05
2012...............................
பெங்களுரு, இந்தியா
பெங்களுரு, இந்தியா
ஜூன்
நாம் எதற்காக வருத்தப்படுகிறோம்? நாம் பறவைகள்,
மேகங்கள், இயற்கை இவற்றை கண்டு வருத்தமடைவது இல்லை. பிறகு எதை கண்டு நாம் வருந்துகிறோம்? நம்மை சுற்றி உள்ள மக்களை கண்டு வருந்துகிறோம்!!!. நம் எதிரிகள் நம்மை வருத்தமடைய
செய்கிறார்கள். நம் நண்பர்கள் நம்மை வருத்தமடைய செய்கிறார்கள். நம் மனம், நண்பர்களிடம்
அல்லது
எதிரிகளிடம் சிக்கித் தவிக்கிறது. நண்பர்கள் அல்லது எதிரிகள் பற்றி யோசித்தே, முழுவதும் செலவிடுகிறோம்.
நாம் தவறுகள் எதுவும் செய்யாவிட்டாலும் மக்கள் நம் எதிரிகளாகி விடுகிறார்கள். பலருக்கு
இந்த அனுபவம் உள்ளது. நாம் பிறருக்கு எந்த தீங்கும் செய்திருக்க மாட்டோம்,
தவறாகவும் நடந்திருக்க மாட்டோம், எனினும் அவர்கள் நம் எதிரிகளாகி விடுகிறார்கள். இது ஆச்சர்யமாக உள்ளது. 'ஓ! இன்று
இவன் நம் எதிரியாகி விட்டான். நேற்றுவரை என் நண்பனாக இருந்தானே' என்று நாம் நினைப்போம். அது
போல், நாம் எந்த பெரிய உதவியும் சிலருக்கு செய்திருக்க மாட்டோம், ஆனாலும் அவர்கள் நம் நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். மக்கள் சிலர்
நண்பர்களாகவும்,எதிரிகளாகவும் இருக்கிறார்கள் என்பது ஒரு
வியக்கத்தக்க, வினோதமான கர்மா.
சரி இப்போது என்ன
செய்வது? நம் நண்பர்கள், எதிரிகள் இருவரையும் ஒரு தராசில் வைத்து விட்டு, மனதில் சலனமில்லாமலும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். நடப்பவை எல்லாம் ஏதோ ஒரு சட்டத்தின்படி நடக்கிறது. ஏன்? எப்படி? என்று நமக்கு தெரியாது. பிறருக்கு நம்
மீதான
கருத்து எப்போது மாறும் என்று ஒருவரும் சொல்ல முடியாது.
நமக்கு சாதகமாகவும், பாதகமாகவும் மாறலாம். அதனால் தான் நாம் நம் தோழமை மீதும் எதிரிகள் மீதும் நம்பிக்கை
வைக்காமல் நம்மீதும், கடவுள் மீதும், முழு நம்பிக்கை வைக்க வேண்டும். நம் எதிரிகள் பற்றியும், நண்பர்கள் பற்றியும் பேசி, நாம் நம் நேரத்தை வீணாக்கக்கூடாது.
என்ன சொல்கிறீர்கள்?
இதன் பொருள் நீங்கள் உங்கள்
நண்பர்களிடம் இருந்து விலகியிருக்கவேண்டும், அல்லது புதிய நண்பர்களை உருவாக்க கூடாது என்பதல்ல. தோழமை, அன்பு நம் இயல்பாக இருக்க
வேண்டும். நாம் அனைவரும் அன்பினாலானவர்கள். நம் அருகில் யாரேனும் வந்து அமர்ந்தால் நாம் அவரை பார்த்து புன்னகைத்து ஓரிரு வார்த்தை பரிமாறி
கொள்வோம். அதனால்,' யார் எதிரி? யார் நண்பன்? யாரிடமும் எதுவும் பேசக்கூடாது'
என்று இறுக்கமான முகத்துடன் எல்லோரிடமும் கோபமாக இருக்ககூடாது,இது அறியாமையும், முட்டாள்தனமும்
கூட. ...
