6th, மார்ச், 2012
நான் ஏழு வருடங்களுக்கு முன்பு இந்தோர் வந்து இருந்தேன்.இப்பொழுது
7 வருடங்களுக்கு பின்,மிக பெரிய வளர்ச்சியை காண்கிறேன்.இந்தோர்
அடையாளம் காண இயலவில்லை. இந்தோர், மிக
அதிக அளவில் வளர்ந்துள்ளது.ஆனால் இந்த
வளர்ச்சியுடன் ஏராளமான சுத்தமற்ற தன்மையும் வளர்ந்துள்ளது, இங்கும்
அங்குமாய் பிளாஸ்டிக் பொருட்களை எறிவது,மரங்களை வெட்டுவது இப்படி.
நாம் சுற்றுப்புறத்தின் மேல் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். நாம் எல்லோரும்
அதற்கு பொறுப்பு எடுத்து கொள்ள வேண்டும். முனிசிபல் கார்பரேஷன் எல்லாவற்றிற்கும் பொறுப்பு
ஏற்க முடியாது. நாம் எல்லோரும் பங்கேற்கவில்லை என்றால் அவர்களால் எப்படி முடியும்?
கேள்வி: ஊழலை ஒழிக்க ஆன்மீகத்தின் பங்கு என்ன?
கேள்வி: மன அழுத்தத்தில் இருந்து எப்படி விடுபடுவது?
நான் என்ன சொல்லவேண்டும் என நினைத்தேனோ, அதை எல்லாவற்றையும் ஷிவ்ராஜஜி அவர்கள், ஏற்கனேவே கூறிவிட்டார். இதயங்கள்
இணைந்தால்,அங்கே
சொல்வதற்கு, வேறு ஒன்றும்
இருப்பது இல்லை.
இருப்பினும் நான் எல்லோருக்கும் சொல்வேன் to stay 'indoor (உள்ளுக்குள்ளே
தங்குங்கள்) 'indoor ' (உள்ளுக்குள்ளே இருப்பது ) எனும் வார்த்தைக்கும் 'Indore' வார்த்தைக்கும் ஆங்கிலத்தில் மிக
குறைந்த வித்தியாசமே உள்ளது. Antarmukhi
sada sukhi 'அன்தர்
முகி சதா சுகி' (யார்
ஒருவர் உள்ளே சென்று விட்டாரோ அவருக்கு
எப்பொழுதுமே சந்தோஷம், மனது சில தருணத்திர்காகவது,
உள்சென்றால் நமக்கு தக்க மனோபலம் கிட்டும்.
நமது மதிப்பிற்குரிய, முதல் அமைச்சர் ஷிவராஜி இப்பொழுது,பெண் குழந்தையை காப்பாற்றும் இயக்கத்தை பற்றி பேசினார். நீங்கள் இதை நான்
இதற்கு முன் பல முறை பேசக் கேட்டு இருப்பிர்கள். நான் மீண்டும் இதை பற்றி சொல்லி
கொண்டு இருக்கிறேன். ஒரு பசுவை கொல்வது, என்பது மிக பெரிய பாவம்,ஒரு பண்டிதரை கொல்வது,நூறு பசுக்களை கொல்வதற்கு சமம் என நம்முடைய வேதங்கள் கூறுகின்றன. ஒரு
மகானை கொல்வது, நூறு பண்டிதரை
கொல்வதற்கு சமம் ஆகும். ஆயிரம் மகான்களை கொல்வது ஒரு பெண் குழந்தையை கொல்வதற்கு
சமம் ஆகும்.
ஒரு பெண் குழந்தையை கொல்வது என்பது 100000 பசுக்களை,அல்லது 1000 மகான்களை
கொல்வதற்கு சமம் ஆகும்.ஒரு பெண் சிசுவை கருப்பையில் கொல்வது சரி அல்ல.நீங்கள் எல்லோரும் படித்தவர்கள்.அதனால் நீங்கள்
எல்லோரும் ஒரு சபதம் எடுத்து கொள்ளுங்கள் - பெண் குழந்தையை கொல்வதில்லை என....
இங்கு வருவதற்கு முன்பாக நான் ஒரு பல்கலைகழகத்தில், உரை ஆற்றி கொண்டு இருந்தேன். அப்பொழுது
நான் இந்தோரில் ஒவ்வொரு நாளும் ஒரு தற்கொலை நடை பெறுகிறது என அறிந்தேன்,இந்த வாழ்க்கை மிக விலை மதிப்பில்லாதது, அதை இழந்து விடாதிர்கள்.எதற்காக
நீங்கள் அதை இழக்கிறீர்கள்.எதற்காக மக்கள்
தற்கொலை செய்து கொள்கிறார்கள்? மிக
குறைந்த மதிப்பெண் வந்ததற்காகவா அல்லது உங்கள் கடன் சுமை மிக அதிகமாக சென்றுவிட்டதா? ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ உங்கள் காதலை
மறுத்து விட்டார்களா? இதை
எல்லாம் விட்டு விடுங்கள்.உங்கள் இந்த வாழ்கையில் ஆர்வம் என்பதே இல்லை,அதனால் தற்கொலை செய்து கொள்கிரீகளா?
