இறையை அனுபவிக்க நீங்கள் மனதை விலக்கவேண்டும்.

18 டிசம்பர், 2011

நீங்கள் உலகத்தை (உலகத்தில் மனத்தை அலைய விட்டால்) பார்த்தால், உங்களால் இறைவனைப் பார்க்க முடியாது. நீங்கள் இறைவனை அனுபவிக்க வேண்டுமானால், நீங்கள் உங்கள் மனதை விலக்க வேண்டும்.உலகம் என்றால் என்ன? வரைமுறைக்கு உட்பட்ட  அடையாளங்கள், வாழ்வைப்பற்றி குறைந்த புரிதல், ஒருவரின் வெளிப்புற நடவடிக்கையை மட்டும் வைத்து மக்களைப் பற்றி எடைபோடுதல், இவையே உலகம் என்கிறோம்.

ஒருவருக்குள் இருக்கும் சுயத்தை(ஆத்மதத்துவத்தை) பார்க்கத் தவறுகிறோம். உதாரணமாக,  இங்கு பல நிறங்களில் விளக்குகள் உள்ளன. இந்த விளக்குகளை மட்டும் பார்த்தால், எல்லா விளக்குகளுக்கும் ஊடாக ஓடும் மின்சாரத்தை உங்களால் பார்க்க முடியுமா? இதைப்போல நீங்கள் ஒருவரின் புறச் செயல்பாடுகளை மட்டும் பார்த்தால், ஒவ்வொருவருக்குள்ளும் ஒரே விழிப்புநிலைதான் இருக்கிறது என்பதை உங்களால் உணர முடியாது. இறையை அனுபவிக்க வேண்டும் என்றால் உங்கள் மனதை, இந்த புற உலகிலிருந்து விலக்க வேண்டும். மனதை விலக்க வேண்டும் என்றால் எல்லாவற்றையும் விட்டு விட்டு காட்டுக்குச் சென்று வாழ வேண்டும் என்பதல்ல.சற்று நேரம் உங்கள் மனதை உள்நோக்கி திருப்புங்கள். உங்கள் மனதை அடைத்து நிற்கும் குழப்பங்களையும் முரண்பாடுகளையும் விட்டு வெளியே வரவேண்டும். இந்த முறைக்கு பெயர்தான் தியானம். சற்று நேரம் மட்டுமாவது, இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவை வெறும் கனவுதான் என்பதை உணர்ந்து பாருங்கள். எல்லாம் மாறிக்கொண்டேயிருக்கிறது என்பது உங்களுக்கு தெரிந்தால், மாறாத ஒன்றை உங்களால் ஒரு க்ஷனமேனும் பார்க்க இயலும். நல்ல தூக்கத்திற்கு பிறகு புத்துணர்ச்சி வருவது போல, சிறிது நேரம் தியானத்தில் கழிப்பது உங்கள் வாழ்க்கையில் சக்தியையும் ஒரு ஆர்வத்தையும் கொடுக்கும்.கவலைகள் எல்லாம் வெளியேறும் .,

கே: நான் ஒரு அனஸ்தீசியாலஜிஸ்ட் (அறுவை சிகிச்சையின் போது உணர்வு குறையச் செய்பவர்). நான் பல அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் வேலை செய்கிறேன். பணத்திற்காக இளம் பெண்களுக்கு கருப்பை நீக்கம் செய்கின்றனர் பலர். இது பெண் சிசு கொலையை விட மிக மோசமான குற்றம். இதைப்பற்றி நான் புகார் கூறியிருந்தாலும், நான் இதை கண்டு கொள்ளாமல் அமைதியாய் இருக்க வேண்டும் என்று என் நண்பர்கள் கூறுகிறார்கள். இதை நான் எதிர்ப்பதா அல்லது பாதுகாப்பாய் அமைதியாய் இருந்து விடலாமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அநியாயத்தை எதிர்த்து போராடத்தான் வேண்டும்.அறியாமை, மூட நம்பிக்கைஅறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் ஆகியவற்றை எதிர்த்து போராட வேண்டும். இரசாயன உரங்கள் போட்டால் தான் நல்ல விளைச்சல் கிடைக்கும் என பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.இயற்கை உரங்களைப் பற்றியும் இரசாயனமில்லாத விவசாயம் பற்றியும் நாம் இவர்களுக்கு கற்றுத் தர வேண்டும். இல்லாமையை எதிர்த்து போராட வேண்டும். எல்லோரும் வீட்டில் காய்கறி விளைவிக்க வேண்டும். சுத்தமும் சுகாதாரமும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