நாம் எல்லோரிடமும் சகஜமாக பேசவேண்டும், அதே சமயம் நாம் நடுநிலை தவறாமலும்
இருக்கவேண்டும். புரிகிறதா? நாம் நம் மனத்தில் நடுநிலையோடு இருக்கும்போது கவலையோ, வருத்தமோ, கோபமோ,
சொந்தமோ கொள்ளாமல் இருப்போம். எந்த வித ஏமாற்றமும்
இருக்காது. இல்லையேல்? நாம் வருத்தமாகி, 'ஓ! பார் நான் அவருக்கு நல்ல
நண்பராக இருந்தேன், இன்று அவர் என்னுடன் பேசுவது கூட இல்லை. நான் அவருக்கு
எவ்வளவு நன்மைகள் செய்தேன், அவர் எனக்கு எதிரியாகி விட்டாரே'
இப்படியெல்லாம் யோசித்து நாம் இப்போதுள்ள நேரத்தை வீணடிக்கிறோம். சரியா!
இந்த குறுகிய வாழ்நாளில்
நல்ல காரியங்கள் செய்ய வேண்டும்! தியாக புத்தி வேண்டும் விட்டுக்கொடுக்கும் திறன்
வேண்டும் தியாகம்
நமக்கு பெரும் பலத்தைத் தருகிறது.தியாகத்தை போல் வேறு எதுவும் நமக்கு
மிகப்பெரிய பலம் தருவது இல்லை. எல்லோரும்
ஏதோ ஒரு
விதத்தில் சிறியதோ, பெரியதோ
தியாகம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவ்வுலகில் தியாகம் செய்யாமல் ஒருவரும் இல்லை.
ஒரு தாய் தன் வசதிகள்
அனைத்தையும் தன் குழந்தை மீது கொண்ட
அன்பினால் தியாகம் செய்கிறாள். ஒவ்வொரு தாயும், குழந்தை சிறியதாக இருக்கும் போது தூங்காமல், இரவில் கண் விழித்து,
குறைவாக தூங்குவர். அவர்களுடைய கவனம் முழுவதும் இரவும்,பகலும் குழந்தை
மீதே இருக்கும். தன்
சுகங்கள் அனைத்தையும் மறந்துவிடுவாள். அதுபோல் ,சமூகத்திற்காக
தியாகம் செய்யும் மக்கள் பலர் உள்ளனர். இல்லையா?
ஒரு தந்தை தன் குடும்பத்திற்காக கடுமையாக
உழைக்கிறார். இல்லையேல் எதற்காக அவர்
பாடுபட வேண்டும். ஒரு தனி மனிதன் தன் தேவைக்கு
அவ்வளவு பாடுபட வேண்டிய அவசியமில்லை, இருக்க
இடமும் உண்ண உணவும் இருந்தால் போதும். தேவைக்கு போதுமானதாக கொஞ்சம் இருந்தால் போதும், அதற்கு கடுமையாக உழைக்க வேண்டாம்.
திறமையான புத்திசாலியான
மனிதனாக இருந்தால் சிறிய வருமானத்தை கொண்டு திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பான். தன் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும்
பொறுப்பேற்கும் போது கடினமாக உழைக்க வேண்டும். எனவே எல்லா மனிதனும்
தியாகம் செய்கிறான். பெரிய அளவில் தியாகம்
செய்பவன் அதிக அளவில் பலம் பெறுகிறான். சிலர் தங்கள் வசதியை தியாகம் செய்யவும், சிலர் செல்வத்தையும், மேலும் சிலர் தங்கள் சுய மரியாதையையும், மக்கள் மத்தியில் தங்களின் செல்வாக்கையும் தியாகம் செய்ய
முன் வருகிறார்கள். எனவே அதிகம் தியாகம்
செய்பவன்,அதிக பலம் பெறுவான். தியாகம் செய்ய எதுவும் இல்லாமல், நான் தியாகம் செய்து விட்டேன் என்று
கூறுவதும் தவறு. தன்னிடம் எல்லாம்
இருந்தும், தன் கடமைகள், பொறுப்புகள், எல்லாவற்றையும் முடித்து விட்டாலும் தியாகம் செய்யும் மனப்பான்மை ஒருவருக்கு
இருக்க வேண்டும். அதுவே சிறந்தது.
