலை முதல் நிலை பயிற்சியிலேயே சுதர்சனக்ரியா செய்தபின் மனநிறைவும்,அமைதியும் ஏற்படுகிறது. அனுபவித்துப்பாருங்கள். பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கானவர்கள் இதை செய்து ஒருவரோடு மற்றொருவருக்கு உள்ள தொடர்பை உணர்ந்தும், தங்களிடையே பூர்ணத்வத்தையும்அனுபவித்து, மனநிறைவும்,மாற்றங்களையும் அடைந்திருக்கிறார்கள்.எம்முடன் தொடர்பு நிலையை அடைந்து, அங்கு என்னை அழைக்கிறார்கள். நீங்களும் செய்யுங்கள்.

கேள்வி: குருஜி! ஜப மாலையின் முக்கியத்துவம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒருவரின் மேல் விருப்பம் ஏற்படும்போது அவர் பெயரை பல தடவைகள் கூற விரும்புகிறோம். சுவர்களிலும், கல்லிலும் எழுதுகிறார்கள் பார்த்திருக்கிறீர்களா? ஒரு பையன் தனது காதலியின் பெயரை அறையின் எல்லா இடங்களிலும் எழுதிவைத்திருக்கிறான்.ஏன்? அதுதான் ஜபம். தாம் விரும்புவருக்கு கடிதம் எழுதும்போது,"நான் உன்னை காதலிக்கிறேன், நான் உன்னை காதலிக்கிறேன் , நான் உன்னை காதலிக்கிறேன் , நான் உன்னை காதலிக்கிறேன் என்று பல தடவைகள் எழுதுகிறார்கள். ஒரு முறை எழுதினாலே போதும். மனம் பல தடவைகள்
திரும்ப கூற, எழுத விரும்புகிறது. அது போல இறையின் மீதுள்ள பற்றினால் "ஓம் நமசிவாய, ஓம்  நமசிவாய, ஓம் நமசிவாய என்று மீண்டும் மீண்டும் கூற தோன்றுகிறது.

கேள்வி:
அன்புள்ள குருஜி! ஏழு சக்ரங்களையும் பஞ்சமஹாபூதங்களுடன் அவற்றின் தொடர்பையும் பற்றி கூறமுடியுமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பஞ்சமஹபூதங்களுக்கு ஒவ்வொரு சக்ரத்துடனும் தாக்கம் உள்ளது.வயிறு நெருப்புடனும், ஸ்வாதிஷ்டானம் நீருடனும்,இதயம் காற்றுடனும், தொண்டை வெற்றிடத்துடனும் மூலாதாரம் நிலத்துடனும் தொடர்புடையவை.

கேள்வி: குருஜி! தாங்கள் எப்போதுமே, நம்முடைய சுய ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறுகிறீர்கள். என்னுடைய செயல்களை பட்டியலிட்டுப்பார்த்ததில், பெரும்பான்மை நகலாகவே அமைந்துள்ளன.தங்களைப்போல சுய ஆற்றலை எவ்வாறு கொணர்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களைத் தளர்த்திக்கொள்ளுங்கள்.இயல்பாக இருங்கள்.ஆழ்ந்த தியானம் செய்யுங்கள்.அதுதான் படைப்பாற்றலின் தோற்றுவாய்.

கேள்வி: தெய்வபக்தியுள்ள, தர்மவழியில் செல்பவருக்கும் தீங்குகள் நிகழ்கின்றனவே?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சில சமயங்களில் அவ்வாறு நிகழ்கின்றன. பொறுமையாக இருக்கவேண்டும். எல்லாம் சரியாகி,வாழ்வில் முன்னோக்கி செல்வீர்கள்.

கேள்வி: குருஜி! பல சந்தர்பங்களில் தீயவை தண்டிக்கப்படாமலும், நல்லவை வெகுமதி அடையாமலும் இருக்கின்றனவே?ஏன்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: தீயவை தண்டிக்கப்படாமலும், நல்லவை வெகுமதி அடையாமலும் இருப்பது போலத்தோன்றுகிறது. இது தோற்றம்தான்.உண்மையல்ல.காலப்போக்கில், நன்மையே பயனளிக்கும், தீயவை தண்டிக்கப்படும்.

கேள்வி: என் குடும்பத்தில் யாரோ ஒருவர் இறக்கும் தருவாயில் இருக்கிறார்.
அந்த நேரத்தில் அவர் என்ன செய்யலாம்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:
நீங்கள் மந்திரங்களை உச்சரித்து பிரார்த்தனை செய்து அவர்களை ஆசீர்வதிக்கலாம்.

கேள்வி:
குருஜி, நான் மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக மிகவும் ஏங்குவதாக உணர்கின்றேன். இதனைக் கைவிடுவது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: முதல் படியாக நீங்கள் அங்கீகாரத்திற்காக ஏங்குகிறீர்கள் என்பதனை ஏற்கெனவே கவனித்து உணர்ந்துவிட்டீர்கள். இரண்டாவது படியாக அது தானாகவே விலகிவிடும். இது நிச்சயம் நிகழும்.

கேள்வி:
நீங்கள் இருக்கும்போது கூட சூனியம் மந்திர தந்திரம் போன்றவை நிலவுகின்றனவே? தயவு செய்து இவைகளை ஒழித்து விடுங்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:
நீங்கள் அனைவரும் ஓம் நமசிவாய என்னும் மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வாருங்கள். சூனியம் போன்றவை எந்த பாதிப்பையும் உங்கள் மேல் ஏற்படுத்தாது. கவலைப்படாதீர்கள் . எல்லாம் சரியாகிவிடும்.