என்னிடம் வாருங்கள், உங்கள் கஷ்டங்கள் எல்லாம் என்னிடம்
கொடுத்து விடுங்கள்.
உங்கள் துன்பங்கள்,தொந்தரவுகள் எல்லாம் என்னிடம்
கொடுத்து விடுங்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குரு என்பவர் இருப்பார். நாம் அவர்களிடம்
சென்று நம் கஷ்டங்களையும், தொல்லை
களையும் அவர் காலடியில் சமர்ப்பித்து நாம் அதில் இருந்து விடுபடுவோம். யாருக்கேனும்
குரு இல்லை என்றால் அப்பொழுது அவர்கள் குடும்பத்திற்கான குல தெய்வம் இருக்கும்.
நீங்கள் உங்கள் குல தெய்வத்திடம் சென்று உங்கள் கவலைகளை சமர்ப்பித்து,உங்கள் பிரச்சினைகளில் இருந்து
விடுபடவேண்டும்.இப்பொழுது இதை எல்லாம் நாம் விட்டு விட்டோம். அதனால்தான் இந்த
தற்கொலை,சிசு கொலை என்று
ஆரம்பித்தது .
இதற்கு மூல காரணம் அறியாமை.நாம் அறியாமையை
துடைத்து எறிய வேண்டும். நாம் மக்களுக்கு படிப்பு
அறிவு வழங்க வேண்டும்.படிப்பறிவு
என்றால் வெறும் ஏட்டு கல்வி மட்டும் அல்ல.ஆன்மிக ஞானமும்
கூட.மனித பண்புகளை பற்றிய ஞானம்.மனித பண்புகள் என்றால் இரக்கம், அன்பு, belongingness(நாம் எல்லோரும்
ஒருவருடன் ஒருவர் தொடர்பு டைவர்கள் என்ற உணர்வு).எங்கே belongingness முற்று பெறுகிறதோ
அங்கே ஊழல் ஆரம்பிக்கிறது, belongingness இருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது .
ஆன்மிகம் என்றால் என்ன? நம் அனைவருக்கும் உள்ள தொடர்பு, விரிவு அடைதல்
தான் ஆன்மிகம்.
எல்லோரும் உங்களக்கு சொந்தமானவர்கள்
தான் என உணர ஆரம்பிக்கிறீர்கள் .
நாம் அறியாமைக்கு எதிராக எழுந்து நின்று,அநீதியை எதிர்த்து போராட வேண்டும்.
அநீதியை சகித்து கொண்டு இருக்காதிர்கள்.எதிராக எழுந்து நில்லுங்கள்.நீங்கள்
எங்கேனும் ஊழல் இருப்பதாக அறிந்தால்,எட்டு அல்லது பத்து பேர் சேர்ந்து அங்கே சென்று அமர்ந்து
நாங்கள் அநீதியை சகிக்க மாட்டோம் என கூறுங்கள்.நேரிடையாக முதல் அமைச்சரை தொடர்பு
கொள்ளுங்கள்,நம்
குடும்பத்தில் பிரச்சினை என்றால் நாம் குடும்ப தலைவரிடம் சென்று முறை இடுவது போல.அவர்
உங்களுக்கு நீதி கிடைக்க ஏதுவாக இருப்பார்.ஆனால் நாம் நீதியை கடைபிடிப்பவராக இருக்க
வேண்டும்.
அறியாமை,அநீதி,பஞ்சம்,அசுத்தத்திற்கு எதிராக போராட
வேண்டும். நாம் எல்லோரும் இரண்டு மணி நேரம், ஒன்று அல்லது இரண்டு
வாரத்திற்கு ஒருமுறை
செலவழித்தால் , நாம் இந்த நகரத்தை தூய்மையாக வைக்கலாம். ஒவ்வொருவரும் ஒரு துடைப்பத்தை
எடுத்துக் கொண்டு, வெளியே வந்து
தூய்மையாக்க வேண்டும்.உங்கள் நகரை(இந்தோரே) தூய்மையாக்க தொடங்குங்கள். நாம் எல்லோரும்
பங்களித்தால் மிக பெரிய அளவில் சேவை
செய்யலாம்.
நம் நாட்டில், ஆன்மீகம்
உயர்ந்தோங்கி இருந்த போது, நம்
நாடு மிகவும் சுபிட்சமாக இருந்தது. எந்த வகையான பஞ்சமும் இருந்தது இல்லை.நாராயணன் இருக்கும் இடத்தில் லக்ஷ்மியும்
சேர்ந்து வருவாள்.நம்
நாடு ஆன்மீகத்தில் உச்சத்தில்
இருந்த போது உலகத்தின் மொத்த
உற்பத்தி திறனில் 33% நம்முடையதாக
இருந்தது. நாம் ஆன்மீகத்தில் தாழ்ந்த போது நம்முடைய பொருளாதார நிலையும் சரிந்தது.
ஆகையால் நாம் விழிப்படைய வேண்டும். மத்திய பிரதேசம் நம் நாட்டின்
இருதயமாக உள்ளது.மத்திய பிரதேசத்தில் வேலை இல்லா திண்டாட்டம் இருக்க கூடாது .எல்லா
இளைஞர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும்.
