அக்டோபர் 22
– 2012 பெங்களூரு , இந்தியா
இறைமையின் செய்தி என்னவென்றால், நீங்கள் இறைவனின்
அன்புக்குரியவர்கள்.ஆகவே நீங்கள் நேசிக்கப்படுவதை உணர்ந்து கொள்ளுங்கள்.கடவுள்
எவ்வளவு உங்களை நேசிக்கிறார் என்பதை உங்களால் கற்பனை கூட செய்ய முடியாது.அது
அளவிற்டர்க்கரிய அன்பு.
குழந்தை என்ன செய்தாலும் அதை
நேசிக்கும் தாயின் அன்பு போன்றது அது. குழந்தை என்ன குழப்பம் செய்தாலும் தாய் அதைப்
பொருட்படுத்துவதில்லை. புன்முறுவலுடன் அந்த இடத்தை சுத்தம் செய்து குழந்தையை நேசிக்கிறாள். அது போலவே நீங்களும் தெய்வத்தால் மிக நேசிக்கப்படுகிறீர்கள். இதைக்
கூறவே நான் இங்கு வந்துள்ளேன். வேறெதுவுமில்லை! இதை நீங்கள் புரிந்து கொண்டால் என்
வேலை முடிந்தது!
‘நான்
தெய்வத்தால் நேசிக்கப்படுகிறவர்;
தெய்வம் இங்கேயே இப்போது உள்ளது’ - இந்த இரண்டும் நினைவில்
இருக்கட்டும்.
பகவத் கீதையில் கிருஷ்ணபகவான் ' ஒருவன் மனதில் சந்தேகம் ஏற்படும்போது
அவன் முற்றிலும் தன்னை இழந்து, துன்பத்துக்காளாகிறான்' என்கிறார்.
ஆகவே,
நீங்கள் கடவுளால் மிக
நேசிக்கப்படுகிறீர்கள், இறைமையின் மிகுந்த அன்புக்குறியவர்
என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
அவ்வளவுதான். முடித்துவிடுங்கள்.இனி அதைப்பற்றியோ , தன்னைப்பற்றியோ எந்த சந்தேகமும்
இல்லை.நான் விரும்பப்படுகிறேனா இல்லையா என்ற கேள்விகளுக்கு இடமே இல்லை.
முதலாவதாக,
கடவுள் நீ என் அன்புக்குறியவன் என்கிறார். பக்தனும்; நானும் உங்களை நேசிக்கிறேன்
என்கிறான் ஆகவே முதலில் கடவுள் உங்களை மிகவும் நேசிப்பதாகக் கூறுவதைக் கவனியுங்கள்.ஒரு
நாளும் நீங்கள் மூழ்கிவிட அனுமதிக்க மாட்டார் இது முதன்மையானது.
இரண்டாவதாக ''ஒருபோதும் நான்
மூழ்கிவிட அனுமதிக்கப்பட மாட்டேன்.மூக்கு வரையில் நீரில் இருக்கலாம், ஆனால் மூக்கிற்கு மேல்
நிச்சயம் இல்லை” என்ற நம்பிக்கை அவசியம்.
மூன்றாவதாக,
நமது மனத்தை சந்தோஷமாகவும்
திருப்தியுடனும் வைத்துக்கொள்ள வேண்டும். என்ன ஆனாலும் சரி, மன நிறைவு வேண்டும். உலகிலுள்ள அனைத்தும் கிடைத்தாலும், அதிருப்தியுடன் குறைப்பட்டுக்
கொள்ளும் மனதில் துன்பமே
நிலைத்திருக்கும்.
உலகிலுள்ள எதுவுமே உங்களுக்கு நிறைவளிக்க முடியாது.உங்கள்
மனதில் நிறைவை நீங்களே தான் கொண்டு வரவேண்டும்.எப்போது அது நிகழும்? விட்டு விடுதலையாகி, தூய்மை, தெளிவு, மனநிறைவு இவையே மகிழ்ச்சிக்கான
சூத்திரம் என்பதைப் புரிந்துகொள்ளும்போது அது நிகழும்.
பைபிளிலும் ஒரு பழமொழி கூறப்பட்டுள்ளது. "யாரிடம் உள்ளதோ
அவருக்கு மேலும் அளிக்கப்படும்,யாரிடம் இல்லையோ அவரிடம் உள்ள
சிறிதளவும் எடுத்துக்கொள்ளப்படும்."
இது மிக உண்மையானது. மனநிறைவின்றி குறைப்பட்டுக்கொண்டும்,முணுமுணுத்துக்கொண்டும் இருந்தால், இதை உணர்ந்து, திருத்திக் கொண்டு அந்நிலையில்
இருந்து பொறுப்புணர்வுடன் வெளியேறுங்கள்.இது மிக முக்கியமானது.