கே:என் வாழ்கையே அழிந்து போகும் அளவு என்னுள் கோபம் கொந்தளிக்கிறது. மூன்று நாட்களுக்கு முன் நான் சுதர்ஷனக்ரியா கற்றுக்கொண்டேன். க்ரியா முடிந்த உடன் ஒரு சில மணி நேரம் அமைதியாய் இருக்கிறேன். பின்னர் என்ன நடக்கிறது என்றே தெரிய வில்லை. என் கணவருடன் தேவையில்லாமல் சண்டையிடுகிறேன். தற்கொலை செய்து கொள்ள வேண்டும் போல இருக்கிறது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்கள் பயிற்சியை தொடருங்கள் எல்லாம் சரியாகிவிடும். தற்கொலை செய்துகொண்டால் அதன் பிறகு பிரச்சினை முடிந்துவிடாது. எப்போதெல்லாம் தற்கொலை எண்ணம் தோன்றுகிறதோ, அப்போது குருஜியின் அனுமதியில்லாமல் அந்த செயலை செய்யக்கூடாது என்பதை நினைத்துக்கொள்ளுங்கள்.


கே: ஸ்ரீ கிருஷ்ணர் எப்போதும் ஆனந்தம் நிரம்பியவராய் இருந்தார் என்று நீங்கள் சொல்லி யிருக்கிறீர்கள். எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாய் இருந்தார். ஆனால், இன்றைய சூழலில் என்னால் அப்படி வாழ முடியவில்லை.


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சில நேரமாவது அப்படி இருக்க முடிகிறதல்லவா? ஒரு பழமொழி இருக்கிறது, “கிருஷ்ணரை போல் யோசி ஆனால் இராமரை பின்பற்று. கிருஷ்ணர் செய்ததை எல்லாம் பின்பற்றினால் நீங்கள் பிரச்சினைக்கு உள்ளாவீர்கள்! கிருஷ்ணரின் கொள்கைகளை பின்பற்றுங்கள் மற்றும் இராமரின் குணத்தை பின்பற்றுங்கள். உங்களுக்கு ஏதேனும் மன அழுத்தம் இருந்தால் இங்கேயே விட்டு விடுங்கள். மகிழ்ச்சியும் திருப்தியும் நம் இயற்கை குணங்கள். வானத்தை சில நேரம் மேகம் மறைப்பது போல இந்த நம் இயற்கை குணத்தை கவலை மேகம் சில நேரம் மறைக்கிறது.


கே: எல்லா படைப்புகளும் ஒன்று என்றால் எல்லாரும் இணைந்த ஒரு கர்ம கணக்கு இருக்கிறதா என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம். பல வகை கர்மாக்கள் உள்ளன. ஒட்டு மொத்த கர்மா,காலத்தின் கர்மா, இடத்தின் கர்மா, குடும்பத்தின் கர்மா, ஒருவரின் தனிப்பட்ட கர்மா. ஒருவரின் தனிப்பட்ட கர்மா அதன் பிறகு குடும்ப கர்மாவும் இருக்கிறது   அதுதான் DNA என்று அழைக்கப்படும் நம் உடலை நிர்ணயிக்கும் பெற்றோர் மூலம் கிடைக்கும் பரம்பரை மூலக்கூறு.அதன் பிறகு நம் வட்டாரம், மாநிலம் பின்னர் நம் நாடு சார்ந்த கர்மா அனைத்தும் இருக்கிறது.


பின்னர் காலத்தின் கர்மா. இரண்டாம் உலகப்போரின் போது உலகம் முழுவதும் போர் நடந்தது. அப்பொழுது உலகில் வாழ்ந்த மக்கள் எல்லோரும் ஒரே வித கர்மவினையால் பாதிக்கபட்டு இருந்தனர். அது காலத்தின் கர்மா. ஒரு நேரத்தில் உலகமெங்கும் மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சி நிகழ்ந்தது. கர்மாவில் பல அடுக்குகள் உள்ளன.:எனவே தான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார், “கஹன கர்மனோ கதிஹ்”. கர்மாவின் ஆழத்தை அளவிட முடியாது. கர்மவினையின் நுட்பத்தை ஆராய முடியாது. உன் கடமையை செய்துவிட்டு போய்க்கொண்டே இரு. அன்பையும் பிரார்த்தனையையும் நெஞ்சத்தில் வைத்து முன்னே செல். இது இப்படித்தான் என்று தெரிந்து அதை தாண்டி போய்க் கொண்டே இரு. ஞானம் மட்டுமே கர்மாவை தாண்டி உங்களை கொண்டு செல்லும்.


