கடவுள் அனுபூதியை உங்களுக்கு ஒருபோதும் மறுப்பதில்லை


7, பெப்ரவரி 2012

(கீழே உள்ளது ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் சத்சங்கம்.இனிவரும் சத்சங்க நிகழ்ச்சிகளை நீங்கள் 
வலைத்தளத்தில் காணலாம் )

கேள்வி: குருஜி, மீண்டும் பருவநிலை மாறுகிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் உகந்த ஆகாரம், மேற் கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை இவை பற்றி கூற முடியுமா? நம் மீது இவற்றின்  தாக்கம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நமது முன்னோர்  இது பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். இன்றைய மருத்துவர்களும் சிறிது ஆய்வு செய்துள்ளார்கள். நீங்கள் கூகிள் வலைத்தளத்தில் இந்த பருவகாலத்தில் என்ன உணவு எடுத்துகொள்ள வேண்டும் என்பதைக் காணலாம் இப்போதெல்லாம் எல்லா விபரங்களும் விரல்நுனியில் கிடைக்கின்றன அல்லவா?

ஆயுர்வேத சாஸ்திரப்படி வாத, பித்த , கப பருவநிலைகள் உள்ளன.கோடைகாலத்தில் பித்தம் அதிகமாகும். எனவே பித்தத்தை குறைக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.  இயற்கையும் பருவங்களுக்கேற்ற பயிர்களையே தருகிறது. குளிர்காலத்தில் பூசணி, பரங்கி மற்றும் நெல்லி காய்கள் வளருகின்றன.இவை குளிர் காலத்திற்கு தேவையானவை.கோடையில் தர்பூசணி கரும்பு ஆகியவை வெட்டப்பட்டு கரும்பு சாறு பயனாகிறது.தர்பூசணி குளிர்காலத்தில் பயிரடப்படுவதில்லை, அவை உபயோகத்திலும் அக்காலத்தில் இல்லை.

ஆகவே, பருவநிலைகளுக்குத்தகுந்தவாறு பழங்கள், காய்கறிகள் அனைத்துமே இயற்கையால் அளிக்கப்படுகின்றன. ஆனால் நாம் இப்போது இயற்கையிலிருந்து வெகு தூரம் விலகி சென்றுவிட்டோம். நமது உடலும் அதற்கு ஒத்துப்போகிறது.இல்லையெனில் , நீங்கள் பப்பாளி , வாழை , மா இவை விளையுமிடத்தில் இருந்தால், அங்கு ஆப்பிள்  விளையாது.ஆனால் நாம் இப்போது மற்ற பகுதிகளிருந்து ஆப்பிள் வரவழைத்து கொள்கிறோம். ஆப்பிள் விளையுமிடத்தில் வாழை வளராது. பேரிக்காய், ஆப்பிள், பீச் , பெர்ரி , செர்ரி பழவகைகள் எல்லாம் ஒரே சீதோஷன நிலையில் வளரும் பயிர்கள்.அல்லவா? ஆனாலும் இந்த பகுதியில் வாழும் மக்கள் , அங்கு வளராத பப்பாளி மற்றும் வாழை பழங்களை உண்கிறார்கள். இது ஒரு சீரிய நிலை. நமது உடல் எல்லா உணவு வகைகளையும் ஏற்றுக்கொள்கிறது.ஆனால் நீங்கள் ஒரே மாதிரியான பழங்களை ஒரு வேளையில் உண்ணுமாறு கவனித்துக்கொள்ளுங்கள். வெப்பமண்டலப்பகுதியில் விளையும் வாழை,  பப்பாளி ,சிக்கோ (சப்போட்டா)  தேங்காய் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணையும். அவற்றை ஒரு உணவு நேரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.ஆப்பிள், பேரிக்காய் செர்ரி ஆகியவற்றை மற்றொரு உணவு நேரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