பாருங்கள் ஒரு சந்நியாசி,'என்னிடம்
எதுவும் இல்லை, ஒரு குடிசை கூட எனக்காக இல்லை . நான் சிறந்த தியாகம்
செய்துவிட்டேன்' என்று கூறலாம். நான் அதை
தியாகமாக கருதவில்லை, ஏனென்றால் அவருக்கு எந்த
கடமைகளோ, பொறுப்புகளோ நிறைவேற்ற வேண்டிய கட்டாயம்
இல்லை. அதுவே ஒருவர் பெரிய ஆஷ்ரமத்தை
நடத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அல்லது பல மக்களை கொண்டு ஒரு பெரிய நிறுவனத்தை நடத்தும்
பொறுப்பில் உள்ளவர், அதை ஒரு தியாகமாகவும், தன்னலமற்ற, பற்றற்ற முறையில் நடத்தினால் அதுவே சிறப்பானதாகும்.
இதுவே கடவுள் கிருஷ்ணரின் வழியாகும்.அர்ஜுனன் கிருஷ்ணரிடம்' நான்
எல்லாவற்றையும் விட்டுவிட்டு இமாலயம்
செல்கிறேன்.என் மக்கள் மீது எனக்கு
போர் புரிய விருப்பமில்லை, அதே போல் சுகபோகங்களிலும் எனக்கு ஈடுபாடில்லை.
நான் எதற்காக இதை செய்யவேண்டும். கிருஷ்ணா,என்னை ஏன் போர் புரிய வற்ப்புறுத்துகிறாய் ? என்னை போகவிடு. நான் இமய
மலைக்கு செல்கிறேன் என்றான். அதற்க்கு
கிருஷ்ணபரமாத்மா, இல்லை, நீ அவ்வாறு செய்யக் கூடாது. உன் கடமையை செய்ய தவறக்கூடாது.
நீ செய்யும் செயல்களில் பற்றற்று, பலனை
எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும். உன் கடமையையும், பொறுப்புகளையும் நிறைவேற்று, நீ செய்யும் செயல்களில் பற்றில்லாதவனாக
இரு என்றார்.
அருட்தொண்டரான கபீர்
அழகான வரிகளில்:
நீங்கள்
பொய் கூறுவதையும், கோபத்தையும் விட வில்லை. பின் ஏன் உண்மை பேசுவதையும், நீதி வார்த்தைகள் பேசுவதையும் விட்டுவிட்டீர்கள்".நீங்கள் உங்கள் ஆசைகளையும், வேலைகளையும் விடவில்லை பின் ஏன் கடவுளின்
பெயரை ஜபிப்பதை நிறுத்தி விட்டீர்கள்.
நம் ஆன்மா
ஒன்றி பழுத்த பழம் போல் இருக்கும் நிலையில், நாமத்தை உச்சரிப்பது விட வேண்டும். ஜபமில்லாத நிலைக்கு நம் அறிவின் முயற்சி இல்லாமல்
இயல்பாக நாமத்தை உச்சரிப்பது உயர வேண்டும். ஆனால் நீங்கள் ஜபத்தை அதற்கு முன்பே விட்டு
விட்டால் அது தவறு. உதாரணமாக, நீங்கள் பேருந்தில் ஏறினால் ஒரு நிறுத்தத்தில் இறங்க நினைத்து அந்த
பஸ் நிறுத்தம் வந்ததும் இறங்குவீர்கள். ஆனால் எப்படியும் பேருந்தை விட்டு இறங்கவேண்டும்.
பின் எதற்கு
பேருந்தில் ஏற வேண்டும்?என்று கூற முடியாது. சிலர் இப்படி
நினைக்கிறார்கள். அவர்களுக்கு ஏறும் இடமும், பஸ்சில் இருந்து
இறங்கும் இடமும் வேறு வேறு நிறுத்தங்கள்
என்று தெரிவதில்லை.
உங்கள் உணர்வு நிலையும்
நீங்கள் ஜபம் செய்வதற்கு முன்பும், ஜபம் செய்வதற்கு பின்பும்
மாறுபட்டவை. வாழ்வின் ஓட்டம் ஒரே திசையில் இருக்க வேண்டும். அதனால் தியாகம் மிக முக்கியமானது.