கேள்வி:
இந்த மார்ச் மாதம் முதல் மகிழ்ச்சிகரமான ஆண்டு துவங்கிவிட்டது எல்லாம் நன்மையாக மாறும் என்று சொல்லப்படுகிறது. தயவுசெய்து இதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம்.
ஒவ்வொரு கணத்திலும் ஏதாவது நல்லதும் நிகழ்கின்றது. நல்லது அல்லாததுவும் நிகழ்கின்றது. கேட்ட நேரம் மட்டுமே என்று எப்போதுமே இருந்ததில்லை. நம் மீது நேரத்தின் தாக்கம் என்பது நிச்சயமாக இருக்கின்றது. இந்த ஆண்டு மிகவும் நல்ல ஆண்டு. எனவே மகிழ்ச்சியோடு சேவா, சாதனா, சத்சங்கம் செய்து முன்னேறிச் செல்லுங்கள். மகிழ்ச்சியாக இருக்கும்போது சேவை செய்யுங்கள். வருத்தமாக இருக்கும்போது சமர்ப்பணம் செய்யுங்கள்.

கேள்வி: முஹம்மது
கஜினி குஜராத்தில் உள்ள சோமநாதர் ஆலயத்தைத் தாக்கியபோது ஆலயத்தின் பண்டிதர்கள் அனைவரிடமும் 'சிவ பகவான் உதவி செய்வார் சண்டையிடவேண்டிய அவசியம் இல்லை ' என்று சொன்னார்கள். வீரர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களை கை விட்டனர். ஆனால் அவர்கள் தோல்வியடைந்தனர். அப்படியானால் இறுதியில் மிக உயர்ந்த கடவுள் யார்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:
அவர்கள் தவறு செய்து விட்டனர். சிவன் இருக்கின்றார். அவர் எல்லோரும் தங்கள் தர்மத்தினை கடைபிடிக்க வேண்டும் அதர்மத்திற்கு எதிராக போராட வேண்டும் என்று சொல்கிறார். இல்லையென்றால் சிவபெருமானே ஏன் தன கையில் திரிசூலத்தை வைத்திருக்க வேண்டும்? எல்லா கடவுள்களும் தங்கள் கைகளில் ஆயுதம் வைத்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் ஏன் ஆயுதம் வைத்திருக்க வேண்டும்? ஏனென்றால் எண்ணமும் செயலும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும்.

பகவான் கிருஷ்ணன்
ஞானம் அளித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் சுதர்சன சக்கரத்தையும் கையில் வைத்திருந்தார். கடவுளே இறுதியானவர். ஏனென்றால் கடவுள் ஒருவரே.

இத்தனை சிலை வழிபாடுகள் ஏன் என்று என்னை பாகிஸ்தானில் கேட்டார்கள். "இந்தியாவிலும் கடவுள் ஒருவரே என்று நம்புகின்றோம். ஆனால் அந்த ஒரே கடவுளை பல வடிவங்களிலும் பல முறைகளிலும் வழிபடுகின்றோம்" என்று நான் சொன்னேன். ஒரே கடவுள் பல சீருடைகளில் தோன்றுகின்றார். கடவுள் ராணுவத்தில் இல்லை. ராணுவத்தில்தான் ஒரே சீருடையை எப்போதும் அணிந்துகொண்டிருப்பார்கள். ஒரே தெய்வம்தான் எல்லா வடிவங்களிலும் எல்லா பெயர்களிலும் தோன்றுகின்றது.

எனவே ஒரு உருவம்
, ஒரு சிவலிங்கம் அல்லது ஒரு சாலிக்ராமம் போதும். உங்கள் ஆலயங்களில் பல சிலை வடிவங்களை அமைக்காதீர்கள். அனைத்தும் ஒரே கடவுளையே குறிக்கும்.

முதன் முதலில்
நம் இந்து பண்பாட்டில் நெருப்பிற்கும், கலசத்திற்கும் மட்டுமே பூஜை செய்யப்பட்டது. பூஜை என்பது இப்படித்தான் துவங்கியது. ஆனால் ஜைன மதத்தினர் வந்து சிலைகளை அமைத்து அற்புதமாக வழிபாடுகள் செய்தனர். அதனைப் பார்த்து இந்துக்கள் தாங்களும் ஏதாவது செய்ய வேண்டுமென்று பலவிதமான உருவங்களை செய்ய ஆரம்பித்தனர். அதற்கு முன் சிவ லிங்கம் மட்டுமே இருந்தது.

கேள்வி: நான் இறைவனுக்கும் இந்த உலகத்திற்கும் இடையில் தடைப்பட்டுவிட்டேன். இந்த உலக பந்தத்திலிருந்து விலகி இறைவனை அடைவது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இறைவன் உங்களிடமிருந்து வெகு தூரத்தில் இல்லை. நீங்கள் வெறுமனே ஓய்வெடுப்பதுதான் அவசியம். நாம் நன்றாக ஓய்வெடுக்கும் நிலையில் இறைவன் இருப்பதை உணரலாம். முழுவதும் அர்ப்பணம் செய்துவிட்டு ஓய்வெடுங்கள். வேலைக்கு முன்பும் பின்பும் நன்றாக ஓய்வெடுக்கத் தெரிந்தால் ஒருவர் நல்ல ஆழ்ந்த தியான நிலைக்குச் சென்று இறைவனுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளலாம்.