மனநிறைவும் மகிழ்ச்சியும்! எதையும் சந்தோஷமாகச்
செய்யுங்கள்.நடப்பது,
பேசுவது அமர்வது எல்லாமே, ஏன் மற்றவரை பற்றிக் குறை கூறுவதானாலும் அதையும் மகிழ்ச்சியாகச் செய்யுங்கள் !
இங்கே ஆஸ்ரமத்தில் கூட அப்படிச் சிறிது செய்வதாக
நினைக்கிறேன்! (குருதேவ் சிரிக்கிறார்)
உங்களுக்குத் தெரியுமா? ஆசிரமத்தில் பொருட்கள் கொள்முதல் செய்யும்
துறையில் இருப்பவர் நேற்றைய முன்தினம் நடுஇரவில் என்னை அழைத்து, "குருதேவ், நாளைக்கென
நாம் சில பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது" என்று சொன்னார். என்ன என்று நான் கேட்டதற்கு
அவர், "சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கென 3000 கிலோ சர்க்கரையும் 2000 கிலோ பயத்தம் பருப்பும் தேவைப்படுகின்றது"
என்றனார். மிகுந்த ஆச்சரியத்தோடு நான் "என்ன? கொஞ்சம் பொருட்கள் தேவை என்றல்லவா சொன்னீர்கள்?" என்று
கேட்டேன்.
ஆக, கொள்முதல் துறையிலிருப்பவர்கள் மொத்த விற்பனை அங்காடிக்கு
விரைந்து சென்றனர். நடு இரவில் அங்கிருப்பவர்களை
தூக்கத்திலிருந்து எழுப்பி தேவையானவற்றை அதிகாலை 2 .00 மணியளவில் ஆசிரமத்தில் கொண்டு
வந்து சேர்த்துவிட்டனர்.
அவர்கள் பல கடைக்காரர்களை எழுப்பி அவர்களை அவர்களது கடைகளுக்கு
அழைத்துச் சென்று கிடங்குகளைத் திறந்து பொருட்களைக் கொண்டுவர வேண்டி இருந்தது.இருந்தாலும்
அவர்கள் அனைவரும் இவற்றை மகிழ்ச்சியுடன் செய்தனர். பொருட்களை விற்பனை செய்தவர்கள், வாங்கியவர்கள்,சமையல்
செய்தவர்கள்,அந்த இனிப்பினை சாப்பிட்டவர்கள் என்று அனைவருமே மகிழ்ச்சியடைந்தனர். நீங்கள்
கவனித்துப் பார்த்தால், இந்த மொத்த நிகழ்வானது மிகவும் மன அழுத்தம் தருவதாகவும் சிரமமாகவும் மாறியிருக்கக்கூடும். அவர் சில பொருட்கள் வேண்டுமென்று என்னிடம் கடைசி நிமிடத்தில் சொன்னார்.கடைசி நிமிடத்தில் எங்கே செல்வது? நிறைய புலம்பல்களும்
புகார்களும் இருந்திருக்கக்கலாம்..வேலை நடக்கவில்லை
என்று சொல்லிக்கொண்டு அவர்கள் திரும்பி வந்திருக்கலாம். அப்படி நடக்கவில்லை. எங்கே
சாத்வீகமும் நேர்மறை அதிர்வுகளும் இருக்கின்றனவோ அங்கே சவால்களும் இனிமையாக எதிர்கொள்ளப் படுகின்றன.
ஆகவே தான் மகிழ்ச்சியும் திருப்தியும் வாழ்க்கையில் மிக முக்கியமானவை.
சிறிதளவு தேவை என்றால் பரவாயில்லை. ஒரு கடையைத் திறந்து எடுத்துக்
கொண்டிருக்கலாம். 3000 கிலோ சர்க்கரை ஒரே கடையில் கிடைக்காது. இது போன்று இயலாது என்று
நாம் கருதும் பல நிகழ்வுகள் சில சமயங்களில் நம் அனைவரது வாழ்விலும் ஏற்படும். ஏன் என்று தெரியுமா? ஏனென்றால் நாம் நம்மையே சரியாக அறிந்து கொள்வதில்லை.
இந்த யாகசாலைக்கு வந்த யானை ஏன் அத்தனை பயந்துவிட்டது என்று தெரியுமா?