தியாக மனப்பான்மை இல்லாமல் மனம் சுமையாகி
விடும். பற்றில்லாமல் தியாக உணர்வோடு இருப்பவர், எப்பேர்பட்ட புகழ்ச்சிக்கும் அடிமையாகாமல்
இருப்பார். ஞானி (அனைத்தும் அறிந்தவர்), தியாகி, கடவுள் பக்தர் இவர்கள் புகழ்ச்சியாலும், வியப்பாலும் மாறாது இருப்பார்கள். இல்லை யெனில்
இந்த புகழ்ச்சியும், வியப்பும், தியாக மனப்பான்மையும், கடமையும் இல்லாதவருக்கு சுமையாகி விடும். அன்பும், மெச்சுதலும் கூட சுமையாகி விடும். அது நடக்கும் போது
அவர்கள் தங்கள் சுமையை இறக்க ஓடி விடுகிறார்கள். பல
காதல் திருமணங்கள் இதனால் விரிசல் அடைந்துள்ளன. இருவரில், ஒருவர் மிக அதிகமாக அன்பை செலுத்த மற்றவர் அதை கையாள
முடியாமல் ஓடி விடுகிறார். எவ்வளவு
பேர் இதை பார்த்து இருக்கிறீர்கள்? (பலர் கை உயர்த்துகின்றனர்)
பலர் என்னிடம் வந்து.
'நான் ஒருவரை காதலிக்கிறேன். நான்
யாரை காதலித்தாளும் அவர் ஓடி விடுகிறார்.' என்பர். நான் அவர்களிடம்,
'ஓ! இரவும் பகலும் அவர்கள் எரிச்சலடைந்து, வெறுப்பாகும் வரை நீங்கள் அன்பு செலுத்தவேண்டாம்' என்பேன். வெளி நாடுகளில் இவ்வாறு தான் நடக்கிறது. ஒருவர்
மற்றவர் பின்னால் ஓடி,'ஹனி,ஹனி'
என்று எல்லா நேரமும் கூறுவார். பிறகு, அவர்கள் நிரழிவு நோயால் அவதிப்படுவர்! சதா எல்லா நேரத்திலும் 'ஹனி, ஹனி' கூறிவிட்டு, திடீரென்று ஒரு நாள் அவர்கள் வெறுப்படைந்து 'உன்னை என்னால்
ஏற்க முடியாது' என்று கூறிவிடுவர்.
ஒருவர் எல்லையை தாண்டி அன்பை வெளிப்படுத்த தேவையில்லை.
இந்தியாவில் இதற்கு
நேர்மார். மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதே
இல்லை. இந்திய கிராமங்களுக்கு சென்றால், மக்கள் அன்பை வெளிப்படுத்துவதே இல்லை எனலாம். மனதிற்குள்
வைத்து இருப்பார்கள்,
ஆனால் வெளியில் காட்டமாட்டார்கள். ஆனால் வெளி நாடுகளில் அதை
அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தி அது மறையும்படி செய்து விடுவார்கள். அது
அங்கு தங்குவதில்லை.
அன்பை ஒரு விதை போல் விதைக்க வேண்டும். விதையை பூமிக்கு அடியில் மிக ஆழமாக விதைத்தால் அது முளைக்காது. ஒரு
விதையை பத்தடி ஆழத்தில் விதைத்தால்,
அது மடிந்து விடும். இது தான் இந்திய கிராமங்களின் நிலை. அங்கு வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழும் தம்பதியர் உள்ளனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறிக்கொண்டது இல்லை. நகரங்களிலும், வெளிநாடுகளிலும் அப்படியே தலைகீழ். அங்கு,'
நான் உன்னை விரும்புகிறேன்' என்று நொடிக்கு ஒருமுறை கூறுவதால், அன்பு தோல்வியடைந்து விடுகிறது. உறவுகள் சாதாரணமாகி, 'சாரி, தேங்கயு' என்பர். யாரேனும் ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்தால் 'மிக்க நன்றி !' என்பர். மேசையில் இருந்த டம்ளர் நீரை எடுத்து
உங்கள் கையில் கொடுத்தனர்
அவ்வளவே. அதற்கு 'மிக்க நன்றி' என்று கூறுவதில் என்ன பிரயோஜனம்?
நீங்கள் ஒரு பாலைவனத்தில், மூன்று நாட்கள் தண்ணீர் இல்லாமல்
இருந்து,யாரேனும்
உங்களுக்கு ஒரு டம்ளர்
நீர் அருந்த கொடுத்து அதற்கு நீங்கள்
நன்றி என்று கூறினால்
அது உண்மையாக
இருக்கும். நாம் வீட்டிலேயே அப்படித்தான் இருக்கிறோம். வீட்டில்
இருப்பவர் நமக்கு நீரோ, உணவோ கொடுத்தால் நன்றி கூறுகிறோம்.அதில் அர்த்தம்
இல்லை. நம் வார்த்தைகள் உண்மையாக, நம் மனதிலிருந்து வரவேண்டும்.இல்லை
யென்றால்
உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவது மிகவும் கடினம். அதனால்
தான் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் முக்கியம்.