கேள்வி: குருஜி ! பௌர்ணமி அன்று ஆழ்ந்த பூஜை செய்வதின் முக்யத்துவம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பழங்கால பண்பாட்டின் படி அமாவாசையும் பௌர்ணமியும் கொண்டாட்ட தினங்கள். அன்று நிறைய தீபங்களை ஏற்றுவது வழக்கம். எல்லா விழாக்களிலும் நிறைய விளக்குகள் பொருத்தப்படுகின்றன அல்லவா?  கிறிஸ்துமஸ் காலத்தில் பொருத்தப்படும் விளக்குகள் 'கிறிஸ்துமஸ் விளக்குகள் ' என்றே அழைக்கப்படுகின்றன.தீபாவளி யில் ஏற்றப்படும் தீபங்கள் ஒரு கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்துகிறது.இதுதான் ஆழ்ந்த பூஜை என்பது.நமது வாழ்கை ஒரு ஓளிவிளக்கை போன்றது. அதில் நம் ஒவ்வொருவரும் தன்னுள் அன்பு மற்றும் ஞான ஒளியை ஏற்றி கொள்ளுகிறோம் . ஒரு விளக்கில் ஐந்து திரி முகங்கள் உண்டு. அவை ஐம்புலன்களைகுறிப்பதாகும். அந்த ஐம்புலன்களில் விழிப்புணர்வும் ஒளியும் ஏறடவேண்டும் என்பதே பிரார்த்தனை நமது உடலும் திரி விளக்கை போன்றதே .அவைகளுக்கும் ஐம்புலன்கள் உண்டு.அவைகள் எல்லாம் ஒளிமயமாக திகழட்டும் .

கேள்வி: ஒருவர் வாழ்வில், எளிமையையும் அடக்கத்தையும் எவ்வாறு அடைவது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எளிமையை அடைய முயற்சிப்பது பிரச்சனை. சாதரணமாக , இயல்பாக இருங்கள். சேவையில் ஈடுபடுங்கள்." ஸுக்ஹ மேய்ன் சேவா, துக் மேய்ன் தயாக்" துக்கத்தில் இருக்கும் ஒருவரிடம் சேவை செய்யுமாறு கூறி பயனில்லை. அவர்தம் மனம் துக்கத்தில் ஆழ்ந்து, எதுவும் செய்ய இயலாத நிலையில் இருப்பார். அவர் போக்குப்படி விட்டுவிடுவது நல்லது. மகிழ்ச்சியில் இருப்பவர் சேவை செய்வது நல்லது.

கேள்வி: குருஜி! பலவிதமான பழக்கங்கள். செய்முறை  பயிற்சிகள், பூஜைகள், பண்ணிசைப்புகள்,தியான முறைகள் , பிரார்த்தனைகள் இருக்கின்றன. இவற்றில் எது மிகவும் சிறந்தது என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ஒவ்வொன்றுக்கும் அதற்க்குரிய மகத்துவம் உள்ளதுஆனால் த்யானத்தில் தான் மிகுந்த ஆழ்ந்த அமைதி நிலையே அடைகிரிர்கள்.அதுதான் உங்களை மேல்நிலை நோக்கிசெலுத்துகிறது  மற்ற முயற்சிகளுக்கு அர்த்தத்தை உண்டாக்குவதே தியானம்தான்.அதுஉங்களை மேம்படுத்தி பூஜை, பண்ணிசை சேவை அனைத்தையும் அர்த்தமுள்ளதாக்குகிறது.

கேள்வி: குருஜி! கடவுள் எனக்கு இவ்வுலக வாழ்விர்க்குரிய அனைத்தையும் அளிக்கிறார். 
ஆனால் என்னியறிதல் என்பதை நான் அடைய தடை செய்கிறாரே? ஏன் இந்த காத்திருப்பு 
நிலை?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இல்லை இல்லை உங்களுக்கு மறுக்கப்படவில்லை. கடவுள் அனுபூதியை 
ஒருபோதும் மறுப்பதில்லை.உங்கள் பயிற்சி , சேவை இவற்றைத் தொடருங்கள். வாழும்கலை முது நிலை பயிற்சியில் , மௌன நிலையில் '' நான் '' தியானத்தில் எல்லாமே ஒரு கனவு போல் உணர்வீர்கள். எல்லாமே மாறுகிறது ஆனால் என்னில் ஏதோ ஒன்று மாறுவதில்லை ! அதுதான். அநுபூதி என்பது ஆத்மா எங்கிருந்து உங்களை வந்தடையும் என்று கற்பனை செய்து கொள்ளாதீர்கள். ஆத்மா என்பதை தனியாக அறிந்துகொள்ளவோ தெரிந்துகொள்ளவோ இயலாது .அது தெரிநிலை.

