13, ஆகஸ்ட், 2012 -
பெங்களூரு, இந்தியா
இன்றுடன் உங்கள் மௌனம் முடிந்துவிட்டது என்று குருதேவ் முதுநிலை பயிற்சியாளர்களுக்கு அறிவிக்கிறார்.
குருதேவ்: ஏரிக்கரையோரம், ஒரு பயிற்சியாளர் மற்றொருவரிடம் கேட்கிறார் "
எப்போது இந்த மௌனம் முடியும்?" மற்றவர் அவரிடம் " நாளை காலையுடன் முடிந்து விடும்" என்கிறார். (சிரிப்பு).
இப்படியும் சிலர் மௌனம் அனுஷ்டிக்கிறார்கள்! உண்மையான ஈடுபாட்டுடன் அனுஷ்டிப்பவர்களும் இருக்கிறார்கள்.
மௌனத்தின் போது நீங்கள் உங்கள் சக்தி அனைத்தையும்
சேமிக்கிறீர்கள். பேசுவதன் மூலம் சக்தி நிறைய செலவழிந்து விடுகிறது.அதனால்தான் சில
காலம் மௌனம்
அனுஷ்டிப்பது நல்லது. வருடத்தில் இரண்டு மூன்று தடவைகள் அல்லது நான்கு மாதங்களுக்கு
ஒரு முறை மௌன பயிற்ச்சி எடுத்துக் கொளவது
நல்லது. இதனால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.உடல், மற்றும்
மன ரீதியாக பல நன்மைகள் ஏற்படுகின்றன. நரம்பு மண்டலத்தில் உள்ள அழுத்தம்
வெளியாகிறது. புத்துணர்ச்சி ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகிறது. அத்துடன் மௌனத்தின்
பிறகு, நமது சொற்கள் புடமிட்டப்பட்டு தெளிவாகின்றன. கூறுவ தெல்லாம்
நடக்க ஆரம்பிக்கின்றன. அதனால்தான் "சாதனா "- பயிற்ச்சிகள்
முக்யத்துவம் வாய்ந்ததாகின்றன.
குருதேவ்: நம்பிக்கை இன்றி நீங்கள் வாழ முடியாது. நீங்கள் காரில்
வந்திருந்து அதை வாகனங்கள் நிறுத்துமிடத்தில் விட்டு விட்டு இங்கு வந்து அமர்ந்திருந்தால்
திரும்பிப் போகும் பொழுது உங்கள் கார் அங்கே இருக்கும் என்று நம்புகிறீர்கள்.
அல்லவா? இந்த நம்பிக்கை இல்லாமல் நீங்கள் வாழ முடியுமா?முடியாதல்லவா? ஆகவே
முதலில் உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.
மூன்று விதமான நம்பிக்கைகள்
இருக்கின்றன.
1.
உங்கள்
மீதே உங்களுக்கு நம்பிக்கை. அது இல்லாத நிலை '' பாரநோயா"
என்கிற வியாதியாகும்.
2.
உங்களைச்
சுற்றி உள்ளவர்களின் நல்லெண்ணத்தின் மீது நம்பிக்கை.உலகில்
நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை அவசியம். இல்லையெனில் இந்த சமுதாயத்தில் ஒரு
அங்குலம் கூட நகர முடியாது.
3.
அறிவுக்குப்
புலப்படாத, மறைபொருளாய் இவ்வுலக இயக்கும் சக்தியின் மீது நம்பிக்கை. இந்த மூன்றில் முதல் இரண்டும் மிக அவசியமானவை. மூன்றாவது
வாழ்வைப் பரிமளிக்க செய்யும்.
கே: முயற்சிகள் எடுத்தும் வெற்றி கிட்டவில்லையே?
குருதேவ்: முயற்சி மட்டுமே வெற்றியைத் தராது. நம்பிக்கையும்,முழு
ஈடுபாடும் தேவை. வெறும் ஈடுபாடு மட்டும் போதாது. முயற்சி ,
நம்பிக்கை, ஈடுபாடு இவை அனைத்துமே வெற்றிக்கு வழி வகுக்கும்.