(சண்டி ஹோமத்திற்கென அழைத்துவரப்பட்ட ஆசிரமத்து
யானை இந்திராணியைக் குறிப்பிட்டு குருதேவ்
கேட்கின்றார்) பெரிய திரையில் தன்னைத்தானே பார்த்துவிட்டு மற்றொரு யானை நிற்பதாக நினைத்து
பயந்துவிட்டாள். அது தன்னுடைய பிம்பமே என்பதை அவள் உணரவில்லை. எனவே நாங்கள் அந்த மின்திரையை அணைக்க வேண்டியதாகி விட்டது. நமக்கு ஒரு பெரிய பாடத்தினை அவள் கற்றுக் கொடுத்திருப்பதாக
அந்த நேரம் நான் நினைத்தேன். மனிதர்களிடையிலும் இப்படித்தான் நடக்கின்றது. அவர்கள்
தங்களைத்தாமே அறிந்து கொள்வதில்லை. மற்றவர்கள் அனைவரும் தங்களுடைய பிரதிபலிப்பே என்பதை
உணர்வதில்லை. உங்களை நீங்களே உணர்ந்து கொள்ளாமல்
உங்களைப் பார்ப்பதற்கே நீங்கள் பயந்து கொண்டிருந்தால் அந்த சமயத்தில்தான் ஞானம் உங்களுக்கு
உதவி புரியும்.
உங்களுக்குள்ளேயே உள்நோக்கிச் சென்று பாருங்கள். அங்கே என்ன இருக்கின்றது?
எது உங்களை தொல்லைபடுத்துகின்றது? எது உங்களை உறுத்துகின்றது? சில எதிர்மறை உணர்வுகளை
உங்களுக்குள் நீங்கள் பார்க்க நேர்ந்தால் அவற்றைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம். நான்
சொல்கின்றேன் ஏனென்றால் நீங்களாக அவற்றிலிருந்து விடுபட முடியாது. அவற்றை எல்லாம் பார்த்துக்கொள்ள ஒருவர் இருக்கின்றார்
என்பதே செய்தி.
துர்கா சப்தஷடியில் ஓ அன்னையே!
நீ எல்லா உயிரினங்களிலும் அமைதி வடிவமாகவும்
குழப்பம் கலவரமாகவும் இருக்கின்றாய். ஞான ஒளியாகவும் இருள் வடிவமாகவும் இருக்கின்றாய்.
நான் உன்னை போற்றி வணங்குகின்றேன்.
எனவே, தெய்வம் குழப்பம் கலவர வடிவிலும் இருக்கும். இந்த கிரகத்தில்
உள்ள அனைத்து உயிர்களையும் பாருங்கள். எவ்வளவு குழப்பம் அடைந்துள்ளன. இந்த யானையும்
சிறிது நேரம் கலவரமடைந்தது. அது என்ன? அது தான் விழிப்புணர்வு.
அதுவே இருள் வடிவமாகவும் ஞான வடிவமாகவும் அதே சமயம் அறியாமையாகவும் உள்ள தூய்மையான சக்தி. அதனால் தான் அனைத்தையும்
புனிதமாக போற்றுங்கள். அனைத்தையும் ஒன்றாக எடுத்துக்கொள்ளுங்கள். தேர்ந்தெடுக்கவோ அல்லது
பிரிவுபடுத்தவோ முயற்சி செய்ய வேண்டாம்.அனைத்தையும் முழுமையாக எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு நீங்கள் அமைதியாக, முழுமையாக அமைதியாக இருக்கலாம். இதுவே முழு சாரம் ஆகும். துன்பத்திலிருந்து
விடுதலை, சாந்தமடைதல், அன்பும் ஆனந்தமும் அடைதல், மனதில் பக்தி, முக்தி பெறுதல் ஆகியவை
வளம் பெரும்.
உடல்கள் பல இருந்தாலும்
மனம் ஒன்றே இருப்பது போல் உங்களுக்கு இன்று தோன்ற வில்லையா? பல உடல்கள் இருந்தாலும் மனம் ஒன்றே.
மொத்த வெளியிலும் இருப்பது ஒன்றே. நாம் அனைவரும் அந்த ஒன்றின் பாகமே. இந்தப் புரிதல் நமக்கு ஆழ்ந்த அனுபவத்தில் உண்டாகும்.
உடனே, "எனக்கு அது எப்போது உண்டாகும் குருஜி? இப்பொழுதே எனக்கு வேண்டும்" என்று சொல்லாதீர்கள். தளர்வாக இருங்கள். ஒன்றும்
செய்ய வேண்டாம். நீங்கள் இறைவனுக்கு மிகவும் பிரியமானவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இறைவன் இங்கே, இப்பொழுது உங்களுக்குள் இருக்கின்றார் என்பதை உணருங்கள். இன்றைக்கு இது தான்.