கேள்வி: நாம் ஏன் ஒரு வாழ்கைத்துணையை தேர்ந்தெடுக்க வேண்டும்? அனைவரையும் நேசிக்கவோ, அல்லது ஒருவரையும் நேசிக்காமலோ இருக்ககூடாதா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்கள் குழப்பம் என்ன என்று கூறுங்கள்.உங்களுக்கு துணைவர் இருக்கிறாரா இல்லையா? நீங்கள் யாரையாவது பார்க்கிறீர்களா? உங்கள் காதலி உங்களை திருமணம் செய்துகொள்ளும்படி கூறுகிறாரா? எனக்கு தெரியும்.! நீங்கள் மறைமுகமாக என்னை கேள்விகள் 
கேட்டு அதை பயன்படுத்திக்கொள்ள கூடாது! ( சிரிப்பு)

கேள்வி: குருதேவ் ! எனக்கு வலைத்தளம் மற்றும் facebook  இவற்றால் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளதுஎன் நண்பர்கள் வரிசையில் பெண் நண்பர்களைக் கண்டு என் மனைவி கோபப்படுகிறாள். அவளுக்கு நண்பர் வரிசையில் ஆண் நண்பர்கள் உள்ளனர்.அதில் அவளுக்கு தயக்கம் எதுவும் இல்லை. இதை எப்படி சமாளிப்பது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களுக்கு தெரியும் இம்மாதிரியான சூழ்நிலையை கையாளுவதில் எனக்கு அனுபவம் கிடையாது. உங்கள் நண்பர்கள் யாரையேனும்  கேளுங்கள்,அவர்கள் உங்களுக்கு கருத்து கூறலாம். அல்லது உங்கள் மனைவியையே கேளுங்களேன்.ஒரு பழமொழி தெரியுமா?"திருடனிடமே சாவியை கொடுத்து காவல் வையுங்கள்"  எங்கு பிரச்சினையோ அங்கேயே தீர்வு காணுங்கள்.உங்கள் மனைவியையே இதற்கு தீர்வு காணச்சொல்லுங்கள். பார்க்கலாம்!

கேள்வி: நீங்கள் கூட்டு தியானம் செய்யும் பொழுது எல்லோரையும் ஓர் ஆசையை மனதில் வைத்து தியானம்  செய்ய சொல்கிறீர்கள் . அது நிஜம் ஆகும் என்றும்சொல்கிறீர்கள். இது 
தொலை நோக்கு பெட்டிகள் மூலம் பார்த்து  தியானம்  செய்பவர்களுக்கும் பொருந்துமா?

குருஜி: ஆம் அது நிஜம் ஆக வாய்ப்பு இருக்கிறது.நிச்சயம்  சொல்லமுடியாது..ஆனால் முயற்சி
செய்து பார்க்கவும்.

கேள்வி:ஆவி வழிகாட்டிகள் யார்? அவர்கள் இருக்கிறார்களா? சிலசமயம் என்னைச்சுற்றி ஏதோஒன்று இருப்பதை உணர்கிறேன். நாம் என்ன செய்யவேண்டும்? அது வழக்கமானது தானா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இல்லை அதைப்பற்றி கவலை படாதீர்கள்.அந்தப்பகுதிக்குள்  செல்லவேண்டாம்நீங்கள் இப்பொழுது இருப்பது அதைவிட மேலான இடம். ஆவி உலகத்திற்குச்சென்றால் அது கீழானது. நாம் இங்கே செய்யும் தியானம், வேதாந்தம் அறிவு அவைகளைவிட உயர்ந்தது. எதோ ஒன்று இருப்பதை உணர்ந்தால், கைகூப்பி வாழ்த்து ச்சொல்லுங்கள்  மக்கள் " அந்த வழிகாட்டி வந்து பேசுகிறார், இந்த வழிகாட்டி சொல்கிறார்" என்ராலும் அது வேறு உலகம், நாம் அங்கே போகத்தேவை இல்லை. அது நிறைய சிக்கல்களைக்  கொடுக்கும், அதை யோகமாயை  என்கிறோம்

கேள்வி: ஹத யோகா என்றால் என்ன?வழக்கமான யோகாவில் இருந்து எப்படி மாறுபட்டது . இந்த யோகாவின் தனித்துவம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இல்லை. ஹத யோகாவில் பலத்தை அல்லது முயற்சி  செய்து, நிறைய கஷ்டமான ஆசனங்களையும், கஷ்டமான நிலைகளிலும் உடலை நிறுத்துவார்கள். எப்பொழுதும் ஆசனங்களைச் செய்யும் பொது அதில் சிறிது ஹத யோகமும் வரும். அதற்குள் ஆழமாக செல்லவேண்டாம், அவ்வாறு செய்யவேண்டுமென்றால் சிரிய பிராயத்திலே ஆரம்பித்திருக்க வேண்டும். அதை முழுதுமாக கற்றுக்கொள்ள பல ஆண்டுகள் ஆகும்.