கே: அகங்காரத்தைப் பற்றிக் கூறுங்கள்.
குருதேவ்: அன்பில் தோல்வியும் ஒரு வெற்றி, ஆனால்
அகங்காரத்தில் வெற்றியும் தோல்வியே.!
கே: குருதேவ்! பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார் "
உங்களுக்கு எது இயல்பாக வருகிறதோ அது முழு நிறைவானதாக இல்லாவிடினும் அதையே செய்து
கொண்டிருங்கள்" என்கிறார். இதுபற்றிக் கூறுங்கள்.
குருதேவ்: ஆம்.உங்கள் குண இயல்புப் படியே இருங்கள். செயற்கை தன்மை வேண்டாம். எது உங்களியல்பு
இல்லையோ அதை முன்னிறுத்த வேண்டாம். ஆனால் குருதேவ் இவ்வாறு கூறியிருக்கிறார் என்று
ஒருவரின் இறுதி யாத்திரையின் போது நடனமாட வேண்டும் போல் தோன்றுகிறது இயல்பாக இருக்க
வேண்டும் என்று ஆடி, கைதட்டிக் களிக்காதீர்கள் அது சரியல்ல. மரபையும் பின்பற்ற வேண்டும்.
அதுபோல, குருதேவ் "ஒரு உலகம் ஒரு குடும்பம் அனைவரையும்
அரவணைத்து கொள்ள வேண்டும்" என்று கூறி இருக்கிறார் என்று தெருவில்
நடந்து கொண்டிருக்கும் பெண்ணை அணைத்து, எல்லாமே என்னுடையது" என்றால் உதை தான் கிடைக்கும். எல்லாமே ஒன்று,அனைத்தும் என்னிலொரு பகுதி என்கிற நிலையான 'பிரம்ம
பாவம்' என்பதை வளர்த்து கொள்வது நல்லது. அதற்காக
மற்றவர் பையிலிருந்து எடுத்து அது என்னுடையது என்பது தவறு.
கே: குருதேவ்! நான் ஒரு சுவாரஸ்யமில்லாதவன் என்று மக்கள்
என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். நான் என்ன செய்வது?
குருதேவ்: மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்
படாதீர்கள். ஒரு குறிக்கோளை எடுத்துக் கொண்டு அதை நோக்கிச் செல்லுங்கள். தனியாகவே
என்றாலும் பரவாயில்லை, குறிக்கோளை அடையுங்கள். பின்னர் எல்லோரும் சேர்ந்து
கொள்வார்கள்.
நான் கூட என்னை சுவாரஸ்யமில்லாதவன்
என்று உணர்ந்திருக்கிறேன். நான் இளைஞனாக
இருந்தபோது அனைவரும்
கிரிக்கெட்டைப் பற்றி தான் பேசுவார்கள். எனக்கு அதில் ஈடுபாடு இல்லாததால் நான்
அவர்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். ஐந்து நாட்களும் ரேடியோவில் காதை
நுழைத்து விமரிசனங்களைக் கவனித்து கொண்டிருப்பார்கள். அதையே
பேசிக்கொண்டிருப்பார்கள்.எனக்கு அதில் விருப்பம் இல்லாததால் என்ன பேசுவது என்றே
தெரியாது.
நீங்கள் உங்கள் பாதையை அமைத்துக் கொண்டு அதில் நடங்கள். உங்களை
பற்றியும், மற்றவர்களை பற்றியும் மதிப்பீடு
செய்ய வேண்டாம்.
கே: குருதேவ், பலவற்றிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்ற போது சரியான ஒன்று
எது என்று எப்படித் தெரிந்து கொள்வது? அதுவும் அனைத்துமே ஒரே அளவில் நல்லவையாக இருக்கும் போது அவற்றில்
மிகச் சரியான ஒன்றை தேர்ந்தெடுப்பது எப்படி?
குருதேவ்: சரியான தேர்வு என்பது தானாகவே தோன்றும்.அது போன்ற ஒரு சூழ்நிலை உண்டாகும் போது பொறுமையோடு
காத்திருங்கள். தானாகவே நிகழும்.