நம் நாட்டில் வேலைக்கு பஞ்சம் இல்லை. சரியாக
சொல்ல வேண்டும் என்றால்,நம்மிடம்
வேலை வாய்ப்புகள் உள்ளன, வேலை
செய்வதற்கு ஆட்கள்தான் இல்லை என்று.நான் இங்கு வந்து கொண்டு இருக்கும் போது ஒரு நன்மகன் கூறினார் - நிறைய
வேலைகள் செய்வதற்கான
வாய்ப்புகள் உள்ளன.ஆனால் அதற்கான ஆட்கள் இல்லை. நாட்டில் உள்ள எல்லோரும் இதைதான்
சொல்கிறார்கள்.வேலைகள் உருவாக்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் ஆட்கள்
தான் வந்துசேர வேண்டும்.
இளைஞர்கள் தொழில் அதிபர்களாக மாறலாம் ..
இதற்கு மூல காரணம் என்னவெனில் நாம் கடவுள் நம்முள்
இருக்கிறார் என தெரிந்து கொண்டு இருந்தும் அவரை அனுபவரீதியாக உணரவில்லை. நாம் அதை
சொந்த அனுபவமாக ஆக்க வேண்டும்.ஒரு முறை அதை நீங்கள் அனுபவித்துவிட்டீர்கள் என்றால், பின் உங்களால் உணர முடியும். எதை
நீங்கள் தேடிக்கொண்டு இருக்கிறீர்களோ அது உங்கள் உள்ளேயே இருக்கிறது.
நான்
சொல்கிறேன் ஒரு முறை இதை அனுபவித்து விட்டீர்கள் என்றால்,எவராலும் உங்கள் புன்முறுவலை களவாட முடியாது.உங்கள் எல்லா ஆசைகளும்
எந்த ஒரு முயற்சியும் இல்லாமல் நிறைவேறும்.ஆகவே ஒரு காலை எப்பொழுதும் ஆன்மீகத்தில்
ஊன்றி இருங்கள். அதற்கு நாம்
சிறிது நேரம் எடுத்து, நம்
உள்ளே செல்லவேண்டும். சில நிமிடங்கள் சில பயிற்சிகள் செய்து, உங்கள் மனதை அமைதியாக வைத்தால்
உங்களுடைய ஆசைகள்
நிறைவேறும். அதற்கும் மேலாக உங்களால் மற்றவர்களின் ஆசைகளை கூட நிறைவேற்ற முடியும்.
ஏன் என்றால் The Master of the world (உலகத்தின்
மூல கர்த்தா) உங்கள் உள்ளேயே அமர்ந்து கொண்டு இருக்கிறார். யார்
ஒருவர்க்கு எல்லாமே சொந்தமோ- இந்த உலகத்தின் கடவுள் நம் உள்ளேயே இருக்கும் பொழுது
நமக்கு என்ன குறை இருக்க போகிறது ? இது
வெறும் தத்துவம் இல்லை,இது
தான் உண்மை. இந்த உண்மை ஒவ்வொருவரின் உள்ளேயும்
எழலாம்.கடவுள் என்பது எல்லாவற்றையும் துறந்து காடுகளுக்கும்,இமய மலைகளுக்கும் செல்லும்
சன்யாசிகளுக்கு மட்டும் சொந்தம் இல்லை,அவர்களால் மட்டுமே கடவுளை உணர முடியும் என்பது இல்லை, அப்படி இல்லை.கடவுள் இங்கேயே உங்கள்
ஒவ்வொருவரிலும் உள்ளார்.
இந்த நம்பிக்கையை தான் நான் தியானம் என கூறுவேன்.
நான் இங்கு வந்ததே இதை பற்றி கூறத்தான்.
இதற்காகத்தான், இதை
எல்லோருக்கும் சொல்வதற்காக தான், நான் ஒவ்வொரு இடமாக சென்று கொண்டு
இருக்கிறேன் - கடவுள் உங்களக்கு உள்ளேயே இருக்கிறார் என்பதை நினைவு
படுத்துவதற்காக.சிறிது நேரம் உங்களுக்குள் சென்றீர்கள் என்றால் நீங்கள் கண்டு
கொள்வீர்கள் - முடியாதது என்று ஒன்றும் இல்லை. உங்களால் முடியாதது என்று என்ன
இருக்கிறது? இதை
தான் நான் ஆன்மிகம் எனகிறேன்.
அதில் ஒரு நுண்ணிய பார்வை அல்லது அதை பற்றிய ஒரு சிறிய யோசனை போதும், உங்களுக்கு அழியா புன்னகையை கொடுக்கும்.துக்கமும்,கஷ்டங்களும் மறைந்துவிடும்.