சென்றுகொண்டிருக்கும் வண்டியை ஹத யோகத்தினால் நிறுத்தலாம். ப்ரநாயாமத்தினால் ஒரு உலோக தடியை இரண்டாக உடைக்கலாம்  நிறையபேர் இதை செய்திருக்கிறார்கள். அவர்கள் இறும்பு தடியை கைகளினால் உடைத்திருக்கிறார்கள்.சிறிது ஹத யோகம் செய்தால் உடல் வலிமையாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். அதனால் அதற்கு நல்லது.

கேள்வி: மகாரசா என்றால் என்ன? இன்றும் ஸ்ரீ ஹரி(கிருஷ்ணர்) இதை செய்கிறாரா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: மகாரசா என்றால் சத்சங்கம் தான்.எங்கு ரசம் உள்ளதோ, எங்கு சந்தோஷமும்  அன்பும்  உணரப்படுகிறதோ  அங்கு கடவுள் மட்டும் தெரிவார் அது தான் மகாரசா.

எங்கு கடவுளைத்தவிர வேறு எதுவும் இல்லை என்ற உணர்வு தோன்றி, வேறு எல்லாவற்றையும் மறந்துவிட்டால், மகாரசா அல்லதுத்யானம் நிகழ்ந்து விட்டது   என்று தெரியும். அந்த சமயத்தில் மனதில்" இது, அந்த" என்ற ஒரு கவலையும் இல்லை.இந்த உலக விஷயங்களை பற்றி  முழுதுமாக மறந்துவிட்டால் அது தான் மகாரசா.

நீங்கள் சிறிது நேரத்திற்கு கூட அந்த அனுபவத்தை அடைந்தீர்களானால் , அது போதும்.வாழ்க்கை அழகாகவும் மென்மையாகவும்  போக ஆரம்பிக்கும்.

கேள்வி: குருஜி, குங்குமத்தின்  சிறப்பு என்ன? ஏன் அது கல்யாணத்தின் அடையாளமாக உள்ளது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.சிலர் கல்யாணம் ஆன பின்பும் குங்குமம் இட்டுக்கொள்வதில்லை ஏன்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம்! எங்கு குங்குமம் இட்டுகொள்கிரோமோ அங்கு (நெற்றியின் நடுவில்) பிட்உட்டரி  நாளங்கள் இருக்கின்றன. நம் உடம்பில் ஏழு சக்கரங்கள் அல்லது ஏழு சக்தி மையங்கள் உள்ளனஅதனால், எங்கு பிடுடரி நாளங்கள் இருக்கிறதோ அங்கு மஞ்சள் கலந்த குங்குமத்தை சந்தனத்தின் மேல் இட்டுகொண்டல், அதன் அதிர்வுகள் உடம்பு முழுதும் உந்தப்பட்டு  உடலும், உள்ளமும் அமைதியாகவும், நடுநிலையாகவும் இருக்கும். முக்கியமாக, மிகவும் உணர்ச்சிவசப்படும் பெண்கள் இவ்வாறு நெற்றியில் குங்குமம் இட்டுகொண்டால்  அவர்கள் சாந்தமாக இருப்பார்கள்.

இரண்டாவதாக அது அலங்காரம் செய்துகொள்வதில் ஒரு அங்கம், அது அழகாக இருக்கும்.