ஒரு விமான விபத்தில் எல்லோரும் உயிரிழந்தனர். அவ்விதம் கர்மா உள்ள அனைவரும் அந்த விமானத்தில் ஒன்றாய் பயணித்தனர். ஒருவருக்கு தப்பிக்கும் கர்மா இருந்திருந்தால் அவர் அப்படியே விமானத்தில் இருந்து வெளியே வந்திருப்பார்.
ரிஷிகேசத்திலிருந்து வந்த ஒரு துறவி இந்தக்கதையை எனக்கு கூறினார். 50 பேருடன் இவர் ஒரு பேருந்தில் பயணம் செய்தார். அந்த பேருந்து விபத்துக்குள்ளாகி ஆற்றில் விழுந்தது. இந்த துறவியும் ஒரு சிறு குழந்தையும் மட்டுமே உயிர் பிழைத்தனர். இவர் கழுத்தை பற்றியிருந்த குழந்தையும் உயிர்தப்பியது. அவருக்கு ஆற்றில் விழும் கர்மா இருந்தது, ஆனால் ஏதோ ஒன்று அவரை காப்பாற்றியது. கர்மாவின் ஆழத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாது, அது மிக விசாலமானது.

கே: குருஜி, நம் அன்புக்குரியவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் எவ்வாறு ஆறுதல் கூறுவது? நாம் என்ன செய்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அவர்களை ஓம் நமச்சிவாய என்று ஜெபிக்கச் சொல்லுங்கள். இரண்டாவது அல்லது மூன்றாவது நிலை புற்று நோயானால் பிரச்சினை இல்லை. இப்போது பல தீர்வுகள் உள்ளன. சோர்சொப் என்ற பழம் கிமொதெரபி தரும் அதே பயனை பக்க விளைவுகள் இல்லாமல் தருகிறது. அதிலிருந்து நாம் மருந்து தாயாரிக்கின்றோம். யோகா, பிரணாயாமம் மற்றும் ஆயுர்வேதம் ஆகியவை மிகுந்த முன்னேற்றம் தருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலர் இங்கு வந்து குணமடைந்திருக்கிறார்கள். கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள்.

கே: குருஜி, ஜபம் பற்றியும் நாம சங்கீர்த்தனம் பற்றியும் பேசுங்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஒருவர் மற்றொருவர் மீது அன்பு கொண்டிருந்தால் அவர் பெயரை திரும்பத் திரும்ப உச்சரிப்பார்கள். இதுவே ஜபம். தன் அன்புகுரியவரின் பெயரை பாடலாய் பாடினால் அதுவே சங்கீர்த்தனம். ஒரு சமயம் இல்லாவிட்டால் ஒரு சமயம்,  ஒவ்வொருவரும் குளிக்கும்போதோ அல்லது ஏதோ வேலை செய்யும் போதோ பாடலை முணுமுணுப்பதுண்டு . இதயத்திலிருந்து எழும் இந்த பாடல்தான் சங்கீர்த்தனம்.
ஒருவருடைய பெயர் நெஞ்சத்திலிருந்து எழுந்தவாறு இருந்தால் அதுதான் ஜபம். நம் மனம் அதில் ஈடுபடுகிறதோ இல்லையோ ஜபம் செய்வது நல்லது; அதற்கென்று ஒரு குணம் உண்டு.