இப்பொழுதெல்லாம் நினைத்து பார்கிறேன். நாட்டில்
உள்ள எல்லா இளைஞர்கள் சிறது நேரம் நாட்டிற்காக
ஒதுக்கினால் போதும், நம் நாட்டை வலிமை உள்ளதாக மாற்ற முடியும்.உங்கள் நாட்டிற்காக ஆறு மாதம்
கொடுங்கள். நாட்டில் உள்ள இளைஞர்கள் ஆறு மாதம்
நாட்டிற்காக ஓதிக்கினால், நாம் மேலே சொன்ன நான்கையும் ஒழித்து விடலாம். அறியாமை, நீதி, பஞ்சம் தூய்மையின்மை)
நாம் கிராமம் கிராமமாக சென்று அங்கு இருக்கும், சாராய கடைகளை மூடிவிடலாம். மக்கள் ஏழ்மையில் இருப்பதற்கு காரணமே,அவர்கள் தங்கள் வருவாயின் 60% சாராயத்திற்கு செலவிடுகிறார்கள்.
நாம் மக்களுக்கு ரசாயனம் இல்லாத சாகுபடி பற்றி
அறிவுறுத்த வேண்டும்.மத்திய பிரதேசத்தில் உள்ள பலரும் இதற்கு குரல் கொடுத்து
உள்ளார்கள் என்பது புரிகிறது. இன்னும் பல பேர் இதற்கு ஆதரவு தந்து குரல் கொடுக்க
வேண்டும்.இப்பொழுதெல்லாம் நம் நாட்டில், புற்று நோய் அதிகரித்து வருகிறது. இதற்க்கான காரணம் என்னவென்றால் நாம்
பூச்சி கொல்லிகள் உபயோகித்து விளைவிக்கும் உணவுகளை உண்கிறோம். முன்பெல்லாம்
அரிசியிலும், கோதுமையிலும்
பூச்சிகள் இருக்கும்.
இப்பொழுது எல்லாம் அவற்றில் நாம் பூச்சிகள் காண முடிவது இல்லை. புழுக்கள் கூட சாப்பிடாத உணவை
நாம் சாப்பிடுகிறோம். அப்பொழுது என்ன ஆகும் கூறுங்கள்? உடல் எல்லாம் வலிக்கும். உங்களில்
எத்தனை பேருக்கு உடலில்
வலி உள்ளது என்பதை கூறுங்கள்? 60 - 70 % கைகள்
உயர்த்துவதாக தெரிகிறது.
இங்கு எத்தனை பேருக்கு உடலில்
வலி இல்லை கைகளை உயர்த்துங்கள். உங்களுக்கு வலி இல்லை என்றால் நீங்கள் பிராணாயமம், யோகா, தியானம் செய்பவர்களாக இருக்க வேண்டும்
அல்லது நீங்கள் கைகள் உயர்த்தாதற்கு காரணம் தயக்கம்.
ஒவ்வொரு நாளும் சில நிமிஷங்களேனும் சத்சங்கத்தில்
ஈடுபடுங்கள்.சத்சங்கம் என்பது கலப்பில்லாத
ஆன்மிகம்.சில நேரம் விருந்தினர் வரும்போது '' வாருங்கள்! வாருங்கள் ! என்று வாய் கூறும்போது, மனம் இவர்கள் ஏன் வந்தார்கள் என்று நினைக்கிறது. இது செயற்கையான வரவேற்பு.
இப்படித்தான் நம் வாழ்க்கை செயற்கையாக அமைகிறது. அதனால்தான் மன தொய்வு ஏற்படுகிறது. நோய்கள் தோன்றுகின்றன,இயற்கையாகவும், எளிமையாகவும், துணிவுடனும், ஆன்மீகமாகவும் இருந்தால் நம் வாழ்கை
மாற்றத்தினை அடையும்.
உலகமே தற்போது மாறுதலை எதிர்நோக்கி இருக்கிறது.தற்போது, மனத்தொய்வு என்பது உலகெங்கும் பெரிய நோயாக
இருக்கிறது.நாங்கள் குழந்தைகளாக இருந்த காலத்தில் இது
போன்ற இரு மனக் குழப்பம், மனத்தொய்வு ஆகிய மனோவியாதிகளை பற்றி கேள்விபட்டது
கூடக் கிடையாது. இன்று உலகில் எங்கு சென்றாலும் ''தனக்கு மனத் தொய்வு'' என்று மக்கள் கூறுகிறார்கள். எதனால் மனத்தொய்வு? ஒருவர் மிகுந்த சுய நலமாக இருந்தால் தான்
மனத் தொய்வு ஏற்படுகிறது. வேறொன்றுமில்லை.பிறரை
நம்முடையவராக எண்ணும்போது, மன மகிழ்ச்சி
உண்டாகிறது.அக்கறையின்மை நம்மை நெருங்காது. இதுதான் ஆன்மிகம்.
இது தர்மசாஸ்திரங்களில் ‘ரசொமாஷா ‘என்று அழைக்கப்படுகிறது. பரமாத்மா ‘ரசரூபி’ ஆவர் பரமாத்மா ஆனந்த ஸ்வருபம்.பரமாத்மாவை
நெருங்க வாழ்க்கை மிகுந்த சுவாரஸ்ய மானதாக ஆகிவிடும்.மிகுந்த வேடிக்கையையும்,மகிழ்ச்சியையும் அனுபவிப்பீர்கள்.