கே: நானும் என் சகோதரனும் ஒரே மாதிரி வளர்க்கப்பட்டோம்.ஆனாலும் நாங்கள் இருவரும் வித்தியாசமாக
இருக்கின்றோம். எப்படி?
குருதேவ்: இது ஒரு ஆழமான அறிவியல். நீங்கள் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
அண்ட
நுணுக்கமாகிய உயிர், பேரளவினதாகிய முழுமையான அண்டம் இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. உண்மையில் இவை இரண்டும் ஒன்றே. நுணுக்கமான உயிரிலிருந்து அண்டத்திற்கு ஒரு இணைப்பு உள்ளது. இந்த கிரகத்திலிருக்கும் ஒவ்வொரு தானியமும் பிரபஞ்சத்துடன் ஒரு தனிப்பட்ட முறையில் இணைக்கப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் இதை அறிந்திருந்தனர். அதனால் தான் அவர்கள் சூரியக் குடும்பத்திலிருக்கும் ஒன்பது கிரகங்களும் ஒன்பது விதமான தானியங்கள்,ஒன்பது விதமான விலங்குகள், ஒன்பது விதமான வடிவங்கள், ஒன்பது விதமான நிறங்கள், ஒன்பது விதமான பொருள்கள் ஆகியவற்றுடன் இணைக்கப் பட்டுள்ளன என்று சொல்லி இருக்கின்றார்கள். ஒன்றிலிருந்து மற்றொன்று இவ்வாறு
இணைக்கப் பட்டிருப்பதை அவர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பது மிகவும்
வியப்பாக இருக்கின்றது! உண்மையில் மிகப்பெரும் ஆச்சரியம்!
நாம்
பள்ளியிலும், கல்லூரியிலும் இந்த
உலகம் உருண்டையானது, அது சூரியனைச் சுற்றி வருகின்றது என்பதை முதன்முதலில் கண்டுபிடித்தவர்
கலிலியோ என்று படித்திருக்கின்றோம். மேற்கு நாடுகளில்
சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகின்றது என்று நினைத்திருந்தார்கள். இந்தியர்கள் தான் சூரியக் குடும்பத்தின் மையத்தில் இருப்பது சூரியன் என்பதை
அறிந்திருந்தார்கள். இந்தியாவில் எந்த கோவிலுக்குச் சென்றாலும், தெரிந்து கொள்ளலாம்.
சூரியனை நடுவில்
வைத்து மற்ற கிரகங்களை அதனை சுற்றி அமைக்கும் வழக்கம் இந்தியாவில் பல்லாயிரம்
ஆண்டுகளாகவே உள்ளது. அவர்கள் மேலும் என்ன செய்தார்கள் என்றால் ஒவ்வொரு கிரகத்தையும்,ஒரு மந்திரம் மற்றும் ஒரு யந்திரம் (வரைபடம்) கொண்டு இணைத்தனர். பிராண சக்தியானது ஒரு குறிப்பிட்ட நவரத்தினக்கல் ஒரு
குறிப்பிட்ட தானியம் போன்றவையோடு தொடர்புபடுத்தப்பட்டது. உதாரணத்திற்கு செவ்வாய் கிரகம்,கடலையுடனும் புதன் பச்சை பயருடனும், சனி கிரகம் எள் விதையுடனும் சூரியனும் சந்திரனும், அரிசி மற்றும் கோதுமை யுடனும் தொடர்பு கொண்டுள்ளன. ராகு, கேது மற்றும் நிலவும் கூட பல்வேறு தானியங்களுடன் இணைந்துள்ளன.
இவ்வாறு
ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட தானியம், ஒரு குறிப்பிட்ட வடிவம், ஒரு குறிப்பிட்ட நிறம், நம் உடலின் ஒரு குறிப்பிட்ட பாகம் ஆகியவற்றுடன்
தொடர்பு கொண்டுள்ளது. நம் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒரு குறிப்பிட்ட கிரகத்துடன் தொடர்பு
கொண்டுள்ளது. எனவே எல்லா
கிரகங்களும் நம் உடலில் செயல்படுகின்றன என்பது வியக்கத்தக்க ஒரு விஞ்ஞானம்.