கே: குருஜி, பெற்றவர்களுடைய மதிப்பு முறை அவர்களுடைய வாரிசுகளை விட முற்றிலும் வேறாக சில சமயம் இருந்துவிடுகிறது. குழந்தைகள் பொருட் செல்வம் நிறைந்து இருந்தாலும், வேறான மதிப்பு முறைகளால் அவர்களின் தனிப்பட்ட வாழ்கையும் குடும்ப வாழ்கையும் பாழ் படுகிறது. இதனால் அவர்கள் பெற்றோர்களின் வாழ்வும் பாழாகிறது. இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: மக்களுக்கு ஞானமும் விழிப்புணர்வும் தரவேண்டும். ஆன்மீக அறிவு இல்லையென்றால் இப்படித்தான் நடக்கும். உலகத்தோடும் மற்றவர்களோடும் சிக்கி விடுகின்றனர்.அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல், தம்மையும் புரிந்து கொள்ளாமல், மற்றவரையும் தங்களையுமே சிக்கலில் ஆழ்த்தி விடுங்கின்றனர். எனவே மக்களை தர்மத்தின் பாதைக்கு அழைத்து வாருங்கள். குழந்தைகளுக்கு ஆன்மீக பாடம் சொல்லித்தருவது அதி முக்கியம். இந்த அறிவு தரப்படவில்லை என்றால், அவர்கள் வாழ்கையின் தினசரி அக்கப்போர்களில் மூழ்கி, வாழ்கை வறண்டு, அர்த்தமில்லாமல் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர்.
எனவே யோகா மற்றும் தியானம் ஆகியவற்றுக்கு மக்களை அழைத்து வந்து ஒரு அடிப்படை மாற்றத்தை உண்டாக்க வேண்டும். அவர்கள் நிச்சயம் மாறுவார்கள், ஆனால் ஆன்மீக ஞானம் மட்டுமே வழி.

கே: ஜெய் குருதேவ். ஆனந்தமாய் இருக்க மனநிலை மட்டுமே போதும் என்ற உண்மை தெரிந்த ஒருவர், தன் இருப்பிடத்திலேயே ஒரு சாதாரண குப்பை கூட்டும் தொழிலாளியாய் இருக்காமல் ஏன் உலகம் புகழும் விஞ்ஞானியாய் ஆக தேர்ந்தெடுக்கிறார்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அவர் விஞ்ஞானியாய் ஆகாமல் ஏன் குப்பை கூட்டுபவராக ஆகிறார் என்றும் கேட்கலாமே? இரண்டு வேறு வேறு விஷயங்கள், புகழோடு இருப்பவர் அந்த புகழுக்காக மிகுந்த தாபம் கொள்வதில்லை, மாறாக அவர் ஏதோ நல்ல விஷயம் செய்து புகழடைகிறார். உதாரணாமாக, நீங்கள் ஓவியம் வரைவதில் மிகுந்த நாட்டம் உள்ளவர், நீங்கள் ஒரு நல்ல ஓவியம் வரைந்தால் தானாக புகழடைவீர்கள். ஆனால் நீங்கள் புகழடைவதற்காக ஓவியம் வரைந்தால் நிச்சயம் உங்களுக்கு தோல்விதான். நல்ல படைப்போ அல்லது சமூகத்திற்கு பயனுள்ள கண்டுபிடிப்போ யாரேனும் செய்தால், நிச்சயம் அவர் புகழடைவார்.

கே: குருஜி, சைவ உணவுக்கு மாறுபவருக்கு பொதுவாக வைட்டமின் B12 குறைபாடு ஏற்படுகிறது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஆம், சைவ உணவுக்கு மாறுபவர் பால் தயிர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் B12 குறைபாடு ஏற்படுகிறது. சிறிதளவு பால் மற்றும் பால் பொருட்கள் சைவ உணவு சாப்பிடுபவர்கள் நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கே:குருஜி, நன்மை எது தீமை எது என்று கேட்க விரும்புகிறேன்? நான் வாழ்க்கையில் செய்து கொண்டிருப்பவற்றுள் எது நல்லது எது தீயது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:எது நன்மை எது தீமை என்று அறிய ஒரு எளிமையான விளக்கம், மற்றவர்கள் உங்களுக்கு எதை செய்யக்கூடாது என்று கருதுகிறீர்களோ அது தீது. மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்களோ அதுவும், நீங்கள் மற்றவர்களுக்கு எதை செய்கிறீர்களோ அதுவும் நன்று. குறுகிய காலத்திற்கு மகிழ்ச்சியும் நீண்ட காலத்திற்கு துன்பமும் தரக்கூடியது தீது. நீண்ட காலத்திற்கு மகிழ்ச்சியும் குறுகிய காலத்திற்கு துன்பமும் தரக்கூடிய எதுவும் நன்மையானது.