எல்லோரும் கவனிக்கிறீர்களா? நான்
அதிகம் பேசுவதில்லை. ஏனென்றால் கேட்பதை ஜீரணம் செய்யாவிடில் அஜீரணம் உண்டாகும்!
குறைவாகவே கேட்டு நன்றாக சிந்தியுங்கள். மனதில் நிறுத்தி அதனால் பயனடையுங்கள்.ஆகவே, எது முக்கியமானது? உங்களுக்காகவே சிறிது சமயத்தை ஒதுக்குங்கள் ஒரு ஐந்து, பத்து, பதினைந்து நிமிடங்கள் அமர்ந்து நன்றாக
யோசியுங்கள். இந்த வாழ்வு ஒரு கனவு. இந்த நாடகம் ஒரு நாள் முடிவடையும். இந்த
உலகிலிருந்து ஒரு நாள் நாம் மூட்டை கட்டிக்கொண்டு பிரிந்து செல்லவேண்டும்.எதையும்
எடுத்து செல்ல தேவையில்லை.எடுத்து செல்லவும் முடியாது.இதை உணர்ந்து, காலையும் மாலையும்
ஐந்து பத்து நிமிடங்கள் அமைதியாக சலனமில்லாமல் அமர்ந்திருந்தால் நமது உடல்
ஆரோக்யமாகும்.நமது நடத்தை இனிமையாகும். மனம் மகிழும்.அறிவு கூர்மையாகும். என்ன
விரும்புகிறீர்களோ அவை உங்களைத் தானாகவே வந்தடையும். இது தான் சிறப்பான ஞானம். ஒரு
முறை இதை உணர்ந்து விட்டீர்கள் என்றால் பின்னர் விட மாட்டீர்கள். ஒரு ஆனந்தவெறி. ஞானம்
என்பது அது தான். தியானம் என்பது அது தான். சுற்று சூழலும் மற்ற எல்லாமுமே
உயிர்த்தெழும்.
நீங்கள் சமுதாய சேவைக்கு என்று பிரதிக்ஞை எடுத்துக்கொள்ள
வேண்டும். நமது நாட்டில் தேர்தல் முறைகள் நெறியற்றவையாக இருக்கின்றன.அதை நாம் அனைவரும்
சேர்ந்து சரியாக்க வேண்டும். தேர்தலுக்காக ஒரு சட்டமன்ற வேட்பாளர் ஐந்து அல்லது
ஆறு கோடி ரூபாய் செலவழித்தால் அதை திருப்பி எடுக்க ஊழலில் ஈடுபடுகிறார். இப்படித்தான்
ஊழல் உண்டாகிறது. இதை நாம் எதிர்த்து
தடுக்க வேண்டும். ஆம் அல்லது
இல்லை? எத்தனை பேர் இதை ஆமோதிக்கிறீர்கள்? கை தூக்குங்கள்?
தேர்தல் சமயத்தில் தமிழ் நாட்டில் ஐந்து 500 ரூபாய்
நோட்டுக்கள் பச்சை காந்தி என்றும் 5000 ரூபாய்
நோட்டுக்கள் சிவப்பு காந்தி என்றும் சொல்லப்பட்டு ஒவ்வொரு வீட்டிற்கும் விநியோகம்
செய்யப்பட்டன. கிராமத்தில்
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட தொகை இந்த வீட்டிற்கு 2500 ரூபாய்,அந்த வீட்டிற்கு 5000 ரூபாய் என்று வழங்கப்பட்டது. நாங்கள் தொலைக்காட்சி மற்றும் மேடைப்பேச்சு வழியாக மக்களிடம்'அந்த பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் ஆனால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்' என்று சொன்னோம்.அவர்கள் தாங்கள்
உழைத்துச் சேர்த்த பணத்தைத் தரவில்லை.இது உங்களுடைய பணம்,எனவே வாங்கி கொள்ளுங்கள் என்று
சொன்னோம்.
5000 ரூபாய், என்பது ஏழை
மக்களுக்கு பெரும் தொகை.அந்தப் பணத்தை வாங்கி கொண்டு பணம் தருபவருக்கே
வாக்களிப்பதாக தங்கள் குழந்தைகளின் தலை மீது கை வைத்து சத்தியம் செய்து தருமாறு
கட்டாயப்படுத்தப் பட்டனர். அவர்களிடம் 'கவலைப்படாமல் சத்தியம் செய்து
கொடுங்கள்.சத்தியத்தினை மீறுவதனால் உண்டாகும் பாவத்தை நான் பார்த்து கொள்ளுகிறேன்.உங்கள்
பாவங்களை எல்லாம் நான் ஏற்றுக்கொண்டு உங்களை அவை பாதிக்காமல்
பார்த்துக்கொள்ளுகிறேன்.நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்.' என்று சொன்னேன்.இதைக் கேட்டு உலகமே
திகைத்தது. பெருமளவில் பணம் செலவழித்த வர்களின் திட்டங்கள் வேரோடு சாய்க்கப்பட்டன.