கன்னடத்தில், அழகான
வரிகள் உண்டு, நீங்கள் பேசும் போது உங்கள் வார்த்தைகள்,முத்து
மாலை
போல் தூய்மையாக இருக்க வேண்டும். வைரத்தை போல் ஜொலிக்க வேண்டும். ச்படிகத்தை போல் வெளிப்படையாக இருக்க வேண்டும். சிவபெருமான் அமைதியாகவும், மௌனமாகவும் இருப்பார்.ஆனால் அவரே தலையை ஆட்டி, அது உண்மை என்று ஈர்க்கும்
படி உங்கள் பேச்சு இருக்க வேண்டும்.
கே: குருஜி, அன்பு உணர்வு நிலையில் மட்டும் உள்ளது, என்றால்
உறவுகளுக்கு என்ன அவசியம்?
ஸ்ரீ ஸ்ரீ: உணர்வு நிலை ஒரு மனிதரின் மூலம் தான்
வெளிப்படுத்துகிறது. உறவு பல நபர்களிடம் உருவாகிறது. உங்களுக்கு
உறவுகள் அவசியம் இல்லை என்று நினைத்தால், பலத்தைக் கொண்டு உறவுகளை ஏற்படுத்த முடியாது. உண்மையில் நீங்கள் உறவுகளின்
அவசியம் பற்றி கேள்வி கேட்கிறீர்கள் என்றால், அதன் அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. இல்லையென்றால் இந்த கேள்வி முதலில் வந்திருக்காது. உறவுகளின்
தேவையை உணர்ந்த போதிலும் உங்கள்
தன்மானம் இடையில் வந்து தடுத்து, எனக்கு உறவுகள்
அவசியமில்லை.' என்று உணர்கிறீர்கள். அல்லது உங்களுக்கே உறவுகள் அவசியமா
வேண்டாமா என்று புரியவில்லை!!
அதனால் தான் நான்
உறவுகள் இருந்தாலும், மறைந்தாலும் நீங்கள் அதனால் பாதிப்படை யாமல் இருக்க வேண்டும். நீங்கள் உங்களுக்குள் ஓய்வெடுக்க பழகுங்கள். நீங்கள்
தியானம் செய்யும்போது, எல்லாவற்றியும் ஒருபுறம் வைத்து விட்டு, இளைப்பாறுங்கள். வெளியே பலருடன், பழகும் போதும்,
பேசும் போதும், நல்ல உறவுகளை அமைத்து கொள்ளுங்கள்.
கே: குருஜி, ஈர்ப்பில் இருந்து ஒருவரை
எப்படி காப்பாற்றிக்கொள்வது?
ஸ்ரீ ஸ்ரீ: இந்த ஈர்ப்பில் இருந்து எப்படி காத்து கொள்வது என்ற எண்ணமே கடிவாளம் போல் அமைந்து விட்டது.
இப்படியே புரிந்து கொள்ளுங்கள். அதுவே சரியானது.கார்களுக்கு பிரேக்குகள் இருக்க வேண்டும், இல்லையேல்
நாம் ஏதாவது ஒருநாள் பிரச்சனையில் மாட்டிக் கொள்வோம். சரியா? மேலும் வாழ்க்கையில்
எல்லாமே அன்புதான் என்ற திடமான நம்பிக்கை வேண்டும்.
நாம் அன்பை உருவாக்கும் முயற்சி பலனளிக்காது, ஆனால் நீங்கள் மன அழுத்தம் இல்லாமல் இருந்தால், அன்பு உங்களில் வெளிப்படுவதை காணலாம். இதற்கு இரண்டு விஷயங்கள் வேண்டும். மன அழுத்தத்தில் இருந்து விடுதலை மற்றும் ஓய்வு.
கே: குருஜி, சில நேரங்களில், அழைப்புமணி அழைத்து, நான் கதவைத் திறக்கும் போது
நீங்கள் கதவருகில் இருக்க வேண்டும்
என விரும்புகிறேன். என் தொலைபேசி அழைக்கும் போது நீங்கள் அழைப்பது போலும், உங்களுடன் பேசுவது போலும் உணர்கிறேன். சாதனா தவறாமல் செய்பவர்களுக்கு எல்லாமே கிட்டும். எனவே என் ஆசைகள் நிறைவேற நான் காத்திருகட்டுமா?