உலகத்தின் எந்த பழமையான நாகரீகத்தை எடுத்துக்கொண்டாலும், ஆஸ்திரேலியா, அல்லது கனடா ஆப்பிரிக்கா ஆதிவாசி களைப்பார்த்தால்,அவர்கள் அதாவது நெற்றியில் வைத்துக்கொண்டிருப்பார்கள், ஏதாவது ஒரு வகை போட்டு நெற்றியில் வைத்துக்கொள்ளும் பழக்கம் உண்டு. ஆனால் இந்த வழக்கம் இந்திய நாகரீகத்தில் பழங்காலதிலிருந்தே இருந்து வந்தது. யாராவது வந்தாலுமே நாம் அவர்கள் நெற்றியில் அவர் படித்த நாகரீகமுள்ளவர்  அவருடைய மனது சாந்தமாகவும் மதுரமாகவும் உள்ளது என்றுகாட்ட திலகம் இடுகிறோம்.

மஞ்சளின் அர்த்தம் என்னவென்றால் அது இல்லாமல் நமக்கு எதுவும் முன்னேற முடியாது. 
எந்த நல்ல சுப வேலைகளுக்கும் மஞ்சள் உபயோகிக்கவேண்டும்.

அதைப்போல் வேறு எந்த  கிருமிநாசினி இல்லை என்று சொல்லப்பட்டிருக்கு . நிறைய  வியாதிகள் வருவதை அது தடுத்து நிறுத்துகிறது.

இன்னொரு விஷயம் ஒரு விஞ்ஞானி கூறினார்:நம் நெற்றியில் மூன்று விதமான நுண் கிருமிகள் உள்ளன.ஒன்று புருவத்தரிகிலும் ஒன்று நடு நெற்றியிலும் மற்றொன்று மேல்  நெற்றியிலும் உள்ளன.

இம்முன்று வகையும் அதனதன் பகுதியை விட்டு மற்றவரின் பகுதிக்கு செல்லாது.

ஆண்கள்  விபூதியையும் பெண்கள் மஞ்சள் குங்குமத்தையும் சந்தனத்தின் மேல் இட்டு கொள்கிரார்கள்அதனால் பிட்டுடரி சுரப்பி காப்பார்றப்படுகிறதுl என்ற நம்பிக்கை.ஆக்னா சக்கரத்தின் மேல் வைக்கப்படுவதால் அதனுடைய பயன் உண்டு.எதானாலும் சரி,நாகரீகத்தின் வெளிப்பாடு என்று இட்டுக்கொள்ளுங்கள்    .

ஒருமுறை ராஜச்தானுக்குச்சென்றிருக்கும்போது பொட்டு செய்யும் பெண்களைப் பார்த்தேன்.
அது தான் அவர்களின் வாழ்க்கை ஆதாரம்.அவர்கள் கடந்த ஆறு வருடமாக அவர்களுடைய 
வருமானம்

நாலில்  ஒரு பங்காக குறைந்து விட்டது என்றார்கள்.ஏனெனில் முன்பெல்லாம் நிறையப்பேர் 
இந்தப்பொட்டை வைத்துக்கொண்டிருந்தார்கள் இப்பொழுது அது குறைந்துவிட்டது

நான் சொன்னேன்:நான் எல்லோரிடமும் பிந்தி வைத்துக்கொள்ளுவதைப்பற்றி கூறுகிறேன் அதனால் அவர்களுடைய வருமானம் தொடரும் என்று.அதனால் என்னிடம் வருபவர்களிடம் பிந்திவைத்துக்கொள்ளுமாறு கூறி அந்தப்பெண்களின் வருமானம் குறையாமல் இருக்கக்கேட்டுக்கொள்கிறேன்

கேள்வி: குருஜி, நீங்கள் தீவிரவாதிகளையும், நக்சலேதார்களையும் சேர்த்துக்கொள்ளுகிறீர்கள் ,ஆனால் என்பக்கம் பார்ப்பதுகூடக்கிடையாது. சிலநேரங்களில், உங்கள்  மேல்உள்ள  அன்பால் அவர்களில் ஒருவர்போல் ஆகத் தோன்றுகிறது

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவர். நான் உங்களை எவ்வாறு பார்க்கிறேன். தொலைவில் இருப்பவர்கள் தான் நேரடிபார்வைக்கு தெரிவார்கள். எனக்கு மிகவும் அருகாமையில் உள்ளவரை நான் எப்படி பார்க்க முடியும்?

நான் உங்கள் இதயத்தில் இருக்கிறேன், நீங்கள் என் இதயத்தில் இருக்கிறீர்கள். அப்படி இருக்க 
அணைத்துக்கொள்ளுவதற்கு  என்ன தேவை?