உங்கள் அனைவருக்கும் மீண்டும் சொல்கிறேன். நீங்கள் கிராமங்களுக்குச் சென்று
அவர்களிடம் நம் நாட்டை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கூறுங்கள்.பணபலம் அல்லது
உடல் பலத்தை பயன்படுத்தி அதிகாரத்திற்கு வர நினைப்பவர்களை எதிர்த்து நிற்க
வேண்டியதன் அவசியத்தைச் சொல்லுங்கள்.
நான் இந்திய இளைஞர்களுக்குச் சொல்லுகிறேன், இது உங்கள் சமுதாயம்; இது உங்கள் நாடு. நீங்கள்
வெறுமனே உட்கார்ந்து அது சீரழிவதைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். விழித்தெழுந்து முன்னேறிச்
செல்லுங்கள்.அரசியல் குப்பை என்று பலர் நினைக்கிறார்கள். என்னிடமும் "குருஜி நீங்கள் ஏன்
ஊழல் பற்றி பேசுகிறீர்கள்? விட்டு
விடுங்கள் . அதை பற்றி
பேசாதீர்கள்; ஆன்மிகம் பற்றி
மட்டும் பேசுங்கள்" என்று சொல்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் ஊழலை எதிர்த்து பேசக்கூடாதா? எத்தனை பேர் நான் பேச வேண்டும் என்று
நினைக்கிறீர்கள்? அது என் கைகளில்
இல்லை.உள்ளிருந்து வருவதையே நான் சொல்கிறேன். ஊழல் பற்றி நான் பேசுவேன். அது
ஆன்மீகத்தின் ஆபத்தான ஒரு
எதிரி. ஊழல், வன்முறை, மூட நம்பிக்கை போன்றவை ஒழிக்கப்பட வேண்டும். அது
சட்டத்தினால் முடியாது; ஆன்மிகம்
என்னும் பிரம்மாஸ்திரத்தினால்
மட்டுமே முடியும். சட்டம் தேவை தான்
என்றாலும் மக்களிடையே ஒரு விழிப்பு அலை உண்டாக வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து இவையெல்லாம் மீண்டும்
நிகழாது என்று உறுதி
எடுக்க வேண்டும்,நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள்? உங்களில் சிலர்
கையைத் தூக்கவில்லை. உங்களைச்
சுற்றிப்பாருங்கள். யாரேனும் கை
தூக்கவில்லை என்றால் என்னவென்று விசாரியுங்கள்.
தொழிற்சங்கங்கள் போன்றவற்றில் உள்ள சில செயல் வீரர்கள்
சுலோகங்களைக் கத்தி கொண்டிரு ப்பதனால் என்ன
நடக்கிறது? நம்மில் அமைதி
இல்லாமல் நாம் அமைதி
வேண்டுமென்று கூச்சலிட்டால் அமைதியைப் பெற முடியுமா? முடியாது. பேச்சுக்கும் செயலுக்கும் இடையே
நல்லிணக்கம் வேண்டும். அது
ஆன்மீகத்தினால் மட்டுமே முடியும். எனவே
முக்கியமானவை இரண்டு. முதலாவது நாம் நம்முள்ளே வலிமை பெற
வேண்டும். இரண்டாவதாக ஒரு அழகான தெய்வீகமான சமுதாயத்தை
உருவாக்குவோம் என்று
நம்பிக்கையோடு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.
கேள்வி: குருஜி, ஆன்மீகத்திற்கும் பொருள் சார்ந்த வாழ்விற்கும் இடையே
சமநிலையில் இருப்பது எப்படி?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களுக்கு மிதிவண்டி ஓட்டத்தெரியும்
இல்லையா? அதேபோல்தான் . நீங்கள் ஆன்மீகத்தை விட்டு
விலகும்போது எங்கோ ஒரு நெருடல் ஒரு வலி உண்டாகும். உடனே ஆன்மீகத்திற்கு திரும்புங்கள். உங்கள் வேலையைத தவிர்ப்பது போல் தோன்றினால் வேலையில் கவனம் செலுத்துங்கள்.இரண்டையும்
ஒன்றாகச் செய்து கொண்டே முன்னேறுங்கள்
கேள்வி:
ஆன்மீகத்தில் உள்ள பலர் மிகவும் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் எப்போதும் புன்னகையோடு இருக்கிறீர்கள். அதன் ரகசியம் என்ன?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்:
ஆம். நான்
அப்படித்தான்!.
கேள்வி: குருஜி, தான் என்னும் அகம்பாவம் மிக்கவர்களை எப்படிக் கையாளுவது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: கவலைப்படாதீர்கள். அவர்களைக் கையாள முயற்சி
செய்யாதீர்கள். அவர்களுக்குள்ளே
ஏதோ காயம் இருக்கின்றது. அதனை
மறைக்க அவர்கள் செய்யும் முயற்சிதான் அகம்பாவமாக
வெளிப்படுகிறது.