சாமுத்திரிகா
லட்சணம் எனப்படும் ஒரு அறிவியலில் உங்களது முகத்தைப் பார்த்தே உங்கள் ஜாதகத்தினை
கணித்து விடுவார்கள்.சில சமயங்களில் உங்களது பற்களைப் பார்த்தே நீங்கள் எந்த வருடம்
பிறந்தீர்கள் என்பதனை சரியாக சொல்லிவிடுவார்கள். இது போன்ற நிறைய ஞானம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு மறைந்து போய் விட்டது.
இன்று
பல்வேறு கோவில்களிலிருந்து பண்டிதர்கள் இங்கு வந்து உலகம், மற்றும் உலக மக்கள் நன்மைக்காக ஒன்பது
கிரகங்களுக்கும் யாகம் செய்கின்றனர். வரவிருக்கும் சில நாட்கள் சற்று சிரமமாக இருக்கும்.எனவே உலகில் எதிர்மறையான தீய அதிர்வுகளைக்
குறைத்து நல்ல நேர்மறை அலைகளைப் பரப்ப இன்றும் நாளையும் இந்த யாகத்தினை
நடத்துகின்றனர்.
இவையெல்லாம்
பழமையானவை. ஆனால் இவற்றை எல்லாம்
யாரும் சரியானபடி புரிந்து கொள்ளவில்லை. அதனைச் செய்யக்கூடியவர்களும் எவருமில்லை. இங்கு தான் நாம் நம் இளைஞர்களை ஊக்கப்படுத்த
வேண்டும். எனவே தான் நான்
இந்தப் பண்டிதர்களை அழைத்துவந்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும் என்று
எண்ணினேன்.
கே: தீய பழக்கங்களின் அடிமைத்தனத்திலிருந்து ஒருவர்
மீண்டு வருவது எப்படி?
குருதேவ்: சாதனா செய்வதன் மூலம்தான். எந்த ஒரு தீய பழக்கத்தின் அடிமைத் தனத்திலிருந்தும் மீண்டு வெளி
வருவதற்கு சாதனா மட்டுமே உதவ முடியும். இங்கே வாருங்கள்; அமர்ந்து பயிற்சி செய்யுங்கள். வாழும் கலையின் மேல் நிலை தியானப் பயிற்சி செய்யுங்கள். ஒரு முறை இரண்டு முறை அல்ல, தொடர்ந்து செய்து கொண்டிருங்கள். தீய பயக்கங்கள் போய்விடும்."நான் யார்?" என்று கேட்டுக் கொண்டே
இருங்கள்.அதிலிருந்து மட்டும் தான்
உங்களுக்கு சரியான பதில் கிடைக்கும்.
கே: எனக்கு ஒரு மகள் இருக்கின்றாள். அவள் திருமணத்திற்குப் பிறகு கனடாவிற்குச் சென்று
விட்டாள். கடந்த ஒன்றரை
ஆண்டுகளுக்கு மேலாக நான் அவளை சந்திக்க முடியவில்லை. நான் என் மகளை சந்திக்க முடியுமா?
குருதேவ்: சென்று சந்தியுங்கள். உங்கள் மகளும் "என் அம்மாவை சந்திக்க வேண்டும்" என்று நினைக்க
வேண்டும். சில சமயங்களில் என்ன
நடக்கின்றதால் நாம் நம் குழந்தைகளை பாசம் பரிவு போன்ற உணர்வுகள் இல்லாமல் வளர்த்து
விடுகின்றோம். அவர்களுக்கு நல்ல
விஷயங்களையும் நற்குணங்களையும் அளிக்கவில்லை. ஆகவே,அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது எல்லாவற்றையும் மறந்து
விடுகின்றார்கள். சுயநலமாகி
விடுகின்றார்கள்.
நீங்கள்
அனைத்தையும் விட்டுத்தள்ளி விட்டு அமைதியாக இருங்கள். எல்லாம் சரியாகி விடும்.