ஸ்ரீ ஸ்ரீ: ஆம். கண்டிப்பாக. ஒரு நாள், நான் ஆஷ்ரமம்
விட்டு செல்லும் போது ஒருவர்
மட்டுமே என்னுடன் வந்தார். நாங்கள் அமைதியாக ஒருவரும் அறியாமல் சென்றோம். தொலைவில் உள்ள ஒரு
கிராமத்திற்கு சென்றும். வழியில் நான்
கார் டிரைவரை, ஒரு
சிறிய வீட்டின் முன் காரை
நிறுத்தச் சொன்னேன். நான் வீட்டினுள் சென்றேன். அங்கு
ஒருவர் அமர்ந்து இருந்தார்.
அவர் எளிமையான விவசாயி. அவரிடம் சிறு வயல்
இருந்தது. அவர் சிறிய தொலைக்காட்சி பெட்டி வைத்து இருந்தார், அதில் என் நிகழ்ச்சியை பார்த்திருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர்க்கு என்னைக் காணவேண்டும் என்ற
தீராத ஆவல் இருந்தது. அவர் குருஜியை எப்படி பார்ப்பது? எனக்கு பெங்களுரு சென்று
பார்க்க பணவசதி இல்லை, ஆனால் அவரை எங்காவது
எப்படியாவது பார்த்து விட
வேண்டும் என்று நினைத்து இருந்தார். நான் அவர்முன்
அவர் வாசலில் நின்றதும்
அவர் அதிர்ச்சியாகி விட்டார். என்முன் மண்டியிட்டு
அழ ஆரம்பித்து விட்டார். சாதாரண
விவசாயி, சிறிய
வயலில், தக்காளிகள் மட்டும்
பயிரிட்டு இருந்தார். அரை ஏக்கர் விட
சிறிய நிலம். அவருடைய குடும்பமும் சிறியது.
அது போல், நான்
ஒரு பள்ளிக்கு சென்று அங்குள்ள
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாடம் எடுத்தேன். இரண்டு மணி நேரம் அவர்களுடன்
பேசி கொண்டு இருந்தேன். அவர்கள்
மிகவும் ஆர்வத்துடனும்,
உற்சாகத்துடனும் இருந்தனர். அது ஒரு சிறிய
பள்ளி, அதன் ஆசிரியர்களும் தீவிரமாக என்னைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
நான் அவர்களை சிறிது ஊக்கப்படுத்தினேன், பிறகு சிரித்து மகிழ்ச்சியாக இருந்தார்கள். இதுதான் கல்வியறிவு
தரும்.
அதை வாழ்க்கையில் பின்பற்றினால் தானாகவே ஒருவர்
வாழ்வில் உற்சாகமும், மகிழ்ச்சியும் இருக்கும். எனவே, எதுவும்
சாத்தியமாகும்.
ஒரு நாள் கிஷோர்தாசும்,
நானும் அருணாச்சல பிரதேசத்திற்கு அஸ்ஸாமில் இருந்து சென்றோம். நாங்கள் ஒரு கிராமத்தை
தாண்டும் போது நான் காரை ஒரு வீட்டின்
முன் நிறுத்தச் சொன்னேன். நான் வீட்டின் உள்ளே
கிஷோதாஸுடன் சென்றேன். அவரை எழுநூறு ரூபாயை அங்கிருந்த ஒரு பெண்மணியுடன் தரச்சொன்னேன்.
அந்த பெண்மணியின் கணவர் ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் அதற்கு
ரூபாய் இரண்டாயிரத்துநூறு செலவாகும். ஆனால் அவரிடம் ரூபாய் ஆயிரத்து நானூறு மட்டுமே
இருந்தது. அவரிடம் போதுமான பணம் இல்லை. அதனால் அவர் வீட்டின் கோவிலில் அமர்ந்து கடவுளிடம்
படத்திற்காக பிரார்த்தித்தார். அவர் வைத்துள்ள கோவிலில் காளி படமும்,
ராமகிருஷ்ண பரமஹம்சர் படமும் இருந்தது. அவர் கேட்ட
பணம் அவர்க்கு கிடைத்து
விட்டது.