கேள்வி: நாம் ஒரே கடவுளையே வழிபட வேண்டும் என்று
கூறுகிறார்கள். பல கடவுள்களை வழிபட்டால் என்ன ஆகும்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: போன
தடவை நான் இந்தூருக்கு வந்திருந்த போது இங்கிருந்து நேராக பாகிஸ்தானுக்கு சென்றேன்.அங்கும்
இதே கேள்வி கேட்கப்பட்டது. நாங்கள் ஒரு கடவுளை வழிபடுகிறோம்,நீங்கள் ஆயிரக்கணக்கான கடவுளர்களை
வழிபடுகிறீர்களே என்றார்கள்?? இப்போதும் இங்கிருந்து மார்ச் 11 ,12 ,13 தேதிகளில் பாகிஸ்தானுக்கு செல்கிறேன். ஆயிரக் கணக்கானோர்
அங்கு சுதர்சனக்ரியா பயின்றிருக்கிறார்கள். அங்கு ஏராளமான முஸ்லிம் மக்கள் என்னைக்
காண வருகிறார்கள்.இதே கேள்விக்கு பதில் கூறினேன். சமோசா, கச்சோரி, ரோடி, போல்கா, பராத்தா, நூட்லஸ் ஆகியவைகளை ஒரே கோதுமை
மாவிலிருந்து செய்கிறோம். அதுபோல் பல்வேறு விதமான காய்கறிகளை கடவுள் படைத்துள்ளார்.
தினமும் கத்தரிக்காயை மட்டுமே உண்கிறோமா? கடவுள் இவ்வாறு பல்வேறு விதமான பொருட்களைப்படைத்திருக்கும் போது, தான் மட்டும் ஏன் பல விதமான வண்ண உருவங்களில்
தன்னை உருவகப்படுத்தி கொள்ளக்கூடாது? எங்களுக்கும் கடவுள் ஒருவரே - ஆனால் பல உருவங்கள், பல பெயர்கள்" அனந்த குணமயி அனந்த
நாமி " ஆயிரக்கணக்கான பெயர்களுடன் ஆயிரக்கணக்கான குணங்களுடன் ஒரே பரமாத்மா" என்ற
என் பதிலில் அவர்கள் மிக மகிழ்ச்சியடைந்தார்கள். அரிசி என்ற ஒரே பொருளிலிருந்து
தோசை, இட்லி என்று பல
உணவுப்பொருட்களை உருவாக்குகிறோம். கேரளாவில் அரிசியிலிருந்து பத்து
வகையான உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.அது போல் கடவுள் ஒருவரே.ஆனால் பல
பெயர்கள்,பல குணங்கள்,பல உருவங்கள் கொண்டவராகத்
திகழ்கிறார். இது தான் சரியாக புரிந்துகொள்ளும் வழி.
கேள்வி: ஊழலை ஒழிக்க ஆன்மீகத்தின் பங்கு என்ன?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இதைப்பற்றி ஏற்கனவே கூறியிருக்கிறேன்.
கேள்வி: நாம் ஏன் பிறவி எடுக்கிறோம்?பிறவி எடுத்து, இறந்து, மீண்டும் பிறவி எடுத்து என்பதன்
கருத்து என்ன?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களுக்கு விளையாட்டுகள் தெரியுமா? ஏன் கிரிக்கெட் விளையாடுகிறீர்கள்? ஒருவர் பந்தை வீசிப்போடுகிறார்,ஒருவர் அதை மட்டையால் அடிக்கிறார்,ஓடுகிற பந்தை துரத்திக்கொண்டு பலர்
அதன் பின் ஓடுகிறார்கள், இதன்
அர்த்தம் என்ன? பந்து
வேண்டுமென்றால் ஆளுக்கொரு பந்தைக் கொடுத்து விட்டால் விவகாரம் முடிந்தது. வேறொரு
கிரஹத்திலிருந்து யாரேனும் கால் பந்து விளயாட்டை கண்டால்- இம்மாதிரி ஒருவர் பந்தை
உதைத்து,அதன் பின் பலர் ஒடுவதைக்கண்டால்- ஒ! ஒரு பந்திற்காக 22 பேர்,ஓடி கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருக்கும் ஒரு பந்தை கொடுத்து
எல்லோரையும் இலக்கில் உட்கார வைத்து விடலாமே ''என்பர்.
வாழ்கை என்பதை பற்றி உலகின் எந்த நாகரீகத்தாலும்
பதிலுருக்கப்படாததை இந்திய நாகரீகம் செய்துள்ளது. வாழ்கை என்பது போர் அல்ல, அது விளையாட்டு.இது பரமாத்மாவின்
லீலை- விளையாட்டு. பிறவி எடுத்து, கர்மங்களை சேர்த்து, இறந்து, மீண்டும் பிறந்து, பக்தியால் கர்ம வினைகளை களைந்து, சிலசமயம் அறியாமையால் ஞானத்தை அடைய முடியாமல்
தவித்து அந்த அறியாமையிலிருந்து வெளி வர பரமாத்மா சில வழிகளை வகுத்து,என்று வாழ்கை ஒரு உருநிலையாகிறது.
பரமாத்மா தனிப்பட்ட தூரத்தில் இல்லை. இங்கேயே நம்முள்ளேயே உள்ளது.