நானும் அவருடன் சிறிது நேரம்
செலவிட்டு வந்தேன். நான் என்ன கூறுகிறேன் என்றால், இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரே சக்தியால், தத்வத்தால் ஆனது. நானும் அந்த
தத்தவப் பொருளால் ஆனவர், நீயும் அப்பொருளால் ஆனவர். நீ
யாரிடம் தலை வணங்கி, வழிபட்டாலும், அது
ஒரே மூலத்தில் தான் அடையும். அந்த
பெண்மணிக்கு என்னை யார் என்று
தெரியாது, இந்த சம்பவம் நடந்து இருபது வருடங்கள் ஆயிற்று.
நாங்கள் நான்கு
அல்லது ஐந்து பேர் அந்த காரில் இருந்து
இருப்போம். நாங்கள் அவரை சந்தித்த போது
அவரின் பக்தியின் உறுதியை காண முடிந்தது. நாம் உறுதியான உண்மையான மனதோடு தெய்வத்தை அழைத்தால், நம் எண்ணங்கள்
அனைத்தும் நிறைவேறும். இது உங்களில் பலருக்கு நடந்திருக்கும் இல்லையா? பலவித அதிசயங்கள்
பலர் வாழ்க்கையில் நடந்துள்ளது. பாருங்கள்!
இங்குள்ள எல்லோருக்கும் இந்த அனுபவம் உள்ளது. இது அதிசயமல்ல. நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு
பெரிய விஷயமல்ல. இது நடக்கவில்லை என்றால் தான் ஆச்சர்யம். அதிசயம் எதுவும் நிகழவில்லை என்றால் தான்
அது ஆச்சர்யம்.! ஆமாம். சில அதிசயங்கள்,
உடனே நடக்கும் சிலது நேரம் எடுக்கும்.
கே: குருஜி, நீங்கள், தியாகம் ஒருவருக்கு
மிகப்பெரிய பலம் தருகிறது என்றீர்கள். ஆனால் ஒருவருக்கு தியாகம் செய்ய ஆத்மா
பலம் வேண்டாமா?
ஸ்ரீ ஸ்ரீ: தியாகம் மிகப்பெரிய பலம். தியாகம் செய்ய
தேவையான ஆத்மபலம் ஞானத்திலிருந்து
வரும். அறியாமை தியாகம் செய்ய
பலம் தருவதில்லை. இதை ஆராயுங்கள். நீங்கள்
இந்த ஞானத்தை சிறிது நேரம் முன்பு கேட்டு
உங்களுள் பலமும், தைரியமும் இருப்பதை உணர்ந்தீர்கள் அல்லவா? இது உடனடியாக நடக்கும்.
கே: குருஜி, எங்கள் பகுதியில் (YLTP) மூலம் பல
மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.இந்த இயக்கத்தின் நோக்கம் என்ன? யுவச்சர்யாவாக நான் என்ன செய்யவேண்டும்.என் வேலையின் நோக்கம் என்ன?
ஸ்ரீ ஸ்ரீ: சுய முன்னேற்றம் ,சமூகத்தில் உள்ள மற்றவரின் முன்னேற்றம். உங்கள் முன்னேற்றம், மற்றும் சமுகத்தின்
முன்னேற்றம், இரண்டுமே நடை
பெற வேண்டும்.அவை ஒன்று பிறகு மற்றொன்று நடை பெற முடியாது.
இரண்டும் ஒன்றாகவே நடை பெற வேண்டும்.
இதுவே YLTP யின் நோக்கம். நீங்கள் ஒரு வருடம் அல்லது ஒன்று அரை வருடம்
உங்கள் வாழ்வில் உங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும். உங்கள் முன்னேற்றம் தானாக நடப்பதை பார்ப்பீர்கள். ஒரு
கட்டடம் மிக உயரமாக கட்ட வேண்டும்
என்றால், ஆழமாக தோண்டி அடித்தளம் வேண்டும். வாழ்வில் எவ்வளவு உயர வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ,
அவ்வளவோ தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். சும்மா அமர்ந்து, ஓய்வெடுத்து கொண்டு இருந்தால், உயரத்தை
எட்ட முடியாது.
கடின உழைப்பு தேவை. அந்த கடின உழைப்பு நிச்சயம் பலன் தரும்.