கேள்வி: நம்மை பற்றி கடவுளின் மதிப்பீடு நமது
முன்வினைகள், பக்தி, வல்லமை இவை மூலமாகவா அல்லது மற்ற ஆன்மீக விஷயங்கள்
மூலமாகவா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: கடவுள் களங்கமற்றவர். உங்களுக்கு
பக்தி ஏற்பட்டால் உங்களுக்கு நல்லது. கடவுளுக்கொன்றுமில்லை. உங்கள் பக்தியினால்
நீங்கள் மனம் லேசாக உணருவீர்கள். உங்கள் ஞானத்தினால் துன்பங்களிலிருந்து அகலுவீர்கள்.
கேள்வி: குருவிடம் ஈடுபாடு கொள்ள குடும்ப
அமைப்பு குறுக்கீடாக இருக்கிறதே? என்ன
செய்வது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இருக்காது.உங்கள் கடமைகளை சரியாகச்
செய்ய வேண்டும் என்பதே குரு உங்களுக்குக் கூறுவதாகும். எல்லா குருமார்களும்
அதேதான் கூறுவார்கள். உங்கள் குடும்பக் கடமைகளை சரிவரச் செய்யுங்கள்.உங்களுக்கென்று சிறிது நேரம் ஒதுக்கி தியானம் செய்யுங்கள். ஒரேஅடியாக
குடும்பக்கவலைகளில் மூழ்கிவிட்டால் மகிழ்ச்சியற்றவர்களாகி விடுவீர்கள். சிறிது
நேரம் உங்களுக்காக ஒதுக்கி இளைப்பாறிக்கொள்ளுங்கள்.
கேள்வி: பிறப்பு இறப்பு என்கிற
சுழற்சியிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எப்போது விடுதலை என்பதை பற்றி
எண்ணத்தொடங்குகிறீர்களோ அந்த க்ஷணத்திலிருந்து அதை நோக்கிப் பயணம்
செய்யத்தொடங்குகிறீர்கள்.
கேள்வி: மத்யப் பிரதேசத்தில் மதுவிலக்கு
ஏற்படுத்தமுடியுமா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நிச்சயமாக முடியும். சுதர்சனக்ரியாவும் தியானமும்
செய்யும்போது அது முடியும். மதுவிற்குப் பழகியவர்களை இங்கே
அழைத்துவாருங்கள்.செலவில்லாமல் அழியாத ஆனந்த நிலைக்கு அழைத்துச்செல்கிறோம். பண செலவின்றி இந்த பேரானந்த நிலையை
அனுபவிக்க முடியும்.
கேள்வி: உண்மை எப்படி வெல்லும்?உணமைக்காகப்போராடிக்
களைத்துவிட்டேன்.கலியுகத்தில் வாய்மை வெல்லுமா? தயவுசெய்து வழி கூறுங்கள்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: கண்டிப்பாக
எக்காலத்திலும் வாய்மை வெல்லும். நீங்கள் சாமர்த்தியசாலியாக இருக்க வேண்டும்.
தர்மராஜன் யுதிஷ்டிரன் உண்மையைப்பற்றி நிறையப் பேசினாலும் அதில் செயல்திறன்
இல்லை..கிருஷ்ணர்தான் செயல்திறனை தர்மனுக்குப்புகுத்தினார். அதனால்தான் பாரதப்போரை
வெல்ல முடிந்தது.ஆகவே, பக்தியும், செயல்திறனும் இருந்தால் வாய்மை
வெல்லும்.சமுதாயத்தில் வெல்ல, பலமும், சாமர்த்தியமும் தேவை .வாழ்வில் வெல்ல, தளைகளில் இருந்து விடுபாடும், பக்தியும் அவசியம்.ஆகவே நான்கு
விஷயங்கள் உங்களுக்கு தேவை.விடுதலை .நீங்கள் தளைகளில் இருந்து விடுபட்டு
இருக்கிறீர்கள் என்று உணருங்கள். பின் அன்பு மலருகிறது.தளைகள் இருந்தால் அன்பை உணர முடியாது. தளையின்றி
உணர்ந்தால் அன்பு மலரும்.
கேள்வி: மன அழுத்தத்தில் இருந்து எப்படி விடுபடுவது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எப்போதும் உங்களைப்பற்றியே
நினத்துக்கொண்டிருக்காதீர்கள். உங்களுக்கு என்ன ஆகிவிடும்? சமுதாயத்திற்காக ஏதேனும் செய்யவே
இவ்வுலகில் பிறந்திருக்கிறீர்கள். ஏதேனும் சேவையில் ஈடுபடுங்கள்.சுதர்சனக்ரியா, தியானம் செய்யுங்கள்.சுதர்சனக்ரியா சில காலம் செய்த பின் ஏற்படும்
மாறுதல்களைப் பாருங்கள். இங்கு எத்தனை பேர் மாறுதலை உணர்ந்திருக்கிறீர்கள்? கை தூக்குங்கள். பாருங்கள்! எத்தனை பேர்!
நாம் இப்போது பத்து நிமிடங்களுக்கு தியானம்
செய்வோம். ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து தியானம் செய்தால் அது யக்ஞமாகும். தனியாக
தியானம் செய்தால் அது தபஸ்யா எனப்படும்.
யக்ஞத்தின் பலன் உடனே தெரியும்.